எனக்காக பிறந்தாயே எனதழ(கா)கி
ஒரு நாட்டையே ஆட்சிப்புரியும் வலிமை கொண்ட அமைச்சனவன்,நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவன், மக்களிடம் நிதி தவராத உத்தமன்,ஆளுமை,கோபம், ஆக்ரோஷம் ஆகிய அடிப்படை குணங்களை கொண்ட மன்னன்,தன்னுடைய அரசியல் எதிரிகளை சாணக்கியத்தனத்தால் வீழ்த்துபவன்,ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்து தன்னை பறிக்கொடுக்கிறான்…??
தன் உயிரையே அவளாக எண்ணி வாழ்ந்துக்கொண்டிருப்பவனின் வாழ்க்கையில் வேறொரு பெண் நுழைந்து,விதி வசத்தால் தன்னுடைய காதலை இழந்து தவிக்க நேர்கிறது.
எதிர்ப்பாராத ஒரு சூழ்நிலையில் அவனது தகுதிக்கு முற்றிலும் எதிர்மறையான பண்பான அமைதியான குணத்தை கொண்டவள், கருப்பு நிறத்தவள்,பருத்த மேனியுடைவள்,படிப்பறிவு ஏதும் இல்லாத சாதாரண ஒரு அப்பாவி கிராமத்து பெண் அவனது வாழ்வில் அடியெடுத்து வைத்தால்…??
தன்னுடைய உருவத்தால் மற்றவரின் கேலிக்கு ஆளான இக்காரிகை இயற்கையாக தனக்கிருக்கும் தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு காதல் தோல்வியால் ரணமாகியிருந்த மன்னவனின் நெஞ்சத்தில் நேசமென்னும் பூவை பூக்க செய்வளா…??