# Story By PM ## Posts - [சமர் 11](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-11/): அன்று ஞாயிற்றுகிழமை என்பதினால் அதிகாலையிலே கண்விழித்த போதிலும் சமர் படுக்கையைவிட்டு எழுந்துக்கொள்ள மனமின்றி தன் வீட்டினரிடம் பேசிவிட்டு முகநூலை திறந்து பார்க்கத்தொடங்கினான். வெகு நாட்களுக்கு பிறகு முகநூலிற்கு வந்தவனின் விழிகளில் பெருத்த ஆச்சரியம் கூடியிருந்தது. பெரும்பாலான நண்பர்களிடமிருந்து தன் நலனை கேட்டறிவதற்கான விசாரிப்பு தகவல்கள் வந்திருப்பதை கண்டு உள்ளம் கனிந்தவன்,ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக தன் நலனைப் பற்றி விவரித்தவனின் வசீகரிக்கும் வதனம் சட்டென்று அக்னிதேவனின் காந்தலாய் காட்சியளிக்க தொடங்கியது. அவனது நீல நிற கருவிழிகள் கூட சிவப்பாக மாறியிருந்ததோ? ஏனெனில் சமியிடமிருந்தும் அவனது நலன் பற்றிய கேள்விகள் உள்பெட்டியில் வந்து குவிந்திருக்க,அதைக்கண்டு ஆத்திரமடைந்தவன் ‘ச்சை’ என வெறுப்புடன் இதழை சுழித்து தலையை அழுந்தக்கோதி கோபத்தை அடக்கி ‘செய்யறதையெல்லாம் செய்திட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நலன் விசாரிப்பு வேற’ என எரிச்சலாக எண்ணி கைப்பேசியின் தொடுத்திரையை உருள செய்து கீழே வந்து மற்ற தோழர்களின் தகவல்களை பார்வையிட தொடங்கினான். அப்போது அவனது மனதிற்கு மிக […] - [சமர் 10](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-10/): தங்கள் மூவரையும் அடர் நீல நிற உடை அணிந்த காவலர்கள் சுற்றி வளைத்துக்கொள்ளவும் அச்சத்தில் உறைந்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து தன்னிலை அடைந்த சமர் அழகான ஆங்கிலத்தில் கம்பீரமான குரலில் “என்ன விசயம் சார்?” என்று வினவ,அதற்கு அவர் கூறிய பதிலில் தலைச்சுற்றி கீழே விழாத குறை தான். ஏனெனில் சற்று முன்பு சமரும் சமியும் சாலையோரத்தில் நின்று குரலுயர்த்தி சண்டையிட்டு கொண்டிருந்ததையும் தான் அவளின் கழுத்தை நெறிக்க சென்றதையும் கண்டு,எந்தவொரு நல் உள்ளமோ அவசர உதவி எண்ணிற்கு அழைத்து விசயத்தை கூறியிருந்தார்கள். அதிலும் மிகப்பெரும் கொடூரம் என்னவென்றால் சமரை ஒரு ஆண் அரக்கன் என எண்ணும் அளவிற்கு அவர்கள் திரித்து கூறியிருப்பதினால் காவலர் சமரை விசாரித்துக்கொண்டிருக்கிறார். அத்தோடு சமி வாயை திறந்து ‘இவன் என்னை கொடுமைப்படுத்துகிறான்’ என்று அவரிடம் கூறிவிட்டால் ‘ஏன்’ என்ற கேள்வி எதுவுமின்றி நேரடியாக அவனிற்கு சிறைவாசம் தான். மேலும்,ஒரு முறை சிறைக்கு சென்றுவந்தால் அவனின் மருத்துவ படிப்பிற்கு […] - [சக்தி 3](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-3/): சக்தி 27 அகவையுற்ற பெண்…பார்ப்பவரை வசீகரம் தோற்றமில்லை அவளிற்கு! ஆயினும்,அவளும் அழகி தான்! 5 அடி இரண்டு அங்குல உயரம்,கோதுமை நிறம்,சுருள் சுருளான அழகான இரண்டடி உயர கூந்தல்,துறுப்புறுப்பான இரண்டு கருவிழிகள்,கூரான நாசி,அவளிற்கு உதடுகள் சற்றே வித்தியாசமாக இருக்கும். மேலுதடு சிறியதாகவும் கீழ் உதடு பெரியதாகவும் இருக்கும் அமைப்பு அவளுடையது. அத்தோடு கனகச்சிதமான உடற்கட்டு இவை தான் சக்தியின் தோற்றம்!  நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்,காதில் ஒரு குட்டி தங்க தோடு,நாசியில் ஒற்றை கல் வைத்த மூக்குத்தி,கழுத்தில் தங்க தாலி,கரத்தில் இரண்டு நெகிழி வளையல்,ஒரு சாதாரண ஷிபான் புடவை இவை மட்டும் தான் அவளின் அதிகப்பட்ச அலங்காரங்கள்! வெளியில் செல்லும் போது சில நேரம் புடவைக்கு பதிலாக சுரிதார் இருக்குமே தவிர,ஒப்பனையில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் கிடையாது. மற்றைய பெண்களை போல் அவளிற்கும் நன்றாக ஒப்பனை செய்து அழகான உடையணிந்து கணவனுடன் வெளியே செல்ல வேண்டும் என ஆசையாக இருக்கும்‌. ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதற்கு […] - [சக்தி 2](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-2/): சக்தியே சிவம் #women_centric_story கதையின் தலைப்பே இது என்ன மாதிரியான கதை என்று உங்களுக்கு சொல்லிவிடும்... எதார்த்தமான கதைக்களத்தில் என்னுடைய கற்பனையை புகுத்தி எழுதப்பட விருக்கும் நாவலே 'சக்தியே சிவம்'. சிவம் மட்டுமே உயர்ந்தது என்று எண்ணுபவன் நமது நாயகன் சிவப்பிரகாஷ்... சக்தியில்லையேல் சிவமில்லை என்பதை அவனிற்கும் உணர்த்தும் நாவல் இது... அதை உணர்த்துபவள் நமது நாயகி சக்தி… - [சக்தி 1](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-1/): சமையலறையில் பணிப்புரிந்து கொண்டிருந்த சக்தி அன்றைய நாளில் நூறாவது முறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த நான்கு வருட திருமண வாழ்வை அவள் திரும்பி பார்த்தால் அவளிற்காக வாழ்ந்த நாட்கள் என்பது மிகவும் குறைவு தான்! குறைவு என்பதை காட்டிலும் பூஜ்ஜியம் என்பது தான் சரியான கூற்றாகும். கடந்த நான்கு வருடங்களாக அவளின் வாழ்க்கை எவ்வித பிடிப்பும் இல்லாமல் அலுப்பும் சலிப்புமாகவே கடந்தன. பிடிப்பற்ற அந்த வாழ்விற்குள் அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது அவளின் மூன்று வயது குழந்தை கணேஷ்! திருமணத்திற்கு பிறகு அவளிற்கு உருப்படியாக நடந்த ஒரு நல்ல விஷயம் அவன் மட்டுமே! சில நேரங்களில் அதை நினைத்து அவளால் மகிழ்ச்சியுறவே முடியாது. காரணம்,அவளின் கணவன் சிவப்பிரகாஷ்!‌ அவனது பெயரில் மட்டுமே சிவம் இருந்தது. ஆனால் ஆண் பெண் இருவருக்கும் எவ்வித பேதமில்லை…இருவரும் சமம் என அகிலத்திற்கே எடுத்துக்காட்டிய சிவப்பெருமானின் கூற்றுக்கு நேர்மறையானவன் சிவப்பிரகாஷ். அதற்காக பெண்கள் […] - [கவிதை 10](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-10/): மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி வருவது சகஜம். ஆனால் சைத்ராவிற்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதுவும்,முதல் நாள் அவளிற்கு உண்டாகும் வலி அந்த பிரசவ வலிக்கு ஈடான ஒரு கொடூரமான வலியை கொடுக்கும். மருத்துவர் பலரை அணுகி பலவிதமான மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அவளின் வாதைகள் மட்டும் குறைந்தபாடில்லை‌. இப்போது ஓரளவு அவளிற்கென பிரத்யேகமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதற்கு பிறகு அவளின் வலிகள் குறைந்து வந்துக்கொண்டிருந்தது.ஆயினும்,அத்தகைய பிணியும் பொறுக்க முடியாத வகையிலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெண்ணவளிற்கு நேர்ந்த உதிரப்போக்கால் அவளிற்கு மயக்கமே வந்துவிட்டிருந்தது. சரியான நேரத்திற்கு அக்ஷய் அவளை தூக்கியிருந்தான். அவள் சிறிது சுய உணர்வை இழந்த அந்நிலையிலும் அந்நிய ஆடவனின் தொடுகை உணர்ந்து,அதனை ஏற்க முடியாமல் அவளின் மேனி எதிர்வினை புரிந்தது. ஆனால் வலுவிழந்த அவளின் மேனி முழுதாய் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அங்கிருந்த நட்சத்திர விடுதியிலே மருத்துவரை வரவழைத்து அவளிற்கு உரிய சிகிச்சை அளித்ததற்கு பிறகே அவளை வீட்டிற்கு அழைத்து […] - [கவிதை 9](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-9/): தன்னறைக்குள் வந்து உடைமாற்றி வெளியே செல்ல ஆயத்தமாகிய ஸ்வேதாவை அப்படியே பின்னிருந்து கட்டிக்கொண்டது ஓர் ஆண் உருவம்! அந்த கரங்களுக்கு உரியவனை அடையாளம் கண்டுக்கொண்டவள் “ப்ச் என்ன பண்ணறீங்க?மறுபடியும் உங்க திருட்டுத்தனத்தை ஆரம்பிச்சிட்டீங்களா?” என சலித்துக்கொண்டாலும் அவனின் அணைப்பிற்கு இவள் உடன்பட்டு நிற்க, அவளின் காதோரம் முத்தமிட்டு “கண்ணம்மா…வர வர நீ எனக்குனு நேரமே செலவிட மாட்டிக்கிற?உனக்கு எப்போ பாரு அஜய் சைத்து இவங்க இரண்டு பேரு தான் முக்கியமா?” என மெல்லிய குரலில் சோம்பலாக அவன் கேட்க, “ஏங்க இப்படி பேசறீங்க?உங்களுக்கு அவங்க இரண்டு பேரும் முக்கியமில்லையா என்ன?” என அவனின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு ஆதங்கத்துடன் ஸ்வேதா கேட்க, அவளை இன்னும் இறுக்கியணைத்த அந்த ஆடவன் “எனக்கும் அவங்க முக்கியம் தான் கண்ணம்மா…பட் ஐ ரியலி மிஸ் யூ டி” என உணர்ச்சிமிகுதியில் கூறிக்கொண்டே அவளின் கழுத்தோரம் முகம் புதைத்தவனின் இதழ்கள் அவளில் எல்லை மீற தொடங்கின. அதில் பெண்ணவளின் மேனி […] - [கவிதை 8](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-8/): சில மணி நேரங்களுக்கு பிறகு, எப்போதும் போல் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் நேரத்திற்கு சரியாக சைத்ரா இல்லம் வந்து சேர்ந்துவிட்டாள். அதுவும் எவ்வித கீறலுமின்றி அவள் வந்திருந்தாள். அதனை கேள்வியுற்ற ராகவ் “பாஸ்… பாஸ் விஷயம் தெரியுமா?சைத்ரா பாதுகாப்பா வீடு வந்துட்டாங்களாம்” என பரபரப்புடன் ஓடி வந்து ருத்ராவிடம் தெரிவிக்க, அவனோ மெதுவாக செய்துக்கொண்டிருந்த பணியை விட்டு தலையுயர்த்தி அவனை ஏறிட, ராகவ் வாயெல்லாம் பல்லாக “பாஸ்…அவங்களை யாருமே கடத்தலையாம்…அது ஒரு ஃபேக் கால்…” என மகிழ்ச்சியோடு அறிவித்தான். மேசையில் இருகரம் கோர்த்து அவனை அழுத்தமாக நோக்கிய ருத்ரா “யா ஐ நோ” என்றான் வெகு சாதாரணமாக. அதில் வாயை பிளந்தவன் “தெரியுமா?எப்படி பாஸ்?” என அதிர்ச்சியோடு அவன் கேட்க, “அது தெரிஞ்சா நீ எப்போவோ எனக்கு பாஸாகியிருப்பியே…” என கழுத்தில் சடக்கு எடுத்தவாறே நக்கலாக அவன் உரைக்க, “பாஸ்…” என பாவமாக முணுமுணுத்தவனின் முகம் அஷ்டக்கோணலாகியது. ‘உன்னையெல்லாம் வைச்சு நான் என்ன […] - [கவிதை 7](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-7/): ருத்ராவிற்கு அன்றைய விடியல் வழக்கத்தை விட வெகு ரம்யமாக இருந்தது. ஏனெனில்,அன்று காலை எழும்போது தன் நெஞ்சில் பொதிந்திருந்த மலர் பொதியை பார்த்தவனின் இதழோரம் ரசிக்கும் முறுவல் ஒன்று தோன்றின. அவனது உரமேறிய மார்பில் முகம் புதைத்து மொத்தமாய் தகப்பன் மீது ஏறி படுத்திருந்த மகனின் ஸ்பரிசத்தில் அந்த முரட்டு மனிதனின் தேகம் சிலிர்த்தது. மகனின் அருகாமையை உள்ளூர சில நிமிடங்கள் ஆழ்ந்து அனுபவித்தவன்,அன்றாட பணிகளை செய்வதற்கான வேளை வரவும்,மகனை படுக்கையில் கிடத்தி எழுந்துக்கொண்டான். மதலை இலேசாக உறக்கம் களைந்து “மா” என சிணுங்கவும்,போர்வையால் அவனை மூடிவிட்டு புன்சிரிப்புடன் நிமிர்ந்தான் ருத்ரா. அதன்பிறகு,தன் அறையோடு இணைந்திருந்த உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்த ருத்ரா ஒரு மணி நேரம் அங்கு நேரத்தை செலவிட்டு மீண்டும் தன்னறைக்குள் நுழைந்தான். அதற்காகவே காத்திருந்தாற் போன்று கதவை தட்டிவிட்டு ஒரு பணியாளன் அருகம்புல் சாறுடன் வந்தான். குவளையை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிய ருத்ராவின் விழிகள் ஏதேச்சையாக கட்டிலின் புறமாக திரும்பியது. […] - [கவிதை 6](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-6/): சிங்கமும் மயிலும் எதிரெதிர் துருவங்களாய் நின்று ஒருவரை ஒருவர் சளைக்காமல் பார்த்திருக்க,அக்கணம் “சைத்து சைத்து…” என கீழ் தளத்திலிருந்து ஸ்வேதா அவளை அழைக்கும் குரல் கேட்டது. முதலில் அதனை பிரம்மை என ஒதுக்க நினைத்தவள்,விடாமல் ஒலித்த ஸ்வேதாவின் குரலில் அவளின் முகம் பிரகாசமுற்றது. கண்கள் இரண்டும் விரிய “ஸ்வேத்” என அவளின் இதழ்கள் மகிழ்ச்சியில் முணுமுணுக்க,ருத்ராவோ அவளின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை நக்கலாக அவதானித்துக்கொண்டிருந்தான். அதை அறியாத பெண்ணவளோ “அங்கிள் என்கிட்ட பொய் சொன்னீங்களா?நான் கூட அதை உண்மைனு நினைச்சு பயந்திட்டேன்…போங்க அங்கிள்” என கிள்ளையாய் சிணுங்கிக்கொண்டே வேகமாக ஸ்வேதாவை காணும் ஆவலோடு அவள் அங்கிருந்து ஓட முற்பட, அவளை தடுத்து நிறுத்தும் விதமாக ருத்ராவின் விரல் சொடக்கும் சப்தமும் அதனுடனே அவனது அகந்தை மிக்க குரலும் கணீரென்று ஒலித்தது. “சைத்ரா ஒரு நிமிஷம் நில்லு” என்றவுடன், ‘என்ன?’ என திரும்பியவளை முகம் இறுக நோக்கிய ருத்ரா “சைத்ரா இது ஜஸ்ட் சாம்பிள் […] - [கவிதை 5](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-5/): வெகு அழகாக மாப்பண்டத்தை வெட்டி முடிக்கும் நிகழ்வு நடந்தேறியவுடன், ருத்ரா ஒரு பெருமூச்சுடன் ஒரு ஓரமாக நின்றிருந்த ஸ்வேதாவை நோக்கி ‘தன் புதல்வனை கீழே அழைத்துச் செல்’ என்னும் விதமாக கண்ணாலே கட்டளையிட, அதை தலையசைத்து ஏற்ற ஸ்வேதா அஜய்யை கூப்பிட்டுச் செல்ல,அவர்கள் மூவரின் பின்னோடு இவனும் இறங்கிக்கொண்டான். சைத்ரா குழந்தையை கையில் வைத்திருக்க “சைத்து அஜய்யை இறக்கி விடு…அவன் கையிலிருக்க க்ரீம் உன் டிரஸில் ஒட்டிக்கப்போகுது” என குழந்தையை கீழிறக்கி விட முனைய, அவளின் கரம் பற்றி தடுத்த சைத்ரா “க்ரீம் ஒட்டினா ஒட்டிட்டு போகுது ஸ்வேத்…எனக்கு என் டிரஸை விட என்னோட பீச் குட்டி தான் எனக்கு முக்கியம்” என உணர்ச்சி பெருக்குடன் கூறி குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட,ஸ்வேதாவிற்கோ அச்சொற்கள் இதயத்திற்குள் பெரும் அதிர்வலையை உண்டாக்கின. அதேப்போல் அவர்களை கடந்துச் செல்லப்போன ருத்ராவின் செவியிலும் அவளின் சொற்கள் விழுந்து அவனை ஒரு கணம் தேங்க வைத்தது. அடுத்த அடி […] - [கவிதை 4](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-4/): ருத்ரா இல்லத்திலிருந்து வெளியேறியவுடன் வைஷ்ணவி நீள்விரிக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து “ஏய் ஸ்வேதா ருத்ரா வந்ததை என்கிட்ட ஏன் சொல்லலை?” என அதிகாரமாய் கேள்வி எழுப்பினார். அவரது அந்த தோரணையும் அகந்தையும் சைத்ராவிற்கு கடும் சினத்தை உண்டாக்கியது. அதனால் “பெரியம்மா எதுக்கு தீதிய அதட்டறீங்க?எதுவா இருந்தாலும் பொறுமையா கேளுங்க” என குரலுயர்த்தினாள். உடனே தாயின் அருகே அமர்ந்திருந்த பூஜா “ஏய் குட்டி பிசாசு மா ஸ்வேதாகிட்ட தானே பேசுறாங்க …நீ ஏன் நடுவுல துள்ளறே?” என இளக்காரமாய் பேசினாள். அவள் தன்னை ‘குட்டி பிசாசு’ என்றதில் இவளிற்கு கோபம் சுறுசுறுவென பொங்கியது. ஸ்வேதாவிற்கும் அவர்களது பேச்சு சிறிதும் பிடிக்கவில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகுவது நல்லது என்னும் ரகம் அவள் என்பதால் வீணாக அவர்களிடம் எப்போதும் பேச்சு கொடுக்க மாட்டாள். ஆனால் சைத்ராவோ இருபது வயது பருவப் பெண் என்பதால் சிந்தித்து செயல்படும் பக்குவம் அவளிடத்தில் இல்லை. அதனால் கோபத்தில் […] - [கவிதை 3](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-3/): தன்னை பின்னிருந்து ஒருவர் அணைத்தவுடன் திடுக்கிட்டு கண்விழித்த ஸ்வேதா “யாரு?” என பதட்டமாக கேட்டுக்கொண்டே எழ முயற்சிக்க, அவளை அப்படியே மெத்தையோடு சேர்த்து அழுத்திய அந்த உருவம் “ஸ்வேதா” என குழைந்த குரலில் அழைத்த கணமே,அந்த உருவத்திற்கு சொந்தக்காரனை அவளால் கண்டுக்கொள்ள முடிந்தது. உடனே அவளின் இதழ்கள் தாராளமாக விரிந்துக்கொள்ள “எப்போ வந்தீங்க?” என மகிழ்ச்சிபெருக்குடன் கேட்டுக்கொண்டே அவன் புறம் அவள் திரும்பினாள். அவளின் விழியோடு விழிகலந்து அந்த ஆண்மகனோ “ஜஸ்ட் நவ் ரீச்சிடு கண்ணம்மா” என காதலோடு மொழிந்தவனின் குரலில் வழிந்த தாபத்தை அறிந்தவளிற்கு பகீரென்றது‌. உடனே படபடப்பானவள் “பிர…” என பதட்டத்துடன் தொடங்கும் போதே “ஐ மிஸ் யூ டி” என கரகரத்த குரலில் உளறியவனின் முரட்டு இதழ்கள் அவளின் பூவிதழை அழுத்தமாக சிறைச்செய்திருந்தது. அதில் திகைத்து விழி விரித்தவள் “ம்…ம்” என முனகி அவனது உரமேறிய நெஞ்சத்தில் கைவைத்து தள்ளிவிட முயற்சிக்க ‘பிளீஸ்டி’ என இறைஞ்சிய அவனது கண்களின் […] - [கவிதை 2](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-2/): “தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அன்ட் ரவுண்ட் ரவுண்ட் அன்ட் ரவுண்ட்…” என மும்பையிலுள்ள அந்த மிகப்பெரிய வெண்ணிற பங்களாவே கிடுகிடுக்கும் வகையில் தொலைக்காட்சியில் பாடலை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள் இரண்டு வாண்டுகள். பாடல் தான் பெரும் இரைச்சலோடு அலறிக்கொண்டிருந்தது என்றால்,அதனுடனே இணைந்து ஒரு வளர்ந்த குமரியும் நான்கு வயது மதலையும் உற்சாக கூச்சலிட்டு கத்த வேறு செய்தார்கள். அவர்கள் இருவரது சத்தம் கேட்டு பதறியடித்து அங்கு ஓடி வந்தாள் செவிலிய பெண்ணவள் ஸ்வேதா. குழந்தையை உடனிருந்து பார்த்துக்கொள்வதற்காக பிள்ளையின் தகப்பனான ருத்ர பிரதாப் மல்ஹோத்ராவால் சிறப்பு பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டவள் தான் இவள். வேகமாக உள்ளே நுழைந்த ஸ்வேதா அங்கு கண்ட காட்சியில் ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டாள். ஏனெனில்,ருத்ர பிரதாப்பின் ஒற்றை வாரிசான நான்கு வயது அஜய் மல்ஹோத்ராவும் அவனுடனே வளர்ந்த குமரியான சைத்ராவும் இணைந்து நடனமாடியவாறே பாடிக்கொண்டிருந்தாள். அந்தவொரு காட்சி அவளது விழியை நிரப்பி இதயத்தை […] - [கவிதை 1](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-1/): கவிதை 1: “அம்மா…” என அந்த பெரிய வளாகமே அதிரும் வகையில் பிரசவ வலியில் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளிற்கு வெறும் பதினாறு வயது மட்டுமே! தாய்மை என்றால் என்னவென்று அறியாத பருவத்தில் பிரசவ வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் அவள்! குமரி அடையாத கிள்ளையவளின் வயிற்றில் ஒரு குழந்தை. நினைத்து பார்ப்பதற்கே படுபயங்கரமாய் இருந்தது. ஆனால் அப்படியான ஒரு கொடுஞ்சூழலை தான் அந்த சிறு பாவை துய்த்துக்கொண்டிருந்தாள். “அம்மா வலிக்குது…என்னால முடியலை…என்னை காப்பாத்தும்மா…அம்மா நான் சாகப்போறேன்…அம்மா…அம்மாஆஆ…” என உச்சக்கட்ட நரக வேதனையோடு தாயின் கரத்தை இறுகப்பிடித்து அலறிய மகளை கண்டவரின் இதயத்தில் உதிரம் கொட்டியது. அவரது கண்ணிலிருந்து நீர் கரகரவென கன்னத்தின் வழியே கீழிறங்கிட,இவருக்கு நெஞ்சே வெடித்து சிதறியது. அதனால் “ஐய்யோ” என மார்பை அடித்துக்கொண்டு அழுதவரை கண்ட மருத்துவர் “நர்ஸ் முதல்ல அந்த அம்மாவை வெளிய கூட்டிட்டு போங்க…ஏற்கனவே இந்த பொண்ணுக்கு பல்ஸ் குறையுதுனு நானே டென்ஷனா இருக்கேன்…இதில் இது வேற…” என […] - [சமர் 9](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-9/): சமர் நீள்விரிக்கையில் அமர்ந்து தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த கண்ணாடி மேசையின் மீது கால் நீட்டி அமர்ந்து,பீங்கான் கிண்ணத்தில் உள்ள சோள அவுலில் பால் ஊற்றிய உணவை அள்ளி வாயில் திணித்துக்கொண்டே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் இன்பினீட்டி வார்’ படத்தை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். சமியோ தன் அறையில் இந்தியாவில் இருக்கும் தனது சொந்தப்பந்தத்தினரிடம் ஐ.எம்.ஓ காணொலி செயலி வழியாக அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அனைவரும் பேசி முடித்தவுடன் கடைசியாக பேசிய தனது செல்ல பாட்டியாரிடம், “கிராண்ட் மா இந்த சமர் இருக்கானே” என்றவள் ஏதோ நினைவு வந்தவளாக உடனே ஒரு நொடி அமைதியாகி சமரை ஓரப்பார்வை பார்த்தவாறே எழுந்து பூனைப்போல் நடந்துச்சென்றவள் அறையின் கதவைச் சாற்றிவிட்டு வந்து மீண்டும் பழைய இடத்தில் அமர்ந்துக்கொண்டு தனது விழிகளை சாசர் போல் விரித்து “கிராண்ட் மா இங்க பெரிய தப்பு நடக்குது கிராண்ட் மா…பெரிய தப்பு நடக்குது” என பரபரப்போடு அந்த கால மூதாதையர் போல் ஒப்பாரியோடு கூறவும், […] - [சமர் 8](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-8/): யாரோ சமியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப அவளின் முன்பு ஆறடி உயர இவ்வூர் ஆண்மகன் நின்றிருக்க அவனை பார்த்து மிரட்சியில் ஓரடி பின்னோக்கி நகர்ந்தவளிற்கு அதன்பிறகே சுற்றுப்புறம் உறைத்தது. மருத்துவமனை போல் அமைப்புள்ள ஒரு இடத்தில் மெத்தையில் படுத்திருப்பதை அறிந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயலுகையில் அந்த அந்நிய ஆடவன், “மிஸ் டோன்ட் ஃபியர்…என் பெயர் ரஸில்…இங்க மெடிக்கல் காலேஜில் தான் ஃபைனல் இயர் படிக்கிறேன்…நீ தீடிர்னு என் மேல் மோதி மயக்கம் போட்டு கீழே விழுந்திட்ட…அதான் உன்னை இங்க தூக்கிட்டு வந்தேன்…உனக்கு என்ன பிரச்சனை?” என கோர்வையாக பேசியவன் அவளின் முகத்திலிருந்த காயத்தை பார்த்தவாறே அவளிடம் வினவ, அதன்பிறகே தன் முகத்தில் ஏற்பட்ட அரிப்பும் மற்றவர்களின் நிராகரிப்பும் விழி முன் தோன்றிட உடனடியாக சமரை பார்த்தேயாக வேண்டும் என்ற உணர்வு எழந்தது. அதேசமயம் மீண்டும் அரிப்பு தோன்ற ஆரம்பிக்க முகத்தை கைகளால் மூடி “சமர்…சமர்” என அழுக தொடங்கினாள். “ஹே கேர்ள்…என்னாச்சு […] - [சமர் 7](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-7/): சமர் மற்றும் சமி இவர்கள் இருவரின் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்த வேளையில் சமி கல்லூரிக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. எப்பொழுதும் தாமதமாக எழுந்துக்கொள்ளும் சமி அன்று கல்லூரியின் முதல் நாள் என்பதாலோ அல்லது அவளது கைப்பேசியில் ஒலித்த ஏ.ஆர்.ரகுமானின் அழைப்பு மணி ஓசையினாலோ அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து கல்லூரி செல்ல தயாராக தொடங்கினாள். கல்லூரி செல்வதற்காக குளித்து முடித்து கருப்பு நிற மேல் சட்டையும் ஆகாய நீல வண்ண குட்டை பாவாடையும் அணிந்து வெகு நேரம் சிரமேற் கொண்டு அளவான ஒப்பனையுடன் தலைமுடியை விரித்து விட்டு இதழில் உடைக்கு ஏற்றாற் போன்ற கருஞ்சிவப்பு நிற உதட்டு சாயம் பூசிக்கொண்டு அறையை விட்டு வெளிவந்தாள். சமரும் தனது கல்லூரி செல்வதற்காக வேண்டி விரைவாக எழுந்து எளிதான உணவை தயாரித்து குளித்து முடித்து தலையை துவட்டியப்படி அறையை விட்டு வெளியே வந்தான். அன்று வந்த நாள் தொடங்கி சமி பிடிவாதமாய் […] - [சமர் 6](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-6/): இந்தியா, சென்னையின் வேளச்சேரி என்ற பகுதியில், அந்த வீட்டின் எஜமானி அகிலாண்டேஸ்வரி கால் மேல் கால் போட்டு ராணியின் கம்பீரத்தோடு தோரணையாக அமர்ந்தப்படி அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தார். செய்தித்தாளை வாசித்த அடுத்த நொடி அவரின் முன் ஒரு கொட்டை வடிநீர் கோப்பை நீட்டப்பட்டது.அதை வாங்கி பருகியபடி, அகிலா பாட்டி தனது மருமகள் ரமாவிடம், “ரமா சமர் போன் செய்தானா?” என்று தனது மூக்கு கண்ணாடியை சரிச்செய்தவாறு வினவ, ரமா தயக்கத்துடன், “இல்லை அத்தை, இன்னும் போன் பண்ணலை” எனும் போதே அவரின் குரல் நலிந்து உள் சென்றது. நினைத்தது போலவே அகிலா கோபத்தோடு இருக்கையிலிருந்து எழுந்து, “என்ன ரமா இது பொறுப்பில்லாத்தனம்…சமர் அங்கப்போய் கொஞ்சமாவது திருந்தியிருப்பான் னு நினைச்சேன்.ஆனால் கொஞ்சம் கூட மாறவேயில்லை…அவனை நம்பி வேற என்னோட செல்லத்தை அனுப்பிவச்சிருக்கேனே…பாவம் என்ன பண்ணறாளோ?நீ அவனுக்கு உடனே போன் பண்ணு?” என்று உத்தரவிட்டு “கௌதம்ம்ம்ம்ம்ம” என்று வீடு அதிரும் படி உரக்க கத்தினார். அடுத்தநொடி […] - [சமர் 5](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-5/): சமரிடமிருந்து இருவரும் சற்று தள்ளி வந்தவுடன் சமி ஜாகீரை மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சி பார்வையை செலுத்தியவள் இறுதியாக உதட்டைப் பிதுக்கி, “அந்த அரலூசுக்கு ஏத்த முழு லூசு ஃப்ரெண்டு தான்” என்று முணுமுணுக்க அது ஜாகீரின் காதில் விழவில்லை. அதனால், “நீங்க ஏதாவது சொன்னீங்களா?” என்று கண்கள் சுருக்கி குழப்பத்துடன் கேட்க “இல்லை” என்று உதட்டைப்பிதுக்கினாள். அவன் தோளைக் குலுக்கி அத்தோடு விட்டு, “என்னோட பேரு ஜாகீர்…உங்க பேரு என்ன?” என்று கேட்க சமி தலைச்சரித்து ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கி, “எதுக்கு?” என்று வினவினாள். “சும்மா தெரிஞ்சு வைச்சுக்கலாம்னு பார்த்தேன்” “தெரிஞ்சு வைச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறீங்க” “உங்களுக்கு உதவியெல்லாம் செய்யறோமே…அதனால் தான்” “ரோட்டில் பிச்சைக்காரனுக்கு கூட காசு போட்டு உதவி செய்யறீங்க…உடனே பேரு கேட்பீங்களா?” என்று ஒற்றை புருவம் உயர்த்த, “என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க…நான் சும்மா…” என்றவனை ஒற்றை விரல் நீட்டி இடைமறித்து, “சும்மா ஒரு பொண்ணுக்கிட்ட பேரு […] - [சமர் 4](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-4/): சென்னையிலிருந்து அரேபிய நாடுகளில் ஒன்றான தோஹா வரையிலுமான தூரத்தை விமானத்தில் கடந்து அடுத்து ஆறு மணி நேரத்தில் தோஹாவில் இறங்கினாள் சமி. தோஹா விமான நிலையத்தை சுற்றிப் பார்வையிட்டவளுக்கு ஆங்காங்கே வெள்ளை நிற முழு நீள ஷேக் உடையை அணிந்து ஆண்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். அதைக்கண்டவளுக்கு சிரிப்பு வர “வெள்ளை ஆவி..பூதம்” என்று கிண்டல் செய்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டே அடுத்த மூன்று மணி நேரத்தில் ஜே.ஃஎப்.கே செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தாள். பணிப்பெண்கள் கொடுத்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி நாற்காலிப் பட்டியைப் போட்டுவிட்டு அருகிலிருந்த நாற்பது வயது பெண்மணியைக் கண்டு சிநேகமாக புன்னகைத்தாள். அவர் பதிலுக்கு புன்னகைக்காமல் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருந்தார். அதைக்கண்ட அவளுக்கு சிரிப்பு வர அடக்கிக்கொண்டிருந்தவளுக்கு இந்த வயதிலும் முகம் முழுவதும் ஆங்காங்கே திட்டு திட்டாக அப்பியப்படி போட்டிருந்த முகப்பூச்சோடு மிகவும் அடர்த்தியாக பூசியிருந்த உதட்டுச்சாயத்தையும் கண்டு அடக்கியதையும் மீறி சிரிப்பு பீறிட்டு வர அப்பெண்மணி இவளைத் திரும்பி முறைத்தார். அவள் […] - [சமர் 3](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-3/): சென்னை மாநகர விமான நிலையம் முழுவதும் பெரும் பரப்பரப்பாக காணப்பட்டது.ஆங்காங்கே சிலர் கூட்டம் கூட்டமாக தங்களது உடைமைகளை கையில் பிடித்தப்படி மகிழ்ச்சி,பிரிவுவேதனை, ஆற்றாமை,துக்கம்,இயலாமை,கண்ணீர் என கலவையான உணர்வோடு தத்தம் தங்கள் உறவினரோடு உரையாடிக்கொண்டிருந்தனர். அதிலும் புதிதாக மணமான சில ஆண்கள் பிரிவு துயரில் கண்ணீர் வழிய கலங்கி நின்றிருக்கும் தனது புது மனைவியை அரவணைத்தப்படி ஆறுதல் கூறிக்கொண்டிருக்க,இன்னும் சில ஆண்கள் வெளிநாட்டில் பணிக்கு செல்வதற்காக கண்கள் பணிக்க தன் தாய் தந்தையை கட்டியணைத்து விடைப்பெற,சிலர் கணவன் மனைவி குழந்தைகளோடு தங்களுடைய குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பரிடமிருந்து விடைப்பெற இப்படியாக வெவ்வேறு காரணத்திற்காக வெளிநாடு செல்லுவதற்கு முன்பு சிலர் மகிழ்ச்சியோடும்,சிலர் கடமையோடும்,சிலர் கவலையோடும் விடைப்பெற சமி தன் பாட்டியைக் கட்டியணைத்து, ‘போகமாட்டேன்’ என கால்களை தரையில் தட்டி அழுது அடம்பிடித்து விமானநிலையத்தையே அதகளம் செய்துக்கொண்டிருந்தாள். அவளின் சிறுப்பிள்ளை போன்ற இச்செயலில் கவலையோடு விடைப்பெற இருந்த மக்கள் இவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.  தன் அருகிலிருக்கும் பெட்டியை […] - [சமர் 2](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-2/):   இந்தியா, அதிகாலை(நமது கதாநாயகிக்கு) ஒன்பது மணி அளவில் தனது இளஞ்சிவப்பு நிற பஞ்சு மெத்தையில் அழகிய பதுமையென உறங்கிக்கொண்டிருந்த அம்லுவை அவளுடைய தாய் பத்மாவதி, “ஏய் சமி, மணி ஒன்பதாகுது… எரும மாட்டு மேலே மழைப்பேஞ்ச மாதிரி ஒன்பது மணி வரை தூங்கிட்டு இருக்கே… இப்போ எழுந்திரிக்கியா இல்லையாடி?” காலையில் சுப்ரபாதம் பாடியவாறே தனது பெரிய மகள் இழுத்து போர்த்தியிருந்த போர்வையை விலக்கி முதுகில் பலமாக ஒரு அடி வைத்து எழுப்பினார். அதில் சிறிது உறக்கம் கலைந்தாலும் எழ மனமில்லாமல், “மாம் ப்ளீஸ்…கொஞ்சநேரம்” என்று சிறுப்பிள்ளையென சிணுங்கி,மறுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டாள் சமி என்கிற சம்ரிஷா ஆனந்த். அதில் கோபம் சுறுசுறுவென ஏற, “ஏய் சமி, இப்போ நீ எழுந்திரிக்கலை. ஒரு வாளி தண்ணி முழுதும் உன் மேலே ஊத்திடுவேன்டீ” என இடுப்பில் கைவைத்து முறைத்தப்படி கூற, அப்போதும் அசையாமல் உறங்கிக்கொண்டிருந்த சேய்யின் மீது ஆத்திரம் மிக அறையின் வெளிப்புறம் பார்த்து, “சாதனா…சாதனா…அடியே சாதனா…எங்க […] - [சமர் 1](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-1/): அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் என்னும்‌ மாநிலம், தனக்கு பிடித்த ஒரு ஆங்கில ராக் பாடலை தனது செவிப்பறை அதிர்ந்து கிழியும் அளவு இரைச்சலாக அலறவிட்டு அதன் இசைக்கு ஏற்ப தானும் உடன் பாடி வீட்டையும் சேர்த்து அலறவிட்டுக்கொண்டிருந்தான் சமர் என்கிற சம்ரிஷ் கௌதமன். நீள்விரிக்கையில் ஒரு புறம் தலை வைத்து மற்றொரு புறமாக கால் நீட்டி இமை மூடி தோரணையாக படுத்திருந்த சமர்,தனது செவியில் மாட்டியிருந்த தலையணி கேட்பொறியின் வழியே கசிந்து வந்த பாடலுக்கு ஏற்றப்படி கை கால்களை இப்படியும் அப்படியுமாக அசைத்து அபிநயத்து பாடிக்கொண்டிருக்கையில் அதை தடை செய்வது போன்று ‘கிர்…கிர்’ என்ற அலைப்பேசியில் இருந்து எழும்பிய அதிரொலியில் அவனது செவிப்பறை அதிர்ந்தது. அதன் குறுக்கீட்டால் இலேசாக எரிச்சலானவன் “ச்சை யாருடா ஷாங் கேட்கும் போது டிஸ்டர்ப் பண்ணறது” என புருவம் நெறித்து முணுமுணுத்து அலட்சியத்துடன் யாரென்று நோக்காமல் கூட அழைப்பை ஏற்ற சமர் களைந்திருந்த தன் சிகைக்கோதி “ஹலோ திஸ் இஸ் […] - [அவள் 17](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-17/): மாஸ்டர் செஃப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி முடிவுற்று மணிகர்ணிகா வெற்றி பெற்றிருந்தாலும்,தொலைக்காட்சியில் தற்போது தான் பாதி அத்தியாயங்களை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. மிக தாமதமாகவே மாஸ்டர் செஃப் போட்டியின் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப தொடங்கியதால் மணிகர்ணிகாவை நினைத்து துக்கத்தில் ஆழ்ந்திருந்த ரேவதியோ ஒருநாள் அவளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு “ஹேஏஏஏ” என கூச்சலிட, மகளை தந்தையர் இருவரும் “என்ன?” என்பது போல் நோக்க, முகமெல்லாம் ஆனந்தத்தில் சிவக்க “டாடி…பேப்ஸ் இங்க வாங்க” என ஆர்ப்பரித்த மகளையும் தொலைகாட்சியில் தெரிந்த மணிகர்ணிகாவின் உருவத்தை வைத்தே விடயத்தை யூகித்த இரு தந்தையினரும் ஒருவரது முகத்தை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டனர். தொலைக்காட்சியின் மீது ஒரு கண்ணும் தந்தையினர் மீது ஒரு கண்ணும் வைத்திருந்த பாவையவளிற்கு அவர்களது முகத்தில் எந்தவொரு சிறு மாற்றமும் தோன்றாததை வைத்தே அவர்களுக்கு இந்த இரகசியம் ஏற்கனவே தெரியும் என்று அறிந்துக்கொண்டவளிற்கு கோபம் சுறுசுறுவென பொங்கி எழுந்தது. “அடப்பாவி தகப்பன்களா??இத்தனை நாட்களாய் உண்மை தெரிஞ்சிக்கிட்டே,என்னை சுத்தலில் விட்டீர்களா?படுபாவிகளா??” என […] - [அவள் 16](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-16/): நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தனராக பங்கேற்ற ஏ.ஜே,போட்டிகள் முடிந்ததற்கு பிறகு மணிகர்ணிகாவிடம் கண்களால் விடைப்பெற்று தன் இல்லம் அடைந்தார். அவள் எடுத்த பிரமாணத்தின் படி,அந்த போட்டியில் வெற்றி வாகை சூடியதற்கு பிறகே தங்களை நாடி வரட்டும்.அதுவரை அவளை பற்றிய விடயங்கள் அறியாமல் ஒரு எதிர்ப்பார்ப்போடு அவளின் வருகைக்கு காத்திருக்க எண்ணினார். அவர் உயிரினில் ஜனித்த இரத்த சொந்தமான மகளிடமும் மணிகர்ணிகாவை சந்தித்த நிகழ்வை மறைத்திருந்தார். மணிகர்ணிகாவிற்கோ அன்றைய தோல்விக்கு பிறகு எப்பாடுபட்டாவது அந்த போட்டியில் கிழியறுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தாள். அதனால் வெகு தீவிரமாக இரவு பகல் பாராமல் அடுத்த போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினாள். அத்தோடு தன் கணவன் கற்றுக்கொடுத்த பாடத்தையும் நினைவுக்கூர்ந்து புதிதாக பல வகை உணவுகளை செய்து பார்த்தாள். அந்த போட்டியில் கலந்துக்கொள்பவர்களுக்கு அருகிலிருக்கும் ஒரு இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்க,அவள் அங்கிருந்து கொண்டே தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டாள். தீடிரென்று கிடைத்த தன் கணவனின் தரிசனம் அவளுக்குள் ஒரு […] - [அவள் 15](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-15/): மாஸ்டர் செஃப்’ சமையல் போட்டியின் அத்தியாயங்கள் பாதிக்கு மேல் எடுத்ததற்கு பிறகே தொலைக்காட்சியில் முதல் அத்தியாயத்திலிருந்து ஒளிப்பரப்ப செய்வார்கள். அதனால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது யாவருக்கும் தெரியாமல் ரகசியம் வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு சமையல் போட்டியின் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ஒரு பிரபல நடிகர் அவருக்கு முன்னோட்டம் கொடுத்து அந்த சிறிய மேடைக்கு அழைப்பு விடுத்தார். “இன்றைய சிறப்பு விருந்தினரை பற்றி கூறவேண்டும் என்றால் பிறப்பிடம் வேறு நாடாக இருப்பினும் அமெரிக்காவில் தன் சமையல் திறமையினால் உலகத்தையே தன்புறம் திரும்பி பார்க்க வைத்தவர்…அத்தோடு பல கனவுகளோடு சமையல் கலையின் புறம் அடியெடுத்து வைக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழுபவர்…மேலும் அனைத்து சமையல் வல்லுனர்களுக்கும் சிம்மச்சொப்பானமாய் திகழும் வோர்ல்ட் பேமஸ் செஃப் மிஸ்டர் ஏ.ஜே” என்று அழைத்த அடுத்த வினாடியே அந்த பிரம்மாண்ட இடத்தின் மர கதவுகள் திறக்கப்பட தனக்கே உரிய […] - [அவள் 14](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-14/): ஏ.ஜேவை தன்னுடைய கணவன் என்ற ஸ்தானத்தில் மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் அதை வெளிப்படுத்த இப்போதும் சிறிது தயக்கம் அவளினுள் இருந்தது. அதனால் அவரது அருகாமையை இப்போதெல்லாம் இயல்பாய் ஏற்க தொடங்கியப்போதிலும் மணிகர்ணிகா,மருத்துவமனையிலிருந்து பிடிவாதமாக தன்னுடைய இல்லத்திற்கே சென்று தங்கிக் கொண்டாள். ரேவதி அவளுடனே நிரந்தரமாக தங்குவதற்கு வந்துவிட்டாள். மணிகர்ணிகா ‘வேண்டாம்’ என மறுக்க,அவளது கணவனோ “நீ என்னைக்கு எல்லார்கூடவும் இருக்க விரும்பறீயோ அப்போ ரேவதி எங்களுடன் வரட்டும்…அதுவரை உனக்கு துணையிருக்கட்டும்…இனிமேல் எல்லாம் உன்னை தனியா விடமுடியாது எங்க மயக்க அடிச்சு விழுவியோ??” வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நக்கலாக உரைத்தவரை பார்வையால் நெருப்பாய் சுட்டெரித்தவளை கண்டு மெலிதாய் புன்முறுவல் பூத்தார். அவரது அந்த புன்னகை அகிலத்தை அவளது காலடியில் வைத்த நிறைவை கொடுத்தது. அதனால் மனமிறங்கி இதழை சுழித்துக்கொண்டு வேறுப்புறம் திரும்பிக்கொண்டவளின் முகம் மலர்ச்சியில் விகசித்தது. அதை ஓரக்கண்ணால் கண்ணுற்றவரின் மனதிலும் மணிகர்ணிகா ஒரு ஓரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள் என்பதே உண்மை. அத்தோடு இரு […] - [அவள் 13](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-13/): அன்று மூர்ச்சையாகிய மணிகர்ணிகாவை ஏ.ஜேவின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ப்பித்த ரேவதிக்கு துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. ஏ.ஜேவின் நெருக்கத்தினால் விளைந்த உணர்வுகளினால் தன் மீதே குற்றவுணர்ச்சியில் தவித்தவளிற்கு தங்கையின் இந்த இழிவான பேச்சுகள் அவளை அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றது. அத்தோடு இரவிலிருந்து உணவு உட்கொள்ளாதது வேறு அவளின் உடலை சோர்வடைய செய்திருக்க,அனைத்தும் இணைந்து அவளிற்கு பலவீனத்தை கொடுக்க மருத்துவரின் பல மணி நேர சிகிச்சைக்கு பிறகே மணிகர்ணிகாவின் உடல்நலம் சீராகியது. அதுவரை கண்ணீரில் கரைந்த மகளை அணைத்து தேற்றிய தந்தையிடம் “அப்பா மணிம்மாவோட இந்த நிலைக்கு காரணம் நான் தான்…என்னால் தான் அவங்களுக்கு இப்படி ஆகிடுச்சு…நான் மட்டும் உங்களை கல்யாணம் செய்துக்க சொல்லலைனா அவங்க ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பாங்க…என்னால் தான் அவங்க அப்படியெல்லாம் பேசினாங்க” என அழுகையோடு புலம்பிக் கொண்டிருந்த மகளின் வார்த்தைகள் அவருக்கு தெளிவான அர்த்தத்தை அளிக்கவில்லை. ஆனால் தற்போது மன வருத்தத்தில் […] - [அவள் 12](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-12/): இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் விடியற்காலையில் முழித்துக் கொண்ட மணிகர்ணிகா காலை பத்து மணிக்கே ரேவதியை அழைத்துக்கொண்டு ஏ.ஜேவின் இல்லத்திற்கு சென்றாள். நேற்று ஏ.ஜே பேசிய சொற்கள் நெருஞ்சிமுள்ளாய் உள்ளுக்குள் குத்தினாலும்,அதை விட அவர் மீது தளிராய் துளிர ஆரம்பித்திருந்த நேசம் வெற்றி வாகை சூட,விரும்பியே அவருக்காக தன்மானத்தை விட்டு அவரின் நலம் அறிய சென்றாள். அதனை அவர் மீது இருக்கும் நேசமாக கருதாமல் மனிதாபிமானம் என்று பெயரிட்டு தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் பேரிளம் பெண். ஆனால் அவரோ இவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு எதிராக நேற்று உடல்நலம் குன்றி இருந்ததற்கான சுவடே இல்லாமல் குளித்து புத்துணர்வுடன் நேர்த்தியான உடையணிந்து “ஹே பேபி…என்ன காலையிலே இந்த பக்கம்” என மகளை உற்சாகத்துடன் வரவேற்றப்படி வெளியே வந்தார். நேற்று எழுந்துக்கொள்ள முடியாமல் படுத்திருந்தவரா இவர் என மணிகர்ணிகாவிற்கே சந்தேகம் வந்தது என்றால் ரேவதிக்கு வராமல் இருக்குமா என்ன? அதனால் ரேவதி தனது தாயை குழப்பமாக ஏறிட,அவளும் […] - [அவள் 11](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-11/): பேரதிர்ச்சியுடன் இதழை இலேசாக பிளந்தப்படி நின்றிருந்தவளை கண்டவருக்கு இதழில் சிறு கோடாய் ஒரு முறுவல் பூத்தது. தான் கணவனாக இருப்பினும் தன்னை பற்றி எதையும் அறிந்து வைத்திராத அவளது வைராக்கியமும் அப்பாவித்தனமும் கலந்த குணம் ‘இவள் மற்றவர்களை போல் இல்லை’ என்ற உணர்வை தோற்றுவிக்க இறுகிய பாறையாய் இருக்கும் இதயத்தினுள் ஒரு ஈரம் கசிந்தது. அதனால் மிகவும் மென்மையாக “மணிகர்ணிகா” என இருந்த இடத்தில் இருந்து அழைக்க,அவளிடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை அறிந்தவர் அவளை நெருங்கி முகத்திற்கு முன்பு சொடக்கிட்டு “மணிகர்ணிகா” என்றழைத்தார். அதில் திடுக்கிட்டு ‘நான் எங்கு இருக்கிறேன்?’ என்பது போல் மலங்க மலங்க விழித்தளை கண்டு பரிதாபமும் ரசனையும் மிக,சில வினாடிகள் அவளின் பால் நிலா முகத்தை கூர்ந்து நோக்கினார். ஆனால் சடுதியாக தன் சிரத்தை உலுக்கி அதனை தடுக்கும் விதமாக கடின முகத்துடன் “கனவு கண்டது போதும்…இன்றைய நாள் வகுப்பிற்கு செல்லலாமா??” என்றார் இரும்பு குரலில். அதில் […] - [அவள் 10](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-10/): ஏ.ஜே மற்றும் மணிகர்ணிகாவின் திருமணம் நடந்தேறி நாட்கள் கடந்த நிலையில் அவர்கள் இருவரும் தத்தமது வீட்டிலே தங்களது வாழ்க்கையை தனித்து வாழ்ந்துக்கொண்டிருந்தனர். ஏ.ஜே அழைப்பு விடுக்காமல் அவரது இல்லத்திற்கு செல்வது தன் சுயமதிப்பிற்கு ஏற்றது அல்ல என்றெண்ணி ஏ.ஜே ஆலயத்திலிருந்து கிளம்பியதும் தானும் தன் இல்லம் அடைந்தாள் மணிகர்ணிகா. மணிகர்ணிகாவின் கழுத்தில் புதிதாக இருந்த மஞ்சள் கயிற்றை தவிர வேறெதுவும் அவளது வாழ்வில் மாற்றமடைந்திடவில்லை. ஏ.ஜேவும் தன் மகளிற்காக திருமணம் செய்து கொண்டாலும் மணிகர்ணிகாவுடனான அவரது திருமணம் தன்‌ காதல் மனைவிக்கு செய்த துரோகமாக கருதியவரால் அவ்வளவு எளிதாக அந்த புது உறவினுள் நுழைந்து அவளை தன் வாழ்க்கை துணைவியாக ஏற்க இயலவில்லை. அதற்காகவே தான் பெற்றெடுத்த மகவையும் சந்தித்து பேசுவதை கூட தவிர்த்தவராய் தன்னுடைய வட்டத்திற்குள்ளே தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி இருந்துக்கொண்டார். இருப்பினும்,திருமணம்‌ என்னும் பந்தத்தில் இணைந்தப்பிறகு தான் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்வது நற்குணமன்று எண்ணி மனதை கல்லாக்கி கொண்டு […] - [அவள் 9](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-9/): ஏ.ஜே பேசிவிட்டு சென்று இரண்டு இரண்டு நாட்கள் கடந்தும் மணிகர்ணிகாவால் ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. ரேவதிக்காக தனக்குள் பின்னியிருந்த வலையில் இருந்து வெளி வந்து ஏ.ஜேவை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவையும் அதேசமயம் தனக்குள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெளிவர முடியாமல் இருத்தலை கொல்லி எறும்பாய் தவித்தாள். அந்த நாட்களில் தன்னையே ‘மணிம்மா’ என்று சுற்றி திரிந்த இளம்பட்டாம்பூச்சியின் நினைவு மெல்லிய சாரலாய் மனதை நிறைய வைக்க இதழில் தானாய் ஒரு முறுவல் வந்தமர்ந்தது. அத்துடன் தானும் அவளும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்க்கையில் குழந்தை பேறு பெறாமலே ஒரு வளர்ந்த குழந்தைக்கு தாய் என்ற நிலை மனதை கசக்காமல் ஒரு இன்பச்சாரலை அளித்தது. அத்தோடு அவளை சுமந்து பெறவில்லை என்றாலும் தன்னை தாயாக எண்ணி மிகப்பெரிய முடிவை எடுத்த பெண்ணின் மெல்லிய உள்ளம் அவளுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியதில் தேகம் சிலிர்த்தவள்,தன்னுடைய புடவை முந்தானையை எடுத்து இடையில் சொருகி தேகம் குறுக்கி […] - [அவள் 8](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-8/): அகந்தையும் செருக்கும் பிடிவாதமும் கொண்ட ஆண்மகனிற்கு மகளாக பிறந்தவளிற்கும் அந்த அனைத்து பண்புகளின் சிறப்பம்சங்களும் இருப்பது போல் அவளும் தந்தையுடன் செல்லாமல் அழுத்தமாக அவ்விடத்திலே இருந்துவிட்டாள். ஏ.ஜேவிற்கு மகளின் மீது அளவுக்கடந்த பாசமும் அன்பும் இருந்தப்போதிலும் இவ்விடயத்தில் விட்டு தரமுடியாத கட்டாயத்தினால் அவரும் வீம்புடனே தன்னுடைய இல்லத்திற்கு சென்றுவிட்டார். மணிகர்ணிகாவோ ரேவதியின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் நெஞ்சிற்குள்ளே குமைந்து தன் இல்லம் நாடி வந்தவளால் நிதானமாக இருக்க இயலவில்லை.அதனால் இல்லத்தை தன் பாதங்களால் அளந்தவாறு எரிச்சலோடு நடந்துக்கொண்டிருந்தாள். சில மணி நேரங்கள் தொடர்ந்த அவளின் நடை நீடிப்பதை தடுத்து நிறுத்துவது போல் அவளது இல்லத்தின் அழைப்பு மணி ஒலித்து அவளது கவனத்தை திசை திருப்பியது. உடனடியாக கடிகாரத்தை பார்க்க அது நள்ளிரவு பன்னிரெண்டு மணி என்பதை அறிவுறுத்த ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்’ என்று பெரிய அனுமானமின்றி அது ரேவதியாகவே இருக்கும் என்று யூகித்து கதவிலுள்ள கண்ணாடி குமிழி வழியாக யாரென்று நோக்கினாள். […] - [அவள் 7](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-7/): “மனதில் உறுதி வேண்டும்;வாக்கினிலே இனிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்;நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்;கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்;தரணியிலே பெருமை வேண்டும்” பிறந்தநாள் விழாவிற்கென கூடியிருந்த அனைவரும் ரேவதி ஒலிவாங்கியில் கூறிய செய்தியில் அதிர்ந்தார்கள் என்றால்,அதில் சம்பந்தப்படுத்தப்பட்ட நால்வர் ஏகத்திற்கும் அதிர்ந்து ஸ்தம்பித்து சிலையானார்கள். ஏனெனில் ரேவதி கூறியதாவது “மணியம்மா உங்க பிறந்தநாள் விழாவிற்கான சிறப்பு பரிசாக என்னுடைய அப்பாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன்…அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு” என்றவுடன் அவள் கூறிய செய்தியில் மறைந்திருந்த உட்பொருளை அறிந்த நால்வரும் அதிர்ச்சியில் சிலையாகிவிட, உடனே கூடத்திலிருந்த அனைவரும் தங்களுக்குள் சலசலக்க “யாரும் அவசரப்படாதீங்க…வெயிட்…வெயிட்…நான் இன்னும் முழுமையாக கூறி முடிக்கவில்லை” என்று தன் கரம் முன் நீட்டி பொறுமை காக்க கூறியவள், மின்சாரம் தாக்கியது போன்று திகைத்து நின்றிருந்த தன் தந்தை,ஏஜே மற்றும் மணியம்மாவை பார்த்து நமுட்டு சிரிப்புடன் “ஹலோ எக்ச்சூஸ்மீ…நீங்க இப்படி அதிர்ச்சியடையும் படி ஒண்ணுமேயாகவில்லை…எல்லாரும் சீக்கிரம் […] - [அவள் 6](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-6/): “நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்சாலவே யரி தாவதொர் செய்தியாம்;குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!” பாலும் வெண்ணெய்யும் குழைந்தெடுத்த நிறத்தில் மீசையின்றி மழிக்கப்பட்ட களையான முகம்,கூரான நாசி,பார்ப்போரை துணைக்கு சிரிக்க அழைக்கும் எப்போதும் புன்னகையை பூசியிருக்கும் இதழ்கள்,வயதின் முதிர்வு தேகத்தில் தெரியாத வகையில் உடற்பயிற்சியினால் முறுக்கேறி இருந்த புஜங்கள் மற்றும் அகன்று பரந்து விரிந்திருந்த தோள்கள் என ஆண்மைக்குரிய இலக்கணமாய் திகழ்ந்தவனுக்கு ஏற்றாற் போன்று பிஸ்தா பச்சை நிறத்தில் மேல் சட்டையும் கீழே தந்த நிறத்தில் கால் சட்டையும் அணிந்து எதிராளிகள் தன் பார்வை செல்லும் திசையை அறியாமல் இருப்பதற்காக விழிகளை மறைக்கும்படியாக பழுப்பு நிற குளிர் கண்ணாடி அணிந்து ஒரு வித தோரணையுடன் கம்பீரமாக நடந்து வந்தவரை கண்டு அங்கிருந்த அனைவரும் வாய்ப்பிளந்தனர். அனைவரும் ஆச்சரியம் கொள்வதற்கு நிறைய காரணங்கள் இருந்தது.ஏனெனில் […] - [அவள் 5](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-5/): “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!” மணிகர்ணிகா நம் நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போன்று புடவை அணிந்து,நவீன காலத்திற்கு ஏற்றாற் போன்று சுருள் சுருளாக தனது நீண்ட கூந்தலை சுருட்டி விரித்து விட்ட தலையலங்காரத்துடன், புடவைக்கு தோதாக வெள்ளை கற்கள் பதித்த மிகவும் எளிமையான வகையில் அணிகலன்கள் அணிந்து ஒரு வித சங்கடத்துடன் அந்த இரவு விடுதிக்கு வந்து சேர்ந்தாள். அதே ரேவதி நவீன காலத்திற்கு ஏற்றாற் போன்று விருந்திற்கு அணியும் முழு நீள கருப்பு நிற அங்கி(கவுன்) அணிந்து,அதற்கேற்றாற் போன்ற ஒப்பனையுடன் ஒரு இளவரசியின் தோரணையுடன் நடந்துவந்தாள். இருவரும் காரில் இருந்து இறங்கியவுடன்,தான் வந்திருக்கும் ஐம்பது மாடி கட்டிடத்தின் உயரத்தை பிரம்மிப்புடன் நிமிர்ந்து பார்த்த மணிகர்ணிகாவிற்கு உள்ளுக்குள் ஒரு வித படபடப்பாக […] - [அவள் 4](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): “அறிவு கொண்ட மனித வுயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம்;நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!” இரவு முழுவதும் உறங்காமல் ஏஜேவை வாணலியில் வறுத்துக்கொண்டிருந்த மணிகர்ணிகா விடியற்காலை நான்கு மணிக்கு மெதுவாக கண்ணயர்ந்தாள். பொழுது புலரும் வேளையில் கண் உறங்கினாலும் வழக்கம் போல் ஆறு மணிக்கு கண்விழித்த மணி,இரவு உறங்கிய படுக்கையில் நேராக சம்மானமிட்டு நிமிர்ந்து அமர்ந்தவள் கண்மூடி இறைவனை தொழுதுவிட்டு அதன்பிறகே மெத்தையிலிருந்து எழுந்து தன்னுடைய அன்றாட பணியை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தாள். அத்தோடு அவளுடைய கணவர் இறந்து இன்றோடு பன்னிரெண்டு வருடங்கள் முடிந்துவிட்டது.அவருடைய ஒவ்வொரு வருட திதியிற்கும் வீட்டிலே சில உணவு வகைகளை சமைத்து அவரது புகைப்படத்தின் முன் வாழை இலை போட்டு அவள் சமைத்த உணவுகளை பரிமாறி வணங்குவது வழமையான ஒன்று. இன்றும் அதேப்போல் அதிகாலை எழுந்து வீட்டை ஒதுங்க வைத்து சுத்தம் செய்தவள் […] - [அவள் 3](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): “மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்நாதந் தானது நாரதர் வீணையோ?நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியேமேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!” மணிகர்ணிகா இன்றோடு அமெரிக்காவிற்கு வந்து ஒரு மாதம் கடந்துவிட்டது.அத்தோடு தனது லட்சியத்திற்கான முதல் படியில் காலடி எடுத்து வைத்திருந்தாள். ஆனால் அவள் எடுத்து வைக்க போகும் முதல் பாதையின் தொடக்கமே எளிதாக இல்லாமல் வெகு சிரமத்துடன் பல தடைகற்களை கொண்டு அமைவதாக இருந்தது.ஏனெனில் மணிகர்ணிகா இதுநாள் வரை கற்று தேர்ந்திருந்தது இந்தியன் சமையல் கலை மட்டுமே. ஆனால் இங்கு அவள் பணிப்புரிய போகும் உணவகமோ ஒரு இத்தாலியன் வகையை சேர்ந்ததாகும்.இதுவரை அவள் கற்று வைத்திருந்தது கடுகளவு மட்டுமே,அத்தோடு அவள் பயில வேண்டியது  வானளவு பரந்து விரிந்திருந்தது. மணிகர்ணிகாவிற்கு முதல் ஒரு வாரம் அனைத்தும் மலைப்பாக தோன்றிட,அதில் பெரும் தடுமாற்றத்துக்குள்ளானவள் அடுத்து வந்த திங்களில் சிரமேற்கொண்டு இத்தாலியன் சமையலை […] - [அவள் 2](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): “மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம்வைய வாழ்வு தன்னில் எந்தவகையினும் நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வம் இந்த நாட்டிலே” மணிகர்ணிகா கடந்து வந்து பாதையில் தனக்கென இருப்புத்தொகையாக எதையும் சேமித்து வைத்திருக்காதலால்,தனது லட்சியத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி என்ன செய்யலாம் என தெளிவற்ற சிந்தனையோடு கவலைப்பூண்டிருந்த வேளையில் தெய்வத்தின் மறுவுருவாய் வந்து அவளுக்கான சாதனை பாதையின் வழியை கைக்காட்டினார் சிவனேசன். அவளது முதலாளியான எழுபது வயது நிரம்பிய சிவனேசன் அமெரிக்காவில் தன் மகன் இருப்பதாக கூறி “மணி அங்கு அவன் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டிருக்கிறான்… உனக்கு விருப்பம் இருந்தால் நீ அங்கே சில காலம் பணிப்புரியலாம்…நீ தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாட்டையும் அவனே செய்துக்கொடுப்பான்…உன் வாழ்விற்கு தேவையான நிதியும் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதலும் நிச்சயமாக அங்கு உனக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்…அங்கே செல்கிறாயாம்மா??” என அவளிடம் அபிப்பிராயம் கேட்கவும், அவள் மகன் என்ற ஆண் பாலினத்தவரை […] - [அவள் 1](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!” என்ற பாரதியாரின் பாடலை பற்றி குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த மணிகர்ணிகா மனதிலும் உடலிலும் அப்பாடலுக்கேற்ற நிமிர்வு சிறிதும் இல்லை. அவளது தற்போதைய கவனம் முழுவதும் பள்ளி குழந்தைகளின் மீது இருந்தாலும் தெளிந்த நீரோடையில் விழுந்த கல்லினால் ஏற்பட்ட கலங்கிய குட்டையாய் குழம்பியிருந்தது.அவளது மனதில் கடந்த சில நாட்களாக சஞ்சலம் குடிக்கொண்டு அவளை மிகுந்த வருத்தத்திற்குள்ளாகியிருந்தது. மணிகர்ணிகா என்ற ஒரு புரட்சிப்பெண்ணின் பெயர் வைத்ததாலோ என்னவோ அந்த வீரமங்கை ஜான்சி ராணியின் வாழ்க்கையை போலவே வெகு எளிதாக ஆரம்பித்த அவளது திருமண வாழ்க்கை மிக விரைவிலேயே ஒரு முடிவிற்கு வந்துவிட்டு இருந்தது. அவர்களது சமூகத்தில் மிகச்சிறிய வயதிலே பெண்களை திருமணம் என்னும் பந்தத்தில் இணைத்துவிடுவார்கள்.அவர்களது சமூகத்தில் இருக்கும் […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-3/): ஒரு வருடத்திற்கு பிறகு, அனிகாவிற்கு ஒரு வயது நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் ருத்ரா திடீரென்று “சின்ட்ரெல்லா அடுத்த மாதத்திலிருந்து ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை முழுசா உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு இருக்கேன்” என்றான். அவளோ அதிர்ச்சியில் விழி விரித்து “அச்சோ அங்கிள்…என்னால எல்லாம் முடியாது…பிளீஸ் நீங்களே பார்த்துக்கோங்க” என பயத்தில் பின்னடைந்தாள். ஆடவனோ மறுப்பாக தலையசைத்து “நோ சைத்ரா…இதுக்கு ஆப்ட்டான ஆள் நீ தான்…பூஜா கல்யாணமாகி போயிட்டா…வைஷ்ணவி ஆன்ட்டிக்கு இதைப் பத்தியெல்லாம் சிந்திக்கவே நேரமில்லை…என்னால எல்லாத்தையும் ஒட்டுக்கா கவனிக்க முடியலை…சோ இனி ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை நீ தான் பார்க்கப்போற” என உறுதியாக கூறிவிட்டான். அவளோ அப்போதும் “அவ்வளவு பெரிய பொறுப்பை நான் எப்படி தனியா பார்க்க முடியும்?” என தயங்கினாள். அவனோ அவளின் சிரத்தை வருடி “அதெல்லாம் முடியும்…ஐ வில் ஹெல்ப் யூ…உன் கூடவே இருந்து அசிஸ்ட் பண்ண ஸ்வேதாவை துணைக்கு வைச்சுக்கோ” என்றுரைத்தவுடன், “ஐ ஸ்வேதா தீதியா?அப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…டபுள் ஓகே…” என சந்தோஷமாக […] - [கவிதை 28(2)](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-282/): கண்மூடியிருந்தவளின் முகத்தை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே “சின்ட்ரெல்லா” என அவளின் கன்னம் தட்டி அழைக்க, அவளோ ‘அப்போ நம்ம உயிரோடு தான் இருக்கோமா?’ என மெதுவாக கண் விழிக்க, அவனோ அவள் விழிப்பதற்காக காத்திருந்தவனாய் நொடியும் தாமதிக்காமல் குனிந்து அவளின் இதழை சிறைசெய்தான். அதனை சற்றும் எதிர்ப்பாராதவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது என்றால், ஆடவனின் முத்தத்திலோ அவளிற்கு மூச்சு முட்டின. ‘அங்கிள் என்ன செய்யறீங்க?’ என கேட்க முயலுகிறாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. ஏனெனில் அவன் தான் அவளின் இதழை வன்மையாய் சிறைப்பிடித்திருந்தானே? இப்போது அவளிற்குள் சிறு சந்தேகம் கூட தோன்றின. இருவரும் கால் தடுமாறி தான் கீழே விழுந்தார்களா அல்லது ருத்ராவின் கள்ளத்தனத்தால் கீழே விழுந்தார்களா என்று! ஏனெனில் முத்தத்தாலே பெண்ணவளின் உயிரை உறிஞ்சி எடுத்துக்கொண்டிருந்தான் அந்த காதல் கள்ளன். அவளின் இதயம் நாணத்தில் தாறுமாறாக துடிக்க உடலிலுள்ள ஒட்டுமொத்த அணுக்களும் அவன் நெருக்கத்தில் சூடேறி சிவந்து விட்டன. அவளுள் அவன் ஆழமாக […] - [கவிதை 28(1)](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-28/): இருவருக்குமிடையேயான மனஸ்தாபம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. அவள் திரும்பி வந்தாலும் அத்துணை எளிதில் அவளை மன்னித்துவிடக்கூடாது என அவன் எண்ணியிருக்க,ஆனால் அவளின் கண்ணீர் அவனது ஒட்டுமொத்த உறுதியையும் குலைத்து அவளை மன்னித்து ஏற்க வைத்திருந்தது. இப்படியாக,அவர்களுக்குள் உண்டாகிய அந்த முதல் கருத்து வேறுப்பாடு முற்றுப்பெற்று,அவர்களது வாழ்வு வண்ணமயமாக நகர ஆரம்பித்தன. இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் நேத்ரா கைது செய்யப்பட்ட தகவல் அனைத்து ஊடகங்களிலும் பரவி விரவின. சிறார்களின் கருமுட்டையை சட்டத்திற்கு புறம்பாக திருடிய வழக்கில் அவள் கைது செய்யப்பட்டிருந்தாள். அவளோடு இணைந்து புகுந்த வீட்டு சார்பாக இருந்த மருத்துவமனையும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதையெல்லாம் அறிந்த வைஷ்ணவியும் பூஜாவும் இடிந்துப்போயினர். சட்டத்திற்கு புறம்பாக அவர்களும் சில இழிவான பணிகளை செய்யக்கூடியவர்களே… ஆனால் இப்படியொரு கொடூரமான செயல்களை செய்யக்கூடிய மகாப்பாவிகள் அல்ல! அதனால் நேத்ராவின் உண்மை சுயரூபம் அறிந்து மொத்தமாய் ஒடுங்கிவிட்டார்கள். வைஷ்ணவி மட்டும் ருத்ராவிடம் மகளை காக்கும் படி கெஞ்ச,அவனோ நிச்சலனத்துடன் […] - [கவிதை 27](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-27/): “அம்மா!சத்தியமா நீ இப்படியொரு கேவலமான பிறவியா இருப்பேன்னு நினைக்கவே இல்லை” என மஞ்சரி வெறுப்போடு முகத்தை சுழிக்க, மாதுரியும் அவளோடு இணைந்து “காசு இல்லைனா கூட நம்ம சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்…அதை விட்டுட்டு அக்காவோட வாழ்க்கையையே பலிக்கொடுத்து தான் நம்ம உயிர் வாழணுமா மா?அப்படியொரு வாழ்க்கை வாழறதுக்கு நம்ம செத்தே போயிருக்கலாம்…” என வலி மிகுந்த குரலில் உரைக்க, “என்னம்மா இப்படியெல்லாம் பேசறீங்க?” என மதுபாலா பதறிப்போய் மொழிய, அவரின் பதட்டமும் கூட அவர்களுக்கு வெறுப்பை வழங்கின. “ப்ச்…” என எரிச்சலாக உச்சுக்கொட்டிய மஞ்சரி “தீதியை வித்து வந்த பணத்துல தான் நாங்க இத்தனை நாளா வாழறோம்னு நினைச்சாலே எங்களுக்கு அருவருப்பா இருக்கு…எப்படிம்மா உன்னால இதை செய்ய முடிஞ்சது?தன் பிள்ளைகளோட பசியை போக்க தன்னுடைய கையையே வெட்டி கொடுத்தாள் ஒரு தாய்னு நான் படிச்சிருக்கேன்…ஆனால் நீயோ உன் குழந்தையவே பணத்துக்காக பழி கொடுத்திருக்க…நீ எப்படிம்மா ஒரு சரியான அம்மாவா இருக்க முடியும்…சத்தியமா உன்னை பார்க்கவே […] - [கவிதை 26](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-26/): சைத்ராவை யாரும் கடத்திச் செல்லவில்லை. அவளாக விருப்பமுற்றே ஒரு இடத்திற்குச் சென்றிருந்தாள். சைத்ரா மற்றும் ருத்ராவின் திருமண வரவேற்பு புகைப்படம் ஊடகங்களின் வழியாக கசிந்திருந்தது. அதற்கு காரணமும் நேத்ரா தான்! சைத்ரா தொடர்பான ஒவ்வொரு அடியையும் ருத்ரா பதிவிசாக எடுத்து வைத்துக்கொண்டிருக்க,அவனை சறுக்கிவிடவே நேத்ராவின் வஞ்சம் துடித்தது. ஊடகங்களின் வழியாக வெளியான புகைப்படத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்த தனது தமக்கை மயூரியை கண்டதற்கு பிறகும் அவர்களால் அடையாளம் காண முடியாமல் இருக்குமா என்ன? தனது தாயிடம் விசாரித்ததற்கு அவரோ பெரிதாய் அதிர்ந்தாலும் மகள்களிடம் கூட உண்மையை எடுத்துரைக்க முனையவில்லை. “இது உங்க தீதி இல்லைம்மா…வேற யாரோ” என சமாளிக்க முயன்றும்,அவர் தோல்வியை தழுவினார். மாதுரி மற்றும் மஞ்சரி இருவருக்கும் உறுதியாக அது தனது சகோதரி மயூரி தான் என்பது தெரிந்ததினால் பல நாட்களாக அவளை நேரில் சந்தித்து பேச போராடிக்கொண்டிருந்தனர். ருத்ராவின் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்களால் சைத்ராவை நெருங்க முடியவில்லை. தக்க சந்தர்ப்பம் […] - [கவிதை 25](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-25/): மயூரி என்னும் பெண்ணின் வாழ்வு அஜய்யின் பிறப்போடு முடிவுப்பெற்றிருக்க, இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் பதினைந்து வயது பெண் கர்ப்பமடைந்ததற்கு காரணம்,ஷீலாவிற்கும் அவருடன் இணைந்து பணிப்புரிந்த உதவி மருத்துவருக்குமிடையேயான தவறான புரிதல் தான்! ஏனெனில்,குழந்தை பிறப்பு சிகிச்சைக்காக மொத்தம் இரண்டு மருத்துவர்கள் ராகவ்வால் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒரு மருத்துவர் ஷீலா என்றால்,மற்றொருவள் ஸ்மிதா! ஷீலா இல்லாத சமயங்களில் ஸ்மிதா இந்த பணியை ஏற்று கவனிக்க வேண்டும்.இது தான் இருவருக்குமான ஒப்பந்தம்‌. கிட்டத்தட்ட ஷீலாவின் உதவியாளர் போல தான் ஸ்மிதா. இடையில் ஒரு ஐந்து நாட்கள் ஷீலாவிற்கு உடல்நிலை சீர்கெட்டதால்,அவர் விடுமுறையில் இருந்தார். அதனால் மயூரியிடமிருந்து கருமுட்டையை எடுக்கும் பொறுப்பு ஸ்மிதாவின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஸ்மிதாவோ இரு பெண்களின் பெயரும் ஒன்று போலவே இருப்பதினால் குழம்பி,பதினைந்து வயது பெண் மயூரியிடமிருந்து கருமுட்டை எடுப்பதற்கு பதிலாக ருத்ராவின் விந்தணுவை அவளது கருப்பையில் செலுத்தியிருந்தாள். பிழைப்புரிந்ததற்கு பிறகே ஸ்மிதா தன் தவறை உணர்ந்தாள். குற்றத்தை உணர்ந்த தருணத்திலாவது […] - [கவிதை 24](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-24/): மயூரிக்கு தற்போது ஐந்தாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது. ஆம்,மயூரி கருவுற்றிருக்கிறாள். ஒரு குமரியடையாத குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை! மதுபாலா மொத்தமாய் இடிந்துவிட்டார். பதினைந்து வயதான மயூரியோ ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அவளின் உயிர் உடலை விட்டு நீங்கி வெறும் கூடாகி பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தவளின் சிறகை துடிக்க துடிக்க வெட்டி வீசிய ஒரு நிலை தான் அவளிற்கு!! மயூரி துணிச்சலான பெண் தான்…ஆனால் நடந்து முடிந்த சம்பவத்தால் அவளும் அதீத மன அழுத்தத்திற்கு உட்பட்டு பித்தாகியிருந்தாள். அவளின் கர்ப்பத்தை கலைத்தால் அது அவளின் உயிருக்கு ஆபத்தாக நேரிடும் என்று மருத்துவ அறிக்கை குறிப்பிட,யாவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. மயூரியின் உயிரும் முக்கியம்…அதைவிட வயிற்றில் வளரும் சிசுவின் உயிரும் முக்கியம்! அதுமட்டுமின்றி வாடகை தாயாக கொண்டு வரப்பட்ட அந்த பெண்ணிற்கு இம்முறையும் எதிர்மறை முடிவே வந்திருந்தது. அந்த பெண்ணும் ‘பிளீஸ்…இதுக்கு மேலே என்னால் முடியாது டாக்டர்…இப்படியே போனால் […] - [கவிதை 23](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-23/): இரண்டு நாட்கள் கழித்து, அலுவலகத்திற்கு தயாராகி வந்தவனை அவனது தாத்தா அழைப்பதாக ஒரு பணியாள் வந்து கூறவும்,ருத்ராவின் முகம் இறுகிவிட்டன. ஆயினும்,உடல்நிலை குன்றியவரை உதாசீனம் செய்ய இயலாமல் அவரை காண வந்தான் ருத்ரா. ஓரளவு உடல் தேறியிருந்ததால் மல்ஹோத்ராவை இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள். வெண்ணிற ஜிப்பாவில் எழுபது வயது மதிப்பு தக்க வகையில் அமர்ந்திருந்த அந்த முதியவர்,ஆரோக்கியமற்ற அந்நிலையிலும் கம்பீரம் குலையாமல் அவனையே பார்வையால் துளைத்திருந்தார். உள்ளே நுழைந்த அவரது பேரனோ ‘என்ன?’ என்பது போல் எரிச்சலோடு அவரை நோக்கினான். இருவரின் கத்திப்பார்வையும் ஒருவரை ஒருவர் கிழித்துக்கொள்ள,சட்டென தன் கூரிய விழிகளை விலக்கிய தாத்தா கண்ணாலே அந்த அறையிலிருந்த செவிலியரை வெளியே செல்லுமாறு கட்டளையிட்டார். அந்த பெண் வெளியேறியவுடன் “எப்படி இருக்கீங்க க்ராண்ட்பா?” என கடமையென கேட்டுக்கொண்டே அவருக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் ருத்ரா. அவனை அழுத்தமாக நோக்கிய பெரியவர் “நவ் ஐயம் டூயிங் குட்…பட் இது இரண்டாவது அட்டாக்…நெக்ஸ்ட் எப்போ […] - [கவிதை 22](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-22/): நான்கரை வருடங்களுக்கு முன்பு, மும்பை பெருநகரில் தமிழர்கள் வாழும் பகுதி அது! அந்த பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட ஓலை குடிசைகளும் அட்டை போட்ட வீடுகளும் நிறைந்து இருந்தன. ஆங்காங்கே ஒரு சில இடத்தில் மட்டும் மாடி வீடுகள் தென்பட்டன. எஞ்சியிருந்தவை அனைத்தும் பத்துக்கு பத்து அடி அளவு அல்லது அதையும் விட சிறிய பரப்பை கொண்ட குறுகிய வீடுகள்! அந்த சின்னஞ்சிறிய வீட்டிலும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களும் வசித்து வருகிறார்கள். அனைவரும் தினசரி கூலிக்குச் சென்று தங்களது வயிற்றை நிரப்பும் தொழிலாளர்கள்! அவ்வகையான ஒரு குடும்பத்தை சேர்ந்தது தான் மதுபாலாவின் குடும்பமும்! மதுபாலா வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகினும் தமிழரான முத்தரசுவை நேசித்து இந்த பகுதிக்கு தஞ்சமடைந்திருந்தார். தங்களது காதலுக்காக செல்வச்செழிப்பை துறந்து ஓடி வந்து மணம் செய்துக்கொண்டதால் அவரின் வீட்டிலும் பெண்ணை தலைமுழுகிவிட்டனர். அதிலிருந்து மதுபாலாவிற்கான ஒற்றை உறவு முத்தரசு மட்டுமே! அவர் ஒருவரே தனக்கு அனைத்தும் என நம்பி வாழ […] - [கவிதை 21](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-21/): “சின்ட்ரெல்லா இந்த வாரம் சன்டே நம்ம வீட்டில் பார்ட்டி ஒண்ணு அரேஞ்ச் பண்ணியிருக்கேன்…ஆர் யூ ஓகே வித் திஸ்?” என முதன்முறையாய் தன்‌ மனையாளிடம் அவன் அனுமதி வேண்டினான். கணவன் அவ்வாறு வேண்டியதில் அவளிற்கு உள்ளூர உவகை தோன்றினாலும், அவளிற்கு தான் இதுப்போலான நிகழ்ச்சி என்றாலே ஒவ்வாமையாயிற்றே? அதனால் “அது அவசியமா?” என தயக்கமாய் கேட்டாள். உடனே ஆடவனின் முகம் தீவிரமடைய “அஃப் கோர்ஸ் சின்ட்ரெல்லா…இதுவரை என்னோட ஃபேமிலி இவங்க தான்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கிற அளவு யாரையும் நான் நெருக்கமா ஃபீல் பண்ணதே இல்லை…பட் ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம் ஐ விஷ் உன்னையும் அஜய்யையும் உலகத்துக்கே அறிமுகப்படுத்தணும்னு விரும்பறேன்…” என்றவுடன், அவளின் விழிகள் வியப்பில் விரிய “திடீர்னு ஏன் அங்கிள் இந்த முடிவு?” என கேட்டவளின் உள்ளம் ஆனந்தத்தில் குறுகுறுத்தது. “உங்க இரண்டு பேருக்குமான பாதுகாப்புக்காக தான் இத்தனை நாளா உண்மையை மறைச்சு வைச்சேன்…பட் இப்போ நீங்க இரண்டு பேரும் இந்த […] - [கவிதை 20](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-20/): ஸ்வேதா மற்றும் டேவிட் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகும் தகவல் சைத்ராவை வந்தடைந்தது. அதைக் கேட்டவுடன் அவளிற்குள் எல்லையில்லாத சந்தோஷம்… ஆனால் அதையும் மீறி தன்னிடம் அவள் எதுவும் தெரிவிக்கவில்லையே என்ற மனவருத்தமும் அடைந்தாள் அவள். “ஸ்வேத் நீயும் டேவிட்டும் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களாம்…என்கிட்ட நீ எதுவுமே சொல்லவே இல்லை…” என சைத்ரா சிறிது ஆதங்கம் கலந்த கோபத்துடன் வினவிட, “இல்லை சைத்து…” என அவள் கைகளை பிசைந்து தடுமாறவும், “நீ எதுவும் பேசவேணாம் ஸ்வேத்…உன் மேலே நான் பயங்கர கோபத்தில் இருக்கேன்…” என்றவள் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்திருந்தாள். ‘என்ன சொல்லி அவளை சமாளிப்பது?’ என அறியாமல் ஸ்வேதா விழிக்க, வெடுக்கென்று அவளின் புறம் திரும்பிய சைத்ரா “எத்தனை நாளா லவ் பண்ணறீங்க?” என்று வெறுமையான குரலில் கேட்க, அவளை தயக்கமாய் ஏறிட்டு “அது வந்து…நாலு வருஷம் சைத்து” என்றவளின் சரீரம் கழிவிரக்கத்துடன் நலுங்கி ஒலித்தது. சட்டென அவளை நோக்கியிருந்தவளின் விழியில் கனல் […] - [கவிதை 19](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-19/): அவளிற்கு அன்றைய இரவை எண்ணி ஆர்வமும் பதட்டமும் அதிகமாகவே இருந்தன. நேற்று கனவில் சுற்றிக்கொண்டிருந்தவள்,இன்று சிறிது பயத்தில் சுற்றினாள். ஸ்வேதா நேரடியாகவே “என்ன சைத்து?” என விசாரிக்க, அவளோ படபடப்புடன் “ஒண்ணுமில்லை ஸ்வேத்…காலேஜில் எல்லாரும் என் ஹஸ்பெண்டை பார்க்கணும்னு இம்சை பண்ணறாங்க…அது தான் என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என வேறொரு காரணத்தை கூறி அவளை திசைத்திருப்பிவிட்டாள். “ஓ…அது தானா?நான் கூட பயந்துட்டேன்” என்ற ஸ்வேதா “சைத்து ருத்ரா சாரா நீ தான் அவர் வொய்ஃப்னு சொல்லற வரை யாருக்கிட்டயும் சொல்லாதே…அவருக்கு பிசினஸ் எதிரிகள் ரொம்பவே அதிகம்…உண்மைய வெளிய சொன்னால் அது உனக்கே ஆபத்தா முடிஞ்சிடும்” என கடுமையான குரலில் எச்சரித்தாள். அவளும் ஏதோ ஒரு நினைவில் “சரி சொல்லலை ஸ்வேத்” என கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் சென்றுவிட, ‘இவளுக்கு என்னாச்சு?இரண்டு நாளா மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி சுத்தறா?’ என அவளை எண்ணி ஸ்வேதா கவலைக்கொண்டாள். மாலை பொழுது […] - [கவிதை 18](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-18/): பொம்மை உடையை மாற்றிக்கொண்டு கீழிறங்கி வந்த சைத்ரா ஸ்வேதாவிடம் “ஹே ஸ்வேத் உன்கிட்ட என்ன சொன்னேன்?” என இடையில் கைவைத்து முறைக்க, அவளோ “இல்லை சைத்து…நீ சொன்ன மாதிரி அஜய்ய கூட்டிட்டு லிஃப்ட் வரை வந்துட்டேன்…லிஃப்ட் ஓப்பன் பண்ணா ருத்ரா சார்…பார்த்து ஷாக்காகிட்டேன்…என்னனு சார் கேட்டாரா?இல்லை சைத்துவை பார்க்கணும்னு நான் இழுக்கவும்…எனக்கு பயங்கர தலைவலி நான் தூங்கப்போறேன்…சோ யாரும் டிஸ்ட்ரப் பண்ணாதீங்கனு சொல்லிட்டு போயிட்டார் சைத்து…அதான் நான் அஜய்யை கூட்டிட்டு வரலை” என ஆற்றாமையுடன் நடந்ததை தெரிவிக்கவும், ‘அடேய் சதிகார அங்கிள் எல்லாம் உன் பிளான் தானா?’ என அவள் கோபத்தில் பல்லை கடித்தாலும் அவளின் முகம் சற்று முன்பு நடந்த நிகழ்வை எண்ணி சிவக்கவும் செய்தது. அவளின் முகம் திடீரென்று சிவப்பதை பார்த்த ஸ்வேதா “ஹே சைத்து உன் முகம் ஏன் ஒரு மாதிரி சிவந்துப்போயிருக்கு…காய்ச்சல் அடிக்குதா என்ன?” என ஆதுரத்துடன் வினவி,அவளின் நெற்றியில் கைவைத்து பார்க்க, அதில் இன்னும் அவளின் […] - [கவிதை 17](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-17/): அன்று ருத்ரா லண்டன் கிளம்புவதாக இருந்தது. ஆனால் ஊடகங்களின் வழியாக வேகமாக பரவிய அவனது திருமணச் செய்தியால் அவனின் பயணம் சிறிது தள்ளிப்போயின. அதில் அஜய்யிற்கு கொண்டாட்டம் என்றால்,சைத்ராவிற்கு ஏகவருத்தம்! வேறொன்றுமில்லை,அவனருகே வந்தாலே அவளிற்கு வெட்கத்தில் மூச்சுமுட்டின. சிறிய பெண் அல்லவா? அதனால் தாம்பத்தியத்தை எதிர்க்கொள்ள அவளுள் சிறு அச்சம்! அதேசமயம் தன்னவனின் அருகாமையை ஆவலாக எதிர்பார்க்கவும் செய்தாள். பெண் மனம் என்பது விந்தையிலும் விந்தையானது! யாவராலும் கணிக்க முடியாத ஒரு புதிர் அது! தங்கள் மனம் என்ன நினைக்கிறது என்பதை அவர்களாலே அறிய இயலாது. சைத்ராவும் அதுப்போலான ஒரு மனநிலையில் சிக்கி தவித்தாள். இந்நிலையில் ருத்ரா அவனது திருமணச் செய்தி குறித்து வெளியான சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து,அவற்றினை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தான். ஆனால் அவை அடங்கியவுடன் அவனது முதல் திருமணம் பற்றிய செய்தி புகைய ஆரம்பித்திருந்தன. இந்த பத்திரிக்கையாளர்களுக்கும் சமூக ஊடகவியலாளர்களுக்கும் பிரபலங்களின் வாழ்வை அலசி ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவதென்றால் […] - [கவிதை 16](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-16/): மெது மெதுவாய் அவர்கள் இருவருக்குள்ளும் கணவன் மனைவி பந்தம் மலர துவங்கியிருந்தன‌. இரவு வெகு நேரம் கழித்து உறங்கி இருந்தாலும் கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் நேரத்திற்கே அவளிற்கு விழிப்பு வந்துவிட்டிருந்தது. அவனுடன் ஒரே அறையில் இருக்க சங்கடமாக இருந்தாலும்,அஜய் அவர்கள் இருவருக்குமிடையே இணைப்பு பாலமாக செயல்பட்டதால் அவள் சிறிது இயல்பானாள். கல்லூரி செல்வதற்காக நீல நிற சுரிதாரில் தயாராகி வந்தவளுடன் அஜய்யும் ஸ்வேதாவும் ஒன்றாக உணவருந்தி முடித்தனர். உணவு உட்கொண்ட வேளையில் அவளிற்கு நேற்றைய இரவு நினைவில் எழ,அங்கிருந்த பணியாளரிடம் “தாதிமா அங்கிள் சாப்பிட்டாரா?” என அவள் விசாரிக்க,அதனை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர். அவள் இதுவரை ருத்ராவின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. அவள் மட்டுமல்ல.அந்த இல்லத்தில் வசிக்கும் ஒருவருக்குமே அவனில் ஈடுபாடு இருந்ததில்லை. அவனும் மற்றவரின் அன்பை எதிர்ப்பார்க்கமாட்டான் என்பது ஒரு பக்கம்! அதேப்போல் அவனின் விஷயத்தில் மற்றவரின் தலையீட்டை அவன் விரும்பவும் மாட்டான். அதனால் அவளின் கேள்வியை விசித்திரமாக நோக்கிய […] - [கவிதை 15](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-15/): திருமணத்திற்கு முன்பே சைத்ரா மற்றும் அஜய் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பு வலுவாக இருந்தன. இப்போது சொல்லவும் வேண்டுமா? அன்னை மற்றும் மகனாக அவர்கள் உறவு மாற்றம் பெற்றவுடன்,யாவராலும் அவர்களது பந்தத்தை உடைக்க முடியாத வகையில் இன்னும் இறுகிவிட்டன. அவர்களுள் மேலும் நெருக்கம் கூடின. ஏனென்றே அறியாமல் அவனிற்கு அன்னை என்று கூறிக் கொள்வதில் அவளிற்குள் ஓர் கர்வம்! மனதிற்குள் இனம் புரியாத ஓர் சந்தோஷம்! அவனின் அன்னையென்ற பதவியை அடைய அவள் தன் மானத்தை அல்லவா தியாகம் செய்திருக்கிறாள்? அத்தோடு ருத்ராவை திருமணம் செய்து தன் வாழ்வையே பணயம் வைத்திருக்கிறாள் அனைத்தும் அஜய்யிற்காக! ஆகையால் அதில் மகிழ்ச்சி தோன்றவில்லை என்றால் தான் அபத்தமாக இருக்கும். அஜய்யிற்காக தன் வாழ்வை ருத்ராவிடம் ஒப்படைத்தாலும் ஏனோ குழந்தையிடம் தன்னை அவனின் அன்னையாக பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. ‘அம்மா’ என்ற அழைப்பெல்லாம் சொல்லி கொடுத்து வருவதில் மதிப்பில்லை. தாய் மகன் உறவு என்பது ஆத்மார்த்தமான ஒரு பந்தம். உணர்வுகளால் […] - [கவிதை 14](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-14/): தம்பதியினர் இருவருக்கும் திருமணம் நடந்தேறியதற்கு பிறகும்,அவர்களது வாழ்வில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. சைத்ரா அவளது அறையில் இருந்துக்கொள்ள,ருத்ராவும் தன்னறையில் இருந்துக்கொண்டான். அவளை அவனறைக்கு அனுப்பி வைக்கும் துணிச்சலும் உரிமையும் ஸ்வேதாவிற்கு கிடையாது.தங்கள் வீட்டுப்பிள்ளைகளின் வாழ்வை மலர செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரியவர்களிடத்திலும் இல்லை. அதேசமயம் தன் வாழ்வை பற்றி சிந்திக்க வேண்டிய சைத்ராவோ அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ள ஐயமுற்று அவனிடமிருந்து ஒளிந்துக்கொண்டிருந்தாள். ஹெல்த் கேர் கிளீனிக்கோட போட்டு வைத்திருந்த ஒப்பந்தத்திற்கான பணியை முன்பே துவங்கியிருந்ததால்,அவனிற்கும் தனது சொந்த வாழ்வை பற்றி யோசிக்க நேரமில்லை. காலையில் எட்டு மணிக்கு இல்லத்திலிருந்து புறப்படுபவன் இரவு எத்துணை மணிக்கு வருகிறான் என்பதே யாவருக்கும் தெரியாது. எப்போதும் மகனை சைத்ராவிடமிருந்து பிரிக்க எண்ணுபவன்,இப்போது அவனாகவே இரவில் மகனை அவளிடம் விட்டு வைத்திருந்தான். ஏனெனில்,முழுமூச்சாய் அவன் தன் பணியில் இறங்கியிருந்தான். அவளுமே ‘ஹப்பாடா நிம்மதி’ என அவனின் ஆதிக்கமின்றி சுதந்திரமாக அந்த பங்களாவில் வலம் வர தொடங்கினாள். […] - [கவிதை 13](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-13/): அவளின் கரம் பற்றி ஏழு முறை அக்னியை வலம் வந்தவுடன் இருவருக்குமிடையேயான அந்த பந்தம் வலுப்பெற்றன. அவனின் கைச்சிறையில் அகப்பட்டிருந்த அவளின் தளிர் கரம் இலேசாக நடுங்கின. அதனை உணர்ந்த ஆடவனின் முரட்டு கரம் அவளின் கரத்தை இறுகப்பற்றிட,அவன் ஆறுதலாக பற்றினானா அல்லது சினத்தால் பற்றினானா என்பதை அவன் மட்டுமே அறிவான். அக்னியை வலம் வந்ததோடு திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் முற்றுப்பெற்றன. அதுவரை மௌனமாக இருந்த அவர்களது உறவினர்கள் தங்களுக்குள் சலசலக்க துவங்கிட,ஷாகுல் கப்பூர் தனது பேரனிற்கு நேர்ந்த அநீதியை கண்டு “மிஸ்டர் மல்ஹோத்ரா என்ன இது?” என ஆதங்கத்துடன் அவர் நியாயம் கேட்க, அவரை எவ்வித சலனமுமின்றி நேர்ப்பார்வையுடன் எதிர்க்கொண்ட ருத்ரா “மிஸ்டர் கப்பூர் இந்த கல்யாணத்தாலே உங்களுக்கும் எங்களுக்குமான பிசினஸ் டீலிங்க்கு எந்த பதிப்பும் வராது…சோ யூ டோன்ட் வொர்ரி” என அவன் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத ஒரு பதிலை கூறினான். அவன் ‘என்ன பேசுகிறான்?’ என அங்கிருந்த யாவருக்கும் […] - [கவிதை 12](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-12/): திருமண நாள் காலை, அவர்களது பாரம்பரிய முறைப்படி மாலை வேளையிலே திருமணம் நடைப்பெறும் என்பதால்,அன்று காலை ஹல்தி சடங்கு துவங்கியிருந்தது. ஹல்தி என்றால் வேறு ஒன்றுமல்ல மஞ்சள் தான். ஹல்தி சடங்கு என்பது திருமணத்திற்கு முன்பு மணமகன் மற்றும் மணமகளுக்கு மஞ்சள் பூசி குளிக்க வைக்கும் வைப்போகமாகும். இந்து திருமணங்களில் ‘ஹல்தி’ என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இது ஆயுர்வேதத்தின் மகிமையையும் உள்ளடக்கியுள்ளது. அதனடிப்படையில்,இந்துக்களின் மரபின் படி மஞ்சளின் நிறம் புனிதத்தையும்,அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.இது தம்பதியின் திருமண வாழ்வில் அமைதியையும், செழிப்பையும் தரும் என்று அவர்களால் நம்பப்படுகிறது. மஞ்சள் நிற உடை அணிந்த சைத்ராவை மனையில் அமர வைத்து அவளின் முகத்தில் தொடங்கி மேனி முழுவதும் மஞ்சள் பூசி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ந்தார்கள். மணமக்களின் நிறத்தை பிரகாசமாக்குவதற்கு இந்த சடங்கை மற்றவர் பின்பற்ற,அதன்மூலம் பெண்ணவளின் மேனி பளபளத்தது என்றால் அவளின் முகம் மட்டும் சுருங்கி இருண்டிருந்தது. அவளுள் கிஞ்சித்தும் உவகை என்ற ஒன்றே […] - [கவிதை 11](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-11/): ‘என்ன நடந்தது?ஏது நடந்தது?’ என்று அறியாத வகையில் நாட்கள் விரைந்தோடி இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்னும் நிலைக்கு மாறியிருந்தது. உள்ளுக்குள் பயப்பந்து உருண்டோடிட,அதைவிட அஜய்யை பிரிய வேண்டும் என்று எண்ணினாலே அவளின் உயிரை யாரோ வேரோடு வெட்டி வீசுவது போன்ற வலி உண்டாகியது. ஸ்வேதாவோ அவள் படும் வேதனையில் உயிர் உருகிப்போனவள் டேவிட்டின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு “டேவிட் இங்க சைத்துவை கண்கொண்டு பார்க்கவே முடியலை…பாவம்…இந்த கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி வைக்கமுடியாதா?ஏன் இவ்வளவு அவசரமாக வைக்கறீங்க?நீங்களாவது சார்கிட்ட எடுத்து சொல்லுங்களேன்” என கரகரத்த குரலில் மன்றாடினாள். ஆம்,இந்த திருமணம் இத்துணை விரைவாக நடப்பதற்கு மிக முக்கிய காரணம் ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா! ‘அவன் எப்போது என்ன செய்வான்?அவன் மனதில் என்ன நினைக்கிறான்?’ என்று அவனை தவிர ஒருவரும் அறியர். அதனை அறிந்த டேவிட்டோ பெருமூச்சுடன் “இனி என் கையில் எதுவுமில்லை ஸ்வேதா…பாஸ் ஒரு முடிவை எடுத்துட்டனாருன்னா அதை எக்காரணத்தை கொண்டு மாத்திக்கமாட்டார்” […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-2/): ஐந்து வருடங்களுக்கு பிறகு, பொங்கல் திருநாளன்று, உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அதனை சிறப்பாக கொண்டாட உத்தேசித்திருந்த நிலையில் அனைவரும் புதிதாக தொடங்கியிருந்த தென்றல் பால் பண்ணையை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்கள். புதிதாக தொடங்கிய அனைத்து தொழில்களிலுமே அவர்களுக்கு விஜயம் மட்டுமே!! அவர்களது நிதி நிலைமை உயர்ந்தப்போதும் இப்போதும் அதே பழைய மதிவதனியாகவும் காளையனாகவுமே இருந்து எளிமையான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள். தற்போது தம்பதியினர் இருவர் மட்டுமாக தங்களது இல்லத்தில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு துணையாக சுப்ரமணியும் லட்சுமியும் இருந்தார்கள். மருது அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஏறு தழுவுதல் போட்டிக்காக முனைப்புடன் தயாராகிக்கொண்டிருந்தது. மதிவதனி புடவையை தூக்கி இடுப்பில் சொருகி அடுப்பிலிருந்த பொங்கலை கிண்டிக்கொண்டிருந்தாள். முற்பது வயதை கடந்தவிட்டப்போதும் அவளின் அறிவு தந்த முதிர்ச்சி அவள் முகத்தில் தாண்டவமாடியதே ஒழிய அதே பழைய துள்ளலும் குறும்பும் நீங்காமல் இப்போதும் குடியேறியிருந்தது. இன்று அவள் ‘தென்றல்’ நிறுவனத்தின் நிர்வாகி மட்டுமல்ல. டாக்டர் பட்டம் பெற்ற […] - [மோகனம் 25](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): தனக்கு ஒரு துயரம் நேரும் போது தான் சுற்றியுள்ளவர்களின் உண்மை சுயரூபம் தெரியும் என்பது போல்,சுகந்தி முதன்முறையாய் உறவினர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை இந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்துக்கொண்டார். விஷயம் அறிந்து ஊர்க்காரர்கள் மொத்தமாய் திரண்டு வந்து அவரையும் அவரது வளர்ப்பையும் தூற்றும் போது,அவமானத்தில் தன்னுள்ளே கூனிக்குறுகிப்போனவருக்கு அரணாய் துணை நின்று காத்திருந்தார்கள் மதிவதனியும் காளையனும்!! ‘யாரை அவர் இழிவுப்படுத்தி பேசினாரோ?யாரை அவர் கேவலமாக நினைத்தாரோ?யாரை தனது தகுதிக்கு இணையில்லை என்று வெறுத்து ஒதுக்கினாரோ?யாரின் வாழ்வை அழிக்க எண்ணினாரோ?’ அவர்கள் தான் இன்று அவருக்கு பக்கப்பலமாக இருந்தார்கள்‌. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்” என்ற திருவள்ளுவரின் மொழிக்கு ஏற்ப மதிவதனியும் காளையனும் செய்த உதவியால்,அவர் செய்த தீமையை எண்ணி வெட்கிப்போனார். தன்னை நினைத்தே நாணிப்போனவரை துவண்டு விடாமல் தூக்கி நிறுத்தியது வேறு யாருமல்ல,சாட்சாத் மதிவதனி தான். அவரின் மீது நெஞ்சை முட்டும் அளவு கோபம் இருந்தாலும்,துன்பம் நேர்ந்த வேளையில் அவரை […] - [மோகனம் 24](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): அன்றைய நாள் தொட்டு தொடர்ந்து வந்த தினங்கள் தம்பதியனருக்குள் கூடல் கோலாகலமாய் நடந்தேறியது. பாசம் என்னும் கோட்டை தாண்டிச் செல்ல தயங்கியவன்,இப்போது நேசக்கடலில் தன்னவளை தினந்தோறும் மூழ்கி திணறடித்தான். இருவரின் முகத்திலிருந்த பூரிப்பே வயதில் மூத்த பெண்மணியான காந்திமதிக்கு அவர்களுக்குள் நடந்தேறிய உறவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. இறுதிவரை தனது மகன் ஒத்தையில் நின்றுவிடுவானோ என கலங்கிக்கொண்டிருந்தவர்,இப்போது அவன் மனைவியோடு இணங்கி வாழும் விதம் அவருக்கு பெரும் உவகையை கொடுத்து ஆனந்தத்தில் கண்கள் கலங்க வைத்தது. அதற்கான நன்றியை இறைவனுக்கு செலுத்தும் விதமாக அவர்களது குலதெய்வ கோவிலுக்கு தனது மகள்களின் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்று பொங்கல் படையலிட்டு ‘விரைவில் தனது மகனுக்கு ஒரு வாரிசு வேண்டும்’ என புதிதாக ஒரு வேண்டுதலையும் வைத்துவிட்டு வந்திருந்தார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்துவிடக்கூடியதல்ல என்பது பாவம் அந்த முதியவருக்கு அப்போது தெரியவில்லை. இந்நிலையில் மதிவதனியின் படிப்புக்கும் அவளது முன்னேற்றத்திற்கும் காளையவன் உறுதுணையாக நின்றான். இளங்கலையில் […] - [மோகனம் 23](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): ஒரு நாள் மதிய வேளையில் எப்போதும் போல் மதிவதனி தன்னவனிற்கான உணவை சமைத்து எடுத்து வந்திருந்தாள். அவளது கடமைத்தவறாத அன்பில் ஒரு புறம் நெகிழ்ந்தாலும்,கல்லூரி வரை சென்று படித்த பெண் தனக்காக இதுப்போல் சிரமப்படுவதால் கவலையுற்றவன் “பாப்பா நீ என்னத்துக்கு இதெல்லாம் செய்யற?” என நலிந்த குரலில் வினவ, தன் இடையில் கைவைத்து அவனை முறைத்த பெண்ணவள் “உன் பொஞ்சாதி நான் செய்யாம வேற யாரு இத செய்வா?” என்றாள் புருவம் உயர்த்தி. “ப்ச்…பாப்பா நான் அத கேட்கல…நீ உறங்காம கண்விழிச்சு படிச்சதெல்லாம் எனக்கு சோறாக்கிப்போடவும்…நம்ப வீட்டு வேலையெல்லாம் பாத்துக்கிறதுக்காகவுமா?” என்றான் ஆற்றாமை கலந்த குரலில். அதன்பிறகே அவனது வார்த்தையில் இருந்த அர்த்தம் உணர்ந்த பெண்ணவளின் முகம் கனிந்தது. “ஓ மேக்கொண்டு என்ன செய்யப்போறேன்னு கேட்கறீயா மாமா?” என்று கேட்டவாறு அவனிற்கான உணவை பரிமாற, அவனும் ‘அதுதான்’ என்பது போல் அவளையே அழுத்தமாக பார்த்திருக்க, “மாமா நானே இதப்பத்தி உன்ட்ட பேசணும்னு நினைச்சேன்…நீயே […] - [மோகனம் 22](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22/): தன் காதருகில் திடீரென்று ஒலித்த கணவனின் குரலில் துள்ளிக்குதித்து திரும்பியவளின் தலை அவனது உரமேறிய நெஞ்சில் பலமாய் இடித்தது. “ஸ்” என மெல்லியதாக தனக்குள்ளே அலறி அவனை ஏறிட, அவனோ இருவருக்குமிடையே உள்ள சிறு இடைவெளியையும் நிரப்பி “முன்னாடி என்னடி சொன்ன?” என காரியத்தில் கண்ணாய் அவன் வினவ, அவளோ முகத்தை சுழித்து “மாமா அதுக்குனு இப்படி தான் பயமுறுத்துவியா?” என முறைக்க, அவனோ பெண்ணவளின் மதிமுகத்தை ரசித்தவாறே “சொல்லுடி” என்றான் விடாக்கண்டனாக. “ஷப்பா… உன்னோட முடியல மாமா” என அலுப்புடன் கத்தியவளிற்கு அதன்பிறகே தன்னவனின் நெருக்கம் உறைத்தது. அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் அவளின் முகத்தை தீண்டி சிலிர்க்க வைத்தது என்றால்,மெல்லிய மேனியை உரசிய தேகம் அவளை மூச்சுமுட்ட செய்தது. பாவையவளின் உணர்ச்சிகள் தறிகெட்டு ஓடத்தொடங்கவும்,அவளது மேனியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. அதனால் நெஞ்சம் படபடக்க “மாமா தள்ளு…மூச்சுமுட்டுது” என அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றாள். ஆனால் அந்த ஆஜானுபாகுவான தோற்றம் […] - [மோகனம் 21](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): கடவுளை வணங்கிவிட்டு இல்லத்திற்கு திரும்பி வரும் வழியில் “மதி இனிமேட்டுக்கு அந்த சண்முகத்துகிட்ட மேல் சட்ட தைக்க கொடுக்காத” என்றான் திடீரென்று. காரிகையோ கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தை உற்று நோக்கி “ஏன் மாமா?அந்தண்ணே நல்லா தானா தைக்கிறார்” என குழப்பத்துடன் வினவ, அவளை போலவே அவனும் கண்ணாடியின் வழியாக அவளின் முகத்தை அவதானித்து ‘ஆமா‌…ஆமா நல்லா தைக்கிறான்…ஒரு விரலால் சுண்டி இழுத்தா மொத்தமா கையோடு வந்திடற மாதிரி நல்லாஆஆ தைக்கிறான்’ என கோபத்துடன் முணுமுணுக்க, அது அவளின் செவியிலும் விழுந்து அவளின் முகத்தை செந்தூரமாக்க “ப்ச் மாமா…அப்படியெல்லாம் இல்லை…இந்த ஊரு பொம்பளைங்கயெல்லாம் அங்குட்டுதேன் தைக்க கொடுக்கறாங்க…நல்ல டைலர் அவரு” என நமுட்டு சிரிப்புடன் அவள் கூற, அவனோ நாசி விடைக்க சாலையில் ஒரு கண்ணும் கண்ணாடி வழியே அவளின் மீது ஒரு கண்ணும் பதித்து “இந்தாருடி…முதுகுல இருக்க மச்சமெல்லாம் ஊரு சனத்தை வெறிக்கிற மாதிரி தைக்கிறவனெல்லாம் நல்ல டைலராக்கும்‌” என இடக்காக […] - [மோகனம் 20](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): அன்று நெற்பயிர்களை விதைக்கும் நாள் என்பதால்,காளையன் முந்தைய நாள் இரவு அவன் இல்லத்திற்கு வராமல் வயல்வெளியிலே தங்கி விட்டிருந்தான். வானத்தில் தெரிந்த வெண்மதியை வெறித்து பார்த்துக்கொண்டே தன் மனையாள் மதியை நினைத்து உறங்காமல் இரவெல்லாம் விழித்திருந்தான். உற்றார்கள் முன்னிலையில் அவனெடுத்த சத்தியப்பிரமாணத்தின் படி,ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளிற்கு உரிய நியாயத்தை வழங்கவில்லையோ என முதன்முறையாய் அவனுள் ஒரு குற்ற உணர்வு ஆட்கொண்டது. அதிலும்,அவளின் வெண்ணிற மார்புக்கூட்டில் அரைக்குறையாக அவனின் பெயரை கண்ட நொடியிலிருந்து இந்த எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. விருப்போ அல்லது வெறுப்போ அவளிற்கு அவன்,அவனிற்கு அவள் என சாஸ்திரங்கள் தொடங்கி உற்றார் உறவினர்கள் வரை அனைவரும் கூறியதற்கு பிறகும்,அவளை தள்ளி நிறுத்துவது மாபெரும் பிழை என்று உள்மனம் எச்சரித்தது. ‘உனக்குன்னு ஒருத்தி வந்திட்டா அவளை நீ விலக்கி வைக்கிறது பாவம்…உனக்கு அவள் மேல் ஆசை வரலைனாலும் அவளுக்கு நீ மட்டும் தான் எல்லாம் என நினைச்சு உன்னை நம்பி வந்திருக்க […] - [மோகனம் 19](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): கீழே விழ இருந்த மதிவதனியை இறுதி நேரத்தில் காப்பாற்றியிருந்தான் சந்திரன். மதிவதனியை ஒரு தலையாக நேசித்தவனாக இருந்தாலும் அவள் இன்னொருவனுக்கு மனைவியாகியது தெரிந்ததற்கு பிறகு தனது மனதினை மாற்றிக்கொள்ள முயற்சித்திருந்தான். அந்தவொரு சந்தர்ப்பத்தில் மணிமேகலையை அழைத்துச் செல்வதற்காக வந்த சந்திரனே எதிர்ப்பாராமல் இந்த நிகழ்வு ஏற்பட்டிருந்தது. “ஹே மதி பாத்து வரக்கூடாது” என மெல்லியதாக கடிந்துக்கொண்டே அவளை அவன் தூக்கி நிறுத்துவதற்கும்,அதே நேரம் காளையன் தனது புல்லட்டில் அந்த இடம் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. தூரத்தில் வரும் போதே மதிவதனியை சந்திரன் தாங்கியிருந்த காட்சி காளையனின் கூரிய கண்களில் விழுந்து இமைகளை இடுங்க செய்தது‌. திடீரென்று அவனை அவ்விடத்தில் சற்றும் எதிர்ப்பாராத சந்திரனும் மணிமேகலையும் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள். கண்ணில் விழுந்த காட்சியை மட்டும் வைத்து மதிவதனியை தவறாக கருதிவிடுவானோ என எண்ணி அவர்கள் மிரட்சியில் அவனை பார்த்திருக்க,மதிவதனியோ எந்த வித சஞ்சலமும் இல்லாமல் “மாமா வந்திட்டியா?” என கண்கள் விரிய குதுகலமாக […] - [மோகனம் 18](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): அடுத்து வந்த ஒரு மாதமும் மதிவதனியின் இறுதி வருட தேர்வுகளுக்கு தயாராகுவதற்கே நேரம் சரியாக இருந்தது. வேறு எதனை பற்றிய சிந்தனையும் அவளிற்கு இல்லை. காளையனும் அன்றைய நாட்களில் பேசிய பேச்சை மறந்துவிட்டு சகஜமாக அவளோடு உரையாடியதினால்,காரிகையும் அதனை எளிதாக மறந்துவிட்டாள். தன்னுடைய இலட்சியத்திற்காகவும் அனைவரையும் எதிர்த்துக்கொண்டு தனக்கு பக்கப்பலமாக இருக்கும் மாமனின் கொள்கைகாகவும் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்ற முனைப்புடனே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தினாள். அவள் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நாட்களில் நடத்திய பாடத்தை அவளின் தோழியான மணிமேகலை அவர்கள் இல்லத்திற்கு வந்து சொல்லி தர,அவளை பாதுகாப்பாக அங்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பை காளையனே எடுத்துக்கொண்டான். கல்லூரியிலும் பாடத்தில் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை பேராசிரியரிடம் கேட்டு நிவர்த்தி செய்துக்கொண்டாள். அதிகாலை நான்கு மணிக்கு எழும்பி படிப்பவளிற்கு உறுதுணையாக அவனும் அவளோடு எழுந்துக்கொள்வான். அவனது கரிசனையில் அவளிற்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. பெற்றவளே அவளை சுமையாக மட்டுமே […] - [மோகனம் 17](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): அவளை அத்தனை அருகில் எதிர்ப்பாராத காளையன் அதிர்ந்து ஓரடி பின்னெடுத்து வைக்க,பாவையவளோ அவனை கண்கள் சுருக்கி முறைத்தவாறே எட்டி கீழே விழுந்து கிடந்த கதிர்வேலை நோக்கினாள். இடுப்பில் கைவைத்து தலை முதல் கால் வரை ஊடுருவும் விழிகளால் ஆராயவும், அவன் அசடு வழிய சிரித்து தலையை சொரிய,பெண்ணவளோ புடவையை உதறி இடையில் சொருகியப்படி “ம்க்கும்” என நொடித்தவள் “நான் பொண்டாட்டியா?அவரு பொண்டாட்டியான்னு தெரியல” என கோபமாக காளையனுக்கு மட்டும் கேட்கும் விதமாக முணுமுணுத்து கதிரை பார்வையால் எரித்திருந்தாள். ‘சக்களாத்தன்’ என பொறாமையால் அவனை பார்த்து பல்லை கடித்தவாறே கணவனை ஏறிட்டவளின் நாசியின் வழியாக புசுபுசுவென்று புகை வந்தது. “என்னை ஒருவாட்டியாவது இப்படி தூக்கியிருப்பியா நீ” என பல்லைக்கடித்தவளின் பாவனையும் பேச்சும் காளையனின் இதழில் புன்னகையை தோற்றுவித்தது. ஆனால் ஆடவனின் அந்த கள்ளச்சிரிப்பு தாடிக்குள் ஒளிந்துக்கொள்ள,விறைப்புடனே “நீ எதுக்கு சொல்லாம கொள்ளாம இங்கன வந்த?” என காட்டமாக கேட்டான். அவளோ “சொல்லாம வந்ததாலதேன் இங்க […] - [மோகனம் 16](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): அறையின் கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு காளையன் புருவம் சுருக்கி ‘யாரது இந்த நேரத்தில்?’ என்ற சிந்தனைவயத்தோடு கதவை திறப்பதற்காக எழுந்தான். அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதிவதனியும் கதவு தட்டும் இரைச்சலில் மெல்லிய சரீரம் தூக்கிவாரிப்போட நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்து மிரட்சியுடன் திருதிருவென விழித்தாள். மனையாள் அதிவிரைவாக எழும் சத்தம் கேட்டு வாசல் நோக்கிச் சென்ற காளையனின் கவனம் இவள் புறம் திரும்பியது. திரும்பிய நொடி நேரத்தில் பெண்ணவளின் அலங்கோலத்தோற்றம் கண்டு காளையவன் அதிர்ந்துப்போனான். சட்டென்று சுதாரித்த ஆடவன் பின்னந்தலையை அழுந்தக்கோதியவாறே தலையை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாலும்,ஆடவனின் ஆண்மைக்குரிய உணர்ச்சி சுரப்பிகள் தங்களது பணியை செவ்வனே செய்திருந்தது. ஏனெனில்,பாதி உறக்கத்தில் அவசரமாக திடுக்கிட்டு எழுந்ததினால் விலகிய உடையின் வழியாக தெரிந்த வெண்ணிற இடையும் பெண்ணின் அங்க லாவண்யங்களும் கண்ணாளனின் கண்ணில் பளிச்சிட்டு அவனை நிலைக்குலைய வைத்திருந்தது. இதயத்தின் தாளங்கள் தப்ப அதற்கு இணை சேர்க்கும் விதமாக நரம்புகள் மெட்டிசைத்து தாப உணர்ச்சிகள் […] - [மோகனம் 15](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, தனது மாமனின் வருகைக்காக வேண்டி ஒவ்வொரு நாளும் நிலவின் மகள் காத்திருக்க,அவனோ அவளை தேடி வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தான். நாளுக்கு நாள் அவளுள் ஏமாற்றம் பரவி வாழ்க்கையே நரகமாகிக்கொண்டிருந்தது. அவளுள் இருந்த இறுதி நம்பிக்கையும் இருளடைந்துக் கொண்டிருந்த அந்தவொரு சமயத்திலே,சீமைத்துரை மகளை சரமாரியாக அடித்து தள்ளிவிட்டு காளையனிடம் தனது மகளை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்திருந்தார். பாவையவளிற்கோ தந்தையின் இந்த வெறிச்செயலும்,தன்னவன் தனக்கு தந்த ஏமாற்றமும் இணைந்து அவளை சூழ்நிலை கைதியாக்கி தற்கொலை முடிவிற்கு தள்ளியிருந்தது. இதற்கு மேலும் யாருக்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என முடிவெடுத்து எமன் வீட்டின் வாசலடைய அவள் முயற்சித்துக் கொண்டிருந்த நிலையிலே,செந்தூரப்பாண்டியனின் வாய் மூலமாக அவளது மாமனுக்கும் அவளுக்குமான திருமண பேச்சுக்கள் தெரிய வந்தது. அந்தவொரு விடயம் அவளின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்த,சற்றே நிதானித்தாள். கண்ணுக்கு முன் அவள் எதிர்ப்பார்த்த பெருவாழ்வு,மற்றொரு புறம் பொய்யான பழியை சுமந்துக்கொண்டு இறக்கும் […] - [மோகனம் 14](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): புது மண தம்பதியினரை மறுவீட்டு விருந்திற்கு சீமைத்துரை தம்பதியினர் அழைப்பு விடுக்க,காளையனிற்கோ தனது தமக்கையின் வார்த்தைகள் செவியோரம் அசரீரியாக ஒலித்தது. தன்னை இழிவுப்படுத்தி பேசியவரின் இல்லத்து வாசல் படியை மிதிக்க,அவனது தன்மானம் தடுத்தது. மதிவதனிக்கும் அன்றைய நாளின் நினைவுகளில் முகம் இறுகிப்போனது. ஆனால் தமக்கையின் இறைஞ்சுதலும் சீமைத்துரையின் சங்கடமும் பிறரின் அச்சம் கலந்த பார்வையும் அவனை அடியோடு வீழ்த்த ‘சரி’ என்று மறுப்பு தெரிவிக்காமல் அவர்களோடு சென்றான். எப்போதும் போல் ஆண்மகனது கர்வத்தை பாசம் தோற்கடித்திருந்தது. தனது மாமனின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அங்கு செல்வது மதிவதனிக்கு ஒப்பவில்லை என்றாலும்,தன்னவனின் கரம் பிடிக்க உதவி செய்ய காரணமானவர்கள் என்பதை கருத்தில் கொண்டு மனமிறங்கினாள். சம்பிரதாயத்திற்காக குடும்பசகிதமாக அங்கு சென்றாலும்,இயல்பாக அவ்வீட்டில் பொருந்திப்போக முடியாமல் மெல்லிய திரை ஒன்று தடுக்க,மனையாளை அங்கே விட்டுவிட்டு வேலை இருக்கிறது என்று இல்லத்திலிருந்து வெளியேறினான். அதன்பிறகே காளையனால் இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது. தனது […] - [மோகனம் 13](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): வெளியேச் சென்ற காளையனுக்கோ பளிங்கு நிற கரங்களில் இருந்த காயமே கண் முன் வந்துப்போக,அவனால் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தனது நண்பனான கதிர்வேலை வயலை பார்த்துக்கொள்ளுமாறு பணித்துவிட்டு,வரப்போடு ஒட்டியிருந்த சிறு மோட்டார் அறையிலுள்ள கயிற்று கட்டிலில் சென்று படுத்துவிட்டான். அவனது எண்ணம் யாவிலும் அவளவனே நிறைந்திருந்தாள். அவளின் நேசமும் அன்பும் அவனை ஒரு வகையில் நெகிழ செய்தாலும்,தன்னுடைய பாசத்தை பகடைகாயாகப் பயன்படுத்தி அவள் திருமணம் செய்துக்கொண்ட விதம் இப்போதும் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. அவனது நினைவுகள் திருமண நாளன்று காலையில் நடந்த ஒரு நிகழ்வை சுற்றியே பயணித்தது. அதுவரை மதிவதனியை அந்த மீளமுடியா சிறையிலிருந்து மீட்டெடுக்கும் உத்வேகத்துடன் சுற்றி திரிந்தவனிற்கு அவளின் வாய் மூலமாக வெளிவந்த வார்த்தைகளின் பின்னணியில் இருந்த சாராம்சத்தை அறிந்துக் கொண்டவனிற்கு பயங்கரமாக எதிலோ தோற்ற உணர்வு! சின்னஞ்சிறிய பெண்ணால் தான் முட்டாளடிக்கப்பட்ட விதம் ஆண்மகனது தன்மானத்தை சீண்டி உசுப்பேற்றிவிட்டிருந்தது. அவளின் காதலை வெற்றி […] - [மோகனம் 12](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): சில நொடிகளுக்கு பிறகு,ருத்ரமூர்த்தியாய் கழுத்து நரம்புகள் புடைக்க அவனிருந்த தோற்றத்தை அவதானிக்கும் உத்தேசத்துடன் கண்திறந்தவளின் விழிகள் அச்சத்தில் விரிந்தது. அவனது முகத்திலிருந்த உக்கிரத்தை காண காண அவளின் நெஞ்சுக்கூடு சில்லிட இமைக்கொட்டி அவனை பார்த்தவாறே “மா…மா” என உமிழ் நீர் கூட்டி விழுங்கியவளை வெறித்தவனிற்கு தன் மீதே ஆத்திரம் வந்தது. அவள் ‘அம்மா’ என்று அழைத்ததை விட ‘மாமா’ என்று அழைத்தது தான் அதிகம் என்ற நிதர்சனம் அறிந்தவன் ஓங்கிய கரத்தை ஒரு கணம் வெறுப்பாக நோக்கினான். அவளின் வெளிறிய முகம் இதயத்தை இறுக்கி பிசைய,அவளை அடிக்க உயர்த்திய கரத்தை கீழிறக்கி மீசையை ஒற்றை விரலால் அழுந்த தேய்த்து சினத்தை கட்டுப்படுத்தினான். பின்னங்கழுத்தை வருடியவாறே அவளை நேருக்கு நேராக ஏறிட்டவன் “மதி என் மேல துளியளவாது மருவாத இருந்தா எதுவும் பேசாம கம்முன்னு போய் படு” என்றான் அழுத்தமான குரலில். பாவையவளோ கண்கள் கலங்க அவனையே சில நொடிகள் பாவமாக வெறித்திருந்தவள்,பின்பு தரையில் […] - [மோகனம் 11](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): “அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய பார்த்தாச்சு ஏ ஏ ஏ பின்னி பூ முடிச்சு புருஷன் கைய கோர்த்தாச்சு எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த பாச மழை பெஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த பாச மழை பெஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த” அந்த திருமண மண்டபத்திலிருந்த ஒலிப்பெருக்கியின் வழியாக பாடல் கசிந்து வந்துக்கொண்டிருக்க,அதற்கு இணையாக நாதஸ்வரமும் மேளதாளங்களும் இசைந்துக்கொண்டிருந்தது. மக்கள் திரள் ஒன்றாக சூழ்ந்திருக்க திருவிழா போல் அவ்விடமே காட்சியளித்தது. வெளியே உள்ள சிவப்பு நிற துணி வைத்த பலகையில் ‘காளையன் weds மதிவதனி’ என பெயர் பலகை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு நேரெதிரே மிகப்பெரிய அளவில் மணமக்களின் புகைப்படங்களும்,கூடவே அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு வாழை மரங்கள் நின்றிருக்க,அவை தென்னங்கீற்றினாலும் மஞ்சள் நிற பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க,உற்றார் உறவினர்கள் தங்களுக்குள் சலசலத்தப்படி மண்டபத்தினுள் அமர்ந்திருந்தார்கள். மண்டபத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு அறையில் விருந்து பரிமாறிக்கொண்டிருக்க,அவ்விடத்திலும் கூட்டம் […] - [மோகனம் 10](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): காளையனோ மாமனிடம் கொடுத்த கெடு முடிவதற்குள் ஒரு மணமகனை கொண்டு வந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தான். ஆயினும்,அந்த இரண்டு நாட்கள் முடிவுற்றும்,அவனால் மாமனிற்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை. யாவரும் மதிவதனியை திருமணம் செய்ய முன்வராததோடு அவளை தங்களது இரண்டாம் தாரமாக வைத்துக்கொள்வதாக நக்கல் செய்யவும்,அவனிற்கு வந்த கோபத்தில் தவறாக பேசியவர்களை அடி வெளுத்துவிட்டான். இதனால் மதிவதனிக்கு உரிய வரன் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானான். இந்நிலையில் அவனது மாமன் சீமைத்துரை அவனிற்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதோடு,மொத்த குடும்பமும் அவனை மதியை கட்டிக்கொள்ளும் படி வலியுறுத்த தொடங்கிவிட்டது. வாசமல்லியும் வேறு யாரும் தனது பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அனுபவத்தில் அறிந்துக்கொண்டதினால் தனது சகோதரனுக்கே பெண்ணை கட்டிக்கொடுக்கும் முடிவிற்கு வந்துவிட்டார். ‘பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகளா?குடும்ப கௌரவமா?’ என்று வருகையில் மதிவதனியின் பெற்றோருக்கோ குலப்பெருமையே பெரிதாக இருந்தது. ஆனால் காளையனிற்கோ பெண்ணவளின் நல்வாழ்வு மட்டுமே கண்முன் […] - [மோகனம் 9](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைக்க முடியாது என்பதை அறியாமல் மதிவதனியின் அழகு, சுகந்தியின் தவறான போதனைகள், ஊராரின் கூற்றுகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முழுமையாய் தன்னிலையை இழக்க செய்து மகளிடம் ராட்சசி போல் வாசமல்லியை நடக்க வைத்திருந்தது. நாட்கள் சில கடந்ததற்கு பிறகே உயிர்ப்பில்லாத மகளின் முகத்தை கண்டவருக்கு நெஞ்சம் பிசைய வெகு தாமதமாக தன் தவறை உணர்ந்துக்கொண்டார் வாசமல்லி. ஆனாலும் அவள் செய்ததாக யூகிக்கப்பட்ட தவறுகளை மனதில் கொண்டு அவளை சமாதானம் செய்ய முயலவில்லை. தன் மகனை அவமானப்படுத்தியதால் காந்திமதி மகளின் உறவை அடியோடு அறவே தவிர்த்துவிட்டார். அவரின் இல்லத்திற்குச் செல்லாமல் “நன்றி கெட்ட ஜென்மம்…எம்மவன் எம்புட்டு செய்திருப்பான் அவளுக்கு…ஆனா அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல் அவனையே எடுத்தெறிஞ்சு பேசிப்புட்டா…அவ வாயில வசம்பு வைச்சு தேய்க்க” என தலையிலடித்து வசைப்பாடிக்கொண்டிருந்தார். அப்போதும் நெஞ்சம் முழுவதும் தமக்கையின் மீது வருத்தம் நிறைந்திருந்தாலும்,அதை அந்த நேரத்திற்கான கோபமாகவே கருதி “ஆத்தா அக்கா ஏதோ […] - [மோகனம் 8](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): காளையன் அவளது கல்லூரி இருந்த சாலை முழுவதும் இரு மருங்கலும் மதிவதனி தென்படுகிறாளா என்று அலைப்புறும் விழிகளால் துழவிக்கொண்டே வந்தவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்தது. சீமைத்துரையும் அவரது மகனும் ஆட்கள் ஏற்பாடு செய்து மதுரை முழுவதும் சல்லடைப்போட்டு தேடிக்கொண்டிருக்க,காளையன் அவளது கல்லூரி சாலையில் தேடிக்கொண்டிருந்தான். ஆனால் மதிவதனியோ சுப்பிரமணி துரத்தியதின் விளைவால் ஒரு குறுகலான சாலையில் வழி மாறி ஓடியிருந்தது,அவனிற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு வழியாக தேடி களைத்து சோர்ந்தவனிற்கு இருந்த ஒரு நம்பிக்கை ஒளியும் அணைந்துவிட்டது போல் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அதனால் மிகுந்த தீவிரத்துடன் எங்கும் தேடி சோர்ந்துப்போய் தமக்கையின் வீட்டிற்கு வந்தவனின் இமைகளோ இடுங்கியது. அந்த ஊரிலிருக்கும் அனைத்து மக்கள் திரளும் தமக்கையின் இல்லத்தின் முன்பு சூழ்ந்திருப்பதை கண்டு ‘நான் அம்புட்டு தொல சொல்லியும் இந்தக்கா அடங்காம சனத்தை கூட்டி வைச்சிருக்கு…கொஞ்சமும் கூறு இல்லாத கோட்டி’ என தமக்கையை மனதிற்குள் தாறுமாறாக வசைப்பாடிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கியவனின் கவனம் […] - [மோகனம் 7](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): மாட்டு கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக மருது கத்திக்கொண்டிருக்க,காளையனோ அதற்கான காரணம் அறியாமல் தவிப்புடன் நின்றிருந்தான். முரட்டு தோற்றம் உடையவனாகினும் தன்னை சேர்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் துடிக்கக்கூடியவன் அவன்!! அதனால் “ஏய்யா என்னாச்சுய்யா?எதுக்கு இப்படி அனத்திட்டே இருக்கற?என்னய்யா பிரச்சனை?” என அக்கறையுடன் அதனது தலையை நீவி சமாதானம் செய்ய முயன்றுக்கொண்டிருந்தான். அச்சமயம் காந்திமதி “ஏய்யா காள…” என கத்திக்கொண்டே இல்லத்தின் முற்றத்திலிருந்து தன்னை நோக்கி ஓடி வரும் சப்தம் அவனிற்கு தெளிவாக கேட்டது. அத்தோடு அவரின் குரலில் நிரம்பியிருந்த பதட்டம் அவனுள் படபடப்பை விதைத்தது. அதனால் மருதுவின் மீதிருந்து விழிகளை அவசரமாக அவர் வரும் திசை நோக்கி திருப்பி “என்னாத்தா?எதுக்கு இப்படி ஓடியாற?பாத்து சூதானம்” என கூறிக்கொண்டு கால் தடுமாறியவரை பதறி முன்னே வந்து அவரை தாங்கி நிறுத்தினான். வயோதிக காலத்தில் மூச்சிறைக்க தன் முன்பு நின்ற தாயை தாங்கி “அப்படி என்ன தலைப்போற அவசரம்?சல்லிக்கட்டுல மாட்ட புடிக்கிறவ மாதிரி இம்புட்டு வேகமா வரவ?” […] - [மோகனம் 6](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): பெண்ணவளின் நேசத்தின் ஆழமோ அல்லது காளையனுக்கென்று விதி எழுதியிருந்த தலையெழுத்தின் விளைவோ இரண்டில் எதுவோ ஒன்று அதி வேகத்தில் ஏற்பாடாகிக்கொண்டிருந்த திருமண நிகழ்வு பெண் வீட்டினரால் திடீரென்று தடைச்செய்யப்பட்டிருந்தது. அவைக்குறித்த விளக்கத்திற்கு காளையனின் வீட்டினரின் தலையில் இடியாய் வந்து இறங்கியது,மணமகளின் தகப்பனார் இறந்த செய்தி!! இரவில் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் உரையாடிவிட்டு படுத்த மனிதன் பொழுது புலர்ந்த வேளையில் எழுந்துக்கொள்ளவில்லை. உயிரற்ற வெறும் கூடாகிய அந்த மனிதனின் இறப்பில் திருமண உற்சாகத்துடன் களைக்கட்டிய இல்லம் இப்போது துக்க வீடாக உருமாற்றம் பெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க வேண்டிய இடத்தில்,தாரை தப்பட்டைகளுடன் ஒப்பாரியும் கலந்து அமங்கல இசையாக மாறி விண்ணை பிளக்கச்செய்தது. காளையனின் இல்லத்தின் சார்பாக அவனது தாயும் கயல்விழியும்,கூடவே அவனும் அவரது இறப்பிற்கு வந்து தாயிற்கும் மகளிற்கும் ஆறுதலாக இருந்துவிட்டேச் சென்றனர். இப்படியாக நாட்கள் உருண்டோடி, திருமணம் இன்னும் ஒரு வாரம் என்ற நிலை வரும் போது மணமகளான பூர்ணிமா இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம் […] - [மோகனம் 5](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): கதிர் அறுவடை செய்த நாளிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் கழித்து காளையனிற்கு பெண் பார்க்கும் வைப்போவம் நிகழ்ந்தது. அந்தவொரு நிகழ்விற்கு மதிவதனியை தவிர மீதமுள்ள அனைத்து சொந்தங்களும் பெண் வீட்டிற்கு படையெடுத்து வந்திருந்தார்கள். அவளின் தாய் அழைப்பு விடுத்ததற்கு ‘எனக்கு பரிட்சை வரப்போகுது…காலேசுக்கு போகணும்மா…நீங்களாம் போங்க’ என கல்வியை காரணம் காட்டி அந்த அவஸ்தையான உணர்விலிருந்து தப்பிக்க முயன்றாள். ஆனால் தன்னையே ஏமாற்றிக்கொண்டாலும் அவளிற்குள் புதைந்திருந்த அந்த நேசம் அவளை துருவாய் அரித்துக்கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து வெடித்து கிளம்பிய துக்கத்தை அடக்கும் வகையறியாமல் தனிமையில் அழுது கரைந்தவள்,ஆறுதல் வேண்டி தன் தோழியின் மடி சாய்ந்தாள். ஒரு தாயாய் அவளை அரவணைத்து அவளை அந்த துக்க வலையிலிருந்து வெளிக்கொணர மணிமேகலை தன்னாலான உதவிப்புரிந்தாள். ஆயினும்,மனதிற்குள் ‘அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறான்’ என்ற எண்ணமே அவளை நிம்மதியின்றி அலைப்புறுதலுடன் தவிக்க வைத்தது. அவளின் தாய் தன்னை அலங்கரித்துக்கொண்டு பெண் பார்க்கும் நிகழ்விற்கு செல்வதை கண்டவளிற்கு ‘ஓ’வென்று […] - [சிறை 16](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-16/): அவன் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அவளிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி துயரத்தோடு விடைப்பெற்றான் அவன். விமான நிலையம் வரை சென்று அவனை வழியனுப்பி வைத்தவளின் நெஞ்சிலும் பாரமேறியது. இருவரின் கண்ணிலும் நீரின் சாரல்கள்!! இதயத்தில் வலியின் சாயல்கள்!! உடல்கள் மட்டும் கூடாகி பிரிந்திருக்க,உயிர்கள் இரண்டும் ஒன்றாகியிருந்தது. வேலைக்காக கணவனை பிரியும் ஒவ்வொரு மனைவியின் பரிதவிப்பும் இது!! மனைவியை பிரிந்து செல்லும் கணவனிற்கும் இதே நிலைமை என்பது போல் அவனும் தனிமையில் வாடிப் போனான். தங்களின் எதிர்க்காலத்திற்காகவும்,குழந்தைகளின் நல்வாழ்விற்காகவும் உழைக்க வேண்டிய சூழ்நிலை!! பிழைப்பிற்காக சமுத்திரத்தில் மீன் பிடிக்க செல்லும் தலைவனின் நிலையில் அவனிருக்க, அவன் வருகையை எதிர்நோக்கி விளக்கேற்றி பசலை நோயால் காத்திருக்கும் தலைவியின் நிலை அவளாகியது. ‘இது தான் நிதர்சனம்’ என்று வெகு விரைவிலே புரிந்துக்கொண்ட இருவரும் அவரவர் பணியில் செப்பனிட்டு முன்னேறிக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் அவர்களது முதல் திருமண நாளும் வந்து சென்றிருந்தது. அப்போது தான் அவன் இந்தியா வந்துவிட்டு […] - [சிறை 15](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-15/): செல்லும் முன் வாடகை காரில் பயணத்துக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியின் காதரோம் குனிந்தவன் “தக்காளி அங்கப்போய் வழவழன்னு பேசிட்டு நிக்காதே…மதியம் சாப்பிட்டு நம்ப வீட்டுக்கு போயிடலாம்” என கிசுகிசுப்பாய் சொல்ல, “ஏங்க இப்படி சொல்லறீங்க?அத்தையும் உங்களை பிரிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டாங்க தெரியுமா?இன்னைக்கு அங்கே தங்கிட்டு போலாம்ங்க” என்றாள் வேண்டுதலுடன். ‘நீ தெரிஞ்சு பேசறீயா தெரியாமல் பேசறீயாடி?’ என்பது போல் அவளை முறைத்தவன் “இவ ஒருத்தி மனுசனோட கஷ்டம் புரியாமல் பீத்..ச்சை மூத்த மருமகளாய் நடந்துக்கறாளாம்” என கோபத்தோடு முணுமுணுத்தான். இவளோ ஒன்றும் புரியாமல் ‘இப்போ இவருக்கு என்னவாம் ஓவரா பண்ணறார்’ என அவளும் உள்ளுக்குள் வசைப்பாடிக்கொண்டே வந்தாலும், மற்றவரின் முன்பு சிரித்தமுகமாகவே தங்களை காட்டிக் கொண்டனர். அவர்களிடமும் கார்த்திக் தான் வாங்கிய பொருட்களை கொடுக்க,அவர்களுக்கும் பரமானந்தம்!! மதிய உணவை முடித்துக்கொண்டவுடன் “சரிம்மா நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்” என்று மனைவியின் கைப்பிடித்து அவளையும் எழுப்பிவிட்டான். அவளோ அவனை‌ முறைக்க “ஏன் சாமி இன்னைக்கு இங்கே தங்கிட்டு […] - [சிறை 14](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-14/): அவனின்றி அவளிற்கு ஒரு அணுவும் அசையாதது போல் அவளின்றி அவனிற்கும் ஒரு அணுவும் அசையாது என்பதை அவளை பிரிந்து சென்ற சில மணித்துளிகளிலே உணர்ந்துக்கொண்டான் ஆடவன். ஆயினும்,மற்றவரின் பேச்சை கேட்டு தன் மேல் சந்தேகம் கொண்டவளை அவ்வளவு எளிதாக மன்னிக்க தயாராகயில்லை. இவள் தனிமையில் வாடி எவ்வாறு உயிர்மரித்துப்போனாளோ அதேப்போல் அவனும் அவள் அனுபவித்த அதே அளவு வேதனையையும் வலியையும் அனுபவித்தான். தன் கோபத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அவளிடம் அடைக்கலமாகிட பல சமயங்களில் மனம் துடித்தாலும்,அவளால் உண்டான மனக்காயங்கள் ஆற மறுத்தது. ஒவ்வொரு முறையும் அவளின் செயலுக்கான அர்த்தம் அறியாமல் பைத்தியம் போல் அவளிடம் கொஞ்சி சமாதானம் செய்த விதம் நினைவில் எழுந்து அவனிற்குள் அணைந்த தீயை மீண்டும் கொதித்தெழ செய்தது. கணவன் மனைவிக்கு இடையில் நம்பிக்கையும் புரிதலும் இல்லையெனில்,அத்தகைய உறவே பொய்த்துப்போனதாக அர்த்தம்!! அதனால் அத்தனை மாத காதல் வாழ்க்கையும் போலியான நம்பிக்கையோடு ஆரம்பித்திருப்பதை அறிந்தப்பிறகு அவனால் எவ்வாறு சமாதானமாக முடியும். அதன் […] - [சிறை 13](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-13/): பெண்ணவளே மனம் நொந்து அமர்ந்திருந்த நேரத்தில் அவளை மேலும் நோகடிக்கும் விதமாக அவளின் தங்கைகள் “அக்கா மாமா உனக்கு என்ன கிஃப்ட் கொடுத்தார்?” என்று ஆர்வமாக விசாரிக்க, அவளிற்கோ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய உணர்வு!! ‘நானே அவர் விஷ் பண்ணலைனு கடுப்புல இருக்கேன்…இவளுங்க வேற’ என பல்லைகடித்தவள், “என்ன கிஃப்ட் கொடுத்தா என்ன?நீங்க மூடிட்டு போய் படிக்கிற வேலைய பாருங்கடி” என்றாள் எரிச்சலோடு. அவளை முறைத்து விட்டு திரும்பியவர்கள் “இப்போ என்ன கேட்டுப்பிட்டோம்னு இந்த கத்து கத்தறா…மாமா பலமா ஏதாவது கொடுத்திருப்பாராடி?” என பெரிய தங்கை சிறிய தங்கையின் காதை கடிக்க, இன்னொருத்தியோ நமுட்டு சிரிப்புடன் வாயை பொத்தி “பலமானா?கிஸ்ஸா இல்லை பலக்காரமா?ஹிஹி” என இளிக்க, கண்சிமிட்டி “இரண்டும் இருக்கும்டி” என கிசுகிசுத்த,இருவரும் கையடித்து கிளுக்கி சிரித்துக்கொண்டார்கள். அத்தோடு நிறுத்தாமல் தமக்கையை நோக்கி திரும்பி “நடக்கட்டும்…நடக்கட்டும்ம்ம்..” என நக்கலாக கூறி புருவம் வேறு உயர்த்த, அதைக்கேட்டு கடுப்பாகி எட்டி இருவரின் மண்டையிலும் […] - [சிறை 12](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-12/):   அமெரிக்கா சென்று மூன்று மாதம் கடந்த நிலையில் அவன் ஒரு வெளிநாட்டு பெண்ணோடு சிரித்தப்படி இணைந்து நின்றிருப்பது போலான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதனை தனது அண்ணியிற்கு அனுப்பி வைத்த அருண் “அண்ணி இந்த பயல் உங்களை இங்கு தனியா விட்டுட்டு அங்க ஃபாரின்காரியோட மஜா பண்ணறான்…பாருங்களேன்” என விளையாட்டாய் போட்டுக்கொடுத்தான். அவளிற்கு அவை சுருக்கென தைத்தாலும் “உங்க அண்ணன் அந்த அளவு எல்லாம் ஒர்த் இல்லை அருண்…அவருக்கு என்னை விட்டா வேற எவளும் ஓகே சொல்லமாட்டா” என அவனை ஒத்து இவளும் கெத்தாக மொழிய, “என்ன அண்ணி பச்சை மண்ணா இருக்கீங்க?நீங்க அந்த போட்டோ பார்த்தீங்களா இல்லையா?இரண்டு பேரும் ஒரே டச்சிங் டச்சிங்கோட…” என கேலியாக இழுக்க, ‘டேய் நீ ஏன்டா வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சறே’ என எரிச்சலோடு முனகியவள், “தம்பி உங்க அண்ணனை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை..ரோட்டில போற பொண்ணை கூட நிக்க வைச்சு ஸ்டைல் காட்டறதுக்காக […] - [சிறை 11](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-11/):   தன்னவளின் செயலை ஆடவனால் அவ்வளவு எளிதாக கடந்துச்செல்ல முடியவில்லை. தாய்லாந்தில் தங்கிருந்த வேளையில் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆழ்ந்து யோசித்தப்போதே,மனைவியிடம் நிச்சயம் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்று கணித்து வைத்திருந்தான். ஆனால் மற்றவரின் பேச்சை கேட்டு அவனை இவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறாள் என்று அவனே எதிர்ப்பாராதது. அவளின் வாய்மொழியாக ஒவ்வொன்றையும் கேட்க கேட்க,அவனின் உடலிலிருந்து உயிர் சிறிது சிறிதாக விலகி சென்று காற்றாகி போன உணர்வு! மொத்தமாய் அவள் கூறி முடித்த நொடியில், இதயத்தை துடிக்க துடிக்க அவள் வாள் கொண்டு அறுப்பது போலான வலி ஒன்று தேகமெங்கும் ஊடுருவி… நெஞ்சில் உதிரம் கொட்டி அவனை உயிரோடு சாய்த்து விட்டிருந்தது. வாழ்க்கையே வெறுத்துப்போனது போல் இடிந்துப்போயிருந்தான். இப்போது அவனால் ‘அவள் சிறுப்பிள்ளை தெரியாமல் தவறு செய்துவிட்டாள்’ என்று மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால் தினந்தோறும் அவள் முகம் காணும் நொடியெல்லாம்,அவள் செய்த அனைத்தும் கண் முன் தோன்றி அவளை வாட்டி […] - [சிறை 10](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-10/): சிறை 10: மனைவியை இமைகள் இடுங்க ஆழ நோக்கிய கார்த்திக் “நான் இப்பவும் உன்னை மன்னிக்க தயாரா இருக்கேன்” என்றவுடன் மலர்ந்த அவள் முகம் “ஆனால்..” என்று ஒரு நொடி அவன் நிறுத்தவும் மீண்டும் சுருங்கிப்போனது. அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் “தாய்லாந்தில் தனிமையில் இருந்து யோசிக்கும் போது,எனக்கு புரிப்படாத பல கேள்விகளுக்கான விடைக்கிடைத்தது…அதனால் முதல்ல என்னோட கேள்விக்கான பதிலை நீ தா…அதற்கு பிறகு உன்னை தாராளமா மன்னிக்கிறேன்” என்றான் அழுத்தம்திருத்தமாக. பாவையவளிற்கோ ஆடவனின் அந்த விறைத்த தோற்றம் கிலியை கொடுத்தது. இதுவரை கண்டிராத ஒரு இறுக்கம் அவனிற்குள்! அதை அவதானித்தவளிற்கு இதயம் வேகமாக துடிக்க கைகளை பிசைந்து “கேளுங்க” என்றாள் ஒரு வித தடுமாற்றத்துடன். “ம்க்கும்” என தொண்டையை செருமி,அவளை உறுத்து விழித்தவன் “கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும்…” என்றவன் மறுப்பாக தலையசைத்து “நோ தாலிக்கட்டி இங்க வரவரைக்குமே நீ ரொம்ப தெளிவா சந்தோஷமா இருந்தே…ஆனால் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு நீ வந்ததிலிருந்தே உன் […] - [சிறை 9](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-9/): சிறை 9: அலுவலகத்தில் தன் பணியை மேற்கொண்டிருந்த கார்த்திக்கை அழைத்த மேனேஜர்,அவனிடம் வேலை விஷயமாக தாய்லாந்து செல்லுமாறு பணித்தார். இப்படியொரு திருப்பத்தை சற்றும் எதிர்ப்பாராத கார்த்திக் திடுக்கிட்டு “ஜெ..ய் திடீர்னு இப்படி சொன்னால் எப்படி போகமுடியும்” மனைவியை பிரிந்துச்செல்ல முடியாத தவிப்போடு அவன் வினவ, “சாரி கார்த்திக்…ஆக்சுவலி நான் போறதா இருந்தது…ஆனால் திடீர்னு கிட்னியில் கல்லுனு டாக்டர் உடனே என் மனைவிக்கு ஆபிரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டார்…எனக்கும் வேற வழியில்லை” என்றார் ஒரு வித தர்ம சங்கடத்துடன். அவரின் சூழ்நிலை அவனிற்கு தெளிவாக புரிந்தாலும்,நெற்றியை நீவியப்படியே “வேற யாராவது…” என இழுக்கவும், “நோ கார்த்திக்…எனக்கு அடுத்து இந்த பிராஜெக்ட் பத்தி முழுசா தெரிஞ்ச ஒரு நபர்னா அது நீங்க மட்டும் தான்…அதனால் உங்களை தவிர வேற யாரையும் அனுப்ப முடியாது” என திட்டவட்டமாக மறுத்தவர், உடனே அவனது தயக்கத்திற்கான காரணமறிந்து தழைந்த குரலில் “சாரி கார்த்திக்…நீங்களும் புதுசா கல்யாணமானவர்னு தெரியுது…பட் வேற வழியில்லை…ஜஸ்ட் ஒன் […] - [சிறை 8](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-8/):   அலுவலக நண்பர்களுடனான சந்திப்பு முன்பு ஒரு நாள் ரத்தாகியிருந்ததால் மீண்டும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான் கார்த்திக். அதன்படி,மனையாளிடமும் இதைப்பற்றி எடுத்துக்கூறிட,அவளும் சம்மதித்து அங்கு வந்திருந்தாள். கார்த்திக் குறும்பு சிரிப்புடன் “கைஸ் இது என்னோட ஒன் ஒன்லி பொண்டாட்டி தாரிகா” என அவளின் தோளில் கைப்போட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு அனைவரையும் தனித்தனியாக அவளிற்கும் அறிமுகம் செய்து வைத்தான். தாரிகா அனைவரிடமும் எளிதாக பழகக்கூடியவள் அல்ல. அதனால் சிறுப்புன்னகையுடன் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி இருகரம் குவித்து ‘வணக்கம்’ தெரிவிக்க,அவளின் பாங்கு அவர்களை வெகுவாய் ஈர்த்தது. ஆனால் ஒருவள் மட்டும் ‘பட்டிக்காடு’ என முணுமுணுக்க, அருகிலிருந்த மற்ற தோழியோ அவளின் தோளில் இடித்து “ஏய் வாய மூடுடி…டீ.எல் காதில் விழுந்திடப்போகுது” என அதட்டி அடக்கினாள். கார்த்திக்கோ அவளின் தோளில் கைப்போட்டவாறே மற்றவரிடம் பேசிக்கொண்டிருக்க,இவளிற்கோ அது சிறிது சங்கோஜத்தை கொடுத்தது. அவள் சங்கடமாக நெளித்துக் கொண்டே இருக்கவும், குனிந்து அவளை ஒரு […] - [சிறை 7](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-7/):   அன்று காலையில் தொடங்கிய அவர்களது காம திருவிளையாடல் ஒரு வழியாக மதியம் முற்றுப்பெற்றிருந்தது. அதன்பிறகே இருவரும் களைப்பில் கண்ணயர,தாரிகாவிற்கு விழிப்பு வருகையில் மாலை மங்கி இருள் ஆகாயத்தை சூழ்ந்திருந்தது. காலையிலிருந்து உண்ணாதது வேறு வயிற்றை சுருட்ட,எழுந்திரிக்க முடியாத வகையில் உடம்பெல்லாம் அடித்துப்போட்டது போல் வலித்தது. ஒரு வழியாக தன்னை சமாளித்து எழுந்தவள்,இடுப்பை பிடித்துக்கொண்டு ‘அம்மா என்னா வலி வலிக்குது…இதுக்கா நான் ஆசைப்பட்டேன்’ என வெளிப்படையாக புலம்பினாள். நின்ற வாக்கிலே திரும்பி கணவனை ஒரு பார்வை பார்த்தவள் ‘காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாறி என்னை கசக்கி பிழிஞ்சிட்டு தூங்கறதை பாரு…முடியலை’ என பெண்குயின் போல் காலை அகட்டி தத்தி தத்தி நடந்து சென்றாள். விதியோ ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரி’ என நக்கலாய் சிரித்தது. சூடான தண்ணீரில் நீராடினால் உடல் வலி பஞ்சாய் பறந்துப்போகும் என்று குளித்தால்,மேனியில் உண்டாகியிருந்த இன்ப காயங்கள் ஒரு சேர நாணத்தையும் வலியையும் சேர்த்தே கொடுத்தது. ‘இப்படி […] - [சிறை 6](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-6/):   நாட்கள் அதன் போக்கில் நகர கணவன் மனைவி இருவர் உறவிலும் பெரிய உரசல் எதுவுமின்றி மிருதுவாக சென்றுக்கொண்டிருந்தது.  பெரும்பாலும்,மனைவியின் மனநிலை மாற்றத்தை கார்த்திக் உணர்ந்து,அதன் காரணம் அறியாமலே அவளிற்கு ஏற்ற விதமாக நடக்க ஆரம்பித்தான். விட்டுக்கொடுக்கும் உறவு என்றும் சோடைப்போவதில்லை.அதனால் மனைவி சில நேரங்களில் முரண்டு பிடித்தாலும் இவன் அமைதியாகிப்போனான். அவனின் அந்த ஒத்துழைப்பும் அன்பும் அவளுள் இருந்த முரணை உடைத்து சீராக்கி அவனோடு இணங்கி வாழ வைத்துக் கொண்டிருந்தது. தெளிவான நீரோட்டத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் உறவில் கல்லெறியும் விதமாக தாரிகாவின் நெருங்கிய தோழி சஞ்சனா அழைத்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு தோழி தனக்கு அழைத்த உற்சாகத்தில்,தாயிடம் பகிர தயங்கிய விஷயம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தோழியிடம் ஒப்பித்தாள் தாரிகா. அத்தோடு “சஞ்சு அவர் நாம்ப நினைச்சது போல் ஏமாத்தறவரா இருக்க வாய்ப்பில்லைடி…என்கிட்ட எவ்வளவு அன்பா நடந்துக்கிறார் தெரியுமா?அதுமட்டுமில்லைடி…எல்லார்கிட்டயும் சண்டைப்போட்டு என்னை காலேஜில் சேர்த்திருக்கார்” என கணவனின் புகழாரம் பாடிக் கொண்டிருக்க, அவளின் […] - [சிறை 5](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-5/): சிறை 5: ஒவ்வொரு கால கட்டத்திலும்,பெண்களின் அந்தந்த பருவ நிலைக்கு ஏற்றது போல் சமுதாயத்தால் விதிமுறைகள் விதிக்கப்படுக்கிறது. குழந்தை முதல் பருவமடையும் வயது வரை தன் கைக்குள்ளே வைத்து வளர்க்கப்படும் பெண்கள் முதல் நிலை!! பருவம் எய்ததற்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வீட்டிற்குள்ளே சிறை வைப்பது அடுத்த நிலை!! பள்ளிப்பருவத்தை முடித்து தங்கள் லட்சியத்தை அடைய ஆசைக்கொள்பவர்களிடம் ‘ஆண்கள் படிக்கிற படிப்பு உனக்கு எதுக்கு?சும்மா எதையாவது படி’ என்றுரைத்து ஆரம்பத்திலே சிறகை ஒடித்துப்போடுவது மூன்றாம் நிலை!! கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மேல் படிப்பு அல்லது பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் பெண்களிடம் வீட்டின் சூழ்நிலையை வலியுறுத்தி திருமணம் செய்து வைப்பது நான்காம் நிலை!! அதிலும்,இந்நிலையில் அவர்கள் பெரும்பாலும் தெரிவிப்பது ‘கல்யாணம் செய்துக்கொண்டு உனக்கு பிடித்த எதையும் செய்’ என்ற பொதுவான ஒரு வசனம் மட்டுமே. அதுவரை பெற்றோர் கரங்களினுள் சிறைப்பட்டிருந்த பெண்களின் வாழ்வு அடுத்ததாக திருமணமென்னும் பந்தத்தில் சிறைப்பட்டுப்போகும்!! இறுதியாக,அவளும் குடும்பமென்னும் […] - [சிறை 4](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-4/):   அடுத்த நாள் மாலை அலுவலகத்திலிருந்து இல்லத்திற்கு  வரும் போது அவன் கையில் அவள் படிக்க விருப்பம் கொண்ட முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி வந்திருந்தான் கார்த்திக். வேலை செய்துவிட்டு களைப்பில் வந்தவனின் சோர்வெல்லாம் அவனின் மனையாளை கண்டவுடன் விலகி ஓடியிருந்தது. இதமான இளஞ்சிவப்பு நிற சுரிதாரில் வரவேற்பறையில் நின்று தன்னை சிரித்தமுகமாக வரவேற்ற தாரிகாவை கண்டு புன்னகைத்தான் கார்த்திக். முகம் கழுவி புத்துணர்வுடன் வந்து நின்ற இல்லாளை ஆடவனின் விழிகள் தன்னை மீறி ரசித்தன. அவளின் அருகே வந்த ஆடவனோ சிரித்துக்கொண்டே “இந்தா பிடி”  என விண்ணப்பத்தை அவளிடம் நீட்ட, “என்னங்க இது?” என கேட்டு குழப்பமாக அதை வாங்கி பார்த்தவளின் விழிகள் இரண்டும் வியப்பில் பெரிதாக விரிந்தது. கணவனிடமிருந்து இப்படியொரு பரிசை சற்றும் எதிர்ப்பாராத பாவையவளோ ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனாள். நிறைவேறாத ஆசையாக கருதி தூக்கியெறிந்த அவளது வாழ்வின் இலட்சியம் மீண்டும் சாத்தியமாகப்போவதை எண்ணி பெரும் உவகை கொண்டாள் அவள். […] - [சிறை 3](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-3/): சிறை 3: அன்று உணர்ச்சிவசப்பட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டதற்கு பிறகு,அவன் அவளை நெருங்கவில்லை. அவ்வப்போது அவளை கண்டு கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளை தூண்டிய காமதேவனையும் கட்டுக்குள் அடக்கி வைத்தான். அதற்காக அவன் ஒரேயடியாக அவளை விலக்கி வைக்கவில்லை. தனது அன்பின் மூலம் படிப்படியாக அவளின் இதயத்தில் இடம் பிடித்து,ஒருமித்த உள்ளத்தோடு அவளை ஆக்கிரமிக்க வேண்டும் என்று திடமான முடிவெடுத்திருந்தான். எடுத்த முடிவிற்கு தகுந்தாற் போன்று அவளிடம் கனிவாகவும் நடந்துக்கொண்டான். தம்பதியினர் இருவரும் மறுவீட்டு விருந்திற்கு அவளின் பிறந்தகம் சென்றிருக்க,காந்திமதி மகளை இரண்டு நாளும் சீராட்டியதோடு மருமகனை தலையில் வைத்து கொண்டாடினார். அவர்களது இனிய உபசரிப்பில் கார்த்திக் சங்கடமுற்றாலும்,மற்றொரு புறம் அவர்களது கவனிப்பில் மனம் நெகிழ்ந்துப்போனான்.  அத்தோடு தனது மனைவியின் தங்கைகளோடு சகஜமாக உரையாடி,அவர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்கி,அவர்களின் உள்ளத்திலும் மாமனிதனாய் உயர்ந்து நின்றான். ‘கார்த்திக் மாமா ஒரு ஹீரோ’ என்னும் அளவு அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தான். அதேசமயம் எல்லை மீறாமல் ஒரு சகோதரனாய் […] - [சிறை 2](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-2/): சிறை 2: கார்த்திக்கின் நிறுவனம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால்,அன்றே மனைவியை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டிருந்தான். மணமக்கள் இருவரின் இல்லமும் சென்னைக்கு வெளியே புறநகரில் இருப்பது,இவனிற்கு வசதியாகிப்போனது. இதைப்பற்றி முன்பே தெரிவித்திருந்ததால்,இருவீட்டின் பெரியவர்களும் புதுமண தம்பதிகளுக்கு தனிமை கொடுக்க எண்ணி,முதலிரவு அறைக்கு தாரிகாவை அனுப்பியதோடு தங்கள் இல்லம் புறப்பட்டுவிட்டனர். இரவில் தன் எதிர்க்கால வாழ்வை பற்றிய துக்கத்தோடு கண்ணயர்ந்த தாரிகா,காலையில் தன் அலைப்பேசியின் மணியோசை கேட்டே கண்விழித்தாள். அதன் சப்தத்தில் விழித்த கார்த்திக்கும் கையை தூக்கி சோம்பல் முறித்தப்படி “குட்மார்னிங் தாரிகா” என அவளை பார்த்து புன்னகைக்க, அவளும் பதிலுக்கு “குட்மார்னிங்” என வேண்டா வெறுப்பாக முணுமுணுத்தவாறே எழுந்து சென்றாள். ‘சரியான‌ ஏத்தம் புடிச்சவாள்’ என பல்லைக்கடித்தவன், சடுதியில் தலையை உலுக்கி ‘ஏய் கார்த்தி…கொஞ்சம் பொறு…அவ சின்னப்பொண்ணு பயத்தில் என்ன பண்ணறதுனு தெரியாமல் பண்ணிட்டு இருக்காள்…இன்னைக்கு எப்படியாவது அவகிட்ட பேசி பயத்தை போக்கிடு’ என தனக்கு தானே உரைத்து சிகையை அழுந்தக்கோதி குளியலறைக்குள் […] - [சிறை 1](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-1/): அதுவொரு முதலிரவு அறை! திருமணமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆவலோடு எதிர்ப்பார்க்கக்கூடிய ஆத்மார்த்தமான நிமிடங்கள்! அவ்வறையின் வலதுப்புறத்தில் உள்ள கண்ணாடி திரையின் வழியே  தெரிந்த நிலா மகள் தேவதையென மிளிர்ந்துக்கொண்டிருக்க,உட்புறம் ஊதுபத்தியின் மணம் நிறைந்து ஒரு ஏகாந்த நிலையை உருவாக்கியிருந்தது.  மனம் மயக்கும் அவ்வேளையில் சல்லாபத்தில் ஈடுப்பட வேண்டிய புதுமண தம்பதியினரோ கட்டிலில் ஆளுக்கொரு புறமாக திரும்பிப்படுத்திருந்தனர். அச்சமயம் அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல், “நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்” காமதேவனின் மோக ரசம் சொட்டும் பாடல் அறையெங்கும் கணீரென்று ஒலிக்க, திடீரென்று ஒலித்த அந்த பாடலை கேட்டு திடுக்கிட்ட கணவனும் மனைவியும் பதறியடித்து எழுந்தார்கள். மலங்க மலங்க விழித்தவாறு  மணாளனை நோக்கிய தாரிகாவின் தலையை வருடி “ஈஸி தாரிகா…என் அத்தை பொண்ணு ஸ்ருதி வேலையா இருக்கும்” என அவளிற்கு விளக்கமளித்தவாறே எழுந்து சென்றான் கார்த்திக். ‘பர்ஸ்ட் நைட் அதுவுமா என் மானத்தை வாங்கறா’ […] - [மோகனம் 4](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): நாட்கள் வேகமாக உருண்டோட,மதிவதனியின் மகிழ்ச்சி சுகந்தியின் சூழ்ச்சியினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது. அன்றைய நாட்கள் தொட்டு மதிவதனியை தனது தாயின் வீட்டிற்கு தனியாக அனுப்ப முயலுவதில்லை வாசமல்லி. ஒரு தாயாக அவருக்குள் அந்த அச்சம் மிளிர்ந்து இருந்தாலும் தனது சகோதரனின் நன்னடத்தையை நினைவில் கொண்டாவது,அவனை தவறாக எண்ணாமல் இருந்திருக்கலாம். அவனிடமிருந்து வரக்கூடிய தாய் வீட்டு சீதனங்கள் வேண்டும். ஆனால் அவனது உறவு வேண்டாம் என்ற சுயநல மனநிலை காளையனின் சகோதரிகளுக்கு இருந்தது தான் கொடுமை!! தனது அம்மாச்சியின் இல்லம் செல்லாதது மனதிற்குள் ஒரு வெறுமையான உணர்வை தோற்றுவித்திருந்தது. இப்போது அவளிற்கு இருக்கும் ஒரே ஆறுதல் கல்லூரி கால வாழ்க்கையும் அவளது தோழி மணிமேகலை மட்டுமே!! எப்போதும் சோக பதுமையாய் வலம் வரும் தோழியிடம் “என்னாச்சு மதி?எனி பிராப்ளம்?” என மணிமேகலை அக்கறையுடன் விசாரிக்க, ஒருவரின் ஆறுதலுக்காக காத்திருந்த பூஞ்சையவள் மடைத்திறந்த வெள்ளமென இல்லத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்துரைக்க ‘இவங்களாம் மனுசங்க தானா?’ என […] - [மோகனம் 3](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/):   மதிவதனிக்கு சிறு வயதிலிருந்தே பள்ளி,கல்லூரி விடுமுறை என்றால், அவளது மாமன் இல்லத்திலே அவளது பொழுதுகள் கழியும். அன்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தன் பிறந்த வீட்டில் இருப்புக்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு மாமன் இல்லத்திற்கு வர உத்தேசித்து இருந்தாள்‌. அவளின் அன்னை வாசமல்லியும் தன்னுடைய பிறந்த வீடு என்பதால் அவளை எந்த வித மனக்கிலேசங்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடனே அனுப்பி வைப்பார். ‘வெள்ளன போயிட்டு மானம் கருக்கறதுக்குள்ள வந்திடணும்’ என்ற நிபந்தனையுடனே பிள்ளையை சிறையிலிருந்து விடுவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஏதோ அந்தமட்டும் அனுமதிக்கொடுத்திருக்காரே?’ என தாயை எண்ணி விரக்தியுடன் கசந்த முறுவலை சிந்தியவள்,காளையனை தன்னை அழைத்துச் செல்லுமாறு அலைப்பேசியின் வழியாக பணித்தாள். தன்னுடைய இல்லத்தில் ஒரு பொருட்டாக கூட மதிக்கப்படாத ஜீவனிற்கோ மாமன் இல்லம் என்றும் சொர்க்கமே!! ஏனெனில்,அவளை ஒரு மகாராணியை போல் உணரவைக்கும் விதமாக மாமனும் அவளுடைய அம்மாச்சி காந்திமதியும் பெண்ணவளை ராஜ உபசரனையோடு அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். ஆகையினால்,தனது […] - [மோகனம் 2](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): “அடியே நான் பெத்த அழகு சுந்தரி…இன்னும் உள்ளுக்க என்னத்தடி நோண்டிட்டு கிடக்கவே?” என சமையலறையிலிருந்து வாசமல்லி கத்திக்கொண்டிருக்க, “யம்மா இப்போ என்னத்துக்கு இந்த கத்து கத்தறவ…வரேன் இரு” என பதிலுக்கு அறையின் உள்ளிருந்து ஒரு குரல் சிடுசிடுப்புடன் வெளியே வந்தது. “அடியே வந்தேன்னு வைச்சுக்கோ ஏறி குறுக்குலே ஒண்ணு மிதிப்பேன்…வெரசா வந்து தொலைடி…காலேசுக்கு நேரமாச்சு” என இவரும் தொண்டை கிழிய கூப்பாடுப்போட்டார். ‘இந்தம்மாவுக்கு என்ன தான் பிரச்சனை?’ என முணுமுணுப்போடு தாயின் அதட்டலை கண்டுக்கொள்ளாமல் நிதானமாக தன்னுடைய முகத்திற்கு ஒப்பனை செய்துக்கொண்டிருந்தாள் அவரது தவப்புதல்வி மதிவதனி. மதிவதனி பெயருக்கு ஏற்றது போல் அறிவும்,அழகும் ஒருங்கே பெற்ற இருபது வயது குமரி. வெண்ணெயில் குங்குமத்தை குழைந்தெடுத்த சிவந்த நிற பளபளத்த மேனியுடையாள்.ஐந்தரை அடி உயரம். வில்லாய் வளைந்திருந்த இரண்டு புருவங்கள்.கோழி குண்டை பதித்து வைத்ததுப்போன்ற அழகிய பெரிய கண்கள்…புருவத்தை தீண்ட ஆசைக்கொள்ளும் நீண்ட இமைமயிர்கள்…கூரான நாசி…அதன் வடிவை சீர்தூக்கி காட்டும் ஒற்றை பச்சைக்கல் மூக்குத்தி…உதட்டு […] - [மோகனம் 1](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): தமிழ்நாட்டின் தொன்மையான நகரம் என்று பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று தான் மதுரை மாநகரம். தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்களில் இந்த மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மதுரையின் சிறப்பு மீனாட்சியம்மன் கோவில் என்றே கருதப்படுகிறது. உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவில் உலக அதிசயங்களின் தேர்விலும் இடம்பெற்றிருந்தது. இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரிலே அழைக்க பெற்றதாகவும், பின்னாளில் அப்பெயர் காலத்தால் மருவி மலைதுரை= ம+(லை)+துரை மதுரையாக மாறியதாக கூறப்படுகிறது. இவை ஒரு காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்தது. ‘ஏறு தழுவுதல்’ அவர்களின் மரபு வழி வந்த மதுரை மண்ணிற்கே உரிய வீர பராக்கிரம விளையாட்டு. சங்க இலக்கியமான கலித்தொகையில், “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்புல்லாளே ஆய மகள்” என்ற பாடல் ஏறு தழுவுவதின் சிறப்பை பற்றி எடுத்துரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரையில் “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): ஐந்து வருடங்களுக்கு பிறகு, இந்தியா… கண்ணாடி முன்பு நின்று தன் களைந்திருந்த தலையை ஜெல் வைத்து அழுந்த வாரி முன்பிருந்த விளையாட்டுத்தனம் முற்றிலும் விலகி ஒரு முழு ஆண்மகனாய் காட்சியளித்தான் சம்ரிஷ் கௌதமன். அவனது இதழில் சிறு கீற்றாய் ஒளிந்துக்கொண்டிருக்கும் புன்னகையும் கன்னக்குழியும் என்றும் அவனிடம் மாறாத ஒன்றாய் இருந்தது. ஒரு பெரிய மருத்துவமனையை கட்டியாளும் வலிமைப் பெற்றவனிற்கு ஒரு தொழிலதிபருக்கே உரிய மிடுக்கும் கம்பீரமும் கூடவே கர்வமும் தானாய் ஒட்டிக்கொண்டது. ஆம்,இந்தியாவில் அவனது கனவு மருத்துவமனையை கட்டியவன்,அடுத்த இரண்டு வருடத்தில் இந்தியா வந்திறங்கி பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்டான். கடந்து மூன்று வருடங்களாய் ஒரு பொறுப்பான ஆண்மகனாய் எளியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையையும் வலியோருக்கு நியாயமான முறையில் பணம் வசூலித்து அதற்கான சிகிச்சையையும் அளித்து தனது மருத்துவமனையை வெகு சிறப்பாக நடந்திக்கொண்டிருக்கிறான். சென்ற வருடங்களில் தன் மீதும் மருத்துவமனையின் மீதும் எவ்வித கரும்புள்ளிகளும் இல்லாமல் திறம்பட மருத்துவ சம்பிராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன்,அதேபோல் […] - [சமர் 28(2)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-282/): பெண்களுக்கே உரித்தான வகையில் அவளின் கன்னம் நாணத்தில் செங்கொழுந்தாகிட,ஆடவனின் நாணமும் அழகு என்பது போல் அவனின் வெண்ணிற முகமும் சிவப்பேறிட,புருவத்தை உயர்த்தி சிகையை அழுந்தக்கோதி சமியிடம், “சமி கொஞ்சம் வெயிட் பண்ணு எனக்கு இன்னொரு எமர்ஜென்சி கேஸ் இருக்கு…போய் என்னானு பார்த்துட்டு வரேன்…நீ சாப்பிட்டு குழந்தைக்கு பீட் பண்ணு” என அக்கறையாக மொழிந்தவன்,குடும்பத்தினரிடம் சிறிது தலையசைப்புடன் அவசரமாக விடைப் பெற்றான். குடும்பத்தினரோ இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை கண்டு ‘நாம் சரியான முடிவை தான் எடுத்திருக்கிறோம்’ என தேற்றிக்கொண்டனர். அறையை விட்டு வெளியே வந்த சமரோ முற்றிலும் வேறுப்பட்டவனாய் மருத்துவனுக்கே உரிய கம்பீரத்துடன் நோயாளியையும் செவிலியரையும் எதிர்க்கொண்டான். சமியின் வெட்கமறிந்து அவளருகே சென்று கன்னம் வழித்து நெற்றி முறித்தவர், “ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கு சந்தோஷமா இருடா” என சிலாகித்து பத்மாவதி கூறினார்‌ என்றால், அகிலாண்டேஸ்வரி தன் பேத்தியின் கூந்தல் கோதி வார்த்தைகளின்றி செய்கையால் வாழ்த்தை தெரிவித்தார். ரமாவிற்கோ இத்தனை வருடங்களாய் பொறுப்பற்று திரியும் தனது […] - [சமர் 28(1)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-281/): இருவரின் வாழ்வும் இன்பமாய் பயணித்துக்கொண்டிருந்தாலும் ஏனோ தங்கள் இருவரின் திருகுத்தாளத்தை வீட்டினுள் கூறுவதற்கு மட்டும் சமியிற்கு ஏனோ துணிச்சல் வரவில்லை. தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக சமர் கூறியப்போதும்,அவளால் அவ்விடயத்தில் மட்டும் பிடிவாதத்தை தகர்க்கமுடியவில்லை. தன்னை தாங்கும் குடும்பத்தினரின் முன் தலைக்குனிந்து நிற்கும் அவலத்தை ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அறிந்த ஆதர்ஷ கணவனாய் மனைவியின் அச்சத்திற்கு கட்டுப்பட்டு நடந்தான். இந்நிலையில் இங்கோ வீட்டின் பெரியவர்கள் அவ்வப்போது, ‘என்ன மூன்று மாதத்திலே வயிறு இவ்வளவு பெருசா இருக்கு?’ என யோசிக்கையிலே அவர்களின் முகத்தை வைத்தே எண்ணத்தை கண்ணுற்றவன் ‘ஐய்யோ கேடி குடும்பம் ரொம்ப யோசிக்க ஆரம்பிக்குதே…விடாக்கூடாதே’ என மனதினுள் புலம்பியவன் தன்னருகில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் சமியின் காதருகே குனிந்து, “குட்டச்சி பெருசுங்க ரொம்ப யோசிக்க ஆரம்பிக்கிறாங்க?உன் ஆக்டிங்கை ஸ்டார்ட் பண்ணுடீ?” என்றவுடன், தானும் அவர்களை அனுமானித்தவள் சட்டென்று முகத்தை சுழித்து, “ஆ…ஐய்யோ அம்மா” என முனகிய அடுத்த நிமிடமே, “அம்லு…சமி…என்னாச்சு…என்னாச்சும்மா?என்ன பண்ணுது?” […] - [சமர் 27](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-271/): தன்னை காதலிப்பதாக கூறிய நொடிதனில் திகைத்தாலும் சடுதியாக சுய உணர்விற்கு வந்து ‘இது எப்போதிலிருந்து’ என ஒற்றை புருவத்தை உயர்த்தி சந்தேகமாக தன்னவனை நோக்கினாள். அவளின்‌ மனதை உணர்ந்தாற் போன்று, “எனக்கே அது சரிவர புரியலை சமி…அதுக்காக தாலிக்கட்டினதால் மட்டும் வேற வழியில்லாமல் நான் உன்னை காதலிக்கிறதா நினைச்சிடாதே.எனக்கு லவ் எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணனும்னு தெரியலை.ஆனால் நீயில்லாமல் என்னுடைய வாழ்க்கை சுவாரசியமா இருக்காதுனு நீ இந்தியா கிளம்பின கொஞ்ச நாளில் உணர்ந்துட்டேன். என்னை சுத்தி எனக்கு பிடிச்ச விசயங்கள் எல்லாமே இருந்தாலும் ஏதோ ஒரு வெறுமையை என் மனசு உணர்த்திட்டே இருந்தது.அது எதனால்னு அப்போ எனக்கு புரியலை.பட் இந்தியாவில் உன்னை பார்த்தப் போது என் மனசு நிறைஞ்சதை வைச்சு தான்,நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன்.ஆனால் அதுக்கு காதல்ன்னு பேரு சூட்ட என் மனசு ஒத்துக்கலை.அப்படி இருந்தும் என்னைக்கு உனக்கு தாலிக்கட்டிட்டு ஒரே வாரத்தில் பிரிஞ்சு அமெரிக்கா வந்தேனோ அப்போவே உணர்ந்துட்டேன் […] - [சமர் 26(2)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-262/): பெண்ணவளை தனக்கு வாகாக திருப்பி இடையை இறுக்கி மேலும் சில நிமிடங்கள் இதழின் கனிரசம் முழுவதையும் தன் இளமை தாகம் தீர அருந்தியவன்,அவள் மூச்சுக்காற்றிற்காக தவித்ததற்கு பிறகே அவளை விடுவித்தான். அவன் விடுத்த அடுத்த நொடியில் முகம் சிவக்க தலைக்குனிந்தவளை நோக்கி கன்னங்குழிய புன்னகைத்து, “குட்டச்சி உன் அத்தானுக்கு ரொம்ப பசிக்குதுடீ” என கிறங்கிய குரலில் கண்சிமிட்டி கூறியவனின் சொற்களின் அர்த்தம் உணர்ந்தவள் தன் வெட்கத்தை மறைத்து அவனை போலியாய் முறைக்க செய்து, “டேய் பிராடு…நாம் பேசி முடிக்கிற வரைக்கும் ஒண்ணும் கிடையாது…மூடிட்டு நான் சொல்லறதை கேளு” என திட்ட, அவனோ அவளை நன்றாக முறைத்து, “ஆனாலும் கட்டின புருஷன்னு பார்க்காமல் சகட்டு மேனிக்கு திட்டறதெல்லாம் ஓவர்…கொஞ்சாமவது மரியாதை கொடுடீ” சினத்தை வெளிப்படுத்த முயன்று தோற்று பாவமாய் கூறியவனிடம், “மரியாதையெல்லாம் மனசுல இருந்தால் போதும்…அதெல்லாம் என்கிட்ட எதிர்ப்பார்க்காதே” என பட்டென்று முகத்தலடித்தாற் போன்று உரைத்தவுடன் முகம் சுருங்கியவனின் இரு கன்னத்தையும் பற்றி தன் […] - [சமர் 26(1)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-261/): அடிவயிற்றை தன் ஒரு கரங்களால் அழுந்த பற்றிக்கொண்டு சோர்ந்து நடந்து சென்று கதவை திறந்து விட்டவள் கீழே சரிய இருந்த வேளையில் ஒரு வலிய கரம் அவளை தாங்கியது. அவளின் விழிகள் தன்னை ஏற்ற கரங்களுக்கு சொந்தக்காரனை கண்ணில் நீர் தேங்க ஏறிட,வெளியில் வியர்வை பூக்கள் உடலெல்லாம் பூத்து நின்றிருந்த கணவனை கண்டவுடன் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “சமர்” என விம்மியப்படியே அவனை அணைக்கப்போனவளை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு அவசரமாக படுக்கை அறை சென்றான் சமர். அவனிற்கோ அலைப்பேசியை ஒளிர செய்தவுடன் சமியிடமிருந்து வந்து குவிந்திருந்த ஏராளமான அழைப்புகளையும் இறுதியாக வந்திருந்த ஒலி தகவலையும் கேட்டுவிட்டு நெஞ்சம் பதைபதைக்க காரை ஓட்டிக்கொண்டு ஐந்து நிமிடத்தில் இல்லம் வந்து சேர்ந்தான். வண்டியின் வேகத்திற்கு நிகராக அவனது இதயமும் அதிவேகத்தில் துடித்துக்கொண்டிருப்பதை அவன் மட்டுமே அறிவான். அடிவயிற்றிலிருந்து ஒரு பயப்பந்து உருண்டோடி தொண்டை குழியை அடைக்க செய்ததில் அச்சத்தில் நடுங்கிய கரங்களை எவ்வாறு சமாளித்து வீடு […] - [சமர் 25(2)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-252/): கல்லூரியின் இறுதி ஆண்டு பயிற்சிக்காலம் என்பதால் இன்னும் நான்கு மாதத்தில் அவனுடைய படிப்பு மொத்தமாக முடிந்து இந்தியா செல்லவேண்டிய தினமும் வர காத்திருக்க,ஆயினும் தன்னுடையவளை விட்டு அத்தனை நாட்களும் பிரிந்திருக்க முடியாது என்பதற்காகவே அவளை இங்கு வரவழைத்துக்கொண்டான். ஆனால் பெண்ணவளோ தன் தாய் கூறிய காரணத்திற்காகவே பிடித்தமின்மை என்றாலும் தன்னுடன் அவளை அழைத்துக்கொண்டான் என நினைத்து தன்னை தானே வருத்திக்கொண்டிருந்தாள் பெண்ணவள். அந்த கவலையினால் எழுந்த சோர்வுடன் உறங்கியதினாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த மன்னவனின் அருகாமையினாலோ சமியை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்து சென்றிருந்தது. ஆனால் விடியற்காலையில் அவளிற்கு முன்பாக விழித்துக்கொண்ட சமர்,தன் மீது ஒரு கையையும் ஒரு காலையும் போட்டு உறங்கும் மனைவியை, ‘அடிப்பாவி…புள்ள வயத்தில் இருக்குனு ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்…பெப்பர பேனு தூங்கறதை பாரு அவதார்குட்டி’ என செல்லமாய் திட்டிக்கொண்டே அவளின் கரத்தையும் காலையும் மெதுவாக தூக்கி மெத்தையில் விட்டவன்,பின்பு சிறு குழந்தையென விரலை வாயில் வைத்து […] - [சமர் 25(1)](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-25/): ‘அடப்படுபாவி ஒரு பிள்ளைதாச்சினு கூட பார்க்காமல் என்னை தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டானே எருமை’ என மனதினுள் தன்னவனை வறுத்த சமியால் நாளுக்கு நாள் குடும்பத்தினரிடம் கர்ப்பத்தை எவ்வாறு கூறுவது என்றறியாமல் கலக்கமும் குழப்பமும் ஒருங்கே தோன்றியது. முன்பு அவனோடு உறவுக்கொண்டப்போது ஏற்படாத தயக்கமும் அவமானமும்,குடும்பத்தினர் முன் தாங்கள் செயல்கள் அனைத்தையும் கூறவேண்டும் என்று எண்ணும் போது,தான் செய்த தவறு விஸ்வரூபம் எடுத்து மிரட்டியது போல் அஞ்சி நடுங்கிப்போனாள். குடும்பத்தினருக்கும் தனக்குமிடையே சுமுகமான உறவு இருந்தப் போதிலும் அவளால் நிஜத்தை ஒருவரிடமும் கூற இயலாத கடும் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தனித்து தவித்திருந்தாள் பெண்ணவள். உற்றவன் எங்கோ ஒரு நாட்டில் இருக்க மற்றவர் தன்னை வெறுத்து ஒதுக்கினால் தன்னால் அந்த சிரமமான நிலையை ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியாது என மிரண்டவள்,அதனை தற்போது யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மனமின்றி யாரிடமும் ஒட்டாமல் அறையினுள் ஒடுங்கியே இருந்தாள். அத்தோடு மசக்கை காலம் வேறு படுத்தியெடுக்க முதல் மூன்று மாதம் […] - [சமர் 24](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-24/): உயிரை இறுக்கிப்பிசையும் வகையில் “சமர்” என்ற கூவலோடு அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டவள் அவளே தான். அதில் அவனது பரந்த முதுகு வில்லிருந்து புறப்படும் நாணாய் விறைத்திட,இவளோ, “நீ எங்கயும் போகவேணாம்டா” என அழுகையினூடே கூறி ஆவேசமாக தன் கண்ணில் பட்ட இடம் அனைத்திலும் தொடர் முத்தங்களை வழங்கினாள் பேதை. அதுவரை தன் பாட்டியின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான அன்பினால் அவருக்கு எதிராக வாயை திறந்திராதவள்,முதன்முறையாக தான் செய்த தவறிற்காக பழி ஏந்தி நிற்கும் தன்னவனை அதற்கு மேலும் குடும்பத்தினரிடம் தனியாக போராட விடாமல் காக்கும் பொருட்டு அவனிற்கு உற்ற துணையாய் தன்‌ உயிரான பாட்டியை எதிர்த்து நிற்க தயாராகினாள் சமி. மேலும் தன் மேல் காதலில்லை என்றாலும் பெற்றெடுத்த இரத்தச் சொந்தத்திடம் கூட தன்னை காட்டிக்கொடுக்காமல் இருக்கும் அவனது பெருந்தன்மை நேசமாக அன்றி வேறு என்னவாக இருக்கக்கூடும் என்று நினைத்தவளிற்கு தன்னவனின் மீது வைத்திருந்த நேசம் வானளவு உயரத்தொடங்கியது. தன்னவனிற்கேற்ற துணைவியாய் நிமிர்ந்து […] - [சமர் 23](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-23/): அன்று புலர்ந்தும் புலராத காலை வேளையில் வீடே பெரும் பரப்பரப்பாக இருக்க,சமரின் அதிரடியால் விடியற்காலையில் கண்ணயர்ந்த சமியின் செவியில் ஒலித்த வித்தியாசமான ஓசையில் திடுக்கின்று எழுந்து அமர்ந்தாள் அவள். முன்பெல்லாம் இடியின் ஓசை சன்னலின் வழியே நுழைந்து செவியை தாக்கினாலும் எழுந்துக்கொள்ளாதவள்,சமரோடு இருந்த நாட்கள் தொட்டு அவனின்  கைங்கரியத்தினால் சிறு ஓசை கேட்டாலும் விழித்துக்கொள்கிறாள். காலையில் விழித்துக்கொள்கையிலே தன்னை சீண்டி எழுப்பும் அவனிடமிருந்து தப்பிக்க மனமின்றி அவனின் செயல்களை ரசித்தப் படியே இதழில் உறைந்த புன்னகையுடன் எழும் நாட்களின் நினைவுகள் அவளை நெகிழ்த்தி துயில் களைய செய்துவிடும். கூடவே வயிற்றிலிருக்கும் சிசு வேறு இப்போதே படுத்தி எடுக்க ‘அவன் தான் வைச்சு செய்யறான்னா?இவங்களும் படுத்தறங்கய்யா…முடியலை’ என எரிச்சலுடன் எண்ணி ஒரு கொட்டாவியை வெளியிட்டு கதவை திறந்து வெளிவந்த சமியின் இமைகள் சாசர் போல் விரிந்தது. ஏனெனில் அவளின் அறை தவிர்த்து ஏனைய பிற அறைகள் அனைத்திலும்  பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க,மாடியிலிருந்து கீழே குனிந்து பார்த்தால் […] - [சமர் 22](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-22/): சமியை முழுமையாய் தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்திருந்த சமரின் நீல விழிகள் அவளின் அழகிய வதனத்தை அழுத்தமாய் பார்வையால் தீண்டிக்கொண்டிருந்தது. அசுரவேகத்தில் தன் உடையை களைத்தெறிந்து காம வெள்ளத்தில் மூழ்க தொடங்கியவன்,சட்டென்று தன் செயலை நிறுத்தி முன்னேறாமல் விட,அதனை உணர்ந்தாற் போன்று தாங்கள் இருக்கும் விதம் அறிந்து ஏமாற்றமாய் விழிகளை திறந்தாள் அந்த இளம் மான்குட்டி. அவனின் விழிகளில் தெரிந்த கூர்மை தன் கருவிழிகளை ஊடுருவி சென்று இதயத்தை குத்திக்கிழிக்கும் கத்தி போல் வலிமை வாய்ந்ததாக இருக்க,அதில் தடுமாறி இமைகளை தழைத்த சமி, “என்னாச்சு சமர்?” என்று மெல்லிய குரலில் வினவினாள். அவளிற்கே அவளின் கேள்வி அபத்தமாக இருந்தது.அதனால் விளைந்த தடுமாற்றத்துடன் இமை தாழ்த்தியிருந்தாள். வெடுக்கென்று அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி தன்‌ கூரிய விழிக்கொண்டு பெண்ணவளின் விழியை இரு கூறாக்கி துளைத்தவன், “இது மாதிரி அவன் கூட உன்னால் இருக்கமுடியுமா?” என்று சூடாய் வந்து விழுந்த வார்த்தையில் மங்கையவள் […] - [சமர் 21](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-21/): சமியின் நிச்சயத்தார்த்த விழா முடிவடைந்த நிலையில் மணப்பெண்ணுக்குரிய எந்த வித களையும் இன்றி எந்நேரமும் எதையோ வெறித்தப்படி இருந்த தனது பேத்தியை யோசனையோடு‌ புருவம் சுருக்கி நோக்கினார் அகிலாண்டேஸ்வரி. அவளின் நிலை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயிற்கும் கலக்கத்தை கொடுத்தப் போதிலும் ‘பிடிக்காத கல்யாணத்துக்கு எதுக்கு சரின்னு சொல்லணும்…நல்லா அனுபவி’ என மகளின் மனமறியாமல் கடுப்புடன் நகர்ந்து விட்டார் பத்மாவதி. ஏனைய குடும்ப உறுப்பினர் என்னவென்று விசாரித்தப்போதும் ஒன்றும் கூறாமல், “இன்னும் கொஞ்ச நாளில் உங்களை விட்டு போகப்போறேனு வருத்தமாக இருக்கு…மத்தப்படி ஒண்ணுமில்லை” என வாயிற்கு வந்த காரணத்தை கூறி மழுப்பினாள்.  ஆனால் சமர் அவளின் முன் எதிர்ப்பட்டால் பார்வையாலே எரித்து சாம்பலாக்கியவளால் அன்று ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கேட்ட அவனின் கேள்வியை கிரகிக்கவே முடியவில்லை. அவனை மனமார காதலித்தப் போதிலும் மற்ற பெண்களை போல் எண்ணி தன்னிடமும் நேசமின்றி சல்லாபம் புரிந்தவனை மட்டும் மன்னித்து  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், ‘மற்ற […] - [சமர் 20](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-20/): நாட்கள் விரைந்தோடி சமி இந்தியா வந்தடைந்து பதினைந்து நாட்கள் கடந்த நிலையில் சமியிற்கும் வேறொரு ஆண்மகனிற்கும் இன்று நிச்சயதார்த்தம் என்ற அளவில் வந்து நிற்க,குடும்பத்தினர் அனைவரின் முன்பும் எதையும் காட்டிக்கொள்ளாமல் பதுமை போல் மற்றவர் கூறியதை இயந்திரத்தனமாய் செய்துக்கொண்டிருந்தாள் சம்ரிஷா ஆனந்த். அகிலாண்டேஸ்வரியின் கட்டளையின் பேரில் அனைத்தும் வேகமாக நடந்தேறிட,குடும்பத்தினர் அனைவருக்கும் இதில் விருப்பமின்றி இருந்தது. ஆனால் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் மணமகளோ அகிலாண்டேஸ்வரியின் விருப்பத்தை ஏற்பது போல் அமைதியாக இருக்கையில் அவர்களால் என்ன செய்திட முடியும். பெற்றவர்களே என்றாலும் தன் சேயின் திருமண சம்பந்தத்தை முடிவுச்செய்ய முடியாத வகையில் இருந்த தாயின் மனம் மட்டுமே மகளின் எதிர்க்கால வாழ்வை எண்ணி பதைபதைத்து கொண்டிருந்தது. பெண்ணின் தகப்பனான தனது கணவன் அவனின் மாமியாரை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்டிராதப்போது தான் மட்டுமாக எங்கனம் எதிர்த்து நிற்பது என்று இயலாமையோடு தவித்துக்கொண்டிருந்தார் அவர். தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் தான் நினைப்பதை […] - [சமர் 19](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-19/): அமெரிக்கா, சமியின் அறையில் கத்திவிட்டு வந்த தனது தோழன் சமரை பிடித்துக்கொண்ட ஜாகீர் பெருஞ்சினத்துடன் நாசிவிடைக்க “சமர் எனக்கு தெரியாமல் இங்க என்ன தான் நடக்குது?” என்று உறுமலோடு வினவ, ஏற்கனவே சமியின் மீது கோபத்தில் இருந்தவன் தற்போது நண்பனின் கேள்வியில் மேலும் கடுப்படைந்து, “இங்க ஒரு மண்ணும் நடக்கலை…நீ வழி விடு” தன்னை வழிமறித்து நின்றிருந்தவனை தள்ளிவிட்டு கட்டிலிற்கு செல்ல முயல, அவனை போகவிடாமல் தோள்பட்டை பிடித்து தன் முன்னால் நிறுத்தியவன், “சமர் ஐ நீட் ஆன்சர்…பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து எங்கேயும் போகமுடியாது…உண்மையை சொல்லு” என பிடிவாதமாக வழிமறித்து நிற்க, அதில் வெகுண்டெழுந்தவன் அவனை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி, “டேய் என் விசயத்தில் நீ தலையிடறது எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியுமில்லை” என்றான் எடுத்தெறிந்து. நண்பனின் வார்த்தையில் மனதில் அடிவாங்கினாலும் விழி மூடி திறந்து தன்னை சமாளித்தவன், “உன் விசயத்தில் தலையிடறது பிடிக்காதுனு எனக்கும் தெரியும் மச்சி…ஆனால் மத்த பொண்ணுங்ககிட்ட […] - [சமர் 18](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-18/):   அன்று இருவருக்குமிடையே நடந்த கூடலிற்கு பிறகு சமரும் சமியும் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அத்துடன் தங்களது உறவினை பற்றி பேசிக்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் இருந்தனர். ஏனெனில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்வுகள் தொடங்கவிருப்பதால் மூவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தினர். அத்தோடு தேர்விற்கு படிப்பதற்காக ஜாகீர் சமரின் அறையிலே இரவு தங்கிக்கொள்ள,சமரும் சமியும் பார்த்துக்கொள்வதற்கான சூழ்நிலை கூட அரிதாகிப்போனது. அவ்வாறு இருவரும் காணும் சூழ்நிலை வாய்த்தப் போதும் உடல் ஆரோக்கியம் குறித்த நலன் விசாரிப்புகள் மட்டுமே தொடர்ந்தது. இத்தகைய நிலையில் சமியிற்கு இந்தியாவிலிருந்து அகிலாண்டேஸ்வரிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவுடன் அந்தப்புறமிருந்து, “அம்லு நல்லாயிருக்கியா?உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே…சமர் உன்னை எதுவும் தொல்லை பண்ணானா?இரண்டு நாளா ஏன் இரண்டு பேரும் போனை எடுக்கவேயில்லை…அங்க போனவுடனே நீயும் அவனை மாதிரி பொறுப்பில்லாதவளா மாறிட்டே” என படபடவென குற்றப்பத்திரிக்கை வாசிக்க தொடங்கியரை அவசரமாய் இடைமறித்த சமி, “பாட்டி…பாட்டி…ரிலாக்ஸ்…எதுக்கு படபடனு பேசறீங்க?எதுவும் பிரச்சனையா?அங்கே எல்லாரும் […] - [சமர் 17](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-17/): காலையில் முதலில் கண்விழித்த சமி தாங்கள் இருவரும் இருக்கும் நிலையை அறிந்து நாணத்தில் சிவந்த உடலை பூந்துவாலையால் சுற்றி மறைத்தவள் தன்னவனை மலர்ந்த முறுவலுடன் இமைகள் படபடக்க ஏறிட்டு நோக்கினாள். உறக்கத்திலும் தனது வசீகரம் சிறிதும் குறையாமல் துயில் கொண்டிருந்த தன் மன்னவனை பார்த்து புன்னகைத்தவளிற்கு இரவில் இருவருக்குமிடையே நடந்தேறிய அத்தகைய கூடலில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை‌. எப்போது அவன் தன்னை அணைத்து ஆட்கொண்டானோ அப்போதே அவன் தன் மீது முழுமையான நேசம் வைத்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அந்த ஆடவனை முதலில் நாடியது தனது பெண்மை என்பதை முற்றிலும் அந்நொடி மறந்தாள்‌‌ அக்காரிகை. தன்னவனின் மார்பிலும் தன்னுடைய உடலிலும் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த செல்ல காயங்கள் அவர்களது இரவு நேர களியாட்டங்களை நினைவுறுத்தி அவளின் முகத்தை சிவக்க வைத்திட,அதேநேரம் அக்கள்வனிடம் தெரிந்த சிறு அசைவில் நாணம் மெருகேறி தேகம் சூடேறி சிவந்தது. அதனால் நெஞ்சில் தோன்றிய படபடப்புடன் அவன் வதனத்தை […] - [சமர் 16](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-16/): இந்தியாவில், அகிலாண்டேஸ்வரியின் குடும்பம் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்,வீட்டிலிருக்கும் மற்றவர்கள் கல்லூரி வரை சென்று பட்டம் பெற்ற நாகரீகமானவர்கள்.ஆனால் அகிலாண்டேஸ்வரி மட்டும் இப்போதும் கலாச்சாரம் மாறாமல் பழமையில் ஊறிப்போனவர். அத்தோடு அவர் ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதனால் தங்களது குடும்ப ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து,குடும்பத்தினர் அனைவரின் ஜாதகத்தையும் கொடுத்து பலன் பார்க்குமாறு பரிந்துரைத்தார். சிறுப்பிள்ளைகள் அனைவரையும் தான் அழைக்கும் வரையிலும் ஒரு அறையில் சென்று இருக்குமாறு கட்டளையிட்டவர்,பெரியவர்களை மட்டும் தன்னோடு இருக்குமாறு பணித்தார். அதனால் அவரும் அவரின் கணவரும் ஒரு நீள்விரிக்கையில் அமர்ந்துக் கொள்ள,நால்வர் அமரும் இருக்கையில் அவரது மகனும் மருமகனும் அமர்ந்துக் கொண்டனர். மகளும் மருமகளும் நின்றுக்கொண்டு அங்கு நடக்கவிருக்கும் கூத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்,நவ நாகரீகத்தில் படித்து வளர்ந்தவர்கள் என்பதினால் இதன் மீது அவர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆயினும் அகிலாண்டேஸ்வரியின் வார்த்தைக்கு மதிப்பளித்து அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஜோதிடர் எப்போதும் கீழே தரையில் […] - [சமர் 15](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-15/): கல்லூரியில் தேர்வு சமயம் என்பதினால் தேர்விற்கு படிப்பதற்காக விடுமுறையளித்திருக்க,ஆண்கள் இருவரும் வீட்டிற்குள்ளே புத்தகத்தினுள் புதைந்திருந்தனர். சமர் ஏனைய விசயங்களில் மேம்போக்காக இருந்தாலும் படிப்பில் என்றும் சுட்டித் தனமாகவே இருப்பான்.அதனால் புத்தகத்தில் மூழ்கியிருந்தவனை சலிப்போடு நோக்கிய ஜாகீர், “மச்சி எவ்ளோ நேரம் டா புக்கு உள்ளயே மூழ்கியிருப்பே…இப்போவே எனக்கு லெட்டர்ஸ் எல்லாம் குதிச்சு குதிச்சு டேன்ஸ் ஆடுது…இன்னும் கொஞ்சம் நேரம் இதையே பார்த்தேன் னு வைய்யு…முடியை பிச்சுக்கிட்டு ஆர்க்கிமிடீஸ் மாதிரி தெரு தெருவா ஓட வேண்டியது தான்.ஒழுங்கு மரியாதையா என்னை எங்கயாவது வெளிய கூட்டிட்டு போடா.இல்லை எனக்கு வெறிப்பிடிச்சு புக்கு எல்லாத்தையும் பரபரவென கிழிச்சிடுவேன்” என அழுகை குரலில் கூறியவனை கண்டவனிற்கும் பாவமாக இருக்க,அத்துடன் நேற்றிலிருந்து புத்தகத்திலே நுழைந்திருப்பதினால் தனக்கும் ஒரு புத்துணர்வு வேண்டும் என்பதற்காகவும், “சரி மச்சி கிளம்பு.எக்ஸாமிற்கு தான் ஒரு மாசம் இருக்கே,ஒரு டூ டேஸ் வெளிய எங்கயாவது ரிலாக்ஸ்டா போயிட்டு வருவோம்…எங்க போகலாம்…நீயே சொல்லு” முடிவை அவனிடமே விட்டான். அதில் […] - [சமர் 14](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-14/): ரஸீல் ஒரு முக்கிய வேலையாக வெளியூர் பயணம் மேற்கொண்டிருப்பதினால் சமிக்கு நாட்கள் எவ்வித சுவாரசியமின்றி நகர்ந்துக்கொண்டிருந்தது. ஜாகீர் அவ்வீட்டிற்கு வந்தால் சமரிடம் மட்டுமே உரையாடுபவன்,அத்துடன் தன் வேலை முடிந்தது போல் சமியை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவான். போகும் முன் அவனது முதுகை வெறிப்பவள் ‘காமெடி பிஸுக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்…ஓவரா சீன் போடறீயாடா பல்லாண்டு…உன்னை எங்கே எப்படி வைச்சு செய்யணும்னு எனக்கு தெரியும்…ஹூம்’ கடுப்போடு முனகியப்படி தலையை சிலுப்பிக் கொண்டு சென்றுவிடுவாள். இதற்கிடையில் சமர் சண்டையிட்டு இவ்வீட்டிலிருந்து சென்ற நாள் தொடங்கி தனக்கான உணவை சமியே தயாரிக்க பழகியிருந்தாள். அவன் மீண்டும் வீட்டிற்கு வந்தப் போதிலும் சமிக்காக உணவை தயாரிப்பதை நிறுத்தியிருந்தான்.அவனிற்கும் ஜாகீருக்கும் மட்டுமாக சமைத்து சாப்பிட்டான். முன்பு அவன் வயிற்றிற்கு ருசியாக அறுசுவை உணவு தயார் செய்து கொடுக்காதப் போதிலும் அந்த ஆரோக்கியமான உணவை மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் சமைத்து கொடுப்பான். இப்போது அந்த உணவிற்காக நாக்கு ஏங்கினாலும் தன்னை முழுமையாக […] - [சமர் 13](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-13/): அமெரிக்காவில், பிறந்தநாள் விழாவிற்கு சென்று வந்த தினத்திற்கு பிறகு சாராவினால் எவ்வித பிரச்சனையும் நிகழாததினால் சமர் பெரும் நிம்மதியடைந்தான். அத்துடன் ‘எவளுக்காகவோ பயந்து நான் ஏன் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும்?’ என ஆண்களுக்கே உரித்தான ஆணவம் தலைத்தூக்க, அன்றிலிருந்து சமரும் அவனுடைய பழைய வீட்டிலே தங்க தொடங்கினான். ஆனால் முற்றிலும் ஒரு வித்தியாசமாக சமிக்காக இத்தனை நாட்கள் விட்டுக்கொடுத்து வேறொரு அறையில் தங்கியிருந்தவன்,அன்றிலிருந்து தன்னுடைய அறையிலே வீம்பாக தங்கிக்கொண்டான். சமி தன்னுடன் அதற்காக சண்டையிட வருவாள் என ஒரு மாபெரும் யுத்தத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தவனிற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஏனெனில் தன் காதல் கொண்ட கள்வனிற்காக உயிரையே பரிசளிக்கும் பித்து பிடித்த நிலையில் இருப்பவளால் இந்த அறையை அவனிற்காக விட்டுக்கொடுக்க முடியாதா என்ன? அதனால் தனது பிடிவாதத்தை முற்றிலும் இழந்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் மற்றொரு அறையில் தங்கிக்கொண்டாள். சில இரவுகள் உறக்கம் வராமல் தவித்தாலும்,தன்னவனிற்காக அதனை பொறுத்துக்கொள்ள தயாராகினாள் இந்த […] - [சமர் 12](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-12/): சாரா கூட்டத்தினர் அனைவரின் முன்னிலையிலும் முத்தமிடுவாள் என்ற எதிர்ப்பார்த்திராதவன்,தனது கைகளில் இருந்த கோப்பையில் நிரம்பியிருந்த மதுபானம் ஒரு நொடி ஆட்டம் கண்டிட,அடுத்த செய்கை என்னவென்று அறியாமல் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தவனின் தொடையில் நறுக்கென கிள்ளிய ஜாகீர் “டேய் சமர் எருமை” என்று சிடுசிடுத்தப் பிறகே தன்னிலை அடைந்த சமர் பெண்ணவளை வெடுக்கென்று தன்னிலிருந்து பிரித்து தள்ளிவிட்டான். இந்நாட்டில் இச்செய்கை அனைத்தும் தாராளமான ஒன்று என்பதினால் பெரிதாக பதட்டமடையவில்லை என்றாலும்,இங்கு சமி இருப்பதினால் தன் பாட்டியிடம் கூறி விடுவாளோ என்று சிறு அச்சம் மனதில் ஊடுருவியது. ஆயினும் பிடிக்காத ஒருவளின் முத்தம் அருவருப்பை தர,முகத்தை சுழித்தப்படி தனது தோளை குலுக்கி பிளேசரை சரிச்செய்தவன் சாராவை புருவங்கள் நெரிய தன் கூரிய விழிகளால் வெறித்து நோக்கினான். அவன் தள்ளிவிட்டதினால் ஒரு நொடி அவளின் முகம் மாறினாலும் சட்டென்று சமாளித்து அவனின் பிளேசரை பிடித்து எழுப்பி நிறுத்தியவள் கொஞ்சலான குரலில், “சமர் வாட் ஹேப்பன்ட்?உன்னை எனக்கு ரொம்ப […] - [தேனிதழ் 34](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-34/): “நான் சொல்லுறேன் அங்கிள்” என்ற கம்பீரக்குரல் கேட்டு திரும்பி பார்க்க அங்கே யாதிஷ் நின்றிருக்க அவன் அருகில் சஞ்சுயுக்தாவும் மித்ரனின் சகோதரன் ராமும் நின்றிருந்தார்கள். நாளை வரவேண்டியவர்கள் இன்றே வந்திருக்கிறார்கள் என்று அதிர்ச்சியோடு பார்க்க அத்தோடு கூடவே வந்திருந்தவனை குழப்பத்தோடு நோக்கினார்கள். முதலில் தன்னை சமாளித்துக்கொண்ட பாட்டி “வாங்க மாப்பிள்ளை…வா சஞ்சும்மா” என்று வரவேற்றவர் புதிதாக இருந்த ராமையும் “வாப்பா” என்று வரவேற்றார். யாதிஷூம் ராமும் மட்டும் புன்னகை முகத்துடன் உள்ளே வர சஞ்சு குழம்பிய முகத்தோடு வந்தாள். அதற்குள் அடுத்தவரின் முன் தன் குடும்ப பிரச்சனையைப் பேச வேண்டாம் என்று நினைத்த செழியன் அனைவரையும் இன்முகமாகவே வரவேற்றார். மகிழாவும் தன் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்று உபசரித்தார். செழியன் முகம் உணர்ச்சிகளைத் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. மகிழாவும் கண்களில் உயிர்ப்பு இல்லாமல் அனைவரிடமும் இன்முகமாகவே உறையாடினார். சஞ்சுவிற்கு ராம் யாரென்றே தெரியவில்லை என்றாலும்,யாதிஷ் ‘இவன் என்னுடைய தோழன்…நம்மோடு நம் வீட்டிற்கு […] - [தேனிதழ் 33](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-33/): ராமினால் இப்போது தன் தமையன் கூறியதை முழுமையாக நம்பமுடியவில்லை. ஆனால் ‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் உயிரற்ற சிலை போல் அசையாது அதிர்ந்து நின்றிருந்தான். மித்ரன் அவன் சகோதரனின் தோளின் மீது கைப்போட்டு “இதை நீ நம்பவது சாத்தியம் கிடையாது தான்…ஆனால் அவள் தான் நம்முடைய அம்மு என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு” என்று சிலவற்றை காண்பிக்க இப்போது தான் ராம் என்ற சிலைக்கு உயிர் வந்தது போலும் அனைத்தையும் பார்வையிட்டவனுக்கு கண்கள் கலங்கியது. ராம் கலங்கிய விழிகளோடு “அண்ணா இது நம்ம அம்மு தான்” என்று தனது தமையனை உணர்ச்சிவசத்தோடு கட்டியணைத்தான். மித்ரனும் அவனுக்கு குறையாத வகையில் உணர்ச்சிவசப்பட்டு இருந்தான்.இருந்தும் தனது தம்பியின் முதுகை மென்மையாக வருடிக்கொடுத்தான். சிறிதுநேரம் அந்த அறையில் அமைதி மட்டுமே நிலவியது.அந்த அமைதியை ராம் கலைத்தான். மித்ரனின் அணைப்பில் இருந்து வெளிவந்து அண்ணனின் முகம் பார்த்து “அண்ணா உண்மை தெரியாமல் உங்களை தப்பா பேசிட்டேன்…அதுக்காக என்னை […] - [தேனிதழ் 32](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-32/): ஆதித்யாவின் முகத்தில் கோபத்தை எதிர்ப்பார்த்து தேன்மொழி பயத்தோடு பார்க்க ஆனால் அவனின் முகத்தில் தெரிந்ததோ வசீகர புன்னகை அதைக் கண்டு தேன்மொழி திகைத்தாள். மனதில் ‘இவன் இந்நேரம் சிடுமூஞ்சியா இல்லை இருக்கணும்…ஆனால் புன்னகை மன்னனா இருக்கானே…என்னவாக இருக்கும்??’ என்று தனது சிறு மூளைக்கு வேலைக்கொடுத்து குழம்பிக்கொண்டிருக்க, ஆனால் ஆதித்யா அதற்கு நேர் விரோதமாக புன்னகையோடு “ஹே மைனா…உன்னோட சின்ன மூளைக்கு அதிக வேலைக்கொடுக்காதே…இருக்கும் மூளையில் என்னை பத்தி மட்டும் யோசி” என்று தாபத்தோடு கூறி அவளின் இதழை சிறைச்செய்ய அடுத்த நொடி தேன்மொழி அனைத்தையும் மறந்து மந்திரத்திற்கு கட்டுண்டவள் போன்று அவனுக்கு கட்டுப்பட்டாள். அவளின் இடையில் கைக்கொடுத்து இறுக்கி அணைத்து இதழைச் சுவைத்தவனுக்கு அவளை முழுவதுமாக சுவைத்துப் பார்க்கும் எண்ண தோன்றி கட்டிலில் அவளைச் சாய்த்து அவளின் மீது படர்ந்தான். அவளின் உடையை கலைத்த வேலையில் மாலையில் அவள் மயங்கியது ஞாபகத்திற்கு வர சிறிதுநேரம் காதல் சரசத்தை ஒத்திவைத்துவிட்டு கடமை தவறாத கணவனாக […] - [தேனிதழ் 31](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-31/): இருவரும் திருமணத்தின் முதல்படியில் கால் எடுத்து வைத்த திருப்தியிலும் தங்கள் இணையை ஒருவரை ஒருவர் காதலில் வீழ்த்திய கர்வத்திலும் முகத்தில் உறைந்த புன்னகையோடு ஒருவரை ஒருவர் தழுவியப்படி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். தேன்மொழி சிறுகுழந்தைப்போல் என்னுடைய பொம்மையை யாருக்கும் தரமாட்டேன் என்பது போல் அவனோடு ஒண்டி இறுக்கி அணைத்தவாறு உறங்கிக்கொண்டிருக்க ஆதி இவள் தன்னவள் என்ற உரிமையோடு அவளை இறுக்கி அணைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான். மாலை 4 மணிக்கு மெதுவாக இமைகளைப் பிரித்த ஆதி தன் அருகில் அழகு பதுமையாக உறங்கிக்கொண்டிருக்கும் காதல் மனைவியைக் காண காண அவனுக்கு தெகிட்டவில்லை. அவளின் அழகில் கிறங்கி அவளை ருசிக்க ஆசைப்பட்டு குனிந்து முகத்தில் முத்த ஊர்வலம் நடத்தி அவளிடம் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க அதில் சிறிது உறக்கம் கலைந்த தேன்மொழி “டேய் பிளீஸ்டா…தூக்கமா வருது” என்று அவனின் கழுத்தை வளைத்து தன் அருகில் படுக்கவைக்க முனைய ஆதி முகத்திலோ எந்தவித அதிர்ச்சியும் கோபமும் இல்லாமல் புன்னகையைப் […] - [தேனிதழ் 30](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-30/): தன்னை ஒருவன் பழித்தீர்க்க நினைப்பதை அறியாமல் சிறிது இருட்டிய பிறகும் கூட குழந்தைகளை விட்டு நகராமல் இருந்தாள் தேன்மொழி.அவளை அழைத்து செல்ல ஆதியே வந்தான். அவள் அருகில் வந்த ஆதி “மைனா கிளம்பலாமா…?” என்று கேட்க, தேன்மொழி குழந்தைகளை ஏக்கத்தோடு பார்த்து “இல்லைங்க கொஞ்சநேரம்” என்று பாவமாக கூற, ஆதித்யா “உன்கூட இருந்தால் அவங்கயெல்லாம் எப்போ சாப்பிட்டு தூங்கறது…?” என்று அழுத்தமான குரலில் வினவ,தேன்மொழி “ஓ…” என்று உதட்டை குவிக்க அந்த உதடுகளில் முத்தமிட துடித்த இதழ்களை இருக்கும் இடம் பொருட்டு அமைதிக்காத்தான் ஆதி. குழந்தைக்களுக்கும் அவளை பிரிவது வருத்தமாக இருந்தது. அவர்களும் அவளும் பிரிய மனமேயில்லாமல் விடைக்கொடுத்தனர்.இருப்பினும் கிளம்பும் போது அடிக்கடி இங்கு வருமாறு வாக்கைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தனர். அவளுக்கு இதுப்போல் இல்லத்திற்கு வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று என்பதை அறிந்துக்கொண்டு அவளை இங்கு அழைத்துவந்தான் ஆதி. அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போது யாதிஷ் அனுப்பி […] - [தேனிதழ் 29](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-29/): ஆதி தனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையில் ஈடுப்பட்டிருந்தான். ஆதித்யா தனக்கு எதிரில் அமர்ந்திருந்த குகனிடம் அழுத்தமான குரலில் “குகன் லிஸ்டில் இருக்கிற அத்தனைப்பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க” என்று கண்டிப்புடன் கூற குகன் “பாஸ்” என்று அதிர்ந்தான். ஆதித்யா அதற்கு சற்றும் இளகாமல் “குகன் இந்த மாதிரி நம்பிக்கை துரோகிகள் என்னோட கம்பெனிக்கு வேணாம்…அதனால் எல்லாரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க…அட் தி சேம் டைம் அவங்களுக்கு வேற எந்த கம்பெனியிலும் வேலைக் கிடைக்கக்கூடாது” என்று கடினத்துடன் கூறினான். அதைக்கேட்டு அதிர்ச்சியுடன் குகன் அமர்ந்திருந்தான்.ஏனெனில் அன்று உதித் பற்றிய கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் இந்த நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு எதிரி நிறுவனத்தில் தங்களின் விசுவாசத்தை செலுத்தியவர்களைக் கண்டறிவதற்காக ஆதித்யா ஒரு யுக்தியைக் கையாண்டிருந்தான். அதன்மூலம் தனக்கு துரோகம் இழைக்க நினைப்பவர்களை அறிய காவல் துறையினரின் உதவியோடு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அனைவரின் கைப்பேசியும் அதன் அழைப்புகளும் ஒட்டு கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதை அறியாதவர்கள் ஆதி விரிந்த வலையில் […] - [தேனிதழ் 28](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-28/): தனது தோளின் மீது ஒரு கரம் விழுந்தவுடன் பின்னால் திரும்பி பார்க்க அங்கே ஒரு இளம் வயது ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர்.அவர்களை கண்டு தேன்மொழி அதிர்ந்து நிற்க, அந்த பெண்ணோ “தேன்மொழி உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா…நீங்க தானே எங்க கல்யாணம் நடக்க காரணமே…மறந்துட்டீங்களா…?” என்று அவளுக்கு தங்களை ஞாபகம் இல்லையோ என்று குழப்பத்தில் வினவ அதற்குள் தேன்மொழி சுதாரித்து “எனக்கு ஞாபகம் இருக்கு…தீடிர்னு உங்களைப் பார்த்த உடனே அதிர்ச்சி…வேற ஒண்ணுமில்லை…எப்படி இருக்கீங்க இரண்டு பேரும் நல்லாயிருக்கீங்களா…?” என்று சம்பிரதயமாக வினவினாள். அவர்கள் இருவரும் “நீங்க பண்ண உதவியால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தேன்மொழி…நீங்க மட்டும் அன்னைக்கு சரியா உதவி செய்யலைனா நாங்க இரண்டு பேரும் செத்துப்போயிருப்போம்” என்று சிலாகித்து கூற, தேன்மொழி பதறி “எதுக்கு சாவு அது இதுனு பேசிட்டு இருக்கீங்க…எல்லாமே நல்லதுக்கு தான்…அந்த இடத்திலே சரியா கடவுள் என்னை அனுப்பிருந்திருக்காரு…இல்லைனா என்னால் கூட உங்களுக்கு உதவி செய்திருக்கமுடியாது” என்று […] - [தேனிதழ் 27](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-27/): உணர்ச்சிகளில் பிடியில் சிக்கிய இருவரும் தங்களை மறந்து காமதேவன் விரித்த வலையில் தங்களை அறியாமல் சிக்கிக்கொண்டனர்.ஆதி இத்தனை நாள் ஏக்கத்தை ஒரே நாளில் தீர்க்க அவளுடன் போராடிக் கொண்டிருக்க தாம்பாத்யத்தைப் பற்றி பெரிதாக விளக்கமறியாத தேன்மொழி முதலில் அவனின் செயலில் தன்னை சமாளிக்க முடியாமல் திணறினாள். தாம்பத்தியத்தின் முதல் படியில் கால் எடுத்து வைத்த இருவரும் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிக்க அதற்கு தேன்மொழியும் வளைந்துக்கொடுத்தாள். ஆனால் ஆதி மேலும் முன்னேற ஆரம்பிக்கையில் அவனின் வேகத்திலும் அதனால் ஏற்பட்ட வலியிலும் அவளால் ஈடுக்கொடுக்க முடியாமல் திணற ஆரம்பித்தாள். அவளின் திணறலை உணர்ந்த ஆதி சாதாரணமாக பெண்களுக்கே உண்டான திணறல் என்று அதை ஒதுக்கி மேலும் முன்னேறப் பார்க்க அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவளின் உடல் வெடவெடத்துப் போய் கை கால் அனைத்தும் நடுங்கி கண்ணிலிருந்து கண்ணீர் பெருக ஆரம்பிக்க அதைக் கண்டு பதறிய ஆதி அதன்பிறகு தான் ‘ஏதோ சரியில்லை’ என்று புரிந்து அவளிடமிருந்து […] - [தேனிதழ் 26](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-26/): ஆதித்யா தனது அலுவலக அறையில் முக்கியமான கோப்பைப் பார்த்துக்கொண்டிருக்க அச்சமயம் கதவைத் தட்டிவிட்டு குகன் உள்ளே வந்தான். ஆதித்யா அவனை நிமிர்ந்து ‘என்ன’ என்பது போல் பார்வையால் புருவம் உயர்த்தி தோரணையாக வினவ குகன் “பாஸ் நீங்க சொன்ன மாதிரி நம்ப கம்பெனி வொர்க்கர்ஸ் எல்லாரையும் மீட்டிங் ஹாலில் அசம்பிள் பண்ணிட்டேன்…இப்போ நீங்க கிளம்பி வந்தா போதும்” என்று மரியாதையுடன் கூற ஆதித்யா புன்னகைத்தவாறு “குட் ஜாப் மிஸ்டர் குகன்…யூ மே கோ நவ்…நான் பின்னாடி வரேன்” என்று கம்பீர குரலில் கூறியவன் எழுந்து நாற்காலியில் இருந்த தனது பிளேசரை எடுத்து மாட்டினான். “ஓகே பாஸ்” என்று கூறி குழப்பத்துடன் வெளியேறினான்.  ‘எதுக்கு இந்த மீட்டிங்’ என்று கேட்கத் துடித்த நாக்கை அடக்கிக்கொண்டு வெளியேறினான்.அதையும் மீறி கேட்டாலும் தனது முதலாளியிடம் தீர்க்கமான பார்வையைத் தவிர வேறு எதுவும் வராது என்று அவனுக்கு தெரியும்.அதனால் ‘காய்கறி முத்தினால் எப்படியும் சந்தைக்கு வரதானே செய்யும்’ என்று […] - [தேனிதழ் 25](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-25/): தேன்மொழி ஆதித்யாவின் புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவாறு அழுது சிவந்த முகத்துடன் அப்படியே உறங்கிவிட்டாள். அப்போது தீடிரென்று ஒலித்த தொலைப்பேசி ஒலியில் வாரிச்சுருட்டிக்கொண்டு எழ அந்நேரம் அவனின் புகைப்பட கீழே விழ இருக்க தேன்மொழிக்கு ஓரே ஒரு நொடி மூச்சு நின்றது. ஆனால் அடுத்த நொடியில் அதை கீழே விழாமல் தாங்கிப்பிடித்தவளுக்கு அவனுக்கு உண்மையில் ஏதோ ஒன்று ஆகியது போன்று கற்பனை செய்து அந்த புகைப்படத்தில் இருப்பவனை வேகமாக வருடி கொடுத்து ஆராய்ச்சி செய்து அதனை இன்னும் நெஞ்சில் பதித்துக்கொண்டாள். திரும்பவும் அழுகை வரும் போல் இருக்க அதற்குள் இன்னொரு முறை மணியடிக்க தேன்மொழி முயன்று தன்னை சமாளித்து அதனை எடுத்து காதில் வைக்க “ஹலோ” என்றவளின் குரல் ஒலிக்க அதற்குள் அந்தப்பக்கம் சஞ்சு பதறி “ஏன்டி உன் குரல் ஒரு மாதிரி இருக்கு…என்னச்சுடி உடம்பு சரியலையா…??முன்னாடியே சொல்ல வேண்டியது தானே…??லூசு” என்று அக்கறையுடன் கடிந்துக்கொள்ள தேன்மொழிக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்றே […] - [தேனிதழ் 24](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-24/): மும்பையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஐம்பது பேருக்கும் மேற்பட்டோர் ஒரு விசாலமான அறையில் குழுமியிருக்க அவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மேசை வீற்றிருந்தது. அதில் ஐந்து பெரிய அரசாங்க அலுவலர்கள் அமர்ந்திருந்தனர். இது ஒரு அரசாங்க ஒப்பந்தத்தை யாருக்கு கொடுக்கப்போகிறோம் என்று அறிவிப்பதற்கான கூட்டம்.அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அறிவிப்பதற்கு ஐந்து நிமிடமே இருக்கும் நிலையில் அந்த அறையின் கதவு படீரென திறக்கப்பட்டது. அதன்வழியே ஆதித்யா வெள்ளை நிற கோட் சூட்டிலும் பழுப்பு நிற குளிர் கண்ணாடி அணிந்து ராஜதோரணையுடன் நடந்த வர அவனின் பின்னே அவனது உதவியாளர் குகன் கையில் கோப்புடன் நடந்து வந்தான். அவனது கம்பீரம் கலந்த ஆளுமை அறையிலிருந்து அனைவரையும் மரியாதையுடன் எழுந்து நிற்க செய்தது.மரியாதை நிமித்தமாக அவனும் சிறு புன்னகையுடன் அதை ஏற்று முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். அவன் அமர்ந்தவுடன் அனைவரும் நாற்காலியில் அமர ஆதித்யா தொடங்கலாம் […] - [தேனிதழ் 23](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-23/): தேன்மொழி மெத்தையில் ஆதித்யாவை நினைத்தப்படியே புருவம் சுருக்கி குழப்பத்துடன் அமர்ந்திருக்க “என்னங்க அம்மணி பகல் கனவா…??” என்று கிண்டல் செய்தப்படியே உள்ளே நுழைந்தாள் சஞ்சு. அவளின் குரலில் சுய உணர்வு பெற்ற தேன்மொழி சிரித்தப்படி முகத்தை மாற்றிக்கொண்டு “உன்னை விட கம்மி தான்” என்று குறும்புடன் கூறி கண்சிமிட்ட சஞ்சு அவளை செல்லமாக முறைத்தாள். தேன்மொழி “என்னடி ஒவரா முறைக்கிறே…பிச்சுப்புடுவேன் பிச்சு” என்று உதட்டை சுழித்து விரல்நீட்டி எச்சரிக்க,சஞ்சு அவளை நன்றாகவே முறைத்து “என்னடி வாயும் கையும் நீளுது…புதுசா இருக்கே…??” என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவ, தேன்மொழி நாக்கை துருத்தி அழகு காட்டியப்படி “போடி ஹிட்லர்…போய் எங்க அண்ணாவை கவனி போ போ” என்று அலட்சியமாக கூற, சஞ்சு கடுப்பாகி “எல்லாம் என் நேரம்” என்று தலையில் அடித்துக்கொண்டு “ஆதி இருக்கிற திமிரா…?எப்படியும் அங்க சுத்தி இங்க சுத்தி ஃப்ரெண்டுனு என்கிட்ட தான் வரணும்…அப்போ பார்த்துக்கிறேன்டி” என்றவள் இடுப்பில் கைவைத்தப்படி அவளை […] - [தேனிதழ் 22](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-22/): நல்லதொரு முடிவெடுத்த கையோடு ஆதித்யா மெதுவாக கண்ணயர்ந்தான்.ஆதி செய்த கை வைத்தியத்தினால் அவளால் காலை வலியில்லாமல் நன்றாக அசைக்க முடிந்தது.அதனால் தேன்மொழியும் திருப்தியோடு இமை மூடினாள்.ஆனால் நள்ளிரவு 1 மணி அளவில் தேன்மொழியின் வயிற்றிலிருந்து டிங் டிங் என்று அலாரம் அடித்தது. அதற்கு காரணம் ஆதியைப் பற்றிய சிந்தனையில் இருந்தவள் தான் இரவு உணவு உண்ணவில்லை என்பதை மறந்துவிட்டாள்.ஆனால் அவளின் வயிற்றிற்கு அது புரியுமா…??ஆதியும் அவளும் உண்டு இருப்பாள் என்று நினைத்துக்கொண்டான். பசி நன்றாக வயிற்றை கிள்ள தேன்மொழி முடியாமல் கட்டிலில் புரண்டு படுத்தாள். ஆதி அவளின் அசைவில் சற்றே உறக்கம் கலைந்து புரண்டு தேன்மொழியின் பக்கம் திரும்பி தனது மீதி தூக்கத்தைத் தொடர்ந்தான். தேன்மொழியும் அப்போது தான் அவனின் பக்கம் திரும்பிப்படுத்திருந்தாள். அவனும் அவளின் பக்கம் திரும்பிப்படுத்தவுடன் அதில் திகைத்து அவனின் முகத்தை விழி விரிய பார்த்திருந்தாள். இருவரும் ஒரே தலையணையில் தலையை வைத்திருக்க இருவரின்  முகமும் அருகருகே நெருங்கியிருந்தது.இரு ஜோடி […] - [தேனிதழ் 21](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-21/): தீடிரென்று திறக்கப்பட்ட கதவின் ஒலியில் தேன்மொழிக்கு விலுக்கென்று தூக்கிவாரிப்போட கையிலிருந்து பால் சொம்பு கையிலிருந்து நழுவியது. அதை அசால்ட்டாக பிடித்த ஆதித்யா “ஹேய் ரிக்லெக்ஸ் நான் தான்…ப்ர்ஸ்ட் கம் இன்சைடு” என்று கூறி அவளை உள்ளே அழைத்தான். அவன் பின்னே தலைக்குனிந்தவாறு உள்ளே நுழைந்தவள் அறையின் அலங்காரத்தைக் கண்டு விழிகளை பெரிதாக விரித்தாள்.அவளின் முன்னே உள்ளே வந்த ஆதி அங்கிருந்த நீள் விரிக்கையில் அமர்ந்தான். அறையில் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் தூவி அலங்காரம் செய்திருக்க மேலும் சில இதழ்களைக் கொண்டு கட்டிலில் இதய வடிவில் தூவி இருந்தனர்.அத்தோடு பல வண்ணங்கள் கலந்த பூவில் கட்டிலின் தலை பகுதி மற்றும் கால் பகுதி முழுவதும் பூச்செண்டு போல் செய்து அலங்கரித்திருந்தனர்.அத்தோடு ஆங்காங்கே சில மெழுகுவர்த்திகள் ஒளிர்ந்துக்கொண்டிருக்க மொத்தத்தில் ஒரு மோன நிலை ஏற்பட்டது. இரவின் நிசப்தம் காதலின் அடையாளமான சிவப்பு ரோஜா இதழ்களைக்கொண்டு அலங்கரித்த அறை,அத்தோடு இருளை கிழித்துக்கொண்டு ஒளிரும் மெழுகுவர்த்தி அடுத்து […] - [தேனிதழ் 20](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-20/): ஆதித்யா ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு சென்று உணவு உண்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்க இவள் உறங்குவதைக் கண்டு காரை நேரே வீட்டிற்கு திருப்பினான். வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவுடன் கதவு திறக்க வந்த வேலையாளை சத்தம் செய்யாமல் பின் இருக்கும் பொருட்களை வீட்டினுள் கொண்டு செல்ல கட்டளையிட்டவனுக்கு அங்கே சீட்டில் ஒடுங்கி சிறுபிள்ளை போல் அழகாக உறங்கும் தன் மனைவியை எழுப்ப மனவரவில்லை. அவள் உறங்குவதை மிகவும் ரசித்தவாறு தனது கைப்பேசியை எடுத்து தனது பணியாளர் ஜானிற்கு அழைத்து ‘இன்று வரமுடியாததால் நாளை காலை கண்டிப்பாக வருவதாகவும்…அதுவரை அவனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும்’ செய்தி அனுப்பிவிட்டு அவள் விழிப்பதற்காக காத்திருந்தான். ஒருவரின் உண்மையான முகத்தை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் உறங்கும் போது இருக்கும் அவர்களின் முகத்தை வைத்து கண்டறியலாம் என்று கூறுவார்கள். ஆதித்யா அவ்வாறு எண்ணியவாறு அவளின் முகத்தை ஆராய,அதில் அவளின் முகம் குழந்தை தனமாகவும் உதட்டில் புன்னகையோடும் உறங்குவதை கண்டவனுக்கு அவளின் […] - [தேனிதழ் 19](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-19/): அடுத்து ஆதித்யா நகைக்கடைக்கு அழைத்து செல்ல தேன்மொழியின் முகத்தில் தயக்கம் தெரிய அதைக்கண்டு கொண்டவன் அவளை கைப்பிடித்து உள் அழைத்து சென்றான். அங்கேயும் அவனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.அப்போது தான் தேன்மொழிக்கு ஒன்று புரிந்தது தன் கணவன் எந்த அளவிற்கு செல்வத்திலும் புகழிலும் பெரியவன் என்பது…!! அத்தோடு அவனுக்கும் தனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதும் விளங்கியது. உடனே அவளின் முகம் வேதனையில் கசங்கி சுருங்க ‘அவரோடு அழகிற்கும் அந்தஸ்திற்கும் கொஞ்சம் கூட பொறுத்தமே இல்லாத என்னை எப்படி ஏத்துபாரு…கண்டிப்பாக ஏத்துக்க மாட்டாரு…எவ்ளோ சீக்கிரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் அவரை விட்டு பிரிந்துப்போகணும்…இதற்கு மேலாவது நல்லதொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துக்கொள்ளட்டும்’ என்று நினைத்தவளின் மனது வலிக்க செய்தது. அவள் மனதின் வலி முகத்தில் எதிரொளித்ததோ என்னவோ ஆதித்யா அவளின் கைகளை அழுத்தமாகப் பிடித்தப்படி “என்னாச்சு மைனா…??” என்று கனிவுடன் வினவ இப்படியொரு கனிவை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்காதவளுக்கு மனது இனித்தது.இப்போது ஆதித்யா […] - [தேனிதழ் 18](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-18/): தேன்மொழியை கீழே இறங்க கூறிவிட்டு காரை விட்டு வெளியே வந்த ஆதித்யாவிற்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. எந்தவொரு பெண்ணையும் தவறான பார்வை கூட பார்க்காத நான் இவளிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்துக்கொள்கிறேன்…?? என்ற கேள்வி முதன்முறையாக ஆதித்யாவின் மனதில் தோன்றியது. அவளின் அழகை கண்டு மயங்கினேனா…??என்றால் இவளை விட அழகான பெண்களை உன் வாழ்க்கையில் வந்திருக்கீறார்கள்… அதனால் நிச்சியமாக அழகைக் கண்டு இவள் பால் நீ ஈர்க்கவில்லை என்று அவனது மனசாட்சி பதில் அளித்தது. பின்பு மனைவி என்ற உரிமையினால் இவ்வாறு நடந்துக்கொள்கிறேனா…?? என்று கேட்டால் இதற்கு முன்பு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி இவள் தான் உன் மனைவி என்று தன் தாய் கூறுகையில் ஆதித்யாவிற்கு இதுப்போல் எந்தவித சலனமேதும் ஏற்படவில்லையே…?? ஏன் அவளின் மீது சிறு ஆர்வம் கூட தனக்கில்லை என்று தெளிவாக தெரிந்தது. பின்பு எதனால் அவளிடம் இவ்வாறு நடந்துக்கொள்கிறேன் என்ற கேள்வி அவன் மனதை […] - [தேனிதழ் 17](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): தன்னை கண்டு அஞ்சிய மனைவியை பார்த்து ஆதித்யாவிற்கு வழக்கத்திற்கு மாறாக கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.ஆதித்யா வந்த சிரிப்பை யாருக்கும் காண்பிக்காமல் இதழுக்கடையில் மறைந்தான். ஆதித்யா சில நாட்களாக தேன்மொழியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறான்.அவன் வாழ்க்கையில் சந்தித்த மற்றப் பெண்களைப் போல் அல்லாமல் தேன்மொழி தனித்து தெரிவது போல் தோன்றியது.எந்த வித விசயத்திற்காகவும் கோபம் கொள்ளாமல்,எப்போதும் முகத்தில் குழந்தைத்தனமான புன்னகையோடு தனது தாயை அக்கறையோடும் உண்மையான அன்போடும் கவனித்துக்கொண்டு,குடும்பத்தை பக்குவமாக பார்த்துக்கொள்ளும் அவளின் திறமையும்,வேலைக்காரர்களோடு எந்த வித பேதமின்றி சரிசமமாக பேசும் அவளின் நல்லக்குணம் ஆதித்யாவை மிகவும் கவர்ந்தது.ஆனால் அதை அவளிடம் ஒரு நாளும் வெளிப்படுத்தியதில்லை.அதற்காக அவளை தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள தயாரா என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வரும். சில வருடங்களுக்கு பிறகு தனது தாய் தங்கை பாட்டியை தவிர வேறொரு பெண்ணை நல்லவிதமாக எண்ணி பழக்கமில்லாத ஆதித்யா முதன்முறையாக தன்னை நம்பி மனைவியாக வந்த தேன்மொழியை […] - [தேனிதழ் 16](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): நாட்கள் அதன்போக்கில் சென்றுக்கொண்டிருந்தது.இந்த இரண்டு வாரத்திற்குள் தேன்மொழியின் கால் வீக்கம் குறைந்து பழையப்படி நன்றாகியது.மகிழாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.செவிலிய பெண் துணைக்கு வைக்கிறேன் என்று கூறியும் அவரை வேண்டாமென்று தடுத்துவிட்டு தேன்மொழியே அவரை நன்றாக கவனித்துக்கொண்டாள்.அவளின் கவனிப்பில் மகிழா சிறிது சிறிதாக உடல்நிலை தேறினார். சஞ்சுவை யாதிஷ் அவன் வீட்டிற்கு அழைத்து சென்று நன்றாக பார்த்துக்கொண்டிருக்கிறான்.சஞ்சுயுக்தா இப்போது வேலைக்கு செல்வதில்லை.அதுவே யாதிஷின் மனதில் நல்லதொரு மாற்றத்தை விளைவித்திருந்தது.ஆதித்யா மற்றும் தேன்மொழியின் உறவில் எந்தவித முன்னேற்றமின்றி அதேப்போல் சென்று கொண்டிருந்தது.ஆனால் ஆதித்யா இப்போது தேன்மொழியை முழுவதுமாக தவிர்க்காமல் அவளோடு ஒன்றிரண்டு வார்த்தை உரையாட ஆரம்பித்திருந்தான்.அதுவே அவளுக்கு மகிழ்ச்சியை அள்ளிதந்தது. அப்போதும் தேன்மொழி ஆதித்யாவைப் பிரிந்துப்போக எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள்.மகிழாவிற்கு இப்படியானதிற்கு தாம் தான் காரணம் என்ற குற்றவுணர்வில் தவித்தவள் அவருக்கு உடல்நிலை சரியானதிற்கு பிறகு பிரிந்து செல்லவேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.ஆனால் அதை வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் கலகலப்பாக பேசி சிரித்தப்படி வலம் […] - [தேனிதழ் 15](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): தனது உதவியாளனிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்குள் சென்ற ஆதித்யா நிமிர்ந்த நடையுடன் கண்களில் குளிர்கண்ணாடி அணிந்து உதட்டில் அழுத்தமான புன்னகையுடன் தனது கால்சட்டை பையில் கைவிட்டப்படி தோரணையாக நடந்து சென்றவனின் கம்பீரத்தையும் அழகையும் பார்க்க பார்க்க அங்கிருந்தவர்களுக்கு தெகிட்டவில்லை. ஆனால் அவனின் கண்களினுள் இருந்த அலைப்புறதலை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காகவே இந்த குளிர்கண்ணாடியை அணிந்திருந்தான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. அவனின் அலைப்புறதலுக்கு காரணம் அவனின் தாயிற்கும் தங்கைக்கும் நேற்று நடந்த விபத்தும் அத்தோடு தன் மனைவிக்கு ஏற்பட இருந்த ஆபத்தும் தான்.இரண்டு நிகழ்விற்கும் காரணம் ஒருவனே என்பது மட்டும் அவன் அறிந்திருந்தான்.ஆனால் என்ன முயன்றும் அந்த ஒருவனை அவனால் கண்டறியமுடியவில்லை என்ற கோபமும் தன் தொழில் சம்பந்தப்பட்ட எதிரிகளால் கூட இது நடந்திருக்கலாம் என்றும் அவனின் மனதினுள் பல்வேறு சிந்தனைகளும் ஓடிக்கொண்டிருந்தது. இத்தனை நாட்கள் தன் தாயின் மீது எத்தகைய கோபத்தையும் மறைக்காமல் வெளிப்படையாக காட்டியிருப்பினும் அவரின் பாசத்திலும் அவர் காட்டிய […] - [தேனிதழ் 14](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): தேன்மொழியை உறங்க வைத்தவுடன் வெளியே வந்த ஆதித்யா நேரே நீள்விரிக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மருத்தவரிடம் சென்று “ஆன்ட்டி அவளுக்கு என்ன ஊசிப்போட்டீங்க…??” என்று அடக்கப்பட்ட கோபத்தில் வினவினான். அவன் கோபத்தில் சிறிது திணறினாலும் “வலியில்லாமல் நல்லா தூங்க தான் ஊசிப்போட்டேன் மௌரி…ஒய் எனிதிங் பிரப்ளம்…??” என்று குழப்பத்துடன் வினவியவுடன், ஆதித்யா அவரை சந்தேகமாக ஒரு பார்வைப் பார்க்க அதில் சுதாரித்த பாட்டி “ஆதி உங்க அப்பா போன் பண்ணான்…மகிம்மா கண்ணை திறந்துட்டாங்கனு சொன்னான்…அதனால் ஆஸ்பத்திரி போயிட்டு அப்புறம் ஆபிஸ் போப்பா” என்று பேச்சை மாற்றினார். ஆதித்யா இப்போது அவரை நன்றாக முறைத்துப் பார்க்கவும் பாட்டி ‘சரியான விடாகண்டன்…’ என்று தனது பேரனை மனதில் வைதுக்கொண்டு இருந்தார். அதற்குள் மருத்துவரே “ஓகே அம்மா…நான் கிளம்பறேன் டைமாச்சு…மௌரி பை ப்பா…அன்ட் ஒன் மோர் இன்பர்மேஷன்…மௌரி இந்த சீட்டிலிருக்கும் ஆயில்மென்ட் வாங்கி உன் வைப் காலில் தடவி விடு…சீக்கிரம் வீக்கம் குறையும்” என்று அவனின் கண்ணைப் பார்க்காமல் […] - [தேனிதழ் 13](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): ஆதித்யா அவளின் வருகைக்காக வெளியே காத்திருக்க அவனை வெகுநேரம் காக்க வைக்க விரும்பாமல் தேன்மொழி விரைவாக தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்துவிட்டாள்.இல்லை அவன் மறுபடியும் தன்னை தூக்குவான் என்ற ஆசையில் ஓடி வந்துவிட்டளா என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம். இருவரும் மற்றவரிடம் தன்னுடைய உணர்ச்சிகளைக் காட்டி அடுத்தவரின் முன்னிலையில் அவமானப்படக்கூடாது என்று எண்ணினார்கள்.அதன்பலனாய இப்போது இருவரும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.அதன்பலனாய் இருவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்காமல் பாட்டியைப் பார்த்தவாறு இருந்தனர்.ஆனால் முன்னர் போல் எந்தவித தயக்கமுமின்றி அவனின் கழுத்தை வளைத்துப்பிடித்துக்கொண்டாள். ஆதித்யாவிற்கு அது தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொண்டான். ஆதித்யா பாதுகாப்பாக அவளை மெத்தையில் இறக்கிவிட அந்தநேரம் மருத்துவர் உள்ளே நுழைந்தார். அவர் புன்னகை முகமாகவே “ஹாய் மௌரி…ஹவ் ஆர் யூ…??” என்று ஆர்வத்துடன் வினவினார். ஆதியும் பதிலுக்கு புன்னகைத்தவாறு “யா ஐயம் ஃபைன் ஆன்ட்டி…வாட் அபவுட் யூ…??” என்று கம்பீரத்துடன் வினவினான். அதற்கு அவர் […] - [தேனிதழ் 12](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): நள்ளிரவு 1 மணி அளவில் மருத்துவமனையில் கண்விழித்த மகிழாவிற்கு தலையில் அடிப்பட்டதினால் வலி ஏற்பட “ஸ்ஆஆ” என்று முனங்க அந்த சத்தத்தில் கண்விழித்த செழியன் மகிழாவின் தலையை தடவியவாறு “என்னடா மொசக்குட்டி…என்ன பண்ணது…டாக்டரை கூப்பிடவா…??” என்று பதறித் துடித்தார். அவரின் கண்ணின் ஓரம் கண்ணீரில் பளப்பளப்பதைக் கண்ட மகிழாவிற்கு இதயத்தில் சுரீரென வலித்தது.இத்தனை வருடங்கள் யாருக்கும் அஞ்சாமல் தொழிலில் கொடிக்கட்டி பறந்த தனது கணவன்…தன்னை பெற்றவரின் இறப்பை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட தனது கணவன் இப்போது தனக்கு ஒன்று என்றால் கலங்குவதை எண்ணி அவருக்கு கணவன் தன்மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி பூரிப்பாக இருந்தது. இருந்தும் எதற்கும் கலங்காத தன் கணவனை தான் வருத்தச்செய்ததை எண்ணி அவருக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை அவர் எதற்கும் கலங்கக்கூடாது அதுவும் எனக்காக’ என்று நினைத்து அவரின் பிராணவாயு முகமூடியை எடுத்துவிட்டு அதே கையால் செழியனின் கையைப் பிடித்து அழுத்தி இன்னொரு கையால் அருகில் வர கோரியவர் […] - [தேனிதழ் 11](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): ஆதித்யாவின் மீதுள்ள கோபத்தில் காற்றடிக்கும் வேகத்தில் அவனுக்கு தான் பேசுவது கேட்காது என்ற துணிச்சலில் சற்று சத்தமாகவே முணுமுணுத்தவளின் வார்த்தைகள் அவனின் காதிலும் விழுந்து தொலைத்தது தான் அந்தோ பரிதாபம். அவள் முணுமுணுத்த வார்த்தைகள் அவளின் காதிலும் தெளிவாக விழ ‘இது எப்படி சாத்தியம்’ என்று திரும்பி பார்த்தவளுக்கு காரின் சன்னல் கதவு முடியிருக்க கார் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலே அவளுக்கு எல்லாம் தெளிவாக புலப்பட்டுவிட்டது. ‘இன்னைக்கு நாம் தொலைஞ்சோம்’ என்று திருதிருவென்று முழித்தவாறு திரும்பி தனது செல்ல நரகாசூரனைப் பார்த்தாள். உண்மையாகவே ஆதித்யா நரகாசூரன் அவதாரம் எடுத்து தனது காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தி அவளை தன் பார்வையாலே எரித்துக்கொண்டிருந்தான். அவள் அவனை அழுதுவிடுவதுப்போல் பாவமாக பார்த்துக்கொண்டே தனது புடவை முந்தானையை தவிப்புடன் கைகளால் முறுக்கிக்கொண்டிருக்கவும்,அதைக் கண்டு ஆதித்யாவின் முகம் கடுமையிலிருந்து மென்மையை தத்தெடுத்தது. அதில் தேன்மொழி சிறிது பயம் நீங்கி அவனிடம் “அது என் பிரண்ட் ஒருத்தரை திட்டிட்டு […] - [தேனிதழ் 10](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): மகிழாவிற்கு அதிக மின்னதிர்ச்சி கொடுத்து இதயத்துடிப்பை மீண்டு வரவைக்க மருத்துவர்கள் போராட,விடாமல் முயற்சி செய்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றவுடன் தலைமை மருத்துவர் அங்கிருந்து மற்ற உதவியாளரிடம் கட்டைவிரலை கீழே காட்டி ‘இனிமேல் இவர் இந்த உலகத்தில் இல்லை’ என்று சொல்லாமல் சைகையில் உணர்த்திவிட்டு தனது தலைப்பாகையை கழற்றினார். அதேநேரம் செழியனின் மனதினுள் பெரும் பூகம்பமே நிகழ்ந்துக்கொண்டிருக்க எந்த நேரமும் சுனாமி அலைகள் ஆழிப்பேரலைகளாக பொங்கி வெளியில் பிரவேசமெடுக்க காத்திருந்தது.எதற்கும் கலங்காத அந்த ஆறடி உயர நடுத்தரவயது ஆண் முதன்முறையாக தன் மனைவியை எண்ணி கலங்கியவாறு ‘இதுவரைக்கும் நான் உன்னை ஒண்ணும் கேட்டதில்லை ஆண்டவா…ஆனால் முதன்முறையாக உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன்…என்னோட மகிழா எனக்கு வேணும்…அவளை எப்படியாவது திருப்பிக்கொடுத்திடு…அவள் இல்லாத இந்த உலகத்தை நினைத்து பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு” என்றுமில்லாமல் இன்று முதன்முறையாக தனது அன்பு மனைவிக்காக கடவுளிடம் சரணடைந்தார்.செழியன் மருத்துவமனை வாசலில் தனது காரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வாயிலில் இறங்கி மேலே […] - [தேனிதழ் 9](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): ஒரு மணி நேரத்திற்கு முன்பு, “ஆய பாயி சின்சின்சின்சா…ஆய பாயி சின்சின்சின்சா” என்று ஒரு அர்த்தமற்ற பாடலை சின்ன குழந்தைகள் போல் பாடிக்கொண்டே ஒரு ஒரு படியாக குதித்து இறங்கிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. அவள் பாடியதைக் கேட்டு மகிழாவும் ஆதித்யாவின் பாட்டி மல்லிகாவும் தேன்மொழியை நமுட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.அவர்கள் இடத்தில் வேறு ஒருவராக இருந்திருந்தால் தேன்மொழியை ‘கல்யாணமான பொண்ணு இப்படியா ஆடிட்டு இருக்கிறது…கொஞ்சம் கூட அறிவில்லை’ என்று வசைப்பாடியிருப்பார்கள்.ஆனால் இவர்கள் அவளின் சம்பாஷணைகளை ரசித்துக்கொண்டிருந்தனர். பாடிக்கொண்டே கீழிறங்கி வந்தவள் வரவேற்பறையில் இருவரும் அவளை நமுட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து சடாரென்று பிரேக் போட்டது போல் அங்கே நின்று அசடுவழிந்தவாறு “சும்மா பாடினேன் ஆன்ட்டி” என்று கூறி நாக்கை கடித்தாள். இப்பொழுது இருவரும் சத்தமாகவே சிரித்தனர்.அதில் இன்னும் அசடுவழிய நெளிந்தவாறு “நேத்து ஒரு பேபி இதுமாதிரிப்பாடிட்டு இருந்துச்சு…அது இன்னைக்கு ஞாபகம் வந்திடுச்சா…அதான் பாடிட்டேன்…ஹிஹிஹி” என்று அவளே காரணத்தையும் கூறி சிரித்தாள். மகிழா அவளின் சைகையை ரசித்து […] - [தேனிதழ் 8](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): தேன்மொழி ஆதித்யா தன்னை நீ இந்த வீட்டில் வேலைச்செய்யும் வேலைக்காரி என்று நேரடியாக கூறாமல் மறைமுக கூறியதை எண்ணி சிறிது மனதாங்கல் இருப்பினும் மற்றவர் முன் தன் மனவேதனையை வெளிக்காட்டாமல் தனக்குள் வைத்து புழுங்கினாள். தேன்மொழி எப்போதும் இப்படி தான் தனக்கு ஒரு துன்பம் என்றால் அதற்கு தானும் வருத்தப்பட்டு மற்றவரையும் வருத்தப்படுத்த விரும்பமாட்டாள்.மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொண்டு தன் ஆழ்மனதிற்குள் அந்த துன்பத்தைப் புதைத்துவிட்டு மகிழ்ச்சியோடு இருப்பது போல் காட்டிக்கொள்வாள்.அப்படி செய்வது நல்லவிதமாக தெரிந்தாலும் பின்னால் அது ஒரு மன அழுத்தமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதேபோல் தேன்மொழி தன் மனதில் வலுக்கட்டயமாக புதைத்து வைத்த பிரச்சனைகள் ஒரு நாள் சீறிக்கொண்டு வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது.எந்தவொரு விசயத்தையும் தனக்குள் பூட்டி வைக்காமல் அதை மாற்றவர்களிடம் பகிர்ந்துக்கொண்டால் அந்த பிரச்சனைக்கான முடிவுகள் கிடைக்கும் அத்தோடு மன அழுத்தமில்லாமல் வாழ்க்கையில் நல்விதமாக பயணிக்கவும் இது வழிவகுக்கின்றது.அதனால் தன்னுடைய துன்பங்களை மிகவும் வேண்டிய ஒரு நபரிடம் பகிர்ந்துக்கொண்டால் […] - [தேனிதழ் 7](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): “அழகனாய் வந்த அசுரனே …      ஆணவனாய் நின்றவனே…கன்னியின் கனவினிலே        விரகமெனும் நரகைக்  காட்டிய வனே….”                                                                                தன் கனவு நாயகன் யார் என்பதை அறிந்து கொண்ட நொடியில் இருந்து தேன்மொழி இது நல்லதா கெட்டதா என்ற ரீதியில் யோசித்து இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள். அதன்பிறகு அவள் எங்கு தூங்குவது அன்றைய இரவு அவளுக்கு சிவராத்திரியாக தான் இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் தனது செல்ல நரகாசூரனைப் பற்றி யோசித்தாள். இத்தனை நாள் தன் கனவில் வந்த நாயகனே தனக்கு கணவனாக வந்திருக்கிறான் என்பதை அவளால் […] - [தேனிதழ் 6](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): தாலிக்கட்டியவுடன் இருவரையும் ஏழு முறை அக்னியை வலம் வர கூறியவுடன் இருவரும் எழுந்து கரம் கோர்க்காமலே வலம் வர நகர்ந்தவேளையில் அய்யர் “கையைக் கோர்த்து தான் இந்த சடங்கு செய்யணும் அம்பி” என்றவுடன் ஆதித்யாவிற்கு மனம் முழுவதும் எரிச்சல் மூண்டது. தேன்மொழிக்கும் அதேபோல் மனதில் ‘இந்த பேதி சாரி ஆதி கையை வேறே பிடிக்கணுமா…??’ என்று நினைத்து முகத்தை சுருக்கினாள். ‘ஆதித்யா இவ்வளவு தூரம் செய்ததே பெருசு…இப்போது போய் இதைச் சொன்னால் திட்டுவனே’ என்று மனம் பதற நின்றிருந்தார் மகிழா.அவரது கணவன் ஏதேனும் கூறுவறா என்று எண்ணி மகிழா அவரை நோக்கினார்.அவரும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாகவே இருந்தார்.இது வேலைக்காகாது என்று நினைத்தவர் சஞ்சுயுக்தாவைத் திரும்பி பார்த்தார். அவள் தனது தாயின் தவிப்பைக் கண்டு ‘என்னம்மா’ என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தி வினவினாள். மகிழா தவிப்புடனே இருவரையும் கண்களால் காட்டி ‘நீ ஏதாவது செய்யேன்’ என்பது போல் இரைஞ்சினார். அவரின் […] - [தேனிதழ் 5](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): ஆதித்யாவின் திருமணத்திற்காக அனைவரும் கூடியிருந்த சமயத்தில் திருமண மேடையின் அருகே ஒரே சலசலப்பாக இருந்தது. திருமண மண்டபத்தில் இருந்த அனைவரின் பார்வையும் மணமேடையிலே இருந்தது.அங்கே செழியனும் கல்யாண பெண்ணின் தந்தையும் ஏதோ தீவரவிவாதத்தில் ஈடுப்பட்டிருக்க அவர்களின் அருகில் மகிழாவும் அந்தப்பக்கம் பெண்ணின் தாயும் கவலை அப்பிய முகத்துடன் நின்றிருக்க அருகில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டைக்கு தயாராவது போல் நின்றிருந்தனர். யாதிஷ் தான் அவர்களின் நடுவில் சென்று “அங்கிள் ஒரு நிமிஷம் இருங்க…எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க…ரூம் குள்ள போய் பேசிக்கலாம்” என்று உட்புறமாக கைக்காட்டினான். இது ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் சொந்த மண்டபம் என்பதால் அனைவரும் தயாராகுவதற்கு தனித்தனி அறைகள் அந்த நட்சத்திர விடுதியில் ஒதுக்கியிருந்தார்கள். அதில் ஒரு அறைக்குள் சென்று பேசலாம் என்று தான் யாதிஷ் அவர்களை அழைத்தான். அப்போது தான் அங்கு இருக்கும் அனைவருக்கும் நாம் காட்சிப்பொருளாக இருக்கிறோம் என்று உறைக்க யாதிஷின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்த அறைக்குள் சென்று […] - [தேனிதழ் 4](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): மும்பையில் உள்ள பெருநகர பகுதியில் ஒன்றான அந்தேரியில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்திற்கு வெளியே ஒன்றோடு ஒன்று இறுக்கி கட்டப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களால் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அதேபோல் மண்டபத்திற்கு உள்ளே நடுநாயகமாக வட்ட வடிவிலான வளையத்தை சுற்றிலும் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த பூச்செண்டுகளில் அலங்கரிக்கப்பட்டுயிருக்க,அந்த வளையத்தை தாங்கி நிறுத்தியப்படி மூன்று தங்க நிற தூண்கள் நின்றிருந்தது.அந்த தூண்களில் அங்கங்கே அதே சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களிலான பூங்கொத்தை வைத்து கலைநயத்தோடு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மூன்று தூண்களுக்கு இடையே சிறிய மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருக்க அந்த மேடையின் நடுவே ஒரு ஓமக்குண்டம் இருந்தது. அந்த மணமேடைக்கு முன் ஒரு 1000 பேர் அமரும் வகையில் நாற்காலியில் போடப்பட்டிருந்தது.அந்த நாற்காலியை வெள்ளை நிற துணியால் மூடப்பட்டு அந்த நாற்காலியில் மேல் பாகத்தின் நடுப்பகுதியில் தங்க நிற ரிப்பன் கட்டப்பட்டிருந்தது.மேலும் அந்த மண்டபம் […] - [தேனிதழ் 3](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): இந்தியாவின் பெருநகரப்பகுதியான மும்பையில் பணக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் ஒன்றான அல்ட்மென்ட் ரோடில் ஒரு வெள்ளை நிற பங்களா உயர்ந்து நின்றிருந்தது. பணக்காரர்கள் பயன்படுத்தும் இருவர் மட்டுமே அமரும் புதிதாக வடிவமைத்து வெளிவந்த கோயின்ஸ்செக் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் 120 கி.மீ வேகத்தில் வந்து அந்த பங்களாவின் முன் கீறிச்சிட்டு நின்றது. கார் நின்றவுடன் அதிலிருந்து ஒரு ஆறு அடி உயர ஆண்மகன் கையில் பெட்டியோடு இறங்கி,கதவு உடைந்து கையோடு வந்துவிடும் அளவு கதவை அறைந்து சாற்றினான்.அவன் அறைந்து சாற்றிய விதத்திலேயே தெரிந்தது அவன் கோபத்தின் அளவு. அவன் ஆதித்யா மௌரியன் 28 வயது இளைஞன்,அதேசமயம் இளம் தொழிலதிபர்களில் ஒருவன்.ஆதித்யா எப்போதும் ஒரு ஆளுமையுடனும் விறைப்பாகவும் தான் தனது வேலையாட்களிடமும் மற்றவர்களிடமும் பேசுவான்.அவன் சிறிது மென்மையாக பேசும் ஒரு நபர் என்றால் அது அவனது தாயிடம் மட்டுமே. முன்பெல்லாம் தொழில் வட்டாரத்தில் செழியனிடம் தொழிலில் போட்டியிட அனைவரும் பயப்படுவார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா […] - [தேனிதழ் 2](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): ஆதித்யா அரங்கத்தை விட்டு வெளியேறியவுடன் தனது கைப்பேசி மணி அடித்ததும் அதை எடுத்து பார்த்தான். அதில் தன் தாயின் எண் ஒளிரவும் உதட்டில் சிறு புன்னகையுடன் எடுத்து காதில் வைத்தான். அந்தப்பக்கம் மகிழா எடுத்தவுடனே தவிப்புடன் “ஆதி மேட்ச் முடிஞ்சாதா…??உனக்கு ஒண்ணும் அடிப்படலையே…??நல்லா இருக்க தானே…??கிளம்பிட்டியா…??எப்போ இங்க வர…??சாப்பிட்டியா…??சாப்பிட்டு கிளம்புப்பா…??” என படபடவென அனைத்து கேள்விகளும் சரமாரியாக வந்து விழுந்தன. ஆதித்யாவிற்கு பொறுமை என்பது துளியும் கிடையாது.எப்போதும் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கும் ரகம்.ஆனால் இன்று தன்னை பேசவிடாமல் தன் தாயே பேசிக்கொண்டிருப்பதை கேட்டு,கோபத்திற்கு மாறாக ஒரு கனிவே வந்தது.ஏனெனில் இவையனைத்தும் தாய் தன் மேல் வைத்திருக்கும் அபரீவிதமான அன்பிற்கு இலக்கணமல்லவா…?? அதை நினைத்து புன்னகைத்தவாறு அமைதியாக இருந்தவுடன் அந்தப்பக்கம் மகிழா பதட்டத்துடன் “ஆதி என்னாச்சுப்பா…அடி எதாவது பட்டுடுச்சா…??” என்று அழுகுரலில் வினவியவுடன், விட்டால் அழுதுவிடுவார் என்று தோன்ற “மாம்…மாம்…ஐயம் ஆல் ரைட்…ஏதோ யோசனையிலிருந்தேன்…அதனால் ஐ டிடின்ட் ஆன்சர் ஃபார் யூவர் குவைஸ்டின்…அதுக்குள்ள எதுக்கு […] - [தேனிதழ் 1](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): உலக குத்துச்சண்டை கழகத்தின் உதவியுடன் ஹரியானாவில் இன்று உலக குத்துச்சண்டை போட்டி தொடர் ஒன்று சாய் நேஷனல் அகாடமியில் நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பெறும் இந்த குத்துச்சண்டையில் பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்றனர்.அவர்களோடு போட்டிப் போட்டு அனைவரையும் வீழ்த்தி இந்திய வீரர்கள் கடைசி கட்டத்திற்கு முன்னேறியிருந்தனர். அதில் கடைசி போட்டியாக அதிக எடைக் கொண்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கான போட்டி சற்றுநேரத்தில் நடைப்பெற இருந்தது.அரங்கத்தில் ஒரு 10000 பேர் சூழ்ந்திருக்க,அனைவரும் ஒரு எதிர்ப்பார்ப்புடனும் ஒரு சுவாரசியத்துடனும் போட்டியிட போகும் வீரர்களின் வருகைக்காக அந்த போட்டி மேடையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு.ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் பத்து எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார் அல்லது போட்டியின்போது […] - [மலர்கள் 1](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1/): தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரத்தின் ஒரு குறுகலான விதியில் ஆட்கள் அங்கும் இங்கும் நடந்தவாறும் இரு சக்கர வாகனங்களிலும் பயணித்து கொண்டும் இருந்தனர்.ஆனால் மதிய வேளையின் காரணமாக அந்த வீதியில் குறைவான ஆட்களின் நடமாட்டம் மட்டுமே இருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்து கொண்டிருந்த இருவர் நடந்தப்படி சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கழுத்திலிருந்த தங்க சங்கலியை வேகமாக இழுத்து பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் வண்டியில் பறந்தனர். அந்த பெண் வலியில் துடித்தவாறு “என் தாலி…என் தாலி…கொடுங்கடா…” என்று தெருவெங்கும் அதிரும்படி அலறி,அந்த வண்டியை துரத்தி கொண்டே ஓடினாள். அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் என்ன முயன்றும் திருடர்களை தடுக்க முடியாமல் போகவே வண்டியின் பின்னால் ஓடி துரத்தி கலைத்தனர்.  யாரும் தங்களைப் பிடிக்காத எக்களிப்பில் தனது தலையில் இருந்த கவசத்தைக் கழட்டியவாறு தங்களைத் துரத்தி ஓய்ந்தவர்களைக் கண்டு எகத்தாளமாக சிரித்துவிட்டு முன்னால் திரும்பினார்கள் இருவரும். […] - [இறுதி அத்தியாயம்](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): துருவ் நடாஷாவின் வருகை அறிந்து ‘இவ எப்படி இங்கே?’ என குழப்பமாக பார்த்திருக்கும் போது,அருகில் இருந்த அவன் மனையாளோ கணவனின் காதருகே எக்கி “நான் தான் அந்த அக்காவை வர சொன்னேன்” என்றவுடன் அதிர்ச்சியுடன் பார்த்தவனின் கண்களை உற்றுப்பார்த்து தலைசரித்து சிரித்தவள் “அந்த அக்கா அழகா இருக்காங்களா மாமா?” என்றாள் குறும்புடன். அதற்கு ஆடவனிற்கோ மனையாளின் ஜொலிக்கும் முக்குத்திக்கு நிகராக பளீரிடும் பல் வரிசையும் அதீத முகப்பூச்சுகளின்றி அந்த முகில்நிலாவிற்கு இணையாக அழகில் ஒளிரும் அவளது அழகிய வட்டவடிவ முகமும், அவ்வப்போது ரகசியம் காட்டிவிட்டு மறையும் மஞ்சள் நிற இடையும் பெண்மையின் மென்மையும் மனக்கண்ணில் காட்சிகளாய் தோன்றி மறைந்து கிறக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தவனிற்கு வேறொரு பெண் அழகாக தெரிவாளா என்ன? அதனால் தன் மனதிற்கினியவளின் காதருகே குனிந்து “என் கண்ணுக்கு இந்த அழகிய ஓவியத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லையடி பெண்ணே!” என கவிதை பேசினான். பெண்ணவளோ முதலில் புரியாமல் திருதிருவென விழித்தவளை விஷமத்துடன் […] - [நயனம் 31](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): துருவ்வோ மனைவியின்றி ‘இது என்னடா வாழ்க்கை?’ என்பது போல் விரக்தியுடன் தாடி வளர்த்து சுற்றி திரிந்தான். பெரியவர்களோ ‘எல்லாம் சரியான நேரத்தில் இது என்ன புது குழப்பம்’ என தலையில் கைவைத்து இடிந்து போயிருந்தனர். துருவ்வோ பணியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனையாளிடம் அலைப்பேசியில் உரையாடாமல் உறங்கியதில்லை. மனையாளை பிரிந்து துருவ் சென்னை வந்து ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில்,மருத்துவமனையில் அவனிற்குரிய அறையில் மேசையின் மீது கரத்தை குவித்து அதில் முகத்தை வைத்து கண்மூடியிருந்தான். அனைவரையும் அதிகாரம் செய்யும் அவன் இப்போதெல்லாம் எதையோ பறிக்கொடுத்தது போல் இருப்பதை கண்டு அவனது உதவியாளினி “டாக்டர் ஒரு வாரமா நீங்க நீங்களாவே இல்லாத மாதிரி இருக்கு. ஏதும் பிரச்சனையா டாக்டர்?” என தயக்கத்துடன் கேட்டவளின் குரல் கேட்டு கரத்தை விலக்கி விழி திறந்து நிமிர்ந்து நோக்கிய துருவ் “எனக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகுது?அதெல்லாம் ஒண்ணுமில்லை…அந்த ரூம் நம்பர் 102 பேஷண்டுக்கு ட்ரிப்ஸ் மாத்தியாச்சானு போய் பாரு” […] - [நயனம் 30](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு நாளை மறுநாள் தன் மருத்துவ பணியை தொடர வேண்டும் என்பதால்,தந்தையோடு ஒரு நாள் தங்கிவிட்டு நாளை மதியத்திற்கு மேல் கிளம்பலாம் என்றெண்ணி மனையாளை அழைக்க,அவளோ புடவை முந்தானையை முடிந்துக்கொண்டு வேறு எங்கோ பார்த்தவள் “நான் வரலை” என்றாள். தனது பெட்டியில் உடையை எடுத்து வைத்துக்கொண்டிருந்த துருவ்விற்கோ தன் செவியில் விழுந்தது ‘நிஜமா?’ என்ற சந்தேகம் தோன்ற, சட்டென்று திரும்பி அவளை கூர்ந்துப்பார்த்தப்படியே “என்ன சொன்ன, கேட்கலை” என்றான் மார்பிற்கு குறுக்கே கைக்கட்டி. அவளோ அவன் முகத்தை பார்க்காமலே கீழே குனிந்து “நான் ஊருக்கு வரலை” என முணுமுணுத்தாள். துருவ்விற்கோ சினம் சுள்லென்று வர இறுகிய முகத்துடன் “வடிவு திரும்ப கேட்கறேன்…ஒழுங்கா பதில் சொல்லு…இங்க அப்பா வீட்டுக்கு வரலையா?இல்லை என் கூட சென்னைக்கு வரலையா?” என ‘சென்னை’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான். இப்போது கணவனை பெருமூச்சோடு நிமிர்ந்து பார்த்து “சென்னை வூட்டுக்கு வரலை” என்றவுடன், “ஏன்?” என்று அழுத்தமாக […] - [நயனம் 29](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): உடல்,பொருள்,ஆவி என அனைத்திலும் நீக்கமற மனையாளே நிறைந்திருக்க அவள் மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடரவும்,இவனுக்கு ‘என்ன வாழ்க்கைடா இது’ என சலிப்பாக இருந்தது. இருப்பினும்,முன்னர் மனைவி தன்னிடம் பேசவில்லை என்றாலும்,தானும் பிடிவாதமாக விலகி செல்பவன்,இன்றோ மனையாள் தன்னிடம் பேசவில்லை என்றப்போதும் விடாமல் அவளின் பின்னோடு கஜினி முகமது போல் விடாமல் படையெடுத்துக் கொண்டிருந்தான். அவளோ துளியும் கணவனை கண்டுக்கொள்ளாமல் அன்றைய இரவிற்கு தேவையான உணவை அவளது தாய் சிவகாமியுடன் சமைத்துக் கொண்டிருந்தாள். இதுநாள் வரை அவர்களது இல்லத்தின் சமையலறை பக்கமே தலைக்காட்டாத துருவ்வோ பத்து நிமிடத்திற்கு ஒரு முறை “வடிவு காப்பி வேணும்…தண்ணீ வேணும்…ஏதாவது ஸ்நாக்ஸ் வேணும்” என அடிக்கடி சமையலறைக்குள் புகுந்து மனைவியை நோட்டமிட்டப்படி வாங்கிச் சென்ற மருமகனை புருவம் சுருக்கி பார்த்தார் சிவகாமி. அவளோ தாயின் முன்னால் எதையும் காட்டிக்கொள்ள மனமின்றி கணவனின் செயலில் பல்லைக் கடித்தாலும் எதுவும் பேசாமல் கேட்டதை வழங்கினாள். சிவகாமியோ ‘இந்த […] - [நயனம் 28](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): திருமணத்தன்று அதிகாலை இந்த திருமணமே ‘வேண்டாம்’ என தந்தையிடம் சண்டையிட்டு முறுக்கிக்கொண்டு கிளம்பயெத்தனித்தவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார் சிவகாமி. அவனோ அதனை சற்றும் எதிர்ப்பாராமல் தேகம் தூக்கி வாரிப்போட பையை கீழே போட்டு விட்டு “அத்தை என்ன செய்யறீங்க?பிளீஸ் எழுந்திரிங்க” என அவசரமாக அவரை தூக்கிவிட்டவன், கழுத்து நரம்புகள் புடைக்க “அத்தை உங்களுக்கு கொஞ்சமாவது அறி…” என படபடவென சினத்தோடு பேசிக்கொண்டே சென்றவன் தன் வார்த்தைகள் வரம்பு மீறி வருவதை கண்டு சற்று நிதானித்தான் துருவ். விழி மூடி திறந்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து சிகையை அழுந்தக்கோதி “எதுக்கு அத்தை…என்னை இப்படி சங்கடப்படுத்தறீங்க?உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில். அவரோ புடவையால் வாயை பொத்தி அழுதவர்,பின்பு நாசியை உறிஞ்சி அவனது முகத்தை பார்த்து இருகரம் குவித்தவராய் “துருவ்வு சின்ன வயசுலேயிருந்து நான் பார்த்து வளந்த பையன் நீயு…இந்த இரகசியத்தை காப்பாத்துவேன்ற நம்பிக்கையிலே சொல்றேன்…என் பொண்ணுக்கு ஒரு […] - [நயனம் 27](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-27/): அதிகாலை நான்கு மணிக்கு மேல் தான் அவளது கணவன் உறங்கவிட்டதால்,பெண்ணவளோ எப்பொழுதும் எழுந்துக்கொள்ளும் நேரத்தை தாண்டியும் அழகிய பதுமையாய் உறங்கிக்கொண்டிருந்தாள். ஆனால் துருவ்விற்கு காலை எட்டு மணியளவில் விழிப்பு தட்ட,கண்களை கசக்கிக் கொண்டு எழ முயற்சித்தான். ஆனால் அது முடியாமல் தன் மீது ஒற்றை கையையும் காலையும் போட்டு இறுக்கியணைத்து ஒட்டிக்கொண்டு இரண்டு வெற்று தேகமும் உரச பூனைக்குட்டி போல் படுத்திருந்த மனையாளின் தேகத்தின் சூடு,ஆடவனிற்குள்ளும் கடத்தப்பட்டு மீண்டும் ஒரு உறவிற்கு அடிப்போட்டது. ஆனால் பெண்ணவளிற்கு பதினெட்டு வயதே என்பதால் நேற்றைய கூடலினால் ஏற்பட்ட களைப்போடு, கணவனின் முரட்டுத்தனத்தினால்  தோன்றிய வலிகளும் இப்போதும் அவள் முகத்தில் தெரிவதை கண்டு ‘துருவ் பார்க்க முரட்டுத்தனமா இருந்தாலும் உன் வேகமெல்லாம் அவளால் தாங்க முடியாது…சின்னப்பொண்ணு அவள்’ என அவன் மனசாட்சியே குத்தி கிழிக்க,அதனால் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு காரிகையின் நெற்றியில் ஈரம் பொதிந்த அழுத்தமான முத்தம் ஒன்றை கொடுத்து ‘சாரிடி’ என மனமாற மன்னிப்பை யாசித்தான். […] - [நயனம் 26](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): ‘குஷி’ என்ற திரைப்படத்திலிருந்து ஒலித்த அந்த பாடலை கேட்ட இருவரின் முகமும் அஷ்டக்கோணலாக மாறிவிட்டதோடு, சராலென்று ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் விழிகள் விரிய தங்கள் இணைகளின் முகத்தை நோக்கி திருதிருவென விழித்தார்கள். சில வினாடிகளில் அவர்களுக்கு பின்னே வந்த வாகனத்தின் ஒலிப்பானின் சப்தம் கேட்டு நிகழ் காலத்திற்கு வந்தவர்களில் துருவ் வண்டியை ஓட்டுவது போல் முன்னால் திரும்பிக்கொண்டு வெட்கத்துடன் இதழ்மடித்து சிரிக்க,இடதுப்புறமாக திரும்பிய அவனது மனையாளிற்கும் நாணத்தில் மேனி முழுவதும் செக்கச்செவேலென சிவந்து விட்டது. அதற்குள் பாதி பாடல் முடிவடைந்திருக்க “கட்டுத்தறி காளையை போல்…முத்தமிட்டு…”  என்னும் போதே அடுத்ததாக வரவிருக்கும் விரக தாபத்துடன் கூடிய வரிகளை அறிந்த துருவ்வோ ‘ஓ…காட்’ என அவசரமாக எட்டி ஒரு கையால் வேறு பாடலை மாற்றி ஆசுவாச பெருமூச்சுவிட்டான். பெண்ணவளோ அரக்க பறக்க பாடலை மாற்றிய கணவனை புருவம் சுருக்கி ‘என்ன’ என்று நோக்க,அவனோ சிகையை ஒற்றை கையால் அழுந்தக்கோதி “ஏன் டி அப்படி பார்க்கறே?யூனிவர்சல் […] - [நயனம் 25](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த வடிவு தலையை உலுக்கி சடுதியாக நிகழ்காலத்திற்கு வந்து நடாஷாவை தீயாய் முறைக்க,அவளோ பெரிய ஹஸ்திதத்தை கேட்டது போல் வாய் விட்டு கலகலவென சிரித்து “உன் ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்…டென்ஷன் ஆகிட்டீயா?” என கண்சிமிட்டி வினவினாள். கணவனது துரோகத்தை எண்ணியும் அவன் மீது வைத்திருந்த அதீத காதலினாலும் அவனது நல்வாழ்வை கருத்தில் கொண்டு பிரிந்துவிட முடிவெடுத்தப்போதும், சட்டென்று மூன்றாம் மனிதரான நடாஷா இதனை பற்றி கேள்வியுற்று கேலி செய்து சிரித்தது அவளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த தன்மானத்தை தூண்டி விட “நான் ஒண்ணும் டென்…ஷன் ஆகலைங்க…இப்போ நீங்க வந்த காரணத்தை சொன்னீங்கனா பேசிப்புட்டு வேற வேலை பார்ப்பேங்க…ஏன்னா நானும் மாமாவும் தலை பொங்கலுக்கு ஊருக்கு போறோம்…அதுக்கு ஊருப்பட்ட வேலை இருக்கு” என இதழை சுழித்து அந்த ‘தலை பொங்கல்’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து பல்லை கடித்தப்படி கூறினாள். அத்தோடு மனதினோரம் ‘மாமனுக்கும் பாட்டிக்கும் தெரிஞ்ச விஷயம் இந்த […] - [நயனம் 24](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): வடிவாம்பாளும் அவளது கணவன் துருவ்வும் பொங்கல் திருநாளிற்காக தங்களது சொந்த ஊரை நோக்கி மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். இப்போதும் அவர்களது உறவுகளுக்கு இடையேயான சிக்கல் தீரவில்லை என்பதால் வடிவாம்பாள் கணவனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. ஒரே வீட்டில் இணைந்திருந்தாலும் இரு வேறு உணவுகள்,இரு வேறு படுக்கைகள் என்று அவர்களது நாட்கள் வெறுப்புடனே கடந்திருந்தது. அன்று தன் மனையாளிடம் அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்க்க நினைத்து உறுதியான முடிவுடன் இல்லத்திற்குள் நுழைகையில் அவர்களது வீட்டிலிருந்து வடிவாம்பாளிடம் பேசிவிட்டு நடாஷா புறப்பட ஆயத்தமாகி கைப்பையுடன் எழுந்தாள். கதவு திறக்கும் ஓசையில் இருப்பெண்களின் கவனமும் அவன் புறம் திரும்பியது. கண்ணில் அளவுக்கு அதிகமான நேசத்தை தேக்கி பார்வையை திரும்பியவன்,நடாஷாவை தன் வீட்டின் வரவேற்பறையில் சற்றும் எதிர்ப்பாராமல் மின்சாரம் தாக்கிய உணர்வில் பேரதிர்ச்சியுடன் உலகம் ஸ்தம்பிக்க நின்றுவிட்டான். ஆனால் சடுதியாக தலையை உலுக்கி தன்னுணர்வுக்கு மீண்ட ஆடவன் நெற்றியை நீவி  ‘இது என்னடா புது தலைவலி…இவ என்னை வாழவே விடமாட்டாளா?’ […] - [நயனம் 23](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): தங்களது வீட்டினுள் போடப்பட்டிருந்த நீள்விரிக்கையில் குத்துக்காலிட்டு மடியில் முகம் புதைந்து அமர்ந்திருந்தவளிடம் ‘என்னவாயிற்று?’ என்று கேட்டு ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. அவளை தேடி வந்திருந்த கவிதா பாட்டி பெண்ணவள் தன்னை இறுக்கி கட்டியணைத்ததிலே மிரண்டுப்போனவர், அவளின் கண்ணீர் தனது சுருங்கிய வெற்று தோளில் விழவும் அதிர்ந்து ‘நேத்து தான் புள்ளை சந்தோஷமா இருக்கணும்னு அந்த சாமிய வேண்டினோம்.‌ இன்னைக்கு என்னடானா இப்படி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்கே…ஆண்டவா!இது என்ன சோதனை?’ என நெஞ்சமெல்லாம் நடுங்க, அவளை வீட்டினுள் அழைத்து வந்து ஒரு மணி நேரமாக “அழாதேம்மா?ஏன்மா அழறே?ஏதாவது பிரச்சனையா?துருவ்வு ஏதும் உன்னைய வஞ்சிப்புட்டாரா?ஊருலே இருக்க யாருக்காது மேலுக்கு முடியலையா?என்னானு சொல்லு தாயி” என பல விதங்களில் வெவ்வேறு கேள்விகளை எழுப்பியப்போதும் நீள்விரிக்கையில் அமர்ந்து மடியில் முகம் புதைத்தவள் நிமிரவேயில்லை. வயதிலும் முதிர்ச்சியிலும் அனுபவம் வாய்ந்த பெண்களாக இருந்தால் அந்த சூழ்நிலையை சரியாக கையாண்டு இருக்கக்கூடும்.ஆனால் இச்சிறிய பாவையிவளோ அவரிடம் தன்னுடைய சொந்த […] - [நயனம் 22](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22/): மனைவிக்காக உணவுகளை தன் கரங்களாலே ஆசையாக சமைத்தவனிற்கு தெரியவில்லை,அவன் சமைத்த உணவுகளை அவள் கண்ணால் கூட சீண்ட போவதில்லை என்று!! இதை எதையும் அறியாமல் வடிவாம்பாளிற்கு பிடித்த வகையில் இறைச்சிகளை கடையிலிருந்து வாங்கி வந்து கோழி குழம்பு,மீன் வறுவல்,சாதம் மற்றும் ரசம் என்று வகை வகையாக சமைத்து அசத்தியிருந்தான்‌. ஒரு முழு நேர சமையல்காரனை போல் தலையில் துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு சீட்டியடித்தப்படி வியர்த்து விறுவிறுக்க கணவன் சமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வெகு நிதானமாக சிறிய முள் பன்னிரெண்டை தொடுவதற்கு சில நிமிடங்களே இருந்த வேளையில் துயில் களைந்தாள் இல்லத்தரசியவள். மெத்தையில் எழுந்து அமர்ந்து கண்களை கசக்கி விட்டு பார்த்தவளிற்கு சிறிது சிறிதாக சுய உணர்வு வர தொடங்கியது. அவசரமாக தன்னிருப்பிடத்தை ஆராய்ந்து ‘முன்னறையில் தானே படுத்திருந்தேன்‌…இங்க ரூமுக்கு எப்படி வந்தேன்?’ என்ற கேள்வி தலையை குடைந்தது. அதனால் தலையை இரண்டு கையால் தாங்கி விழிகளை சுழற்றிய பாவையவளிற்கு கட்டிலுக்கு அருகே இருந்த […] - [நயனம் 21](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): இருவரும் கட்டியணைத்தது போல் இருந்த காட்சியை கண்டதற்கு பிறகும் அவ்விடத்திலே நின்று நெஞ்சத்தின் காயத்தை கீறி மேலும் ரணமாக்கிக் கொள்ள விரும்பாமல் முன்னால் அமர்ந்திருந்த ஓட்டுனரிடம் “அண்ணா சீக்கிரம் வண்டியை எடுங்க” என நா தழுதழுக்க கூறியவளின் தொண்டை குழி ஏறி இறங்கிய விதமே அந்த ஓட்டுனரின் நெஞ்சத்தை பிசைந்தது. அதனால் சில நிமிடங்கள் திரும்பி அவளையே பார்த்திருந்தவரின் மனம் ஒரு மாதிரி இருந்தது. இருப்பினும்,காரணம் என்ன என்று அறிந்துக்கொள்ளும் தகுதி தனக்கில்லை என்று எண்ணி ‘இந்த பெண்ணின் வேதனை பற்றிய விபரத்தை தன் முதலாளியான தேவ்விடம் தெரியப்படுத்திவிடுவோம்’ என்று மனதை தேற்றி “சரிங்க அம்மா” என மரியாதை பன்மையுடன் உரைத்து வண்டியை கிளப்பினார். வண்டியை எடுத்தாலும் அவ்வப்போது முன்னால் இருந்த மகிழுந்தின் கண்ணாடி திரையின் வழியே அவளின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டே வந்தார். இதையறியாத பாவையவளோ இன்றொரு நாளிலே தன் வாழ்வின் பாதை அடியோடு திசை மாறியதை எண்ணி துன்பம் கடலளவு பெருகியிருக்க […] - [நயனம் 20](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): தேவ் மற்றும் ஜமுனாவின் குழந்தையான சுஜித்திடம் பேசிவிட்டு வெளியே வந்த வடிவாம்பாள் ‘இந்த மாமா எங்க போச்சு?’ என தனது கயல் விழி கொண்டு கணவனை தேடும் வேட்டையில் இறங்கினாள். ஒரு வழியாக அவளது ஆராய்ச்சியின் இலக்கை கண்டறிந்தவள்,அதன் பிறகே தன்னவனின் பார்வை வேறு எங்கோ ஓரிடத்தில் நிலைத்திருப்பதை அறிந்து தானும் அதே நேர்க்கோட்டில் பார்வையை செலுத்தியப்படி பயணித்தவளின் விழிகளில் விழுந்த நடாஷாவின் அழகை கண்டு தானும் பிரம்மித்தாள். விழிகள் இரண்டும் விரிய ‘அய்யோ…அந்த அக்கா என்ன மெழுகுல செஞ்ச சிலை மாதிரி இம்புட்டு அழகா இருக்காங்க’ என வாயை பிளந்து அதிசயத்தவள்,அந்த பெண்ணை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தற்கு பிறகே அவளின் ஆடையை பற்றிய வித்தியாசம் உணர்ந்துக்கொண்டாள். சடுதியாக நெஞ்சமெல்லாம் பரபரக்க குனிந்து ஒரு முறை தன்னுடைய உடையை ஆராய்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு தோன்றிட நடாஷாவை வெறித்து பார்த்திருந்தாள்‌‌. சில நொடிகள் தன்னை மீறி நடாஷாவை பார்த்திருந்தவள்,பின்பு தலையை உலுக்கி […] - [நயனம் 19](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): தன் மனையாள் தயாராகி வெளியே வந்த நொடியில் ஒரே ஒரு கணம் சிலையாய் உறைந்து நின்ற துருவ் சடுதியில் சிகையை அழுந்தக் கோதி வெளிவந்து ‘இன்னைக்குனு பார்த்து நம்மை கொல்றாளே?’ என உள்ளுக்குள்ளே இன்ப பிதற்றலுடன் தன்னவளை நேர்க்கொண்டு காணாமல் தலைக்குனிந்து “வா கிளம்பலாம்” என முணுமுணுத்து மகிழுந்தின் திறவுக்கோலை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான். பெண்ணவளோ ஆடவன் அவன் செய்த அலங்கார தோற்றத்தில் சிறிது மாற்றங்கள் நிகழ்த்தி முழு ஒப்பனையுடன் வெளியே வந்த தன்னுடைய விம்பத்தை கண்டு கணவன் ஏதேனும் அபிப்பிராயம் கூறுவான் என்ற எதிர்ப்பார்ப்புடன் வாய் நிறைந்த புன்னகையுடன் கணவனின் முகத்தை ஆவலோடு எதிர் நோக்கியிருந்தாள். ஆனால் எந்த வித கருத்துக்களையும் கூறாமல் முதுகு காட்டிச் செல்லும் கணவனை செல்லமாக முறைத்து முகம் சுருங்கினாள். ‘இந்த மாமாவுக்கு திடீர் திடீர்னு முனி எதுவும் அடிச்சிடும் போல…ஹூக்கும்’ என தாடையை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு அவளும் கடுப்புடன் “மாமா செத்த இரு…தலைக்கு மல்லிப்பூ வைச்சு […] - [நயனம் 18](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): பெண்ணவளோ கணவன் கூறியது போல் சிப்பம் அனுப்பகத்தின் மூலமாக வந்த புடவை அடங்கிய பொட்டலத்தை விநியோகம் செய்ய வந்த இளைஞனை வாசலோடு நிற்க வைத்தாலும் மூச்சிறைக்க வியர்த்து வழிய வந்த ஆடவனை கண்டு இரக்கம் சுரந்தது. தங்களுக்கு தெரியாதவர்கள் வீட்டிற்கு வந்தாலும் வாசலில் இருக்கும் திண்ணையில் அமர வைத்து உபசரித்து அனுப்பும் வழக்கம் கொண்ட கிராமத்தின் மண் வாசனை கமழும் குணத்தோடு பிறந்தவளிற்கு அந்த இருபத்தைந்து வயது ஆண்மகனை பார்க்கும் போது பாவமாக தோன்றி இருந்தது. அணிந்திருந்த சட்டை கொண்டு தனது முகத்தில் வழிந்த வியர்வையை துடைப்பதை கண்டவளிற்கு மனம் உருகிவிட்டது. அதனால் தன் கையில் சிப்பத்தை பெற்றுக்கொண்ட பாவையவள் அந்த ஊழியனிடம் “அண்ணா செத்த இருங்க…வந்திடறேன்” என்றுரைத்து கவனமாக வாசல் கதவின் மீது ஒரு கண் வைத்தப்படியே உள்ளிருந்து தண்ணீர் புட்டியோடு சேர்த்து ஒரு சிறு துண்டையும் எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். ‘இந்தம்மா எங்க உள்ளப்போகுது…அடுத்த வீட்டுக்கு டெலிவரி வேற […] - [நயனம் 17](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): மீண்டும் இருவருக்குள்ளும் சிறு பிளவு உண்டாகி பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. அந்நிலையில் அவள் தன்னை விலக்கிய சினத்தில் அவனும் தன்னுடைய உடலினுள் ஏற்பட்ட மாற்றத்திற்கான விடையறியாத அச்சத்துடனும் அவளும் அன்றைய நாளை கடந்தனர்.   தொலைக்காட்சியை தவிர சமூக ஊடகங்கள் தொடர்பான எந்த வித அனுபவமுமில்லாத பாவையவளிற்கு தாம்பத்தியம் பற்றிய அறிவில்லாததால் அச்சத்தில் தன்னவனின் முகத்தை கூட ஏறிட்டு பார்க்க முடியவில்லை. அவனும் அவளின் மீதிருந்த சினத்தினால் பெண்ணவளின் மனநிலையை பற்றி அறியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தவன்,அப்போதே கவனித்திருந்தால் அவளின் பயத்தை களைந்து தாம்பத்திய பாடத்தை விளக்கி கூறியிருப்பான். இருவரின் மனதிலும் நெஞ்சம் முழுவதும் நேசம் ஆக்கிரமித்திருந்தாலும் அன்றைய சம்பவத்தினால் விலகியே இருந்தனர். பெண்ணவளிற்கு தன்னவனை நினைத்து நடுக்கம் தோன்றினாலும் அவனை பார்க்கும் போதெல்லாம் அவளை அறியாமல் உடலின் சுரப்பிகள் அதிவிரைவாக வேலை செய்து அவளுக்குள் உஷ்ணம் அதிகரித்து நாணத்துடன் முகத்தை சிவக்கவும் வைத்தது. இது தான் உடல்களின் சங்கமத்திற்கான கலவியின் முதல் படி […] - [நயனம் 16](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): அதிர்ச்சியில் உறைந்திருந்த துருவ் சில நிமிடங்களுக்கு பிறகு நிகழ்காலத்திற்கு வந்து எதிரில் இருந்தவரை சங்கடமாக நோக்கி “சாரி” என சிகையை அழுந்தக்கோதி “எப்படி?” என்றான் உண்மையை அறிந்துக் கொள்ளும் பரபரப்புடன். அவரோ மெல்லியதாக புன்னகைத்து “வாங்க துருவ்…நடந்துக்கிட்டே பேசலாம்” என, “யா ஷுயூர்” என்று அவருடன் இணைந்து நடந்தவனின் மனதில் மனைவியை பற்றி ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ‘ஒரு நேரம் சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறா?ஒரு நேரம் முதிர்ச்சியடைந்த பெண் போல் அறிவாளி மாதிரி பேசறாள்… இதோ தேவ் சொல்றதை கேட்கும் போது அவங்க பையன் விஷயத்திலும் ஏதோ மேஜிக் பண்ணியிருக்கா போலவே…இவளை நான் இப்போ எந்த கேட்டகிரியில் சேர்க்கிறது?’ என குழம்பி தன்னுள்ளே புலம்பியவனின் கவனம் தேவ் பேச ஆரம்பித்தவுடன் களைந்தது. “துருவ் என் பையனை டாக்டருக்கு படிச்சவங்களால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற எங்களுடைய எண்ணத்தை உங்க மனைவி மொத்தமா தவிடுப்பொடியாக்கிட்டாங்க…நீங்க இந்த குடியிருப்பிற்கு வந்தப்பிறகு ஒரு நாள் பூங்காவில் தனிமையில் […] - [நயனம் 15](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): அன்று காலை ஒரு முக்கியமான மருத்துவ சந்திப்பிற்காக சட்டையின் கையை மடித்துக்கொண்டு வந்த துருவ்விடம்  “மாமா சோத்து கை பக்கம் நாலாவது வூட்டுல குடியிருக்காங்கயில்லை…ஜமுனா அக்கா…அந்த அக்கா அவங்க பையன் பொறந்த நாளுக்கு சனிக்கிழமை இரவு விருந்து வைச்சிருக்காங்களாம்…அதுக்கு நம்மளை நாளன்னைக்கு வரச் சொன்னாங்க மாமா” என்றாள் கண்ணிலிருந்து கருவிழி வெளியே மிதக்க விழி விரித்து ஆசையோடு. அவனோ அவளை எரிச்சலோடு பார்த்து “தின்னறதுக்குன்னா முன்ன கிளம்பிடு குந்தாணி” என அவள் தலையில் கொட்ட, அவளோ ஓரடி பின்னால் நகர்ந்து “ஸ்ஆஆஆ” என நாசி விடைக்க கத்தி “மாமா மண்டையிலே கொட்டி கொட்டி எனக்கு மூளை குழம்பிடப்போகுது…பொறவு நான் எப்படி உன் கூட குடும்பம் நடத்துறது?” என கூச்சலிட்டவளை மார்பிற்கு குறுக்கே கைககட்டி முறைத்து “நான் கொட்டலைனா மட்டும் மூளை ஜெட் வேகத்தில் செயல்படப்போகுது போ டி…ஒண்ணுக்கும் உதவாதது இருந்தால் என்ன இல்லைனா என்ன?” என நக்கலாக உரைத்ததோடு “நீ பைத்தியமாகிட்டேனா உன்னை […] - [நயனம் 14](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): மனம் நொந்து தன்னறைக்குள் வந்த பாவையவளின் கண்ணீர் கட்டுப்படுத்த இயலாமல் பொங்கி பெருகிக்கொண்டே இருந்தது. இதுவே முன்பிருந்த துருவ்வின் இடத்திலிருந்து திட்டியிருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பாளோ என்னவோ? இப்போது அவனை மட்டுமே நெஞ்சினுள் பூட்டி இதயத்தில் சிறை வைத்திருப்பவனின் சிறு வார்த்தைகளும் அவளின் இதயத்தை கீறி காயப்படுத்தும் என்கையில் அவனது இத்தகைய ஆக்ரோஷமான பேச்சு அவளை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கி ரணப்படுத்தியிருந்தது. அதனால் தன்னுடைய வேதனையிலிருந்து மீண்டு வரமுடியாமல் எந்நேரமும் எதையோ பறிக்கொடுத்தது போலவே வலம் வந்தாள். கடமையாக தன் கணவனிற்கான வேலைகளை கூட செய்ய மறுத்து அறைக்குள்ளே அடைந்து கிடப்பவளை கண்டவனிற்கும் ஒரு மாதிரி இருந்தது. அந்த சிறு விடயத்திற்காக அவ்வளவு பெரிய வார்த்தைகளை அவளின் மீது அமிலமழையாய் பொழிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தவறை உணர்ந்து தன் மீதே குற்றம் சாட்டிக் கொண்டான். இருப்பினும்,பிடிவாதமாக அவளிடம் மன்னிப்பை வேண்டாமல் அவனும் விலகியே இருந்தான். நாட்கள் விரைவாக ஓடி ஒரு வாரம் கடந்த நிலையில் […] - [நயனம் 13](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): பெண்ணவள் இரண்டு நிமிடங்களுக்கு பிறகே சுய உணர்விற்கு வந்தவள்,தான் நின்றிருக்கும் நிலையறிந்து முகம் வெட்கத்தில் சிவக்க,கணவனிடமிருந்து விலக போராடினாள். அதன்பிறகே தான் செய்துக் கொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் உணர்ந்து பட்டென்று விலகிய துருவ் நெற்றியை நீவி தன் மனையாளின் முகம் நோக்காமல் “நீ கிளம்பு” என்றான் கரகரத்த குரலில். அவளோ எதையோ எதிர்ப்பார்த்து ஏமாற்றமடைந்தவளாய் முகம் சுருங்க “சரி மாமா” என தலையசைத்து புறப்பட முயன்றவளுக்கு சற்று நேரத்திற்கு முன்பு அவன் கசங்கியிருந்த முகம் கண் முன் தோன்றியது. சிறுப்பெண்ணாக இருந்தப் போதிலும் நெஞ்சம் முழுவதும் தன்னவனை மட்டுமே சுமந்திருப்பவளிற்கு அவனது முகத்தில் தோன்றிய சிறு மாற்றமும் அவளிற்கு தெரிந்தது. கணவன் ஏதோ கூற முடியாத வேதனையில் தவிப்பதை அறிந்த பேதை உள்ளம் அவனை தனியாக விட்டு நீங்க இடமளிக்கவில்லை. உடனே சட்டென்று நடையை நிறுத்தி ஆடவன் புறம் திரும்பியவள் “மாமா இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே நான் தூங்கட்டா?” என்றாள் தலைச்சரித்து […] - [நயனம் 12](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): வடிவாம்பாளிடம் ‘பூதம் எங்கே?’ என்று வினவிய பிறகு தான் தன் முன்பு நின்றிருந்த கணவனை கண்டு நிதர்சனம் உணர்ந்து திருதிருவென விழித்த பாவையவள் அசடு வழிய தலையை சொறிந்துக்கொண்டு “கனவுல” என்றாளே பார்க்கலாம். அவ்வளவு தான் இறங்கியிருந்த அத்தனை சினமும் சுறுசுறுவென்று பொங்கி எழ விழிகளாலே எரித்து “எருமைமாடு…எருமைமாடு” என தலையில் ஓங்கி கொட்டு வைத்தான். அதில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வலி நரம்புகளில் சுர்ரென்று ஊடுருவ “ஆஆஆ” என கத்தி “உன்னை தான் என்னை கொட்டக்கூடாதுனு சொல்லியிருக்கேன் இல்ல மாமா…சத்தியமெல்லாம் வேற பண்ணியே” என எரிச்சலோடு முகம் சுழித்து இரைந்தாள். அவனோ அன்றொரு நாள் நடந்த நிகழ்விற்கும் சேர்த்து வஞ்சத்துடன் மீண்டும் ஒரு கொட்டு வைத்து “அப்படி தான் டி கொட்டுவேன்…முடிஞ்சா உன் மாமனாருக்கிட்ட வத்தி வை… இல்லை உன் கடவுளை வேணுமானாலும் துணைக்கு கூப்பிடு” என புருவம் உயர்த்தி இகழ்ச்சியாக இதழை வளைத்து பழிப்புக்காட்ட, தலையை தேய்த்துக்கொண்டே அவனை அடிக்கண்ணால் […] - [நயனம் 11](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): தன் மனையாட்டி அவருக்கு உணவு கொடுத்து உதவி செய்ததில் அவனிற்கு ஆச்சரியத்தோடு பெருமிதமாக இருப்பினும்,தன்னிடம் கூறாமல் அதனை செயல்படுத்தியதினால் அவனது ஆண்மைக்கே உரிய இழுக்காக தோன்றி வடிவாம்பாளின் மீது அளவுகடந்த கோபத்தை கொடுத்தது. ‘என்னிடம் கூறாமல் அவள் எப்படி இப்படி ஒரு செயலை செய்யலாம்?’ என ஆண்களுக்கே உரிய அகங்காரம் தலைதூக்க,இறுகிய முகத்துடனே அவள் அறைக்குள் சென்ற துருவ்வின் கடினமனம் உள்ளே கண்ட காட்சியை கண்டு உயர்வேகத்தில் படபடத்தது. ஏனெனில் அங்கோ அவனது மனைவி குளித்துவிட்டு உடுத்திய அரைக்குறையான சேலையில் தன்னுடைய இடுப்பிற்கு கணவன் கொடுத்த களிம்பு மருந்தை தடவிக் கொண்டிருந்தாள். பாதி விலகிய மாராப்போடு வெளிப்பட்ட அவளது பெண்மையின் அங்க வளைவுகளும் அவனை எப்போதும் சுண்டியிழுக்கும் சிறிது தொப்பையுடன் கூடிய தங்க நிற மஞ்சள் நிற இடையும் அவனை பித்தம் கொள்ள செய்தது. கணவன் தன்னறைக்குள் எப்போதும் வந்ததில்லை என்பதால் மெத்தனமாக வலியோடு முகத்தை சுழித்து இதழ்கடித்து மருந்திட்டுக் கொண்டிருந்த பாவையவள்,படீரென்று […] - [நயனம் 10](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): வடிவாம்பாள் ஒரே ஒரு நொடி தான் இறக்கவேண்டும் என்று எண்ணினாள். ஆனால் சடுதியில் அவளது துணிச்சலான இயல்பு குணம் தலைதூக்க ‘நான் எதுக்கு சாவணும்…? மத்தவங்களை தான் சாகடிக்கணும்’ என ஒரு வித உத்வேகத்துடன் பெரும் வலியோடு பல்லைக் கடித்து கழுத்து நரம்புகள் புடைக்க முயற்சித்து தானே அங்கிருந்து எழுந்துக்கொண்டாள். வெகு சிரமத்தோடு இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தவளால் மனதிலிருந்த உறுதி சரீரத்தில் இல்லாததால் மேனி நடுங்க நீள்விரிக்கையிலே தொப்பென்று அமர்ந்துக் கொண்டாள். பசி வேறு அவளது வயிற்று நரம்புகளை சுருட்டி இழுத்தது போல் உயிர்ப்போனது. ஒருவேளை இரவு நன்றாக உண்டிருந்தால் பெண்ணவளிற்குரிய ஆற்றல் கிடைத்து இந்த சூழ்நிலையை எளிதாக கடந்திருக்கலாம். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய இயலாமல் நோவிற்குரிய சிகிச்சையின்றி இயலாமையுடன் கண்ணிலிருந்து நீர் வழிய நீள்விரிக்கையின் முகப்பிலே தலைசாய்த்து படுத்து விட்டாள். துருவ்வோ மனைவியின் இத்தகைய துன்பமறியாமல் ‘சும்மா சின்ன சுளுக்குக்கு ஓவர் ட்ராமா பண்றா?’ என சாதாரணமாக எண்ணிக்கொண்டவனிற்கு உறக்கம் […] - [நயனம் 9](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): சிந்தனையில் மூழ்கியிருந்த ஆடவனது அறையின் கதவு திறக்கும் ஓசைக்கேட்டு,வந்திருப்பது யார் என்பதை அறிந்தவனாய் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டான். அவனது மனையாளோ வெளியே நின்றிருந்த கணவனின் முதுகை எட்டிப்பார்த்து நிம்மதியுற்று ‘ஹப்பாடி…இந்த சிடுமூஞ்சி வெளியே தான் இருக்கு…அது வரதுக்குள்ள இந்த மெத்தையில் முதல்ல இடம் பிடிச்சுக்கலாம்’ என குதுகலத்துடன் துள்ளிக்குதித்து கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள். அதில் ‘கிறீச்’ என்ற சத்தம் வெளியே இருந்தவனின் செவியில் விழ ‘மனுசனுக்கு ஆயிரம் கஷ்டம் இவளுக்கு இது தான் கஷ்டம்’ என தலையிலடித்து ‘துருவ் நீ மட்டும் உள்ளப்போகலை…அந்த எருமை கட்டிலை உடைச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை…இவளை’ என பல்லை நறநறவென கடித்து உள்ளே வந்தவனிற்கு திக்கென்று இருந்தது. ஏனெனில் புடவை அணிந்து படுத்திருந்தவளின் சேலை கால்புறத்தில் சிறிது மேலேறி அவளது கால்களின் வனப்பும் அதன்மேலே படர்ந்திருந்த சின்னஞ்சிறிய மயிற்களும் அவனது ஆண்மையை சோதிக்க காத்திருந்தது. மேலும்,ஒருப்புறமாக திரும்பிப்படுத்திருந்தாலும் காலையில் நிகழ்ந்த சம்பவம் அவன் கண்முன் தோன்றி அவனது […] - [நயனம் 8](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7-2/): நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் பணிப்புரியும் மருத்துவமனைக்கு செல்வதற்காக கருப்பு நிற முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டப்படி அறையிலிருந்து வெளியே வந்த துருவ் தன் மனைவியின் மீதிருந்த சினத்தினால் இறுகிய முகத்தோடு உணவருந்தாமல் வெளியேச் செல்ல ஆயத்தமானான். வடிவோ சமையலறையில் இருப்பதினால் இதனை அறியாமல் வேலை செய்துக்கொண்டிருக்க, வரவேற்பறையினுள் நீள்விரிக்கையில் அமர்ந்திருந்த அவனது தந்தையோ மகன் உணவருந்தாமல் செல்வதை கண்டு அக்கறையோடு “துருவ் சாப்பிடாமல் எங்க கிளம்பிட்ட?” என கழுத்தை திருப்பி அவன் புறம் பார்த்தப் படி வினவ, அவனோ நெற்றியை ஒற்றை விரல் கொண்டு நீவி ‘சண்டையில் இவர் இருக்கிறதை மறந்துட்டனே’ என சலித்து, தொண்டையை செருமி “இல்லைப்பா…வேலைக்கு நேரமாகிடுச்சு…சாப்பாடு நான் கேன்டினில் பார்த்துக்கிறேன்” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து. “சாப்பாடு வேண்டாம் சரி…அதை உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே?” என்று அவனை கூர்ந்து நோக்க, ‘இவர் ஒருத்தர் நடுவீட்டில் உட்கார்ந்து நாட்டாமை பண்ணிக்கிட்டு’ மனதிற்குள் வசைப்பாடி, […] - [நயனம் 7](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): அறையினுள்ளே அடிப்பட்ட வேங்கையின் சீற்றத்தோடு நடந்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் தயக்கத்துடன் உள்ளே நுழைந்த வஞ்சுக்கொடி விழுந்தாள். வெளியே தன் மாமனார் அமர்ந்திருப்பதினால் கதவை சாற்றி விட்டு அவ்விடத்திலே நின்றவள் மரியாதை பன்மையுடன் தலைதாழ்த்தி “மாமா உங்களுக்கு எதுவும் வேணுமா??” என சின்ன குரலில் வினவினாள். அவனோ அவளது வருகைக்காகவே காத்திருந்தவன் போல் “எங்க அப்பா என்னை திட்டினால் உனக்கு என்னடி அப்படி ஒரு சிரிப்பு எருமைமாடு” என எகிறிக்கொண்டு அவளை நெருங்கிய துருவ்வின் தோற்றத்தை கண்டு பாவையவளிற்கு தேகம் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் அவன் மேல் சட்டையின்றி வெற்றுடம்புடன் கீழே வெறும் குறுங்கால்சட்டையுடன் குத்து சண்டை வீரன்‌ போல் நின்றிருந்த தோரணை அவளை பேயறைந்தது போல் நிற்க வைத்தது. அதிலும் உடற்பயிற்சியினால் முறுக்கேறியிருந்த அவனது படிக்கட்டு தேகத்தை பார்த்தவளிற்கு கண்கள் விரிய ‘ஹே சினிமா ஹீரோ சூர்யாவுக்கு இருக்கிற மாதிரியே இவனுக்கும் உடம்பெல்லாம் கட்டி கட்டியா இருக்கே’ என “ஆவென்று” தன்னுடைய கணவனை வாயை […] - [நயனம் 6](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): துருவ் மருத்துவ முகாம் ஒன்றிற்காக மும்பையில் உள்ள சிறிய கிராமத்திற்கு சென்றிருந்த நேரத்தில் பெங்களூரை சேர்ந்த நடாஷா என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவளும் மருத்துவர் என்பதினால் அந்த மூகாமிற்கு வந்திருக்க, அவளின் அழகு பல ஆண் நெஞ்சங்களை கொள்ளை கொண்டது. ஏனெனில் ஐந்தரை அடி உயரத்தில் மெழுகில் செய்த சிலைப்போன்று அழகு பதுமையாக திகழ்ந்ததோடு அவள் முட்டி வரை அணிந்திருந்த மேற்கத்திய உடையும் அவளது மெல்லிய நளின உடல்வாகும் திரைப்பட நடிகையை ஒத்திருந்தது. தோற்றத்தில் மேற்கத்திய நடைமுறையை ஒத்தப்பெண்ணை போல் காட்சியளித்தாலும் அவளது குணம் மிகவும் எளிமையானது. அங்கிருந்த கிராமத்து மக்களின் மீது அவள் செலுத்திய அக்கறையும் எந்த வித முகச்சுழிப்புமின்றி அவர்கள் உடல்நலத்தை பேணிய விதமும் மக்களுக்கு ஆச்சரியத்தையும் அவளுடன் வந்திருந்த மற்ற மருத்துவ குழுவினரையும் கூட பிரமிப்பாகவும் இருக்க வைத்தது. அவளது நாகரீக உடையில் தெரிந்த கர்வமும் அகங்காரமும் அவளது செயலில் அதற்கு நேரெதிராக வெளிப்பட்டது. அத்தோடு விழிகளில் […] - [நயனம் 5](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): ஊரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் வடிவாம்பாளின் மனதில் ஒரு அச்சம் ஊடூருவியது. ‘இந்த அம்மா வேற ஊருக்கு தனியா வந்ததுக்கு வைய்யுமோ?’ என எண்ணியவளின் மனதில் தாயின் வசவுகளை நினைத்து பயம் தோன்றியப்போதும் அலட்சியமாக தோளை குலுக்கி ‘சரி…எதுவா இருந்தாலும் சமாளிப்போம்’ என்று எண்ணினாள் மெத்தனமாக. ஆனால் தாயை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதை பெண்ணவள் அறியாமல் போனது அந்தோ பரிதாபம். அவளது ஊருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வாகனம் நின்ற அடுத்த வினாடியே அதிலிருந்து இறங்கியவளை அவளது தந்தை கணேசன் வாஞ்சையுடன் சிரித்த முகமாக வரவேற்றார். அவளும் தான் பதினெட்டு வயது குமரி என்பதை மறந்தவளாய் சிறுமி போல் துள்ளிக்குதித்து “அப்பாஆஆ” என ஓடி வந்து அவரது கையை பிடித்துக்கொண்டு வாய் நிறைய புன்னகைத்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை கண்டதினால் அந்த கிராமத்து வெள்ளந்தி மனிதரின் கண்ணில் நீர் நிறைய “பாப்பா” என்று அழைத்தார் தழுதழுத்தக்குரலில். தோளிற்கு மேல் […] - [நயனம் 4](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): அன்றைய நாளில் இளம் தம்பதியினர் இருவரும் பெரும் சினத்தோடு தங்களது முடிவில் உறுதியாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் தங்களின் தவறை சிறிது சிறிதாக உணரத்தொடங்கினார்கள். அந்த சண்டைக்கு பிறகு அவன் வீட்டில் உண்பதையே நிறுத்திவிட்டிருக்க, பெண்ணவளும் கணவன் ஆணையிட்டது போல் வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்ய தொடங்கினாள். ‘எனக்காக சமைக்க விருப்பமில்லாதவளிடம் நான் எதுக்கு பேசணும்?’ என்று அவனும், ‘அன்னைக்கு என்னை எப்படியெல்லாம் கேவலமா பேசினான்…அவன்கிட்ட நான் எதுக்கு பேசணும்?’ என்று அவளும் வீம்புடன் நாட்களை கடத்தினார்கள். ஆனால் அவர்களது பிடிவாதமும் சினமும் அடுத்த இரண்டு நாட்களிலேயே சிறிது குறைய தங்களது துணையின் மனநிலையை ஆராய ஆரம்பித்தினர். ‘அன்னைக்கு அவளை அப்படியே ரோட்டில் விட்டு போயிட்ட… அதுக்கு அப்புறம் அவள் எப்படி வீடு கண்டுப்பிடிச்சு வந்தாளோ?உன் கூட வந்ததால் சாவி எடுத்து வந்திருந்தாளோ என்னவோ?’ என துருவ்வின் மனசாட்சி அவனிடம் கேள்வி எழுப்ப, அதன் பிறகே சரியான பாதையில் சிந்தித்தவனிற்கு […] - [நயனம் 3](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): துருவ் மற்ற உயிர்களின் மீது கொண்ட கருணை கூட தாலிக்கட்டி அழைத்து வந்த தன் மனைவியிடம் வெளிபடுத்தாததில் உடைந்து நொறுங்கிப் போனாள் குமரியவள். ‘எதற்காக நாம் அவனை திருமணம் செய்து அவனுடன் வந்தோம்?’ என அவளது மனசாட்சி வேதனையுடன் கேள்வி எழுப்பினாலும்,அவளது தாய் தந்தையினர் சிரித்த முகம் கண்முன் தோன்றிட,அடுத்த வினாடியே அவளுள் இருக்கும் துணிச்சல் வீறு கொண்ட சிங்கமென சீறி எழுந்ததினால் அழுகைக்காக கெஞ்சிய கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். தன் கைகளில் நெகிழி பையை எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் நோக்கியவளின் முகம் ‘கண்டேன் சீதையை’ என்பது போல் பரவசத்துடன் ஒளிர்ந்தது. ஏனெனில் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் அவளுடன் விளையாடும் சிறுவன் ஒருவனின் தாயை கண்டவள்,உடனடியாக மான் போல் துள்ளி குதித்து ஓடி அவரிடம் உதவிக் கோரினாள். அவரும் நல்ல மனம் படைத்தவர் என்பதால் அவளை கண்டு புன்னகைத்து அவளை அவர்களது அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றார். அதேசமயம் […] - [நயனம் 2](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): கணவன் மாலை வீடு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக உறங்கி விட்டு எழுந்த வடிவு ‘ஹப்பாடி செம்ம வேலை…செம்ம தூக்கம்’ என உடலை முறுக்கி சோம்பல் முறித்து கடிகாரத்தில் மணி பார்த்தவளிற்கு தேகம் தூக்கிவாரிப்போட்டது. ‘ஆத்தாடி ஆத்தா…இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த கடங்காரன் வந்து சாப்பிட ஏதாவது கேட்பானே தின்னிபண்டாரம்’ என அவசரமாக பதறியடித்து எழுந்தவள் சமையலறை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். கிராமத்தில் வளர்ந்தாலும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் என்பதாலும், அவளது வீட்டில் பணிப்புரிய நிறைய வேலையாட்கள் இருந்ததினால் இத்தனை நாட்கள் மெத்தனமாக இருந்து விட்டாள். ஆயினும்,மற்ற பணிகளை வேலையாட்கள் மேற்கொண்டாலும் சமையலை வீட்டு பெண்கள் மட்டுமே பார்ப்பதினால் சமையலில் நன்றாக கற்று தேர்ந்திருந்தாள் வடிவாம்பாள். அதனால் எந்த வித யோசனையுமின்றி விரைவாக முடிக்கக் கூடிய உணவுகளை சமைத்துக் கொண்டிருக்கையிலே வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது. ‘அச்சோ மாமா வந்துட்டாரு போலவே’ என புலம்பிக் கொண்டே கதவை பதட்டத்துடன் […] - [நயனம் 1](https://storybypm.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): “கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என புரோகிதர் ஒற்றை விரலசைத்து குரல் கொடுக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தாரின் ஆசிர்வாதத்தில் துருவ் அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிப் பாதியாக்கிக் கொண்டான். நாணை கர்வத்துடன் பூட்டிவிட்டு தன் இணையானவளின் முகத்தை பார்த்து ரசிப்பதற்காக புன்னகையுடன் திரும்பியவன்,அருகில் கருமை நிறத்தில் நெற்றியில் பெரிய வட்டவடிவ பொட்டு வைத்து மாங்காய் பிஞ்சு மூக்குத்தி அணிந்து வெண்ணிற பற்கள் பளீச்சென ஒளிர  ‘ஈ’ என்று இளித்த பெண்ணவளை கண்டு அதிர்ந்து “ஆஆஆஆஆ” என பயத்தில் அலறி துள்ளி குதித்து எழுந்தான் துருவ் விக்ரமாதித்தன். கட்டிலில் எழுந்து அமர்ந்தவனின் முகங்மெங்கும் வியர்த்திருக்க,பதட்டத்தில் இருந்தவன் அப்போது தான் ‘தாம் கண்டது கனவு’ என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தவனின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது போல், “மாமா என்னாச்சு??” என பதறியடித்துக்கொண்டு சமையல் கரண்டியுடன் அந்த அறைக்குள் ஓடி வந்தாள் அவனது மனைவி வடிவாம்பாள். அதன்பிறகே தனக்கு நடந்தேறிய திருமண நிகழ்வு தினந்தோறும் கனவாக வந்திருக்கிறது […] - [இறுதி அத்தியாயம்](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): கிருஷ் குழந்தைக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைத்து கொண்டிருந்தான். ஶ்ரீநிதி அதைப் பார்த்து கொண்டே சிரிப்புடன் “ஷிவ் என்ன பண்ணுரீங்க…உங்கள் பையன் ரொம்ப குறும்பு பண்றானா…??” என்று கேட்டவாறு குழந்தையின் அருகில் கட்டிலில் படுத்தாள். கிருஷ் ஶ்ரீநிதியைப் பார்த்தவாறு “ஆமாம்…அப்படியே அவங்க அம்மா மாதிரி…எப்போது பார்த்தாலும் சேட்டைப் பண்ணுறான்” என்று சலிப்புடன் கூறியவனின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. அதைக்கண்டு கொண்ட ஶ்ரீநிதி குறும்புடன் “என் பையன் அப்படி தான் பண்ணுவான்…நீங்க எத்தனை நாள் அவனுடைய அம்மாவை அதட்டி மிரட்டுயிருப்பீங்க…இப்போது நீங்க அவன் குறும்பை சமாளிங்க…!!” என்று தெனாவட்டாக கூறினாள். உடனே கிருஷ் “ஏய் குண்டச்சி…!!ரொம்ப தான் பண்ணுறே…குழந்தை நடுவில் இருந்தனாலே தப்பிச்சே…இல்லைனா… என்றவுடன், ஶ்ரீநிதி குறும்புடன் “இல்லைனா…என்ன பண்ணுவீங்க ஷிவ்…” என்றாள் கிறக்கமாக. கிருஷ் “ஏய் குண்டச்சி…என்னைப் பார்த்தால் உனக்கு பாவமாக தெரியலையாடி…அங்க இருக்கும்போது தான் குழந்தை பிறந்துச்சுனு…உன்னை சுற்றி வீட்டு ஆளுங்க இருந்துட்டே இருக்காங்கனு…சரி ஒரு வாரம் ஜாலியாக இருக்கலாம்னு…உன்னை இங்க […] - [அத்தியாயம் 29](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கீதா உன்னுடைய கணவன் பெயரைச் சொல்லு என்றவுடன்…ஶ்ரீநிதி மெதுவாக தன் கணவன் பெயரை உச்சரித்தாள். அது “கி..ரு..ஷி..வ்..ந..ந்..த..ன்” என்று கூறியவுடன்,நிஷா அதிர்ந்தாள். இரண்டு முறை ஶ்ரீநிதி “நிஷா…நிஷா” என்று அழைத்தப்பிறகு தான் நிஷா சுயநினைவு வந்தாள். சுயநினைவு வந்தவுடன் நிஷா கோபத்துடன் “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானேடி…நான் வேறே நீ கிருஷ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கலை என்ற கோபத்தில்…இவ்வளவு நேரமும் உன்னை…மனசுகுள்ளே திட்டிட்டே இருந்தேன்…” என்று கூறியவள் தொடர்ந்து, “ஏன்டி…நாம் அன்றைக்கு ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும் போது நீ உன் ஹாஸ்பென்ட் பேரு ஷிவ்னு தானே சொன்னே…??” என்றாள் சந்தேகத்தோடு. ஶ்ரீநிதி நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள். அதுவே சொல்லாமல் சொல்லியது நீ தப்பாக புரிஞ்சிக்கிட்டு என்ன சொல்லுறியா…?? என்று,அதன்பிறகு நிஷா நன்றாக யோசித்து மனதில் ‘ஆமாமில்லை ஶ்ரீநிதி அன்றைக்கு அவள் கணவனை அறிமுகப்படுத்தவேயில்லையே… அவள் ஷிவ்னு கூப்பிட்டதை வைத்து…நாம் தானே ஶ்ரீநிதி ஹஸ்பென்ட் பேரு…ஷிவ்னு நினைச்சோம்’ என்று தன்னையே திட்டி […] - [அத்தியாயம் 28](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): தன்னை தவிப்போடு வில் சேரில் உட்கார்ந்தவாறு பார்த்து கொண்டிருப்பவரைப் பார்த்த ஶ்ரீநிதி “பெரியப்பா உங்களை மன்னிக்கும் அளவு பெரிய ஆள் நானில்லை…உங்கள் மேல் எனக்கு கோபமில்லை…ஏனெனில் இப்படியொரு அப்பா அம்மா எனக்கு உங்க மூலமாக தான் கிடைச்சிருக்காங்க…அதனால் எனக்கு எந்த கோபமும் இல்லை…??” என்று கூறி புன்னகை புரிய முயன்றாள். ராம் “இன்னும் என்ன பெரியப்பா…அப்பானு சொல்லுமா…??” என்றவரை, “இல்லை பெரியப்பா…உங்களுக்கு மீரா அக்கா மட்டும் தான் பொண்ணு…நான் இவங்களோட பொண்ணாக இருக்கமட்டும் தான் ஆசைப்படுகிறேன்…என்று விசுவையும் ஜானகியையும் காண்பித்துவிட்டு, “நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது…பெரியம்மாவிடமும் அப்பாயி இடமும் தான்…அதனால் அவங்களிடம் மன்னிப்பு கேளுங்கள்…!!” என்று பெருந்தன்மையுடன் கூறினாள். அதைக்கேட்ட ஜோதிக்கும் குந்தவைக்கும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.இப்படிப்பட்ட பொண்ணையா நாம் தப்பாக பேசினோம்…நடத்தினோம் என்று வேதனைப்பட்டனர். ராமிற்கு ஶ்ரீநிதி அப்பா என்று கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருந்தது…இருந்தும் அவள் சொல்லவதும் சரி தான் என்று முடிவு செய்து தன் தாயிடமும் தாரமிடமும் […] - [அத்தியாயம் 27](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): ஶ்ரீநிதி கண்ணீரோடு “வீட்டிலிருந்து மீராவைக் கூட்டிட்டு போன கிருஷ் அத்தான் காருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…!!” என்றவுடன், “வாட் ஆக்ஸிடென்ட்டா…??” என்று அதிர்ந்தாள் நிஷா. ஶ்ரீநிதி ஆமாம் என தலையாட்டி மறுபடியும் பழைய கதையைக் கூற ஆரம்பித்தாள். கிருஷ்…ராம்…மீரா மூவரும் காரில் பயணித்து கொண்டிருந்தனரே ஒழிய எதுவும் பேசாமல்…அமைதியாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சிந்தனையில் மூழ்கியிருந்தனர். கிருஷ் ‘மீரா எதுக்கு ஶ்ரீநிதிக்கு இந்த அநியாயம் செய்தாள்.அப்படி அவளை எதிரியாக நினைக்கும் அளவு என்ன நடந்தது…??’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். ராம் ‘இவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் இந்த மாதிரி பண்ணியிருப்பாள்…எல்லாம் இந்த அம்மாவால் வருது…அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்காங்க’ என்று அவளையும் தன் அம்மாவையும் மனதில் வைது கொண்டிருந்தார். மீரா தன் மனதில் ‘இந்த அப்பாவும் கிருஷ் அத்தானும் என்ன பேச போறாங்க…ஒரு வேளை எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா…??’ என்று பயத்துடன் உட்கார்ந்திருந்தாள். இப்படியாக மூவரும் வெவ்வேறு நிலையில் யோசித்துக் கொண்டிருக்கும்போது…தீடிரென்று பக்கவாட்டிலிருந்து வந்த […] - [அத்தியாயம் 26](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/):   ரிஷி அவன் நண்பனின் சட்டையைப் பிடித்து “ஏன்டா…துரோகி இப்படி பண்ணினே…??உன்னை எப்படி நம்பினேன்…??உங்க அண்ணன் ஶ்ரீநிதியைக் காதலிக்கிறாருனு முன்னாடியே சொல்லிருந்தால்…நான் எங்க வீட்டில் பொறுமையாக எடுத்து சொல்லியிருப்பனே…ஆனால் ஏன்டா இப்படி பண்ணினே…!!” என்று கூறி அவனை அறைந்தான். தாத்தா தான் நடுவில் வந்து “விடுங்கப்பா…அவங்க போகட்டும்… இனிமே இந்த மாதிரி தப்பு தப்பாக நடந்துக்காதீங்க…!வெளியே போங்க…!” என்று கூறினார். அவர்கள் போகும்போது “உன்னை இருடா பார்த்துகிறேன்…எங்களை அவமானப்படுத்திய உன்னை சும்மாவே விடமாட்டோம்…” என்று கூறிவிட்டு சென்றனர். “ஏய் போங்கடா…” என்று கூறிவிட்டு ஶ்ரீநிதியைப் பார்க்க சென்றனர் கிருஷும் ரிஷியும். அங்கே அறையின் வெளியே நின்று கொண்டிருந்த யசோதாவிடம் “பெரியம்மா ஶ்ரீநிதிக்கு இப்போது எப்படி இருக்கு…” என்று தவிப்புடன் கேட்டான் கிருஷ். “தெரியலைப்பா…விசு மாப்பிள்ளை தான் பார்த்துட்டு இருக்காரு…!!” என்றார் அவரும் பதட்டத்துடன். விசு அறைக்கு வெளியேவந்து “ஒண்ணுமில்லை சாதாரண மயக்கம் தான்…ஆனால் காய்ச்சல் வர மாதிரி இருக்கு…நான் ஊசிப் போட்டுயிருக்கேன்…கொஞ்சம் நேரம் […] - [அத்தியாயம் 25](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): வாட்ச்மென் அதை மீராவிடம் தான் கொடுத்தேன் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து…அடுத்த நிமிடம்…ஶ்ரீநிதி தெளிவுடன் ‘இது கண்டிப்பாக மீரா…தான் செய்திருப்பாள்’ என்று நம்பினாள். ஏனெனில் அவளின் அறைக்கு அனுமதி இல்லாமல் நுழையக் கூடியவர்கள் வாணி,ரிஷி,கீதா அடுத்து மீரா…மற்றவர்கள் யாரும் இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை…அதனால் மீரா தான் செய்திருப்பாள் என்று உறுதியாக நம்பினாள். அதையே ரிஷியிடமும் கூறினாள்.ஆனால் அவன் ஶ்ரீநிதியிடம் “அவள் எதற்கு இதை எடுத்திட்டு போய் அண்ணாவிடம் கொடுக்கணும்…?அதற்கான அவசியம் தான் என்ன…???” என்று குழப்பத்துடன் கேட்டான். ஶ்ரீநிதிக்கே அது தெரியவில்லை.இருந்தும் அவனிடம் “ரிஷி…அதை அக்கா தான் சொல்லணும்…!இப்போ இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் ரிஷி…!!சமயம் கிடைக்கும் போது நாம் அக்காவிடம் கேட்கலாம்…!!!” என்று கூறியவுடன் ரிஷி தலையாட்டினான். ஶ்ரீநிதி அன்று இரவில் படுக்கையில் விழுந்து “ஓ…ஐயாவுக்கு ரமேஷைப் பற்றி சொல்லைனு தான் கோபம் போல…அதற்கு என்னிடம் பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகிடுமா…??சரியான லூசு அத்தான் நீங்க…?சரி […] - [அத்தியாயம் 24](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): என்ன பண்ணுவது என்று மீரா யோசித்து கொண்டிருந்தாள்… அப்போது பார்த்து மீராவின் செல் போன் அலறியது…அந்த நம்பரைப் பார்த்தவுடன் இன்னும் எரிச்சல் தான் வந்தது. இருந்தும் அதை எடுத்து காதில் வைத்து எரிச்சலாக “சொல்லு??” என்றாள். அந்தப்பக்கம் “மீரா என்னச்சுங்க…?ஏன் கோபமாக பேசிறீங்க…?” என்றான் ரமேஷ். “பேசாமல் போனை வைங்க…அப்புறம் ஏதாவது திட்டிட போறேன்” என்றாள் இன்னும் எரிச்சலாக. ரமேஷ் இப்போது டென்ஷனாகி “இப்போது… உங்களுக்கு என்ன தான் பிரச்சினை…??” என்றான் அவனும் எரிச்சலுடன். மீரா திமிராக “இங்க ஒண்ணும் நடக்கலை அதுதான் என் பிரச்சினை…?நீ சரியான வேஸ்ட்…நீ மட்டும் ஒழுங்க நடித்திருந்தால் இந்நேரம் இரண்டு பேருக்கும் பலமான சண்டை வந்து பிரிஞ்சிருப்பாங்க…ஆனால் இங்க அப்படி ஒண்ணும் நடக்கலை…?உன்னை போய் என்கூட சேர்த்துக்கிட்டேன் பாரு…என்னை தான் ……..ஆல் அடிக்கணும்…?” என்று அவனை மரியாதையில்லாமல் பேசினாள். அவள் சொல்லாமல் விட்ட வார்த்தையை அறிந்த ரமேஷ் கோபமாக “ஏய்!!உனக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா…?இப்படியெல்லாம் உன் […] - [அத்தியாயம் 23](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கிருஷ் மனதில் ஶ்ரீநிதியை நன்றாக வறுத்து எடுத்து கொண்டிருந்தான். ‘ஏய் குண்டச்சி…உனக்கு மனசிலே பெரிய இவள் நினைப்பா…??சரியான திமிரு பிடிச்சவே…??எத்தனை நாளைக்கு இதை எங்களிடமிருந்து மறைக்க முடியுனு நினைக்கிறே…ஒரு நாள் இல்லைனா…ஒரு நாள் இது வெளியே வர தான் போகுது…அப்போ இருக்குடி உனக்கு…!!பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களே…கூறு கெட்டவனு…அது கண்டிப்பாக உனக்கு ஏற்றப்பெயர் தான்’ என்று அவளை மனதார வைதான். ஆனாலும் அவனின் இன்னோரு மனம் ‘அவள் இதனால் ஏதாவது பிரிச்சினையில் மாட்டிக்கொண்டாள்…என்ன செய்வது…?’ என்று மனம் வருந்தினாலும், அடுத்த நிமிடமே ‘இந்த குண்டச்சி வந்து எதைப் பற்றியும் சொல்ல மாட்டாள்…நான் அவளை நினைத்து எதுக்கு வருத்தப்படணும்…நானே வழிய போய் அவளிடம் கேட்கணுமா…நான் கேட்கமாட்டேன்…!!’ என்று மறுபடியும் முறுக்கினான். சிறிதுநேரத்திலே ‘இரண்டு நாளாக ஏதோ தப்பாக நடக்கப் போவது போல்…என் மனசு சொல்லுதே…இந்த ஶ்ரீநிதி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளா…??’ என்று மறுபடியும் வருத்தப்பட்டான். இப்படி மாறி மாறி யோசித்து அவளிடம் தாழ்ந்து போய் […] - [அத்தியாயம் 22](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அலுவலகத்தில் ரிஷியிடம் பேசி…போனை வைத்தவுடன்… மீரா உள்ளே வந்து ஶ்ரீநிதியைப் பற்றி பேச வேண்டும் என்று கூறி…அவன் இருக்கைக்கு எதிரே அமர்ந்து…பேச ஆரம்பித்தாள். “அத்தான்…நான் சொல்லுற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்…ஆனால் இதை நீங்க நம்பணும் அத்தான்…” என்று பிடிகையுடன் ஆரம்பித்தாள். கிருஷ் எரிச்சலுடன் “முதலில் விசயத்தை சொல்லு…அப்புறம் நான் அதிர்ச்சியாகிறேனா…இல்லையானு பார்ப்போம்” என்றான். “அத்தான்…ஶ்ரீநிதி ஒருத்தரைக் காதலிக்கிறாள்” என்று கூறி அவன் முகத்தைப் பார்த்தாள்.ஆனால் அவன் முகத்தில்…இதில் என்ன இருக்கிறது என்ற முகபாவம் இருந்தது.அதைப் பார்த்து இவர் என்ன கோபப்படுவாருனு பார்த்தால் அமைதியாக இருக்காரு என்று எரிச்சலடைந்தாள். இருந்தும் விடாமல் தன் கைபையில் இருக்கும் அந்த லெட்டர் மற்றும் பார்சலை எடுத்து…அவனிடம் கொடுத்து  “என்னை நம்பலைனா… இதைப் படிச்சு பாருங்க” என்றாள். இவ்வளவு நேரமும் ஶ்ரீநிதி தன்னை தான் விரும்புகிறாள் என்று லேசாக இருந்தவன் இந்த பார்சலையும் கடிதத்தையும் பார்த்துவிட்டு கோபமடைந்தான். கிருஷ் “ஏய்…இது எப்படி உன் கையில் கிடைச்சது…??அவளுக்கு […] - [அத்தியாயம் 21](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): ஶ்ரீநிதி கீதாவை அழைத்து கொண்டு…ஆட்டோ ஒன்றை பிடித்து கே.என்.ரா மருத்துவமனைக்கு சென்றாள்.நடுவில் கீதா என்னடி என்னச்சு…??என்று நிறைய முறை கேட்டும் ஒன்றும் பதில் சொல்லாமல் “கீதா…கொஞ்சம் அமைதியாக வாடி…நான் அங்கே போய் எல்லா விவரமும் சொல்லுகிறேன்” என்று பதட்டத்துடன் கூறியவளை அதற்கும் மேல் கேள்வி கேட்டு தவிக்கவிடாமல்…கீதா வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஆட்டோ சென்று…மருத்துவமனையில் நின்றவுடன்…ஶ்ரீநிதி அவசரமாக அதிலிருந்து இறங்கி…பணம் கொடுத்துவிட்டு… மருத்துவமனையின் உள்ளே நுழையும்போது…எதிரில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நிமிடம் நிம்மதி பரவியது.ஆனால் அந்த நிம்மதி சிறிது நேரத்தில் கோபமாக மாறி இருக்க…அடுத்த நிமிடம் கோபத்தில் முகம் சிவக்க அவன் அருகில் சென்று அவன் சட்டையைப் பிடித்து “ஏய்…நீ நல்லா தானே இருக்கே…அப்புறம் எதுக்கு உனக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி வரவச்சிருக்கே…??அப்போ நீ என்னை பொய் சொல்லி வரவச்சிருக்கே அப்படிதானே…?எதுக்கு உனக்கு இந்த பொய் பித்தலாட்டமெல்லாம்…??” என்று அவன் […] - [அத்தியாயம் 20](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): ரிஷி காலையிலிருந்து மிகுந்த அதிர்ச்சியில் இருந்தான்.காலையில் சீக்கிரமாக எழுந்து கிருஷுடன் ஜாகிங் போய்விட்டு வந்தவன்…தன் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து தன் செல்போனைத் தேடினான். தேடியவனுக்கு தன் செல்போனை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை…அதனால் ஶ்ரீநிதியிடமிருந்து அவள் போனை வாங்கி தன் செல்லுக்கு அழைக்க எண்ணி அவள் அறையின் கதவைத் தட்டினான். ஆனால் கதவை வந்து திறந்தது வாணி…ரிஷி அவளிடம் “ஶ்ரீ என்ன பண்ணுறா…??” என்று கேட்டான். வாணி தூக்க கலக்கத்திலே “அக்கா…தூங்கிட்டு இருக்காள்…என்ன வேண்டும் அத்தான்…??” என்று வினவினாள். “தூங்கறாளா…அப்போ சரி உன் போன் கொஞ்சம் கொடுக்கிறீயா…??” வாணியும் நல்ல தூக்கத்தில் இருந்ததினால் என்ன ஏது என்று கேட்காமல் தன் போனைக் கொடுத்துவிட்டு தன் படுக்கையில் விழுந்தாள். ரிஷி தான் ‘சரியான கும்பகர்ணி…!’ என்று திட்டிவிட்டு…அவன் அறைக்கு வந்தான்.பிறகு அவள் மொபைலில் தன் பெயர் இருக்கிறதா…என்று பார்த்தான்.ரிஷி என்று எதுவுமில்லை என்றவுடன்…இவள் என் பெயரை எதுவோ கேவலமாக சேவ் பண்ணிவச்சுருப்பா போலவே…என்று […] - [அத்தியாயம் 19](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கிருஷும் தன்னை காதலிக்கிறார் என்று…கீதா சொன்னதிலிருந்து ஶ்ரீநிதி வானில் பறந்துகொண்டிருந்தாள்…காலையில் எழுந்ததிலிருந்து அவள் அங்கு அங்கு நின்று கனவு கண்டு கொண்டிருப்பதை பார்த்த…கீதாவிற்கு தான்…அவளை சமாளிப்பது…பெரும் பாடாக இருந்தது. இதற்கெல்லாம் மேல் குளிக்க சென்றவள்…ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வெளியில் வராமல் இருக்கவும்…கீதா என்னவோ ஏதோ என்று பயந்து கதவைத் தட்டினாள்.முதலில் ஶ்ரீநிதி எதுவும் பதில் சொல்லவில்லை…ஆதலால் கீதா பதட்டம் அடைந்து…ஶ்ரீநிதியை அழைத்து கொண்டே இன்னும் வேகமாக கதவைத் தட்டினாள். இப்போது ஶ்ரீநிதி கதவை வேகமாக திறந்து “என்னடி…??எதுக்கு இப்போது கதவு உடையும் அளவுக்கு தட்டிட்டு இருக்கே…??” என்று எரிச்சலுடன் கேட்டாள். கீதாவிற்கு இப்போது பயம் குறைந்து ஶ்ரீநிதியை முறைத்துக்கொண்டே “நான் எத்தனை தடவை கதவை தட்டினேன் என்று தெரியுமா…??நீ பதிலே சொல்லலை…அதனால் தான் வேகமாக கதவைத் தட்டினான்…ஆமாம் அது இருக்கட்டும்…என்று அவளை மேலிருந்து கீழே வரை சந்தேகமாக பார்த்து பார்த்துவிட்டு, “நீ உள்ளே குளிக்க போய் ஒரு மணி நேரமாகுது…ஆனால் உன்னை […] - [அத்தியாயம் 18](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): வெளியே வந்த ஶ்ரீநிதி தன் அம்மாவிடம் “எனக்கு பசிக்கவில்லை அம்மா…அதனால் கொஞ்சம் மட்டும் சாப்பாடு வைங்க” என்றுவிட்டு சாப்பிட அமர்ந்தாள். அவள் அப்படி சொன்னவுடன் கிருஷ்,கீதா மற்றும் ரிஷி எல்லாரும் திகைத்து அவளைப் பார்த்தனர்.ஏனெனில் காரில் வரும்போது ஶ்ரீ “எனக்கு ரொம்ப பசிக்கிறது…வீட்டிற்கு போய் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டணும்” என்று சொன்னவள் இங்கு வந்து பசிக்கவே இல்லை என்று சொன்னால் எல்லாரும் இப்படி தான் பார்ப்பார்கள். ஆனால் ரிஷி கொஞ்சம் முன்னேறி “ஶ்ரீ நீ…” என்று ஆரம்பிக்க போனவனைக் கிருஷ் பார்வையால் அதட்டி சாப்பிட சொன்னான்.அதைப்பார்த்த கீதாவும் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை கவனித்தாள். அவள் முகமே ஏதோ சரியில்லை என்பதை அறிந்த ஜானகி “என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கே…??” என்று கேட்டார். “ஒண்ணும் இல்லைம்மா…கொஞ்சம் தலைவலிக்கிறது போல் இருக்கும்மா…வேறே ஒண்ணும் இல்லை…என்றவுடன், ஜானகி பதறி அவள் கழுத்து தலையைத் தொட்டு பார்த்து சூடு இல்லை என்றவுடன் தான் அப்பா என்று […] - [அத்தியாயம் 17](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அடுத்தநாள் காலையில் எழுந்த ஶ்ரீநிதி தன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைப் பார்த்தவள்…அதை ஆசை ஆசையாகப் பிரித்தாள்.பிரித்து அதில் இருந்தவற்றை பார்த்து பதறியடித்து ஓடி தனது தோழியை வேகமாக தன் அறைக்கு இழுத்து வந்தாள். கீதா அவளிடமிருந்து தன் கையை இழுத்து கொண்டே “ஏய் லூசு…கையை விடுடி…எதுக்கு என்னை இப்படி இழுத்திட்டு வரே…!!” என்று எரிச்சலோடு கேட்டாள். ஶ்ரீயும் அதே எரிச்சலுடன் “இதை முதலில் பாருடி…அதைப் பார்த்தவுடனே நீ…இப்போது விட இன்னும் அதிகமாக டென்ஷன் ஆகுவே…!!” என்றவாறு கையில் அந்த பார்சலை திணித்தாள். கீதா வாங்கி அந்த பார்சலைப் பிரித்து அதில் இருந்த பொருளைப் பார்த்து அதை கையில் எடுத்தாள்.அது ஒரு கொலுசு என்று பார்த்துவிட்டு ஶ்ரீயைத் திரும்பி முறைத்தாள். “இதைப் பார்த்திட்டு தான்…என்னை இப்படி இழுத்திட்டு வந்தியா கிறுக்கி…?இதில் என்ன இருக்கு…நேற்று மாதிரி யாரவது இதை வச்சிருப்பாங்க…?” என்றாள் கோபமாக. “நீ தான்டி லூசு…” என்று திட்டிவிட்டு, நக்கலாக “மேடம்…!!கொஞ்சம்…அதிலே […] - [அத்தியாயம் 16](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): மாலையில் வீட்டினை சாதாரணமாக அலங்கரித்து ஒரு சின்ன பார்ட்டி மாதிரி செய்தனர். காலையில் எவ்வளவுக்கு எவ்வளவு பாரம்பரிய உடை உடுத்தியிருந்தளோ மாலையில் அதற்கு நேரெதிராக நவீன உடையை அணிந்திருந்தாள் ஶ்ரீநிதி. இளஞ்சிவப்பு நிற கலரில் பொன்னிற ஜமக்கியால் டிசைன் செய்யப்பட்ட லேஹன்கா சோளி அணிந்திருந்தாள்.இதுவும் அவள் நிறத்திற்கு பாந்தமாக பொருந்தியது. யசோதா தன் பேத்தியின் அழகை கண்டு பூரித்து “இத்தனை அழகும் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…?” என்று கூறி அவளுக்கு தீர்ஷ்டி கழித்தார். அவர் அப்படி கூறியவுடன் அவள் கண்ணுக்கு முன்னால் தோன்றிய முகம் கிருஷ்.உடனே அவள் முகம் சிவந்தது. அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த யசோதா இன்னும் பூரித்து அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார். அதன்பிறகு ஒரு ஆறு மணி அளவில் வீட்டு ஆட்களோடு சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினாள். அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எண்ணி அவளது தாய் ஜானகி தன் இனிமையான குரலில், “தேவதை வம்சம் […] - [அத்தியாயம் 15](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் இன்றைய விடுமுறை தினம் ரிஷியுடையது…ஆனால் அவன் இன்றைய தினத்தை ஶ்ரீநிதிக்கு பிறந்தநாள் என்பதால்…அவள் விருப்பத்திற்கு விட்டு கொடுத்தான். ஶ்ரீநிதி அந்த தினத்திற்கான திட்டத்தை வகுக்கும் முடிவைத் தாத்தாவிடமே விட்டாள்.அவர் ஒருமனதாக எல்லோரும் கோயிலுக்கு சென்றுவிட்டு…மாலையில் வீட்டிலே ஒரு சின்ன பார்ட்டி மாதிரி வைக்கலாம் என்று தன் திட்டத்தைக் கூறினார். அதன்படி ஶ்ரீநிதி அந்த புடவையிலே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அனைவருடன் பிரகாரத்தில் உட்கார்ந்தாள்.எல்லாரும் அமர்ந்து ரொம்ப நேரம் பேசி கொண்டிருக்கவும் போர் அடித்து…ஶ்ரீ அவர்களிடம் நான் சும்மா இந்த பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வருகிறேன் என்று கூறி எழுந்தாள். அவளுடன் வாணி,கீதா ரிஷி,அப்புறம் தயாவின் குழந்தைகள் எல்லோரும் வரோம் என்றவுடன் எல்லோரையும் அழைத்து கொண்டு புறப்பட்டு பிரகாரத்தைச் சுற்றி வரும் போது…அங்கே ஒரு கிளி ஜோசியர் இருப்பதைப் பார்த்த ஶ்ரீ முகத்தைச் சுருக்கி “அவரிடம் ஜோசியம் பார்க்கலாம்ப்பா பிளீஸ்…!!” என்று ரிஷியிடம் கெஞ்சினாள். ரிஷியும் வேற வழியில்லாமல் சரி […] - [அத்தியாயம் 14](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): தன் தோழியின் அழகை ரசித்துவிட்டு அவளை எழுப்பி கட்டியணைத்து “ஏய்…செம்ம அழகாக இருக்கடி…நான் மட்டும் ஆம்பிளையாக இருந்தேன்…உன்னை இந்நேரம் கடத்தி கொண்டு போய் தாலிக் கட்டிருப்பேன்” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். “ஏய்…ச்சீ போடி…” என்று அவளைத் தள்ளிவிட்டாள். கீதாவும் விடாமல் அவளைக் கிண்டல் செய்து “உனக்கு இந்த புடவை ரொம்ப அழகாகப் பொருந்தி இருக்குடி…இது யார் வாங்கி கொடுத்ததுடி…உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்டி” என்றாள். அவள் அப்படி கூறவும் அவள் கண் முன்னால் வந்தது கிருஷ் தான்…இருந்தாலும் அதனை ஒதுக்கிய ஶ்ரீநிதி ‘எனக்கே தெரியாது’ என்பதைப் போல் உதட்டைப் பிதுக்கினாள். கீதா திகைத்து “என்னது உனக்கு தெரியாதா…??அப்புறம் ஏன்டி இதைக் கட்டி இருக்கே…??” என்று கேட்டாள். “கண்டிப்பாக யாரவது…எங்க குடும்பத்தில் தான் எனக்காக ஆசையாக வாங்கியிருப்பாங்க…அதனால் தான்டி நான் இதையெல்லாம் போட்டேன்” என்றவாறு தான் அணிந்தவற்றைக் கைகளால் காண்பித்தாள். அதன்பிறகு இருவரும் சேர்ந்து தாத்தாவின் அறைக்கு சென்று ஶ்ரீ […] - [அத்தியாயம் 13](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): நாளை ஶ்ரீநிதியின் பிறந்தநாள் என்பதற்காக…அவளை இரவு 12 மணிக்கு ஆச்சரியப்படுத்த எண்ணி அவளுடைய பெற்றோர் மற்றும் அந்த வீட்டின் இளைய தலைமுறையினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கும்…அவளின் படுக்கையின் அருகில் சத்தமில்லாமல் நின்று கொண்டு இருந்தனர். கடிகாரத்தில் சரியாக பன்னிரெண்டு மணி அடித்ததும்…எல்லாரும் ஒரு சேர…பிறந்தநாள் வாழ்த்து பாடலைப் பாடினார்கள்.அதைகேட்டு அவசரமாக எழுந்தவளுக்கு இவர்கள் அனைவரையும் பார்த்தவுடன்…அவளுடைய முகம் மலர்ந்து தனது மகிழ்ச்சியைக் காட்டியது. கீதா தனது தோழிக்கு வாழ்த்து சொல்ல எண்ணி இங்கேயே தங்கியிருந்தாள். அதன்பிறகு அனைவரும் கேக் வெட்டி அவளுக்கு ஊட்டினார்கள். அவளும் அனைவருக்கும் கேக் ஊட்டினாள்.அப்படி ஊட்டி கொண்டே வரும்போது கிருஷிடம் வந்தவுடன் ஒரு தயக்கம் வந்தது…அதனால் அவனுக்கு ஊட்டிவிடாமல் கையில் கேக்கை தந்துவிட்டு ஓடிவிட்டாள்…ஓடி போகும் அவளின் செயலைப் பார்த்து சிரிப்புடன் அந்த கேக்கை சாப்பிட துவங்கினான். தனது தாயின் அருகில் சென்று கிருஷைத் திரும்பி பார்த்தாள்…அவன் இவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டே அந்த கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…அதைப் […] - [அத்தியாயம் 12](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கீதா வந்தவுடன் அவளுக்காக காத்திருக்கும் ஶ்ரீயை கொஞ்சம் கூட மதிக்காமல் அவள் கேபினுக்குள் நுழைந்தாள்.அவளை பின் தொடர்ந்து ஶ்ரீயும் அந்த கேபினுக்குள் நுழைந்தாள். கீதா அவள் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் ஶ்ரீயும் அதற்கு எதிரே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து “கீதா நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளுடி பிளீஸ்டி” என்றாள். கீதா டேபிளில் இருக்கும் முக்கியமான பைலை எடுத்து பார்த்தாள்.ஶ்ரீ அவளிடம் இருந்து அதனைப் பிடுங்கி வைத்துவிட்டு “கீது பிளீஸ்டி…நான் என்ன சொல்லறேனு கொஞ்சம் கேளுடி..!.நீ ரமேஷ் பற்றி பேச ஆரம்பித்த உடனே எனக்கு எரிச்சலாக இருந்ததுடி…எங்க உன்னை திட்டிவிடுவனோனு…நினைச்சு செல்லை மூயுட்டில் போட்டுட்டேன்டி…!!” என்றவுடன் கீதாவிற்கு இன்னும் கோபம் வந்தது. “ஏன்டி நான் என்ன சொல்ல வரேன்னு கூட தெரியாமல்…நீ பாட்டுக்கு மூயுட்டில் போட்டுவிட்டு உன் வேலையா பார்த்திட்டு இருக்கே… இவள் ஒரு கேனச்சி தான்…அதனால் இந்த லூசு பாட்டுக்கு தனியாக பேசிட்டு இருக்கட்டும்னு… விட்டுட்டே…அப்படிதானே” என்று கோபத்துடன் வினவினாள். ஶ்ரீ “ஏய் பிளீஸ்டி…நான் […] - [அத்தியாயம் 11](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கீதா தன் தோழியிடம் தன்னுடைய மனதை அரிக்கும் அனைத்து கேள்விகளையும் கேட்டாள். அதற்கு ஶ்ரீ சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து தன் கையில் இருந்த போனை தவறவிட்டதை கூட அறியாமல் உறைந்து நின்றாள். ஶ்ரீ அந்தப்பக்கம் “ஏய் கீது…கீது…கீது…” என்று பலமுறை அழைத்து கொண்டுயிருந்தாள்.சிறிதுநேரத்திற்கு பிறகு தான் கீதா சுயநினைவிற்கு வந்து தன் கையில் இருந்த செல்போனைத் தேடினாள். அது தன் காலுக்கடியில் இருப்பதைப் பார்த்து அவசரமாக அதை எடுத்து காதில் வைத்தவளின்…காதில் அந்தப்பக்கம் ஶ்ரீ கீது கீது என்று தவிப்புடன் அழைப்பதைக் கேட்டு தன் காதில் விழுந்தது உண்மையா பொய்யா என்பதை அறிய “ஶ்ரீ நீ என்ன சொன்னே…??திரும்பவும் சொல்லு…” என்றாள் படப்படப்புடன் ஶ்ரீ அந்தப்பக்கம் பெருமூச்சுவிட்டு “ஏய் லூசு…நீ நல்ல தான் இருக்கியா…??இவ்வளவு நேரம் கீது கீதுனு கூப்பிட்டுட்டு இருக்கேன்…நீ பதில் எதுவும் சொல்லாமல்…அமைதியா இருக்கே…லைனில் இருந்துட்டே விளையாடுறியா லூசு??இல்ல உனக்கு காதுக்கு எதுவும் பிரச்சினையா…??இந்த அர்த்த ராத்திரியில் போன் […] - [அத்தியாயம் 10](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): எல்லாரும் அவர்வர் இருக்கையில் அமர்ந்தனர்…வீட்டின் இளைய தலைமுறைகள் வயதில் மூத்தவர்களுக்கு ஓரத்தில் இடமளித்து, அப்போது தான் அவர்கள் எழுந்து போவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து நடுவில் அமர்ந்தனர். ஶ்ரீயின் அருகில் ஒரு பக்கம் கீதாவும், இன்னொரு பக்கம் ரிஷியும் அமர்ந்தனர்.நான் கிருஷ் அத்தான் பக்கத்தில் தான் உட்காருவேன் என்று மீரா அவன் அருகிலே உட்கார்ந்தாள்.ரிஷிக்கும் கிருஷூக்கும் நடுவில் மீரா அமர்ந்து இருந்தாள். இந்த மீரா அக்காவுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை என்று வாணிக்கு எரிச்சலாக வந்தது.வாணி மனதிற்குள் நன்றாக புலம்பித்தீர்த்தாள்.அதையும் விட இந்த ரிஷி அவள் அருகில் இருந்து ஏழாமல் இருப்பது தான் இன்னும் எரிச்சலாக வந்தது.அதுவும் ரிஷி மீராவிடமும் ஶ்ரீயிடமும் பேசி கொண்டு இருப்பதைப் பார்த்து வாணியின் இரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகியது. “எருமை மாடு…கொஞ்சம் கூட அறிவேயில்லை இதுக்கு…இரண்டு பொண்ணுங்களுக்கு இடையில் உட்கார்ந்துட்டு ஈஈஈனு பல்லை இளிச்சிட்டு இருக்கு” என்று வாணி ரிஷியை மனதிற்குள் நன்றாக வைதாள். […] - [அத்தியாயம் 9](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/):                           கிருஷ் அன்று இரவில் தாத்தாவிடம் அலுவலக அறையில் வெகு மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தான். தாத்தா “நீ சொல்வதெல்லாம் சரிப்பா…இதற்கு விசுவின் அனுமதி ரொம்ப முக்கியம்…அவன் இதற்கு அனுமதி தருவானா என்பது எனக்கு சந்தேகம் தான்ப்பா…அதுமட்டுமில்லாமல் ஶ்ரீயை மட்டும் பிஸினஸில் ஈடுப்படுத்தினால்…மற்ற நம் வீட்டு பெண்கள் இதைத் தவறாக நினைப்பார்கள் கிருஷ்…அப்புறம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவாய்” என்று வினவினார் கிருஷிடம். நினைத்ததை முடிக்கும் பழக்கம் கொண்ட கிருஷ் அலட்சியத்துடன் “தாத்தா நீங்க மட்டும் அனுமதி கொடுங்கள் போதும்…விசு மாமாவிடம் பேச வேண்டியது என்னுடைய பொறுப்பு…மற்றவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை தாத்தா…மீறி யாராவது ஏதாவது கேட்டால் நான் சமாளித்து கொள்கிறேன் தாத்தா…” என்றான் கிருஷ். தன் பேரனைப் பற்றி தெரிந்த தாத்தாவும் “சரிப்பா அப்புறம் உன் இஷ்டம்…ஆனால் இதில் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் […] - [அத்தியாயம் 8](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): இரவு உணவுவேளையில் அதேபோல் எல்லாரிடமும் விசயம் பரிமாறப்பட்டது.முதலில் எல்லாரும் முடியாது என்றனர்.பிறகு ஒத்து கொண்டனர்.ஆனால் மீராவும் குந்தவையும் இது ஶ்ரீநிதி சொன்னால் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்தார்கள்.அவர்கள் இந்த படத்தை புதுப்பட இயக்குனர் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகி அறிமுக நடிகை அதனால் படம் கண்டிப்பாக நல்லாயிருக்காது என்று ஒவ்வொரு காரணமாக சொல்லி கொண்டே இருந்தனர்.அதனால் ஶ்ரீயின் முகம் சுருங்கிவிட்டது. அதைப்பார்த்த கிருஷ் அவர்களிடம் “இங்க பாருங்க அத்தை… இந்த வாரம் ஶ்ரீநிதியுடையது…அதனால் அவள் சொல்லுகிற படத்திற்கு தான் போக வேண்டும்…இந்த படம் ரொம்ப நல்ல இருக்குனு…நானும் கேள்விப்பட்டேன்…புது இயக்குனர் சில பேர் இப்போதெல்லாம் படம் நன்றாக தான் எடுக்கிறார்கள்…சோ…படம் எப்படி இருக்குனு போய் தான் பார்ப்போமே” என்றான் முடிவாக அவரைப் பார்த்து. அதன்பிறகு தான் குந்தவையும் மீராவும் வேற வழியில்லாமல் ஒத்துக்கொண்டனர்…ஶ்ரீநிதிக்கு அந்த நாளில் இரண்டாவது அதிர்ச்சி கிருஷினால் ஏற்பட்டது.ஏனெனில் இதுவரை கிருஷ் ஶ்ரீநிதிக்கு […] - [அத்தியாயம் 7](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த திருப்தியுடன் கீதா தனது ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினாள்.ஆனால் ஶ்ரீநிதி கீதாவை தன் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு அழைத்தாள்.கீதா அதற்கு ‘நான் உங்கள் வீட்டிற்கு வரவில்லை ஶ்ரீ…நான் ஊருக்கு செல்கிறேன்’ என்று கூறியவளை ஶ்ரீநிதி வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள். ஶ்ரீநிதி தனது தோழி கீதாவை வீட்டில் தங்குவதற்கு அழைத்து வர போவதாக தாத்தாவிடமும் தனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிவிட்டாள்.ஆனால் முக்கியமான நபரான கிருஷிடம் மட்டும் அனுமதி வாங்கவில்லை. கிருஷிற்கு இதுப்போல் சிநேகிதர்களை வீட்டிற்கு அழைத்து வருவது பிடிக்காது…அதனால் அவனிடம் அனுமதி கேட்க பயமாக இருந்தது.தாத்தா கிருஷிடம் சொல்லிவிடுவார் தான்.ஆனாலும் ஶ்ரீநிதிக்கு கிருஷிடம் ஏதோ பயமாக இருந்தது. கீதாவுடன் ஶ்ரீநிதி வீட்டிற்கு வந்து தாத்தா பாட்டியிடம் அழைத்துச் சென்று…சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு…கீதாவை தன் அறைக்கு அழைத்து சென்றாள். கீதா ஏற்கனவே நிறைய முறை ஶ்ரீநிதியுடன் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறாள்.ஆனால் இதுவரை […] - [அத்தியாயம் 6](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): அன்று ஶ்ரீ தனது தோழிகளுடன் தேர்வுகள் முடிந்த திருப்தியுடன் சேலத்தில் உள்ள பெரிய ஐஸ்கீரிம் பார்லருக்கு சென்றாள்.அங்கு சென்று ஐஸ்கீரிமுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள். அப்போது “அடுத்து எல்லாருக்கும் என்ன பிளான்…?படிப்பு முடிஞ்சிருச்சு” என்று தோழிகளில் ஒருத்தி கேட்டாள். ஒவ்வொருத்தரும் ஒன்று ஒன்று சொன்னார்கள்.அதில் ஒருத்தி “எங்க வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க…” என்றாள் சோகமாய். “ஹய் ஜாலி…நம்ப பிரண்ட்ஸ் ஒருத்திக்கு கல்யாணம்…” “எல்லாரும் சேர்ந்து…போய் அவள் கல்யாணத்தில் கூத்து அடிக்கலாம்”  “நல்லா…கல்யாணம் சாப்பாடு சாப்பிடலாம்”  “ஹய்யா…!எல்லாரும் ஒரே மாதிரியாக டிரெஸ் எடுக்கலாம்” “நல்லா பாசங்களை சைட் அடிக்கலாம்…” “ஏய் நிஷா…கார்த்திக்கையும் இன்வைட் பண்ணுடி…”  “ஏய்!போதும்…போதும்…நாளைக்கே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவீங்க போல…அதுக்குள்ள ஒருத்தி அவ ஆளை இன்வைட் பண்ணி… சைட் அடிக்கிற அளவுக்கு போயிட்டா…முதலில் கல்யாணம் முடிவாகட்டும்…அப்புறம் எல்லாம் பிளான் பண்ணுங்கடி” என்றாள் சிரிப்புடன் ஶ்ரீநிதி. ஐஸ்கீரிமை வாயில் தள்ளிக் கொண்டே “இவளுங்க விட்டால்… […] - [அத்தியாயம் 5](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): அன்று மதியவேளையில் ஶ்ரீநிதி மற்றும் கீதா அவர்கள் நண்பர்களுடன் அன்றைய  பிராஜக்ட் நன்றாக முடிந்த திருப்தியுடன் பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றனர். அதன்பிறகு கீதா “ஓகேடி…நாம் திங்கள்கிழமை பார்க்கலாம்” என்று முக மலர்ச்சியுடன் விடைப்பெற்றாள். “ஸ்யூர்டி..பை மீட் பண்ணலாம்” என்று விடைப்பெற்றாள் ஶ்ரீநிதி. அவளுக்காக டிரைவர் கேட் அருகில் காருடன் காத்திருந்தார்.இவர் எதற்கு வந்திருக்கார் ரிஷியை தானே வரச்சொன்னேன் என்று அவரை யோசனையுடன் பார்த்தாள் ஶ்ரீ. பார்த்துவிட்டு காரில் ஏறி டிரைவரிடம் “மணி அண்ணா…ரிஷி எங்கே…??” என்று கேட்டாள்.  “தம்பி…பிரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கார் ஶ்ரீம்மா… போகும்போது என்கிட்ட உங்களை கல்லூரியில் இருந்து அழைத்து வர சொன்னார்” என்றார். வெளியில் ஓ என்று விட்டு மனதிற்குள் ‘என்னைவிட உன் பிரண்ட்ஸ் கூட சுற்றுவது தான் முக்கியமா??வாடி…உனக்கு இருக்கு இன்னைக்கு’ என்று கறுவினாள். இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த ரிஷியிடம் ஶ்ரீநிதி எதுவும் பேசவில்லை. அவனைப் பார்த்த உடனே ஶ்ரீநிதி தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். […] - [அத்தியாயம் 4](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/):   ஶ்ரீநிதி சேலத்தின் மிகப்பெரிய கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படிக்கிறாள்.அவளுக்கு நகை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் ஆடைவடிவமைப்பதிலும் ஆர்வம் அதிகம்…அதனால் விருப்பத்தோடு இந்த ஆடை வடிவமைப்பு துறையைத் தேர்வு செய்தாள்.நந்தன் டெக்ஸ்டையல்ஸை பார்த்து கொள்ளும் பொறுப்பை ரிஷிக்கும் நகை கடையைப் பாரத்து கொள்ளும் பொறுப்பு ஶ்ரீநிதிக்கும் தர முடிவு செய்துள்ளனர்.இருவரின் படிப்பு முடியும் வரை நகை கடையையும் துணிக்கடையையும் பார்த்து கொள்ளும் பொறுப்பு கிருஷிடம் உள்ளது. காலை 8.30 மணி அளவில் ஶ்ரீநிதி அவள் கல்லூரிக்குள் நுழைந்தாள். அவளுக்காக அவளுடைய தோழி கீதா அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் உள்ள கல் பெஞ்சில் உட்கார்ந்தவாறு ஶ்ரீநிதிக்காக காத்திருந்தாள்.ஶ்ரீநிதி அவளைப் பார்த்து உற்சாகத்துடன் “ஹாய் கீது” என்றவாறு அவள் அருகில் சென்றவுடன், கீதா அவசரமாக பெஞ்சிலிருந்து எழுந்தவாறு “ஶ்ரீ…பிராஜக்ட் அறிக்கை படிச்சிட்டியா…?எனக்கு ரொம்ப பயமா இருக்கு…நமக்கு இது கடைசி செம்…இதில் நான் பாஸானால் தான் நல்ல வேலை கிடைக்கும்… இல்லையெனில் எங்க […] - [அத்தியாயம் 3](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): அத்யாயம் 3:கார்மேககண்ணன் தாமரை மீது நின்று குழலுதும் அழகிலும்…அந்த இனிமையான இசையில் மயங்கியும்…கதிரவன் மெய் மறந்து இருந்த வேளையிலும் தன் கடமையின் பொருட்டு சோம்பலை முறித்து வலுக்கட்டாயமாக தன் கதிர்களை பூலோகத்தில் பதித்த வேளையில் நந்தவனத்தில் கிருஷ் மெதுவாக தன் கண் இமைகளைப் பிரித்தான். கீழ் பூஜையறையிலிருந்து,ஆடாது அசங்காது வா, கண்ணா உன்ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதைசெவிமடுத்த பிறவி மனம் களித்திடுமேபின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமேபன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே என்று இனிமை நிறைந்த […] - [அத்தியாயம் 2](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): அத்யாயம் 2:நந்தன் குடும்ப தொழில் நிறுவனத்தில் ஒரு நகை கடை மற்றும் துணி கடையும் உண்டு.அதற்காகவே ஶ்ரீநிதியை நகை வடிவமைக்கும் படிப்பைப் படிக்கக்கோரி கிருஷ் ந்ந்தன் வலியுறுத்தியுள்ளான். அதுமட்டுமில்லாமல் அவளை நிர்வாக படிப்பைப் படிக்கச் செய்து,இத்தகைய இரண்டு பெரிய நிறுவனத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஶ்ரீநிதி மற்றும் ரிஷியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கிருஷின் எண்ணம்.ஆனால் இதைப்பற்றி அவர்களிடம் எடுத்துரைத்திருக்கவில்லை.தாத்தாவிடம் மட்டும் கலந்தாலோசித்து இந்த உறுதியான முடிவை எடுத்திருந்தான். ஶ்ரீநிதிக்கு நாளையிலிருந்து கடைசி வருட தேர்வு ஆரம்பிக்கயிருக்கிறது. அத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெறவே அவளை நல்லப்படியாக படிக்க அறிவுறுத்தினான். கிருஷ் இதனை வலுக்கட்டாயமாக ஶ்ரீயை செய்யக்கூறி வலியுறுத்த வில்லை.அவளுக்குமே இதை படிப்பதில் மிகுந்த விருப்பம்.அவளின் அன்னைக்கு சொந்தமான சொத்துகளை தான் ஶ்ரீநிதியை நிர்வகிக்கும்படியான முடிவை எடுத்திருந்தான் கிருஷ். ஶ்ரீநிதிக்கு நகை வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பதில் விருப்பம் அதிகம் மட்டுமின்றி மிக அழகாகவும் ஒரு நேர்த்தியுடனும் செய்வதில் வல்லமை படைத்தவள்.அதைவைத்து […] - [அத்தியாயம் 1](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/): அத்யாயம்1: முக்கனிகளின் சிறந்த ஊரான சேலம் மாநகரின் ஒரு பகுதியில் உள்ள நந்தவனம் எனும் இல்லத்தை சுற்றியுள்ள மரத்திலிருந்தவாறு… ஒரு குயில் கூவிக் கொண்டு இருந்தது. அதற்கு போட்டி போடும் விதமாக,அந்த வீட்டின் முற்றத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.குரல் வந்த திசையில் “ஶ்ரீநிதி…உனக்கு அறிவே இல்லையா…?எப்ப பார்த்தாலும் சின்ன பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்க…?நான் என்ன சொன்னேன்… நீ என்ன பண்ணிட்டு இருக்கே?…நான் சொல்லுறதை கேட்க கூடாதனு முடிவுல இருக்கியா…?ஒழுங்கா போய் நாளைக்கு பண்ண வேண்டிய பிராஜக்ட்டை பாரு” என்ற குரல் கேட்டது. இதையெல்லாம் பேசி கொண்டிருந்தவள் ஶ்ரீநிதி…ஶ்ரீநிதி அவளை அவளே திட்டிக்கொண்டு இருந்தாள்.அதைக் கேட்டு அந்த இடத்தில் உள்ள அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். உடனே ஶ்ரீநிதி சுற்றி இருக்கும் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து முறைத்தவாறே “எதுக்கு இப்போ எல்லாரும் சிரிக்கிறீங்க…?? என்று கோபமாக கேட்டுவிட்டு  முகத்தை சுருக்கி “எப்பப் பார்த்தாலும் இந்த ஹிட்லர்…இப்படித்தான் வீட்டுக்குள்ள வரும்பொழுது திட்டறாங்க…நான் மட்டும் என்ன […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-4/): பத்து வருடங்களுக்கு பிறகு, இந்தியாவில் தனக்கென ஒரு சொந்த விடுதியை அமைத்து நிர்வகிக்க ஆசைப்பட்டவள்,இன்று தான் சம்பாதித்த சொந்த பணத்தில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை கட்டி அதன் திறப்பு விழாவிற்கு மணிகர்ணிகாவின் குடும்பத்தினர் இந்தியா வந்திருந்தனர். அவள் அமெரிக்காவில் திருமணம் செய்துக்கொண்டால் என்று அறிந்து இழிவாக பேசியவர்கள்,தற்போது அவளின் வளர்ச்சியை கண்டு வாயடைத்து போயினர். தன்னுடைய வெற்றிக்கு முழு முதற்காரணமான சிவனேசன் இயற்கை எய்திவிட்டார் என்பதினால் அவரது மகன் வைத்து இந்த விடுதியை திறந்து வைத்தார்கள். அத்தோடு இந்தியாவில் இருக்கும் தங்களது விடுதியை நிர்வகிக்கும் பொறுப்பை தனது சிறிய தங்கையின் கணவரிடம் ஒப்படைத்து தன்னுடைய பெரிய மனிதத்தன்மையை இங்கும் நிரூபித்தாள் மணிகர்ணிகா “இன்னா செய்தாரை அவர் நாணநன்னையம் செய்து விடல்” என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்துக்காட்டினாள் மணிகர்ணிகா. இப்போது ரேவதி படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்ததற்கு பிறகு தன் தாயிடம் கூறிய வாக்கின் படி,தான் காதலித்த இராபர்ட்டையே வீட்டில் […] - [அவள் 19](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-19/): தான் கருவுற்றிருக்கும் விஷயம் அறிந்த பெண்ணவள் ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்று குழம்பினாள்‌. ஏனெனில் வயதான தம்பதியினருக்கு எளிதாக குழந்தை உருவாகிடாது என்று எந்த வித கருத்தடைக்கான மருந்துக்களையும் உபயோகிக்காமல் மெத்தனமாக இருந்தவளிற்கு இவ்விடயம் பேரடியாக இருந்தது. ஒரு நொடி கலங்கியவள்,உடனடியாக கொடும் நஞ்சாய் மனதை மாற்றி ஒரு விபரீதமான முடிவை எடுத்தாள். அதன்படி கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவரிடமே அதை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்தாள். அங்கு நம் நாட்டினை போன்று குழந்தையை அழிப்பதற்கு கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படாததால் அவள் எடுத்த முடிவிற்கு அந்த மருத்துவரும் உடன்பட்டு ஒரு மாத்திரையை எழுதிக்கொடுத்தார். அந்த குழந்தையை பெற்றுக்கொள்வதற்கும் அழிப்பதற்கும் பெண்களுக்கு முழு சுதந்திரமும் இருந்தது அவளிற்கு வசதியாகி போனது. மருந்துக்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றவள்,அதனை எடுத்து கணவர் அறியாமல் தன் அலமாரியில் பாத்திரப்படுத்தினாள். அதை உபயோகப்படுத்துவதற்கான தகுந்த சந்தர்ப்பம் எதிர்நோக்கி காத்திருந்தாள் மணிகர்ணிகா. அதன்படி அடுத்த நாள் காலை கணவர் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் […] - [அவள் 18](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-18/): மணிகர்ணிகா தன் கணவனிடம் “ரேவதி மட்டுமே என் குழந்தை…அவளை தாண்டி எனக்கு ஒரு குழந்தை வந்து என்னுடைய பாசத்தை பங்குப் போடுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று கூறிய மனைவியின் வார்த்தைகள் அவரை அதிர்ச்சிக்கொள்ள வைத்தது. அவர் ‘இது என்ன மாதிரியான அன்பு??’ என பிரம்மிக்க,அவளோ “நீங்களும் வேறு குழந்தை பற்றி என்கிட்ட பேசவேண்டாம்” என படீரென்று முகத்திற்கு முன் மொழிந்து சென்ற மனைவியை பார்த்தவரின் மனமோ ‘இதற்காகவே ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சூளுரைக்க வைத்தது. முன்பு ‘குழந்தை’ என்ற எண்ணமே இல்லாதவர்,மனைவி தன் வயிற்றில் சுமக்காத மகளிற்கு மட்டுமே தாயாக இருக்க விரும்புவதில் வியந்தவர்,தன் உயிரினில் ஜனிக்கும் ஜீவனின் மீது அவள் வைக்கவிருக்கும் அன்பை பரிசோதிக்க நினைத்தார். அதற்காக ரேவதியின் மீது அவள் வைத்திருக்கும் அன்பில் எந்த குறையும் வைக்கமாட்டாள் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அத்தோடு தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரம்.அந்த வரம் கிடைக்காமல் எத்தனையோ பேர் […] - [விகசனம் 31](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): அறுவை சிகிச்சை அறையில் நுழைந்த சில நிமிடங்களிலே மருத்துவர் வயிற்றை கிழித்து குழந்தைகளை வெளியே எடுத்தார். இரண்டில் ஒரு குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் குறை மாதத்தில் பிரவேசித்ததாலும்,மற்றொரு குழந்தை சிறிது உடல்நலம் குன்றி மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதாலும் இரண்டையும் அடைகாப்பு கருவியினுள் (incubator) வைத்திருந்தார்கள். சுவாசத்திற்காக ஏங்கிய அந்த ஒரு குழந்தைக்கு மட்டும் அதற்குரிய வகையில் சிகிச்சையளிக்கப்பட்டது. உயிர் பிரிந்து செல்லும் அபாயம் கூட இருப்பதால் மருத்துவ ஊழியர்கள் விரைந்து செயல்பட ஆரம்பித்தார்கள். அறுவை சிகிச்சை அறையிலிருந்த பணியாளர்கள் பரபரப்புடன் செயல்படுவதை கண்டு வெளியே இருந்த ஆண்மகனிற்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. வெளியே வந்த நீல சீருடை அணிந்த செவிலியரை நிறுத்தி வைத்து விசாரித்ததற்கு “குறை பிரசவத்தில் பிறந்ததினால் ஒரு குழந்தை நல்லா தான் இருக்கு…பட் இன்னொரு குழந்தை சுவாசிக்க முடியாமல் திணறுது…பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்” என படபடப்புடன் உரைத்துவிட்டுச் சென்றவுடன் தலையில் இடி இறங்கிய உணர்வில் பின்னால் சென்று […] - [விகசனம் 30](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30-2/): ஏழு மாதங்களுக்கு பிறகு, ‘ஏழைகளின் ஊட்டி’ என்று பெருமையாய் அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஏற்காடு மலையடிவாரத்தில் புதிதாக தொடங்கயிருக்கும் நிறுவனத்தின் திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக அதிருங்கழகோன் பாண்டியன் அழைக்கப்பட்டிருந்தான். முன்னூறு பேர் அவனை வரவேற்பதற்காக காத்திருந்த நிலையில் உயர்ரக மகிழுந்து ஒன்று மிதமான வேகத்தில் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது. அது சரியாக அந்த நிறுவனத்தின் வாசலில் வந்து நின்றவுடன் அதிலிருந்து ஆறடி உயரத்தில் தன் கம்பீரத்திற்கு சிறிதும் பங்கம் வராத வகையில் தனக்கே உரிய ஆணவத்துடன் ஒற்றை புருவம் உயர்த்தியப்படி கீழிறங்கி நின்றான் அதிருங்கழகோன் பாண்டியன். அவனது கண்களில் புதிதாக முளைத்திருந்த குளிர் கண்ணாடியை தவிர அவனது முகத்தில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. எதிராளிகளை துளைத்திடும் அதே கூரிய கண்கள்,கூரான நாசி,சிரிப்பை சிந்திடாத அழுத்தமான உதடுகள் என மேற்கத்திய முறையில் சாம்பல் நிற மேல் அங்கி,வெள்ளை நிற சட்டை மற்றும் அதே சாம்பல் வண்ண கால்சட்டையுடன் தன் முழு […] - [விகசனம் 29(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): தாரணியோ ஆரம்பத்தில் ‘சொல்லாதீங்க…சொல்லாதீங்க…’ என மனதிற்குள் கணவனிடம் வேண்டிக்கொண்டே படபடப்புடன் காத்திருந்தவளிற்கு அவன் தாழியை தரையில் போட்டு உடைப்பது போல் பட்டென்று இவ்வாறு கூறுவான் என்று அவளே எதிர்ப்பாராதது. கணவனின் இத்தகைய இழிவான வார்த்தையில் தேகம் விறைக்க,அவனை அசையாமல் வெறித்து பார்த்திருந்தாள் பெண்ணவள். அமைதியின் சொரூபமாய் வெளியே காட்சி தந்தாலும் அவளிற்குள் பெரும் பூகம்பம்,சூறாவளி,நிலநடுக்கம்,சுனாமி என ஒட்டுமொத்த இயற்கை சீற்றங்களும் ஒன்றாக நிகழ்ந்து அவளின் மனக்கோட்டையை இடித்து தரைமட்டாக்கி அடியோடு அவளை அழித்துக்கொண்டிருந்தது. அனைவரின் முன்பும் அவளின் ஒழுக்கம் கேள்வி குறியாகியதில்,குடும்ப சபையினர் முன்பு உடைகளற்று நிர்வாணமாக நிற்பதை போல் துடித்துப்போனாள். அதற்குள் சுய உணர்விற்கு வந்த தாமினிக்கோ அனைத்தையும் புரிந்துக்கொள்ள கூடிய பக்குவம் இல்லையென்ற போதிலும்,அச்சிறு பெண்ணிற்கே தனது மாமன் வீசிய நெருப்பு கணைகளுக்கான அர்த்தம் விளங்கியது என்றால்,மற்றவர்களை பற்றி கூறவும் வேண்டுமா? தாரணியை தவறான பிம்பங்களில் சித்தரித்து வைத்திருந்த ஞானசேகரிக்கே அதிருனின் சொற்கள் நெஞ்சை பிசைந்தது. அந்த கூட்டத்தில் முதலில் […] - [விகசனம் 29(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): அடுத்த நாள் காலை கணவனிற்கு முன்பாகவே எழுந்து குளித்து தயாராகி ஒரு வித பரபரப்புடன் மீண்டும் தாயான விடயத்தை பகிரலாம் என்று மஞ்சத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் தன் நாதனின் எழுச்சிக்காக காத்திருந்தாள் இல்ல பிராட்டி. அத்தோடு இன்று மருத்துவர் அவள் வயிற்றினுள் இருக்கும் கருவை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து,குழந்தையின் ஆரோக்கியத்தை அறிந்துக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு வர கூறியிருந்தார். அதனால் கணவனிடம் இந்த விடயத்தை அழுத்தமாக பதிவு செய்து அவனோடு உரிமையாய் கை கோர்த்து மருத்துவரை அணுகி ஒன்றாக குழந்தையின் நலன் அறியலாம் என ஆவலோடு முகம் முழுவதும் உண்டாகிய பரவசத்தோடு நீள் விரிக்கையில் அமர்ந்து கணவனையே கண்ணெடுக்காமல் நோக்கியிருந்தாள். அவளின் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்பாக கண் விழித்த அதிருன் தன்னை கண்டவுடன் நீள்விரிக்கையிலிருந்து எழுந்தவளை ஓரக்கண்ணால் கண்டு அலட்சியமாக தோளை குலுக்கினான். நிதானமாக குளியலறை சென்று உடலை சுத்தம் செய்துக்கொண்டு வெளியே வந்தான். அறையினுள் மனைவி என்று ஒருத்தி […] - [விகசனம் 28](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): அலைப்பேசியில் கணவனிற்கு பல வகையில் முயற்சித்தும் அவன் அதனை எடுப்பதற்கான சாத்தியங்கள் தென்படாததினால்,அவனிடம் இவ்விடயத்தை கூறுவதற்காக ஆவலோடு வீட்டின் வாயிலையே பார்த்தவாறு நெஞ்சம் பரபரக்க காத்திருந்தாள். ரதிதேவி மருத்துவமனையிலிருந்து இன்னும் இல்லத்திற்கு வருகை புரியாததினால் இரவு சமையலுக்கான பணி இவளின் தலையில் விழுந்துவிட்டது. அதனை எந்த வித சலிப்புமின்றி புன்னகை முகமாகவே பொறுப்பேற்று பம்பரமாய் சுழன்று சமையலை முடித்துவிட்டாள்‌. ஜானகி மட்டுமே பெண்ணவள் புடவையை இழுத்து சொருகி வியர்த்து வழிய பரபரவென அனைத்து வேலைகளையும் செய்வதை வருத்தத்துடன் பார்த்திருந்தார். ஏனெனில் என்று அவளை வேலைக்கு வரவேண்டாம் என அதிருன் கட்டளையிட்டிருப்பதை அறிந்துக்கொண்டார்களோ,அன்றிலிருந்து அந்த இல்லத்தின் பெண்மணிகள் தாரணி தலையின் மீது வீட்டின் பணிகள் மொத்தத்தையும் சுமத்தி பணமில்லாத வேலைக்காரியாகவே சுழல வைக்க தொடங்கியிருந்தார்கள். தாரணி உடல் உழைத்து உண்ணும் வர்க்கம் என்பதோடு,தன்னுடைய புகுந்த வீட்டினரின் பணியை சுமையாக கருதாமல் கடமையென எண்ணி மகிழ்ச்சியாக அனைத்தையும் செய்தாள். ஆனால் அதனை கண்ட ஜானகிக்கு எஜமானியாய் […] - [விகசனம் 27](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-27/): கணவனை சூழ்ந்திருக்கும் ஆபத்தை பற்றிய சிந்தனையில் மூழ்கியவளிற்கு, தற்சமயம் குழந்தை விடயம் கூட பின்னுக்கு தள்ளப்பட்டது. ‘எதிரிகள் யாரென்று கண்டெறிந்து தன் கணவனை அதிலிருந்து மீட்க முடியாதா?’ என பல்வேறு வகையிலான யோசனைகளோடு இல்லம் வந்து சேர்ந்தவளிற்கு இளங்கோவின் தாயிடமிருந்து அழைப்பு வந்தது. பட்டென்று அழைப்பை ஏற்று செவியில் வைத்த தாரணி “சொல்லுங்க” என்றாள் எந்த வித அடைமொழியுமின்றி. இளங்கோவை அவள் ஏற்றுக்கொண்டது போல் அவனின் தாயை அவளால் இன்று வரையிலும் மனதார ஏற்க இயலவில்லை. தன்னுடைய தாய் தீய குணம் கொண்டவளாக கொடூம் அரக்கியாக இருப்பினும்,கணவன் உயிருடன் வாழும் காலம் முழுவதிலும் சரி,இப்போது வரையிலுமான அவரது தனிமை வாழ்விலும் சரி அவரை மட்டுமே நெஞ்சினில் சுமந்து தாம்பத்திய உறவுக்கு உண்மையுள்ளவளாக வாழ்ந்து வருபவருக்கு தன் தந்தை இழைத்த துரோகத்தை ஏற்க முடியவில்லை. அதனால் ஒட்டாத தன்மையுடனே மேலோட்டமாக உரையாடினாள். அதில் அவருக்கு மனம் வலித்தாலும் தன் மீதுள்ள தவறை அறிந்தவரும் “தங்கம் […] - [விகசனம் 26](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): தாரணியை அவ்விடத்தில் எதிர்ப்பாராத ரதிதேவி அவளை‌ கண்டு கண்மூடித்தனமாக வசைப்பாட தொடங்கினார். கோபத்தில் அவரின் நரம்புகள் புடைக்க வெறிப்பிடித்தது போல் பேசியதின் விளைவு,அவரின் கைநரம்பில் குத்தியிருந்த ஊசியின் வழியாக அந்த சிறு கண்ணாடி குழாயினுள் இரத்தம் ஏற தொடங்கியிருந்தது. இத்தனை நேரமாக அவர் தன்னை திட்டியதை பொருட்படுத்தாமல் அமைதியின் திருவுருவாக நின்றிருந்தவள்,மருந்து ஏறும் குழாயினுள் குருதி கசிந்து மேலேறியதை பார்த்து பயந்துப்போனவள் “ஐய்யோ ஆன்ட்டி…கோபப்படாதீங்க…டிரிப்ஸ் போடற டியூப்குள்ள இரத்தம் ஏறுது” என அவரின் கையை பிடித்து அலறியவள், “நர்ஸ்…டாக்டர்…யாராவது சீக்கிரம் இங்க கொஞ்சம் வாங்களேன்…இவங்களுக்கு பீளிட் ஆகுது…பிளீஸ் வாங்க” என அவசரமாக வாசல் கதவை திறந்து கத்தி மருத்துவரை அழைத்தவளின் குரல் கலங்கியிருந்த விதம் முதன் முறையாக ரதிதேவியின் மனதை பாதித்தது. அவளின் குரல் கேட்டு விரைந்து ஓடி வந்த மருத்துவர் அவளிடம் விபரம் கேட்டு,ரதிதேவிக்கு உரிய சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். ஆனால் படுக்கையில் வீற்றிருந்த அவரின் விழிகளோ கண்ணில் நீர் பெருக தன்னையே […] - [விகசனம் 25](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): நாட்களை பலவித கூச்சல்களுடனும் குழப்பத்துடனும் பாண்டியன் குடும்பத்தினர் கடந்துக்கொண்டிருந்தார்கள். பகைவர்கள் அதிருனிற்கு தொழிலில் பல விதமான வகையில் நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அனைத்தையும் அநாவசியமாக சமாளித்து வெளிவந்த அதிருனிற்கோ மனைவியை பற்றிய சிந்தனை என்பது முற்றிலும் தொலைந்துப்போயிருந்தது. பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் சார்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவு அதிருனிற்கு சாதகமாகவே வந்தது. ஏனெனில் தனது திறமையை உபயோகித்து இரவோடு இரவாக அனைத்து அங்காடியிலும் அவனிற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்களின் மூலமாக புதிதாக ஏதேனும் பொருட்களின் வரவு அல்லது தொழிலாளர்கள் யாருடைய நடவடிக்கையிலாவது வித்தியாசத்தை கண்டிருக்கிறார்களா என நேரலையின் வழியாக விசாரித்து அறிந்துக்கொண்டான். அதன் அறிக்கைகளை முன்னிறுத்தி அங்கு அடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் நிதானமாக நோட்டமிட செய்து,அவர்கள் செய்து வைத்திருந்த அனைத்து குளறுபடிகளையும் அவனே நேர்த்தி செய்து நிமிர்வதற்குள் அடுத்த நாள் பொழுது புலர்ந்துவிட்டது. அன்று காலை பத்து மணிக்கு மேல் பாண்டியன்‌ குடும்பத்திற்கு […] - [விகசனம் 24(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-241/): உறக்கத்திலிருந்து விழித்திருந்தாலும் அவளின் முகத்தில் இருந்த தெளிவையும் பூரிப்பையும் புருவம் சுருக்கி நோக்கிய சந்திராயினி “தாரணி நில்லு” என்றார் கட்டளையாக. கணவனை பற்றிய நினைவுகளுடன் கனவில் சஞ்சரித்தப்படி வந்த தாரணி மாமியாரின் குரலில் நின்று “சொல்லுங்க ஆன்ட்டி” என சிரித்தமுகமாக வினவினாள். அவரோ மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர் “தாரணி நீ ரொம்ப சந்தோஷமா இருக்கிறதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…ஆனால் உன்னை எதுக்கு இந்த வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என நக்கலாக வினவினார். அதுவரை கனவு லோலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தவளிற்கு நிதர்சனம் புரிய திகைப்போடு அவரை ஏறிட்டவளை சினத்தோடு உறுத்து விழித்தவர் “சின்னப்பொண்ணு உன்னை நம்பி இந்த மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைச்சது ரொம்ப பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு…நான் கொடுத்த வேலையை சரியா செய்யாமல் நீ தோத்துட்டே தாரணி…யூ ஆர் டோட்டலி வேஸ்ட்…மண்குதிரையை நம்பி ஆத்தில் இறங்கினேன் பாரு…எனக்கு இதுவும் வேணும்…இன்னமும் […] - [விகசனம் 24](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): சிவதாரணி மற்றும் அதிருன் இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதேநேரம் அவர்களுக்கு இடையே அதிருனின் எதிரிகளால் ஒரு பெரிய திரை ஒன்றை உருவாக்கி கணவன் மனைவி பிரிவதற்கான திட்டங்களும் தந்திரமாக தீட்டப்படுவதை இருவரும் அறியவில்லை. தாரணியின் மேல் சந்தேகங்கள் முளைவிட்டிருந்தாலும் அவளின் மீதிருந்த பிணக்குகள் ஓரளவு தீர்க்கப்பட்டதினால் உண்டான மகிழ்ச்சி அவனது கண்ணை மறைத்ததோ அல்லது அவள் மேனியின் மீதான வேட்கை உணர்வுகள் அவனின் மூளையை மலங்கடித்திருந்ததா என்று தெரியாத வகையில் அவளில் மயங்கியிருந்தான் அதிருன். எந்நேரமும் மனையாளை அருகாமையில் வைத்துக்கொள்ள விரும்பியவனாய் சுதாகரை அலுவலக பணிகளை செய்யும் படி ஆணை பிறப்பித்தவன்,வெளி வேலைகளுக்காக மனையாளை தன்னோடு அழைத்துக் கொண்டு சுற்றினான். அவர்கள் இருவரும் வெளியேறும் ஒவ்வொரு முறையும் தாரணியை முழுமையாய் சுகிக்காமல் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததில்லை ஆடவன். அதனால் கணவன் ‘இன்று ஒரு முக்கியமான மீட்டிங்…தாரணி நாம் போகணும்’ என்று கூறினாலே தாரணியின் முகம் நாணத்தில் […] - [விகசனம் 23](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): இளங்கோவிடம் பேசிவிட்டு வெளியே வந்த அதிருனிற்கு அத்தனை நாட்களாய் மனையாளின் மீதிருந்த ஒரு பிம்பம் உடைந்து தூள் தூளாக நொறுங்கியது போல் இருந்தது. ஆயினும்,அவளின் மேல் ஒரு சில மனவருத்தங்களும் சந்தேகங்களும் இருக்கவே செய்தது. அத்தனை நேரமாக தனது முதலாளி உள்ளிருந்த ஆளிடம் பேசி முடியும் வரை அவனது பெற்றோரை உள்ளே அனுமதிக்காமல் அரணாக இருந்த வீரா அதிருன் அவ்வறையிலிருந்து தெளிந்த முகத்துடன் வெளியே வருவதை கண்டு விறைப்புடன் நிமிர்ந்து நிற்கவும் “வீரா ஃபாலோ மீ” என கட்டளையிட்டு தனது வேக நடை குறையாமல் வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்து சேர்ந்தான். “கெட் இன்” என வண்டியினுள் ஏறும் படி கட்டளையிட்டு ஓட்டுனரின் இருக்கையில் ஏறி அமர்ந்த அடுத்த நொடியே எந்த வித மறுவார்த்தையும் மொழியாமல் எஜமானின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஏறி அமர்ந்தான் வீரா. அதில் அதிருனின் இதழ்கள் சிறியதாக விரிய வாகனத்தை அசுர வேகத்தில் செலுத்த தொடங்கினான். ‘ஐய்யோ…ஐயா என்ன இம்புட்டு […] - [விகசனம் 22](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22/): தனது இல்லத்திலிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அதிருனின் மனமோ உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது. ஏனெனில்,தங்களது குடும்பம் தொடங்கி நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரை தாரணிக்கு உண்டான மரியாதையை ஒருவரும் வழங்குவதில்லை என்பதை அறிந்து வைத்திருந்த அதிருன்,தன் மனைவிக்கு உரிய அந்தஸ்தை பெற்று தருவதற்காகவே இன்றைய பிறந்தநாளில் ஒரு முக்கிய திட்டமிடலை செய்திருந்தான். ஒரு சில காரணங்களால் தாரணியை திருமணம் செய்துக்கொண்டதில்  விருப்பமில்லை என்றப்போதிலும்,குடும்பத்தினரின் முன்பு அவளின் சுயமரியாதையை இழந்துவிட்டு ஒரு வேலைக்காரியாய் அடிமைப்பட்டு நிற்பதில் அவனிற்கு எள்ளளவும் இஷ்டமில்லை. அதிருங்கழகோன் பாண்டியனின் மனைவி என்றால் நிமிர்வும் அதிகாரமும் மற்றவரை அடக்கியாளும் வலிமையும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கக்கூடியவன் தான் அவன். ஆனால் அவற்றினுள் ஒன்றை கூட பெற்றிராத தாரணியை மற்றவரின் முன்பு உயர்த்தி காட்டுவதற்காக,குறிப்பாக அவளை இழிவாக பேசிவிட்டுச் சென்ற சிறிய தந்தையரின் முன்பு அவளின் கௌரவத்தை மீட்டு தர வேண்டிய கணவனிற்கு உண்டான கடமையை உணர்ந்து சில காரியங்களை செய்திருந்தான். […] - [விகசனம் 21](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): மனையாளை சில நிமிடங்கள் தன் மேல் சாய்ந்து உறங்குவதற்காக அனுமதியளித்த அதிருன்,அடுத்ததாக தான் நியமித்து வைத்திருக்கும் காரியத்தை செய்ய வேண்டிய அவசியம் உணர்ந்து பட்டென்று தன் விழிகளை திறந்தான். முதுகை வளைத்திருந்த அவனின் கரம்கொண்டு காரிகையின் கன்னம் தட்டி “தாரணி…தாரணி” என அழைத்தாலும் “உம்” என வாய்விட்டு சிணுங்கியவள் அவனை மேலும் நெருங்கி இறுக்கியணைத்தாளே ஒழிய அவள் எழுந்துக்கொள்வதற்கான அறிக்குறியை காணவில்லை. இதுவரை சுயநினைவின் போது அனுபவித்திடாத கணவனின் நெருக்கம் தந்த கதகதப்பும் அரவணைப்பும் அவளிற்கு இந்த ஆழ்ந்த உறக்கத்தில் சங்கோஜத்திற்கு பதிலாக ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுத்து அவளை அவனோடு ஒன்ற வைத்தது. பாவையவள் ஆண்மகனின் நெஞ்சில் தலையை ஆழப்புதைத்ததில் திறந்திருந்த சட்டை பொத்தான்களின் வழியே வெளிப்பட்ட அவனது வெற்று மார்பில் மதிவதனம் அழுத்தமாய் உரசி,அவளின் மூச்சுக்காற்று அவனது தேகத்தில் பட்டு அதிருனின் உடல் உஷ்ணத்தை அதிகரித்தது. அத்தோடு இதுவரை அவனது உடலை தீண்டியிராத பெண்ணவளின் உதடுகள்,அவள் அவனை நோக்கி நகர்ந்ததில் […] - [விகசனம் 20](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): தணிக்கையாளரின் உதவியுடன் தொழில் கணக்குகள் அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த அதிருனின் முகமும் அகமும் மொத்தமாய் இறுகியிருந்தது. பல கோடி ருபாய் மதிப்புள்ள காசுகளை நிறுவன கணக்கின் கீழ் கொண்டு வராமல் ஊதாரித்தனமாக வெற்றி செலவு செய்திருக்கிறார் என்றால்,அவனது தந்தையின் தொழிலோ இலாபம் எதுவுமின்றி வாங்கிய பொருட்களை மட்டும் விற்று கடையை கடமையென நடத்திக்கொண்டிருக்கிறார். இரண்டாவது சகோதரரான சுந்தரவேலோ அதையும் விட மோசம்.வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தங்களது தயாரிப்புகளை அனுப்புவதற்கு கூட மூலப்பொருட்கள் எதுவுமின்றி நிறுவனம் நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது. வயதில் மூத்தவர்கள் என்றப்போதிலும் பொறுப்பற்று நடந்துக்கொள்ளும் தந்தையர்களை தனது கூரிய விழிகளால் குத்திக்கிழித்தவனிற்கு மனம் ஒரு நிலையின்றி கோபத்தில் அதி வேகத்தில் துடித்தது. அவனது பார்வையின் வீச்சு உள்ளுக்குள் நடுக்கத்தை கொடுக்க பயத்தில் தலைகுனிந்தார்கள். தணிக்கையாளரின் முன்பு மூவரையும் எதையும் கூறி அவமானப்படுத்தாமல் அவர்களை நல்லவிதமாக பேசி அனுப்பி வைத்த அதிருனோ ஒரு தலைசிறந்த வியாபாரியாய் வெற்றிப்பெற்றிருந்தாலும் குடும்பத்தினரின் அன்பிலும் விசுவாசத்திலும் தோற்று இருப்பதை ஏற்கவே […] - [விகசனம் 19](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): தங்கையின் ஏக்கத்தையும் இவர்கள் குடும்பமாக உணவருந்துவதையும் உச்சக்கட்ட ஆத்திரத்தில் பார்த்திருந்தவளின் நெஞ்சில் குளுமையை பரவிட செய்யும் வகையில் காமினி நெற்றி சுருங்க “தாமி நீ ஏன் அங்கேயே உட்கார்ந்திருக்கே?நீயும் வா…நாம்ப இரண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என முதன் முதலாக தாமினியை பார்த்துவிட்டு அந்த சிறுப்பெண் அழைப்பு விடுத்தாள். அதன்பிறகே அவ்விடத்தில் சிவதாமினி இருக்கும் விடயமே அனைவருக்கும் தெரிந்தது. அதிருனோ நெற்றி சுருங்க உணவு அருந்துவதை நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி நோக்கியவனிற்கு நெஞ்சம் சுருக்கென்று தைத்தது. தாமினியிற்கோ அவள் அழைத்தவுடன் ஓடிச் சென்று உணவு உண்ண மனம் பரபரத்தாலும் தமக்கையின் முகத்தை ஒரு முறை சங்கடமாக பார்த்துவிட்டு வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள் “பரவாயில்லை இனி…எனக்கு பசிக்கலை…நான் பிறகு சாப்பிடறேன்” எனவும், அவளை முறைத்த காமினி “ஏய் ஒழுங்கா எழுந்திரிச்சு வாடி…அப்புறம் நான் சாப்பிடாமல் எழுந்திடுவேன்” என்றாள் மிரட்டலுடன். ஞானசேகரியோ ‘நான் பெத்தது இரண்டுமே சரியில்லை’ என முகத்தை சுழித்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டார். அப்போதும் […] - [விகசனம் 18](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): அடுத்த நாள் காலை தன் விழிகளை மலர்த்திய தாரணி படுக்கையிலிருந்து நிதானமாக எழுந்து அமர்ந்தாள். கண்களை நன்றாக திறந்தவுடன் அவள் இருக்குமிடத்தின் அடையாளங்களை கண்டவளிற்கு நேற்று நடந்த நிகழ்வும் கணவன் அவதூறாக பேசிய வார்த்தைகளும் அவளின் நினைவடுக்கில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காட்சிகளாய் வர தொடங்கவும்,அவளிற்கு தலை முணுமுணுவென வலித்தது. அதனால் ‘ஆ’ என மெல்லியதாக சத்தம் எழுப்பி தலையை தன்னிரு கரங்களால் தாங்கியவளிற்கு இறுதியாக அதிருன் உரைத்த சொற்களின் கனம் தாளாமல் மயங்கி சரிந்தது ஞாபகம் வந்தது. உடனடியாக,விசுக்கென தலையிலிருந்து கைகளை எடுத்துவிட்டு நிமிர்ந்தவளின் உள்ளத்திற்குள் சிறு குறுகுறுப்பு. இரவில் தரையில் விழுந்த பெண்ணவள்,காலையில் தங்களது மெத்தையில் படுத்திருக்கும் விதத்தை வைத்தே கணவன் தான் சுய உணர்வை இழந்த தனக்கு உதவி செய்திருக்கக்கூடும் என்பதை கிரகித்தாள். கூடவே,அவள் அணிந்திருந்த புடவையை அகற்றிவிட்டு வேறொரு இரவு உடையை அணிவித்திருப்பதை உணர்ந்து குனிந்து தன்னையே அவதானித்தவளிற்கு தனது மணாளன் ‘நல்லவனா?கெட்டவனா?’ என விவாதமே […] - [விகசனம் 17](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): ஒரு புயல் அலுவலகத்தின் இருக்கையில் மையம் கொண்டிருக்க,அதன் அருகில் வேரூன்றிய ஆலமரத்தின் உறுதியுடன் பின்னால் கைகட்டியப்படி சுதாகர் விறைப்புடன் நின்றிருந்தான். அவர்களுக்கு நேரெதிரே மூர்த்தி என்னும் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆள் தலைக்குனிந்து அச்சத்தோடு நின்றிருந்தார். ‘என்ன நடந்தாலும் உண்மையை மட்டும் ஒத்துக்கக்கூடாது’ என்ற முடிவில் நிலைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் அதிருன் அவரை தன் கனல் விழிகளாலே எரித்து சாம்பலாக்கும் வேலையை பார்த்திருக்க,சுதாகர் மட்டுமே வாயை திறந்து பேசினான். “மூர்த்தி எதுக்காக இப்படி பண்ணீங்க?யார் சொல்லி இதெல்லாம் செய்தீங்க?” அவரோ உள்ளுக்குள் எழுந்த படபடப்பை மறைத்து “சார் நான் எதுவுமே செய்யலை?” என்னும் போதே,அவசரமாக இடைமறித்தான் அவன். “யோவ்…இதுக்கு மேலேயும் பொய் சொன்னால் விளைவு விபரீதமா இருக்கும்…தாரணி மேடம் இங்கிருந்து கிளம்பின கொஞ்ச நேரத்தில் நீ மட்டும் தான் டிரான்ஸ்பார்மர் இருக்கிற ரூம் பக்கம் போயிருக்கே. அதுக்கான ஆதாரம் இருக்கு…ஒழுங்கா உண்மையை சொல்லு” என பல்லைக் கடித்து சீறினான். அவரோ […] - [விகசனமே 16](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-16/): தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதறிப்போய் ஆட்டோவில் ஏறி மருத்துவமனை வந்தடைந்த தாரணியோ அவசரமாக வண்டியிலிருந்து இறங்கி கைப்பையிலிருந்து இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து ஓட்டுனரின் கையில் திணித்தாள். அவளை பின்பற்றி தனக்கென உரிய மகிழுந்தில் ஏறி யாமினியும் இங்கே வந்து சேர்ந்திருந்தாள். ‘இவ எதுக்கு இங்க ஹாஸ்பிட்டல் வந்திருக்கா?யாரை பார்க்க இங்க வரைக்கும் வந்திருக்கானு தெரியலையே?ஒருவேளை அவங்க அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமா?’ என பல்வேறு சிந்தனைகளோடு தன் அலைப்பேசியை எடுத்து,அவளை தனது தமையனிடம் கையோடு பிடித்து கொடுப்பதற்கான ஆதாரத்தை திரட்ட எண்ணினாள். அதன்படி,அலைப்பேசியின் வழியாக தாரணி மருத்துவமனையினுள் நுழையும் காட்சியை படம் பிடிப்பதற்கு ஏதுவாக பிடித்துக்கொண்டு ‘எதுக்கு வந்தால் என்ன?இன்னைக்கு இவளை பத்தி ஏதாவது விஷயம் கிடைத்தால் அதை வைச்சு இவளை மாட்டிவிட்டு அடியோடு வீட்டை விட்டு துரத்தியடிக்கணும்’ என வன்மத்துடன் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தாள். தாரணியை பின்தொடர்ந்து இவளும் பூனை போல் பதுங்கி சுவர் ஓரமாக மறைந்துச் சென்றவள்,அவள் ஒரு […] - [விகசனம் 15](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): தாரணியை அணைத்தது மட்டுமே அவள் நினைவில் இருக்க,எப்போது இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பது போல் அவனது கரங்களுக்கு ஏற்ப பெண்ணவளின் உடல் வளைந்து குழைந்திருந்தது. அத்தோடு என்றும் நெருப்பாய் தகிக்கும் அவனது தொடுகையோ இன்று பனிக்கட்டியை தன் மேனியில் வைத்து உருட்டியது போல் பூவுடல் முழுமையும் மயிர்க்கூச்சரிந்து கூசி சிலிர்த்து நின்றது. அந்த சில்லென்ற தீண்டல் தந்த உணர்ச்சியின் மிகுதியில் அவளின் கரங்கள் தன்னையறியாமல் மேலெழுந்து ஆடவனை இழுத்து அணைத்து தன்னோடு இறுக்கியது. அதை அறிந்த ஆடவனின் இதழோரம் எதையோ சாதித்த வெற்றி புன்னகை மலர,அவளின் மேனியில் தன் ஆதிக்கத்தை செலுத்தி சில நிமிடங்களுக்கு பிறகே அவளிடமிருந்து விலக முயற்சித்தான். ஆனால் அப்போதும் பாவையவளின் பிடியில் இறுக்கம் அதிகரித்ததை வைத்து அவளின் முகத்தை ஏறிட்டவனிற்கு உள்ளுக்குள் விரகதாபம் அதிகரித்து அவனது தேகம் முறுக்கேறி கிளர்ந்தது. இதுவரை இல்லாத வகையில் பாவையவளின் வெண்ணிற முகம் நாணத்தில் சிவந்திருக்க இதழ்கள் துடிக்க கண்கள் மூடி மோகன […] - [விகசனம் 14](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): அதிருன் இவர்களது குடும்பதொழிலை விடுத்து யாவரின் உதவியுமின்றி சுயமாக தனக்கென்று ஒரு தொழிலை நிறுவி நிர்வாகம் செய்ய தொடங்கியதிலிருந்து,தன்னுடைய கம்பீரத்தையும் அறிவையும் கொண்டு பிறந்திருக்கும் பேரனின் திறமையையும் குறைந்த காலத்தில் அவனின் அசுர வளர்ச்சியையும் கண்டு வியந்துப்போனார் இவனது பாட்டனாரான அதிவீரராம பாண்டியன். அதனால் தன்னுடைய முதல் பேரனான அதிருங்கழகோனை அவர்களது ஒட்டுமொத்த தொழில் அனைத்திற்கும் முதன்மை வாரிசாக நியமித்தார். அவருக்கென்று பிறப்பெடுத்திருக்கும் மகன்களும் திறமை வாய்ந்தவர்கள் என்றாலும்,தனித்தன்மையோடும் சிறப்பாகவும் தொழிலை வழி நடத்திச் செல்லும் தலைமை பண்பு அவர்களிடம் இல்லை என்பதே அவரின் அத்தகைய முடிவிற்கு காரணம். அதனால் அவர்களின் கல்வி தகுதிக்கும் வலிமைக்கும் ஏற்றது போலான தொழிலை மகன்களுக்காக அமைத்து கொடுத்தவர்,அந்தந்த தொழில்களின் முதன்மை நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்திருந்தார். அவரின் காலத்திற்கு பிறகு அனைத்தும் அதிருனின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை இரண்டு வருடத்திற்கு முன்பே உயில் சாசனம் எழுதி வைத்திருந்தவர் மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் பறந்தார். […] - [விகசனம் 13](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): இணையத்தின் உதவியுடன் தன் கரத்தில் இருப்பது தூக்க மாத்திரை என்பதை அறிந்தவளிற்கு நெஞ்சம் படபடவென அடித்தது. ‘தூக்க மாத்திரையா?பால்ல இதை கலந்து யாருக்கு கொடுக்க எடுத்திட்டு போறாங்க?எதுக்கு?’ என அச்சத்துடன் விழிகள் விரிய அதனை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து பாதுகாத்தவள்,அவசரமாக ரதிதேவியை தேடிக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடி வந்தாள்‌. அவ்விடம் முழுவதும் பார்வையால் அலசி ஆராய்ந்தாலும் அங்கு ஒருவருமின்றி வெறுமையாக இருந்தது. சட்டென்று அவளின் கயல் விழிகள் ரதிதேவியின் அறையை நோக்கி அலைபாய,அவற்றின் கதவுகள் இழுத்து சாற்றப்பட்டிருப்பதை கண்டு பதட்டம் அதிகரித்து வியர்வை வழிந்தது. ‘ஐய்யோ…ஏதும் விபரீதம் நடக்குமா?’ அவளின் நெஞ்சம் அரற்றிக்கொண்டே இருக்க,சில நிமிடங்கள் அவரது அறைக்கதவையே வெறித்தவளிற்கு அதனை தட்டி திறக்க வைப்பது அநாகரீகமான செயலாக தெரிந்ததினால் அவ்விடத்திலே சில கணங்கள் அமைதியாய் நின்றாள். மற்றவர் என்றால் துணிச்சலாக இன்று போல் அவர்களை நேருக்கு நேராக எதிர்த்து நின்று போராடும் வலிமை கொண்டிருந்தவளிற்கு இவ்விடத்தில் பட்டென்று எந்த முடிவையும் எடுக்க […] - [விகசனம் 12](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): அதிருனின் மகிழுந்தில் அவனிற்கு முன்னே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த இளங்கோவிற்கோ பெரும் தயக்கமாக இருந்தது. அவனிடம் பேசி சிவதாரணியை அழைத்துச் செல்லலாம் என்று துணிச்சலாக முடிவெடுத்து வந்துவிட்டாலும்,ஏனோ அதிருனின் கண்களில் இருந்த தீர்க்கமும் முகத்தில் தெரிந்த இறுக்கமும் அவனை ஒரு வார்த்தை பேசவிடாமல் தடைசெய்தது. பின்னால் திரும்பியவன் கால் மேல் கால் போட்டு நீல நிற மேலங்கி மற்றும் அதே நிற கால்சராயோடு உள்ளே வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்து தோரணையாக அமர்ந்திருந்தவனை பார்த்தவனிற்கு அச்சத்தில் வியர்த்து வழிந்தது. எச்சிலை கூட்டி விழுங்கி தனது நெற்றியில் முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வையை தன் கைக்குட்டை கொண்டு துடைத்தவாறே “சார்” என ஒருவழியாக அழைத்து விட்டான். அவனை நோக்கி திரும்பிய அதிருனின் விழிகளில் தெரிந்த கனலை கண்டு அவனது வாய் மீண்டும் கப்பென்று மூடிக்கொண்டது. அதனை கண்டு கடுப்பானவன் “மிஸ்டர் இளங்கோ…டோன்ட் வேஸ்ட் மை டைம்…பேசறதா இருந்தால் பேசுங்க…இல்லையா கிளம்பிட்டே இருங்க” என […] - [விகசனம் 11](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): திடீரென்று அலைப்பேசியில் ஒலித்த குரலில் அவளின் நெஞ்சில் திகில் சூழ்ந்தாலும் வியர்த்து வழிய “யா…ரது?” என திக்கி திணறி வினவினாள். “நீ அதிருனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முக்கிய காரணமே நான் தான்…என்னை மறந்திட்ட பார்த்தியா செல்லம்?” என நக்கல் குரலில் வினவி இடிஇடியென சிரிக்க, அவரின் சப்தத்தில் அவளின் சப்த நாடியும் அடங்கினாலும் “யாரு நீங்க?” என்றாள் நலிந்த குரலில். “அடச்சே வாயை மூடுடி…உன்னை அந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பினது அந்த பயலோடு குடும்பம் நடத்தயில்லை…நான் சொன்ன வேலையை விட்டுட்டு அவனோடு சந்தோஷமா குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கலாம்னு தப்பு கணக்கு போட்டிருந்தால் இந்த நிமிஷமே அதனை அழிச்சிடு…அது கனவிலும் நடக்காது…நடக்கவும் கூடாது…அப்படி ஒண்ணு மட்டும் நடந்தது உன் ஆசை தங்கச்சியும் உன்னோட காதலனோட கழுத்தையும் கரகரவென அறுத்து எறிஞ்சுட்டு போயிட்டு இருப்பேன்” அரக்கத்தனத்தின் மொத்தவுருமாய் மனசாட்சி சிறிதுமின்றி எதிர்ப்புறம் பேசியவரின் வார்த்தையில் அவள் பதட்டமடைந்து “ஐய்யோ” என இருக்குமிடத்தை மறந்து […] - [விகசனம் 10](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): “ஆஆஆ” என்ற அலறிக்கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்த தாரணியின் மேனியெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது. ஒரு சில நிமிடங்கள் அந்த கற்பனையின் தாக்கத்திலிருந்து மீளமுடியாமல் மாய உலகில் சிக்கிக்கொண்டது போல் தேகமெல்லாம் வெடவெடத்தது. அவை ஒரு கனவு மட்டுமே என்று அவள் கிரகிக்கவே சில நிமிடங்கள் கடந்துவிட்டிருக்க,அதிருனை கத்தியால் குத்தும் போது அவனது இதழோரம் தோன்றிய அந்த சிறு புன்னகை இப்போதும் அச்சு அசலாய் நிஜத்தில் பார்த்தது போல் அவளின் மனதில் ஆழப்பதிந்திருந்தது. நிகழ்காலத்தில் அவனது இதழ்கள் சம்பிரதாயத்திற்காக கூட ஒரு நாளும் புன்னகை சிந்தியதில்லை என பாவையவளின் மனகண்ணில் அவனது வரிவடிவத்தை தோன்ற செய்து அவளது எண்ணத்தை மெய்ப்பித்தது. அத்தோடு தன் முகத்தில் தெறித்த அவனது இரத்த துளிகளின் ஈரம் இப்போதும் தன் அழகிய வதனத்தில் இருப்பது போல் நடுங்கிய கரம் கொண்டு முகத்தை அழுந்த துடைத்து பார்த்தவளின் இதயம் அசுரவேகத்தில் துடித்தது. அவளின் கையில் உதிரத்தின் சாயத்திற்கு பதிலாக வியர்வையின் ஈரத்தை உணர்ந்ததற்கு […] - [விகசனம் 9](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): இரவு எட்டு மணிக்கு பணியை முடித்துக்கொண்டு புறப்படும் வேளை வரையிலும் அதிருன் அலுவலகத்திற்கு திரும்பி வராததை கண்டு அவளிற்கு ஒரு புறம் குழப்பமாக இருந்தாலும்,மற்றொரு புறம் தன்னை கொடுமை செய்வதற்கு அவனில்லை என்று சிறிது நிம்மதியாகவும் இருந்தது. முதலாளி இல்லை என்றாலும் அவனிடம் கைநீட்டி ஊதியம் வாங்கும் ஊழியராய் கடமை தவறாமல் தன் பணிக்கு விசுவாசமாக இருந்தாள் சிவதாரணி. அவன் இங்கு வராததில் சிறிது ஆசுவாசம் தோன்றினாலும் எங்கோ ஒரு மூலையில் ‘அவர் எங்கே போயிருக்கிறார்?ஏன் இங்கு வரவில்லை’ என்று துணைவியருக்கே உரிய பதட்டமும் உருவாகியிருந்தது. இது தான் மஞ்சள் கயிற்றின் மகிமை என்பதோ? சுதாகருக்கு அழைத்து கணவனை பற்றி விசாரிக்கலாம் என்ற சிந்தனைகள் சுழன்றாலும் ‘வேண்டாம்’ நிச்சயம் ஏதேனும் ஒரு விபரீதத்திற்கு வழிவகுக்கும் தலையை உலுக்கி இரண்டு பேருந்தை பிடித்து புகுந்த வீடு வந்து சேர்ந்தாள். வியர்த்து விறுவிறுக்க இரவு ஒன்பது மணியை கடந்து பங்களாவின் வாசலில் காலடி எடுத்து வைத்தவளிற்கு […] - [விகசனம் 8](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): தன்னை நெருங்கிய அதிருனின் கரங்களை கண்டு அஞ்சி தாரணி ஒரு அடி பின்னால் சென்று “சார் கையை விடுங்க” என கண்கள் கலங்க அவனிடமிருந்து விடுப்பட்டு தப்பிச் செல்ல முனைந்தவளை ஒற்றை புருவம் உயர்த்தி இமைகள் இடுங்க பார்த்திருந்தவனின் தொலைப்பேசி தொல்லைபேசியாய் அலறியது. அதனால் அவளின் கரத்தை ஒரு சுழற்று சுழட்டி பெண்ணவளின் பின்புறம் மொத்தமும் தன் சரீரத்தில் பொருந்துவது போல் நிற்க வைத்து இடையோடு சேர்த்து அணைத்தப்படி மற்றொரு கரத்தால் தொலைப்பேசியை எடுத்து செவிக்கு கொடுத்தான். “எஸ் அதிருங்கழகோன் ஹியர்” என கம்பீரமாக குரல் கொடுத்தவாறே பாவையவளின் சங்கு கழுத்தில் தன் தாடையை அழுந்தப்பதித்து பேசிக்கொண்டிருந்தவனின் இதழிலிருந்த வெப்ப பெருமூச்சு தாரணியை முதன் முறையாய் சிலிர்க்க வைத்தது. ஆயினும்,விருப்பமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட கணவனின் தொடுகை அவளிற்கு அருவருப்பை மட்டுமே கொடுக்க,இதற்கு ஒத்துழைத்தால் தன் பெண்மைக்கு அவள் செய்யும் துரோகம் என்பதை உணர்ந்து வேதனையில் முகம் சுருங்க அவனின் கரங்களை தன்னிடமிருந்து பிரிக்க […] - [விகசனம் 7](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): கணவன் கூறிவிட்டுச் சென்ற சொற்களை முழுமையாக கிரகித்து அதிர்விலிருந்து தாரணி வெளியே வருவதற்குள்,தன்னை கொலைவெறியோடு எரித்து சாம்பலாக்கும் எரிமலை சீற்றத்தோடு நோக்கிய யாமினியை கண்டவளிற்கு உள்ளுக்குள் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. ‘நிச்சயம்…இதற்கு மேலும் இங்கேயிருந்தால் வார்த்தையென்னும் தேளாய் கொட்டி விஷத்தை கக்குவாள்’ என்பதை அறிந்து “ஆன்ட்டி இருங்க…நானும் வரேன்” என அவசரமாக மொழிந்து விருட்டென்று சமையலறையை நோக்கி தப்பி ஓடிவிட்டாள். சில விடயங்களில் வீரனாய் எதிர்த்து நின்று சண்டையிடுவதை விட கோழை என்று பெயர் வாங்கினாலும் நம்மை நாவென்னும் தீயினால் சுட காத்திருக்கும் வஞ்சகர்களிடமிருந்து விலகிச் செல்வது நன்று என்பதை பாவையவள் அறிந்து வைத்திருந்தாள். செல்லும் அவளின் முதுகை வெறித்த யாமினி நக்கலாக இதழை வளைத்து ‘ஓடுறீயா?நல்லா ஓடு…எப்போ இருந்தாலும் என்கிட்ட தனியா சிக்கி தானே ஆகணும்…அப்போ உன்னை கதற கதற வைச்சு செய்யறேன்’ என மனதிற்குள் கறுவிக்கொண்டவள்,இவ்விஷயத்தை தனது தாயிடம் ஆத்திரத்துடன் பகிர்ந்துக்கொண்டாள். “மம்மி அந்த கேடு கெட்டவகிட்டயெல்லாம் என்னால் எதையும் […] - [விகசனம் 6](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): தாரணியின் கணவனது இந்த கொடூரத்தினால் மனமெல்லாம் ரணமாய் வலிக்க,அவனின் அருகாமையை சிறிதும் சகித்துக்கொள்ள முடியாமல் சரீரம் விறைக்க எந்த வித உணர்ச்சியுமில்லாத ஜடம் போல் படுத்திருந்தாள். தன் தேடல்களை அவளுள் நிகழ்த்தியவனிற்கு சடுதியாக ஏதேதோ சிந்தனைகள் அவனை ஆட்டிப்படைத்தது. அத்தோடு அவளின் கண்ணீரும் விசும்பலும் வேறு அவனது காம உணர்ச்சிகளுக்கு தடையாக இருக்க படீரென்று அவளின் மீதிருந்து எழுந்துக் கொண்டவனின் விழிகள் இரண்டும் கொவ்வை பழம் போல் சிவந்திருந்தது‌. கணவனாகிய தன்னுடைய தீண்டலை எந்தவொரு மனையாளும் மயங்கி அவனிற்கு உடன்பட்டால் தான் ஆடவனிற்கு கர்வமே!! ஆனால் இங்கோ பாவையவள் அவனின் ஸ்பரிசத்திற்கு கிறங்குவதற்கு பதிலாக அழுகையை பரிசாக கொடுப்பதை கண்டு அவனின் ஆணவத்திற்கே உரிய இழுக்காக தோன்ற கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தோடு கைமுஷ்டியை இறுக்கி மெத்தையில் ஓங்கி குத்தினான். அவனது அந்த செயல் அச்சத்தை கொடுத்தாலும்,அவன் தன் கண்ணீர் கண்டு தன்னிலிருந்து விலகியது அவளிற்குள் பெரும் ஆறுதலை உண்டாக்கியது. சிறிது ஆசுவாசத்தோடு போர்வையை […] - [விகசனம் 5](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): வெகு நாட்களுக்கு பிறகு ஆழ்ந்த நித்திரையில் இருந்த மனையாளின் மீது குளிர்நீர் முழுவதுமாக சரித்திருந்தான் அதிருன். அந்த குளிர் நீரின் தாக்கம் பெண்ணவளின் மேனியின் வழியாக உள்ளே ஊடுருவி பல ஆயிரம் ஊசியால் குத்திய உணர்வில் மேனி தூக்கிவாரிப்போட அடித்து பிடித்து எழுந்தமர்ந்து ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள். அத்தோடு தாரணியின் உடை மொத்தமும் உறைநீரினால் அபிஷேகம் செய்திருந்ததின் விளைவால் சர்வ அங்கமும் குளிரில் வெடவெடக்க ‘யார் தன் மீது நீரை ஊற்றியது?’ என்பது போல் தலையை உயர்த்தியவளின் கயல் விழிகள் ‘அது தன் கணவன்’ என்று தெரிந்ததும் தெறித்து வெளியே விழுந்து விடுவது போல் மிரட்சியோடு விரிந்தது. நீரின் பலனால் உடலோடு ஒட்டி உறவாடிய உடைகளின் வழியாக தெரிந்த மெல்லிய மேனியாளின் அங்க லாவண்யங்களின் வரிவடிவத்தை ஆழ்ந்து நோக்கியவாறே புட்டியை அருகிலிருந்த அலங்கார மேசையின் மீது வைத்தவனின் இதழ்களோ வன்மத்தோடு வளைந்தது. தாரணியோ தன் கண் முன்னால் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து […] - [விகசனம் 4](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): அதிருங்கழகோன் பணி என்று வந்துவிட்டால் ஊண்,உறக்கம், இருப்பிடம் என அனைத்தையும் மறந்துவிடுவான். ஏனெனில் அவர்களின் குடும்பத்தை விட அவனது தொழில் பாரம்பரியமும் செல்வாக்கும் மிக முக்கியமானது. அவனது எண்ணங்கள் யாவிலும் தற்போதிருக்கும் செல்வங்களை விட பல மடங்கு அதிகமாக எவ்வாறு பெருக்குவது என்பதே சிந்தனையெங்கும் நிரம்பியிருக்கும் நிலையில்,அதற்கு பங்கம் வருவது போல் ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களுக்கான தண்டனையை கொடுப்பதில் அவன் அசகாய சூரன் தான். அத்தோடு தான் நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இராட்சசனும் அவனே!! உதவி என்று தன்னை நாடி வருபவர்களை காக்கும் இரட்சகனும் அவனே!! எதிரி என்று வந்துவிட்டால் அவன் என்றுமே மன்னிப்பு என்ற சொல்லை வழங்காத அரக்கனும் அவனே!!   மொத்தத்தில் நல்லவர்களுக்கு நல்லவன்…கெட்டவர்களுக்கு மிகவும் கேடு கெட்டவன் என்ற கொள்கையுடைய தீவிரவாதி. பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவரான பாண்டிய மன்னர்களின் வம்சாவழியில் வந்த குடும்பமே அதிருங்கழகோனின் பரம்பரை என்பதாலோ,ஒரு வேந்தனுக்குரிய கம்பீரமும் […] - [விகசனம் 3](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): இருள் சூழ்ந்த அந்த ஏகாந்தமான இரவை திருமணமான தம்பதியினர் ஒவ்வொருவரும் ஒரு இனிய படபடப்புடன் ஆசையாய் எதிர்ப்பார்த்திருப்பார்கள். ஆனால் அனைத்திற்கும் தலைகீழாக முதலிரவு அறை எந்த வித அலங்காரமுமின்றி நிர்மூலமாக இருந்தது. காலையில் அவளை மணமேடையில் அம்போவென விட்டுச்சென்ற காரிகையின் கண்ணாளன் இரவு பத்து மணியை கடந்ததற்கு பிறகும் வீடு வந்து சேரவில்லை. தனக்கென கொடுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்திருந்த தாரணிக்கோ இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல் பெரும் தவிப்பாய் இருந்தது. குடும்பத்திலுள்ள மற்றவரின் விருப்பமின்றி இந்த வீட்டினுள் மருமகளாய் காலடி எடுத்து வைத்திருந்தாலும், என்றாவது ஒரு நாள் தன்புறம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்து அவர்களின் மனதை மாற்றிவிடலாம் என்றிருந்த பாவையவளின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஏனெனில் அவள் இல்லத்தின் குலவிளக்காய் ஆராத்தி சுற்றி உள்ளே அழைத்து வரப்பட்ட அடுத்த வினாடியே குடும்பத்து ஆண்கள் அனைவருக்கும் அலைப்பேசியின் வழியாக அழைப்பு வந்தது. அந்த அழைப்பிற்கு பின் இருக்கும் […] - [விகசனம் 2](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): அனைவரின் கண்களும் பெண்ணவளை குற்றம் சாட்டிட,அவளோ அந்நொடியே பூமி இரண்டாக பிளந்து நிலத்தின் உள்ளே புதைந்துவிட வேண்டும் என்பது போன்ற பெரும் அவஸ்தையுடன் நின்றிருந்தாள். அவளின் மேல் இரக்கமுள்ள ஒருவராய் சந்திராயினி அவளை தோளோடு அணைத்து “நீ நம்ப வீட்டுக்கு வந்தால் எல்லாம் சரியாகிடும்” என அவளிற்கு சமாதானம் கூறி மேடையிலிருந்து அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார். அவளோ வலுக்கட்டாயமாக அவரை பார்த்து சிரித்து ‘உங்க முகத்தில் இருக்கிற இந்த சிரிப்பு கடைசி வரை நிலைக்காது ஆன்ட்டி’ என மனதிற்குள் எதையோ நினைத்து வருந்தினாள். அச்சமயம் தாரணியின் தாய் விஜிதா “அண்ணி மறு வீட்டிற்கு வர சம்பிரதாயமெல்லாம் ஒண்ணும் வேணாம்…நீங்க அவளை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க…நாங்களும் அங்கேயே வந்து இரண்டு நாளு தங்கிட்டு அப்புறம் வீட்டுக்கு போறோம்” அவரே அழையா விருந்தாளியாய் அவர்களோடு வந்து ஒட்டிக்கொண்டதை கண்டு சந்திராயினிக்கு எரிச்சலாக இருந்தது என்றால்,அவருடைய குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிந்தது. படீரென்று […] - [விகசனம் 1](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): “மாங்கல்யம் தந்துனானேமமஜீவன ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ சரதஸ்சதம்!!” என்று புரோகிதரின் அமுத மொழிகள் அந்த திருமண மண்டபத்தையே நிறைக்க “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என தன்னுடைய கணீர் குரலில் அவ்விடமே அதிர குரல் கொடுத்தார். அடுத்த வினாடியே,அதுவரை செவிகளுக்கு இனிமையாய் மென்மையாக வாசித்துக்கொண்டிருந்த வாத்தியங்கள் அங்கு கூடியிருந்த மக்களின் காது ஜவ்வை கிழித்துக்கொண்டு இடியாய் முழங்கியது. “மாங்கல்யத்தை அவா கழுத்துலே கட்டுங்கோ” என அய்யர் குரலெழுப்பி தாலியை மணமகனின் கையில் கொடுத்தவுடன்,அதை வாங்கி சில வினாடிகள் வெறித்து பார்த்திருந்த அந்த விழாவின் நாயகன் பின்பு என்ன நினைத்தானோ, நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டு அதனை தன்னருகில் பதுமையாய் அமர்ந்திருந்த வஞ்சிக்கொடியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னுடைய தாரமாக்கினான் அதிருங்கழகோன் பாண்டியன். பெயருக்கு ஏற்றது போல் அழகும் கம்பீரமும் நிறைந்த ஆணழகன். அனைவரையும் உயர்ந்து பார்க்க வைக்கும் அசாத்தியமான ஆறடி இரண்டு அங்குல உயரம்,மாநிறத்திற்கும் சற்று குறைவான திராவிட நிறம்,நடக்கும் போது நெற்றியின் மீது […] - [மலர்கள் 4](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): சென்னையில் பணக்காரர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் மற்ற பல மாடி கட்டங்களை சிறியதாக்கியப்படி மிகப்பெரிய அளவில் கம்பீரமாய் உயர்ந்து நின்றது ஒரு வெள்ளை நிற பங்களா.அதை பங்களா என்று கூறுவதை விட குட்டி அரண்மணை என்று கூறவதே ஏற்றதாக இருக்கும்.அந்தஅளவு மிகுந்த பிரமாண்டமாக இருந்தது. அந்த வெள்ளை பங்களாவினுள் உள்ள விசாலமான வரவேற்பறையின் நடுவே உயர்ரக நீள்விரிக்கைகள் போடப்பட்டு அதன் வலதுபக்கம்  உணவுகூடங்கள் அமைக்கப்பட்டு இடதுபக்கம் சில அறைகள் இருந்தது.படிக்கட்டுகள் கீழிருந்து இருபக்கமாக வளைந்து வந்து மேலே இணைந்து இருக்க,அத்தோடு வீடு முழுவதும் ஏசியால் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த படிகட்டுகளின் வழியே யாதிஷ் கிருஷ்ணகுமார் சாம்பல் நிற மேலங்கி(coat) மற்றும் அதே நிறத்தில் கால்சட்டையும் அணிந்து அதற்கு ஏற்றவாறு கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற டை அணிந்து ஜெல் தடவிய வாரிப்படிந்த கேசத்துடன் கையில் கருப்பு நிற பெட்டியுடன் கம்பீரமாக இராஜகுமாரனை போல் படிக்கட்டுகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான். படிக்கட்டுகளில் […] - [ஜாக்சன் 28(இறுதி அத்தியாயம்)](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-28-2/): நாட்கள் வேகமாக விரைந்திட,கிம் டேவும் வளர்மதியும் கொரியா செல்லும் தினமும் வந்தது. வளர்மதிக்கு கொரியாவில் அவளது படிப்பிற்கான வேலை கிடைத்துவிட்டது.அதனால் அவளது இலட்சத்தியத்துடன் அவனும்,அவனது இலட்சத்தியத்துடன் அவளும் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டனர். தோழியை பிரிவதினால் ஷீலாவிற்கு தான் கை உடைந்தது போல் ஆகிவிட்டது. சிறு வயதிலிருந்தே அவளுடனே பயணிப்பதால் அவளால் அதனை ஏற்கவே முடியவே இல்லை‌. உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல் துடித்துவிட்டாள் அவள். அதனால் விமான நிலையத்திலே இருவரும் கட்டுப்பிடித்து அழ,பலரும் அதனை கண்டு சோகத்துடன் கடக்க ஆரம்பித்துவிட்டனர். வளர்மதியின் தந்தையோ “நீ எங்க சாதி,சனம் இல்லைனாலும் உன் மேலே ஏனோ அளவுக்கதிகமான நம்பிக்கையிருக்கு தம்பி…எப்படி அப்படியொரு நம்பிக்கை வந்துச்சுனு எனக்கே தெரியலைப்பா…ஆனாலும் சொல்ல வேண்டிய கடமை என்னோடது என் பொண்ணை கண் கலங்காமல் சந்தோஷமா பார்த்துக்கோப்பா” என அவனின் கைப்பிடித்து கூற, அவனோ ‘பின்ன ஆறு ஜென்மமா எங்க லவ்வை பிரிச்ச வில்லனே நீங்க தானே…அந்த கில்ட் இப்போ […] - [ஜாக்சன் 27(2)](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-28/): திருமண நாள் இரவு, இருவருக்கும் அவளின் வீட்டு அறையில் தான் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் சிவப்பு நிற புடவை என்றால்,இப்போது பச்சை நிறத்தில் ரோஜா பூக்கள் போட்ட மெல்லிதான பட்டுப்புடவை கட்டி,அவனை அவள் மயக்கியிருந்தாள். அதனால் அறைக்குள் பால் சொம்புடன் வந்தவளை பின்னாலிருந்து அணைத்த கிம் டே “நீ இந்த டிரஸில் கார்ஜியஸா இருக்க ரோஸ்” என கிறக்கத்துடன் மொழிந்தவாறே அவளின் செவியில் முத்தம் பதித்தான். அவனது முத்தத்தில் அவளின் மேனி சிலிர்த்திட “அப்போ நான் புடவையில் மட்டும் தான் அழகா இருக்கேனா ஜாக்கி?” என விழிகள் சொருக கிசுகிசுப்பான குரலில் அவள் கேட்க, “நோ டியர்…மத்த டிரஸிலும் நீ செம்ம அழகு தான்…அதை விட…” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, அவளின் செவியோரம் குனிந்தவன் உஷ்ண பெருமூச்சுடன் “டிரஸ் இல்லாமல் தான் நீ இன்னும் அழகா இருக்க…” என விரக தாபத்துடன் கூறியவனின் கரங்கள் அவளின் உடையை அகற்றும் பணியில் […] - [ஜாக்சன் 27(1)](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-27/): சில நிமிடங்கள் மோன நிலையில் கண் மூடி நின்றிருந்தவளிடமிருந்து விலகிய கிம் டே,அவளின் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஓரமாக வைத்தான். உடனே அவள் கண் திறக்க,அவனது விழிகளோ அவளை முழுதாய் ரசித்துக்கொண்டிருந்தது. அவளை முதன்முறையாய் புடவையில் காண்கிறான். அவள் தோழியின் திருமண வரவேற்பிற்காக மெல்லியதான தங்க கரை வைத்த அடர் கத்திரிப் பூ நிற பட்டுப்புடவை அணிந்திருந்தாள். விழாவிற்காக அவள் பிரத்யேகமாக தன்னை அலங்கரித்திருக்க,அவளது அந்த ஒப்பனையும் அழகும் அவனை கிறங்க வைத்தது. ஏற்கனவே அவளில் மயங்கி இருப்பவன்,இப்போது சொல்லவே தேவையில்லை. புடவையின் மடிப்பில் வெளிப்பட்ட அவளது யௌவனங்களிலிருந்து அவனால் பார்வையை விலக்கவே முடியவில்லை. அவளின் புதிய உடை,அவளின் புதிய தோற்றம் அனைத்தும் மனதோடு சேர்த்து அவனது ஆண்மையையும் கட்டியிழுத்தன. அவனுள் மோகமென்னும் தீ கொளுந்துவிட்டு எரிய,அவளையே அவன் கடித்து தின்பது போல் பார்த்திருந்தான். அவனது சாம்பல் நிற விழிகளின் வழியே வெளிப்பட்ட அவனது செந்தீயை அறிந்த பெண்ணவளின் முகமும் செவ்வானமாய் சிவந்துப்போனது. […] - [ஜாக்சன் 26](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-26/): தனது காதலுக்காக மௌனமாய் தனித்து நின்று போராடி அதில் வெற்றியும் கொண்டிருந்தாள் அவள். அவளது தந்தை மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போதும் ஏனோ அவளால் மகிழ்ச்சியுற முடியவில்லை. ஏனெனில் அவளது தாயின் சொற்கள் அந்த அளவு அவளை காயப்படுத்தியிருந்தது. அத்தோடு அவளது ஜாக்கியின் தாமதமான வருகை அவளை அப்படியே புதைக்குழிக்குள் தள்ளியது போல் மூச்சுமுட்டும் நரக வேதனையை கொடுத்தது. அதனால் தற்போது அவளால் அவனை காண முடியும் என்று தோன்றாததால் தன்னை நாடி வந்த கிம் டேவை பார்க்காமலே திருப்பி அனுப்பி விட்டாள். மிகவும் சிரமமேற்று அவளை காண தவிப்புடன் ஓடி வந்தவனிடம்‌ ஷீலாவை வைத்து “இரண்டு பேரும் இலட்சியத்தில் ஜெயிக்கிற வரை வெயிட் பண்ண சொன்னயில்லை ஜாக்கி…நானும் இங்க நிறைய செய்ய வேண்டியிருக்கு…நான் உனக்காக வெயிட் பண்ணறேன்…ஜெயிச்சிட்டு வந்து என்கிட்ட பேசு…அதுவரைக்கும் நம்ம பேசிக்க வேண்டாம்” என தயவு தாட்சண்யம் சிறிதுமின்றி சொல்லி அனுப்பியிருந்தாள். அவன் மீது கோபம் என்றெல்லாம் […] - [ஜாக்சன் 25](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-25/): வளர்மதி அவளது ஜாக்கியை சந்தித்து ஒரு வருடம் கடந்துவிட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, அவளை ஒரு வாரத்தில் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற கிம் டேஹ்யுங்கால் அன்று வரமுடியவில்லை. ஏனெனில்,திடீரென்று அவர்களது செவன் ஸ்டார் நிறுவனம் புதிதாக ஒரு பாடலை வெளியிட விரும்புவதால்,அவன் அந்த பணியில் மும்முரமாக வேண்டிய ஒரு சூழ்நிலை! அவளிற்கு அலைப்பேசியின் வழியே அழைத்து அவன் விபரம் உரைத்திட,பாவையவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிவிட்டன. அதையறிந்து “சாரி டியர்…என்னால் சொன்ன வாக்கை காப்பாத்த முடியலை…கண்டிப்பா அந்த பாட்டு ரிலீஸான உடனே உன்னை நேரில் வந்து மீட் பண்ணறேன்” என்று அவன் மனமுருகி மன்னிப்பை யாசிக்க,அவளாலும் எதுவும் கூற முடியவில்லை. அவளை போலவே அவனது இலட்சியமும் முக்கியம் என்பதால் “இட்ஸ் ஓகே ஜாக்கி…ஐயம் வெயிட்டிங் ஃபார் யூ” என்று சிரித்துக்கொண்டே அவனிடம் சொல்ல, “தேங்க்ஸ் ரோஸ்…சாராங்கே” என அலைப்பேசியின் வழியே தன் முத்தத்தை பரிசளித்தவன்,பின்பு அவன் அழைப்பை துண்டித்தான். அவள் ஒரு […] - [ஜாக்சன் 24](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-24/): அவன் முன்பு அணிந்திருந்த சட்டை நன்றாகவே கசங்கியிருந்தது. அவளின் பிடியில் கசங்கிய கருப்பு நிற சட்டையை கையில் எடுத்து பார்த்தவனிற்கு சற்று முன்பு நடந்தேறிய சிறு கூடல் கண்முன் வந்துச் செல்ல,அவனின் தேகமும் சூடேறின. அதனால் ஒரு கள்ளச்சிரிப்புடனே அதனை அழுக்கு கூடையில் போட்டான். இப்போது அவன் வெண்ணிற சட்டை ஒன்றை அணிந்து,சட்டையின் கையை மடித்துவிட்டவாறே வரவேற்பறை வந்தான். அவன் சென்று உடை மாற்றி வரும் வரையிலுமே காரிகையவள் வெளியே வந்திருக்கவில்லை. அவளோ அவனது செயலை எண்ணி வெட்கிப்போனவளாய் வெப்ப மூச்சுகளை வெளியேற்றியவாறே உடையணிந்தாள். ‘அச்சோ…கொஞ்ச நேரத்துல என்னவெல்லாம் பண்ணிட்டான்’ என இதழ்கடித்து முகத்தை மூடியவளால் அந்த அவஸ்தையான உணர்வுகளிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவளின் மேனி உணர்வுகளின் கொந்தளிப்பில் நெருப்பாய் தகித்தது. அவனை எதிர்கொள்ள முடியும் என்றும் தோன்றாததால் அவள் அறையிலிருந்து வெளிவராமல் உள்ளே இருந்துக்கொண்டாள். ஆனால் வெளியிலிருந்து “ரோஸ் இன்னும் எவ்வளவு நேரம் தான் உள்ளயே இருப்ப…நமக்கு டைமில்லை” என […] - [ஜாக்சன் 23](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-23/): “உன்னோட முதல் கேள்வி என்ன?லீ ஜி சூவோட ஆன்மா ஏன் உன்னை தேடி வந்துச்சுனு காரணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க, “ஆம்” என அவள் மேலும் கீழுமாய் தலையசைத்ததும் “முதல் விஷயம் அது லீ ஜி சூவோட ஆன்மாவே இல்லை…” என்றான் அதிரடியாக. அவளது கேள்விக்கான முதல் பதிலே அவளிற்கு தூக்கிவாரிப்போட செய்தது. “வாட்…என்ன சொல்லற ஜாக்கி?” என அதிர்ச்சியில் விழி விரித்தப்படி அவள் கேட்க, “எஸ்…நிஜமா அது லீ ஜி சூவோட ஆன்மாவே இல்லை…கிம்டேஜோவோட ஆறு ஜென்ம நினைவுகளோட மொத்த சக்தி தான் அந்த அரூபம்…” என அலுங்காமல் குலுங்காமல் ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்டான். அவளிற்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருக்க “இல்லை எனக்கு புரியலை” என அப்பாவியாய் கேட்க, அதற்கு இலேசாக இதழ்பிரித்து சிரித்து “உனக்கு புரியற மாதிரியே சொல்லறேன்‌…இதுக்கு முன்னாடி நமக்கு ஆறு ஜென்மம் இருக்கில்லை…அந்த ஆறு ஜென்மத்தில் வாழ்ந்த என்னோட […] - [ஜாக்சன் 22](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-22/): வளர்மதி தோழிக்காக காத்திருந்தப்போது அவளிடம் பேசுவதற்கு ஒரு ஆடவன் வந்தான். அவன் மின்ஹோ…அவர்களுடனே தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுப்படும் தென்கொரியாவை சேர்ந்த மாணவன் அவன். அவனிற்கு வளர்மதியை பிடித்திருந்தது.அதை அவ்வப்போது அவன் அவளிடம் வெளியிட்டாலும்,அவள் எதுவும் தெரியாதது போலவே கடந்து விடுவாள். இப்போது அவள் தனியாக நின்றிருப்பதை பார்த்துவிட்டு அவளிடம் வந்து பேசினான் அவன். ‘ஆத்தி இவனா?தனியா வேற சிக்கிட்டேனா?போச்சு…இவன் இன்னைக்கு ஊத்தற ஜொள்ளுல இந்த இடமே மூழ்கப்போகுது’ என உள்ளுக்குள் நிந்தித்துக்கொண்டே வெளியே “அன்யவசியோ மின்ஹோ” என தலைகுனிந்து அவர்களது முறையில் வணக்கம் தெரிவித்து புன்னகைத்தாள். அவனும் சிரித்துக்கொண்டே “எங்க மொழியை இப்போ நீ விரும்பி கத்துக்க ஆரம்பிச்சிட்டியா வளர்?” என்று அவன் கொரியன் மொழியில் கேட்க, அவளோ ‘வேற வழி…இந்த பேஸ்ட் மூஞ்சுகளோட குப்பை கொட்டணும்னா கத்துக்கிட்டு தானே ஆகணும்’ என தமிழில் சிரித்துக்கொண்டே முனகியவள் வெளியே “யா…யா” என நல்லப்பிள்ளை போல் தலையாட்டினாள். இங்கு வந்ததில் அவளிற்கு நடந்த ஒரே […] - [ஜாக்சன் 21](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-21/): ஒரு கணம் அவளை இமைகள் இடுங்க நோக்கிய கிம் டேஹ்யுங்,சட்டென தலையை உலுக்கி இலேசாக சிரித்தவன் “நைஸ் டூ மீட் யூ ரோஸ்…ஆர் யூ ஃப்ரம் இந்தியா?” என அவன் இயல்பான ஆங்கிலத்தில் விசாரிக்க, அவனது பார்வையிலும் பேச்சிலும் ஒரு அந்நியம் குடியிருந்தது. அவளோ பதிலேதும் கூறாமல் அவனையே ஆராய்ச்சியாக பார்த்திருக்கவும்,அவளின் பார்வை அவனை என்னவோ செய்தன. அது ஒரு சங்கடமான சூழ்நிலையை உண்டாக்க ‘என்னடா இது’ என்பது போல் இதழை ஒரு முறை நாவால் வருடிவிட்டு “கம்சஹப்னிதா(நன்றி)” என சிரித்தமுகமாக அவளிடம் தான் கையெழுத்திட்ட காகிதத்தை நீட்டவும்,அவள் அவனிடமிருந்து அந்த காகிதத்தை வாங்காமல் அவனது சாம்பல் நிற விழிகளையே இமைக்காமல் பார்த்திருந்தாள். அவ்விழிகள் அவளின் பொக்கிஷத்தை நினைவுறுத்தினால், அவனது புன்னகை அவளின் இழந்த சொர்க்கத்தை மீட்டு தருவதாய் இருந்தன. உடனே அவளின் உள்ளம் பரபரக்க “நான் யாருனு தெரியுதா ஜாக்கி?” என தமிழில் அவள் ஆர்வமாக கேட்கவும்,அவனது முகத்தில் குழப்பம் தென்பட்டதே […] - [ஜாக்சன் 20](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-20/): வளர்மதியும் ஷீலாவும் இப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முனைப்பில் இருந்தார்கள். அதற்காக ஒரு கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றுக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய தொல்லியல் நிறுவனம் ஒன்றில் இணைந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு இருவருக்கும் கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது. இன்று தான் இருவரும் அந்த பயிற்சியில் சேர வேண்டிய முதல் தினம், அதற்காக வளர்மதி கண்ணாடியின் முன்பு நின்று தயாராகிக் கொண்டிருந்தாள். ஷீலாவோ கட்டிலில் படுத்து “உனக்கு வேணும்னா நீ போய் கிணத்துல குதிடி…ஒய் மீ…” என காலை உதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டிருந்தாள். வளர்மதியோ “எட்டி வந்து மிதிக்கிறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா வந்து ரெடியாகுடி…நேராமாகுது” என முகத்திற்கு ஒப்பனை செய்தவாறே அவளை அதட்டினாள். “ஏன்டி உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்கா இல்லையா?ஆறு ஜென்மமா என்னை படுத்தினது பத்தாதா உனக்கு” என முகத்தை தூக்கி வைத்து திட்டவும், “பத்தாது” என பட்டென அவளிடமிருந்து பதில் வந்தது. “அவ்வா” […] - [ஜாக்சன் 19](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-19/): நிகழ்காலம், வளர்மதி தன் தோழியிடம் தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவர்கள் சந்தித்ததில் தொடங்கி அவர்களது இறுதி தருணம் வரை அனைத்தையும் அவள் கூறி முடித்ததும்,ஷீலாவோ குலுங்கி குலுங்கி அழுதாள். அந்த நாளின் தாக்கத்தில் வளர்மதியின் மனம் கூட சிறிது துவண்டுப்போயிருந்தது. அவள் அதை எண்ணி வருந்தியிருந்த நிலையில் திடீரென்று தோழியின் அழுகை சப்தம் கேட்டதும் கவனம் களைந்த வளர்மதி அவள் புறம் திரும்பி “ஏன்டி இப்போ அழற?” என குழப்பத்துடன் கேட்க, ஷீலாவோ நாசியை உறிஞ்சிப்படி “பாவம்டி…அந்த ரோசாவும் டேஜோவும்…எவ்ளோ லவ்லியா ஆரம்பிச்ச லவ் ஸ்டோரி இப்படியொரு சேட் எண்டிங் இருந்திருக்க வேணாம்” என விம்மிக்கொண்டே உரைத்தாள். சட்டென அவளின் தலையில் அடித்து “அடச்சீ வாயை மூடு…அந்த ரோசா நான் தான் உன் முன்னாடி கல்குத்து மாதிரி உட்கார்ந்திருக்கேனே…அப்புறம் எதுக்கு ஒப்பாரி வைக்கிற?” என அதட்ட, “இருந்தாலும் ஐயம் வெர்ரி சேட்…ரொம்ப டச்சிங்கா இருக்குடி…ஊஊஊ” […] - [ஜாக்சன் 18](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-18/): இப்படியே அவர்களது ரகசிய சந்திப்பு நடந்தேறிக்கொண்டே இருக்க,மல்லிக்கு தான் ஒவ்வொரு நிமிடமும் ‘என்ன நேரப்போகிறதோ?’ என அச்சமாக இருந்தது. அவளின் கவலையெல்லாம் ரோசாவிற்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ என்பது மட்டும் தான்! பயம் அவளை சிறிது சிறிதாக கொன்ற அந்த வேளையிலும் அவள் யாரிடமும் இவர்களது நேசத்தை பற்றி மூச்சே விடவில்லை. ஏனெனில்,ரோசாவிற்கு அவள் நெருங்கிய தோழி மட்டுமில்ல…தீவிர விசுவாசியும் கூட! ஆகையாலே அவளின் முடிவை எண்ணி அவள் மனதிற்குள் அழுதுக்கொண்டிருந்தாள். வாய் இருந்தும் ஊமையாய் அவளிருக்க,தோழி படும் வேதனை அறியாமல் தன் பொன்னான நேரத்தை தன்னவனோடு தனிமையில் செலவு செய்துக்கொண்டிருந்தாள் ரோசா. டேஜோவும் தனது பிறப்பிடத்தையே மறந்துவிட்டு தன்னவளே கதியென அவளிடம் சரணடைந்துவிட்டான். மல்லி யாரிடமும் விஷயத்தை கூறவில்லை என்றாலும்,மகள் அடிக்கடி குலதெய்வ கோவிலிற்கு செல்வது விஜயேந்திரனிற்கு சந்தேகத்தை உண்டாகியிருந்தது. உடனே தனது தீவிர விசுவாசி ஒருவனை அழைத்து ‘என்ன’ என்று கண்காணிக்கும் படி கட்டளையிட்டார். ரோசாவுடன் இருக்கும் வீரர்கள் தொடங்கி […] - [ஜாக்சன் 17](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-17/): இருவரும் ஒன்றாக தங்களது நேசத்தை சொற்களால் பகிர்ந்ததற்கு பிறகு,அவளின் தயக்கமெல்லாம் தொலை தூரம் பறந்துச் சென்றது. அதனால் அவன் பாறையின் மீதும் அவள் அவன் மார்பின் மீதும் தலைசாய்த்து அமர்ந்திருந்தார்கள். அவனது விரல்கள் அவளின் கூந்தலை மெதுவாக வருடிக்கொடுக்க,அது தந்த சுகத்தில் பாவையவளின் மனதில் ஒரு நிம்மதி குடிக்கொண்டது. இருவரது இதழிலும் ஒரு நிறைவான புன்னகை ஒன்று உதயமாகியிருந்தது. தங்களது வாழ்க்கை இப்படியே இந்த வசந்தமான தருணத்தோடு நீடித்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் இருவரின் நெஞ்சத்திலும் தோன்றின. இருவரும் கண் மூடி ஒரு மோன நிலையில் அமர்ந்திருக்க,படீரென விழி திறந்த மங்கையவள் “வீரரே நான் ஒன்றை கேட்க மறந்துவிட்டேன்…தாங்கள் யார் என்பது பற்றி இதுவரை எனக்கு எதுவும் தெரியாது…முதலில் உங்களை பற்றிய தகவல்களை கூறுங்கள்” என படபடவென கேள்விக்கேட்டு அவனை ஏறிட்டவளை அவன் வித்தியாசமாக நோக்கினான். தான் யாரென்று தெரிந்துக்கொள்ளாமல் அவள் தன்னை நேசிப்பதை எண்ணி ஒரு புறம் வியப்பாகவும், மற்றொரு புறம் […] - [ஜாக்சன் 16](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-16/): அனைவரும் அவளை காணாமல் அங்கு கலங்கிப் போய் இருக்க, அதேகணம் ஆற்றின் மற்றொரு கோடியில் ரோசா நீரிலிருந்து எழுந்தாள். அவளின் கரம் பற்றியவாறு அவளுடனே வேறொரு ஆடவனும் நீருக்குள்ளிருந்து இணைந்து எழ, அவனை அவள் விழிகளால் சுட்டெரித்தாள் என்றால்,அவனோ அவளை நோக்கி தன் வசீகர புன்னகையை சிந்தினான். அவன் வேறுயாருமல்ல…அத்தனை நாட்களாய் யாருக்காக அவள் தவமிருந்தாளோ சாட்சாத் அவனே தான்,கிம்டேஜோ! கிம்டேஜோ கண்விழித்த அடுத்த கணமே தன்னவளை காணும் வேட்கையில் புறப்பட்டான்.அவனை தடுக்க முனைந்த தந்தையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு,தன் காதலியை நாடி வந்திருந்தான் டேஜோ. அடிப்பட்டு குருதி கசிந்த நிலையிலும் அவளை பற்றிய சில தகவல்களை சேகரித்து அறிந்துக்கொண்டே அவன் தன் கூடாரம்‌ சென்றிருந்தான். அதன்பொருட்டே சாதாரணமாக இருந்த காயம் ஆழமாகி குருதி அதிகமாக வெளியேறியிருந்தன.ஆகையால்,அவன் சில காலம் மீளாதுயலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தாலும் அவளை தேடி அவளது நாட்டிற்கே வந்துவிட்டான். அவளை தூரத்தில் கண்டு […] - [ஜாக்சன் 15](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-15/): அவனது நெஞ்சத்திலிருந்து குருதி கசிவதை கண்டவுடன் பெண்ணவள் பதறிப்போனாள்.அவனை காயப்படுத்த வேண்டும் என்று அவள் துளியும் நினைக்கவில்லை. அன்னிச்சையாய் அவளது கரங்கள் அதனை செய்திருந்தது‌. அடுத்த கணமே வாளை கீழிறக்கிய பெண்ணவள் “நான் முன்பே எச்சரித்தேன் அல்லவா?பாருங்கள் இப்போது உதிரம் கொட்டுகிறது” என கலக்கத்துடன் அவள் கூற, அவனிற்கோ அவளால் காயம்பட்ட மார்பு ரணமாய் வலித்தாலும்,அவனது விழிகள் அவளின் முகத்தையே ரசனையுடன் பார்த்திருந்தது. தனக்கான அவளின் தவிப்பு அவனது மனதை நெகிழ்த்தி,அவளின் மீது நேசத்தை தோற்றுவித்தது. ஆம்,அவளின் மீது அவன் காதல் வயப்பட்டுவிட்டான். போர்களத்தில் அவளது வீரத்தில் மயங்கியவன்,இப்போது அவளின் அழகிலும் ஆளுமையான பேச்சிலும் மொத்தமாய் வீழ்ந்துவிட்டான். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் சிறிது நம்பிக்கையின்றி இருந்தவனிற்கு எதுவும் சாத்தியமே என்று அவள் நிரூபித்திருந்தாள். அவள் பகைவர் நாட்டை சார்ந்தவள்…வேற்று மொழி பேசும் வர்க்கத்தை சார்ந்தவள் என்பதில் எல்லாம் அவனிற்கு சிறிதும் அக்கறையில்லை.அவளை அவன் நேசிக்கிறான்.அவனது காதலுக்கு முன்பு வேறு எதுவும் பெரிதாக […] - [ஜாக்சன் 14](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-13-2/): தோழி எப்போதும் சோகமாகவே இருப்பதை கண்டுவிட்டு ஒரு நாள் ஷீலா அவளுடன் பேச விரும்பினாள். கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த தோழியை பார்த்துவிட்டு வந்த ஷீலா “அடியே வளரு இரண்டு நாளா ஏன்டி சோகமா இருக்கே?” என அவளின் தோளில் கைவைத்து கேட்க, அவளோ “ஜாக்கிய இரண்டு நாளா காணோம்டி” என்றாள் சோகத்தின் திருவுருவாய். உடனே மேசையில் ஒற்றை கை ஊன்றி “அது யாருடி ஜாக்கி எனக்கு தெரியாமல்…உன் ஊருல நாய் எதுவும் வளர்த்தியா என்ன?” என குழப்பமாக அவள் கேட்க, சட்டென அவளின் ஊன்றிய கையை தட்டிவிட்டு “அப்படியே அடிச்சேனு வைச்சுக்கோ என் ஜாக்கிய நீ நாயோடு கம்பேர் பண்ணுவியா?அவன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?” என சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குச் செல்ல, “பேபி காம்டவுன்…அப்போ அது நாயில்லையா?ம்” என நாடியில் கைவைத்து யோசித்தவள், உடனே முகத்தை சுளித்து “ஹே லூசு ஜாக்கி ஜட்டியா காணும்னா சோகமா இருக்கே…அடிப்போடி […] - [ஜாக்சன் 13](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-13/): தன்னிடம் அத்தகைய கேள்வி கேட்டவளின் தோளை இறுகப்பற்றி “ஜி வோனா அப்போ உனக்கு…” என தடுமாற்றமாய் கேட்டவனிடம் “எனக்கு எல்லாம் தெரியும்” என்றுரைத்து அவனை மொத்தமாய் அதிர வைத்தாள் பெண்ணவள். அவன் சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் அது! அவளிடம் பல ஜென்மத்து காதல் கதையை கூறி தன்னவளை பயமுறுத்த வேண்டாம் என்று எண்ணியே அவன் மறைத்தான். அவன் மறைத்ததின் மற்றொரு பின்னணி,ஒரு வேளை இந்த ஜென்மத்திலும் இருவராலும் சேர முடியாத ஒரு நிலை வந்தால் கூட,தன்னை பலியிட்டாவது அவளின் உயிரை காப்பாற்றி வாழ வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்தான். ஆன்மாவுடனான அவளின் பந்தம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது.அதனால் அவளாலும் எளிதாக அடுத்த வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்று அவன் முடிவெடுத்திருக்க, இப்போதும் விதியின் சதியே வென்றிருப்பதை அறிந்து அவன் நொறுங்கிப்போனான். ஏனெனில்,கடந்த ஒவ்வொரு பிறவியிலும் அவர்களது புனர் ஜென்ம காதல் கதையை அவர்கள் தெரிந்துக்கொண்டதினாலே பெண்ணவளுடைய இறப்பு நிச்சயமாகியிருந்தது. அதன் பொருட்டே,அவளிடம் […] - [ஜாக்சன் 12](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-12/): வளர்மதியை அணைத்தவாறு அவன் அமர்ந்திருந்த நிலையில் சட்டென குளியலறை கதவு திறக்கும் சப்தம் கேட்டு “ஐய்யோ” என வெடுக்கென்று அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள் வளர்மதி. அவளின் தேகம் விதிர் விதிர்க்க,இதயம் படபடத்தது. வெளியே வந்த ஷீலா தோழி திருதிருவென விழிப்பதை பார்த்துவிட்டு “என்னடி ஆடு திருடின கள்ளி மாதிரி முழிக்கிற?என்ன திருட்டுத்தனம் பண்ண?” என அவளை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்தவாறே வினவினாள். வளர்மதியோ பதட்டத்தில் “அந்த ரகசியப்பெட்டி இப்போ திறந்துச்சுடி…அதான் பயந்துட்டேன்” என படபடப்புடன் சொல்ல, “ஏதே பெட்டி திறந்திடுச்சா?எங்கே?எங்கே?” என பரபரப்புடன் கேட்டவாறு தோழியை நெருங்க, அவளோ தன் கையில் பெட்டி இருக்கும் ஞாபகத்தில் “இதோ” என வெற்று கரத்தை தூக்கி காட்ட, அதைப்பார்த்து முறைத்தாள் ஷீலா. வளர்மதியும் திகைத்து “என் கையிலே தான்டி இருந்துச்சு…இப்போ காணும்” என தோழியை ஏறிட்டு பரிதாபமாக விழிக்க, ஷீலாவோ நாசி விடைக்க “என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுதுடி?” என […] - [ஜாக்சன் 11](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-11/): வளர்மதிக்கும் லீ ஜி சூவிற்கும் இடையே ஏற்பட்ட உறவு ஏதோ இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வீபரிதம் அல்ல! இயற்கைக்கு முரணான காதலும் அவர்களுடையது கிடையாது. பல ஜென்மங்களாய் தொடரும் ஆத்மார்த்தமான அழகிய உறவு அது! முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசர்கள் வாழும் காலத்திலிருந்தே இருவரும் இணைப்பிரியா காதலர்கள்! ஒவ்வொரு பிறவியிலும் அவர்களுக்கான பெயரும் அவர்களது அடையாளமும் மாறியிருக்கிறதே தவிர… இருவரின் உருவமும் குணமும் துளியும் மாறவில்லை. அதேப்போல் இருவரின் எண்ணங்கள் மற்றும் செயல்களிலும் மாற்றமில்லை. அவர்களது சந்திப்பும் அதன் பிறகான தாக்கமும் மாற்றமுடியாத விதி! அது விதியின் சதிமட்டுமல்ல…இறைவனிட்ட கட்டளையும் கூட! அவர்கள் இருவரும் நேசத்தில் விழுவது எவ்வாறு எழுதப்பட்ட விதியோ அதேப்போல் அவர்களது அன்பு தோற்றுப்போகி இருவரும் இறப்பை சந்திப்பதும் மாற்றமுடியாதது. ஒவ்வொரு ஜென்மத்திலும் மானுயிராக பிறப்பெடுத்து இறப்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு சாபம்! கண்டவுடன் காதல்…இரு குடும்பத்தாரின் நிராகரிப்பு…காதல் தோல்வி…இறப்பு… இதுதான் அவர்களது வாழ்க்கை சுழற்சி! அவர்களது […] - [ஜாக்சன் 10](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-10/): ஒரு ஆன்மாவின் முத்தம் அவளை இந்த அளவு பாதிக்கும் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை. யாரிடமாவது அவளின் உணர்வுகளை பற்றி கூறினால் தன்னை இழிவாக பார்ப்பார்களோ என்று ஒரு அச்சம்… கூடவே,அவளுள் ஒரு சங்கடம்! ஏனெனில் அவளிற்கே அவளின் செயலை நினைத்தால் ஒரு மாதிரியாக இருந்தது.ஏனோ அந்த ஆன்மாவின் முத்தம் அவளது உயிரின் அடி நாதம் வரை தீண்டிச் சென்றன. அவனது முத்தம் இன்னும் வேண்டும் என்று அவளின் இதயம் வேறு தவித்து துடித்தது. ‘என்ன கண்றாவி மனசு இது’ என தலையிலடித்துக்கொண்டவளால் அந்த ஆன்மாவிடமிருந்து வெளிவர முடியவில்லை. ‘அந்த ஆன்மா ஆணா பெண்ணா தெரியாது?அதன் உருவம் தெரியாது?அது எந்த ஊரை சேர்ந்தது தெரியாது?எப்படியான குணமுள்ள ஆன்மா?இது எதுவும் தெரியாது?’ ஆனால் அதன் முத்தமும் தொடுகையும் அவளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது‌. இதற்கெல்லாம் மேலாக அன்று இரயிலில் நடந்த முத்த பரிமாற்றம் வேறு அவளது நினைவில் எழுந்து அவளை மொத்தமாய் இடிந்துப்போக வைத்தது. ‘கடவுளே […] - [ஜாக்சன் 9](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-9/): நேற்றைய இரவின் தாக்கம் சிறிதுமின்றி அடுத்த நாள் காலை மீண்டும் பழைய நாட்களை போல் லீ ஜி சூவை விரட்ட தொடங்கியிருந்தாள் வளர்மதி. இருள் நேர அணைப்பின் மிச்சம்…அவனது முத்தத்தின் எச்சம்…இருவரது உணர்வுகளின் உச்சம்…எதுவுமே அவளின் நினைவடுக்கில் இல்லை. ‘அடிப்பாவி…நேத்து என்னோட உயிரையே உறிஞ்சி எடுக்கிற மாதிரி என் வாயை கடிச்சு வைச்சிட்டு இப்போ என்னடி ஒண்ணுமே நடக்காத மாதிரி நடந்துக்கிற?’ என அவன் தனக்குள்ளே புலம்பினான். பின்பு அவளிடம் வாயை கொடுத்து,வாயோடு சேர்த்து நெஞ்சையும் புண்ணாக்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை. அதேசமயம் இரவு அவளை அவன் தீண்டியது போல் காலை அவனால் அவளை தொட கூட முடியவில்லை. ஏன் என்ற காரணத்தை அவனால் வரையறுக்க முடியவில்லை. ஒரு வேளை நேற்று நடந்தது அனைத்தும் கனவோ என அவன் தனக்குள் சிந்திக்கையில் ‘பேய்கெல்லாமா கனவு வரும்?யோசிக்கிறான் பாரு மூளை கெட்ட பிக்காலி…த்தூ’ என அவனது மனசாட்சியே காறி உமிழ்ந்தது. ‘சரி…சரி எனக்கெல்லாம் தூக்கமே வராது…அப்புறம் […] - [ஜாக்சன் 8](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-8/): வளர்மதி மீண்டும் கல்லூரிக்கு செல்ல புறப்பட்டிருந்தாள். அந்த தங்க நிற பெட்டி ரோசாவுடையது என்று கூறிய வசுந்தராம்மாள்,அதை தவிர வேறு எந்த விபரமும் அவளிடம் தெரிவிக்கவில்லை. வளர்மதியும் அவ்விடயத்தில் பெரிதாக எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஆனால் காலதாமதமாக பாட்டியிடம் அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்காததை எண்ணி வருத்தம் கொள்வாள் என்று அக்கணம் அறியேன். சீனிவாசனும் காத்தாயினியும் “வளரு இன்னும் உனக்கு முழுசா சரியாகலை…காலேசுக்கு போகவேணாம் கண்ணு” என சொல்லிப்பார்க்க, “எதுக்கு?மறுபடியும் ஒரு பேய் ஓட்டறவனை கூட்டி வந்து என் உடம்பை புண்ணாக்கவா?அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்…எனக்கு செமஸ்டர் எக்ஸாம் வரப்போகுது…நான் காலேஜ் கிளம்பறேன்” என தீட்சண்ய குரலில் கூறி பெட்டியை தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டாள். காத்தாயினியோ “இவ ஏங்க இப்படி சொல் பேச்சே கேட்காமல் புடிவாதம் புடிக்கிறா?” என மகளை நினைத்து கலக்கத்துடன் புலம்ப, “அதெல்லாம் ஒண்ணும் நடக்காது காத்து…நம்ம பொண்ணு தைரியமானவள்…ஒத்த ஆளா எல்லாத்தையும் சமாளிப்பா…நம்ம குலதெய்வம் ரோசாம்மாள் துணையிருக்கிற வரை அவளுக்கு […] - [ஜாக்சன் 7](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-7/): மகள் பல நேரங்களில் தனித்து நின்று பேசுவதை கவனித்த அவளின் தாய் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அன்று காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி “வளரு உனக்கு பேய் பிடிச்சிருக்கு” என அறிவித்தார். அவளோ உறக்கத்தின் பிடியில் “அடப்போம்மா…பேயை எனக்கு பிடிக்கலை…பேய்க்கு தான் என்னை பிடிச்சிருக்கு” என கொட்டாவி விட்டவாறே கூறினாள். சில நொடிகளுக்கே பிறகே தான் கூறியதின் பொருள் உணர்ந்த பெண்ணவள் ‘போச்சு…செத்தோம்’ என வாயில் கைவைத்துக்கொள்ள, அவள் எண்ணியது போலவே “இது சரிப்பட்டு வராது…இன்னைக்கு அந்த பேயை நான் ஓட்டியே திருவேன்…எழுந்திரிடி” என அவளின் கரம் பிடித்து இழுக்க, “யம்மா…யம்மா எனக்கு பேயும் பிடிக்கலை…பிசாசும் பிடிக்கலை…என்னை செத்த தூங்க விடும்மா…” என அவரின் கரத்திலிருந்து தன் கரத்தை பிடுங்க முயல, “ஜி வோனா என்னையா பேய்னு சொல்லறாங்க…நான் பேய் மாதிரியா இருக்கேன்.ஐயம் வெர்ரி ஹேண்ட்சம் யூ நோ” என இடைப்புகுந்து லீ ஜி சூ வேறு தற்பெருமை பேசினான். அதில் கடுப்பானவள் […] - [ஜாக்சன் 6](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-6/): வெண்புகையை பார்த்த நாளன்று கடுமையான காய்ச்சலில் விழுந்தவள்,அதன்பிறகு கண்விழிக்கவே இரண்டு நாட்களாகிற்று! அவளின் நிலையை பார்த்துவிட்டு ஷீலா பயந்துப்போய் விடுதி காப்பாளரிடம் தெரிவிக்க,அவர் அவளது பெற்றோரை அழைத்து பெண்ணவளை ஒப்படைத்திருந்தார். அவளின் நிலையை கண்டு அஞ்சிய பெற்றோரும் இரண்டு நாட்கள் அவளை மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக்கொண்டனர். அவளின் உடல் அவ்வப்போது தூக்கிப்போட்டதை பார்த்துவிட்டு லீ ஜி சூவும் பாவமாக நின்றிருந்தான். தாம் தான் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்ததால் அவளின் பின்னுடனே அவன் கவலையாய் சுற்றி திரிந்தான். “ஐய்யோ ஆத்தா…மகமாயி என் புள்ளைக்கு ஒண்ணுமாகக்கூடாது ஆத்தா…என் புள்ளைக்கு மட்டும் காய்ச்சல் நல்லாகிட்டா உனக்கு அலகு குத்திறேன்” என வளர்மதியின் அன்னை காத்தாயினி இரு கரம் குவித்து வேண்டுதல் வைத்தார். அவர் இறைவனை பிரார்த்தித்த நேரமோ அல்லது லீ ஜி சூ தன்னவளை விட்டு நொடி அகலாமல் காத்த விதமோ வளர்மதி மெதுவாக கண்விழித்தாள். அவள் விழி திறந்த நொடியே அன்று இரவு இறுதியாக […] - [ஜாக்சன் 5](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-5/): அன்று புதிதாக ஒரு கொரியன் தொடர் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகியிருந்தது. ஷீலா ஒருவளிடம் மட்டுமே நெட் ஃப்ளிக்ஸ் செயலியில் கணக்கு இருப்பதால்,கொரியன் ரசிகைகள் அவர்களின் அறைக்குள் முகாமிட்டிருந்தனர். வளர்மதிக்கு தான் தோழிகளின் செயல் கடுப்பை வரவழைத்தது. கொரியன் என்றாலே அவளிற்கு ஒரு வித ஒவ்வாமையாயிற்றே? அதனால் கடுகடுத்த முகத்துடன் தனது மெத்தையில் அமர்ந்து ஷாஜகானின் வரலாற்றை பற்றி எழுதிக்கொண்டிருந்தாள். அவளின் கைக்கு இணையாக வாயோ ஷாஜகானையும் அந்த வரலாற்று பேராசிரியரையும் போட்டு அரைத்துக்கொண்டிருந்தது. அவளின் வெண்பனி நாயகனும் அங்கு தான் இருந்தான். ஆனால் வளர்மதியின் அருகில் இல்லாமல் பெண்களோடு அமர்ந்து கொரியன் நாடகம் பார்த்திருந்தான். தனது தாய் மொழியையும் தாய்நாட்டை சேர்ந்த மனிதர்களையும் கண்டவுடன் அவனுள் உற்சாக ஊற்று பொங்கி பெருகியது. அதில் வரும் கதாநாயகனின் மேற்கத்திய நாகரீக ஆடையை பார்த்துவிட்டு தன்னை குனிந்து ஆராய்ச்சியாக நோக்கினான் அவன். அவனது வெண்பனி உருவத்திற்கு ஏற்றாற் போன்று கலப்பிடமில்லாத தூய வெண்ணிறத்தில் சட்டையும் கால்சட்டையும் […] - [ஜாக்சன் 4](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-4/): முதல் நாள் தோழிகளின் சம்பாஷணைகளை கண்டு விழித்த அரூபம்,நாட்கள் கடந்துச் செல்கையில் அவர்களின் உரையாடல் பாணியே அது தான் என்று அறிந்துக்கொண்டது. அதனால் அடுத்து வந்த தினங்களிலிருந்து அந்த அரூபத்தின் அட்டகாசம் ஆரம்பித்தது. விம்பமில்லாத அரூபத்தின் உருவம் அவர்களின் கண்களுக்கு புலப்படவில்லை என்றாலும்,வளர்மதியால் அவனை அறிய முடிந்தது. அவனது குரல் அவளிற்கு மட்டுமே கேட்டது என்றால்… அவன் அவளருகே வந்துவிட்டாலே பெண்ணவளின் மேனி சில்லிட்டு சிலிர்த்துவிடும். அதன் காரணம் அறியாமல் வளர்மதி மட்டுமே விழித்துக்கொண்டிருந்தாள். அவனிற்கோ அவளை சீண்டி வம்பிழுப்பது வேடிக்கையாக இருந்ததால் அதையே அவன் வாடிக்கையாக்கிக் கொண்டான். அப்படி தான் அன்று காலை நன்றாக அசந்து உறங்கிக்கொண்டிருந்த வளர்மதியின் செவியில் இதழ்குவித்து காற்றை ஊதி விளையாடிக் கொண்டிருந்தான் அவன். அதில் அவளின் உறக்கம் மெதுவாக களைந்திட,தோழி என்றெண்ணி “ப்ச் சும்மா இருடி” என சிணுங்க, அவனோ சிரித்துக்கொண்டே மீண்டும் அவளின் முகத்தில் காற்றை ஊத,குளிர்காற்று முகத்தில் பட்டவுடன் அவளின் மேனி சிலிர்த்தன. […] - [ஜாக்சன் 3](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-3/): இரண்டு நாட்கள் கழித்து, வளர்மதி கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். “ஷீலு இந்தா… அம்மா உனக்கு பிடிக்கும்னு நெய் முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க” என ஒரு பாத்திரத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள். ஷீலாவிற்கு தான் முறுக்கு என்றால் கொள்ளை பிரியமாயிற்றே? அதனால் “ஐய்…முறுக்கு…முறுக்கு” என சிறுப்பிள்ளை போல் குதூகலித்து ஓடி வந்தவள்,வெடுக்கென்று பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டாள் ஷீலா. “அடச்சீ அலையாதே குரங்கு…உனக்கு தான் முழுசும்” என அவளை வாரிவிட்டு,அடுத்ததாக பையிலிருந்து அந்த கருப்பு நிற பையை வெளியில் எடுத்தாள். அந்த கருப்பு நிற பையை கண்டதற்கு பிறகே வசுந்தராம்மாள் அவளிற்கு பெட்டியை வழங்கிய ஞாபகமே வந்தது. ‘ஐய்யயோ …அவசரத்துல இந்த பெட்டியும் கையோடு தூக்கிட்டு வந்திட்டேனா?கிழவிக்கு மட்டும் இது தெரிஞ்சது நான் செத்தேன்…ம்க்கும்’ என முனகிக்கொண்டே கருப்பு நிற பையிலிருந்து பெட்டியை வெளியே எடுத்தாள். அதுவரை முறுக்கு அடங்கிய பாத்திரத்தை கட்டிப்பிடித்து கொஞ்சுக்கொண்டிருந்த ஷீலாவின் கண்கள் திடீரென்று கூசியது. ‘என்னடா திடீர்னு […] - [ஜாக்சன் 2](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-2/): சன்னல் திரையின் வழியாக சூரிய பகவானின் கதிர்கள் அவ்வறையினுள் விழுந்தது. அந்நேரம் “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக், கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்” அலைப்பேசியின் வழியாக கசிந்த கந்த சஷ்டி பாடல் உறங்கிக்கொண்டிருந்த பெண்களின் செவியை நிறைத்தது. முதலில் அந்த சத்தம் கேட்டு கண் விழித்த ஷீலா “அடியே எருமை மாடு…உன் அலாரத்தை முதல்ல ஆஃப் பண்ணி தொலைடி” என தோழியை பார்த்து கத்தினாள். இருவரின் கட்டிலும் எதிரெதிரே போடப்பட்டிருந்தது. அதற்கு வளர்மதியோ “ம்ம்ம்…” என முனகிக்கொண்டே வேறுப்புறமாக திரும்பி படுத்தாள். அதைக்கண்டு கடுப்பான ஷீலா “அடியே வளரு…இப்போ மட்டும் நீ எந்திரிக்கலை…செவுல்லே வந்து அப்புவேன்டி” என அவ்வறையே கிடுகிடுக்க சீறியதோடு தலையணையை தூக்கி அவளின் மீது வீசியெறிந்தாள். “ப்ச் ஏன்டி இப்படி இம்சைய கூட்டுற…நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா நீ” என பதிலுக்கு இவளும் கத்தி அவளின் மீது தலையணையை […] - [ஜாக்சன் 1](https://storybypm.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-1/): இரவு 11 மணி, அதுவொரு பெண்கள் தங்கும் கல்லூரி விடுதி. இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ள அந்த கல்லூரியின் விடுதியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. அந்த அறையின் உள்ளே பத்தொன்பது வயது இளம் பெண்கள் இருவர் மட்டுமே இருந்தனர். “ஐய்யோ வளரு…என் செல்லம் இன் யூ வோப்பை பாரேன்…பட்டர் பிஸ்கெட் மாதிரி பையன் எம்புட்டு அழகா இருக்கான்…அப்படியே கடிச்சு தின்னலாம் போலே…” என மடிக்கணினி திரையில் தெரிந்த கொரியன் நாயகனை கிள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஷீலா. அவளின் பேச்சை கேட்ட வளர்மதியின் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது. ‘அவ அவ அடுத்து என்னாகுமோனு பீதியில் கிடக்கா…இவளுக்கு இந்த சமயத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது’ என கோபத்தில் புலம்பியவளின் கையிலிருந்த மர்ம நாவல் கசங்கியது. தோழியிடமிருந்து பதில் இல்லை என்றவுடன் ஷீலா அவளை திரும்பி ஏறிட்டாள். அவளின் விழிகளில் தெரிந்த வன்மத்தை பார்த்தவள் “அடியே… இப்போ ஏன் அந்த புக்கை அம்புட்டு […] - [மலர்கள் 3](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): சஞ்சுயுக்தா இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது…ஒரு பெரியவர் தன்னையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கவும் ‘யாரிவர் என்னையே பார்த்து கொண்டே இருக்கார்…அவரைப் பார்த்தால் தப்பானவர் போலவும் தெரியலையே…!!’ என்று புருவம் சுருங்க யோசித்தாள். சஞ்சுயுக்தா அவரையே உற்று பார்க்கவும் அவர் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.அதன்பிறகு சஞ்சுயுக்தாவும் தன் கவனத்தைப் புத்தகத்தின் பக்கம் திருப்பினாள். சஞ்சுயுக்தா புத்தகத்தில் ஆழ்ந்துப் போய் கொண்டிருக்கும் போது “உன் பெயர் என்னம்மா…??” ஒரு கட்டை குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பெரியவர் தான் அவளைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்டிருந்தார். அவரை கண்கள் இடுங்க பார்த்த சஞ்சு அவரின் வயதை மனதில் வைத்து தன்மையாகவே “சஞ்சுயுக்தா” என்று பதிலளித்தாள். அவர் யோசனையாக “உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும்மா…உனக்கு சொந்த ஊரு ஈரோடாம்மா…??” என்று தன் அடுத்த கேள்வி கணையைத் தொடுத்தார். அதற்கு அவளும் தன்மையாகவே “இல்லை…என்னோட சொந்த ஊரு கோயம்புத்தூர்…!!” என்று […] - [இசை 22(இறுதி அத்தியாயம்)](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-22/): (இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி இசைக்கப்படும் இசை மெல்லிசை. இசைக்கருவிகள் இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன.இசையொலியின் பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும்,இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழிகலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றது) நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு அவளது கைப்பேசி சிணுங்கல் ஒலி எழுப்பியது. ‘யாருடா அது இந்த நேரத்தில்…?’ என முனங்கி அரை விழி திறந்த தாரா குழந்தை எழுவதற்குள் அதை உயிர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதை ஒளிரச்செய்து காதில் வைத்தாள். அந்த பக்கம் பேசியவர்களின் குரல் சரியாக கேட்காமல் நிசப்தமாக இருக்க “ஹலோ” என, இரண்டு நிமிடங்களையும் அந்தப்பக்கம் பதிலில்லை என்றவுடன்,தாரா கைப்பேசியைக் காதில் வைத்தப்படியே அப்படியே உறங்கிப்போனாள். இப்போது அவளது காதில் உர் உர் என்று தகவல் வரும் ஒலி […] - [இசை 21](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-21/): (தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும்.கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். துருவ தாளம்,மட்டிய தாளம்,ரூபக தாளம்,ஜம்பை தாளம்,திரிபுடை தாளம்,அட தாளம்,ஏக தாளம் ஆகியவை ஏழு வகை தாளங்களாகும்) இன்றோடு தாரா ஆரூரன் சக்கரவர்த்தியின் மகன் சித்தார்த் சக்கரவர்த்தி பிறந்து ஒரு வருடமாகிறது.சுருங்கக்கூறினால்,தாரா ஆரூரன் உறவில் பிளவு ஏற்பட்டு இன்றோடு ஒரு வருடமாகிறது. அன்றைய பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் விதமாக சக்கரவர்த்தி குடும்பத்திற்கு சொந்தமான மண்டபத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆரூரனின் தொழில்வட்டார நண்பர்கள்,குடும்ப நண்பர்கள், உறவினர்கள்,அர்வினின் மருத்துவதுறை நண்பர்கள்,ஆரூரனின் கல்லூரி நண்பர்கள்,ஆதிரையனின் கல்லூரி தோழர்கள்,அருணாச்சலத்தின் சிறு வயது தோழர்கள்,தாராவின் பள்ளி மற்றும் கல்லூரி தோழமைகள்,தங்களுடைய அலுவலகத்தில் வேலைச்செய்யும் தொழிலாளர்கள் என ஆயிரம் பேருக்கு மேலாக அவ்விழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்திருந்தார்கள். இதையெல்லாம் ஒருத்தனாக ஏற்பாடு செய்தது ஆரூரன்.அவனுக்கு […] - [இசை 20](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-20/): (பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி,அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன) இரண்டரை வருடங்களுக்கு பிறகு, “டேய் கண்ணா…அம்மாவுக்காக ஓரே ஒரு வாய் சாப்பிடுடா…?” என இரண்டரை வயது குழந்தையான சித்தார்த்தின் பின்னோடு சாப்பாடு கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு நேகா ஓடினாள். அவனோ நாக்கைத் துரத்தி அழகுக்காட்டி “வரமாட்டே போடி” என பழிப்புக்காட்டிக்கொண்டே ஓட, “அடேய் ரவுடி…முத அம்மாக்காரி…இப்போ நீயாடா…??என் உயிரை எடுக்கறதுக்குனு சொல்லி வைச்ச மாதிரியே வருவீங்களாடா…??முடியலைடா சாமி முடியலை…எனக்குனு வாய்க்கிறது பூராவும் தலைவலியாவே இருந்தால் என்ன தான் செய்யறது…” என புலம்பும் போதே “சட்” என்ற சத்தத்துடன் ஒரு குட்டி கார் பறந்து வந்து நேகாவின் மண்டையைப் பதம் பார்த்துவிட்டு செல்ல, “ஆஆஆ” என்ற அலறலுடன் […] - [இசை 19](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-19/): (நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதம் இரு வகைப்படும்.அவை ஆகத நாதம்,அனாகத நாதம்) தாராவின் துக்கத்தைக் கண்டு கண்கலங்கிய வீரேந்திரன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தினார்.அப்போது தான் அவர் தாராவிற்கு நல்லது செய்யப்போகிற நம்பிக்கையில் அதை செய்தார். தாராவை சக்கரவர்த்தி குடும்பத்தின் மூத்த வாரிசை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வலியுறுத்த,அவளோ ‘வேண்டாம்…முடியவே முடியாது’ என மறுத்துவிட்டாள். என்னதான் அவள் அந்த வீட்டில் இருந்தவரை ராணி போல் அவளை தாங்கினாலும்,இது நாள் வரை அக்குடும்பத்தின் மூத்த வாரிசை அவள் கண்ணால் கூட கண்டது கிடையாது. அவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுகிறான் என்று தெரிந்துக்கொண்டவள்,அதன் பிறகு அவன் ஊரிலிருந்து வந்திருந்தப்போதிலும் அவளை பார்த்துப்பேசியதில்லை. ஆனால் அவனது அருமை பெருமைகளை அவ்வப்போது வடிவு அள்ளித்தெளித்தாலும்,அவனை காண வேண்டும் என்ற ஆர்வம் தலைத்தூக்கவில்லை.அதற்கு அவனது பெயர் ஆரூரன் என்பதாக கூட இருந்திருக்கலாம். […] - [இசை 18](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-18/): (சுருதி எனப்படுவது சுரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும்.இது கேள்வி என்றும் சொல்லப்படும். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர். சுருதி இரு வகைப்படும்,அவை பஞ்சம சுருதி,மத்திம சுருதி) தாராவின் கல்லூரி தோழமைகள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் காட்டிற்கு செல்லும் வழி ஒன்று தென்பட்டது.அதன்வழியாக தான் தாரா அந்த காமக்கொடூரனால் கடத்தப்பட்டாள். அந்த அடர்ந்த இருளில் சருகு மிதிப்படும் ஒலியை மட்டும் கேட்ட ஆரூரன் அது ஏதோ வனவிலங்கின் சத்தம் என்று நினைத்து விட்டுவிட,தாரா கடத்தப்பட்டதை அவனும் அறியவில்லை. கடத்தப்பட்ட சில நொடிகளுக்கு பிறகே தாரா வேறொருவனின் பிடியில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். வெறும் நாற்பது கிலோ எடையுள்ள தாராவை தூக்குவதற்கு வந்த வித சிரமுமின்றி அவன் மிக எளிதாக தன் கரங்களில் தூக்கியிருந்தான்.அத்தோடு அவள் குரலோசை எழுப்பாமல் இருப்பதற்காக அவளது […] - [இசை 17](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-17/): (இயற்கை ஒலிகள் குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாளம் என ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன) தாரா சிறு வயதிலே தாயை இழந்ததினால்,அவளது தகப்பனார் வாசு அவளை பார்த்துக்கொள்ள வேண்டி இன்னொரு திருமணம் செய்துக்கொண்டார். தாராவைப் பார்த்துக்கொள்ள அவர்களது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த சிவகாமி,அவளை தன் மகளை போலவே பார்த்துக்கொள்ள,தாராவும் அவரிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். தாராவின் தகப்பனார் வாசு தன் மகளை சிவகாமி நன்றாக கவனித்து கொண்டதால்,சிவகாமியின் மீது அவருக்கு காதல் பெருகியது. அதன்பிறகு அவளது சின்னம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, அப்போதும் அவர் இருவரையும் எந்த வேறுபாடும் இன்றி தன் மகள் போல் தான் பாவித்து வளர்த்தார். ஆனால் சிவகாமி எந்த அளவு பாசத்தைக் கொட்டி வளர்ப்பாரோ,அதே அளவு கண்டிக்கவும் செய்வார்.அதனால் தாராவின் தங்கை ஆரியாவோ ஏதாவது தவறு செய்து அதில் தாராவை குற்றவாளிக்கி மாட்டிவிட்டுவிடுவாள். சிவகாமியும் என்ன ஏது […] - [இசை 16](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-16/): (இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும்.இவற்றை சப்தசுரங்கள் என்பர். இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன) வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த நேகா நேரே தனது தோழி தாராவை சந்திக்கச்சென்றாள்.நடுவில் எந்த வித தடுமாற்றமுமின்றி எவ்வாறு வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள் என்பது அவளுக்குமே புரியாத புதிர். ஏனெனில் அவளது மனம் பல்வேறு கலவையான உணர்வுகளில் சிக்கிக்கொண்டிருக்க,தன் மனதில் ஒரு புயலே மையம் கொண்டிருக்க,அதை தடுக்கும் வழி தெரியாமல் ஒரு வித அலைப்புறுதலுடன் தாராவை சந்திக்க வந்தாள். அவளின் முகத்தைப் பார்த்து நேரடியாக நிறைய கேள்விகளுக்கான விடையை கேட்டு அறிய வேண்டி அவளது மனம் விளைந்தது. அதுவும் விளையாட்டு குணம் அதிகம் கொண்ட ஆதிரையன் எப்படி ஒரு பொண்ணை காதலித்தான் என்பது […] - [இசை 15](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-15/): (எல்லையற்ற இன்பமும்,புத்துணர்வும்,உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் ராகங்களில் தனிச் சுவை தருவது மத்யமாவதி ராகம். உச்சஉணர்ச்சி [ Exuberance ],திடீர் எழுச்சி ,உணர்ச்சிப் பெருக்கு,களிப்பு,கிளர்ச்சி போன்ற பல அர்த்தங்களை இசையில் இன்பரசமாகத் தருவதில் மத்யமாவதிக்கு இணையான ராகம் இல்லை எனலாம். குறிஞ்சிப்பண் என பழந் தமிழர் போற்றிய ராகத்தின் இன்றைய பெயர் மத்யமாவதி) தாராவின் பிரசவநாள் நெருங்கிக்கொண்டே வர,இத்தனை நாட்கள் இல்லாத அச்சம் சிறிது சிறிதாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.அதனால் சரியாக உண்டு உறங்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானவளின் உடல் எடை குறைந்துக்கொண்டே சென்றது. தன்னுடைய மனதில் இருக்கும் பயத்தை வெளிப்படையாக கூறி,யாரிடமும் ஆறுதல் தேட அவளது மனம் ஒப்பவில்லை. இரண்டு வாரத்தில் ஐந்து கிலோ எடைக்குறைந்து உடலின் சக்தி நீற்றுப்போய் கலகலப்பின்றி சுற்றி திரிந்த தாராவை கவனிக்கும் நிலையில் அங்கு யாருமில்லை. ஆதியோ இப்போதும்,தான் செய்யவிருந்த தவறினால் நேர இருந்த விளைவுகளைப் பற்றி யோசித்து,தனது குற்றவுணர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீள முடியாமல் தன் […] - [இசை 14](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-14/): (மனதுக்கு ஊக்கமும் ,திடமும், கனிவும் ஒன்று சேர தரும் பண்பட்ட ராகம். இன்பநிலை தந்து நுண்ணுணர்வுகளைக் கிளறிவிடுவதில் கெளரிமனோகரி தனித்தன்மை வாய்ந்தது. கர்நாடக இசையிலும் அதிகம் பயன்படாத ராகங்களில் ஒன்றாகவும் கெளரிமனோகரி இருந்து வருகிறது) ஆதிரையன் சஞ்சனாவுக்கும் தாராவுக்குமிடையேயான உறவைப் பற்றிய தன் சந்தேகத்தை கேள்வியாய எழுப்ப,தாரா ஒரு முடிவெடுத்து ‘இதற்கு மேலேயும் உண்மையை சொல்லலைனா அது ரொம்ப தப்பாகி போகிடும்’ என்று நிஜத்தைக் கூறிவிட்டாள். ஆனால் அந்நிஜம் ஆதிரையனின் உயிரை வேரோடு பிடிங்கி எறிவது போல் இருக்கும் என்பதறிந்த தாரா சற்று தயங்கி தயங்கி “சஞ்சனா… சஞ்சனா… உங்களோட சகோதரி…உங்க சித்தப்பா பொண்ணு…சஞ்சனா சக்கரவர்த்தி” என முழு உண்மையையும் தாழை உடைப்பது போல் போட்டு உடைத்துவிட,ஆதி பல ஆயிரம் மின்சாரம் ஒரு சேர தாக்கியது போல் அப்படியே சமைந்து நின்றுவிட்டான். அவன் உலகம் மறந்து,ஊர் மறந்து,பெயர் மறந்து நடுத்தெருவில் அமைதியாக வேறெங்க வெறித்தப்படி நின்றிருப்பதைக் கண்ட தாராவிற்கு ‘புயலுக்கு முன் வரும் […] - [இசை 13](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-13/): (நாட்டுப்புறப் பண்பில் ஊறிய ராகமாகவும்,தமிழ் செவ்வியல் இசையின் கருணை ரசத்திற்கும்,மனதை வசீகரம் செய்யும் ராகமாகவும் இருக்கும் ராகங்களில் முதன்மையானது இந்த மாய மாளவ கௌளை ராகம். மிகப் பழங்காலம் தொட்டு தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்களில் இந்த ராகமும் முக்கியமானது. மனத்தைக் கொள்ளை கொள்ளும் இந்த ராகத்திற்கு இணையாக ஹிந்துஸ்தானி இசையில் பைரவ் [ Bairav ] என்கிற ராகம் உள்ளது.அல்லது மாய மாளவ கௌளை ராகத்தை பைரவ் என்று அழைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்) நேகா தன் தந்தையிடம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து துள்ளி குதித்தவாறு “டாடி என் காதில் விழுந்தது உண்மையா…?சொல்லுங்க…?” என கேட்டு அவரைப் பிடித்து பலமாக உலுக்க, “ஆமாம் டாலி…உன் காதில் விழுந்தது உண்மை தான்” என்றவுடன் தாவிக்குதித்து தன் தந்தையைக் கட்டியணைத்த நேகா மகிழ்ச்சியில் அவரது கன்னத்தில் முத்தமிட்டு விழிகள் இலேசாக கலங்க “டா…டாடி ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…எனக்கு சந்தோஷத்தில் பேச்சே வரலை…” என்றாள்.  தன் மகளை […] - [இசை 12](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-12/): (கேட்போரை உருக வைக்கும் கரகரப்ரியா ராகம் இனிமையும்,பேரெழிலும் நிறைந்தது.இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது. நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள். பழம் பெரும் தமிழ் ராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ் பெயர் படுமலைப்பண் என்பதாகும்) நேற்றைய வளைகாப்பு விழா நன்மைக்கரமாக முடிந்த திருப்தியோடு காலையில் கண் விழித்த தாரா ஒரு முறை தன் கரங்களிலிருக்கும் கண்ணாடி வளையலை குலுக்கி,அவை எழுப்பும் கிண்கிணி இசையை காதில் வைத்து கேட்டு உள்ளம் பரிக்கொடுத்து மகிழ்ந்தாள். கண்ணாடி வளையல் குலுங்கும் போது ஒலித்த மெல்லிசையில் கண் விழித்த ஆரூரன் மனைவியின் சிறுப்பிள்ளைத்தனமான விளையாட்டை மௌனமாக ரசித்துக்கொண்டிருந்தான். நேற்று அழகே திருவுருவாய் பட்டு புடவையில் ஜொலித்த தன் மனைவி கண் முன் தோன்றி காலையில் அவனது தாபத்தைத் தூண்டி விட, வேண்டுமென்றே தூக்கத்தில் அவளின் மீது கைப்போடுபவன் போல் மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்தான் ஆரூரன். தீடிரென்று இதை […] - [இசை 11](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-11/): (இந்தியா முழுமைக்கும் பொதுவான ராகமாகவும் கருதப்படும் ராகங்களில் சிவரஞ்சனியும் ஒன்று.அகில இந்திய வானொலியில் அதிகாலையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிபரப்பாகும் வயலின் வாத்திய இசை சிவரஞ்சனி ராகத்தில் அமைந்ததே.அகில இந்திய வானொலியின் அடையாள இசை [ Logo Musi ] சிவரஞ்சனி ராகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்து சுரங்களைக் கொண்ட இனிமைமிக்க ராகங்களில் ஒன்றாகும். இசைச் சுவையில் சோக உணர்வில் இதன் பயன்பாட்டை நாம் எளிதாகக் காணலாம்) தாரா தன் கணவன் தனக்காக பேசிவில்லை என்றவுடன் மனமுடைந்துப்போய் இறுகி அமர்ந்திருக்க,அந்நொடி அவளை வஞ்சகர்களின் சொல் அம்புகளிலிருந்து காப்பவர்கள் போல் இருவர் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். அவளை ரட்சிக்க வந்த அந்த இரண்டு நல்உள்ளங்கள் வேறுயாருமில்லை தாராவின் மற்றொரு நெருங்கிய தோழி யுவனேகாவும் அவளின் தந்தை வீரேந்திரனும் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “யாருடா அது என் பொண்ணை தப்பா பேசறது…?” என கணீர் குரல் ஒன்று கோபம் கொப்பளிக்கும் வகையில் கர்ஜனையோடு துள்ளிக்கொண்டு வர,கூடத்தில் இருந்த […] - [இசை 10](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-10/): (தொன்மைமிக்க இசைப்பண்பாட்டைக் கொண்ட இந்திய இசைக்கு வெளியிலிருந்து வந்து பெருந் தாக்கத்தை விளைவித்து.இந்திய ராகங்களில் ஒன்றாக கலந்த ராகங்களில் முதன்மையானது சிந்துபைரவி.இந்திய,தமிழ் மரபார்ந்த கிராமிய இசைக்குப் பொருத்தமாக மக்கள் தகவமைத்துக் கொண்ட முதன்மையான ராகமும் சிந்துபைரவி என்றால் மிகையில்லை. கேட்டவுடன் மற்றவரை கவர்ந்திழுக்கக்கூடிய ராகமாக சிந்து பைரவி கருதப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த ராகம் இது என கூறப்படுகின்ற இந்த ராகம் மத்திய கிழக்கு மற்றும் அரேபியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள ராகமாகும்.புனித குரான் இந்த ராகத்திலேயே ஓதப்படுகிறது என்பர்.அரேபியர்கள் நமக்கு வழங்கிய கொடை இந்த சிந்துபைரவி) நேகாவின் தந்தை வீரேந்திரனும் ஆதியின் தந்தையுமான அருணாச்சல சக்கரவர்த்தியும் சிறு வயது முதற்கொண்டே நெருங்கிய தோழர்களாக பழகிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போது வரை அவர்களது நட்பு எந்த வித விரிசலமின்றி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதனால் வீரேந்திரன் தன்னுடைய ஒரே செல்ல மகளான நேகாவை பட்டயப்படிப்பை படிக்கச்செய்ததோடு படிப்பை நிறுத்திவிட்டார்.தாய் இல்லாத பெண் என்பதோடு வீட்டிற்கு ஒரு பெண் என்று […] - [இசை 9](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-9/): (ராகங்களை விஸ்தாரமாகப் பாடும் கர்நாடக இசையில்,அதன் அழகுகளை காட்டும் மிக மிக அற்புதமான ராகங்களில் ஒன்று சாருகேஷி. கர்னாடக இசையில் இந்த ராகம் நல்ல முறையில் பயன் பட்டாலும்,அந்த அரங்குகளால் மறக்கடிக்கப்பட்ட ராகமும்,பின்னர் சினிமா இசையமைப்பாளர்களின் முயற்சியால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட ராகமும் இந்த சாருகேஷி தான். அரேபிய நாட்டுப்புற இசையில் அதிகம் காணப்படுகின்ற ராகம் இது. இனிமையும்,இரக்கமும்,எழுச்சியும் இந்த ராகத்தின் தாக்கம் காற்றில் கரைந்த கற்பூரம் போல ஐரோப்பிய நாட்டார் இசை வழக்கிலும் கரைந்திணைந்திருக்கிறது) மூடிய இமைகளுக்குள் கருமணிகள் மெதுவாக அசைந்தாட அவளது கன்னத்தில் பலமாக சுண்டிய விரல்களுக்கு சொந்தக்காரனோ “நேகா…நேகா” என அழைக்க,அவளுக்கு அந்த குரல் எங்கோ கேட்டு பழக்கப்பட்ட குரல் போன்றிருக்க நேகா தன் இமைகளை மெல்ல மலர்த்தினாள். திறந்திருந்த இமைகளின் வட்டத்தினுள் விழுந்த அவ்வுருவத்தை ஒரே ஒரு நொடி உற்று நோக்கிய நேகா,தன் கண்ணுக்கு முன்னால் நிற்கும் உருவம் நிழலா நிஜமா என்பதறிய விழிகளைக் கசக்கி பார்க்க […] - [இசை 8](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-8/): (இனிமையும்,கம்பீரமும்,இரக்கமும்,பரவசமுமிக்க ராகங்களில் ஒன்றே ஹிந்தோளம்.எந்த வகையான மக்களையும் வசீகரிக்ககூடிய மனோகரமான ராகம் என்றால் மிகையில்லை. இன்று ஹிந்தோளம் என்றழைக்கப்படும் இந்த ராகத்தை பழந்தமிழகத்தில் இந்தளம் என்றழைத்தனர்.உலகு தழுவிய இசையில் ஒலிக்கும் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்களில் ஒன்றான இந்த ராகம் தென் கிழக்கு ஆசியாவிலும்,கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள ராகமாகும்) சஞ்சனா வெளியேறி இரண்டு நிமிடங்களாகியும் தாரா வீட்டின் நுழைவாயலைப் பீதிப்படர்ந்த முகத்தோடு வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அந்நேரம் அங்கே வந்த ஆதிரையன் சஞ்சனா இல்லாமல் தனது அண்ணி மட்டும் தனந்தனியாக தனிமையில்  நின்றிருப்பதைக் கண்டு குழப்பமடைந்து “அண்ணி சஞ்சனா எங்கே…??” என கேட்க, அவனது பேச்சில் தன்னிலை அடைந்த தாரா ஆதியிடம் “அவங்களுக்கு ஒரு கால் வந்துச்சு…ஏதோ எமர்ஜென்ஸினு அவசரமா கிளம்பிப்போயிட்டாங்க ஆதி” என வாய்க்கு வந்த பொய்யைக் கூற சப்பென்றானது ஆதிரையனுக்கு. அவன் முகம் கவலையில் சுருங்கி பொலிவின்றி இருப்பதைக் கண்ட தாரா எரிச்சலுடன் ‘ஆமா அவ உலக அழகி […] - [இசை 7](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-7/): (தமிழர்களின் இசைக்கலையின் தொன்மையைப் பறைசாற்றும் இனிமைமிக்க ராகங்களில் ஒன்று சுத்ததன்யாசி.பழந்தமிழகத்தில் இந்த ராகம் இளிப்பண் என அழைக்கப்பட்டது.மருத நிலத்திற்குரிய ராகமாயினும் காடுசார்ந்த பிரதேசத்திற்கும் உரிய ராகம் எனக் கருதப்பட்டும் வந்துள்ளது. ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் உலகத்தின் பல பாகங்களிலும் ஒலிக்கின்ற ராகங்களாக இருப்பதால்,குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டுப்புற இசையில் மிகுந்து காணப்படுகின்ற ராகமாக இது விளங்குகின்றது) அன்றொரு நாள் அந்தி மாலைப்பொழுதில் வீட்டிலிருக்கும் ஆண்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து தொழில் விஷயமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கான சிற்றுண்டி தயாரிப்பில் வடிவு ஈடுப்பட்டிருந்தார். அச்சமயம் அங்கு வந்த தாரா “என்ன அத்தை குக் பண்ணறீங்க…??” என்று கேட்டவாறு அடுப்பினுள் உள்ள பாத்திரத்தை விழி உயர்த்தி எட்டிப்பார்க்க அங்கு அவர் செய்து வைத்திருந்த கொள்ளு கஞ்சியும் முளைக்கட்டி வேக வைத்து தாளித்து வைத்திருந்த பச்சை பயிறையும் கண்டு சிரிப்பு பிறீட்டு வர மனதிற்குள் கூறுவதாக நினைத்து “ஹோ காட்…டோமஸ்டிக் அனிமல்ஸ் ஃபிட்(feed)” என சத்தமாக […] - [இசை 6](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-6/): (வட இந்திய ராகம் என்று அறியப்படுகின்ற தேஷ் ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளை அலங்கரிக்கின்ற ராகங்களில் ஒன்றாகும்.தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்படுகின்றன. எழில் நிறைந்த மலர்கள் போன்று மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஏதுவான ராகம் இந்த தேஷ்) வடிவை அவர்கள் இருவரும் வந்த காரில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு,இவர்கள் இருவரும் மட்டுமாக ஆரூரனின் ஜீப்பில் ஏறினார்கள். அவன் இழுத்துச்சென்ற வேகத்திலே அவனது கோபம் தாராவிற்கு புலப்பட ‘இன்னைக்கு கண்டிப்பா ஒரு ரைடு கன்பார்ம்’ என உள்ளுக்குள் பீதியடைந்தாலும்,இன்னொரு புறம் தனக்கென்று ஒரு வாரிசு வரப்போகிறது என்று உற்சாக ஊற்று ஒன்று பெருக,ஜீப்பில் ஏறி அமர்ந்தவுடன் ‘இது என் உயிர்…என் இரத்தத்திலும் சதையிலும் உருவாக்கக்கூடிய எனக்கு மட்டுமே சொந்தமான எனது உயிர்’ என ஒரு புத்துணர்ச்சியான எண்ணம் அவளின் மனதில் தோன்ற விழிகளில் ஆசை நிரம்பி வழிந்தது.ஆசை நிரம்பிய விழிகளோடு உணர்ச்சி வசத்துடன் தனது மணி […] - [இசை 5](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-5/): (சுத்தசாவேரிக்கு மிக நெருக்கமான ராகமாகக் கருதப்படும் ராகம் ஆரபி.சுத்தசாவேரியில் கொஞ்சம் இடறினாலும் ஆரபி இலகுவாக நுழைந்து விடும் என்று சொல்லக் கூடிய விதமாக இருக்கின்ற ராகம். மங்களகரமான இந்த ராகம் வீர உணர்வையும் வெளிப்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தது. இந்த ராகம் பழந்தமிழ் இலக்கியங்களில் பழந்தக்க ராகம் என அழைக்கப்பட்டுள்ளது) ஆதிரையன் தன்னை தமையன் அலுவலகத்தில் விட்டு சென்றவுடன், வெளிநாட்டினரோடு கூட்டுச்சேர்ந்து தாங்கள் நிர்வகிக்கும் மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நடக்கும் பணியை மேற்பார்வையிடுவதற்காக அத்தொழிற்சாலையை நோக்கி தனது இரு சக்கர வண்டியில் பயணம் செய்வதற்காக வெளியில் வந்தான். அப்போது தனது இரு சக்கர வண்டியை ஓட்டியப்படி அலுவலகக்கட்டிடத்தினுள் நுழைந்தாள் நேகா. அவன் வண்டியில் ஏறி இயந்திரத்தை இயக்கிய ஒலி நேகாவிற்கு கேட்டவுடன்,அவசரமாக நேகா தன் வண்டியின் தாங்கியை(stand) தரையில் பதித்துவிட்டு யாரென்று அறிய பின்னால் திரும்பி நோக்க,அது தனது முதலாளி ஆதிரையன் என்று அறிந்துக்கொண்டவள்,அவன் இங்கிருந்து புறப்படுவதற்குள் வேக வேகமாக தனது […] - [இசை 4](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-4/): (இழைவும், குழைவும், இனிமையும் நிறைந்த தமிழ் ராகங்களில் மிக முக்கியமான ஒன்று சுத்தசாவேரி.பண்டைக் காலத்தில் இந்த ராகத்தின் பெயர் சாதாளி பண். ஐந்து சுரங்களைக் கொண்ட இனிமையான ராகங்களில் [ Pentatonic Scale  ] ஒன்றான சுத்த சாவேரி கீழைத்தேய நாடுகளான வியட்நாம் ,கம்போடியா  போன்ற நாடுகளிலும் இந்தோனேசியா நாடுகளிலும்,ஆப்பிரிக்கா நாடுகளிலும் குறிப்பாக சூடான் நாட்டுப்புற இசையிலும் மிகுந்து காணப்படும் ராகமாகும்.இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும். மூர்ச்சனா ராகமாகிய மோகனராகத்தின் கிரகபேதத்தால் உண்டான ராகங்களில் ஒன்று தான் மிக,மிக இனிமை மிக்க சுத்தசாவேரி ராகம்) ஆரூரனும் ஆதிரையனும் எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பிச்சென்றார்கள். அலுவலகத்திற்கு சென்றவுடன் ஆரூரன் தேயிலை தோட்டத்திற்கு அருகிலுள்ள காய்கறி தோட்டத்தில் எப்படி வேலை நடக்கிறது என்று மேற்பார்வையிடுவதற்காக சென்றான். ஆரூரன் இன்று தாம் சேகரித்து வைத்திருந்த பழங்கால கார் தொகுப்பிலுள்ள ஒரு […] - [இசை 3](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-3/): (பந்துவராளி நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்த ராகங்களில் ஒன்று. பந்துவராளி என்றும் காமவர்த்தினி என்றும் இன்று அறியப்படுகின்ற இந்த ராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர் சாதாரி பண்) ஆரூரனிடமிருந்து தப்பித்து ஓடி வந்த தாரா,நேரே சமையலறைக்குள் புகுந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள “ச்சூ…ச்சூ” என ஒலி எழுப்பி,அவன் முத்தமிட்டதை அழிப்பது போல் அவளது கரங்கள் கொண்டு இதழ்களை அழுந்த துடைத்தாள். அவனிடமிருந்து பிரிந்து வந்து இரண்டு நிமிடங்கள் கடந்தப்போதும் மார்புக்கூடு வேகமாக ஏறி இறங்க,மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட்டாள். ‘என்ன மனுஷன் இவன்…??பொண்டாட்டியோட பீலிங்க்ஸை புரிஞ்சாக்காமல் இருக்கான்…ஜடம்’ என அவனை மனதில் வறுத்தெடுத்த தாரா, ‘சீச்சி இனிமே இவனை கிட்டவே நெருங்க விடக்கூடாது…கொஞ்ச நேரத்தில என்னையவே மயக்கிட்டான் ராஸ்கல்…பொண்ணுங்கனா கிள்ளு கீரைனு நினைச்சானா…??நான் நினைச்சா நீயும் வேணாம் இந்த வாழ்க்கையும் வேணும்னு போயிட்டே இருக்கமுடியும்…ஆனால் அப்படி செய்தால் நான் வாழ்க்கையில் தோத்துப்போயிட்டன்னு அர்த்தம்…அதுக்காக தான் அமைதியா இருக்கேன்…ஆனால் என்னோட அமைதியை வைச்சு என்ன […] - [இசை 2](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-2/): “மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்று ஹம்சானந்தி. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். செவ்விசை மரபில் மாலையில் பாடுவதற்கு உகந்த ராகமாக கருதப்படுகிறது.ஹம்சானந்தி ராகத்தை மக்கள் மத்தியில் மெல்லிசையில் பயிற்றுவிக்க தக்க,புதிய கிளர்ச்சியை உண்டாக்கும்” தங்களுக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தனக்கான தனியறையில் உள்ள இருக்கையில் சாய்ந்து அமர்ந்து,கைகள் இரண்டையும் தலைக்கொடுத்து தனது கால்கள் இரண்டையும் மேசையின் மீது தூக்கி வைத்து இதழோரம் ரகசிய புன்னகையில் சுருங்க யோசனையில் இருந்தான் ஆதிரையன். அவனது ரகசிய புன்னகைக்கு முக்கியக்காரணம் காலையில் எதிர்ப்பாராமல் நடந்த சம்பவங்கள் தான். ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்ற பயத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஆதிரையன்,தீடிரென்று வண்டி படீரென்று சத்தத்துடன் நிறுத்தப்பட்டதால் “அம்மாஆஆ” என்ற கூச்சலுடன் ஜீப்பின் முகப்பு பெட்டியில் தன் தலையை பலமாக மோதினான். நெற்றியில் வலி உயிர்ப்போக தலையை இரத்தம் கட்டாத வகையில் அழுந்த தேய்த்துவிட்டப்படி,தன் தமையனை திட்டுவதற்காக திரும்பிய […] - [இசை 1](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-1/): “இசை மனிதப் பொறிகளில் மின்னலைகளை பாய்ச்சும் ஒலி அதிர்வுகளுடன் தொடர்புடையது.அதுமட்டுமின்றி இரத்த நாளத்தில் ஹார்மோன் சுரப்பிகளை அதிகரித்து,உடலில் ரசாயன மாற்றத்தை கொண்டு வந்து காதலை மலர்ச்செய்யும் வல்லமை பெற்றது இசை. நல்ல இசை ரசனை வீண் பிடிவாதத்தையும்,வரட்டுப் பெருமையையும் நொறுக்கிவிடும்.கசடு நீங்கிய நல் வாழ்வுக்கும் துணை போகும்.உள்ளத்தில் ஒளியும்,உணர்வும் பொங்கச் செய்வது இசை” பங்களாவின் மதில் சுவர் வானை முட்டுமளவு உயர்ந்திருக்க,அச்சுவற்றை முட்டி மோதி வெளியே செல்ல வழியின்றி காற்றில் கலந்து வந்த கீச்கீச்கீச் என்ற ஒலியில் தனது மலர்கண்களை மெல்ல மலர்த்தினாள் தாரா சக்கரவர்த்தி. முன்பு தாரா சக்கரவர்த்தி என்று யாராவது அழைக்கையில் முகத்தில் ஒரு வித பெருமிதமும்,நடையில் மிடுக்கும் கேட்காமலே வந்து ஒட்டிக்கொள்ள, இப்போது அப்பெயரை கேட்டாலே பாகற்காயை பச்சையாய் விழுங்கியது போல் வாழ்க்கையே கசந்து வழிந்தது. அதற்கு முக்கியக்காரணம் உதகமண்டலத்தை தலைநகராக கொண்டுள்ள நீலகிரி மலைப்பிரதேசத்தின் முடிசூடா மன்னன் ஆரூரன் சக்கரவர்த்தி. பல தொழிற்சாலைகளை தங்கள் வசம் கொண்டுள்ள […] - [மலர்கள் 2](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): “ஶ்ரீ ராம தூத மஹாதீர  ருத்ரவீர்ய சமுத்பவ அஞ்சனா கற்ப சம்பூத ஶ்ரீ வாயுப்புத்திர நமோஸ்துதே…!” என்று ஆஞ்சநேயர் தூதியைப் பாடி எடுத்த காரியங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கண்மூடி வேண்டினாள் சஞ்சுயுக்தா. சஞ்சுயுக்தா ஆஞ்சநேயரை தவிர வேறு எந்த கடவுளையும் கையெடுத்து வணங்கமாட்டாள்.ஏனெனில் அவள் வளர்ந்த இல்லத்தில் பிள்ளைகளின் மனதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டி ஆஞ்சிநேயர் தூதியை தினந்தோறும் துதிக்க கற்று கொடுத்திருந்தார்கள்.அதையே சஞ்சுயுக்தாவும் கடைப்பிடித்திருந்தாள்.அப்படியாக ஆஞ்சநேயரை வணங்க ஆரம்பித்தவள் இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்கிறாள். கடவுளை வணங்கிவிட்டு திரும்பியவள்,அங்கே தேன்மொழி கண்ணிரில் மிதக்கும் முகத்துடன் தலை தொங்க சோர்வுடன் இருப்பதை பார்த்து எரிச்சலுடன் “ஏன்டி…இப்படி எலி செத்த மாதிரி மூஞ்சியை வச்சிருக்கே…நான் போகும்போது இப்படி மூஞ்சியை வைச்சிருந்தால் போற காரியம் நல்லதா நடக்குமா…??எனக்கு எரிச்சலா வருது…இப்போ நீ அழுகையை நிறுத்து…இல்லை” குரலுயர்த்தி அவளை அதட்டினாள். அதில் பயந்து அவள் அழுகையை நிறுத்தி தன் தோழியின் கோப […] - [எபிலாக்,](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-5/): நடு நடுவே அவள் கேட்டதற்கு அவள் போதையில் செய்த அட்டாகாசத்தை மட்டும் கூறி தாமாக தான் அவளோடு உறவாடியதாக கூற “சரியான பிராடு…பொறுக்கி” என்று திட்ட அவளை அவன் விதத்தில் சமாளித்துவிட்டான். ஆதித்யா தூங்கிக்கொண்டிருக்கும் தனது மனைவியின் முகத்தை ரசித்தவனுக்கு காதல் அதிகரிக்க அவளின் இதழில் அழுத்தமான முத்தமொன்றை பதிக்க அவள் எழுவதற்கு அடையாளமாக சிணுங்கினாள். உடனே அவளிடமிருந்து தன் இதழைப் பிரித்த ஆதித்யா எப்போதும் போல் கோபமாக இருப்பதாக காட்டிக்கொண்டு விலகிப்படுக்க அப்போது கண்திறந்த தேன்மொழி விலகிப்படுத்திருந்த கணவனின் முகம் இறுகிப்போய் இருப்பது தெரிய அவனை சமாதானப்படுத்த எண்ணி அவனை நெருங்கிப்படுத்து “என்னங்க இன்னும் கோபம் போகலையா…??” என்று கேட்க, ஆதித்யா முறுக்கிக்கொண்டு திரும்பிப்படுத்துக்கொள்ள தேன்மொழி முகம் சுருங்கினாலும் அவனின் பின்னோடு நெருங்கி அவனை தன்பக்கம் திருப்பி “எதுக்கு உங்களுக்கு கோபம்…??அண்ணா வீட்டில் போய் இத்தனை நாள் தங்கியது கோபமாங்க…??” என்று தவிப்போடு கேட்க ஆதித்யா திரும்பி அவளை ஒரு பார்வைப் […] - [தேனிதழ் 46](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-46/): ஆதித்யா தேன்மொழியை கட்டிலில் கிடத்திவிட்டு நகரப்போக அவனை நகரவிடாமல் தேன்மொழியின் கையில் அவனது சட்டை சிக்கியிருந்தது. அதைக்கண்டு ஆதி மென்மையாக புன்னகைத்து அவளின் கைகளிலிருந்து தனது சட்டையை விடுவிக்கப்போராட அவள் தூக்கத்திலே சிணுங்கிக்கொண்டு தன்னை நோக்கி இழுக்க ஆதி அவள் மேலே விழுந்தான். அப்போதும் கண்திறக்காமல் இருக்க ஆதித்யா ‘தூக்கத்தில் கூட என்னைவிட மாட்டாப்போளே’ என்று திட்டிக்கொண்டவனின் இதழ் அதற்கு எதிராக வேலைச்செய்தது. ஆதித்யாவின் இதழ் தனது மனைவியின் கன்னத்தில் அழுத்தமாக பதிய அதில் சிறிது துயில் கலைந்த தேன்மொழி கன்னத்தை அழுந்த துடைத்து “ப்ச் எச்சிப்பண்ணாதீங்க” என்று சிணுங்கி தனது உறக்கத்தை தொடர அதில் ஆதி குறும்புடன் வேண்டுமேன்றே தனது நாவால் அவளின் கன்னத்தை ஈரப்படுத்தினான். தேன்மொழி அதைக்கண்டுக்கொள்ளாமல் அவனை அணைத்தவாறு தூங்க “சரியான கும்பகர்ணி” என்று அவளுக்கு அருகிலே படுத்து அவளை அணைத்துக்கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை காலையில் சந்தித்ததலிருந்து ஆதியின் உணர்வுகள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.பின்பு நீண்ட நாட்களுக்கு […] - [தேனிதழ் 45](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-45/): இன்று, ஆதித்யா தனது காரைக் கொண்டு சென்று ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோயிலான சுவாமி மலையின் முன்னால் நிறுத்தினான். காரைவிட்டு இறங்கிய ஆதித்யா கோவிலின் பிரதான நுழைவாயிலின் வழியே உள்ளே நுழைந்தான். உள்ளே இரண்டாம் நுழைவாயில் கோபுரங்கள் கம்பீரமாக உயர்ந்து நின்றது. இன்று திருவிழாவின் காரணமாக கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. ஆதித்யா இரண்டாம் நுழைவாயிலில் நுழையும் போது ஊர் பொது தலைவர்கள் அவனை அடையாளம் கண்டு அவனை வரவேற்று முன்னே அழைத்து சென்றார். ஆதித்யாவின் கம்பீரமான தோரணையும் அதுவும் அவன் மீசையை முறுக்கிவிட்டிருந்த விதமும் அவன் பால் மரியாதை கலந்த பயத்தைத் தோற்றுவிக்க அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரம்கூப்பி அவனுக்கு தனது வாழ்த்தை தெரிவிக்க ஆதியும் பதிலுக்கு தனது கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்தினான். இருபது படிக்கட்டுகளுக்கு மேல் ஏறி தான் கற்ப கிரகத்தை அடைய முடியும் என்பதால் ஆதித்யா தனது வேஷ்டியை ஒரு கையால் தூக்கிப்பிடித்து இன்னொரு […] - [தேனிதழ் 44](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-44/): தேன்மொழி கடத்திய நிகழ்வுகள் நடந்து இரண்டு வாரம் கடந்திருந்த நிலையில் வீட்டில் ஒரு மயான அமைதிபேர நிலவியது. வீட்டில் உள்ள ஆட்கள் அனைவரும் அவர்வர் அறைகளில் சிறைப்பட்டிருந்தனர். வீட்டின் பூஜையறையில் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு சிவப்பு நிற ரோஜா பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைப்போடப்பட்டிருந்தது. மகிழா அந்த புகைப்படத்தின் முன் கண் மூடி வேண்டியவரின் கண்ணின் ஓரம் ஈரம் கசிந்தது. சிறிது நேரத்திலே ஆதித்யா சஞ்சு யாதிஷை தவிர மீதமுள்ள அனைவரும் கோயிலுக்கு புறப்பட்டு சென்றிருந்தினர். அவர்கள் சென்ற சில நிமிடங்களில் யாதிஷூம் சஞ்சுயுக்தாவும் ஒரு காரில் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்கள். கடைசியாக ஆதித்யா தனக்கு பழக்கமில்லாத வெள்ளை நிற வேஷ்டியைக்கட்டி முழுக்கைச்சட்டையை தனது முழங்கைக்கு மேல் மடக்கிவிட்டு உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடற்கட்டு வெளியில் தெரியும் படி அணிந்து பரந்து விரிந்த தோளுடன் ஆறடி உயரத்திற்கு மேல் வெள்ளை நிறத்தில் களையான முகத்தோற்றத்துடன் தங்க சங்கிலி வைத்த ஃபாஸில் கடிகாரத்தை இடது கையில் கட்டிக்கொண்டு […] - [தேனிதழ் 43](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-43/): வேகமாக ஓடிய மகிழா ஒரு வண்டியின் முன் விழ அது செழியனின் வண்டியாக இருந்தது தான் அவளின் நல்லநேரம். ஜீப்பில் இருந்து எகிறிக்குதித்து கீழிறங்கிய செழியன் மகிழாவை தூக்கிவிட்டு “ஏய் மகிழா என்னாச்சு…??எதுக்கு ஓடிவந்தே…??” என்று பதட்டத்தோடு கேட்க, அப்போது அவனின் பின்னால் இருந்து இரும்பு தண்டினால் செழியனின் மண்டையில் தாக்க “ஆஆஆ” என்றப்படி திரும்பி அவனின் குறுக்கெலும்பில் ஓங்கிக் குத்த அதற்குள் அவரின் முன்னால் வந்து ஒருவன் அவனின் வயிற்றில் கத்தியால் குத்த மகிழா “மாமாஆஆஆஆஆ” என்று அலறி மயங்கி சரிந்தாள். செழியனுக்கு இப்போது சண்டையிடுவதை விட மகிழாவை இங்கிருந்து காப்பாற்றுவது பெரிதாக தெரிய உடனே தன்னை தாக்க வந்தவர்களை அடித்து வீழ்த்திவிட்டு மகிழாவை ஜீப்பில் ஏற்றிவிட அதற்குள் அவரின் பின்னந்தலையிலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்திருந்தது. அதனால் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் ஜீப்பை எடுத்த செழியனை தாக்க வந்தவர்களை ஜீப்பை வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பித்தார்கள்.அத்தகைய நேரத்தில் மீனாவின் கணவரின் மீது […] - [தேனிதழ் 42](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-42/): மூன்று ஆண்களும் வெளியே சென்றப்பிறகு வீட்டிலிருந்த பெண்களுக்கு தேன்மொழிக்கு ஏதோ ஒரு ஆபத்து என்பது மட்டும் தெரிந்தது.ஆனால் என்ன ஆபத்து என்று தெரியவில்லை. ஆளுக்கொரு மூலையில் மிகுந்த பதட்டத்தோடு அமர்ந்திருந்தனர். ஆண்கள் இருவரும் ஆளுக்கொரு புறம் வரவேற்பறையை பதட்டத்தோடு தனது கால்களால் அளந்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரம் பொறுமைக்காத்த சஞ்சுயுக்தாவினால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல் “யாதீ தேனுக்கு என்ன பிரச்சனை…?யாரு அவளை கடத்தினது…??” என்று அழுத்தமாக வினவினாள். யாதிஷ் தனது நடையை நிறுத்திவிட்டு மனைவியின் அருகில் வந்து அமர்ந்து “ஜகதீஸ்னு உனக்கு யாரையாவது தெரியுமா…??” என்று கேள்வி எழுப்ப சஞ்சு புருவம் சுருக்கி தனது நினைவு இடுக்குகளில் ஏதேனும் இந்த பெயரை சேகரித்து வைத்திருக்கிறோமா என்று யோசித்துப்பார்த்தாள். அப்படி ஒன்றும் ஞாபகத்தில் இல்லை என்றவுடன் “இல்லை யாதீ…ஏன் கேட்கிறே…??” என்று குழப்பத்துடன் விசாரித்தாள்.மற்ற இருவரின் முகத்திலும் அதே கேள்வி தான் இருந்தது. யாதிஷ் பெருமூச்சறிந்து ஜகதீஸ் யார் என்பதை பற்றி விளக்கிய நொடியில் […] - [தேனிதழ் 41](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-41/): —————————————————செழியன் மகிழாவிடம் பேசுவதற்காக ஆர்வத்துடனும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் வீட்டிற்கு வர வீடே நிசப்தமாக இருந்தது. வரவேற்பறையில் யாருமில்லாததால் நேரடியாக தனது அறையை நோக்கி சென்ற செழியன் கதவை தள்ள தாளிடாத கதவு திறந்துக்கொண்டது. உள்ளே சென்று பார்க்க மகிழா கட்டிலில் படுத்திருப்பது தெரிய செழியன் அவரின் அருகில் சென்று பார்த்தார்.அவர் உடலை குறுக்கி படுத்திருந்த கோலம் நெஞ்சுக்குள் பிசைய செழியன் மிகுந்த வேதனையோடு கண்களை மூடித்திறந்தார். மகிழாவைப் பார்க்க அவர் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பது தெரிய அவரின் கன்னங்களிலிருந்து கண்ணீர் கோடுகள் காய்ந்து கறையாக மாறி இருந்தது. அவர் அழுது ஓய்ந்துப்போய் உறங்கியிருப்பது தெரிய மனதிற்குள் மிகுந்த வருத்தமாக இருந்தது. ‘சாரிடி மொசக்குட்டி…ஆனால் நீ என்கிட்ட உண்மையை மறைச்சது தப்பு தானே…உன் கூட பேசாமல் இருக்கிறது எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு…சீக்கிரம் உண்மையைச் சொல்லு’ என்றவரின் கை தனது மனைவியின் தலையை மென்மையாக வருடிக்கொடுத்தது. அத்தோடு அவரின் இதழ் தனது மனைவியின் கன்னத்தில் […] - [தேனிதழ் 40](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-40/): மகிழாவால் தன் கணவனது பாராமுகத்தைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.இத்தனை வருடங்களாய் தூங்கி முழிக்கும் போதிலிருந்து தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர் இப்போதெல்லாம் தனது முகத்தை பார்ப்பதையே பெரும் குற்றம் என்பது போல் தன்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று நினைக்கும் போதே மகிழாவிற்கு நெஞ்சம் பாரமாய் கனத்தது. தனது கணவரிடம் அன்று நடந்ததை கூறி அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்துவிடுமோ என்று மிகவும் அஞ்சினார்.ஏனெனில் மருத்தவர் அவருக்கே தானாக கடந்த கால நினைவுகள் வரவேண்டும்.அப்படி அவரின் நினைவுகளை நாமாக வலுக்கட்டாயமாக தூண்டினால் அவர் உணர்ச்சிவசத்தினால் உயிரிழக்கும் ஆபத்து நேர வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அதைக்கேட்டு பெரிதாக அதிர்ந்த மகிழா தனது கணவனின் உயிரை பறிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து முதல் வேலையாக அவரின் காவல்துறை வேலையை விடச்செய்தார். இரண்டாவதாக சொந்த ஊரைப் பற்றிய எண்ணமே தனது கணவனுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்.அவரின் மனதிலும் ஒரு உயிரை பறிக்கொடுத்த வலியிருப்பினும் […] - [தேனிதழ் 39](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-39/): மித்ரனும் ராமும் ஒரு சேர “ஜகதீஸை உனக்கு ஏற்கனவே தெரியுமா…?” என்று கேள்வி எழுப்ப தேன்மொழி “தெரியும்” என்று ஒத்துக்கொண்டு கோபத்தில் பற்களை நறநறவென கடித்தாள்.அவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. எப்போதும் மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொள்பவள் இன்று “அண்ணா இந்த பொறுக்கியெல்லாம் கண்டிப்பாக சும்மா விடக் கூடாது…இவனையெல்லாம் கொன்னால் கூட என் ஆத்திரம் தீராது…ச்சை பொறுக்கி ராஸ்கல்” என்றவளின் முகம் கோபத்தில் ஜிவுஜிவென்று பற்றி எரிந்தது. மித்ரன் அவளின் நலனை கருத்தில் கொண்டு “அம்மு கொஞ்சம் அமைதியா இரு…இந்த மாதிரி நேரத்தில் நீ அமைதியா சந்தோஷமா இருக்கணும்” என்று அவளிடம் தண்ணீரை கொடுக்க தேன்மொழி அதைவாங்கிக் குடிக்காமல் இன்னும் விறைப்போடு கைக்கட்டி நின்றிருந்தாள். மித்ரன் அவளிடம் ஆறுதல் கூற தயங்க ராமிற்கு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை என்பது போல் “அம்மு ஜஸ்ட் ரீலெக்ஸ்…இங்க வா உட்காரு” என்று அவளின் கைப்பிடித்து இழுத்து சென்று நீள்விரிக்கையில் அமரவைத்து “இந்தா தண்ணீர் குடி” […] - [தேனிதழ் 38](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-38/): மித்ரன் அனாமிகாவைப் பற்றி கூற ஆரம்பிக்க தேன்மொழி பதட்டத்தோடு அதை கவனிக்க ஆரம்பித்தாள். மித்ரன் கண் மூடி திறந்து வருத்தம் தொய்ந்த குரலில் “அனுவைப் பத்தி எல்லாரும் தப்பா தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க…அனுக்கூட உன்னை மாதிரி தான்…எப்பவும் துருதுருனு ஏதாவது பேசிட்டே பண்ணிட்டு இருப்பா…அவ அமெரிக்காவில் போய் படிக்க விருப்பப்பட்டா அதனால் அவளை அங்கே படிக்க அனுப்பினேன்…அங்கப் போன ஒரு வருஷத்திலே ஒரு பார்ட் டைம் ஜாப் தேடி…வேலை செய்துக்கிட்டே படித்தாள்…நாங்க எவ்ளோ தான் வேணாம்னு சொன்னாலும் கேட்கலை…சரினு அவ இஷ்டத்துக்கு விட்டுட்டேன்…அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…தினமும் ஒருவாட்டியாவது என்னோட பேசிடுவா…அப்படி பேசாமல் ஒரு தடவைக் கூட இருந்ததில்லை…என்கிட்ட ஆதியுடனான அவளோட நட்பைப் பத்தி எப்பவும் பேசிட்டே இருப்பா…தினமும் ஒரு தடவையாவது அவர் பேரை சொல்லாமல் இருந்ததுயில்லை…ஆனால் அப்போதெல்லாம் ஆதித்யா தான் என்னோட எதிரியோட பையன்னு எனக்கு தெரியாது…ஆனால் அனுவோடு ஃப்ரெண்ட்டா நல்லாவே தெரியும்…சில முறை அவனோட போட்டாவை எங்களுக்கு […] - [தேனிதழ் 37](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-37/): “உன்னை கல்யாணம் பண்ணும் போது நீ யாருனு கூட எனக்கு தெரியாது…கல்யாணம் பண்ண பிறகும் கூட உன்னை பத்தி தெரிஞ்சக்கணும்னு எனக்கு ஆர்வமில்லை…ஆனால் சில நேரங்களில் நீ பேசுவது உன்னோட செயல் எல்லாமே உன்னோட அக்காவை ஞாபகப்படுத்திட்டே இருக்கும்…அப்போதெல்லாம் எனக்கு பயங்கிர கோபம் வரும்…அதற்காக சில நேரங்களில் உன்னிடம் கோபமா கூட நடந்திருக்கேன்…அப்போ தான் அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது…அதேசமயம் உன்னை பத்தி புரிஞ்சுக்கிற சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சது…ஓரளவு உன் மேல் எனக்கு ஒரு நல்ல அபிராயம் வந்தப்போது இந்த விபத்தெல்லாம் பண்ணது…உன்னோட முதல் அண்ணன் அசோக மித்ரனு தெரிஞ்சு அவனை மீட் பண்ணும் போது அவனை கொல்லுமளவு வெறி இருந்தது…ஆனால் அதெல்லாம் அந்த வீட்டிலிருந்து திரும்பி வரும் போது பாதிப்போயிடுச்சு” என்று கூறி, அவளைப் பார்த்து “அதுகெல்லாம் காரணம் நீ தான்” என்று சுட்டிக்காட்ட “நானா…??” என அதிர்ந்து கேட்க, “நீயே தான்” என்று அவளது கன்னத்தில் செல்லமாக தட்டிய ஆதி “அங்க […] - [தேனிதழ் 36](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-36/): தேன்மொழி குழப்பத்துடன் ஆதியைப் பார்க்க அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் குழப்பத்தை உணர்ந்த ஆதி ‘சிரி’ என்பது போல் தனது உதட்டை விரல்களால் விரித்து காட்ட தேன்மொழி சிரிக்காமல் குழப்பத்தோடு இருக்கவும் ஆதி அவளை செல்லமாக முறைத்தான். அதற்குள் மகிழா மகிழ்ச்சியுடன் தேனுவின் தோளைப் பிடித்து “தேனும்மா கீழே போய் எல்லாருக்கிட்டயும் இந்த நல்ல விசயத்தை சொல்லணும்…நான் கீழே போறேன்…நீங்க இரண்டு பேரும் பொறுமையா வாங்க” என்றவர் மறுபடியும் அவளை ஒரு முறை அணைத்து விடுவித்து சிறுபிள்ளைப் போன்ற துள்ளலுடன் கீழிறங்கி ஓடினார். மருத்துவரும் தேன்மொழியின் கையைக் குலுக்கி வாழ்த்து தெரிவித்த கையோடு ஆதியிடம் “மிஸ்டர் ஆதித்யா உங்க மனைவியை நல்லா பார்த்துக்கோங்க…அன்ட் தென் நாளைக்கு ஒரு செக் அப்க்கு கூட்டிட்டு வாங்க…செக் பண்ணிட்டு ரிப்போர்ட் கொடுக்கிறேன்…ஒன்ஸ் எகெயின் கங்கிராட்ஸ் மிஸ்டர் ஆதித்யா” என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றார். அவர் சென்ற அடுத்தநொடி தனது மனைவியை தனது கைவளைவினுள் கொண்டு […] - [தேனிதழ் 35](https://storybypm.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-35/): மாலையில் 5 மணிக்கு முதலில் கண்விழித்த தேன்மொழி தன் கணவனின் முகம் மிக அருகிலிருக்க அதிலிருந்த அடர் மீசையைப் பிடித்து விளையாட ஆசை எழுந்தது.ஆனால் தூங்கிக்கொண்டிருக்கும் போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதால் அந்த மீசையில் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு எழப்போனாள். அவளின் உடம்பு அடித்துப்போட்டது போல் மிகவும் அசதியாக இருந்தது.இருந்தும் எவ்வளவு நேரம் தூங்குவது என்று நினைத்து குளியலறைக்குள் சென்றாள். அவளின் உடல் அவளின் பேச்சை கேட்பது போல் தெரியவில்லை. தலை கனத்து இருந்தது. இருந்தும் தனது உடலை சுத்தம் செய்து கீழிறங்கி சென்று அனைவரிடமும் உற்சாகத்தோடு வளவளத்துக்கொண்டிருந்தாள். செழியன் மகிழாவிடம் எப்போது இருக்கும் அன்னியோன்யம் இல்லாதது போல் தேன்மொழிக்கு தோன்றியது.அவளுக்கு எப்படி தெரியும் இருவருக்குமிடையே பனிப்போர் நடந்துக்கொண்டிருப்பது.  செழியனின் வாய் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.அவரின் முகம் கோபத்தில் இறுகியிருந்தது. மகிழா வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் அவர் மனதின் சோகம் கண்களில் தெரிந்தது. பாட்டியும் எப்போதும் போல் கலகலப்பாக இருந்தாலும் அவரிடமும் ஒரு முழுமையான […] - [Ep 16](https://storybypm.com/ep-16/): அத்தியாயம் 16 சர்ஜரியை முடித்து விட்டு அப்போது தான் தனது கேபினுக்கு செல்ல வேண்டி லிப்ட்டில் ஏறி இருந்தான் சிம்ம விஷ்ணு. அவனது தளத்துக்கு வந்ததும் லிப்ட் கதவு திறக்கப்பட, அங்கே சாய்ந்த படி நின்றிருந்தவன் கண்களில் பட்டாள் விஷ்வஜித்தின் பக்கத்தில் உரசிய படி நின்றிருந்த பிருந்தா. அவனை அங்கே கொஞ்சமும் எதிர் பாராத பெண்ணவளின் விழிகளோ அப்படியே அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, சிம்மனுக்குமே அவளை ஒரு ஆணோடு அதுவும் இவ்வளவு நெருக்கமாக பார்த்தது சற்று அதிர்ச்சியை தான் கொடுத்தது.  அதுவும் அவர்கள் இருவரும் இப்படி கை கோர்த்த படி நின்றதை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் அவ்வளவு கோபம் வந்தது.  ஆனால் அவன் முகமோ எந்த உணர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.  அவனது கூரிய விழிகளோ விஷ்வஜித்தின் மீது அழுத்தமாகப் பதிய,  அவன் பார்வையும் சிம்ம விஷ்ணு மீதே விழுந்தது.  சற்று நேரத்துக்கு முன்னால் இருந்த மென்மை மறைந்து இப்போது அவன் முகமோ அவ்வளவு […] - [Ep 15](https://storybypm.com/ep-15/): அத்தியாயம் 15 அவனோ புருவங்களை உயர்த்தி தன் முன்னால் நின்றிருந்த பாவையை நோக்கியவன்,  “விஷ்வஜித்” என்று அலைபேசியில் இருந்த பெயரை சொல்ல,  அதை கேட்டவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.  ‘அட நாசமா போறவனே! இந்த நேரத்துலயா போன் பண்ணுவ? உன் டைமிங் சென்ஸுல தீய வைக்க!’ என்று வாய்க்குள்ளயே அடக்க முடியாமல் அவனை திட்டியவள்,  சிம்மனை சற்று பயத்துடனே ஏறிட்டு, “போன்” என்று இழுக்க,  அவனோ “யாரு இந்த விஷ்வஜித்? உன் பிரதரா?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.  ‘எது பிரதரா?’ என்று வெளியில் கேட்க வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு உள்ளே அனுப்பியவளுக்கு இப்போது என்ன சொல்வது என்றே புரியவில்லை.  ஒரு வேளை உண்மையை சொன்னால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு மேலும் சிக்கல்களை  உருவாக்கி விடுவானோ என்று பயந்தவள், அப்போது தப்பிக்க வேறு வழி இல்லாமல் ஆம் என்பது போல தலையாட்டி விட்டாள். அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், “ம்ம்… பட் […] - [Ep 14](https://storybypm.com/ep-14/): அத்தியாயம் 14 அவளுக்கோ கொலை வெறி தான் வந்தது. “சும்மா கூப்பிட்டா படுக்க வர மாட்டான்னு தானே இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணி உங்க ஆசையை தீர்த்துக்கிட்டீங்க?” என்று ஆத்திரத்தின் உச்சத்தில் அவள் கத்த, சிம்மனின் புருவங்களோ சற்று இடுங்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாதவனாய் சற்று ஏளனமாக அவளை பார்த்தவன்,  “இப்போ எதுக்கு இப்படி கத்துற பேபி? இது ஹாஸ்பிடல். நீ பேசுற விஷயம் வெளியில போச்சுன்னா உனக்கு தானே ப்ரோப்லம்!” என்று கர கரப்பான குரலில் சொல்ல,  அவளுக்கோ இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.  எல்லா தவறையும் அவன் செய்து விட்டு இப்போது தனக்கு இதனால் பிரச்சனை வரும் என்று இவ்வளவு சாதாரணமாக கூறுகிறானே! “நீங்க எல்லாம் மனுஷனே இல்லை. ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிச்சிட்டு எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிது?” என்று அவள் விம்மிய படி அழ,  சிம்மனோ இரு பக்கமும் தலையசைத்த படி, […] - [Ep 13](https://storybypm.com/ep-13/): அத்தியாயம் 14 அவளுக்கோ கொலை வெறி தான் வந்தது. “சும்மா கூப்பிட்டா படுக்க வர மாட்டான்னு தானே இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணி உங்க ஆசையை தீர்த்துக்கிட்டீங்க?” என்று ஆத்திரத்தின் உச்சத்தில் அவள் கத்த, சிம்மனின் புருவங்களோ சற்று இடுங்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாதவனாய் சற்று ஏளனமாக அவளை பார்த்தவன்,  “இப்போ எதுக்கு இப்படி கத்துற பேபி? இது ஹாஸ்பிடல். நீ பேசுற விஷயம் வெளியில போச்சுன்னா உனக்கு தானே ப்ரோப்லம்!” என்று கர கரப்பான குரலில் சொல்ல,  அவளுக்கோ இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.  எல்லா தவறையும் அவன் செய்து விட்டு இப்போது தனக்கு இதனால் பிரச்சனை வரும் என்று இவ்வளவு சாதாரணமாக கூறுகிறானே! “நீங்க எல்லாம் மனுஷனே இல்லை. ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிச்சிட்டு எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிது?” என்று அவள் விம்மிய படி அழ,  சிம்மனோ இரு பக்கமும் தலையசைத்த படி, […] - [Ep 12](https://storybypm.com/ep-12/): அத்தியாயம் 12 பிருந்தாவும், ஜானவியும் கேன்டினுக்கு சாப்பிட வந்து அமர்ந்தார்கள்.  “இன்னக்கி சாப்பாடு ரொம்ப கம்மியா இருக்கு. வர வர இந்த கேன்டீன்ல கொள்ளடிக்க ஆரம்பிச்சிட்டாங்கடி” என்று சளித்த படி ஜானவி சொல்ல,  பிருந்தாவும் அவளுக்கு பதில் சொல்லிய படி திரும்ப, அங்கே அவர்களை நோக்கி வந்த சிம்மனை கண்டு அவள் விழிகள் விரிந்தன.  ஆனாலும் அவனை கண்டுகொள்ளாதது போலவே தலை குனிந்து உணவை சாப்பிட்டபடி இருந்தாள்.  அவனோ உணவை எடுத்து கொண்டு அவர்கள் இருக்கும் மேசைக்கு அருகில் வந்தவன்,  “கென் ஐ சிட் ஹியர்?” என்று அவன் கர கரப்பான குரலில் கேட்க,  பிருந்தாவோ சற்று அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் அவன் பார்வையோ பக்கத்தில் அமர்ந்திருந்த ஜானவியின் மீது படிந்திருக்க, அவளோ உணவைத் தொண்டைக்குள் இறக்க முடியாமல் திணறிப் போய், “ஓ… எஸ் சார்! ஷ்யூர்..”  என்று பதறியபடி தன் தட்டை இழுத்துக்கொண்டு சற்று ஓரமாக அமர்ந்து […] - [Ep 11](https://storybypm.com/ep-11/): அத்தியாயம் 11 அன்று வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் பிருந்தா.  அவள் வேலைக்கு சென்றே நான்கு நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.  உடம்பு சரியானாலும் எங்கே வைத்தியசாலைக்கு சென்றால் மீண்டும் அந்த சிம்மனின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவளை இன்னும் இரண்டு நாட்கள் வீட்டிலே தங்க வைத்து விட்டது என்றே சொல்லாம்.  அந்த நான்கு நாள் விடுமுறை அவளது காய்ச்சலுக்கு மருந்தாக இருந்ததோ இல்லையோ, சிம்மனிடமிருந்து தப்பிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால், இன்று அவனை எதிர்கொள்ள வேண்டுமே! அந்த நினைப்பே அவளுக்குள் நடுக்கத்தைத் தந்தது. கண்ணாடியின் முன் நின்று தன் சோர்வான முகத்தைப் பார்த்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கிளம்பினாள். நர்சிங் ஸ்டேஷனுக்கு சென்று தன் வருகையைப் பதிவு செய்துவிட்டு, வார்டுக்குள் நுழைந்தவள் தன் வேலையை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.  அதே நேரம் “ஹாய் பிருந்தா… வந்துட்டுட்டியா?” என்று சிரித்த படி […] - [10](https://storybypm.com/10-2/): அத்தியாயம் 10 கையில் இருந்த மதுக் குவளையை சுழற்றிய படி, அந்த பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான் சிம்மன்.  அந்த இடத்தையே அதிர வைக்கும் படி ஒலித்த இசையோ, மனிதர்களின் இரைச்சலோ அவனது செவிகளை கொஞ்சமும் எட்டவில்லை. மனம் முழுக்க அவள் எண்ணம் மட்டும் தான் அவனை பாடாய்ப் படுத்தி எடுத்தது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக.… பிருந்தாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவள் வைத்தியசாலைக்கு வரவில்லை.  அப்போதிருந்து தான் அவன் நிம்மதியும் போயிருந்தது. இரு நாட்கள் அவள் முகத்தை பார்க்காமல் அவனுக்கு பைத்தியமே பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.  எப்போதும் வேலை வேலை என்று மட்டும் இருப்பவன் முதல் முறை ஒரு பெண்ணால் இப்படி தவித்துப் போயிருக்கிறான். அவனிடம் இருந்த அவளது அந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது. அவளுக்கு போன் பண்ணி பார்த்தாலும் சுவிச் ஆப் என்று வர, எப்படியும் தன்னிடம் பேச கூடாது என்பதற்காக […] - [Ep 9](https://storybypm.com/ep-9/): அத்தியாயம் 9 “சார்… இந்த ஃபைல்ல ஒரு டவுட்…” என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் பிருந்தா. ஆனால் அங்கே சிம்மனின் இருக்கை காலியாக இருக்க,  அவளோ ‘எங்க போனாரு இவரு!’ என்ற படி அறையை சுற்றி முற்றி பார்த்தாள். ஒருவேளை அவசரமாக ஓ.டி பக்கம் சென்றிருப்பானோ என்று எண்ணியவள், அங்கிருந்து போகப் பார்க்க, அப்போது தான் அவனது தொலைபேசி மேசையில் இருந்தது அவள் கண்களில் பட்டது.  அதை பார்த்தவளின் கால்கள் அதே இடத்தில் நின்று விட, ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று நடுக்கத்துடன் அந்த போனை கையில் எடுத்தாள்.  ஒருவேளை அன்லாக் ஆகி இருந்தால், எப்படியாவது அந்தப் புகைப்படத்தைத் தேடி அழித்துவிடலாம் என்ற நப்பாசை அவளுக்குள் எழுந்தது.  அதை வைத்து தானே அவளை படாத பாடு படுத்தி கொண்டு இருக்கிறான்.  எச்சிலை கூட்டி விழுங்கிய படி, திரையைத் தட்டிப் பார்த்தவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.  அவனது போன் […] - [Ep 8](https://storybypm.com/ep-7-2/):  அத்தியாயம் 8  அன்று ஒரு முக்கிய இதய அறுவை சிகிச்சை நடைபெறவிருக்க, அனைவருமே முன்னேற்பாடு அறையில் இருந்து அதற்காக தயாராகி கொண்டு இருந்தனர்   பிருந்தாவும் கைகளை கழுவிய படி, அந்த நீல நிற உடையை அணிந்து கொண்டிருக்க, அதே வேளை அவ்வறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சிம்மன்.  அவனை கண்டதும் மற்றவர்கள் அவசரமாக தயாராக,  அங்கே ஏற்கனவே அவனுக்கான உடையுடன் தயாராகி நின்றிருந்த கார்த்திகாவும் வழக்கம் போல அந்த உடையை அவனுக்கு அணிவிக்க அருகில் வந்தாள். ஆனால், சிம்மனின் பார்வையோ அங்கே ஓரமாக நின்ற பிருந்தாவின் மீதே படிந்தது.  அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க தைரியம் இல்லாமல், தலையை குனிந்த படி நின்று இருந்தாள்.  அவள் எண்ணம் அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் அவளை வம்பிழுக்க தானே அவனுக்கு பிடிக்கும்.  தன் அருகில் உடையை அணிவிக்க வந்த கார்த்திகாவை கைகளால் தடுத்து நிறுத்தியவன், “நீ மத்தவங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணு” […] - [Ep 7](https://storybypm.com/ep-7/): அத்தியாயம் 7 பெண்ணவளோ அவன் கூற்றில் அதிர்ந்து போய் விழித்தாள்.  அவன் இவ்வளவு கீழ் தனமாக இருப்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லையே! ஆனால் உண்மையில், அவன் அப்படி பட்டவனே இல்லை.  இப்படி ஒரு புகைப்படத்தை வைத்து கொண்டு ஒரு பெண்ணை மிரட்டும் அளவுக்கு அவன் மோசமானவனும் அல்ல, அதற்கான அவசியமும் அவனுக்கில்லை. இது வரையில் எத்தனையோ பெண்களை அவன் சந்தித்து இருக்கிறான் தான்.  அதுவும் அவர்களே விருப்பப்பட்டு அவனைத் தேடி வந்திருக்கிறார்களே தவிர, யாரையும் அவன் தேடிப் போனதில்லை. அவனின் திமிரும், கர்வமும் அவனை அத்தனை சீக்கிரம் யாரையும் அண்டவிடாது.  ஆனால் முதன் முறை ஒரு பெண்ணிடன் அவனே நெருங்க நினைக்கிறான்.  அதுவும் இப்படி மிரட்டி. இதுவே இந்த இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தூக்கி போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருப்பான். ஆனால் இவளை மட்டும் அப்படி விட […] - [Ep 6](https://storybypm.com/ep-6/): அத்தியாயம் 6  பிருந்தாவோ வார்டில் உள்ள நோயாளிகளுக்கான மருந்துகளைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள்.  அதே சமயம் சற்று பதட்டமாக அங்கு வந்தாள் கார்த்திகா.  “பிருந்தா, ஒரு சின்ன ஹெல்ப்! சார் நேத்து நடந்த அந்த மெடிக்கல் கான்பரன்ஸோட முக்கியமான சில போட்டோஸையும், டேட்டா ஷீட்டையும் இப்போவே அனுப்பச் சொல்லி மெசேஜ் பண்றாரு. ஆனா என் போன்ல சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சு.” என்று சொன்னவள்,  “இந்த பென்டிரைவ்ல அந்த டீடெயில்ஸ் இருக்கு. உன் போன்ல கனெக்ட் பண்ணி அதை அவருக்கு அனுப்பிடுறியா? ப்ளீஸ்” என்று கேட்க,  அவளுக்கே பல வேலைகள் இருந்தது.  ஆனாலும் யாராவது உதவி கேட்டு வந்தால் அதை தட்டிக் கழிக்க மாட்டாள்.  அதனாலேயே “சரி சிஸ்டர் கொடுங்க” என்று அதை வாங்கி கொண்டவள், அந்த புகைப்படங்களை தனது தொலைபேசியில் ஏற்றி அவனுக்கு அவசரமாக அனுப்பிக் கொண்டிருந்தாள்.  அப்போது அங்கே வந்த ரம்யாவோ, “பிருந்தா! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? […] - [Ep 5](https://storybypm.com/ep-5/): அத்தியாயம் 5 இரவு அந்த ஹோட்டலின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் சிம்மன்.  வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தவனோ அந்த ஹோட்டலில் இருந்து வெளியே தெரியும் நகரத்தை பார்த்த படியே, சிகரட்டை புகைத்து கொண்டிருந்தான்.  அதே வேளை அவனது அறையின் கதவு தட்டப்பட, சென்று திறந்தான்.  வெளியில் கார்த்திகா தான் கையில் பையுடன் நின்றிருந்தாள்.  அவனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்து விட்டு, சென்று சோபாவில் அமர, அவளும் கதவை மூடி விட்டு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.  சிம்மனோ புகையை இழுத்து விட்ட படி, “எதுக்கு வர இவ்ளோ லேட்?” என்று கர கரப்பான குரலில் வினவ,  அவளோ “இல்லை சார் வர வழியில கொஞ்சம் ட்ராபிக் அதான்…” என்று இழுக்க,  “ம்ம்” என்றவனோ “நீயே ட்ரெஸ்ஸ கழட்டு எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இல்ல” என்று சொல்ல,  அவளும் அவன் கூறுவதை அப்படியே செய்தாள்.  அவளுக்கு அவன் மீது ஆசை […] - [Ep 4](https://storybypm.com/ep-4/): அத்தியாயம் 4 கார்த்திகாவோ “எங்க சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஆனா ரொம்ப நல்லவரு. அவரு எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பாரு.” என்று அவனை பற்றி விளக்கம் அளிக்க,  பிருந்தாவோ அவள் பேசும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.  “ம்ம்” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்.  கார்த்திகாவும் அவளை பி வார்டுக்கு அழைத்து வந்தவள், அந்த இடத்தை காட்டிய படி, “இங்க இருக்குற பேஷன்ட்ஸால அவங்கள கவனிச்சுக்க முடியாது. சோ அவங்களுக்கு தேவையான எல்லா ஹெல்ப்பையும் நீங்கதான் செய்யணும்,” என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்ற நர்ஸ்களிடம் பிருந்தாவை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றாள்.  பிருந்தாவும் ஒரு முறை அந்த இடத்தை சுற்றிப் பார்த்தாள். அந்த அறையில் வீசிய ஒருவிதமான மருந்தின் நெடியும், அங்கிருந்த நோயாளிகளின் முனகல் சத்தமும் அவளது மனதிற்குள் ஒருவிதமான பாரத்தை ஏற்படுத்தியது. அதே வேளை அங்கிருந்த சீனியர் நர்ஸான ரம்யா அவளை நோக்கி வந்தாள். அவளோ கையில் இருந்த நோயாளிப் பட்டியலைப் பார்த்தபடி, […] - [Ep 3](https://storybypm.com/ep-3/): அத்தியாயம் 3 பிருந்தாவோ அமைதியாக அதே இடத்தில் நின்று இருக்க, கொஞ்ச நேரத்திலேயே அங்கு வந்த கார்த்திகாவோ, “நீங்க தானே பிருந்தா?” என்று அவளிடம் கேட்க,  அவளும் ஆம் என்பது போல தலையாட்டினாள்.  கார்த்திகாவோ “சார் உங்களை உள்ள வர சொன்னாரு” என்று சொல்ல, பிருந்தாவும் தனது உடையை சரி செய்து விட்டு அவனது அறைக்கு சென்றாள். அவளோ அனுமதி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, சிம்மனோ இருக்கையில் அமர்ந்து ஒரு பைலை புரட்டிக் கொண்டிருந்தான்.  சற்று பயத்துடனேயே  அவன் பக்கத்தில் வந்து அவள் நிற்க, அவனும் பைலை மேசையில் போட்டு விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். நேற்று புடவையில் இருந்தவள் இன்று செவிலியர் உடையில் இருந்தாள். அவளுக்கு அனைத்து உடைகளுமே கச்சிதமாக தான் பொருந்தியது. அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்தவன், “வட்ஸ் யுவர் நேம்?” என்று கேட்டானே பார்க்கலாம் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.  நேற்று தானே அவளது […] - [Ep 2](https://storybypm.com/ep-2/): அத்தியாயம் 2 பகல் ஒரு மணியை தாண்டி இருந்தது.  சுமார் ஏழு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, வெளியே வந்தான் சிம்மன். வாசலில் காத்திருந்த நோயாளியின் உறவினர்கள் அவனைக் கண்டதும் ஓடி வந்தனர்.  “டாக்டர் என் பையன் பொழச்சிடுவால்ல?” என்று அந்த பெண் கேட்ட படி அவனின் கையை பற்ற போக,  சட்டென தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டவன் முகமோ ஒரு வித ஒவ்வாமையை காட்டியது.  “ஸ்டே பேக்!…..” என்ற படி, “சர்ஜ்ரி ஈஸ் சக்ஸஸ்புல். அடுத்த 24 மணித்தியாலமும் அப்சர்வேஷன்ல இருக்கணும். டோன்ட் கிரௌட் ஹேர்.” என்று சொல்லி விட்டு,  தனது பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் கார்த்திகாவிடம் “பேஷண்டோட  பிபியை 10 மினிட்ஸ்க்கு ஒருமுறை மானிட்டர் பண்ணிட்டே இருக்கணும். ஏதாவது சின்ன சேன்ஞஸ் தெரிஞ்சா கூட உடனே எனக்குத் தெரியணும். புரிஞ்சிதா?” என்று கேட்க,  அவளும் “ஓகே சார்” என்று தலையசைத்தாள்.  சிம்மனோ […] - [பிழை-8](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-8/): அந்த பிரம்மாண்டமான தேக்கு மரக்கட்டிலில் உயர் ரக மெத்தையில் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் ஆருத்ரா.  இளமை உணர்வுகளை தடுக்க இயலாமல் ,கொதிக்கும் மனதினை கட்டுக்குள் கொண்டு வர தலையணையை தன் மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள்.  தன்னவனையே அணைத்துக் கொண்டிருப்பது போல் ஒரு மாயை.  இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த பிடிவாதம்.? பழியுணர்ச்சி? . தேவ்வின் மீது தவறில்லை என்பது‌ தெரியும்.  சூழ்நிலை கைதியாக மாறிப்போனதால் தான் தன்னை மணக்க முடியவில்லை என்று அவளுக்கு எப்போதோ புரிந்து விட்டது. என்ன செய்வது மனம் சொல்வதை புத்தி ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதே…! தான் செய்வது தவறு என அவளுக்கு நன்றாகவே தெரிகிறது.  ஆனால் அந்த தவறு மட்டுமே இன்னும் அவளது ஜீவனை இழுத்துப் பிடித்துக்கொண்டு வைத்திருக்கின்றது.  இல்லையெனில் அவனுடனான  கடந்த கால காதல் நினைவுகளால் என்றோ அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கும்.  அவனை எங்கும் செல்ல விடாமல் தன்னருகேயே வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல […] - [பிழை-7](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-7/): காவல் நிலையத்தில் இருந்து சோர்ந்த நடையுடன் வந்தவன் அனுவை சுந்தரி அக்காவின் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு தங்களுடைய வீட்டில் நுழைந்தான். குளித்து விட்டு உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் தாயின் அறைக்குள் நுழைந்தான். அரசி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  அவரருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தவன் முகத்திலிருந்த சோர்வை மறைத்துக் கொண்டு, “அம்மா சாப்டீங்களா…? மாத்திரை போட்டீங்களா?” என அக்கறையுடன் கேட்டான். “சுந்தரி அதெல்லாம் நேரத்துக்கு கொண்டு வந்து கொடுத்துட்டா ப்பா..போன விஷயம் என்னாச்சு? உன்னை போலீஸ்காரங்க எதுவும் அடிக்கலையே..? என்ன விஷயமா உன்னை அழைச்சிட்டு போனாங்க வாசு..?” என அடுக்கடுக்காக கேள்விகள் அவரிடமிருந்து வந்தது. “ம்மா….பதட்டப்படாதீங்க. ஒண்ணுமில்ல . சின்ன விஷயம் தான். என் மேல எந்த தப்பும் இல்லன்னு விட்டுட்டாங்க. பெருசா எந்த விசாரணையும் பண்ணல.” என்றான். அவரிடம் தேவையில்லாமல் ஆருத்ராவைப்‌ பற்றி பேசி குழப்ப விரும்பவில்லை. அது இன்னமும் அவருக்கு குற்றவுணர்வை தரும் என்பதால் அதனை மறைத்துவிட்டான். “ சரிம்மா…நான் ஃநைட் […] - [பிழை-6](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-6/): மறுநாள் விடியல் மெல்லிய சூரிய வெளிச்சத்துடன் விடிந்தது.  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சந்தியா.  “ உங்கம்மா எழுந்துட்டாங்க‌ போல. போய் காஃபி போட்டுக் கொடுங்க. இல்லன்னா அப்படியே என்னை பரிதாபமா பாத்துட்டு இருப்பாங்க.‌ என்னவோ நான் அவங்களுக்கு சாப்பாடே கொடுக்காம கொடுமை படுத்துற மாதிரி… பாத்திரத்தை தேய்ச்சு வச்சிடுங்க. இன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்பணும். மதியத்துக்கு சமைக்கல. காலையில டிபன் மட்டும் தான் பண்ணிருக்கேன்.” என்றாள் அவசரமாக கிளம்பியபடியே.  “ அப்ப‌ மதியம் அனுவுக்கு..?” என்றான்.  “ அது எனக்குத் தெரியாது.‌ நீங்க ஆபிஸ்ல இருந்து வந்து ஏதாவது வாங்கி அவ ஸ்கூல்ல கொடுத்துவிட்டு போங்க. நான்‌ வெளியே சாப்ட்டுக்குறேன்..” என்றாள் உதட்டுச்சாயம் பூசியபடியே.  “முன்னாடியே சொல்லிருக்கலாம்ல காலையில சீக்கிரம் எழுந்து நானே சமைச்சு வச்சிருப்பேன்..? நானும் ஆபிஸ் கிளம்பணும் சந்தியா. என்னோட நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காம பேசிட்டு இருக்க. மதியம் எப்படி நான் அவ்வளோ […] - [முகிழ்மதி 119(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1191/):     பல கூச்சல்களும் குழப்பங்களும் நிகழ்ந்தாலும் விஜயேந்திர பூபதி தான் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் முதல்வராகியிருந்தார். அவரை மீண்டும் முதலமைச்சராக்கியதில் முக்கிய பங்கு ரத்தினவேலுவிற்கு தான் இருந்தது. ஆதலால் மகனிடம் அதற்குரிய நன்றியுரைத்தவர் “இந்த முறையாவது துணை முதலமைச்சர் போஸ்டிங் நீ ஏத்துக்கலாமில்லை பூபதி” என வேண்டுக்கோளை முன் வைக்க, அவனோ “இல்லைப்பா…என்னை விட அதிகமான அனுபவமுள்ள ஆட்கள் எல்லாம் கட்சியிலே இருக்கிறாங்க…அவங்க யெல்லாம் இருக்கும் போது நேரடியா நான் சீட்டிலே வந்து உட்கார்றது நல்லாயிருக்குது…எனக்கு என்னோட உழைப்பிலே முன்னேறி வர்றதில் தான் விருப்பம்…அடுத்த முறை நான் எலெக்சனிலே நின்னு வின் பண்ணி எம்.எல்.ஏ ஆகறேன்…அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி மேலே வந்து டெபிட்டி சீ.எம் போஸ்டிங் உட்கார்றேன்…அது தான் நியாயம்..அது தான் அரசியல் தர்மமும் கூட அப்பா” என தந்தைக்கே அரசியலின் தாத்பரியத்தை பற்றி பாடம் எடுத்தான் தனயன். ரத்தினவேலை எண்ணி அவர் பெருமிதம் கொள்ளாத நாளே […] - [பிழை -5](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-5/): கன்னத்தை பிடித்து கொண்டு கண்கள் கலங்க நின்றிருந்தாள் ஆருத்ரா. “ ச்சீ…பொண்ணாடி நீ..? பைத்தியம்‌தான் புடிச்சிருக்கு உனக்கு. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு . ஏன்‌ டி புரிஞ்சிக்க மாட்டேங்குற..? என்னென்ன பேச்சு பேசிட்டு இருக்குற..? என் வாழ்க்கை இனி என்னோட பொண்டாட்டியோட தான். ஒரு காலத்துல உன்னை விரும்பினேன் அது சந்தர்ப்ப சூழ்நிலையால கை கூடல. நீயும் எல்லாத்தையும் மறந்துட்டு வேற வாழ்க்கையை வாழப் பாரு. என்னை விட்டுடு. நல்லவிதமா சொல்றேன் ஆரு. ப்ளீஸ்…! உனக்குன்னு ஒரு‌நல்ல வாழ்க்கை அமையும். உனக்கான வன் நானில்லை.” என்றான் கெஞ்சுதலாக. அவனது வார்த்தைகள் அவளது நெஞ்சில் ஊசியாய் இறங்கியநு உண்மை தான்.  ஆனால் அதனை அழகாக மறைத்துக் கொண்டு நொடியில் தன்னை சமன் செய்து கொண்டாள். அவளை அடித்து திட்டி விட்டவனுக்கு மனது கேட்கவில்லை. அவளை அடித்த தனது கரத்தினை ஒரு முறை மூடித் திறந்தவன் தனது அவசர புத்தியை எண்ணி மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.  […] - [பிழை-4](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-4/): அனுவை ஆட்டோவில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியவன் தன் தாயின் அறையினுள் நுழைந்தான். “ ம்மா… உங்களுக்கு தேவையான மாத்திரை மருந்தெல்லாம் பக்கத்துலயே வச்சிருக்கேன். எங்கயும் தேடாதீங்க. கொஞ்சம் பழம் வெட்டி அந்த டப்பாவுல வச்சிருக்கேன். பசிச்சா எடுத்து சாப்பிடுங்க. சாப்பாடு இந்த கேரியர்ல எடுத்து வச்சிருக்கேன். மறக்காம மாத்திரை போட்டுட்டு சாப்பிடுங்க. காஃபி ஃப்ளாஸ்க்ல போட்டு வச்சிருக்கேன். நாலு மணி போல குடிச்சிடுங்க. அப்பறம் ரொம்பவே ஆறிடும். இந்த ஃபோன்ல என்னோட நம்பர் முதல்லயே இருக்கு. எதுவா இருந்தாலும் தயங்காம கூப்பிடுங்க. அடுத்த நம்பர் சந்தியாவோடது இருக்கு. நான் ஒருவேளை எடுக்கலைன்னா அவளுக்கு கூப்பிடுங்க. சுந்திரி அக்காவோடதும் இருக்குது. கவனமா எழுந்து பாத்ரூம் போய்ட்டு வாங்க. வேற எதுவும் வேணுமா..? எல்லா மருந்தும் இப்போதைக்கு ‌இருக்குது. அடுத்த மாசத்துக்கு அப்பறம் வாங்கிக்கலாம்…சரியா..?” என்றவன்  மாத்திரைப் பட்டையை கிழித்து மாத்திரையை அவர் கையில் கொடுத்து தண்ணீரை அருந்த கொடுத்தான். அதனை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு […] - [பிழை-3](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-3/):   “ம்ம்ச்..” என்ற சலிப்புடன் மகளை தோளில் போட்டுக் கொண்டு தங்களுடைய அறைக்குச் சென்று படுக்க‌ வைத்தான். ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே கண்ணுறங்கி விட்டான். வெளி கேட் திறக்கும் சத்தம் கேட்டு கண்களை திறந்தான். சந்தியா தான் வந்து கொண்டிருந்தாள். அவன் ஹாலில் அமர்ந்திருப்பதை‌ கண்டு கொள்ளாமல் தங்களுடைய அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு வந்தாள். “ தோசை ஊத்தி தரவா சந்தியா..” என்றான். “தேவையில்ல…எதுக்கு ஹால்லயே உக்காந்திருக்கீங்க. என்னைய வேவு பாக்கவா…? எத்தனை தடவை ஃபோன் பண்ணுவீங்க..? உங்களுக்கு தான்‌ வேலை வெட்டி இல்ல…எனக்கும் இல்லைன்னு நினைக்கிறீங்களா…?  இனி இந்த மாதிரி அடிக்கடி  ஃபோன் பண்ணுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க…சொல்லிட்டேன்…” என்றபடியே முடியை தூக்கி கொண்டைப்‌ போட்டுக் கொண்டாள். “இல்ல… நேரம் பத்து மணிக்கு மேல ஆச்சேன்னு தான்  ஃபோன் பண்ணுனேன். அந்த பக்கம் ஸ்ட்ரீட் லைட் இல்ல இருட்டா இருக்கும் அதான் வண்டியை எடுத்துட்டு வரலாமேன்னு  …” எனக் […] - [பிழை-2](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-2/):   ஆகாய நீல நிற ஜார்ஜெட் புடவையில் கருப்பு நிற கையில்லா இரவிக்கை அணிந்து கொண்டையை உயர்த்திப் போட்டிருந்தாள்.  கால் மீது கால் போட்டுக் கொண்டு விழிகளில் உஷ்ணம் பரவ அவனையே அழுத்தமாக பார்த்தவளது கையில் பேனா சுழன்றுக் கொண்டிருந்தது.   கூரிய பார்வையினால் தலை முதல் கால் வரை அவனை அலசியபடி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. அவளை கண்டு புருவத்தை சுருக்கியவன் மெல்ல நடந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்‌ வந்துவிட ஆலோசனை ஆரம்பித்தது.   இரண்டு ‌மணி நேரம்  நடந்தது.  அனைவரும் தத்தம்‌ வேலையை  விளக்கிக் கூற வாசுவின் முறை வந்தது.  அவனும் தனது விளக்கத்தை  பவர்பாயிண்ட் பிரசெண்ட்டேஷன் மூலம் விளக்கினான். இறுதியாக ஆருத்ரா  தங்களுடைய பொருட்களின் தரத்தையும்   விலையையும் அவர்கள் ஒத்துக் கொள்ளும் அளவிற்கு அடித்துப்‌ பேசி  அவர்களை  தங்களுடைய பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட்டாள்.  வெறுமே நிறுவனத்தையும் அதன்  பொருட்களையும் பார்வையிட […] - [பிழையானாய் காதலே..!](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87/): பிழை-1 திங்கட்கிழமை காலை…  அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காலைப் பொழுது. சிலருக்கு சற்று சோம்பலாக, சிலருக்கு பரபரப்பாக  . வாரத்தின்  முதல் நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நாள். “ சந்தியா….! சந்தியா‌..!  டிபன்‌  ரெடியா‌..? காலையில முக்கியமான மீட்டிங் இருக்கு ம்மா…. சீக்கிரம் போகணும். “ என்று கூறியபடியே முழுக்கை சட்டையின்  பொத்தான்களை போட்டபடியே உணவு மேசைக்கு வந்தான்  வாசு என்கிற வாசுதேவன் . “ ஒரு நிமிஷம் இருங்க…தாளிச்சிட்டு இருக்கேன். நீங்க அதுக்குள்ள அனுவக்கு   லன்ச் ஃபேக்  எடுத்து சாப்பாட்டை பேக் பண்ணி வைங்க…வர்றேன்….” என சமயலைறையின் உள்ளிருந்து குரல் கொடுத்தாள் சந்தியா. அவள் கூறியபடியே ஐந்து வயது மகளது  உணவுக் கூடையையும்  தண்ணீர்  போத்தலையும்  சிறிய  பூந்துவாலையும் எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்தான். அதற்குள் அவனுக்கு உணவை தயார் செய்து அவன் கையில் கொடுத்தாள் ‌சந்தியா. அவனது மனைவி .‌ “ […] - [வாடைக்காற்று 15](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-15/): அன்றைய நாளிலிருந்து யாமினிக்கு எட்டாம் மாதம் தொடங்கிவிட்டதால்,அவளின் மணிவயிற்றிலுள்ள சிசு கருவிலிருந்து முழு உருவம் பெற்ற ஜீவனாய் வளர்ந்து விருட்சம் பெற்றிருந்தது. கருவறையினுள் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய் தந்தையினரின் நேச வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. யாமினி அன்று மாலை மிக முக்கியமான ஒரு வாடிக்கையாளரை சந்திக்கச் செல்வதால் அன்று விரைவாகவே அலுவலகம் புறப்பட ஆயத்தமானாள்‌. நன்றாக மேடிட்டு இருந்த வயிறு சக்கர திருப்பியை நெருங்கும் வகையில் பெரிதாகிவிட்டிருந்ததால்,அவளால் கைகளை எட்டிப்பிடித்து வாகனத்தை செலுத்த முடியாத சூழல். அதனால் தினந்தோறும் இளங்கோவே வண்டியில் அவளை அமர்த்திச் சென்று அலுவலகத்தில் விடுபவன்,மாலையும் அவனாகவே இல்லத்திற்கு அழைத்து வருவான். புதிதாக ஒரு பணியில் சேர்ந்தவனிற்கு இது மிகுந்த சிரமத்தை கொடுத்தாலும் தன் மனைவிக்கான கடமையை சரிவர செய்வதில் மட்டுமே அவனுக்கு திருப்தி. அதனால் வேலைக்கு சற்றே தாமதமானாலும் அதனை பொருட்படுத்தாமல் அவளை அலுவலகத்தில் விட்டதற்கு பிறகு, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய […] - [வாடைக்காற்று 14](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-14/): அன்றைய நாளில் இளங்கோவும் யாமினியும் அந்த பிரபலமான துணிக்கடைக்குச் சென்றிருந்த அதே வேளையில் யாமினியின் தாயான ஞானசேகரியும் அவ்விடத்திற்கு வருகைப்புரிந்திருந்தார். அங்கு அரங்கேறிய அத்தனை காதல் காட்சிகளையும் கண்ணுற்று இருந்தவருக்கு ஒரு புறம் வியப்பு என்றால்,மற்றொரு புறம் நன்றாக மேடிட்டு இருந்த மகளின் மணி வயிற்றை கண்டவருக்கோ பேரதிர்ச்சி!! சில நிமிடங்கள் அவ்விடத்திலே உறைந்து நின்றவர் எவ்வாறு உணர்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. கண்கள் இரண்டும் ஆனந்தத்தில் கலங்க ‘அம்மு’ என அவளை அழைத்து தன்னோடு வாரியணைத்திட,அவரின் உடலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவர்களின் திருமணத்திற்கு பின்பு தன் மகளை தலைமூழ்கிவிட்டதாக எண்ணியிருந்த தாயுள்ளம்,தன் மகள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்ற செய்தி அறிந்துக்கொண்டதில் அவரது கோபங்கள் அனைத்தும் தூள் தூளாக நொறுங்கிவிட்டது. அதனால் அவ்விடத்திலே வேரூன்றி நின்றிருந்தவர்,மேடிட்டு இருந்த வயிற்றையும் மகளையும் மாறி மாறி கண்டு தனது கண்களில் நிரப்பினார்‌. அதற்கெல்லாம் மேலாக அனலாய் தகித்தவரின் பெற்ற வயிறை குளிர செய்யும் வகையில் […] - [வாடைக்காற்று 13](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-13/): யாமினி பெரும் முயற்சி செய்து போராடியும் அந்த ஆண்மகனை சிறிதும் அசைக்க முடியாமல் களைத்தவள்,ஒரு கட்டத்தில் மின்தூக்கியில் இருந்த ஒரு இளைஞன் இக்காட்சியை அலைப்பேசியில் பதிவு செய்து “மச்சி இங்க செம்ம ரொமென்டிக் சீன் ஒன்னு போயிட்டு இருக்கு…லைவ்வா பார்க்கறீயா?” என குறும்பாக தனது நண்பனிற்கு அழைத்து நேரடி ஒளிப்பரப்பு வேற செய்ததில் பெண்ணவளின் முகமோ லஜ்ஜையோடு சிவந்தது. ஒளிப்பதிவு செய்தவனை நன்கு முறைத்தவள் ‘எல்லாம் இந்த இளங்கோவால் வந்தது’ என இன்பமாக சலித்துக்கொண்டு அவனது தோளில் நறுக்கென கிள்ளி வேறு வழியின்றி பூலோகத்திற்கு அழைத்து வந்தாள். அவனோ முட்டிப்போட்டிருந்த அதே நிலையிலே வலியில் “ஆஆ” என முகத்தை சுழித்து அலறி “ஏன் யாமினி என்னை கிள்ளினே?வலிக்குது” என அவளை ஏறிட்டவாறே வலித்த இடத்தை தேய்த்தான். அவளோ பல்லைக்கடித்து “முதல்ல எழுந்திரிங்க…மத்தவங்க முன்னாடி மானமே போச்சு” முன் பாதியை சத்தமாக சொன்னவள்,பின்பாதியை அவனிற்கு மட்டும் கேட்கும் விதமாக மெதுவாக முணுமுணுத்தாள். அவளை வேற்றுக்கிரக […] - [வாடைக்காற்று 12](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-12/): சில நிமிடங்கள் தனது வேதனையை கண்ணீராய் அவன் நெஞ்சில் கரைத்துக்கொண்டிருந்தவளின் மனதிலிருந்த அனைத்து கசடுகளும் வெளிவந்துவிட்டது. ஆகையால் பெண்ணவளின் உவர்ப்பு நீர் காற்றில் கரைந்து காணாமல் போனதை போல் அவளின் துக்கமும் ஆடவனின் உயிர்மூச்சோடு கலந்து கற்பூரமாய் மாயமானது. ஒரு கட்டத்தில் அவளின் உடலில் உள்ள நீர் சத்துகள் வற்றிப்போக அவளின் மேனியும் துவண்டு அவனது நெஞ்சிலே தொய்ந்து விழுந்தது. அதனை அனுமானித்த இளங்கோவோ ‘அவள் அழுத வரை போதும்’ என தானாகவே ஒரு முடிவிற்கு வந்து அவளின் கன்னம் பற்றி விழியோடு விழி கலந்தவன் “ஆர் யூ ஓகே யாமினி?” என கட்டை விரலால் கண்ணீர் கறையை துடைத்தவாறு வினவினான். அவளோ வாயை திறந்து பேசுவதற்கு கூட ஆற்றல் இல்லாதவளாய் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்து அவனது முகத்திலே விழிகளை ஆழப்பதித்திருந்தாள். அதில் திருப்தியுற்றவனின் இதழில் மெல்லியதாக முறுவல் ஒன்று தொற்றுக்கொள்ள,களைந்திருந்த அவளின் கூந்தலை ஒற்றை கரத்தால் நீவி காதோரம் பரிவோடு […] - [வாடைக்காற்று 11](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-11/): தன் மனதிலிருந்த அனைத்தையும் தன்னவளிடம் கொட்டிவிட்டதினால்,இளங்கோவின் மனதிலிருந்து பாரங்கள் சிறிது குறைந்துப்போனது. முந்தைய நாளின் வாக்குவாதங்களை மறந்துவிட்டு ஒரு வித புத்துணர்ச்சியுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்தவனின் முகத்தில் அணிகலனாக முத்து நகை அலங்கரித்துக்கொண்டது. ஆனால் இரவு வெகு நேரம் கழித்தே உறங்கியதால் தாமதமாக எழுந்துக்கொண்டாலும்,அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அந்த காலை நேர பரபரப்பின்றி நிதானமாக பாயை சுருட்டிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான். குளியலறைக்குச் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு முகம் கழுவி,ஈரத்தை துவாலையால் துடைத்தவாறே வெளியே வந்தவனின் செவியில் விசித்திரமான சில ஒலிகள் கேட்டது‌. அதுவும் ‘டமால்…டூமில் ‌…கர்ர்ர்ர்…டர்ர்…கீறிச்’ என கர்ண கொடூரமான இரைச்சலுடன் கூடிய ஓசை கேட்டு முகத்தை சுழித்து காதை அடைத்தவன் “நம்ப வீட்டில் யாருடா பாத்திரத்தோடு குத்து சண்டை போடறது” என திகிலோடு சமையலறையை நோக்கி நடந்தவனின் செவியில் நுழைந்த பேச்சுக்குரல்கள் அவனின் புருவத்தை நெரிய வைத்தது. பாத்திரங்களின் சண்டைகளுக்கு இடையே யாமினி மற்றும் தாரணியின் உரையாடல் […] - [முகிழ்மதி 118(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1182/):     சந்திரமதியை கீழ்த்தரமாக பேசியதினால் அவளிற்குள் ஒரு குற்றவுணர்வு இருந்தது. அதன் பொருட்டே அவளிடம் மன்னிப்பு வேண்ட உத்தேசித்து அங்கு வந்தாள். “அன்னைக்கு உங்களை கண்டப்படி பேசினதுக்கு சாரி…நீங்க யாருனு தெரியாமல் அப்படி பேசிட்டேன்…அன்னைக்கு வேற ஒரு பிரஸ்ட்ரேஷனிலே இருந்தேன்…அதையெல்லாம் உங்ககிட்ட காட்டற மாதிரி ஆகிடுச்சு…சாரி” என உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டியவளை வெறுக்க முடியவில்லை. அவள் பேசிய கடுஞ்சொல்லால் அவளிற்குள் கோபம் இருந்தது தான். ஆனால் தற்போது அவளாக வந்து மன்னிப்பு வேண்டியதும் “இட்ஸ் ஓகே நோ பிராப்ளம்…ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ” என பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தாள். அவள் இறங்கி வந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவள் தங்களது வருங்கால நாத்தனார் என்பதோடு அண்ணியும் கூட என்று அறிந்ததாலே தழைந்துப்போனாள். அத்தோடு அன்று கண்ணீரோடு வெளியேறியவளின் வலி அறிந்த சந்திரமதி “நீங்க ஓகே வா?” என அவளின் நலன் விசாரித்தாள். “எதை கேட்கறீங்க?” என தமயந்தி கூர்மையாக அவளை பார்த்தப்படி வினவ, […] - [முகிழ்மதி 118(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1181/):     இரவு வெகு தாமதமாக உறங்கியதால் இரண்டு ஜோடிகளும் காலை ஏழு மணி வரை எழுந்துக்கொள்ளவில்லை. முகிழ்மதிக்கு வழக்கம் போல் ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, படுக்கையிலிருந்து எழ முயன்றவளிடம் “ஸ்டார் எதுக்கு இப்போ எழுந்திரிக்கிறே?உடம்பு சரியில்லாமல் போயிடும்…இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடி” என அதட்டி அவளை அப்படியே அணைத்து உறங்க வைத்திருந்தான். ஜித்து சந்திரமதி புதுமண தம்பதியினர் என்பதால் அதீத உடல் உழைப்பு காரணமாக அவர்களாலும் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. அப்படியொரு அசதி அவர்களுக்குள்! காலை எட்டரையை கடந்தும் இரண்டு ஜோடியும் கீழிறங்கி வரவில்லை என்றவுடன் வானதி அவர்களை எழுப்ப முற்பட “வேணாம் விடு வானதி…புதுசா கல்யாணமானவங்க தானே…பிள்ளைங்க நாலும் தூங்கட்டும்” என காஞ்சனா மாலா கூறிவிட, வீட்டின் பெரியவரே கூறியதற்கு பிறகு அவருக்கும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மெதுவாக ஒன்பது மணிக்கு ரத்தினவேல் முகிழ்மதி ஜோடி கண் விழித்தனர். அவள் எப்போதும் போல் தலைக்கு குளித்து புடவை […] - [வாடைக்காற்று 10(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-102/): இளங்கோவோ புன்னகை முகத்துடன் உள்ளே நுழைந்தவன்,அவள் மெத்தையில் அமர்ந்திருந்த தோற்றத்தில் திடுக்கிட்டு பட்டென்று முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டான். அதனால் கொட்டை வடிநீர் அடங்கிய குவளையை அங்கிருந்த மேசையின் மீது வைத்த ஆடவன் கட்டிலின் முகப்பின் மீது விழிகள் பதித்து “யாமினி காப்பி குடிச்சிட்டு குளிச்சிட்டு வாங்க…டிபன் சாப்பிடலாம்” என்றவன், கையிலிருந்த பெட்டியை அவளருகே வைத்துவிட்டு “உங்களுக்கு தேவையான எல்லா பொருளும் இதில் இருக்கு” என ஏனோ அவளின் முகத்தை பார்க்கவே மறுத்து பேசியவனை கண்டு யாமினியின் புருவம் சுருங்கியது. அதனால் எட்டி குவளையை கையில் எடுத்து உறிஞ்சியவாறு “இளங்கோ என்னாச்சு?ஏன் என் முகத்தை பார்க்க மறுக்கறீங்க?ஏதாவது பிரச்சனையா?” என திடத்தை வரவழைத்த குரலில் வினவ, நேற்று தன் மீதுள்ள அனுதாபத்தினால் மணம் செய்துக்கொண்டு,இன்று அதை எண்ணி வருந்துகிறானோ என அவளின் உள்ளம் கலங்கிப்போனது. அவனோ யாமினியின் உணர்வுகள் அறியாமலே சிகையை அழுந்தக்கோதி,அவளின் முகத்தை காணாமல் அருகிலிருந்த சுவற்றை பார்த்து “ஒண்ணுமில்லை யாமினி…நீங்க முதல்ல […] - [வாடைக்காற்று 10(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-10/): யாமினியின் கழுத்தில் பொன் மஞ்சள் கயிற்றை கட்டுவதற்கு முன்பு வரையிலும் அவனின் நெஞ்சத்தில் அவளிற்கென்று ஒரு இடம் இல்லை என்ற நிதர்சனம் புரிந்தாலும்,மங்கல நாண் பூட்டும் வேளையில் ‘இனி இவள் மட்டுமே என் மனைவி’ என இதயத்தில் உருப்போட்டவனின் விழிகள் பெண்ணவளின் விழியோடு விழி கலக்க முயற்சித்தது. ஆனால் யாமினியோ தன்னை உயிராய் தாங்கக்கூடிய சொந்தங்களை துறந்து யாருமின்றி அநாதரவாய் திருமண செய்துக்கொள்வதினால் உண்டான மன உளைச்சலில் கண்கள் கலங்கி எங்கோ வெறித்தப்படி நின்றிருந்தாள். அவளின் கண்ணீர் அவனது இதயத்தை சுட,மூன்றாவது முடிச்சிடாமல் பின்புறம் கைகளை வைத்தவாறே “யாமினி” என அவளை நெருங்கி மிகவும் மென்மையான குரலில் அழைத்தான். அவனது அழைப்பில் தோன்றிய வெப்ப மூச்சுக்காற்று பெண்ணவளின் முகத்தில் விழுந்து மேனியை சிலிர்க்க வைத்தது. ‘என்ன?’ என்பதாய் தலையை உயர்த்தியவுடன், பாவையவளின் கண்களை உற்று நோக்கிவாறே ஆழ்ந்த குரலில் “உங்களுக்கு எப்படியோ தெரியாது‌…வாழ்க்கையில் எனக்கு ஒரு முறை தான் கல்யாணம்” என சூழ்நிலைக்கு […] - [வாடைக்காற்று 9](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-9/): யாமினியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சம்பவம் அந்நாளில் நடைப்பெற்று இருந்தது. அப்படியானதொரு நாள் தன் வாழ்வில் வரக்கூடும் என்று அவள் கனவிலும் நிந்தித்ததில்லை. தோழியின் திருமண வரவேற்பிற்காக வேறு ஊருக்கு பயணமாகியிருந்தவளை அடியோடு புரட்டிப்போட்டிருந்தது,அந்த நிகழ்வு! அதேப்போல் உறவுக்காரரின் விழாவிற்கு வருகைப்புரிந்தவனின் தலையெழுத்தும் தலைகீழாக மாற்றம் பெற்றிருந்தது. பாண்டியன் குடும்பத்திற்கு ஜென்ம எதிரியான அமர்வேல் சக்கரவர்த்தி என்ற தனிமனிதனின் கொடூர வஞ்சகத்தால் இருவரின் நல்வாழ்வு அந்நாளில் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. புராணத்தில் மகாபாராத சகுனியின் சூழ்ச்சியால் திரௌபதிக்கு ஏற்பட்ட பாதகத்தை போலவே,இந்த கலியுகத்தில் அமர்வேல் ஒருவரின் நயவஞ்சக சூழ்ச்சியால் யாமினியின் கற்பு களவாடப்பட்டது. பெண்ணவளின் சுயநினைவை இழக்க வைத்து அவளின் கன்னித்தன்மையை பாழாக்குவதே அவரின் கீழ்த்தரமான திட்டம்!! ஆனால் அவர்களது இந்த திட்டத்தில் எதிர்ப்பாராமல் பலியானது இளங்கோவன். பாவையவளிற்கு விரும்பியே போதை வஸ்துகளை கலந்து கொடுத்திருந்தாலும்,அவர்களிற்கே தெரியாமல் அந்த தாப உணர்ச்சியை தூண்டிவிடும் போதை மருந்து கலந்த நீர் இளங்கோவின் கைகளிலும் சிக்கிக்கொண்டது. […] - [வாடைக்காற்று 8](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-8/): இளங்கோவன் சில வருடங்களுக்கு முன்பு சிவசாமி மற்றும் சீதா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவன். விபரம் அறியாத அகவையில் அவனது வாழ்வு மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் அவனது வாழ்வில் பேரிடியாக வந்து இறங்கியது அந்தவொரு செய்தி!! அவனது தந்தை அவன் ஒருவனுக்கு மட்டுமே தந்தையாக இருந்துவிடவில்லை என்பதே அது! சிவசாமிக்கு சீதாவிற்கு முன்பே வேறொரு ஊரில் தனியாக ஒரு குடும்பம் இருந்து வந்திருந்தது‌. அத்தோடு சீதா அவருக்கு இரண்டாம் தாரமும் கூட!! அவரது முதல் மனைவியான விஜிதாவின் குணக்கேடினால் இளங்கோவின் தாயான சீதாவின் அன்பில் நெகிழ்ந்து அவரை திருமணம் செய்துக்கொண்டு,அதன் மூலம் பிறப்பெடுத்தவன் தான் இவன். அவனது தந்தையின் இன்னொரு குடும்பத்து வாரிசு வேறுயாருமல்ல,சிவதாரிணியே தான்!! ஆம்,சிவதாரணி அவனுடைய சகோதரி.ஒரே அன்னையின் வயிற்றில் பிறப்பெடுக்கவில்லை என்றாலும்,இருவரின் தந்தையும் ஒருவரே!! இரு குடும்பத்திற்கும் எந்தவொரு சந்தேகமும் தோன்றிராத வகையில் ஒவ்வொன்றையும் வெகு கவனமாக செய்திருந்தார் சிவசாமி. ஆனால் விஜிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்த சிறிது நாட்களிலே […] - [வாடைக்காற்று 7](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-7-2/): பாவையவள் அவனது முகத்தை நேருக்கு நேராக சந்திக்கும் திரணற்று மன்னிப்பு கேட்க முடியாத தயக்கத்திலே அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டாள் என்பதை அறியாமலே இளங்கோ கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்து அலைப்பேசியை மெத்தையில் வீசிவிட்டு கட்டிலில் அமர்ந்தவள்,தலையை தன்னிரு கரங்களால் தாங்கினாள். அவ்விடத்தில் துணிச்சலாக பேசிவிட்டு வந்தாலும் இளங்கோவை எதிர்க்கொள்ள முடியும் என்றே அவளிற்கு தோன்றவில்லை. ‘தெரியாமல் ஒரு தப்பு பண்ணிட்டு அவஸ்தையில் நெளிஞ்சிட்டு இருக்கேன்…ஆண்டவா…என் வாழ்க்கையில் வைச்சு செய்யறதுக்கு நீ மட்டும் என் கையில் கிடைச்ச உன்னை கைமா தான் பண்ணுவேன்’ என பல்லை கடித்து கடவுளையும் விட்டு வைக்காமல் சாடியவள், ‘எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு அவனிடம் போய் மன்னிப்பு கேட்பேன்…நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்…எல்லா விஷயத்தையும் பொறுமையா ஹேண்டில் பண்ணுனு அண்ணா எத்தனை தடவை சொல்லியிருக்காரு…ஆனாலும் அடங்கமாட்ட நீ…அவசரக்குடுக்கை’ என தன்னையும் விட்டு வைக்காமல் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்தாள். ‘ஆ…’ என மெல்லியதாக கத்தி முகத்தை அழுந்த துடைத்தவள்,இலேசாக திறந்திருந்த […] - [வாடைக்காற்று 6](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-7/): காரிகையவளின் அதரங்களின் வழியாக வந்த வார்த்தைகளை தடைச்செய்வதற்காக மட்டுமே இதழ்களை முற்றுகையிட்ட மணவாளனின் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வு!! அந்த உணர்வு கொடுத்த மயக்கத்தில் தலைவன் மற்றும் தலைவியின் இமைகள் இரண்டும் விழியை சிறையிட்டுக்கொண்டது. பாவையவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் மூடியிருக்க,ஆடவனின் முரட்டு இதழ்கள் மென் இதழ்களை உரசி அவளுக்குள் பெரும் வேட்கை தீயை உருவாக்கியதனால்,அவளின் சூழ் கொண்ட மெல்லிய மேனி சிவப்பேறியது. ஒட்டுதலோடு முடிவு பெற்றிருக்க கூடிய முத்த மிச்சங்களின் எச்சங்கள் உணர்ச்சிகளின் உச்சங்களாக வலுப்பெற ஆரம்பித்தது. இணைகளின் கரங்கள் இரண்டும் மற்றவரை அணைக்கவில்லை என்றாலும், அவர்களுக்குள் உருவாகிய உணர்ச்சி கோளங்கள் காந்தங்களாய் சரீரங்களை கவ்வி இழுத்ததின் விளைவால் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டது. உடல்கள் இரண்டும் உரசியிருக்க… இதழ்கள் இரண்டும் இணைந்திருக்க… இருவரின் சூடான மூச்சுக்காற்றும் தங்கள் இணையை தழுவியிருக்க… பிணையாத கைகள் நான்கும் உணர்ச்சி கொந்தளிப்பில் விறைத்திருக்க… சொல்லிற்கு விலங்கிடுவதற்காக தொடங்கப்பட்ட மௌன யுத்தம் இப்போது முத்த சங்கமமங்களாக உருமாற்றம் […] - [வாடைக்காற்று 5](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-5/): நாள் முழுவதும் செய்த கடுமையான பணியால் உடல் சோர்ந்து களைத்திருந்த இளங்கோ காலையில் நடந்த நிகழ்வை முற்றிலும் மறந்துவிட்டிருந்தான். அத்தோடு அத்தனை சோர்விலும் இரவு உணவை அவனது கரங்களால் தயாரித்து, இருவரும் உணவருந்தி முடித்ததற்கு பிறகும் யாமினி இளங்கோவிடம் ஒரு வார்த்தை பேசாமல் முகத்தை தூக்கி வைத்திருந்தாள். ஆடவனோ அவளின் மௌனம் அறியாமல் எப்போதும் கூறுவது போல் “யாமினி கதவை தாள் போடாதீங்க…ஏதாவது எமர்ஜென்ஸினா எனக்கு மறக்காமல் கூப்பிடுங்க” என்றான் ஆதுரமான குரலில். அவனது அக்கறையான வார்த்தைகள் பெண்ணவளை கடுப்பாக்கிவிட “என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்” என்றாள் பட்டென்று முகத்திலடித்தாற் போன்று. எரிச்சலோடு வலதுப்புறம் திரும்பி “ப்ச்” என சலித்தான் இளங்கோ. ‘என்ன வாழ்க்கைடா இது’ என நொந்துக்கொண்டு தலையை அழுந்தக்கோதி இவளின் புறம் திரும்பியவன் “யாமினி ஏற்கனவே நான் செம்ம டையர்டா இருக்கேன்.வீணா விதண்டாவாதம் செய்து என்னை எரிச்சல் படுத்தாமல் சொல்லறதை செய்யுங்க” என இயலாமை கலந்த சினத்தோடு எடுத்துரைக்க, வாய் […] - [வாடைக்காற்று 4](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-4/): இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று தழுவி சில நிமிடங்களுக்கு முறைத்துக்கொண்டிருந்த வேளையில் அதில் முதலில் சுதாரித்து விலகியது இளங்கோவின் விழிகளே!! இப்போது யாமினியும் தற்போதைய சூழ்நிலைக்கு மாறியவள் உர்ரென்ற முகத்துடன் “நான் கிளம்பறேன்” என தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தாள். அவள் தன் மீதான கோபத்தில் பாதி உணவோடு கை கழுவியது சினத்தை உண்டாக்கினாலும்,வயிற்றில் இருக்கும் சிசுவிற்கான போதிய உணவு கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொண்ட இளங்கோ இருவரின் மீதும் அக்கறை உள்ளவனாய் முதலில் உச்சாணி கொம்பிலிருந்து இறங்கி வந்தான். அதனால் “உப்” என இதழ்குவித்து ஊதி சிகையை அழுந்தக்கோதியவன் “யாமினி நீங்க சரியாவே சாப்பிடலை…முதல்ல உட்கார்ந்து சாப்பிடுங்க” என அவளை ஆழ்ந்து பார்த்தவாறே கூற, அவளோ வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பி “நான் சரியா சாப்பிட்டேனா இல்லையானு எனக்கு நல்லாவே தெரியும்…” என ஆரம்பிக்கும் போதே, “ப்ச்” என சலித்த இளங்கோ “யாமினி தேவையில்லாமல் வீம்பு பிடிக்காதீங்க…முதல்ல உட்கார்ந்து சாப்பி…” […] - [வாடைக்காற்று 3](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-3/): இளம் பெண்ணவளின் சிறகை ஒடித்து துடிதுடிக்க வைக்க ஒரு அரக்கன் கொடிய திட்டங்கள் திட்டியிருக்க,ஆனால் காரிகையவளோ அவற்றை பற்றி அறியாமலே சிறிது சிறிதாக சுய நினைவை இழந்துக்கொண்டிருந்தாள். அவளின் கால்களும் இடறி விழுவது போல் தடுமாறியது. அவளின் மேனி முழுவதும் காற்றில் பறப்பது போன்ற ஜிவ்வென்று ஒரு உணர்வை வழங்க,பாவையவளின் நினைவுகள் தன் சுயம் தொலைக்க ஆரம்பித்தது. அத்தோடு அவளின் உடலில் ஏற்பட்ட உணர்ச்சிகளின் மாற்றத்தினால் அடிவயிற்றில் ஒரு புது வகையான உணர்வு கிளர்ந்தெழுந்தது. மனிதர்களுக்கே உரித்தான காமம் கலந்த உணர்ச்சிகள் மேலெழுந்து திடீரென்று அந்த பெண்ணவளின் தேகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைக்க ஆரம்பித்ததில்,இதுவரை தோன்றிராத தாப உணர்வுகள் அவளுக்குள் முளைவிட தொடங்கியது. ஏனெனில் அவளுக்கு போதை வஸ்துவோடு காம உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான ஒரு வஸ்துவும் அவள் இறுதியாக குடித்த குடிநீரில் கலந்துவிட்டிருந்தார்கள். அந்த மருந்து தந்த உணர்ச்சிகளின் உச்சத்தால் பெண்ணவளின் தேகமோ இப்போதே ஒரு ஆடவனுடன் கலவிப்புரிந்து அவனோடு இரண்டற […] - [வாடைக்காற்று 2](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-2/): யாமினி தன் தோழிகளோடு அரட்டையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அவ்விடத்தில் ஏற்பட்ட சலசலப்பில் கூட்டத்தினர் அனைவரின் பார்வையும் ஒரு சேர திரும்பியது. அந்த இடத்திற்கு வருகை புரிந்த ஒரு புது முக இளம் இயக்குனரை கண்டு பெண்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள். நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அவரின் அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட்.அதனால் தமிழ் திரைப்படங்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறான். பிரபலமான நடிகர்கள் பலரும் அவனது இயக்கத்தில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு அவனையே வட்டமடித்து காத்திருக்கக்கூடிய அந்த திறமையான இயக்குனரின் வருகையால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது. அனைவரும் எழுந்து நின்று அவனிற்கு கைக்கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க,அவனோ எவ்வித தலைக்கனமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரு புன்சிரிப்போடு பேசிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் சங்கடத்துடன் அமர்ந்தான். மேடையில் நின்றிருந்த நாகதேவ்வை கண்டு “வாழ்த்துகள் ஜி” என்பது போல் தலையில் கை வைத்து தோரணையாக […] - [வாடைக்காற்று 1](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-1/): ‘பார்க் பிளாசா’ அது ஒரு ஏழு நட்சத்திரங்களை உள்ளடக்கிய விடுதி. அந்த விடுதியின் முன்பு உள்ளிருக்கும் பல வகையான மக்களின் செழுமையை பறைசாற்றும் வகையில் மகிழுந்துகள் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தது. ஏனெனில்,அந்த விடுதியில் நடைப்பெறவிருக்கும் மிகப்பெரிய பிரபலம் ஒருவரின் திருமண வரவேற்பை முன்னிட்டு அவ்விடம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த விழாவிற்காக பல தரத்துவப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப்பட பிரபலங்கள்,கூடவே தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் வியாபாரி தந்திரிகளும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டிருந்தனர். அதனால் அவர்களின் பாதுகாப்பிற்காக திடகாத்திரமான கருப்பு உடையணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். அத்தோடு காக்கி உடையணிந்த காவலர்களும் தங்களது பணியை செவ்வனே செய்துக்கொண்டிருந்தார்கள். தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகராக வலம் வரும் ‘மக்களின் நாயகன்’ என மக்களால் பட்டம் சூட்டப்பட்ட நாகதேவ் பிரசாத்தின் திருமண வரவேற்பு கொண்டாட்டமே இது. அந்தவொரு நிகழ்ச்சிக்காக தொழிலதிபர் பலருக்கும் அழைப்புச் சென்றிருக்க,தற்போது தமிழகத்திலே கொடி கட்டி பறந்துக்கொண்டிருக்கும் பாண்டியன் நிறுவனங்களுக்கும் அத்தகைய அழைப்புச் qசென்றிருந்தது. […] - [முகிழ்மதி 117](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-117/):     தத்ரூபமாக செதுக்கப்பட்ட சிலையே அவனது அளப்பறியா நேசத்தை வெளிப்படுத்தியது என்றால் இந்த இடத்தில் நிறைந்த பொருட்களை பார்த்த கணம் அவளின் வாய் அதிர்ச்சியில் அடைத்துக்கொண்டன. ஏனெனில்,அறை முழுவதும் எக்கச்சக்கமான ஓவியங்களும் சிற்பங்களும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த சுவர் முழுவதும் அவனும் அவளும் மட்டுமாக இருந்த ஓவியங்கள் எல்லாம் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன. அவை அத்தனையும் அவர்கள் இருவரது சிறு அகவை நினைவுகள்! அந்த ஓவியங்களை பார்க்கும் சமயம் அவளின் சிந்தையில் பழைய ஞாபகங்கள் எல்லாம் மின்னல் போல் காட்சிகளாய் வெட்டிச் சென்றன. அவளது இரண்டு வயது குழந்தை பருவம் தொடக்கம்,அவள் தொலைந்து செல்வதற்கு முன்பு வரையிலான நினைவுகள் எல்லாம் காட்சிகளாய் வரையப்பட்டிருந்தன. அந்த விம்பங்களில் இருந்த காட்சிகள் அனைத்தும் தத்தரூபமாய் அவளின் விழி முன் நடப்பது போல் திரைப்படமாய் ஓடின. அவள் தத்தி தவழ்ந்து வருவது,அவள் கைதட்டி தனது பொக்கை வாயை காட்டி சிரிப்பது,அவனது தமையனின் […] - [முகிழ்மதி 116(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1162/): தங்களது அறைக்குள் குழப்பத்துடன் நுழைந்த முகிழ்மதி கணவனை அங்கு காணாமல் திகைத்தாள். விழிகளை நாற்புறமும் அவள் சுழற்ற,கணவன் அந்த அறைக்குள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ‘எங்க போயிட்டாரு இந்த மாமா’ என நெற்றி சுருங்க அவள் சிந்தித்த நேரம் “ஃபைனலி அம்மையாருக்கு புருஷன் ஞாபகம் வந்திடுச்சு போலே” என நக்கலாக கேட்டுக்கொண்டே அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ரத்தினவேல். அவன் குரல் கேட்டு “மாமா” என பரவசமாக அழைத்தப்படியே அவனது திசைப்பக்கம் அவள் திரும்ப, அவனோ அவளை இமைகள் இடுங்க முறைத்து “இங்க என்னடி பண்ணறே?அப்படியே உன் அம்மா வீட்டுலே குடியிருக்கலாமில்லை…இங்க எதுக்கு வந்தே?” என தாடையை கோபத்தோடு தடவியப்படியே மனையாளை கடந்து சென்றான். எப்போதும் அவர்களறைக்குள் நுழைந்ததும் பேசுவதற்கு கூட நேரம் வழங்காமல் அவளை ஆக்கிரமிக்கும் கணவன் தன்னை கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லவும் அவளின் முகம் சுருங்கின‌. அத்துடன் அவன் பேசிய பேச்சிலிருந்தே தன் மீது கண்ணாளனிற்கு சினம் இருப்பதை […] - [முகிழ்மதி 116(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1161/):     தமக்கையை முதலிரவிற்காக தயார் செய்து அவளறை வரை சென்று விடுவதற்காக இணைந்து நடந்த தங்கையிடம் “ஏய் அம்மு…நீ முதல்ல உன் ரூமுக்கு போ” என அதட்டினாள் சந்திரமதி. அவளோ “ஏன் அக்கா விரட்டறே?” என பாவமாக வினவ, அவளை இடையில் கைவைத்து முறைத்த சந்திரமதி “நீ அத்தான் கிட்ட கடைசியா எப்போடி பேசினே?” என கடுப்பாக வினவ, அவளோ “ஏன்கா கேட்கறே?இப்போ கூட சாப்பிடும் போது பேசினேனே” என தயக்கமாய் இழுத்தவளை முறைத்த சந்திரமதி “முதல்ல நீ சொம்பை கொடுத்திட்டு உன் ரூமுக்கு ஓடு” என அவளிடமிருந்து பால் சொம்பை வாங்கிக்கொண்டாள். அவள் கூற வருவதின் அர்த்தம் உணராதவளோ “ஆனால் அத்தம்மா உங்களை ரூம் வரை விட்டு வர சொன்னாங்களே” என பரிதாபமாக அவ்விடத்திலே நின்றாள். சந்திரமதியோ ‘இவளை வைச்சிட்டு என்ன செய்யறது?பாவம் அத்தான்’ என சலிப்பாக தலையசைத்தவள் “இப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி முழிச்சிட்டு நின்னா அடி வெளுத்திடுவேன் மவளே…அத்தான் […] - [முகிழ்மதி 115(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1152/):     அவரின் குரல் கேட்டதும் “சொல்லுங்க ஆன்ட்டி” என்றவளின் மனதில் ‘இவங்க எதுக்கு கூப்பிட்டிருக்காங்க?’ என்ற சிந்தனை! அவளிடம் மரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தை பேசியவர் “மதி உன்கிட்ட அத்தை பேசணும்னு சொன்னாங்க பேசறீயாம்மா?” என அவளிடம் அனுமதி வேண்டினார். அவளிற்கு முதலில் அதிர்ச்சி! ‘பாட்டியா?’ என வாயை பிளந்தவள்,சடுதியில் தலையை உலுக்கி வெளிவந்தாள். அவர் நினைத்திருந்தால் நீ கட்டாயம் பேசவேண்டும் என்று கட்டளையிட்டிருக்க முடியும்? ஆனால் அவ்வாறு இன்றி அவளிடம் அவர் அனுமதி கேட்டது அவளிற்கு அவர்களின் மேல் ஒரு பெரிய மதிப்பைக் கொண்டு வந்தன. கூடவே ‘பாட்டி என்கிட்ட பேச விரும்பறாங்கன்னா…அப்போ அவங்களுக்கும் இந்த லவ் விஷயம் தெரியுமா?காட்…இவருக்கு ஸ்பீக்கரே தேவையில்லை போலே…எல்லார்கிட்டயும் போய் நான் லவ் பண்ணறேன்னு சொல்லிட்டு வந்திருக்காரு’ என கடுப்பாக அவனை வறுத்தெடுத்தாலும் அவனது இந்த வெளிப்படையான குணம் ஈர்க்கவே செய்தது. தவறு செய்பவர்கள் தானே நிஜத்தை மறைக்க முயலுவார்கள்? அதனால் அவளையும் அறியாமல் […] - [முகிழ்மதி 115(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1151/): ஜித்தேந்திரன் காதல் விடயத்தை முதலில் தெரிவித்தது அவனது தாய் வானதியிடம் தான்!! “அடப்பாவி இதுக்கு தான் என்ன நடந்தாலும் என் பக்கம் நிப்பியானு நீ கேட்டியாடா?” என அவர் பெரும் திகைப்புடன் வினவ, “ஆமாம்மா…நீங்க தான் எங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்…அவ வேற என் லவ்வை அக்சப்ட் பண்ண மாட்டிங்கிறாள்…நீங்க வந்து பேசுங்க…பிளீஸ்…பிளீஸ்…” என அவனது தாயை அவளிடம் பேச வைப்பதற்காக வீரின் வீட்டிற்கு அழைத்து சென்றான். ஆனால் அவருக்கு பின்பிருந்து இயக்கியது காஞ்சனா மாலா தான் என்பது யாவரும் அறியாத ரகசியம்! மகனின் காதல் விடயத்தை பற்றி வானதி தனது மாமியாரிடம் தெரிவித்திருந்தார். அவன் சந்திரமதியை நேசிப்பது அவருக்கு பேரதிர்ச்சி! ‘அவளை பிடிக்கலை பிடிக்கலைனு அந்த புள்ளைய லவ் பண்ணியிருக்கான் பார்றேன்’ என மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவருக்கு சிறியதாக உறுத்தல் இருந்தது. ஏனெனில்,சந்திரமதியை பற்றி முன்பிருந்தே பூபதி குடும்பத்தினர் யாவருக்கும் பெரிதாக அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் அவளும் வீரின் தங்கை […] - [மலர்கள் 7](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): யாதிஷ் புது ஒப்பந்தம் ஒன்றை ஏற்று நடத்த வேண்டுமாறு சஞ்சுயுக்தாவிடம் கூறியவுடன்,சஞ்சுயுக்தா சற்றும் தளர்ந்துவிடாமல் அந்த ஒப்பந்தத்தை துணிச்சலுடன் ஏற்று கொண்டாள். யாதிஷ் ஒரு விஷமமான புன்னகையுடன் “ஓகே…ஒரு 1 வாரத்திற்கு தேவையான உங்க திங்க்ஸ் பேக் பண்ணி ரெடியா வச்சிக்கோங்க…!!டூடே ஈவின்ங் பிளைட்டில் நாம் கொச்சின் போகணும்…!!” என்று அதிரடியாக கூறியவுடன், அவள் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிய யாதிஷ் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “கொச்சினில் தான் அவங்களுடைய மெயின் பிரன்ச் இருக்கு…அங்கே போய் அவங்க ஜுவல்லரி ஷாப்பை அனலைஸ் பண்ணி…சீக்கிரம் ஒரு ஸ்கரிப்பட் ரெடி பண்ணி…டைரக்‌ஷன் பண்ணணும்…உங்க கூட நானும் நம் கம்பெனி மாடலும்…அன்ட் தென் உங்க ஃக்ரு எல்லாரும் வருவாங்க…மத்தவங்க எல்லோரும் அங்க இருக்கிற ஹோட்டலில் தாங்குவாங்க…!நானும் நீங்களும் மட்டும் என்னுடைய கெஸ்ட்ஹவுஸில் தங்கப்போகிறோம்…!!!” என்று யாதிஷ் நீளமாக கூறி முடித்தான். அவன் கடைசியாக கூறியதைக் கேட்டவுடன் சஞ்சுயுக்தாவிற்கு கோபம் பலமடங்கு எகிறியது…அதே கோபத்துடன் “எக்ஸ்கியூஸ் மீ…ஐ கான்ட் டூ […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-6/): இரண்டு வருடங்களுக்கு பிறகு, அடுத்து வந்த இரண்டு வருடத்தையும் காமினி அவளுக்கான நாட்களாக மாற்றிக்கொண்டு அனைத்திலும் ஏறுமுகத்தோடு முன்னேறிக்கொண்டிருந்தாள். காமினியின் மீது அவளின் கணவன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப,அவள் தனது இலட்சியத்தின் இலக்கை நெருங்கிக்கொண்டிருந்ததால் ஒரு துணைவனாக பெருமிதமடைந்தான். அத்தோடு அவளுக்கு ஏற்ற காதல் கண்ணாளனாய் அவனும் தன்னவள் குறித்து வைத்திருந்த சாதனை பட்டியிலில் இடத்தை பிடித்ததற்கு பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தான். அவனது அந்த முடிவில் வீட்டு பெரியவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும்,காமினிக்கோ தனது இலட்சியத்திற்கு துணை நிற்கும் கண்ணாளன் கிடைத்ததில் ஆயிரமாவது முறையாக சிலாகித்துப்போனாள். இன்று புதிதாக தொடங்கவிருக்கும் நடனப்பள்ளியின் திறப்பு விழா.அவற்றின் தலையாய நிர்வாகிய காமினி பதவி ஏற்கக்கூடிய நாள். அந்த விழாவிற்காக இரண்டு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும் விழாவிற்கு வருகை புரிந்திருந்தனர்‌. சக்கரவர்த்தி குடும்பத்திலிருந்து அமர்வேலையும் பாண்டியன் குடும்பத்திலிருந்து சந்திராயினியையும் தவிர்த்து ஏனையவர்கள் அனைவரும் அவ்விடத்தில் நிரம்பியிருந்தனர். சந்திராயினியின் உண்மை சுயரூபம் அறிந்து பாண்டியன் குடும்பத்தினர் […] - [காதல் மந்திரம் 38](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-38/): தேனிலவில் தங்களது நாட்களை இனிமையாய் மாற்றிக்கொண்ட தம்பதியினர்,ஒரு நாள் தங்களது ஆசை தீரும் வகையில் கடலில் விளையாடி களைத்து அமர்ந்திருந்தார்கள். அவர்களது அறையிலிருந்தே அந்த கடற்கரைக்கு ஒரு தனிப்பாதை அமைத்திருப்பதினால் யாருடைய தொந்தரவுமின்றி அவர்கள் மட்டுமாக தனி உலகில் சஞ்சரித்து இருந்தார்கள். கம்பீரத்தின் திருவுருவாய் மேல்சட்டையின்றி தனது அருகே அமர்ந்திருந்த கணவனிடம் “ஆதி கேட்கணும்னு நினைச்சேன்…இலண்டனில் ருதுவோட உங்களுக்கு பழக்கம் இருந்துச்சு இல்லை…அப்போ என்னையும் தெரியுமா?” குத்துகாலிட்டு மடியில் தலை சாய்த்தப்படி வினவ, அவனோ அவள் அவ்வாறு அமர்ந்ததினால் வெளிப்பட்ட பெண்ணவளின் எழில் வளைவை ரசித்தவாறே “பாண்டியன் குடும்பத்து வாரிசு அவனை பற்றி தெரியும் போது உன்னை‌ தெரியாமல் இருக்குமா?நல்லாவே தெரியும் குட்டி ஆடு” என்று சொன்னான். அதில் விலுக்கென்று நிமிர்ந்து விழி விரித்தவள் “அப்போ என்னை பத்தி என்ன நினைச்சீங்க?” என்றாள் ஆர்வமாக. அவனோ “நீ ஒரு லூசுன்னு நினைச்சேன்” என்றான் உண்மையை மறைக்காமல். “ஏதே லூசா?அடப்பாவி மனுசா?” என அவள் […] - [காதல் மந்திரம் 37](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-37/): அடுத்தடுத்து வந்த தினங்கள் இருவரும் உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் இதனுள்ளே இருப்பது போல் புதுமண ஜோடிகளுக்கே உரிய பிரத்யேகமான வகையில் காதலை ஆழ்ந்து அனுபவித்தார்கள். அதிருனும் தாரணியும் இருவரையும் தேனிலவிற்கு ஏற்பாடு செய்து,அவர்களை வழியனுப்பி வைத்திருந்தார்கள். அவர்களது ‘சக்கரவர்த்தி ஏர்லைன்ஸ்’ விமானத்திலே பயணம் செய்வதால்,இருவருக்கும் முதல் முறை அவர்கள் பயணம் செய்த இனிமையான நினைவுகள் வந்து இருவரையும் ஒரு மோன நிலைக்கு தள்ளியிருந்தது. முந்தைய பயணத்திற்கும் இப்போதைய அவர்களது பயணித்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அறிந்து இளம் ஜோடியினர் ஒருவரை ஒருவர் பார்த்து பழைய நினைவில் சில நிமிடங்கள் உறைந்திருந்தார்கள். அச்சமயம் அவர்களின் மயக்க நிலையை களைக்கும் விதமாக அருகே வந்த பணிப்பெண் ஆதியிடம் சிரித்த முகமாக “என்ன சாப்பாடு சார் வேணும்?” என ஆங்கிலத்தில் வினவ, அவனும் எப்போதும் போல் “வெஜ்” என பதிலளித்தவுடன்,அருகில் அமர்ந்திருந்தவளை நோக்கி பார்வையை திருப்பிய அந்த பெண்ணோ காமினியை கண்டு மின்சாரம் தாக்கிய உணர்வில் பெரிதாக […] - [காதல் மந்திரம் 36](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-36/): சில நிமிடங்களுக்கு பிறகே தன்னவன் கேட்டதின் அர்த்தமும் தான் உணர்ந்து பதிலுரைத்த அனர்த்தமும் அறிந்தவள் “ஐய்யோ ஆதி என்ன செய்யறீங்க?என்னை கீழே இறக்கி விடுங்க” என வெட்கத்தில் திமிறினாள். “நோ வே” என அழுத்தமான குரலில் பதிலுரைத்த ஆதியோ பெண்ணவளை படுக்கையில் கிடத்தி தனது மேல் சட்டையை கழட்டிவிட்டு அவளின் மேல் படர்ந்தான். அதில் திகைத்து விழி விரித்தவள் “அச்சோ ஆதி…இப்போ வேணாம்…பிளீஸ்” என கெஞ்ச, அவனோ கண்டுக்கொள்ளாமல் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, “ஆதி…ஆதி…நான் இன்னும் ப்ரஷ் பண்ணலை…குளிக்கலை…இப்போ வேணாம்” என இதழை தன் கரத்தால் மூட, அவளின் கழுத்திலிருந்து வந்த வாசத்தை நுகர்ந்தாறே “பரவாயில்லை…இந்த நேச்சரலான அழுக்கும் வாசமும் எனக்கு பிடிச்சிருக்கு” என மோகத்துடன் மொழிந்தான். தன்னவனது அந்த சூடான மூச்சுக்காற்றில் காரிகையின் சித்தம் கிறங்கினாலும் “ஆதி பிளீஸ்…பிளீஸ்…இப்படி வேணாமே…நம்ப லைஃப் இப்படி அழுக்கா ஆரம்பிக்க எனக்கு விருப்பமில்லை…முதல் முறையா வாழ்க்கை ஆரம்பிக்கும் போது ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன்…பிளீஸ்” […] - [காதல் மந்திரம் 35](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-35/): விழா தொடங்கும் நேரத்திற்கு சரியாக உள்ளே நுழைந்த ஆதியோ மீண்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தான். காமினி கணவன் வெளியேறியதனால் மனமுடைந்து சோக பதுமையாய் அமர்ந்திருக்க,அதைக்கண்டு ‘எதுவோ சரியில்லை’ என்பதை கணித்த ருத்வேந்திரன் அவளை தன்னோடு அழைத்து சென்றிருந்தான். அவளிடம் கேலிப்போல் பேச்சுக்கொடுத்து சகஜமாக்கியதற்கு பிறகே அவனால் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது. வெளிப்போர்வையில் தங்கையிடம் வம்பிழுத்தாலும்,தங்கையின் மீது அளவுகடந்த அன்பு வைத்ததிருந்ததாலே அவளின் துயர் தீர்க்க வேண்டி,அவ்வாறு செய்தான். அவள் இதழ் மலர்ந்து புன்னகைக்கவும்,அதேநேரம் விழா தொடங்கவும் சரியாக இருந்தது. ஆதியும் உள்ளே நுழைந்திருக்க விழாவை அதிருனே தன்னுடைய நன்றி நவிழ்தலில் இருந்து தொடங்கி வைத்திருந்தான். அவர்களது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த மேல்நிலை ஊழியர்கள் தொடங்கி,கடைநிலை தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் கூறிய கையோடு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்தான். பாண்டியன் டெக்ஸ்டைல் நிறுவனம் சக்கரவர்த்தி டெக்ஸ்டைல் நிறுவனத்தோடு கைக்கோர்த்து ஒரு மிகப்பெரிய வெளிநாட்டு ஒப்பந்தத்திற்காக அடுத்த […] - [காதல் மந்திரம் 34](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-34/): காமினி எதிர்ப்பாராமல் கீழே விழுந்ததில் இடையில் தசைப்பிடிப்பு ஏற்பட “ஸ்ஆஆ..” என அலறியவளை கண்டு ஆதியின் இதழோரம் சிறிது புன்னகை பூத்தாலும்,அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டான். ‘அடப்பாவி…நான் கீழே விழுந்து வலியில் கத்திட்டு இருக்கேன்…இவனோ ஏதோ எருமை மாடு நிற்கற மாதிரி அதை தாண்டி போயிட்டே இருக்கான்’ என வலியில் புலம்பி,ஒரு கையை தரையில் ஊன்றி எழ முயன்றாள். அவள் எசகு பிசகாக விழுந்ததில் ஏற்பட்ட தசைப்பிடிப்பினால் மற்றொரு கரத்தை தரையில் ஊன்றினால்,இடுப்பு பகுதிக்கு அழுத்தம் உருவாகி வலி உடலெங்கும் ஊடுருவியது. அதனால் ‘அவுச்’ என முகம் சுழித்தவாறே எழ போராடியவளின் விழிகள் கணவனின் உதவியை தேடி அலைப்பாய்ந்தது. அவனோ சாவகாசமாக மெத்தையின் முகப்பில் சாய்ந்து அமர்ந்து அலைப்பேசியில் ஊன்றியிருந்தான். தன்னை கண்டுக்கொள்ளாமல் அவன் அவ்வாறு நடந்துக்கொண்டதில் அதுவரை வலியில் மட்டுமே சுருங்கியிருந்தவளின் முகம் இப்போது வேதனையில் கசங்கியது. மஞ்சத்தில் கிடத்தி காரிகையின் நெஞ்சத்தில் தஞ்சமடைய வேண்டியவனோ,துச்சமென உதறி கோபத்தின் உச்சத்தில் […] - [காதல் மந்திரம் 33](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-33/): ‘இவையனைத்தும் எவ்வாறு சாத்தியம்?’ என்று அறியாத வகையில் நிகழ்வுகள் எல்லாம் அதிவிரைவாக நடந்து முடிந்திருந்தது. ஏனெனில் ஆதித்ய கரிகாலன் தங்களுடைய சக்கரவர்த்தி சாம்ராஜ்ஜியத்தின் பங்கில் இருந்து அதிருனிற்கும் சம உரிமை வழங்கியிருந்தான். சுருங்கக் கூறினால்,அவனிடமுள்ள தங்களது சொத்துக்களை தந்திரமாய் கைப்பற்றுவதற்கு நிறைய யுக்திகளை கையாண்ட ஆதியவன்,அவனாகவே தற்போது அதிருனனிற்கான அடையாளத்தை பெற்று தந்திருந்தான். வழமைப்போல் தன்னுடைய வியூகத்தை அமைத்து ஒவ்வொரு காரியமாக செயலாற்றிக்கொண்டிருந்தவன்,இறுதியாக தான் நினைத்ததை நடத்தி முடித்திருந்தான். அவனிற்கு தங்களது சொத்தில் சம உரிமை வழங்கியதோடு,அவனது பாண்டியன் குடும்பத்திலும் அவன் இழந்த சொத்துக்களையும் உறவையும் மீட்டு தரும் வகையில் அங்கும் சில தந்திரங்கள் புரிந்து அவனிற்கான மரியாதையையும் ஈட்டியிருந்ததை கேள்வியுற்ற அனைவரும் ஒவ்வொரு வகையில் அதிர்ந்தனர். அமர்வேலோ தலையில் இடி இறங்கிய உணர்வோடு பலத்த அதிர்வில் உறைந்திருக்க,யமுனா தேவியும் அசோகாவும் ஆதியை பற்றிய சிலாகிப்பில் அதிர,காமினியோ இன்பமாய் அதிர,வி.கே நண்பனை பற்றிய பெருமிதத்தில் திளைத்திருக்க,அதிருனோ உலகத்தையே தன் காலடியில் கொண்டு வந்ததை […] - [காதல் மந்திரம் 32](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-32/): அசோகாவின் விழிகள் அமர்வேலை வெறித்துப் பார்த்தது. இதுவரை தன்னை மரியாதையாய் நோக்கிய சகோதரனின் பார்வையில் இருந்த வித்தியாசம் உணர்ந்த அமர்வேலோ படபடப்புடன் தலைகுனிந்தார். யமுனா தேவியும் அசோகாவின் முகத்திலிருந்த உணர்வுகளை வைத்தே அந்த காகிதத்தில் ‘என்ன இருக்கக்கூடும்’ என்பதை ஓரளவு கணித்து,அவரும் திகைப்பில் ஆழ்ந்தார். மெய்யறிந்து உடைந்துப்போயிருந்த காமினியை தன் தோளோடு அணைத்து ஆறுதலளித்தான் அதிருன். அந்த ஒரு பாந்தமான செயலே ‘நான் என்றும் உனது தமையன் மட்டுமே’ என பாவையவளிற்கு எடுத்துரைக்க, இதழ்கள் துடிக்க தமையனை ஏறிட்டவளின் முகத்தில் அப்போதும் நம்ப முடியாத சிறிது தவிப்பு மிச்சமிருந்தது. அவளின் கலக்கத்தை அறிந்து அவளின் தோளில் ஒரு அழுத்தம் கொடுத்து பெண்ணவளின் துயர் துடைத்தான் அதிருன். அச்சமயம் அசோகா “அ..தி..ரு..ன்…” என நாதழுதழுக்க அழைத்து அவனை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, அவற்றை உணர்ந்து வெடுக்கென்று திரும்பியவன் “ஐ டோன்ட் வான்ட் எனி எமோஷனல் ட்ராமா” என அவரை கனல் பார்வையாலே தடுத்து […] - [காதல் மந்திரம் 31](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-31/): ஆதி துப்பாக்கியை அதிருனின் நெற்றியில் வைக்க,அவனோ கிஞ்சித்தும் பயமின்றி நெஞ்சை நிமிர்த்தி விறைப்புடன் நின்றிருந்தான். அவனை தவிர மீதமுள்ள அனைவரின் முகத்திலும் திகில் சூழ்ந்திருக்க,அதிருனின் விழிகளோ ஆதியின் முகத்தை கூர்மையாக துளைத்திருந்தது. ஆதியின் இதழ்கள் எகத்தாளமாக வளைய ‘அவ்வளவு திமிரா?’ என புருவம் உயர்த்தியவனின் விரல்கள் துப்பாக்கியின் இயக்கியை அழுத்தியது. அதுவரை பீதியில் உறைந்திருந்த காமினி தமையனை காப்பதற்கு முன் வரவும், அதற்கு முன்பே அதீத விசையுடன் ரவை துப்பாக்கியிருந்து வெளிவந்திருந்தது. “நோ” என்று வீறிட்ட காமினி இமைகள் மூடி தன்னிரு கரங்களால் செவியை பொத்திக்கொள்ள,மீதமுள்ள அனைவரும் ஸ்தம்பித்துப்போயினர். ஆனால் அனைவரையும் பதைபதைக்க வைத்த குண்டோ அதிருனின் நெற்றியை துளைக்காமல் அவனின் தலைக்கு மேல் சென்று ஒரு அலங்கார ஜாடியை சுட்டு வீழ்த்தியிருந்தது. அதிருன் அப்போதும் அசராமல் இருப்பதை பார்த்து வியந்த ஆதி “ப்ராவோ” என இதழை பிதுக்கி எதிரில் இருந்தவனை மெச்ச, “தேங்க்யூ…அது என் கூடவே பிறந்தது” என அவனிற்கு சற்றும் […] - [காதல் மந்திரம் 30](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-30/): சூரியன் தன் ஆதிக்கத்தை பூமியில் செலுத்திய சில மணி நேரங்களுக்கு பிறகே திடுக்கிட்டு கண்விழித்தாள் காமினி. வெடுக்கென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தவளிற்கு நேற்று நடந்த  நிகழ்வுகள் யாவும் திரைப்பட காட்சிகளாய் ஓடி,அவளை சினத்தின் உச்சியிற்கு கொண்டு சென்றது. அதனால் தன் கணவனை வார்த்தைகளால் வேரோடு சாய்க்க வேண்டும் என்று உள்ளம் கொதித்தாலும்,இம்முறை சற்றே சுதாரித்து ‘அவனோடு பேசி நேரத்தை செலவளிப்பதை விட இங்கிருந்து செல்வதே உசிதம்’ என்றெண்ணி அவசரமாக குளித்து தயாராகி வெளி வந்தாள். அவள் குளியலறையிலிருந்து வந்தப்போது,ஆதி தன்னுடைய அலங்கார மேசையின் முன்பு நின்று அலுவலகம் செல்வதற்கு ஆயுத்தமாகிக்கொண்டிருந்தான். ஆடவனின் முதுகை வெறித்த காமினியோ அவனோடு நின்று விவாதம் செய்வதற்கு துளியும் விருப்பமின்றி தலையை சிலுப்பிக்கொண்டு தன் பெட்டியை நோக்கி நடந்தாள். அவளின் கண்ணாளனோ மனையாளின் செய்கையை கண்ணாடியின் வழியே இமைகள் இடுங்க பார்த்திருக்க, தன்னை ஊசியாய் குத்தும் பார்வையின் சாராம்சம் அறிந்தாலும்,கணவனின் துரோகமும் விரோதமிக்க பாவச்செயலும் அவனை ஏறிட முடியாத […] - [காதல் மந்திரம் 29](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-29/): கடத்தலுக்கு பின்பு தனது கணவனின் திட்டம் இருந்ததை விட,யாமினியின் வாழ்வில் நடந்த கோர சம்பவத்திற்கும் தனது மணாளனே காரணம் என்பதை அறிந்தவளிற்கு அவனின் மீது அளவுகடந்த வெறுப்பு உருவாகியது. இளங்கோவும் யாமினியும் திருமணம் செய்துக்கொண்டு அவளின் முன்பு வந்தப்போது,அவர்களது துரோகம் கண்டு ஒரேயடியாக இளங்கோவை உதறித்தள்ள முடிந்தவளால் அவ்வளவு எளிதில் ‘நீயும் வேண்டாம்…நீ கொடுத்த வாழ்வும் வேண்டாம்’ என முகத்தில் காறி உமிழாத குறையாக ஆதியை விட்டு விலகிச்செல்ல இயலவில்லை. ‘ஏன் காமினி?அப்படியென்ன அவன் உனக்கு ஸ்பெஷல்?’ என ஆழ்ந்து யோசிக்கையில் அவளிற்கு கிடைத்த விடையில் பாவையவளால் மெய்சிலிர்த்து உச்சிக்குளிர முடியவில்லை. ‘மஞ்சள் கயிறு மேஜிக் என்பது போல் திருமணம் செய்துக்கொண்டதினால் அவனின் மீது ஒரேடியாக காதல் பொங்கி விட்டதா?’ என மனசாட்சி இவளை எகத்தாளம் செய்ய,அதற்கு அவளிடமிருந்து நிச்சயம் ‘இல்லை’ என்ற ஆழமான பதில் கிடைத்தது. அவனை கண்ட முதல் பார்வையிலே ஆடவனின் மீது சிறு சலனம் ஏற்பட்டதினாலே ஒவ்வொரு முறையும் […] - [காதல் மந்திரம் 28](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-28/): திடீரென்று பாண்டியன் குடும்பத்திலுள்ள அனைவரின் தலையிலும் இடி விழுந்தாற் போல் அந்த குடும்பத்தின் இளைய ஆண் வாரிசான ருத்வேந்திர பாண்டியனும் காமினியும் மர்ம நபர் சிலரால் கடத்தப்படுத்திருந்தார்கள். ‘ஏன்?எதற்கு?எதனால்?’ என அனைவரும் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களின் அலைப்பேசிக்கு ஒரு முகமறியா ஆசாமியிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மூலம் வந்த நிபந்தனையை கேட்டவர்கள்,அனைவருக்கும் பேரதிர்ச்சியானது. ‘பாண்டியன் குடும்பத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையொப்பமும் ஒரு வெற்று பத்திரத்தில் இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையே அது! ‘பிள்ளை செல்வமா?மாட மாளிகையா?’ என்று வருகையில் அனைவருக்கும் பிள்ளை செல்வமே முதன்மையாக இருந்தது. ஆயினும்,ஒரே நேரத்தில் இத்துணை வருடங்களாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை ஒரேடியாக துறக்க வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்லவே?? மேலும்,காவல் துறையை நாடி இவ்விஷயத்தை கொண்டு சென்றால்,இருவரின் உயிரும் பறிக்கப்படும் என்ற மிரட்டல் வர,அவர்களது சர்வ அங்கமும் ஒடுங்கிப்போனது. அச்சமயம் அவர்களில் ஒருவருக்கும் அதிருனிடம் உதவிக்கோர வேண்டும் என்ற சிந்தனை […] - [காதல் மந்திரம் 27](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-27/): காமினிக்கோ சில நிமிடங்கள் ‘இதற்கு என்ன முடிவெடுப்பது?’ என்ற சிந்தனை மூளையெங்கும் ஆட்கொண்டிருந்தது. தமையனிடம் உதவிக்கோரலாம் என அலைப்பேசியின் வழியாக முயற்சித்து தோற்றாள். யாமினியை இத்தகைய நிலையில் சிரமப்படுத்த வேண்டாம் என அவளாகவே அந்த யோசனையை கைவிட்டாள். இன்னும் இருபது நிமிடங்களில் விழா தொடங்கிவிட இருக்கிறது என்ற தகவல் வந்தவுடன், காமினிக்கோ அப்போதும் இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டாளரான தனது கணவனின் ஆதரவை நாட வேண்டும் என்ற எண்ணமே அவளிற்கு சிறிதும் தோன்றவில்லை. கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருவரும் பின்னிப்பிணைந்த உறவாகினும்,இரு எதிர் துருவங்களாய் தொழிலில் நின்றிருக்கும் வேளையில் அவனின் உதவியை ஏற்பது,தன்னுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்று அவளாகவே ஒரு முடிவெடுத்து பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆதியும் மனையாளின் குடும்ப நிறுவனத்தில் நிகழ்ந்த குளறுபடிகளை அறிந்தும் அவளிற்கு உதவி செய்வதற்கு முன் வரவில்லை. கண்ணாட்டியின் நிலையறிந்து ஆதரவு கரம் நீட்டினால் மற்றவரின் உழைப்பிற்கு அவன் செய்யும் துரோகம் என்பதால் விலகியே இருந்தான். ஆனால் […] - [காதல் மந்திரம் 26](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-26/): காமினியோ தன்னுடைய கேள்விக்கு தமையனின் முகம் கசங்கியிருந்த விதமே,அவளை பெரிதாக திடுக்கிட செய்தது. சட்டென்று அவளின் மனமோ ‘காமினி… அண்ணா செய்யற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்னு நினைக்கிற நீ…இதுக்கு பின்னாடியும் ஏன் ஏதோ ஒரு சொல்ல முடியாத காரணம் இருக்கக்கூடாதுன்னு நினைக்கலை…இது தான் உன் அண்ணனை நீ மதிக்கிற லட்சணமா?’ என தன்னை தானே வறுத்தெடுத்தவளிற்கு அவனின் மீதிருந்த ஒட்டுமொத்த கோபமும் வெறுப்பும் இப்போது முழுமையாய் விலகியோடியிருந்தது. அதனால் “ஐ யம் சாரி அண்ணா” என உளமாற மன்னிப்பு கேட்ட தங்கையை எந்த வித உணர்ச்சியுமின்றி பார்த்த அதிருன் அவளிற்கு வெறும் தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தான். அதுவே அவளிற்கு இதயத்தில் ஒரு வலியை கொடுக்க,தன் தவறை உணர்ந்து குற்றவுணர்ச்சியுடன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். அதிருனிற்கோ அவனது குடும்பத்தில் உள்ள ஒருவரும் அவனது மனதிலிருந்த காயத்தை ஆழ்ந்து பார்க்காமல் மேலோட்டமாகவே தன்னுடைய செயலை வைத்து எடைப்போடுவதை அறிந்தவனிற்கு,அது மிகுந்த […] - [காதல் மந்திரம் 25](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-25/): நேற்று காமினியை தங்கள் வீட்டில் பார்த்த இளங்கோ முதலில் அதிர்ந்தாலும்,அவளோ முன்பு போல் இல்லையென்றாலும் சகஜமாக தன்னிடம் பேசியதே அவனிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவளோ ‘யாமினியிற்கு சிறிது உடல்நிலை சரியில்லை பார்த்துக்கொள்ளுங்கள்’ என கூறிவிட்டு புறப்பட்டவளின் கழுத்திலிருந்த மாங்கல்யம் உறுத்த,அவனிற்கு குற்றவுணர்வு அதிகரித்தது. அதனால் அவளின் திருமணம் பற்றி விசாரிக்க,ஆதியுடனான தன் திருமணத்தை மேலோட்டமாக தெரிவித்து விடைப்பெற்றிருந்தாள். அவற்றை கேட்டதிலிருந்து அவனது மூளை வண்டாய் குடைந்து ஆதியின் மீது புதிதாக சந்தேகத்தை துளிர் விட வைத்திருந்தன. ஏனெனில் திருமணத்திற்கு முன்பு ஆதியை தனிமையில் சந்தித்த யாமினியும் இளங்கோவும் ‘தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும்…இந்த திருமணத்தை நிறுத்திவிடுங்கள்’ என்றும் தெரிவித்திருந்தார்கள். ஆதியும் அப்போது அதற்கு எந்த வித எதிர்வினையும் புரியவில்லை என்றாலும்,இரண்டு நாட்கள் கழித்து யாமினிக்கு அழைத்து ‘இந்த திருமண ஏற்பாடுகள் தடைப்பட வேண்டாம்…நீயும் இளங்கோவும் திருமணம் செய்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…நான் திருமணம் செய்துக்கொள்ள வேறொரு பெண்ணை ஏற்பாடு செய்துவிட்டேன்’ என நல்லவன் […] - [காதல் மந்திரம் 24](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-24/): இரவு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த ஆதியோ இன்றைய சம்பவம் எதுவும் மனதை பாதிக்காதவாறு சாவாகாசமாக தன்னறையை நோக்கி நடந்தான். அவனது மனையாளோ தங்கள் அறைக்குள் நுழையாமல் வெளியே இருந்த நீள்விரிக்கையில் கன்னத்தில் கரம் வைத்து அமர்ந்து தனது தமக்கையின் வாழ்வை குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தாள். அவளை அவ்விடத்தில் கண்டு இமைகள் இடுங்கியவன் “காமினி” என அழைத்தான். மனையாளை கண்டவுடன் அவன் நெஞ்சிலிருந்த வஞ்சம் முழுவதும் காற்றடித்த பஞ்சாய் பறந்துப்போன மாயம் அறியாமல் அவனது முகம் முழுவதும் இளக்கத்தை ஆட்கொண்டிருந்தது. பெண்ணவளோ கணவனின் அழைப்பை அறியாமல் தனது சிந்தையிழந்து வேறொரு உலகத்தில் பயணிப்பது போல் அந்நிலை மாறாமல் சிலையாய் சமைந்திருந்தாள். இம்முறை “காமினி” என சற்றே அழுத்தமான குரலில் அவளை அழைத்தான். அவனது உரத்த குரல் அவளின் செவியை அடைந்ததற்கு அடையாளமாய் “ஹான்” என விழித்து கணவனை ஏறிட்டாள். அவனோ பெண்ணவளை ஊடுருவும் விழிகளால் துளைத்தவாறே ஒற்றை விரல் நீட்டி ‘இங்கே வா’ என செய்கை […] - [காதல் மந்திரம் 23](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-23/): சில நிமிடங்கள் சிரத்தை தன்னிரு கரங்களால் தாங்கி அமர்ந்திருந்த காமினிக்கு இப்போது உலகமே தட்டாமாலை சுற்றியது. அதன் பாரம் தாங்காமல் “அம்மு நான் என்னவோ நீயும் இளங்கோவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நினைச்சேன்…இப்போ பார்த்தால் அப்படி இல்லை போலவே…என்ன நடந்தது?இப்போவாது உன் மனசை அழுத்திட்டு இருக்கிற எல்லாத்தையும் என்கிட்ட சொல்லு” என தலையை உயர்த்தியவளின் குரல் பெரும் துயரத்தோடு வெளிவந்தது‌. யாமினியும் தங்கையின் முகத்தை நோக்கி விரக்தியான புன்னகை ஒன்றை சிந்தியவள்,இத்தனை நாட்களாய் ஒளித்து வைத்திருந்த இரகசியங்கள் அனைத்தும் மூச்சடைக்க வைக்க,இன்று அதனை  ஒருவரிடமாவது பகிர்ந்துகொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நேராக நிமிர்ந்து அமர்ந்தவளின் மேனியோ சோர்வுற்றிருந்தது. காமினிக்கு அனைத்தையும் தெரிந்துக்கொள்ளும் பதைபதைப்பு இருந்தாலும்,அவளின் பலகீனமான நிலையை கண்டு “யாமி நீ ரொம்ப வீக்கா இருக்க…முதல்ல ஹாஸ்பெட்டல் போகலாம்…வா” என்றவாறு அவளை மருத்துவமனை அழைத்து சென்றாள். ‘இது இரண்டு பேருக்கும் தெரியாமல் நடந்ததுனு சொல்லறாள்?இளங்கோவும் சரி…யாமினியும் சரி ஒழுக்கமானவங்க…பிறகு எப்படி இரண்டு பேரும் இதில் […] - [காதல் மந்திரம் 22](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-22/): இளங்கோ ஓட்டி வந்த யாமினியின் மகிழுந்து “பாண்டியன் டெக்ஸ்டைல்” நிறுவனத்தின் முன்பு நின்றது. யாமினியோ மிகுந்த சோர்வுடன் “இளங்கோ நான் வரேன்” என வாகனத்திலிருந்து கீழே இறங்க முற்பட, அவளவனோ “யாமினி நீ ரொம்ப வீக்கா இருக்க மாதிரி இருக்கு…ஹாஸ்பெட்டல் போகலாம்னு கூப்பிட்டால் கூட வரமாட்டிக்கிற?அட்லீஸ்ட் இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஆபிஸ் போகலாமே?” என்றான் கவலை தொனிக்கும் குரலில். யாமினி “நோ இளங்கோ” என தலையசைத்து மறுத்தவள், “கவர்மெண்ட் ஃப்ராஜெக்ட் ஒண்ணு இந்த மாசத்திற்குள் முடிச்சு கொடுக்கணும்…ஏற்கனவே ஒரு வாரம் எந்த வேலையும் நடக்கலை…காமினி என் மேல் உள்ள கோபத்தில் ஆபிஸ் வரது சந்தேகம்…சோ எனக்கு வேற வழியில்லை இளங்கோ” என உரைக்க, அவளின் காரணி புரிந்ததால் பெருமூச்சுடன் “இட்ஸ் ஓகே யாமினி…ஈவினிங் வேலை முடிச்சவுடனே எனக்கு கால் பண்ணு.. நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்…அதுக்கு இடையில் உடம்பு முடியலைனா மறைக்காமல் என்னை கூப்பிடு” என […] - [காதல் மந்திரம் 21](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-21/): யமுனா தேவியோ ‘கணவன் சொல் மிக்க மந்திரமில்லை’ என்று அவரின் போதனைகளை பின்பற்றும் ரகம் என்றாலும்,அவருக்கோ மருமகளின் செயலில் பெரும் அதிர்ச்சியை மீறி ‘நல்லா வேணும் இந்த மனுசனுக்கு’ என உள்ளுக்குள் ஒரு அற்ப சந்தோஷம் பரவியது. அதனால் சிறியவளை தடுக்க நினைக்காமல் ஒரு நமுட்டு சிரிப்புடன் முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டவருக்கு,அடி வாங்கிய கன்னத்தில் பனிக்கட்டியை வைத்தது போல் குளுகுளுவென்று இருந்தது. அசோகா இதுவரை அவரது தமையனை வேறு யாரும் எதிர்த்து பேசி பார்த்திராததால் காமினியின் செயலை வாயை பிளந்து தடுக்க வேண்டும் என்ற எண்ணமின்றி இமை சிமிட்டாமல் பார்த்திருந்தார். ஆதி சில முறைகள் தந்தையின் சொற்களை மீறி நடந்திருந்தாலும்,அதில் வரம்பு மீறிய வார்த்தைகளை உபயோகித்த தில்லை. ஆனால் அவனின் மனையாளோ செயலால் மட்டுமின்றி வசவுகளாலும் அமர்வேல் என்ற மகா மட்டமான மனிதரை போட்டு தாக்குவதை கண்டவருக்கு ‘சபாஷ்…சரியான போட்டி’ என்ற குதூகலமும் ‘இந்த வீட்டில் இவரை எதிர்ப்பதற்கும் ஒரு ஆள் வந்தாச்சே’‌ […] - [காதல் மந்திரம் 20](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-20/): தன்னுள் மயங்கி நின்றிருந்த மனையாளை கண்டு மந்தகாச புன்னகை ஒன்றை சிந்திய ஆதி,பெண்ணவளின் இடையில் பதிந்திருந்த கரத்தில் சற்றே அழுத்தம் கொடுத்து முன்னேற தொடங்கினான். அதுவரை வேறொரு மாயலோகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தவளிற்கு ஆடவனின் எல்லை மீறிய தொடுகையில் பெண்டியருக்கே உண்டான எச்சரிக்கை உணர்வு தலைதூக்க,பட்டென்று இமை திறந்து நடப்பிற்கு வந்தவளின் மேனி மெல்லியதாக நடுங்கியது. கூடவே தன்னில் நிலைப்பெற்றிருந்த ஆளுமையின் ஆதிக்கத்தில் மீண்டும் துவள ஆரம்பித்த சரீரத்தை கைமுஷ்டியை மடக்கி அடக்கியவள் “கே…கே…” என அவளிற்கே கேட்காத குரலில் தடுத்து நிறுத்த முனைந்தாள். ஆடவனிற்கோ பெண்ணவளின் கிசுகிசுப்பான குரல் அவனது தாப உணர்ச்சிகளை மேலும் தூண்ட,அப்போதும் அவளின் செவி மடலை நாவால் வருடிவாறு “நாட் கே…கே…ஏ.கே” என கிறக்கத்துடன் உரைத்து உஷ்ணத்தோடு முத்தமொன்றை வழங்கினான். தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள முனைந்தவளிற்கு தனது மணாளனின் இந்த செய்கை தேகம் முழுவதும் ஒரு வெப்பத்தை பரவிட செய்து உணர்ச்சி பிழம்புகளால் தேகம் கிளர்ந்தெழ செய்ய தலையை […] - [காதல் மந்திரம் 19](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-19/): திருமண மண்டபத்திலிருந்து பெண் பிள்ளைகள் இருவரும் அவரவர் புகுந்த வீட்டிற்கு தங்கள் பெற்றோரின் துணையின்றி தனித்து செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியது. யாமினியின் செய்கையினால் உள்ளம் நொறுங்கியிருந்தவர்களை தொந்தரவு செய்ய விரும்பாத யமுனா தேவி “இந்த அவசர திருமணத்தினால் உங்க பெண்ணோடு வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு நீங்க கவலைப்படவேண்டாம்…புகுந்த வீட்டில் உங்க பெண்ணிற்கு எந்த குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளவது என்னுடைய கடமை” என காயம்பட்டிருக்கும் நெஞ்சிற்குள் மயிலிறகால் தடவியது போல் வார்த்தையால் ஆறுதலளித்தவர், “நீங்க இதுப்போல் கவலையில் இருக்கும் போது விட்டு செல்லக்கூடாது தான்…ஆனால் நல்ல நேரத்திற்குள் பொண்ணு மாப்பிள்ளையை முதன் முதலாக வீட்டிக்கு கூட்டிட்டு போய் விளக்கு ஏத்தணும்…அதனால் நாங்க காமினியை கூட்டிட்டு கிளம்பறோம்” என தயக்கத்துடன் உரைத்ததற்கு பிறகே சூழ்நிலையை உணர்ந்தார்கள் பாண்டியன் குடும்பத்தினர். ரத்தினவேல் தொண்டையை செருமி “சம்மந்திம்மா நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க…ஆனால் எங்க குடும்பத்தில் இருந்து இரண்டு பேரு கூட வந்து எங்க பொண்ணை உங்க […] - [காதல் மந்திரம் 18](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-18/): காமினியின் கரம் பற்றி அக்னியை ஏழு முறை வலம் வந்ததற்கு பிறகே பெரியவர்கள் அனைவரும் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்தனர். பாண்டியன் குடும்பத்து உறப்பினர்களுக்கு காமினி ஆதியை திருமணம் செய்துக்கொண்டதில் துளியும் விருப்பமில்லை. சற்று நேரத்திற்கு முன்பு,அமர்வேல் மொழிந்த இழிவான சொற்களின் தாக்கம்,இப்போதும் அவர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. அதனால் யாமினி திரும்ப கிடைத்தாலும்,இந்த குடும்பத்தில் மகளை ஒரு போதும் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தவர்களுக்கு சிறிதளவும் மறுப்பு கூற வாய்ப்பளிக்காமல் அதிரடியாக காமினியை புயலாய் மாறி அபகரித்திருந்தான் ஆதித்த கரிகாலன். ஆனால் யமுனா தேவியிற்கோ தனக்கு மிகவும் பிடித்த பெண் மருமகளாக வந்ததில் எல்லையில்லாத ஆனந்தம்!! அசோகாவோ தமையனின் கொடூர குணமறிந்து,புத்தம் புதிய பூவாய் மலர்ந்திருக்கும் பூவையவளிற்கு நேரவிருக்கும் ஆபத்தை எண்ணி இப்பொழுதே கலக்கம் கொண்டார். நடந்த விபரீதம் கண்டு மனமுடைந்த சுந்தரவேல் ‘தன்‌ மகளின் வாழ்வு நாசமாகிவிட்டது’ என உயிரற்ற பார்வையுடன் சிலையாய் சமைந்து நின்றார். […] - [காதல் மந்திரம் 17](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-17/): “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்றுகடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப யாரிருவர் வாழ்வில் ஒன்றாக இணைய வேண்டும் என்பதை இறைவனே முடிவு செய்கிறார். அதற்கு ஏற்ப ஆதி காமினியின் சங்கு கழுத்தில் மங்கல நாணை பூட்டி இல்லப்பிராட்டியாக ஏற்றுக்கொண்ட நிலையில்,அதேபோல் இளங்கோவும் யாமினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் வாழ்க்கை துணைவியாக்கி கொண்டான். இறைவனின் சாட்சியாய் உற்றார்கள் யாவரின் துணையுமின்றி,நடந்தேறிய இந்த திருமணத்தில் அந்த புதுமண தம்பதியினருக்கு சிறிதும் பிடித்தமில்லை. ஆனால்,விதி அவர்களை ஒன்று சேர்க்கும் முடிவை எடுத்திருந்தது. காமினியின் காதல் தோல்வி நிகழ்ந்தேறிய அதே வேளையில் யாமினியின் அலைப்பேசிக்கு வந்த புகைப்படமே இந்த திருமணத்தின் அடிப்படை! அதற்கு முன்பாக இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என கடுகளவும் நினைத்ததில்லை‌. இருவரும் இந்த நம்பிக்கையான தீர்மானத்திற்கு வருவதற்குள் அவர்களுக்குள் பெரும் பூகம்பமும் சூறாவளியும் ஒரு சேர நிகழ்ந்தது என்பதே மெய்!! […] - [காதல் மந்திரம் 16](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-16/): காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் ஆரம்பிக்கும் என்ற நிலையில் ஆறு மணியிலிருந்தே சென்னையில் உள்ள ஒரு பிரபல மண்டபம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மண்டபம் முழுவதும் நிரம்பியிருந்த ஆடம்பர அலங்காரங்கள்,இரண்டு குடும்பங்களின் செல்ல செழிப்பை பறைசாற்றும் படியாக பிரம்மாண்டமாக இருந்தது‌. மேலும்,திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை வரவேற்கும் பொறுப்பையும் திருமண தொடர்பான வேலைகளை செய்யும் கடமையையும் மணமக்களின் வீட்டினரே ஏற்று திறம்பட செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் சந்திராயினியும் அமர்வேல் சக்கரவர்த்தியும் மற்றவர் இல்ல திருமணத்திற்கு விருந்தினராக வந்தது போல் முன்னிருக்கையில் கால் மேல் கால் போட்டு தங்களுக்கே உரிய ஆணவத்துடன் அமர்ந்து,அனைத்தையும் அலட்சியமாய் பார்த்திருந்தார்கள். காமினியோ இலேசான ஒப்பனையுடன் தங்க நிறத்தில் புடவை அணிந்து கண்ணில் ஒரு சோகம் இழையோட,தனது தாயிற்கு உதவி புரிந்துக்கொண்டிருந்தாள். அவள் இங்கு மண்டபத்திற்கு வந்ததற்கு பிறகே தமது தமக்கைகாக பார்த்திருந்த மணாளன் ஆதித்த கரிகாலன் என்ற விடயமே அவளிற்கு தெரிய வந்தது. அவனிற்கு ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து வருவதற்கு அவளின் […] - [காதல் மந்திரம் 15](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-15/): சுதாகர் கடத்தி வைக்கப்பட்ட இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருக்க “ஹலோ யாருங்க என்னை கடத்தி வைச்சிருக்கிறது?என்னை கடத்தி வைச்சு மிரட்டற அளவு நானெல்லாம் ஒர்த் பிஸூ இல்லீங்க…சாதாரண ஒரு கம்பெனியோடு பி.ஏ…அதிலும் எங்க எம்.டி எனக்கு சம்பளம் கொடுத்து பத்து மாசமாச்சுங்க…பல்கா ஏதாவது தேறும்னு நினைச்சு கடத்தி வைச்சிருந்தா ஏமாந்து தான் போவீங்க…நான் ஒரு வெட்டி முண்டம் வீணாப்போன தண்டம்…புரிஞ்சுக்கோங்க…கடத்தல் சார்…பிளீஸ்…பிளீஸ்…இரக்கம் காட்டுங்க” என அழுதுவடியும் குரலில் பயத்தில் புலம்பிக்கொண்டிருக்க, சில நிமிடங்கள் அந்த அறையில் எதிர் ஒலி எதுவுமின்றி பெரும் நிசப்தமாகவே இருந்தது. தன்னுடைய புலம்பலுக்கு எந்தவொரு எதிர்வினையும் இல்லை என்றவுடன், சுதாகர் சோர்ந்து போய் ‘அடப்போங்கடா’ என முனகிய நிலையில் “வீரா லைட்ஸ் ஆன்” என கணீர் குரலொன்று அறையெங்கும் எதிரொலித்தது. சுதாகரோ தனக்கு மிகவும் பரிச்சயமான குரல் கேட்டு ‘இவங்களா?’ என விலுக்கென்று நிமிர்ந்தவன்,திடுமென அறையினுள் ஊடுருவிய ஒளியால் கண்கள் கூச ஒருமுறை இமை மூடி திறந்தான். அதற்கு […] - [காதல் மந்திரம் 14](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-14/): பேதை பெண்ணவளும் முசிந்த இதயத்தின் காயத்தை சரிசெய்ய அவனின் தோள் சாய்ந்ததின் நிமித்தம் அறியாமல் குழப்பமான மனநிலையில்,அவன் மிக துல்லியமாக தன்னிருப்பிடத்தில் கொண்டு வந்து சேர்த்ததின் பின்னணியில் இருக்கும் இரகசியத்தைப் பற்றிய சிந்தனையுடனே அனைவரையும் கடந்து தன் அறைக்கு வந்து சேர்ந்தாள். சகோதரிகள் இருவரும் சேர்ந்திருக்கும் அறையை நெருங்கியதற்கு பிறகே யாமினியின் மீதிருந்த சினமும் இளங்கோவின் நிராகரிப்பினால் உண்டான வருத்தமும் சீற்றத்தோடு பொங்கி எழும் ஆழிபேரலையின் ஆவேசத்தோடு முட்டி மோதிக்கொண்டு வெளிவந்தது. ஆதியின் அருகில் புகைந்து புதைந்துப்போயிருந்த அனைத்தும் அவனை விட்டு விலகியவுடன் மீண்டும் மேலெழுந்து வந்து பெண்ணவளின் இதயத்தை அழுத்தியது. ஆயினும்,முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இறுகிய முகத்துடனே அவ்வறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். வெளியே சென்ற தனது தங்கை வெகு நேரமாக திரும்பி வராததால்,நேசம் தந்த வலியில் விபரீத முடிவை தேடி சென்றுவிட்டாளோ என யாமினியின் உள்ளம் தவித்தது. கணங்கள் கடந்துக்கொண்டிருந்த நிலையில் அவளை காணாமல் தவித்த […] - [காதல் மந்திரம் 13](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): காமினி ஒல்லியான உடல்வாகு கொண்டவளாகினும்,ஒரு ஆடவனின் பலத்திற்கு முன்பு அவ்வளவு எளிதாக தோற்க கூடியவளில்லை. ஆனால் தனக்கு நேர்ந்த தோல்வியின் வலி அவளின் மனோத்திடத்தை மிகவும் பலவீனப்படுத்திய நிலையில் மனதளவில் சோர்ந்து இருந்தவள்,மிக எளிதாக ஆடவனின் கைப்பிடிக்குள் வந்துவிட்டாள். ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல் ஆடவனிற்கோ அவளது கரங்களில் மின்னிய காப்பு ஒன்றே பிரதானமாக இருக்க,தன் மடியில் வந்து விழுந்த பூமகளை கண்டதற்கு பிறகே தன்னுடைய தவறு புரிந்தது. ‘ஷிட்’ என பல்லை கடித்து வலது கரம் கொண்டு நெற்றியை நீவிய ஆதியின் விழிகள் அவசரமாக தங்களை யாவரும் பார்த்துவிட்டனாரா என சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்தது. அவ்விடத்தில் யாவரும் இல்லை என்றானதற்கு பிறகே பெருமூச்சை வெளியிட்டவன்,மகிழுந்தின் கதவை சப்தம் செய்யாதவாறு நிதானமாக  சாற்றினான். சூழ்நிலை அவனது கட்டுப்பட்டிற்குள் வந்தவுடன்,ஆதியின் விழிகள் பெண்ணவளை நோக்கி குனிந்தது. காளையனின் இந்த அதிரடியை சற்றும் எதிர்ப்பாராத காரிகையின் நெஞ்சமோ சில நிமிடங்கள் தன் துடிப்பை நிறுத்திவிட்டது. […] - [காதல் மந்திரம் 12](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): தங்களது வீட்டின் பிரம்மாண்ட தேக்கு மரத்தாலான படிக்கட்டின் வழியாக நீல நிற சட்டை மற்றும் சாம்பல் வர்ண கால்சராய் அணிந்து ஆறடி உயரத்தில் ஆண்மையின் இலக்கணமாய் கம்பீரமாக இறங்கி வந்துக்கொண்டிருந்த தனது மகனை பூரிப்புடன் பார்த்திருந்தார் ஆதித்த கரிகாலனின் தாய் யமுனா தேவி. அவனை கண்டு அருகே வந்தவர் “கண்ணா சாப்பாடு ரெடியா இருக்கு…வாப்பா சாப்பிட்டு போகலாம்” என வாஞ்சையோடு அழைக்க, விழிகளால் தாயினை கூர்ந்தவாறே,கைகடிகாரத்தில் நேரத்தை கணக்கிட்டவனின் இமையோரம் ஒரு நொடி இடுங்கி விரிந்தது. பின்பு தாயிடம் எதுவும் உரைக்காமல் மௌனமாக,அவரை கடந்து உணவு கூடத்தை நோக்கி நடந்தான். தன் கரங்களை நீரினால் சுத்தம் செய்துக்கொண்டு உணவு மேசையின் முன்பு அமர்ந்தவனின் மொழியில்லாத செய்கையே,உணவு பரிமாறுவதற்கான அனுமதியாக ஏற்ற யமுனா தேவி ஒரு பெருமூச்சோடு அவனிற்கான உணவினை தட்டிலிட தொடங்கினார். அவனோ அலைப்பேசியில் ஒரு பார்வை பதித்தவாறே உணவின் சுவை அறியாதவன் போல் தட்டிலிருந்த அனைத்தையும் அள்ளி விழுங்கிக்கொண்டிருந்தான். அதைக்கண்டு சிறிது […] - [காதல் மந்திரம் 11](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): யாமினி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதால் இரு மணமக்கள் வீட்டிலும் வெகு விரைவாக அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற ஆரம்பித்தது. மணப்பெண்ணிற்கு உரிய நகைகளை எடுத்துக்கொண்டு மணமகனின் தாயாரான யமுனா தேவி அவர்கள் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். யமுனா தேவி வேறு யாருமல்ல.இவர்களது குடும்பத்தை கூண்டோடு அழிக்க நினைக்கும் ஆதித்த கரிகாலனின் அன்னையானவள்.அத்தோடு குள்ள நரியின் தந்திரப்புத்தி கொண்ட அமர்வேல் சக்கரவர்த்தியின் இல்லாள். ஆம்,யாமினியென்னும் சித்திர பாவையை மணம் புரிந்து சிறையினுள் தள்ளி கூண்டுக்குள் வேட்டையாட நினைக்கும் அசூர மனம் படைத்த ஆதித்த கரிகாலனே மங்கையின் மணாளன்!! மகனின் வன்மை குணம் அறியாத தாயுள்ளமோ அவனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் திருமணத்திற்கான காரியங்கள் அனைத்தையும் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கிறார். அமர்வேல் சக்கரவர்த்தியின் உதிரத்தில் ஊறிப்போன சோழ சம்பிராஜ்ஜியத்தின் வெறி,பழிவாங்குவதற்காக கூட தன்னுடைய வாரிசு பாண்டியன் குடும்பத்து மகளை மணம் புரிந்துக்கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை. அதற்காகவே யாமினியுடனான ஆதியின் திருமணம் அவசியமா என பலமுறை மகனிடம் தன் பிடித்தமின்மையை […] - [காதல் மந்திரம் 10](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): இளங்கோ சென்னையில் பாண்டியன் குடும்பத்திற்கு உரிமையான பல்பொருள் அங்காடி ஒவ்வொன்றிற்கும் நேரடியாக சென்று பொருட்களின் தரத்தை பற்றிய ஆய்வுகள் நடத்தி,வியாபாரம் நன்முறையில் நடைபெறுகிறதா மற்றும் தொழிலின் வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்கும் சிக்கல்களை அறிந்து நிவர்த்தி செய்வதற்காக சென்றுக்கொண்டிருந்தான். மகன் தங்களை விட்டு பிரிந்து சென்றதற்கு பிறகு ரத்தினவேல் பாண்டியன் முன்பு போல் தொழிலில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளாமல் ‘வந்தால் வரட்டும்…போனால் போகட்டும்…இனி யாருக்காக நான் சேர்த்து வைக்கப்போகிறேன்?’ என விரிக்தியோடு மெத்தனமாகவே இருந்து வருகிறார். அதன்பொருட்டே,இளங்கோ முன் நின்று நிறுவனத்தில் தலையெடுத்து தனியொருவனாக பல்பொருள் அங்காடி வீழ்ச்சியடையாமல் பாதுகாத்து தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் இளங்கோ அவர்கள் இல்லத்து இளவரசனாய் வலம் வந்த அதிருங்கழகோனின் மச்சினன்!! அதாவது,அதிருனனின் இல்லாளான தாரணியின் சகோதரன்!! அவனின் நற்குணங்களையும் திறமையையும் கொண்டே அதிருன் இளங்கோவை தந்தைக்கு தொழிலில் உறுதுணையாக இருப்பதற்காக நியமித்து சென்றிருந்தான். அதிருன் தனது குடும்பத்துடனான பிணைப்பை விடுவித்துக்கொண்டு சென்றாலும்,அவர்களின் மீது அவன் கொண்ட […] - [காதல் மந்திரம் 9](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-9/): தன் இல்லம் வரை வந்துவிட்ட காமினியிற்கு,அதன்பிறகே ஆடவன் இறுக்கி கட்டியதனால் உண்டான காயங்கள் கண்ணில் பட்டது. அவளது வெண்ணிற சரீரத்தில் பட்டையாய் சிவந்து தடித்திருந்த காயங்களை கண்டு திகைத்தவள் ‘ஐய்யோ இப்படியே வீட்டுக்குள்ள போனால் மம்மி விஷயத்தை கேட்டு என்னை தான் கழுவி ஊத்தும்…கும்மா குத்து குத்தினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை…என்ன செய்யறது?’ என படபடவென இமைகள் கொட்டி புலம்பியவள், ‘இதெல்லாம் உனக்கு தேவையா?சைக்கிள்ள போற சைத்தானை எடுத்து மேல விட்ட குறையாய்…இப்போ நொந்து நூடிலிஸாகி நிற்கறது…நீ தான் காமினி’ என கைகளை மடக்கி தனது நெற்றியிலே குத்திக்கொண்டாள். இதழை சுழித்து ‘பாடுப்பாவி பையன்…கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை…ஆளு வளர்ந்த அளவு புத்தியிருக்குதா பாரு‌…தெரியாத பொண்ணுக்கிட்டயே கோபத்தில் இப்படி நடந்துக்கறான்…அப்போ இவனுக்கு வர பொண்டாட்டியெல்லாம் ரொம்ப பாவம்…காட்டு மிராண்டி’ என நன்றாக வசைப்பாடியவாறே,தனது துப்பட்டாவை எடுத்து தலையை சுற்றிப்போட்டு,அதிலிருந்து சிறு துணியை எடுத்து விழிகள் மட்டும் தெரியும் வகையில் கட்டினாள். யாவரின் கண்ணிலும் சிக்காத […] - [காதல் மந்திரம் 8](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-8/): காமினியின் தோளில் உறவாடிய துப்பட்டாவை தன் முரட்டு கரங்களில் பற்றியிழுத்த ஆதியிடம் அவள் சண்டையிட தொடங்க, அதனால் எழுந்த ஆத்திரத்தில் ‘கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணப்போறேன்’ என சீறவும்,அவனது சொற்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் மூளை அவற்றை கிரகிக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது. முன்னால் இருந்த ஓட்டுனருக்குமே முதலாளியின் பேச்சு ஒரு விதமான அச்சத்தை கொடுக்க,கண்ணாடியின் வழியாக மிரட்சியுடன் ஆதியை நோக்கினான். அசூரனின் கண்களில் இருந்த குளிர்க்கண்ணாடி இப்போது சட்டையில் இடம்பெற்றிருந்தது. அத்தோடு ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் தன்னை கனல் கொண்டு எரிப்பதை காணவும், ‘ஐய்யோ’ என மனதிற்குள் அலறி முன்னால் திரும்பிக்கொண்டாலும்,நெஞ்சம் அச்சத்தில் படபடவென அடித்துக்கொண்டது. பாவையவள் நிகழ்காலத்திற்கு வருவதற்குள் அந்த சூழ்நிலையை பயன்படுத்த எண்ணிய கள்வனாய், காமினியை நெருங்கி அவளது துப்பட்டா துணிக்கொண்டு கையையும் வாயையும் சேர்த்து இறுக்கி கட்டிவிட்டான். அவனது தொடுகையினால் உடலில் ஏற்பட்ட மின்சார அதிர்வில் தேகம் சிலிர்த்து நடப்பிற்கு வந்தவளால் தனது கரங்களை சிறிதும் […] - [காதல் மந்திரம் 7](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/): அனலினுள் இட்ட புழுவாய் துடித்தப்படி அவ்விடத்திலிருந்து எப்போது வெளியே செல்வோம் என்ற அவஸ்தையுடன் முகம் இருள இருக்கையில் அமர்ந்திருந்தார் ஒரு நாற்பது வயது ஆடவர். அவருக்கு அருகே உள்ள இருக்கையில் தனது இரையை வேட்டையாடும் வெறியோடு கண்கள் பளபளக்க பேச்சுக்கள் எதுவுமின்றி அமைதியாக தாடையை தடவியப்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் ஆதித்த கரிகாலன். அந்த அறையின் மற்றொரு கோடியில் உள்ள நீள்விரிக்கையில் அமர்ந்து மேலும் சிலர் இவ்விடத்தையே சுவாரசியமாய் நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் யாமினியிடம் தோற்றுப்போன பிரமோத்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களோடு கருப்பு நிற உடையணிந்த ஆஜாபாகுவான முரட்டு தோற்றம் கொண்ட பாதுகாவலர்களும் அறையின் ஒவ்வொரு மூலையிலும் கைகளை பின்னால் கட்டி விறைப்புடன் நின்றிருந்தார்கள். மேசையின் நடுநாயகமாக அமர்ந்திருந்த அமர்வேல் சக்கரவர்த்தி கண்களில் தீ ஜூவாலை எரிய “உன்னை பகடை காயா வைச்சு பாண்டியன் குடும்பத்தை நாங்க அழிக்க நினைத்தா…நீ எங்க விரலாலே எங்க கண்ணை […] - [காதல் மந்திரம் 6](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/): தந்தையிடம் விடைப்பெற்றவள் புகழ்பெற்ற பேரங்காடி ஒன்றின் உள்ளே நுழைந்தாள். கூடவே ‘நான் என்ன சின்ன குழந்தையா?இந்த யாமினி மட்டும் தனியா கார் ஓட்டிட்டு போகலாம்…நான் மட்டும் தனியா போகக்கூடாதாம்…இது என்ன ஆராஜகமா இருக்கு?’ என மனதிற்குள்ளே பொருமினாள். ‘இதுக்குன்னே ஒரு வண்டி வாங்கி தனியா ஸ்டைலா கெத்தா ஓட்டிட்டு வரலை…என் பேரு பாப்பு இல்லை…ப்ச்…பாப்பு கெத்தா இல்லையே…’ என உதட்டை சுழித்தவள், ‘யாரோட உதவியும் இல்லாமல் தனியா கெத்தா வண்டி ஓட்டிட்டு வரலை…என் பேரு காமினி பாண்டியன் இல்லை’ என தனக்குள்ளே முனகி தலையை சிலுப்பிக்கொண்டு நடந்தவளை ஓரிருவர் ‘பைத்தியமா இவ?’ என்பது போல் மிரண்டு பார்த்திருந்தார்கள். அதை அறியாத காமினியோ அலைப்பேசியின் வழியாக தோழியை தொடர்பு கொண்டு “ஹாய் ஷர்மி…நான் மாலுக்கு வந்திட்டேன்…நீ எங்கயிருக்கே?” என கண்களால் அவ்விடம் முழுவதையும் அலசியவாறு வினவினாள். “மினி நாங்க மேலே இரண்டாவது ப்ளோரில் ஸ்டார் பக்ஸ் காப்பி ஷாப்பில் இருக்கோம்…நீ வா” என்று அழைப்பை […] - [காதல் மந்திரம் 5](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/): யாமினி அலுவலகத்திற்கு செல்வதற்காக தயாராகி தனது மகிழுந்தில் ஏறி அமர்ந்தவுடன் வீட்டின் உட்புறமிருந்து அவளது தங்கையான காமினி “அம்மு ஒரு நிமிஷம் நிறுத்து…நானும் வரேன்” என கத்திக்கொண்டே மூச்சிறைக்க ஓடி வருவதை இடதுபுறம் ஏதேச்சையாக திரும்பும் வேளையில் பார்த்தவள்,திறவுக்கோல் கொண்டு ஒளிர செய்திருந்த வண்டியை நிறுத்தினாள். கதவின் கண்ணாடி திரையை கீழிறக்கி தலையை வெளியே நீட்டி “என்ன காமினி?” என கேள்வியாக புருவம் சுருக்கினாள். காமினியிற்கோ வளாகம் முழுவதும் பரந்து விரிந்திருந்த ராட்சத படிக்கட்டுகளைத் தாவி குதித்து கடந்து வந்ததினால் மூச்சிறைத்தது. மார்பு கூடு ஏறி இறங்க தனது கால் முட்டியில் கைவைத்து சற்று நேரம் இளைப்பாறினாள். அவளிடமிருந்து பதிலை எதிர்ப்பார்த்து பொறுமையிழந்த யாமினி தனது கைகடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு “காமினி சீக்கிரம் சொல்லு…எனக்கு பத்து மணிக்கு ஆபிசில் முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு” என அவசரப்படுத்தினாள். காமினியோ தங்களது அறையிலிருந்து வாசலிற்கு இடையே உள்ள ஐந்நூறு அடி தூரத்தை தனது […] - [காதல் மந்திரம் 4](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-4/): இரவு ஏழு மணி அளவில் சென்னையில் மிகப்பெரிய பங்களா ஒன்றினுள் தனது மகிழுந்தை ஓட்டி சென்றாள் யாமினி. வாகனத்தை தங்களது வீட்டின் வாசலில் நிறுத்தியவள் தன்னை நோக்கி ஓடி வந்த வேலையாளிடம் சாவியை நீட்டி “அண்ணா வண்டியை நிறுத்திட்டு சாவியை உள்ள கொடுத்திருங்க” என்றவள் தனக்கே உரிய வேக நடையுடன் படியில் ஏறினாள். அச்சமயம் அவள் சற்றும் எதிர்ப்பாராத வகையில் “அம்முஊஊஊஊ” என வீடே அதிர கத்திய தங்கையின் குரல் கேட்டு திடுக்கிட்ட நொடியில் காமினி ஓடி வந்து தமக்கையை தாவி அணைத்திருந்தாள். சகோதரியின் இந்த அதிரடியில் மிரண்ட யாமினி வலப்புறம் தடுமாறி சரிய,இறுதி நேரத்தில் அருகிலிருந்த கதவின் கைப்பிடியைப் பற்றி தன்னை சமாளித்தாள். “ஊப்” என மூச்சை இழுத்து வெளியிட்டவள்,தங்கையை கோபத்தோடு நோக்கி “அடியே பிசாசு…இப்படியா பேய் மாதிரி கத்துவ?ஒரு நிமிஷம் என் மூச்சே நின்னுடுச்சுடி பக்கி” என சிடுசிடுத்தவாறே காமினியை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தினாள். அதில் கடுப்பான காமினியும் “ஏய் […] - [காதல் மந்திரம் 3](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/): ஐந்து நட்சத்திர விடுதியில் அரசாங்க ஒப்பந்ததிற்காக தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழும ஆரம்பித்திருந்தார்கள். மூன்று வருடங்களுங்கு முன்பு வரை அரசாங்கத்தின் ஒப்பந்தம் முழுவதும் பாண்டியன் குழுமத்திற்கே செல்லும் என்று,அங்கிருந்த அனைவரும் கண் மூடி திறப்பதற்குள் கூறிவிடுவார்கள். ஏனெனில்,எப்போது பாண்டியன் குழுமத்தின் முதல் வாரிசான அதிருங்கழகோன் பாண்டியன் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தானோ,அன்றிலிருந்து அந்த குழுமத்திற்கு என்றுமே சரிவு ஏற்பட்டதில்லை. அவன் குவாரி சம்பந்தமான தொழிலில் காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து அவர்களது வருமானம் பல கோடிகளாக அதிகரித்ததோடு,தொழிலில் அவனிற்கு என்றும் ஏறுமகமே!! ஆனால் அவனிற்கும் பாண்டியன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் தன்னுடைய மனைவி மக்களோடு அனைத்து சொத்துக்களையும் சகோதர சகோதரிகளின் பெயரில் எழுதி வைத்துவிட்டு பிறந்த குடும்பத்தின் உறவை அடியோடு துறந்து கனத்த மனதோடு வெளிநாடு பறந்துவிட்டான். அவனால் தொடங்கப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளுக்கு முதன்மையாளராக அதிருனின் தங்கையான யாமினியை நியமித்திருந்தான். சிறு பெண்ணான அவள் […] - [காதல் மந்திரம் 2](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/): ‘உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை’ என்பதை நன்கு உணர்ந்த வியாபார வித்தகனான ஆதித்த கரிகாலன்,தனது சொந்த விமானத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ளாமல் பொருளாதார வகுப்பில் சாதாரண பயணிகளுக்கான தேவைகளை பற்றிய விபரங்களை அறிவதற்காகவும்,அத்தோடு பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரிவர மேற்கொள்கிறார்களா என்பதை ஒரு முதல்வனாக கண்காணிப்பதற்காகவும் இந்த பயணம் மேற்கொண்டிருந்தான். எந்தவொரு முன் அறிவிப்புமின்றி தடாலடியாக இறுதி நேரத்தில் தங்களுக்கு உரிமையான ஐந்து விமானத்தில் ஏதேனும் ஒன்றில் பயணம் மேற்கொள்வான் என்பதால்,அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் சேவகர்கள் எந்நேரமும் விழிப்புடனே இருப்பார்கள். அத்தோடு அவனிற்கென்று வணிக வர்த்தக பிரிவிலும் சரி,பொருளாதார வகுப்பிலும் சரி எப்போதும் முன்னிருக்கையில் ஒரு இடத்தை காலி செய்தே வைத்திருப்பவர்கள்,இறுதி நேரத்தில் அவனது வரவை பற்றிய தகவல்களை உதவியாளனின் வழியாக அறிந்து வேறொரு நபருக்கு மாற்றி விடுவார்கள். சிறு தவறு என்றாலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையின் அளவு விஸ்தீரணமானது என்பதால்,துப்புரவு ஊழியர்கள் முதல் மேல்நிலை பணியாளர்கள் வரை […] - [காதல் மந்திரம் 1](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/): லண்டன் மாநகரம், ஹீத்ரோ விமானநிலையம் அது ஒரு சர்வ தேச விமான நிலையம் என்பதால் பல ஆயிரக்கணக்கான பயணிகளின் வருகையால் அவ்விடமே நிறைந்திருந்தது. இன்னும் சற்று நேரத்தில் இந்தியா புறப்படவிருக்கும் பயணியர்களுக்கான இறுதி அழைப்பைப் பற்றிய தகவல் ஒலிப்பெருக்கியின் வழியாக தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தது. அனைத்து விமான பயணிகளும் விமானத்தில் ஏறி சாவகாசமாக தங்கள் இருப்பிடத்தில் அமர்ந்த நிலையில்,ஓட்டுனர் இயந்திரங்களை இயக்குவதற்கான பொத்தான்களை அவசரமாக அழுத்த தொடங்கினார். இறுதியாக,விமானத்தின் நுழைவாயிலிற்கு செல்வதற்கான வழிகள் கருப்பு நிற பட்டைகள் கொண்டு அடைக்கப்பட்ட நிலையில் “ஹே கேர்ள் ஹோல்ட்…வெயிட் ஐயம் கம்மிங்” என அவ்விடமே அதிர கத்திக்கொண்டே ஒரு இருப்பத்தி மூன்று வயது யுவதி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பெட்டியை தள்ளிக்கொண்டு மூச்சிறைக்க ஓடி வந்தாள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பிராஜ்ஜியமான பாண்டியன் குடும்பத்தின் பெண் வாரிசுகளில் ஒருவள் தான்,இந்த காமினி பாண்டியன். வெளிநாட்டில் தன் படிப்பை முடித்துக்கொண்டு பிறந்தகத்திற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் ஒரு சுப […] - [மலர்கள் 6](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): மாலையில் வீடு திரும்பிய யாதிஷ்,வீட்டின் முன் செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஒரு உயர்ரக கார் நிற்கவும்,அதைக்கண்டு ‘யாருடைய கார் இது…??’ என்று புருவத்தைச் சுருக்கி யோசித்துக் கொண்டே,கையில் பெட்டியோடு வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டு வாசலில் பாதம் பதிக்கும் போதே,உள்ளிருந்து கேட்கும் பேச்சு குரலின் மூலம் ‘அது யார்…?’ என்று அறிந்து கொண்டவனுக்கு எரிச்சல் மூண்டது. அதே எரிச்சலுடன் முகம் கடுகடுக்க வரவேற்பறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன் “அத்தான்…!!” என்றவாறு ஒரு இளம்பெண் ஓடி வந்து அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள். உடனே யாதிஷ் “ஷர்மி…என்னை விடு…!!” என்று எரிச்சலுடன் மொழிந்தவாறு அவளை உதறி வெளிவந்து அவளை சற்றும் கண்டுக்கொள்ளாமல் முகத்தை சுழித்து மாடிப்படி ஏறினான். அதில் அவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிவிட,அதைக்கண்ட யாதிஷின் தாய் பரிமளம் அவள் அருகில் வந்து தாடையை நிமிர்த்தி “ஷர்மிம்மா…நீ ஒண்ணும் கவலைப்படாதே…!யாதிஷ் இப்போது தான் ஆபிஸிலிருந்து வந்தான்…அதனால் தான் கொஞ்சம் கடுகடுனு இருக்கான்…இப்போ பாரு ஃபிரஸ் ஆகிட்டு வந்து […] - [மலர்கள் 5](https://storybypm.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): செழியன் அன்றைய இரவு முழுவதும் மகிழாவைப் பற்றிய சிந்தனையிலே கழித்தான். ‘யாரது இந்த மாதிரி செய்தது…??குழந்தை தனமான பொண்ணை இப்படி செய்ய நினைக்க எப்படி மனசு வந்தது…அவனெல்லாம் மனசுனா இல்லை மிருக ஜாதியா…??இந்த மாதிரி செய்பவனையெல்லாம் நடுரோட்டில் நிற்க வைச்சு சுடணும்…பொறுக்கி ராஸ்கல்…இருடா…உன்னை கண்டுப்பிடிச்சு வந்து என்ன செய்யப்போறேனு பாரு…என்கிட்ட கூடிய சீக்கிரம் மாட்டுவே… மாட்டுனே கிழிச்சி நாறு நாறா தொங்கவிடறேனா இல்லையானு பாரு…!!!’ என்று வன்மத்துடன் முகம் தெரியாதவனை வஞ்சித்து விட்டு விடியும் வேளையில் தான் கண்ணயர்ந்தான். மகிழாவிற்கு இப்போது உடல்நிலை சற்று தேறி இருப்பதால் மருத்துவர் அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். ஆனால் இரவு முழுவதும் அவளின் அருகிலே அமர்ந்து அவளை நினைத்து தூங்காமல் கவலைப்பட்டு கொண்டிருந்தனர் மகிழாவின் பெற்றோர்.அதற்கு காரணம் மகிழா பயத்தில் அவர்களை எங்கேயும் நகரவிடாமல் பெற்றோரை அருகிலே இருக்க வைத்துக்கொண்டாள். வேறுவழியில்லாமல் அவர்களும் உறங்காமல் கட்டிலின் கால்மாட்டிலே உட்கார்ந்திருந்தனர்.அவர்களும் […] - [விகசனம் 39(இறுதி அத்தியாயம்)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-39/): ‘கண்ணம்மா’ தாரணியாக மாறிய விதமே அவனுடைய சினத்தை பெண்ணவளிற்கு பறைச்சாற்றியது. அதனால் பதட்டத்தோடு “அதி…” என அவனின்‌ பின்னோடு வர முயன்றவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி “தாரணி ஐ நீட் டூ பி அலோன்…பிளீஸ் டோன்ட் ஃபாலோ மீ” என சினம் கலந்த இரும்பு குரலில் உரைத்துவிட்டு மனையாளை திரும்பியும் பார்க்காமல் புறப்பட்டுச் சென்ற கணவனின் முதுகை வெறித்து பார்த்தவளின் கண்ணில் நீர் நிறைந்தது. கணவனின் நிலையிலிருந்து சிந்தித்தால் அவனது செயலில் பிழையில்லை என்ற நிஜம் அறிந்தாலும்,ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணிற்கு நேர்ந்த அநியாயத்திற்கு நீதி வழங்காமல் விலகியதினால் உண்டான சிறு கோபத்தில் சிந்தை கலங்கி தேவையற்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டதை அறிந்து இப்போது கலங்கினாள். ஆனால் வெளியேச் சென்ற அதிருனோ அவனை கண்டு விரைந்து எழுந்து வந்த வீராவை ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்தியவன்,வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் அசுர வேகத்தில் வண்டியை செலுத்தினான். […] - [விகசனம் 38](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-38/): அலுவலகத்தில் அவனிற்கு கீழ் பணிப்புரியும் உதவியாளினி அதிருனிடம் வந்து “சார் உங்களை பார்ப்பதற்கு ரத்தினவேல் என்பவர் வந்திருக்கிறார்” என்றவுடன், உடனடியாக இருக்கையிலிருந்து எழுந்து நின்று கணினி திரையின் வழியாக தந்தையை கண்ணுற்றவனின் கண்கள் பனித்து இதயம் பூவாய் மலர்ந்தாலும் அவனது தாயை எண்ணி மீண்டும் வாடிப்போனது. அதனால் மேசையில் கையூன்றி நின்ற உதவியாளினியை நேருக்கு நேராக சந்தித்து “ரேஷ்மா ‘சார் முக்கியமான வேலையில் பிஸியாக இருக்கிறார்…அதனால் இன்னைக்கு சந்திக்க முடியாது’ என்று சொல்லி அவரை அனுப்பிவிடு” என மனதை கல்லாக்கிக்கொண்டு இறுகிய முகத்துடன் அந்த சொற்களை உதிர்த்தான். அந்த பெண்ணோ தயக்கத்துடன் “சார்…ஆனால் அவர்…” என்று ஆரம்பிக்கும் போதே “ரேஷ்மா டூ வாட் ஐ சே” என இயலாமை கலந்த கோபத்தோடு மேசை தட்டி இரைய,அவளோ விட்டால் போதும் என்பது போல் அங்கிருந்து ஓடிவிட்டாள். ‘சார் வந்த இத்தனை நாளில் இவ்வளவு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை…பெற்ற தகப்பனை கூட பார்க்காமல் ஒதுக்கி […] - [விகசனம் 36](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-36-2/): ஒரு வாரத்திற்கு பிறகு, முகத்தை தூக்கி வைத்திருந்த மனையாளை கண்டு மெல்லியதாக புன்னகைத்த அதிருன் “கண்ணம்மா வாய் வார்த்தையா காசு,பணம் வேணாம் அன்பு மட்டும் போதும்னு சொல்லலாம்…ஆனால் மேற்கொண்டு நம் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல வேண்டும் என்றால் பணம் கட்டாயம் அவசியம்…அந்த பணம் வேண்டுமென்றால் நான் இப்போது அந்த திருப்பூர் கம்பெனிக்கு போயாகணும்டா…வாரம் ஒரு முறை உன்னையும் குழந்தைகளையும் வந்து பார்க்கிறேன்” என மிகவும் பொறுமையாக தாரணிக்கு எடுத்துக்கூறியும் கணவனின் பிரிவை ஏற்க முடியாமல் கலங்கி தவித்தவளை கண்டு ஆடவனிற்கும் மனம் வலித்தது. ஆயினும்,குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு “நம் குழந்தைகளோடு எதிர்க்கால வாழ்வு நல்லாயிருக்கணும்னா நான் இதை செய்தாகணும்டா…” என்றும் அவளின் முகம் தெளிவின்றி இருப்பதை கண்டு அவனிற்கு சிறிது கோபம் எட்டிப்பார்த்தது. “தாரணி” என அதட்டி அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் “நீ நம்ப குழந்தைகளின் தேவைக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் மற்றவரோட கையை எதிர்ப்பார்த்து நிற்கற […] - [விகசனம் 36](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-36/): குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தவள் திடீரென்று “சார் இப்போது யோசித்து பார்த்தால் தான் ஒரு விஷயம் தெரிகிறது…உங்கள் அறையில் முதல் நாளன்று அந்த உணவு பாத்திரங்கள் வைக்கும் துளையின் வழியாக ஒரு வஞ்சம் நிறைந்த சிவப்பு நிற கண்களை பார்த்தேன்…அது நிச்சயம் ஆன்ட்டியுடையது தான்…இதிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் உங்களை கண்காணித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறார்னு தெரிகிறது” என்னும் போதே அவளின் மேனி ஒட்டுமொத்தமாக நடுங்க, சட்டென்று எழுந்து அவளின் தோளை தன் வயிற்றோடு அணைத்து “தாரணி ரிலாக்ஸ்…அது ஒரு துளை என்பதோடு அதன் மூலம் உள்ளிருந்து பேசுவதை கேட்க முடியுமே தவிர எதையும் தெளிவாக பார்க்கமுடியாது…அத்தோடு அந்த துளை இருப்பது அறையின் மற்றொரு கோடியில்,மேலும் அறையின் உள்ளிருந்து நாம் அந்த சிறு கதவை திறந்தால் மட்டுமே அவரால் உள் நடப்பதை கண்டிருக்க முடியும்” மனையாளின் அச்சம் எதற்காக என்பதை அறிந்து கணவனாய் அவளிற்கு விளக்கமளித்தான். ஆயினும்,அவள் சமாதானமாகாமல் “சார் இருந்தாலும்…ஒரு கணவன் மனைவி […] - [விகசனம் 35(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-352/): சந்திராயினியை நேருக்கு நேராக பார்த்து “மா…” என அழைக்க வந்தவன், அவரின் பார்வையில் கனல் கூடுவதை கண்டு எச்சலை விழுங்கி தொண்டையை செருமி தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவரை விழிகளால் ஊடுருவியவன் “உங்களுக்கு என் ஒருவனால் மட்டுமே நிம்மதி பறிப்போகிறது என்று விரும்பினால் நான் இந்த வீட்டை விட்டு கூடிய விரைவில் சென்று விடுகிறேன்” என்றதும் அவர் அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்க்க “இந்த அதிருன் ஒருத்தருக்கு வாக்கு கொடுத்தால் அதிலிருந்து எப்போதும் மீறமாட்டான்…எனக்கு இந்த பாண்டியன் குடும்பத்திலிருந்து சொத்தோ,சொந்தமோ எதுவும் வேணாம்…எல்லாமே உங்களுக்கு சொந்தமாக விட்டுட்டு போறேன்…” என்னும் போதே, “நீ ஒண்ணும் எனக்காக எதையும் விட்டுகொடுக்க வேணாம்” என பதிலுக்கு சீறியவரை நிதானமாக நோக்கி “எனக்கு சொந்தமா இல்லாத ஒன்றை என்னால் எப்படி மேடம் விட்டுக்கொடுக்க முடியும்?” என நறுக்கென ஒரு கேள்வியை கேட்டு அவரின் வாயை அடைத்தவன் “இனி எக்காரணத்தை கொண்டும் உங்க குடும்பத்தோடு […] - [விகசனம் 35(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-35/): ஜானகியிடமிருந்து சில விஷயங்களை கேட்டு தெரிந்துக்கொண்டவளிற்கு சந்திராயினி மனித உருவத்தில் இருக்கும் மிருகம் என்று கேள்விப்பட்டதிலே அவளின் உயிரின் ஒவ்வொரு துளியும் கணவனிற்காக துடித்தது. அவன் தன்னுடைய நல்லதிற்காக அனைத்தையும் செய்திருந்தாலும் ஏனோ அவன் பேசிய வார்த்தைகளினால் உண்டான வருத்தம் சிறிது எஞ்சியிருந்தது. அவனின் மேல் உள்ள கோபம் மட்டும் முற்றிலும் விலகி ஓடிவிட “ஜானும்மா நான் சாரை உடனே பார்க்கணும்…வர சொல்லறீங்களா?” என்றாள் சிறிது தயக்கத்துடன். ஜானகியோ கண்ணில் பளபளப்புடன் “தம்பிய மன்னிச்சிட்டியா கண்ணு?” என ஆவலோடு வினவ, அவளோ பட்டென்று “அப்படியெல்லாம் உடனே சொல்லமுடியாது…அவரை சீக்கிரம் வர சொல்லுங்க…அவர்கிட்ட பேசணும்” என்றாள் பரபரப்புடன். தன் தாயை பற்றிய நிஜம் அறிந்ததற்கு பிறகு அவன் எவ்வாறெல்லாம் துடித்திருப்பான் என்று எண்ணும் போதே அவளிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் தன் கண் முன்னே முகம் கசங்கி நொடிந்துப்போய் அமர்ந்திருந்த கம்பீர மனிதனை பெரும் திகைப்போடு பார்த்து “சார் ஆன்ட்டியா […] - [விகசனம் 34(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-342/): பல ஆயிரம் டன் கொண்ட அந்த பாறை தரையில் விழுந்த அதிர்வில் அவ்விடமே ஒரு சூறாவளியின் சீற்றத்தை கண்டது போல் மண் புழுதியில் சுற்றுப்புறம் பரவியிருக்க,அத்தோடு வெடிக்குண்டின் ஆதிக்கத்தை போல் பெரும் இரைச்சலை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்த அனைவரையும் உடல் குலுங்கி கீழே தரையில் விழ செய்திருந்தது. பணியாளர்கள் கூட நிதர்சனத்தை மறந்து அதிர்வில் உறைந்து போயிருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகே சுய உணர்விற்கு வந்தவர்களுக்கு மணல் புழுதியின் பலனாய் தொண்டை கமறி இருமிக்கொண்டே தன் கண் முன்னே வெண் புகையாய் சூழ்ந்திருந்த புழுதியை விலக்க போராடினார்கள். ஒரு கட்டத்தில் அதுவே மற்றவரின் மீது இரக்கம் கொண்டது போல் ஆவேசமாக விஸ்வரூபம் எடுத்து ஆடிய மணல் சற்று நேரத்தில் களைத்து அமிழ்ந்துப்போனவுடன்,அதிருனை எண்ணி மற்றவரின் நெஞ்சத்தில் குளிர்ப்பரவியது. உடனடியாக,கண்கள் அவனை தேடி அலைப்புறுதலுடன் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் துடிக்க விரைந்து பாறையை சுற்றி முழுவதுமாக அலசியவர்களின் கண்களில் ஓரிடத்தில் தன் மனையாளை மடி சாய்த்து […] - [விகசனம் 34(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): தாரணியின் அருகே நின்றப்படியே பேச்சுக்கொடுத்த அந்த மர்ம நபரோ அவளின் கவனம் கவராமல், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரியமிக்க பாம்பின் விஷத்தை சர்க்கரையில் கலந்திருந்தார்கள். ஏனெனில் அந்த ஒரு நபருக்கு இவ்வறையில் தாரணி கொட்டை வடிநீர் கலக்குவது அதிருனிற்கு மட்டுமே என்றறிந்தே,இந்த இழிவான செயலை செய்திருக்கிறார்கள்‌. அவர்களின் ஒரே நோக்கம்,அதிருனை கொன்று பாண்டியன் குடும்பத்தை வெல்வது மட்டுமே என்பதினாலே இந்த ஏற்பாடு!! தாரணியோ சர்க்கரை அடங்கிய பீங்கான் ஜாடியை திறந்த வேளையில் அதில் சில எறும்புகள் இறந்துப்போயிருப்பதை கண்டுவிட்டு ‘இதில் எப்படி எறும்பு வந்தது?எறும்பு அடங்கிய காப்பியை சாருக்கு எவ்வாறு கொடுப்பது?’ என குழப்பமடைந்தாள். ‘வடிக்கட்டி குடிப்பது நம் தலையெழுத்து…பார்ன் வித் கோல்ட் ஸ்பூனில் பிறந்தவருக்கு இதை குடிக்க வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது?’ என இளக்காரமாக தன்னையே தாழ்த்திக்கொண்டாலும் ‘காப்பி எடுத்திட்டு போகலைனா அதுக்கும் வார்த்தையால் குத்துவார்’ என்ற அச்சத்துடன் வேறு வழியின்றி சீனியிலிருந்து பொறுமையாக அந்த எறும்புகளை நீக்க ஆரம்பித்தாள். […] - [விகசனம் 33(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-332/): ஜானகியுடைய ஒரே வேலை அதிருன் வீட்டிலிருக்கும் நேரத்தில் எந்தவொரு ஆபத்தும் தீண்டவிடாமல் பாதுகாப்பதும் மட்டுமே ஆகும். ஆனால் அவனோ அவரையே தன்னை நெருங்க விடாமல் விலக்கியே நிறுத்தியிருந்தான். அவர் அவனிடம் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவியது. பேரனின் பாதுகாப்பிற்கு மேலும் சில வழிவகைகளை செய்ததோடு,நந்தினியை பற்றிய அனைத்தையும் கூறிய திருப்தியோடு அடுத்த சில நாட்களிலே இயற்கை எய்தினார் அதிவீரராம பாண்டியன். அவரின் இழப்பு அவனிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அன்று இந்த குடும்பத்தின் நல்லதிற்காக அவர் செய்த செயலை மட்டும் அவனால் ஏற்க முடியவில்லை. அவனை பொறுத்தவரை அதிவீரராம பாண்டியன் ரத்தினவேல் தம்பதியினரிடம் அந்த இரகசியத்தை கூறியிருந்தாலும் அவனை வேற்று ஆளாக ஒதுக்கி வைக்காமல் இப்போது காட்டும் அதே பாசத்தை அவனின் மீது செலுத்துவார்கள் என்று உறுதியாக நம்பினான். ஆனால் அவனது நம்பிக்கை கூடிய விரைவில் பொய்த்துப்போக போவதை ஆடவன் அப்போது அறிந்திருக்கவில்லை. பாட்டனாரிடமிருந்து அவனறிந்த அந்த இரகசியம் அவனது […] - [விகசனம் 33(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): பல வருடங்களுக்கு முன்பு, அதிவீரராம பாண்டியனிற்கு மூன்று ஆண் மகவுகள் மட்டும் வாரிசில்லை.அனைத்து பாண்டியன்களின் மனதையும் கொள்ளை கொள்வதற்காக இறுதியாக அந்த வீட்டினுள் ஒரு இளவரசியும் அவதரித்திருந்தார். பாண்டியன் குடும்பத்தின் கடைசி வாரிசு என்பதோடு,ஒரே பெண் குழந்தையும் என்பதால் அவர் செல்ல சீமாட்டியாகவே வளர்ந்தார். அதிவீரராம பாண்டியன் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் தங்களது குலத்தின் வெற்றிக்கு உறுதுணையாக காட்டப்பட்ட நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரம் அவரின் மனதை கவர்ந்ததினால் தங்கள் வீட்டின் இளைய பிராட்டிக்கு ‘நந்தினி’ என்ற பெயர் சூட்டினார். நந்தினி ஒன்றை கேட்பதற்கு முன்பே அதை நடத்திக்கொடுக்க அவதரித்தவர்கள் போல் அந்த வீட்டின் ஆண்கள் அவளின் மீது உயிரையே வைத்திருந்தார்கள். அழகிலும்,அறிவிலும் அவரின் தந்தையான அதிவீரராம பாண்டியனை உரித்து வைத்திருந்த நந்தினியின் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் அவர். நந்தினி வளர்ந்து பருவம் எய்திய வயதில் அவரின் தாயான சிவகாமி தேவியால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தந்தையிடம் அதனை உரைத்து சலுகை […] - [விகசனம் 32](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): சில நிமிடங்கள் மனையாளை வெறித்து பார்த்திருந்த அதிருன்,அவளின் இந்த பிடிவாதத்திற்கு பின்பிருக்கும் காயங்களை அறிந்து சகஜநிலைக்கு மாறினான். அத்தோடு அவ்வறையில் நிரம்பியிருந்த ஏனையோரை கண்டு “ஒரு இரண்டு நிமிஷம் நீங்கயெல்லாம் வெளிய இருங்க” என்றான் தீர்க்கமான குரலுடன். அவர்களும் கணவன் மனைவி சண்டையில் தாங்கள் அதிகப்படி என்று உணர்ந்ததால் விரைவாக அறையிலிருந்து வெளியேறினார்கள். தாமினி மட்டும் “மாமா அக்கா பாவம்…அவங்களை கஷ்டப்படுத்தாதீங்க” என இறைஞ்சல் போல் கேட்ட மைத்துனியின் கேள்வியில் மனம் வலித்தாலும் சமாளித்து மெல்லிய முறுவலுடன் “நத்திங் டூ வொர்ரி…உங்க அக்காவை நான் எதுவும் ஹார்ஷா பேசமாட்டேன் செல்லம்” என ஆதுரத்துடன் அவளின் தலையை தடவியப்படி கூறியவன், “வீரா தாமினியை வெளிய அழைச்சிட்டு போ” என பழைய அதிருனாய் மாதிரி ஆணைப்பிறப்பித்தான். தாமினி அப்போதும் தனது தமக்கையையும் மாமனையும் திரும்பி பார்த்தவாறே அறையிலிருந்து கலக்கத்தோடு வெளியேறியதை கண்டு ‘இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்’ என்பது போல் கணவனை எரித்து சாம்பலாக்கினாள் தாரணி. […] - [முகிழ்மதி 28,29](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-282930/): முகிழ்மதி 28     நேற்று இரவிலிருந்து ஒரு பொட்டு தூக்கமில்லை விஜயலட்சுமிக்கு! அதிலும்,ரத்தினவேல் மற்றும் வீர் இருவரும் அவரிடம் நடந்துக்கொண்ட முறையை நினைக்கும் போதே தொண்டை குழியில் எச்சில் இறங்க மறுத்தது. அதேசமயம் அவருக்கு ஒரு விடயம் மட்டும் சர்வ நிச்சயமாக தெரிந்தது. முகிழ்மதி அவர்களிடம் தான் இருக்கின்றாள் என்று! ‘சனியன் எல்லாத்தையும் அதுங்ககிட்ட ஒப்பிச்சிடுச்சு போலே…நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு வூட்டுக்கு தானே வரணும்…அப்போ இருக்கு அந்த சிறுக்கி மவளுக்கு’ என கறுவிக்கொண்டார். அப்போதும் மகளிற்கு என்னவாகிற்றோ என்று கவலைக்கொள்ளாமல் அவளை வஞ்சம் தீர்ப்பதிலே குறியாக இருந்தார் அவர். இரவு முழுவதும் அவளை திட்டி தீர்த்தவர்,அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் முகூர்த்தத்திற்கு ஆயுத்தமாகி வந்திருந்தார். மூத்த மகளை பார்ப்பதை விட இளையவளை தன் காலிற்கு கீழ் கொண்டு வருவதில் தான் அவரின் முனைப்பு இருந்தது. அவர் எண்ணியது போலவே முகிழ்மதி கீழிறங்கி வந்தாள். ஆனால் அவளின் இரண்டு புறமும் இரண்டு பாதுகாவலர்களுடன்! அந்த […] - [முகிழ்மதி 25,26,27](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2526/): முகிழ்மதி 25:     சிவராமன் ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார். அவரை கட்சியை விட்டு நீக்கவிருப்பதாக தகவல் கசிந்திருந்தது. ஒரு புறம் மகளின் திருமணம், மற்றொரு புறம் அவரது பல வருட அரசியல் வாழ்வு அஸ்தானமாகயிருந்தது. அவருக்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை. அவர் மொத்தமாய் இடிந்துப்போய் அமர்ந்திருக்க “என்னங்க இங்க என்ன மசமசனு உட்கார்ந்து இருக்கீங்க?அங்க நமக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு…” என அளவளாவிக்கொண்டே உள்ளே வந்தார் விஜயலட்சுமி. சிவராமனோ எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதை பார்த்து “என்ன பிரச்சனை உங்களுக்கு?” என விசாரித்தார். அவரோ கவலையோடு “அதை ஏன் கேட்கறே விஜி?” என மடைத்திறந்த வெள்ளமென விஷயங்கள் அனைத்தையும் கொட்டிட, அதைக்கேட்ட விஜயலட்சுமி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார். மனைவி திடீரென்று சிரித்ததும் சிவராமன் அவரை முறைக்க, உடனே கப்பென்று வாயை மூடிக்கொண்ட விஜயலட்சுமி “ஏங்க இதெல்லாம் ஒரு விஷயமுங்க…கா.வெ.க இல்லைனா சோ.வெ.க கட்சி விட்டு கட்சி தாவறது நமக்கு […] - [முகிழ்மதி 23,24](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2324/): முகிழ்மதி 23:     கானகத்தில் தனித்து நிற்கும் பெண் மானை போல் பாவையவள் மிரட்சியில் இங்கு தவித்தாள். குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்ட பாவையவளிற்கு இரத்தம் உறைந்துப்போனது. அவளின் சுவாசம் முற்றிலும் நின்றுவிடும் போலிருக்க,நெஞ்சில் திகலோடு ‘அம்மா’ என இறுதிமுறையாக கதவை தட்ட கையை தூக்கினாள். அந்தோ பரிதாபம்! அவளால் அதற்கு கூட தனது கரத்தை உயர்த்த முடியவில்லை. சில நிமிடங்களிலே அவளது உடலின் ஒட்டுமொத்த பலமும் நீர்த்துப்போக அவளின் மேனி மண்ணில் சரிந்தது. தனது உயிரை மீட்டெடுப்பதற்காக அவள் இடையில் எப்போதும் இருக்கும் சுவாச உள்ளிழுப்பானை அவளின் கரம் தேடி திரிந்தன. சட்டென அவளின் மேனி மொத்தமும் இரத்தப்பசையின்றி வெளுத்துப்போனது. ஏனெனில்,அவசரத்தில் அவள் சுவாச உள்ளிழுப்பனை எடுத்து வந்திருக்கவில்லை. அதற்கான அவகாசம் கூட வழங்காமல் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருந்தார் விஜயலட்சுமி. அவள் சுவாசமின்றி தரையில் விழுந்து துடிக்கையில் அவளிற்கு அருகே ஒரு அழுத்தமான காலடியோசை ஒன்று கேட்டது. […] - [முகிழ்மதி 21,22](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2122/): முகிழ்மதி 21 வீர் இல்லத்திற்கு திரும்பி வந்த வேளையில் திருமண கலகலப்பு சிறிதுமின்றி வீடு வெறிச்சோடி இருந்தது. ஏனெனில்,அனைவரும் களைப்பில் உறங்கியிருந்தனர். திருமணத்திற்காக அனைவரும் ஊருக்கு வந்திருந்ததினால் வீரும் ரத்தினவேலின் இல்லத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை! அதனால் சிறிதும் சத்தம் செய்யாமல் காவலர்களின் பரிசோதனைகளை கடந்து வீட்டிற்குள் நுழைந்தான் வீர். அவனிடத்தில் ஒரு துப்பாக்கி இருந்தப்போதிலும் யாவரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அதனை வைத்துக்கொள்வதற்கான அனுமதி அவனிடம் இருந்தது. அதேப்போல் அவனது சட்டையிலிருந்த உதிர கறையையும் கண்டும் காணாமல் இருந்துக்கொண்டார்கள்‌ பாதுகாவலர்கள். ஏனெனில்,ரத்தினவேலிற்கு அடுத்த நிலையில் அவர்களை வழிநடத்துவது அவன் தான்! வீர் தன்னுடைய அறைக்குள் நுழைந்த அடுத்த கணமே சொல்லி வைத்தாற் போன்று ரத்தினவேலிடமிருந்து அழைப்பு வந்தது. ‘வாட் அ டைமிங்’ என சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்ற வீர் “இன்னும் தூங்கலையா பூபதி?” என கேட்க, அவனோ அவனின் கேள்விக்கு பதிலுரைக்காமல் நெற்றியை நீவியப்படி “நீ வேலைய முடிச்சிட்ட போலிருக்கு” என்று ஆழ்ந்த […] - [முகிழ்மதி 19,20](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1920/): முகிழ்மதி 19     ரத்தினவேல் தன்னுடைய உரையாடல் யாவரின் காதுகளுக்கும் செல்லக்கூடாது என்பதற்காக மண்டபத்தின் பின் வாசலை நோக்கி சென்றான். அவனை பின்தொடர வந்த பாதுகாவலர்களிடம் ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்திவிட்டு அவன் அந்த தோட்டத்திற்குள் சென்றிருந்தான். பின்னால் அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மர தோப்பிற்குள் நுழைந்த ரத்தினவேல் தனது நண்பன் வீரின் எண்ணிற்கு அழைத்தான். எதிர்ப்புறம் வீர் அலைப்பேசியை எடுத்ததும் ரத்தினவேலின் முகம் தீவிரமடைந்தது. “வீர் எங்கியிருக்கே நீ?” என்று கேட்டவனின் குரலில் அப்படியொரு கடுமை! ஏனெனில்,இப்போது அவன் எங்கு சென்றிருக்கிறான் என்பதை ரத்தினவேல் அறிவான். வீரும் தோழனின் கோபத்திற்கான காரணத்தை நன்கு அறிந்திருந்தான். அதனால் ஒரு முறை தொண்டையை செருமி “பூபதி நான் டிரேஸ் பண்ணதிலே எனக்கு ஒரு டிப் கிடைச்சிருக்கு…அங்க தான் நான் போயிட்டு இருக்கேன்” என ஜீப்பை ஓட்டிக் கொண்டே அவன் தகவல் கூற, அவன் கூறியதை கேட்டு பெருஞ்சினமுற்றான் மற்றவன். சட்டென ரத்தினவேலின் முகம் […] - [முகிழ்மதி 18](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-18/):     மண்டபத்தின் வாசலில் விலையுயர்த்தி ஐந்து வாகனத்திலிருந்து ரத்தினவேல் ரகுநாத பூபதியின் குடும்பம் அனைவரும் வந்திறங்கினார்கள். நடுவில் உள்ள மூன்று வாகனத்தில் மட்டுமே அவர்களின் குடும்ப ஆட்கள் இருந்தனர். முதல் மற்றும் கடைசி வாகனத்தில் அவர்களின் பாதுகாவலர்கள் அணிவகுத்திருந்தனர். மணமகனிற்கு உரிய எந்தவொரு அம்சமுமின்றி பூபதியின் முகம் இறுக்கமாக இருந்தது. ஆனால் அவனை தவிர ஏனையோர் அனைவரின் முகமும் பிரகாசமாக மின்னியது. சிவராமனும் விஜயலட்சுமியும் கூழைக்கும்பிடு போட்டு அவர்களை வரவேற்க,அதுவரை அனைவரின் முகத்திலும் இருந்த புன்னகை மறைந்தது. ஏனோ இருவரையும் பார்த்தாலே அவர்களுக்கு கடுப்பாக வந்தது. விஜயலட்சுமியோ “பெரிம்மா நீங்க சொன்ன மாதிரியே ஆராத்தி ரெடி பண்ணியாச்சு..” என இளித்தவர், “அம்மாடி முகிழு…முகிழு…ஆராத்தி எடுத்திட்டு வா கண்ணு” என கொஞ்சலாக உள்நோக்கி சத்தம் கொடுத்ததும் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் மௌனமாக தட்டுடன் வந்து நின்றாள் முகிழ்மதி. அதுவரை எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் அசுவாரசியத்துடன் நின்றிருந்த ரத்தினவேலின் விழிகள் இப்போது பெண்ணவளை நிமிர்ந்து […] - [முகிழ்மதி 16,17](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-16/): முகிழ்மதி 16   ரத்தினவேலின் அறையிலிருந்து கண்கள் கலங்க வெளியே வந்த முகிழ்மதியை தூரத்திலிருந்து தமயந்தி விசித்திரமாக நோக்கினாள். வெகு தொலைவிலிருந்து காண்பதினால் அவளின் கண்ணீர் அவளிற்கு புலப்படவில்லை. ‘இந்த முகிழ் அண்ணி எப்படி அண்ணா ரூமிலிருந்து வெளியே வர்றாங்க?’ என குழப்பத்துடனே அவள் யோசித்தாள். மேலும் ‘அவங்களுக்காக பர்மிஷன் கேட்டதுக்கு இந்த அண்ணா என்னை திட்டி அனுப்பனாங்க…இப்போ என்ன நடக்குது இங்கே?’ என நினைத்துக்கொண்டவளிற்கு திடீரென்று சந்தேகம் ஒன்று முளைக்க, ‘சம்திங் ராங்…கூடிய சீக்கிரம் என்னனு கண்டுப்பிடிக்கிறேன்’ என தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டாள் தமயந்தி. அதேப்போல் முகிழ்மதியோ ‘தோட்டத்தில் இருந்த என்னை இவர் தானே கூப்பிட்டாரு..அப்புறம் எதுக்கு என்னை திட்டறாரு?நான் தான் ஒண்ணும் பண்ணலையே’ என சிறுப்பிள்ளை போல் கவலையோடு எண்ணிக்கொண்டே மாடிப்படியின் விளம்பிற்கு வந்தவள்,சட்டென நிதானித்தாள். அதுவரை கண்ணீரோடு நடந்து வந்த முகிழ்மதி கீழே அமர்ந்திருந்த வீட்டு ஆட்களை பார்த்துவிட்டு தேங்கி நின்றாள். பெற்றோரின் பிழையை மறைக்க நினைக்கும் பெண் அவள். […] - [முகிழ்மதி 126](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-126/):     பெண்கள் மூவரையும் கடத்தி வந்திருந்தது ஆத்விக் தான்! ரோகிணியின் தமையன் மற்றும் தமயந்தியின் கல்லூரி தோழன்… அத்தோடு நல்லவன் என்ற போர்வையில் இருக்கும் நச்சுப்பாம்பு அவன். அதுமட்டுமின்றி அவனிற்கு வேறொரு அடையாளமும் இருக்கின்றது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சதாசிவத்திற்கு தவறான உறவு முறையில் பிறந்தவன் தான் இந்த ஆத்விக்… சிறு வயதிலே தாயினை இழந்ததினால் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தான். ஆசிரமத்தில் வளர்ந்தாலும் சதாசிவம் அவனது தொடர்பில் எப்போதும் இருந்தார். தனது மகனிடமும் “நீ இங்கியே இரு மகனே…இது தான் உனக்கு பாதுகாப்பு” என்று அறிவுறுத்தி அவனை அவ்விடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார். ஏனெனில்,ஆத்விக்கின் தாயுடன் உறவு உண்டாகுவதற்கு முன்பே அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது. தனக்கு முறையற்ற உறவில் மகன் இருப்பது யாருக்கேனும் தெரிந்தால் அவை தனது அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமுதாயத்தினரிடமிருந்து நிஜத்தை மறைத்திருந்தார். அதேசமயம்,தனக்கென்று இருக்கும் ஒற்றை ஆண் வாரிசையும் இழக்க அவர் […] - [முகிழ்மதி 125(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1252/): உறங்குவதற்கு ஆயுத்தமாகி கொண்டிருந்த முகிழ்மதியோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள்‌. அதேநேரம் குளியலறையிலிருந்து தலையை துவட்டியப்படி வெளிவந்த ரத்தினவேலோ உறங்குவதாக கூறிய மனைவி எழுந்து அமர்ந்திருப்பதை கண்டு நெற்றி சுருக்கினான். “தூங்கலையா முகிழ்?” என விசாரித்தப்படியே அவளை நெருங்க, அவளின் விழிகள் அலைப்புறுதலுடன் சுழன்றிட “இல்லைங்க…ஏதோ சத்தம் கேட்டுச்சு…அதான்” என்றாள் ஒரு வித படபடப்புடன்… அதற்குள் அவளருகே வந்திருந்த ரத்தினவேல் ‌“என்ன சத்தம்?எனக்கு ஒண்ணும் கேட்கலையே?” என நெற்றிச் சுருக்கினான். “தெரியலைங்க…பக்கத்து ரூமிலே இருந்து வந்த மாதிரி இருக்கு..” என பக்கத்து அறையை நோக்கி கை காட்டினாள். “ஜித்து ரூம்லையா?” என கேட்டவன் பின்பு அவனாகவே “ஏதாவது பொருள் கீழே விழுந்திருக்கும்…அந்த சத்தம் தான் கேட்டிருக்கும்…விடுடி” என தன்னவளை சமாதானம் செய்தான். அதைக்கேட்டு “ம்” என தலையாட்டியவளின் விழிகள் கணவனது சிகையில் ஈரம் படர்ந்திருப்பதைக் கண்டிருக்க “இந்நேரத்துக்கு எதுக்கு மாமா தலைக்குளிச்சீங்க?சளிப்பிடிக்கப்போகுது” என அக்கறையாக கடிந்தப்படியே அவனிடமிருந்து பூந்துவாலையை வாங்கி தலையைத் […] - [முகிழ்மதி 125(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1251/):     “ஹே பூபதி என்ன இதெல்லாம்?” என நண்பனை பார்த்து சலிப்பாக வினவ, அவனோ வீரை ஆழ்ந்து நோக்கி “அன்னைக்கே நான் சொன்னேனில்லை…நான் எல்லாத்தையும் சரியா ஞாபகம் வைச்சுப்பேன்னு” என மீசையை முறுக்கிவிட்டு சொல்ல,அப்போது தான் அன்றைய தினத்தின் உரையாடலுக்கான அர்த்தம் அவனிற்கு தெளிவாக விளங்கியது‌. உடனே திகைப்பில் விழி விரித்த வீர் “அன்னைக்கு நீ சொன்னதுக்கு இது தான் அர்த்தமா?” என ஆயாசத்துடன் நெற்றியை நீவியப்படி கேட்க, ரத்தினவேல் பதில் எதுவும் கூறாமல் அவனை அழுத்தமாக மட்டுமே பார்த்திருந்தான். அவனது மௌனமே ‘அது தான் உண்மை’ என்பதை அவனிற்கு புலப்பட வைத்தது. அவன் ‘ஷப்பா’ என மானசீகமாக தலையில் கைவைத்துக்கொள்ள, “வாரே வா…அண்ணா கலக்கல்” என தமையனை கைதட்டி பாராட்டிய ஜித்து “நான் கூட அன்னைக்கு அண்ணா என்னடா சும்மா இருக்காரேன்னு பார்த்தேன்…இப்போ தான் புரியுது…பின்னாடி பலமா மச்சானை வைச்சு செய்யலாம்னு தான் அன்னைக்கு அமைதியா இருந்தீங்களா சூப்பர்ண்ணா சூப்பர்” […] - [முகிழ்மதி 124(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1242/):   ரத்தினவேல் முகிழ்மதி        வீர் தமயந்தி         ஜித்து மதி            சில நிமிடங்களுக்கு பிறகு,கீழிறங்கி வந்த தம்பதியினரை பூஜையறைக்கு அனுப்பி வைத்தார் வானதி. இறைவனின் ஆசிப்பெற்று வந்தவர்கள் காஞ்சனா மாலாவின் பாதங்களையும் தொட்டு பணிந்தார்கள். “நல்லாயிரு என் தங்கம்” என பளீச்சென்று மின்னிய பேத்தியின் முகம் வழித்து திருஷ்டி கழித்தவர்,பேரனின் மனைவிகளுக்கு வழங்கியது போல் ஒரு சிறிய நகைப்பெட்டியை அவளிற்கும் பரிசளித்தார். அதில் சிவப்பு கல் பதித்த அவர்களது குடும்ப பரம்பரை நகை இருப்பதை கண்டு ஆர்ப்பரித்த பெண்ணவள் “தேங்க்ஸ் பாட்டி” என அவரை கட்டியணைத்துக்கொண்டாள். “பொம்பளை புள்ளைங்க மாதிரி உனக்கு எதுவும் நகைக்கொடுக்க முடியாதுடா வீர்…என் பேத்தியை கண்கலங்காமல் பார்த்துப்பேன்னு தெரியும்…ஆனாலும் உன்னை உயிரா நேசிக்கிறவளோட மனசை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்திடாதே…அவளும் உன்னை புரிஞ்சு நடந்துப்பாள்…இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியா வாழுங்க” என வீரிடம் உணர்ச்சிப் பெருக்குடன் […] - [முகிழ்மதி 14,15](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1415/): முகிழ்மதி 14 தாயின் சொற்படி சந்திரமதியை அழைத்துக்கொண்டு ஜித்தேந்திரன் வரவேற்பறைக்கு வந்து கொண்டிருந்தான். அவனின் விழிகள் அவளை தான் ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தது. அச்சமயம் சந்திரமதியின் அலைப்பேசிக்கு ஒரு தகவல் வந்தது. ‘யார்?’ என்று பார்ப்பதற்காக வேண்டி அலைப்பேசியை கையில் எடுத்தவள்,தன் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஜித்தேந்திரனை ஓரக்கண்ணால் கண்டுவிட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டாள். ஒருவேளை அந்த தகவலை அனுப்பியது அவளின் முன்னாள் காதலன் ஹரிஷாக கூட இருக்கலாம் என்று எண்ணினாள் அவள். அதனால் சடுதியில் சுதாரித்து அலைப்பேசியை மறைத்த பெண்ணவள் வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள். அவளின் அந்த செயல் அவனிற்குள் சந்தேகத்தை வரவழைத்தது. அதனால் “சந்திரமதி ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றான் கடுமையான குரலில். அவளோ ‘என்ன?’ என தெனாவெட்டாக அவனை ஏறிட, அவளின் பாவனை அவனிற்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் அவளிடம் பேசியாகவேண்டிய கட்டாயம் அவனிற்கு! தன் மனதில் அரித்த வினாவை அவளிடம் எந்த வித தயக்கமின்றி நேரடியாகவே தொடுத்துவிட்டான் அவன். […] - [முகிழ்மதி 12,13](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1213/): முகிழ்மதி 12     வீர் இருக்கும் வரை அவளினுள் முகிழ்ந்திருந்த துணிச்சல் இப்போது சிறிது சிறிதாக குறைந்து,பின்பு மறைந்தும் போனது. அவள் ஒரு வித மிரட்சியுடனே அந்த பிரம்மாண்டமான மாளிகைக்குள் நுழைந்தாள். வீட்டின் முற்றத்தில் காவலர்கள் சிலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆஜாபாகுவான தோற்றத்துடன் நின்றிருந்த கருப்பு சீருடை அணிந்த காவலர்கள் அவளை அதிகமாகவே பயமுறுத்தினார்கள். ‘இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டமே?வீர் அண்ணா உள்ள வரை வந்து விட்டுட்டு போயிருக்கலாம்…அதுக்குள்ள தான் மான்ஸ்டர் அவரை கூட்டிட்டு போயிட்டரே…இப்போ என்ன செய்யறது?’ என பெரும் திகிலோடு உமிழ்நீரை கூட்டி விழுங்கியப்படி உள்ளே சென்றாள். முதலமைச்சரின் வீடு என்பதால் அவ்விடத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் அடுக்கு,இல்லத்தின் முக்கிய நுழைவாயில்,இரண்டாம் அடுக்கு,வீட்டின் வாசற்படிக்குள் நுழையும் வழி,மூன்றாம் அடுக்கு,வீட்டின் முதன்மை வரவேற்பறைக்குள் நுழையும் வழி என ஆகிய மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீள் வடிவ பாதுகாப்பு வளையத்திற்குள் அவளை அனுப்பி பரிசோதித்த பிறகே காவலர்கள் […] - [முகிழ்மதி 10,11](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1011/): முகிழ்மதி 10     முகிழ்மதியை தவிர்த்து ஏனைய அனைவரும் ரத்தினவேலின் இல்லத்திற்கு புறப்பட தயாராக இருந்தனர். சிவராமனும் கூட இப்போது அங்கு செல்ல ஆயுத்தமாகியிருந்தார். இதுநாள் வரை அவர்கள் வீட்டிற்கு அவர் சென்றதில்லை. குற்றவுணர்வும் அதற்கு ஒரு காரணம். இப்போது தனது ஆசை மகளை அந்த வீட்டில் திருமணம் செய்து கொடுக்கவிருப்பதால் வேறுவழியின்றி அவர்களுக்கான மரியாதையை வழங்க எண்ணினார். ஏனெனில்,தன்னால் மகளின் வாழ்விற்கு எவ்வித தீங்கும் நேரக்கூடாது என விரும்பியது அந்த தந்தை உள்ளம்! அதுவே,முகிழ்மதி என்று வரும் போது அவரின் மனம் கடும்பாறையாய் மாறிவிடுகிறது. அத்தோடு எதிர்கட்சி தலைவரான சதாசிவத்திடமிருந்து தப்பி செல்ல,ரத்தினவேல் என்னும் பற்றுக்கோல் அவருக்கு தேவைப்பட்டது. அவரின் நிற்கதி நிலைக்கு பின்னணியில் இருக்கும் உந்து சக்தி அவன் என்று அறியாமலே அவனிடம் சரணடைய எண்ணியிருந்தார்,அந்த மாமனிதர். சுயநலத்தின் மொத்த ரூபம் அவர்! அவர் மட்டுமல்ல..முகழ்மதியை தவிர்த்து அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னலம் மட்டுமே பெரிது என […] - [முகிழ்மதி 8,9](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-8/): முகிழ்மதி 8: “பூபதி இதெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறீயா?எனக்கு அந்த துரோகியை பார்த்தாலே அடிச்சு கொல்லணும் போலே தோணுது” என ஆக்ரோஷமாக விஜயேந்திர பூபதி உரைக்க, சிவராமனை பற்றி எண்ணினாலே அவனிற்குள்ளும் வெடித்து சிதறப்போகும் எரிமலையின் சீற்றம் தான்! இப்போதே சிவராமனை நடுதெருவில் ஓடவிட்டு வெட்டி கொல்லும் வெறி அவனுள் கிளர்ந்தெழுந்தாலும்,அவன் தன்னை அடக்கிக்கொண்டான். “அப்பா எனக்கும் அந்த வெறி நெஞ்சு நிறைய இருக்கு…ஆனால் அரசியல் வேற பர்சனல் வேற…எனக்கு சந்திரமதியை பிடிச்சிருக்கு…தட்ஸ் இட்” என திட்டவட்டமாக கூறி,அத்துடன் அவன் பேச்சை முடித்துக்கொண்டான். ஏனெனில்,தந்தைக்கு கூட தன் பழிவாங்கும் படலத்தை பற்றி தெரிவிக்க அவன் விரும்பவில்லை. தந்தையின் குணம் பற்றி ரத்தினவேல் நன்கு அறிவான். அவர் சில நேரங்களில் இளகிய மனம் உள்ளவராய் நடந்துக்கொள்வார்‌. ஏனெனில்,ஒரு பெண்ணிற்கு தந்தையானவரால் மற்றொரு பெண்ணிற்கு பாதகம் விளைவிக்கும் செயலை செய்வதை ஏற்க முடியாது. அதை அவர் ஒரு காலமும் விரும்பமாட்டார் என்று அறிவான். ஆகையால்,தகப்பனின் மனம் […] - [முகிழ்மதி 7](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-7/):     முகிழ்மதி தடுமாறி கீழே விழுவதற்குள் அவளை தன் முரட்டு கரங்களால் தாங்கியிருந்தான் ரத்தினவேல். தன்னை தாங்கியிருந்த கரத்தின் உரிமையாளனை ஏறிட்ட பெண்ணவளிற்கு பேரதிர்ச்சி. அவசரமாக அவனிடமிருந்து ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தவள் மிரட்சியுடன் அவனை காண,ரத்தினவேலோ அவளை அழுத்தமாக பார்த்திருந்தான். அவனது விழிகள் நொடியில் அவளின் பாதாதி கேசம் வரை ஆராய்ந்திருந்தன. அவளின் அழுது சிவந்த முகம் முதற்கொண்டு அவளது கழுத்திலிருந்த கீறல் வரை அனைத்தும் அவனது கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை. அவளின் காயங்களை கவனித்த ரத்தினவேலின் இமைகள் இடுங்கின. அவனது எதிரியின் மகளாகினும் ஒரு பெண்ணின் உடம்பில் காயங்களை பார்த்தவனின் தேகம் கோபத்தில் சிவந்து இறுகின. அதேசமயம் அவளின் கண்ணோரம் மின்னிய நீர் துளியை பார்க்கையில் அவனது நெஞ்சத்தில் சொல்ல முடியாத ஒரு வலி! அவனது குடும்ப நபர்களை தவிர வேறு யாருக்காகவும் துடிக்காத அவனது இதயம் அன்று வேறொரு பெண்ணிற்காக துடித்தன. அவளின் இருப்பு அவனுள் ஒரு […] - [முகிழ்மதி 6](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-67/): சற்று நேரத்திற்கு முன்பு, சபையின் முன்னால் வந்து நின்ற சந்திரமதியின் உடையை பார்த்த அனைவரும் திகைப்பில் விழி விரித்தனர். அவளின் தாயிற்கோ மகள் சொல் பேச்சை கேட்கவில்லை என்ற கடுப்பு ஒரு புறம் இருந்தாலும்,ஆசை மகளை ஒன்றும் கூற முடியாத தவிப்பு மற்றொரு புறம்! வேறுவழியின்றி சிரித்தப்படி நின்றுக்கொண்டிருந்தார். அதேப்போல் மற்றவர்களும் அவள் அணிந்திருந்த மேற்கத்திய உடையை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். ஆனால் காஞ்சனா மாலா மட்டும் முகத்தை சுளித்தார். தமயந்தியோ “ஒரு பொண்ணோட டிரஸை வைச்சு அவளை எடைப்போடக்கூடாது தான்…ஆனாலும் ஒரு குர்த்தியாவது போட்டிருக்கலாம்” என மனம் கேளாமல் முனக, “பரவாயில்லை விடு…இந்த டிரஸிலே கூட பொண்ணு அழகா தான் இருக்காங்க” என்றான் ஜித்தேந்திரன். உடனே அவனை திரும்பி அவள் முறைக்க “ஹே அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்காதே…ஜஸ்ட் ஒரு காம்பிளிமெண்ட் தான்டி…வேற ஒண்ணுமில்லை” என பதறிப்போய் கூறவும், ‘அது’ என மிடுக்காக விரல் நீட்டி எச்சரித்துவிட்டு திரும்பியவளின் கருவிழிகள் முகிழ்மதியை கண்டு தெறித்து […] - [முகிழ்மதி 4,5](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-45/): முகிழ்மதி 4  முன்பே முதல்வர் அந்த வழியில் தன் குடும்பத்துடன் பயணிப்பது அறிந்ததால்,பாதுகாப்பு கருதி,காவலர்கள் மக்களை அப்புறப்படுத்தியிருந்தனர். அதனால் அவ்விடத்தில் பெரிதாக ஆட்கள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி இருந்தது. ரத்தினவேலின் பெற்றோர் மகிழுந்து அங்கு வந்து சேர்ந்ததும், மகிழுந்தின் கண்ணாடியைக் கீழிறக்கிய அவனது தாய் வானதி “என்னாச்சு அத்தே?ஏன் காரை இங்கே நிறுத்தியிருக்கீங்க” என்று அவர் விசாரித்தார். காஞ்சனா மாலாவோ “பூபதியை பிள்ளையார் கோவிலுக்குப் போக சொல்லியிருக்கேன் வானதி…அவன் வந்தவுடனே அவனை கூட்டிட்டு நான் வர்றேன்…நீங்க முன்னாடி போங்க” என்று கூற, அவரும் மென்புன்னகையுடன் “சரிங்க அத்தை” என தலையசைத்துவிட்டு கிளம்பினார். ரத்தினவேல் தனது பெற்றோரை விட பாட்டியிடமே ஒட்டுதல் அதிகம். அதனால் அவனின் பெற்றோரும் அதை பெரிதாக எடுக்கவில்லை. இங்கு கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு கீழிறங்கி வந்த ரத்தினவேலின் கரத்தில் தங்க கொலுசு ஒன்று கிடைத்திருந்தது. ‘யாரோடது இது?’ என்ற யோசனையோடு விழிகளை சுழற்றியவனின் பார்வையில் முகிழ்மதியின் பின்புறம் மட்டுமே விழுந்தது. […] - [முகிழ்மதி 3](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-3/):     இன்றும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு கண் விழித்தாள் முகிழ்மதி. மீண்டும் அதே கனவு! அவளது நெற்றி முழுவதும் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன. அவளின் அடர்த்தியான கட்டுக்கூந்தல் கலைந்து கிடக்க,அவளிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வழக்கத்தை விட சற்று வேகமாக அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க ‘கடவுளே இந்த கனவு ஏன் எனக்கு அடிக்கடி வருது?என்னை இது நிம்மதியாவே தூங்க விடமாட்டிக்குது’ என அச்சத்துடன் புலம்பிக் கொண்டே,பக்கவாட்டு மேசையிலிருந்து தனது சுவாச உள்ளிழுப்பானை(இன்ஹேலர்) எடுத்தாள். அப்போதும் அவளின் கரங்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவளின் சுவாசம் சீரற்று தாறுமாறாக ஏறி இறங்க,சட்டென உள்ளிழுப்பானை தன் உதடுகளுக்கு இடையில் வைத்து,ஆழமாக மூச்சை இழுத்தாள். அவளிற்கு சிறு வயதிலிருந்தே சுவாச கோளாறு நோய் இருந்து வருகிறது. குறிப்பாக,இந்த கனவு வந்துவிட்டால் அவளால் ஒரு கணம் கூட நிம்மதியாக மூச்சுவிட முடியாது. அந்த கனவிற்கான அர்த்தம் வேண்டி அவள் பல வகையில் முயன்றும் கிடைத்த விடை என்னவோ […] - [முகிழ்மதி 2](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2/):     கத்தியை எதிர் திசையில் வீசிவிட்டு தன் முழு உயரத்திற்கு நின்றான் அவன். இனி அலறல் இல்லை…அழுக்குரல் இல்லை…எதுவுமில்லை. இதுவரை அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்த சப்தம் அடங்கி நிசப்தமாகிப்போனது. அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் அடக்கியிருந்தான் ரத்தினவேல் ரகுநாத பூபதி. ரத்தினவேல் ரகுநாத பூபதி முப்பத்தியொரு வயது ஆண்மகன். அவன் பிரபலமான ஒரு அரசியல்வாதி,இருண்ட உலகத்தின் அரசன்(இலுமினாட்டி சமூகம்) மற்றும் தொழில்துறை உலகில் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர். தன்னை எதிர்ப்பவர்களுக்கு மரணத்தை பரிசாய் வழங்குபவன். முட்டாள்தனத்தை அடியோடு வெறுப்பவன்,பயனற்ற முறையில் நடந்துக்கொள்பவர்களை தன் வாழ்வில் இருந்து வெட்டி வீசிவிடுவான். துரோகத்தை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான். இறந்து சடலமாக தொங்கிக்கொண்டிருந்தவனை கைகாட்டி “கிளின் திஸ் மெஸ்” என்று கட்டளையிட்டவன்,விறுவிறுவென தனது மகிழுந்தை நோக்கி நடக்க தொடங்கினான். அவன் தனது காரை நோக்கிச் செல்லும் வழியில் அவனது மெய்க்காப்பாளர்கள் சூழ்ந்துக்கொள்ள,அவனது உதவியாளன் ஜெகன் அவனை நெருங்கினான். அச்சமயம் அவனது அலைப்பேசி ஒலிக்க “சார் உங்க பாட்டி” என்றவுடன்,அவனது […] - [முகிழ்மதி 1](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1/): ஒரு இளம் பெண் கன்னத்தில் வைத்தப்படியே ஏரிக்கரையின் படிகளில் அமர்ந்திருந்தாள். அவளின் மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் சோகம் நிழலாடின. அவளின் விழிகள் ஓடிக்கொண்டிருந்த நீரோடையை வெறித்து பார்த்திருந்தது. அஸ்தமானாகி கொண்டிருந்த சூரிய ஒளியின் கதிர்கள் அவளின் மதி முகத்தில் மோதி,அவள் முகத்தை இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்தது. ஏற்கனவே,பால் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த அவளின் மேனி இப்போது தங்க நிறத்தில் ஜொலித்தன. அவளின் தங்க நிறத்தை மெருகூட்டி காட்டும் வகையில் அரக்கு நிறத்தில் தங்க சரிகை பூக்கள் போட்ட சுரிதார் அணிந்திருக்க,அதற்கு பொருத்தமான ஒரு பூ கிளிப்பால் அவளின் கருந்கூந்தல் கட்டப்பட்டிருந்தது. அவளின் சங்கு கழுத்தில் கண்ணிற்கே புலப்படாத வகையில் ஒரு சிறிய தங்க சங்கிலி! செவியில் இரண்டு சிறிய அளவிளான பொன் நிற ஜமிக்கிகள் அலங்கரித்திருந்தன. காற்றும் வீசும் போது அசைந்தாடிய ஜமிக்கிகள் அவளின் கன்னத்தை தொட்டு வருடின. ஒரு முறை…இரு முறை அல்ல… பல முறை அவளின் கன்னத்தை தீண்டியிருந்தன. […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-7/): ஐந்து வருடங்களுக்கு பிறகு, மக்கள் திரளாக கூடியிருந்த ஒரு திடலில் மேடையின் நடுவில் பல தலைவர்கள் வீற்றிருந்த வேளையில் அதன் ஓரமாய் ஒரு பெண் நின்றுக்கொண்டு அந்த குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தாள். அச்சமயம் அந்த பெண்ணின் இதழில் இருந்த உதிர்ந்த வார்த்தைகள் “இந்த வருடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெறுபவர் நம்முடைய எழுத்துக்களால் மட்டுமின்றி தன்னுடைய பேச்சால் மக்கள் அனைவரின் மனதை கொள்ளையடித்த ‘எழுத்துலகின் இராட்சசி’ என்ற புனைப்பெயர் கொண்ட பெண் புரட்சியாளர் திருமதி.சர்வத்மிகா அலெக்ஸ் பாண்டியனை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்” என்றவுடன் அரங்கமே அதிரும் வகையில் பலத்த கரகோஷம் எழுந்தது. கீழ் வரிசையில் இரண்டாவதாக தன் கணவனோடு கைக்கோர்த்து மிடுக்குடன் அமர்ந்திருந்த சர்வத்மிகா புன்னகை ததும்ப தன் கணவன் அலெக்ஸ் முகத்தை நோக்க,அவனோ எப்போதும் போல் அவளின் சுகமான சுமைத்தாங்கியாய் மாறிப்போனான். அவளை தன்னிரு பொன் கரங்களில் தாங்கிச்சென்று மேடை ஏற்றியவன் அங்கே சக்கரநாற்காலியை விரித்துவிட்டு அவளை […] - [சர்வம் 25](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-25/): திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவில் பால் சொம்புடன் முழுமையான அலங்காரத்துடன் சக்கர நாற்காலியின் துணையுடன் உள்ளே வந்த திருமகளை யோசிக்கவிடாமல் முரட்டுத்தனமாக கட்டிலில் கிடத்தி ஆக்கிரமிப்பு நடத்த விளைந்தவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள் “ஆபிசர் நான் உங்ககிட்ட பேசணும்…நீங்க ஏன் உங்களுடைய காதலை என்கிட்ட கடைசி வரைக்கும் சொல்லலை?” என்ற கேள்வி எழுப்பிட, அவளின் இதழோடு இதழ் உரசி “செல்லக்குட்டி அதை இப்போவே கேட்கணுமா…எல்லாம் முடிஞ்சப்பிறகு பதில் சொல்லட்டுமா?” என கிறக்கத்துடன் அவளுடைய‌ கழுத்தில் முகம் புதைத்து வினவ, அவளோ பிடிவாதமாக “நோ…முதல்ல பேச்சு அப்புறம் தான் வீச்சு” என்றாள் கண்டிப்புடன். அவனோ அவள் பிடிவாதத்தை அறிந்தவனாய் சலித்துக்கொண்டு “ஆனால் சமிம்மா…ரொம்ப ஆசையோட வந்தவனை இப்படியெல்லாம் பட்டினி போடக்கூடாது…போம்மா” என்று விலகி அவளருகே தலையணையில் தலைவைத்து “இப்போ என்ன நான் ஏன் உன்கிட்ட காதலை சொல்லலைனு தெரியணும்…அவ்வளவு தானே?” என, அவளோ அவனது நெஞ்சில் நாடி பதித்து “ஹும்” என […] - [சர்வம் 24](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-24/): அலெக்ஸ் திட்டமிட்டப்படி திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடந்து முடிந்திருந்தாலும் சர்வத்மிகா ஆசைப்பட்டதற்கு கிணங்க அவளால் நேசிக்கப்பட்ட மணாளனுடனும் தேவலோகத்தில் இருக்கும் அவள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் கடவுள் சாட்சியாய் அலெக்ஸ் பாண்டியனின் கண்ணாட்டி ஆனாள் காரிகை. ஆம்,அனைவரும் ஆசைப்பட்டது போல் அலெக்ஸிற்கும் சர்வத்மிகாவிற்கும் திருமணம் நடைப்பெற்று தம்பதியனர் ஆயினர். அதுவும் அலெக்ஸ் அவளிற்காக பரிசளித்த அதே வைர மோதிரத்துடன் அவர்களது வாழ்வு இனிதே ஆரம்பித்தது,இருவருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி!! அந்த அசாதாரணமான காரியத்தை சாத்தியப்படுத்திய பெருமை பாவையவளையே சாரும். ஏனெனில்,திருமண நாளன்று காலை அலெக்ஸை சந்திக்க வருமாறு தன்னறைக்கு வரவழைத்தாள் சர்வத்மிகா. ஒப்பனையாளரின் கைவண்ணத்தில் வெண்ணிற முழு நீள மேல் அங்கி அணிந்து கண்ணாடியின் முன்பு அமர்ந்து தன்னுடைய காதணியை செவியில் பூட்டிக்கொண்டிருந்தாள் சர்வத்மிகா. உள்ளே தன்னவளை பார்க்க வந்த அலெக்ஸ் தான் அவளிற்கென வாங்கிய அந்த பிரத்தியேகமான வெண்ணிற ஆடையில் மெல்லியதான ஒப்பனையில் தேவலோக தேவதையை தோற்கடித்து வெற்றி வாகை சூடியவளை பார்த்தவனின் […] - [சர்வம் 23](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-23/): டெய்ஸி திருமணத்திற்கு பிறகு முதன்முறையாய் கணவனின் கோப முகம் பார்த்தவளிற்கு இதயம் படபடவென துடிக்க “எ…ன்…னாச்சு..ங்க” வார்த்தைகள் தந்தியடித்தது. அவளை கனல் விழிகளால் உறுத்து விழித்தவன் “இங்க என்ன உனக்கு வேலை…வீட்டுக்கு போ…அங்க பொருளெல்லாம் சிதறிப்போய் குப்பை மாதிரி இருக்கு…கிளம்பு போய் முதல்ல சுத்தம் செய்” என இறுகிய குரலில் உறுமியவனை கண்டு அஞ்சிய டெய்ஸி எழுந்தப்படியே “இல்லீ…ங்க” என தடுமாற விளைந்தவளை ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்தி, நாசி விடைக்க “உன்கிட்ட ஒரு தடவை சொன்னால் புரியாதா?கிளம்புனு சொன்னேன்” என பெரும் அதட்டல் போட்டு அவளை அங்கிருந்து அனுப்பினான். அதன்பிறகு ஆழ்ந்த குரலில் “சாரி சவிம்மா…டெய்ஸி சின்னப்பிள்ளை இல்லையா அதான் ஏதேதோ உளறிட்டா…நீ எதுவும் மனசில் வைச்சுக்காதே!” என இருகரம் குவித்து மன்னிப்பு வேண்டி அங்கிருந்து தப்பித்துச் செல்ல விளைந்தவனை தடுத்து நிறுத்தியது சர்வத்மிகாவின் அழுத்தமான குரல். “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றவுடன் அவ்விடத்திலே நின்று தலையை திருப்பி பார்த்தவனை […] - [சர்வம் 22](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-22/): தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களில் அலெக்ஸ் எந்த விதத்திலும் சர்வத்மிகாவை தொந்தரவு செய்யாமல் விட்டு,தன்னுடைய நேச பயிர்களை தனிமையில் வரையறையின்றி மரமாய் வளர்த்திருந்தான். பகிரப்படாத நேசத்தின் மௌனம் கூட ஓர் அழகு தான் என்பது போல் இரண்டு வருடங்களாய் தங்களது காதலை உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு போலி முகமூடியுடன் உலாவினார்கள். தன்னில் ஓர் பெண் மயங்கியிருக்கிறாள் என்று அறிந்தவுடன் அவளோடு சல்லாபம் புரிய நினைக்கும் ஆண்களுக்கு மத்தியில் அலெக்ஸ் முற்றிலும் வேறுப்பட்டவனாய் திகழ்ந்தது தான் சர்வத்மிகாவை அவன்புறம் இழுத்துச் சென்றது. சர்வத்மிகாவோ படிப்பும் தன்னுடைய எதிர்க்கால லட்சியமும் ஒன்றே இலக்காக கல்வியில் பெரும் கவனம் செலுத்தி கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சியாகி தங்க பதக்கத்துடன் வெளிவந்தாள். இப்போதும் அவளை தாங்கிச் செல்லும் பொறுப்பை ஏற்று சுகமான சுமைதாங்கியாய் அலெக்ஸ் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவள் எழுந்து நடப்பதற்கான இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டப்போதும் மற்றவரின் உதவியோடு அவளால் எழுந்து நின்று ஒன்றிரண்டு அடிகள் எடுத்து […] - [சர்வம் 21](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-21/): அலெக்ஸ் தன்னுடைய முடிவை மறைமுகமாக சர்வத்மிகாவிடம் வெளிப்படுத்திவிட்டு வந்துவிட,அவனின் அத்தகைய புது அவதாரம் மனதிற்குள் இன்பச்சாரலை தோற்றுவித்தாலும் ஏனோ ஒரு உறுதியான முடிவெடுக்க முடியாமல் தடுமாற வைத்தது பாவையவளை!! தன் மனதினுள் அவனிற்கு என்று ஒரு இடம் இருப்பினும்,அதற்காக அவனை நேசிக்கிறாளா என்ற கேள்விக்கு மனசாட்சி விடையளிக்க மறுத்தது. அத்தோடு தன்னுடைய உடல் ஊனமான நிலை அவளின் நேச உணர்விற்கு தடையாய் இருப்பதினாலே ஆண்மை ததும்ப கம்பீரமான தோற்றம் கொண்டவனிற்கு ஏற்ற ஜோடி தானில்லை என்ற தாழ்வுமனப்பான்மை அவளை ஆட்டிப்படைக்க உருகி கரையத்துடித்த மனதை மீண்டும் கடிவாளமிட்டு இழுத்து பிடித்து நிறுத்தினாள். ‘தன்னுடைய மெல்லிய தோற்றமும் ஆண்மகனுக்கே உரிய முழு இலக்கணமாய் திகழும் ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்ட அவன் எங்கே?’ என தனக்குத்தானே கேள்வி எழுப்பியவள் மனசாட்சியை திரையிட்டு மறைத்தாள். காதலிற்கு வயது மட்டுமல்ல தோற்றமும் ஒரு தடையல்ல என்று பாவையவளிற்கு காலம் தான் அலெக்ஸின் கள்ளமற்ற காதலை எடுத்துரைத்து அவனை கணவனாய் […] - [சர்வம் 20](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-20/): பெண்ணவளது மோன நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அலெக்ஸ் அவளை சக்கர நாற்காலியில் இருந்து தூக்கி தன்னுடைய வாகனத்தின் இருக்கையில் அமர வைத்தவன்,பொன்னம்மாவிடம் “பொன்னம்மா இவளிடம் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு…நீ வந்த காரிலே வீட்டுக்கு போ…பேசி முடிச்சிட்டு நானே அவளை கூட்டிட்டு வந்து விடறேன்” நாசி விடைக்க முகம் இறுகி சிவந்திட கடுமையான குரலில் பேசியவனை கண்டு உள்ளுக்குள் ‘ஐய்யோ!தம்பி எதுக்கு இவ்ளோ கோபமா இருக்கு…இந்த புள்ள என்ன பண்ணிச்சோ தெரியலையே?’ அவள் மீதே தவறு இருக்கும் என்று முன்னரே கணித்தவராய் புலம்பினார். அத்தோடு ஆத்திரத்தில் மதியிழந்து அவளை ஏதேனும் அடித்துவிட்டால் என்று அஞ்சி அவளின் அருகிலே கையை பிசைந்துக்கொண்டு நின்றவரை தன்னுடைய கனல் விழி பார்வையால் சுட்டு பொசுக்கியவன் “பொன்னம்மா உன் பொண்ணை கடிச்சு ஒண்ணும் முழுங்கிட மாட்டேன்…முழுசா எப்படி கூட்டிட்டு போறேனோ அப்படியே வந்து ஒப்படைக்கிறேன்…முதல்ல கிளம்பு” இரும்பை விழுங்கியது போல் கடினமாய் வந்து வார்த்தைகள் விழ, […] - [சர்வம் 19](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-19/): அலெக்ஸின் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்யனின் இதழோரம் இரகசிய புன்முறுவல் ஒன்று தோன்றிட ‘பொறாமையில் வெந்து சாகறீயா?நல்லா வேணும்…நீயா வந்து சர்வத்மிகா எனக்கு வேணும்னு சொல்லற வரை உன்னை சும்மா விடறதா இல்லை மவனே’ மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி புறப்பட்டவனிற்கு அதன்பிறகே சர்வத்மிகாவின் நினைவுகள் எழுந்தது. இவனை வெறுப்பேற்றிய மும்மரத்தில் சர்வதமிகா கூறியவற்றை மறந்தவன் ‘ஐய்யையோ கஞ்சிச்சட்டையை கவனிக்கிற நினைவில் அனபெல்லை மறந்துட்டனே’ என அவசரமாக அவளுடைய வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி கதவு திறப்பதற்கு காத்திருந்தான். நொடிகள் நிமிடங்களாய் கடந்ததற்கு பிறகும் கதவு திறக்கப்படாமல் இருப்பதிலே அவளுடைய சினம் பற்றி அறிய முடிந்தது. ‘ஐய்யோ போச்சா’ என தலையில் கைவைத்து அவ்விடத்திலே நின்ற ஆர்யன் “சவிம்மா பிளீஸ்ம்மா கதவை திறம்மா… ஐயம் ரியலி சாரி…அலெக்ஸ் மச்சான் வீட்டுக்கு போயிருந்தேனா அதனால் தான் லேட்டு…ஆனால் உனக்கு பிடிச்ச நெய் லட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்…திற டியர்…அண்ணாவை பார்த்தால் பாவமாயில்லையா?” என மெல்லிய […] - [சர்வம் 18](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-18/): முதலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தவன் சில வினாடிகளில் தலையை உலுக்கி சுய உணர்விற்கு வந்த அலெக்ஸ் தன் தாயிற்கு எவ்வாறு சர்வத்மிகாவை பற்றிய நிஜம் தெரிந்தது என்ற குழப்பத்துடன் தாயை ஏறிட,அவரோ இரு கரங்களையும் கட்டிக்கொண்டு மாட்டிக்கொண்ட குற்றவாளியிடம் விசாரணை செய்யும் காவலர் போல் விறைப்புடன் நின்றிருந்தார். ஆனால் இதில் எந்தவொரு விபரமும் அறியாமல் தமையனின் வார்த்தையில் தலைச்சுற்றி போய் இருவரையும் மலங்க மலங்க விழித்தப்படி ஒன்றும் புரியாமல் குழப்பமாய் பார்த்திருந்த வேளையில் “ஹாய் அத்தை” என்று துள்ளலாய் குரல் கொடுத்தப்படி வீட்டிற்குள் நுழைந்த ஆர்யனை பார்த்தவுடன் அலெக்ஸிற்கு அனைத்தும் விளங்கிவிட ‘துரோகி…எல்லாத்தையும் அம்மாக்கிட்ட உளறிக்கொட்டிட்டான் போல…அதான் அம்மா இப்படி விறைப்போடு நிற்கறாங்க…அறிவுக்கெட்டவன்’ உள்ளுக்குள் தோழனாகி போனவனை வறுத்தெடுத்த அதே வேளையில் வெளியில் அவனை பார்வையால் சுட்டெரித்தான். ஆனால் ஆர்யனிடம் ‘நீ முறைச்சா நான் பயந்திடுவேனா?’ என முகத்தில் எந்த வித பாவனையும் காட்டாமல் வெறுமையாய் வைத்திருந்தவனை பார்த்து மேலும் புகைந்தான் அலெக்ஸ். அதையெல்லாம் […] - [சர்வம் 17](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-17/): சர்வத்மிகாவும் பொன்னம்மாவும் நன்றாக குணமடைந்து புது வீட்டில் குடியேறி ஒரு வாரம் கடந்த நிலையில் அவர்கள் இருவரது இயல்பு வாழ்க்கை நல்விதமாக தொடங்கியது. அலெக்ஸ் இரண்டு நாட்களாக கழுத்தை நெறித்த பணிசுமையின் காரணமாக ஓய்விற்காக வீட்டிற்கு வந்த நிலையில் தன்னுடைய இல்லத்திற்கு வெளியே நிரம்பியிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட காலணிகளை புருவம் சுருக்கி சில கணங்கள் யோசனையோடு பார்த்தவன்,ஒன்றும் புரியாத நிலையில் பின்னங்கழுத்தை ஒரு முறை தடவிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். காக்கி உடையில் வியர்வை படிந்த உடலோடு உள்ளே நுழைந்தவனை கண்டவுடன் பளீர் புன்னகையுடன் அவனை நோக்கி எழுந்து வந்த தாயை இமைகளை குறுக்கி தனது கூரிய விழிகளால் துளைத்தெடுத்தவனின் கண்கள் வரவேற்பறையில் உள்ள நீள்விரிக்கையிலும் நாற்காலியிலும் அமர்ந்திருந்த மனிதர்களை நோட்டமிட செய்தது. அதற்குள் அவனை நெருங்கிய விசாலினி “என்ன கண்ணா இந்த நேரத்தில் வந்திருக்கே?எதுவும் மறந்துட்டு போயிட்டீயா?” என்று பரிவுடன் வினவியவர் அவனது பதிலை எதிர்ப்பாராதது போல் வந்தவர்களின் புறமாக திரும்பி “இது […] - [சர்வம் 16](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-16/): சர்வத்மிகாவிற்கு தேவையான இருப்பிடத்தை தானிருக்கும் குடியிருப்பிற்கு எதிர்ப்புறமாக இருக்கும்படி அமைத்துக்கொடுத்த ஆர்யனிற்கு சர்வத்மிகாவை அதற்கு சம்மதிக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆர்யனை முன்பே ஒருமுறை தங்களது வீட்டில் சந்தித்திருப்பதால் ‘இவன் நிச்சயம் அலெக்ஸின் வேண்டுக்கோளிற்கிணங்கியே இதனை செய்ய விளைகிறான்’ என்பதை யூகிக்க பெரிதாக மூளை ஒன்றும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே ஆர்யன் செய்த உதவிகள் அனைத்தையும் முரண்டுப்பிடித்து மறுத்தவளால் அவனுடைய அன்பான வார்த்தைகளுக்கு கட்டுப்பாடாமல் இருக்க இயலவில்லை. ஏனெனில் “பிறந்ததிலிருந்து யாருமற்ற அனாதையாக வளர்ந்துவிட்டேன்…உன்னை பார்த்தால் எனக்கொரு தங்கை இருந்திருந்தால் உன்னை போல் இருப்பாள் என்று தோன்றுகிறது…இதற்கு மேல் வாழப்போகும் வாழ்க்கையில் எனக்கொரு தங்கையாக இருந்து ஒரு புது உறவை அளிப்பாயா?” என யாசகமாக இறைஞ்சியவனிடம் தனது பிடிவாதத்தை இழுத்துப்பிடிக்க இயலாமல் ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள். ஆயினும்,அவனுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை ஆர்யன் ஏற்றுக்கொண்டதற்கு பிறகே அவனுடன் வர சம்மதித்தாள். அவள் விதித்த கட்டளைகளை கேட்ட ஆர்யனிற்கு முதலில் தலை […] - [சர்வம் 15](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-15/): ஆர்யன் கூறியதை கேட்டு பதட்டத்தோடு ஒரு பிரபல மருத்துவமனைக்குள் வியர்வை படிந்த முகத்தோடு நுழைந்த அலெக்ஸ் கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடினான். அவனது கம்பீரம் பொருந்திய ஆண்மகனுக்கே உரிய இலக்கணம் கொண்ட கர்வம் தலைவிரித்து ஆடுபவனின் அழகிய வதனத்தில் முதன்முறையாக மிளிர்ந்திருந்த அச்சத்தை ஆச்சரியத்தோடு பார்த்த ஆர்யன் “அலெக்ஸ் இங்க வாங்க” அலைப்புறுதலுடன் கண்முன்னே நின்றிருந்தவனை கவனியாமல் பார்வையை அலைப்பாய விட்டப்படியே ஓடி வந்தவனை கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான். அவனும் அவ்விடத்திலே நின்றப்பொழுதும் “ஆர்யன் எங்க அவங்க?நான் உடனே அவங்களை பார்க்கணும்…அவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?அடி எதுவும் பலமா இருக்கா?” என்று பொரிவது போல் கேள்விக்கணைகளைத் தொடுத்து படபடப்போடு விழிகளை சுழற்றியவனின் தோளை இறுக பற்றி நிலை நிறுத்திய ஆர்யன் “அலெக்ஸ் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை…கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனை அதட்டி அடக்கினான். அதில் தன்னிலை உணர்ந்த அலெக்ஸ் நெற்றியை நீவி “ச…சர்வாக்கு…” எத்தனை முயன்றும் குரலில் […] - [சர்வம் 14](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-14/): தொடர்ந்து வந்த நாட்களில் அலெக்ஸ் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு சர்வத்மிகா சமுதாயத்தை எதிர்க்கும் போர் வீராங்கனையாய் இரும்பு கவசங்களுடன் தயாராகினாள். தன்னுடைய உடலை பேணி பாதுகாக்கும் சிறு சிறு பணிகளை பொன்னம்மாவை எதிர்ப்பாராமல் தானே செய்துக்கொள்ள பழகத்தொடங்கினாள். இதற்கிடையில் தன்னை ஒதுக்கி வைத்தே பழகும் விசாலினி மற்றும் டெய்ஸியின் சில  செயல்களினால் பல வேளைகளில் மனதில் காயம் ஏற்பட்டாலும்,அதனை எளிதாக கடந்துச்செல்ல பழகிக்கொண்டாள். இருப்பினும் ஒரு நாள் கல்லூரியில் நிகழ்ந்த உச்சக்கட்ட கேலியினால் மனதில் பெரும் பாதிப்புடன் வீட்டிற்கு வந்தப்போது அலெக்ஸின் திருமணத்திற்காக பார்த்த பெண்களை பற்றிய பேச்சு காதில் விழ திடுக்கிட்டு சக்கர நாற்காலியின் சுழற்சியை நிறுத்தி சிலையானாள். அவனின் திருமண பேச்சுகள் அவளிற்கென இருக்கும் அரும்பெரும் பொக்கிஷத்தை இழந்தது போல் ஒரு உணர்வை தோற்றுவிக்க திகைப்போடு முகம் வெளிறி தாய் மற்றும் மகளின் அறைக்கு முன்னாலே வேதனை சுமந்த விழிகளோடு அமர்ந்திருந்த வேளையில் திடீரென்று டெய்ஸியின் குரல் ஓங்கி ஒலித்தது. […] - [சர்வம் 13](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-13/): பத்தொன்பது வயது நிரம்பிய பாவையின் இதயத்திற்குள் இதுவரை இல்லாத ஒரு வேதனை உணர்வு ஆக்கிரமித்திருந்தது. இதுவரை எத்தனையோ பாணியில் துன்பங்களை அனுபவித்து வந்தவளிற்கு இது என்ன வகையான துயரம் என பகுத்தறிய முடியவில்லை. ஏனெனில் அவன் திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்த அடுத்த வினாடி அடிவயிற்றிலிருந்து ஒரு வலி கிளர்ந்தெழுந்து இதயத்தையும் தொண்டையையும் ஒரே அடியாய் அடைத்து மூச்சடைப்பது போலான உணர்வை இதுவரை பெண்ணவள் அனுபவித்தறியாத ஒன்று. ஆனால் ‘அவன் திருமணம் செய்தால் தனக்கு என்ன?’ என்று கவலையில் கிறுகிறுத்து மயக்கமடைய சென்ற மூளையை ‘ஏய்!ஒரு நிமிஷம் இரு…என்னை யோசிக்க விடு’ என அதட்டி அடக்கிய அந்த சிறு உள்ளத்தால் அதற்கான பதிலை கண்டறிய முடியவில்லை என்பதே நிஜம்!! தலையை இரு கரங்களால் தாங்கிக்கொண்டு சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் மடைத்திறந்த வெள்ளமென பெருகிக்கொண்டிருந்தது. அதனை உணர்ந்து அதிர்ச்சியுடன் மேனி தூக்கிவாரிப்போட அழகிய மான் விழியில் கன்னத்தில் வழிந்த கண்ணீரை தொட்டு […] - [சர்வம் 12](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-12/): இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் சர்வத்மிகாவும் அலெக்ஸூம் கடிகாரத்தில் மணி ஒன்பதை கடந்ததற்கு பிறகும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். பொன்னம்மா தாமதமாக உறங்கினாலும் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு அதிகாலையிலேயே எழுந்து தனக்கு கொடுத்த பணிகளை செவ்வனே செய்யத்தொடங்கிவிட்டார். விசாலினி காலை எழுந்ததற்கு பிறகு மகன் தன்னறையில் உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தவர்,இன்று அவனிடம் எப்பாடுபட்டாவது அவனது திருமணம் தொடர்பாக பேசிட வேண்டும் என்று ஆவலாய் காத்திருக்க தொடங்கினார். அவனிடம் எப்பொழுது திருமணத்தை பற்றி பேசினாலும் பிடிவாதமாக அதனை மறுத்துவிடுவான்.அதில் மிகப்பெரிய மன வருத்தம் அவரை வதைக்க அவனை பெற்றெடுத்த தாயாக இருப்பினும் அவராலும் எதையும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் விசாலினி. ஆரம்பத்தில் அவனிற்கு மணம் செய்வதற்காக பெண்களை பார்க்க தொடங்கிய வேளையில் ஆடவன் காவல் நிலையத்தில் பணிப்புரிகிறான் என்பதற்காக வரும் வரன்கள் அனைத்தும் தட்டி பறிப்போனது. அதையும் கடந்து ஒரு சிலர் தங்கள் வீட்டு பெண்களை கொடுக்க முன் வந்தாலும் மணமகனிற்கு […] - [சர்வம் 11](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு வழியாக தன்னுடைய பணிச்சுமை முழுமையாக தணிந்ததற்கு பிறகே அலெக்ஸால் அவனது வீட்டின் மீது கவனம் செலுத்த முடிந்தது. திடகாத்திரமான ஆடவன் என்றாலும் இந்த குறிப்பிட்ட தொடர் கொலை வழக்கில் ஏற்பட்ட அளவிட முடியாத அலைச்சலினால் அவனது படிக்கட்டு தேகம் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. இரவு நேரத்தில் அந்த வழக்கு சம்பந்தமான சட்ட விதி முறைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு வருகையில் நள்ளிரவு பன்னிரெண்டு மணியானது. அவன் இன்று இல்லம் வருவதை பற்றி எந்த தகவலும் கூறாததால் அவனது தாய் விசாலினியும் தங்கை டெய்ஸியும் முன்னரே உறங்கிவிட்டிருந்தனர். ‘தனக்காக விழித்து காத்திருக்கக்கூடாது’ என கண்டிப்பான கட்டளை போட்டிருப்பதால் அவனிற்காக யாவரும் கண்விழித்து காத்திருப்பதில்லை. எப்பொழுதும் போல் தன்னிடமுள்ள சாவியை வைத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த அலெக்ஸின் தேகமோ வெகுவாக களைத்து சோர்ந்திருக்க,முதன்முறையாக அவனது ஒட்டிய வயிறு பசியென்ற உணர்வை அதிகமாய் உணரத்தொடங்கியது. ஆயினும்,இதுநாள் வரை தன்னுடைய பணிகளை தானே செய்து […] - [பிழை-30](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-30/): அனு வரைந்திருந்த காகிதத்தை கையில் வைத்திருந்தாள் ஆருத்ரா . சிறிது நேரத்தில் அவளருகே வந்த வாசு கையை நீட்டினான். என்னவென்பது போல அவள் நிமிர்ந்து பார்த்தாள். “அனுவோட ட்ராயிங்…” என்றான் மொட்டையாக. தன் கையிலிருப்பதை தான் கேட்கிறான் என புரிந்தது. அவனிடம் நீட்டினாள். வரை படத்தை வாங்கியவன் அறையை நோக்கி நடந்தான். அறையிலிருந்து ஓடி வந்த அனு அவளிடம்  ,” ஆன்ட்டி எனக்குத் தலையை பின்னி விடுறீங்களா..?பைக் ரைட் போகணும்..” என்றாள். அவள் முன்பு குனிந்தவள், “ ம்ம்…ஒகே உனக்கு சூப்பரா ஒரு ஹர் ஸ்டைல் பண்ணவா..?”என்றாள் விழிகளை  விரித்து. “ ம்ம்…ஓகே..ஆன்ட்டி” என்றாள் உற்சாகமாக. அழகாக ஃபிரஞ்ச் ஃப்ளாட் போட்டுவிட்டாள் அனுவிற்கு. மிதமான ஒப்பனை செய்து விட்டு அழகிய நீண்ட ஃப்ராக்கை அணிவித்து விட்டாள்.  ஃப்ராக்கை அணிந்து ஒரு முறை சுற்றி பார்த்துக் கொண்டாள். கன்னத்தில் கை வைத்து அனுவை ரசித்திருந்தாள் ஆருத்ரா.   “ ஹய்…சூப்பர்…!” என வாய் விட்டு […] - [முகிழ்மதி 124(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1241/):     அடுத்த நாள் காலை தமயந்திக்கு முன்பே எழுந்துவிட்ட வீர்,அசதியில் உடல் களைத்து வெற்றுடம்புடன் படுத்திருந்த மனைவியாளை இரக்கத்துடன் நோக்கி “ரொம்ப டையர்டா இருக்காள் போலே பாவம்…தூங்கட்டும்” என மெதுவாக குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு குளித்துவிட்டு கீழிறங்கி சென்றான். மருமகனை தனித்து கண்டதும் “எங்க வீர் நீ மட்டும் வர்றே?லட்டு எங்கே?” என வானதி வினவ, அவனோ “அவ இன்னும் எழுந்திரிக்கலை…தூங்கறாள்மா” என்றான் எதார்த்தமாக… அவனின் பேச்சை கேட்டு “ப்ச் தூங்கறாள்னா எழுப்பி விட வேண்டியது தானே வீர்…” என வானதி அங்கலாய்ப்புடன் வினவ, அவனோ மென் சிரிப்புடன் “பாவம்மா அவள்…ரொம்ப டையர்டா இருக்காள்…தூங்கட்டும்” என்றான் அக்கறையாக… மகளின் மீது அவன் வைத்திருக்கும் அன்பில் அவரின் உள்ளம் நனைந்தாலும் அவன் மேல் கருணையும் கொண்டார்‌. “வீர் என் மகளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்…நீ இப்படியே அவளுக்கு பாவம் பார்த்தேன்னு வைய்யு…அவ உன் தலையிலே மிளகாய் அரைச்சிட்டு போயிட்டே இருப்பாள் […] - [முகிழ்மதி 123(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1232/):         அறை முழுவதும் இருள்… ஆழ்ந்த நிசப்தம்… ஆனால் சல்லாபத்தில் ஈடுப்பட வேண்டிய தம்பதியினரோ விழிகள் மூடி படுக்கையில் ஆளுக்கொரு புறமாக சயனித்திருந்தனர். இருவரின் இமைகளும் மூடியிருந்ததே ஒழிய,இருவரும் நித்திரை கொள்ளவில்லை. ஆம்,தமயந்தி எண்ணுவது போல் வீர் உறங்கியிருக்கவில்லை. அவனிற்குள் நெஞ்சை முட்டும் அளவு தாபங்கள் முகிழ்ந்திருந்தாலும்,தன்னவளை அணுகும் வழி அறியாமல் திணறியிருந்தான். அவளின் மீதுள்ள நேசத்தை உணர்ந்து அதனை யாசிக்கவே அவனிற்கு பல யுகங்கள் கடந்திருந்தன. இந்நிலையில் ‘வேண்டாம்’ என்று மறுப்பு தெரிவிப்பவளிடம் அவன் கட்டாய உறவுக்கொள்ள முயற்சி செய்வானா என்ன? பெண்களின் உணர்வுகளை மதிப்பவன்,இப்போதும் தன்னுணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இமை மூடி படுத்திருந்தான். அவனது இமைகள் இரண்டும் மூடி கிடந்ததே ஒழிய,ஆடவனின் மனம் தன்னவளை தான் அவதானித்துக் கொண்டிருந்தது. அச்சமயம் தன்னவளிடம் அசைவை அறிந்த வீரின் செவிகள் இரண்டும் கூர்த்தீட்டின… அப்போது தான் அவளின் புலம்பலையும் அவனால் கேட்க முடிந்தது. அதுவரை தன்னில் அவள் கோபம் கொண்டு […] - [முகிழ்மதி 123(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1231/):     திருமணம் முடிந்த கையோடு வீர் தமயந்தி தம்பதியினர் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள்‌. தேவகியிடம் அட்சதை கொடுத்து “அம்மா இதை அண்ணா அண்ணி மேலே போட்டு வாழ்த்துங்க” என சந்திரமதி தாயின் கையில் கொடுக்க, அவரோ மகள் கூறியதை ஏற்று தன் பாதம் தொட்டு பணிந்தவர்களை வாழ்த்தியிருந்தார். அன்னையின் ஆசிர்வாதம் கிட்டியதும் வீருக்கு அளப்பறியா ஆனந்தம்! அதனால் தன் அன்னையை பூரிப்போடு அவன் பார்த்திருந்த வேளையில் “தமயந்தி பூபதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கம்மா” என காஞ்சனா மாலா சொல்ல, தமயந்தியும் ரத்தினவேலின் காலில் விழப்போக “நான் விழவேணாமா பாட்டி?” என வீர் சந்தேகம் கேட்க, ரத்தினவேலோ நண்பனை யோசனையாக பார்த்தான். பாட்டியோ “நீ எப்படிப்பா விழ முடியும்?முகிழ் உன் தங்கச்சியாச்சே…நீ விழ தேவையில்லை” என்றார். ஆனால் அவனோ மறுப்பாக தலையசைத்து “பரவாயில்லை பாட்டி…என் தங்கச்சி காலில் விழறது எனக்கு ஒண்ணும் அவமானமில்லை…” என சிறிதும் ஆட்சேபணையின்றி கூறியவனை மற்றவர்கள் […] - [அத்தியாயம்-5](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): மாதேஷும் ஆதீரனும் கிளம்பி சென்றது நேராக மாதேஷின் வீட்டிற்கு தான். வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் வீடு முழுக்க நெய் மணம் வீசியது.  “வாவ்… என்ன வாசனை… மாம்… மாம்…” என்று கூறிக்கொண்டே ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்தான் மாதேஷ். அவனை தொடர்ந்து  ஆதீரனும் உள்ளே நுழைந்தான்.  “ஜானு… ஜானு… எங்க இருக்க…” என்று கூறிக்கொண்டே சமையலறை நோக்கி சென்றான் மாதேஷ்.  ஆதீரனோ வரவேற்பறையிலேயே அமர்ந்து விட்டான்.  “டேய் எதுக்குடா இப்படி கத்திட்டே வர்ற?” என்று மாதேஷ் சமையலறையில் நுழையும் முன்பே எதிர்ப்பட்டார் மாதேஷின் அன்னை ஜானகி. “ஜானு… என்ன ஸ்வீட் செஞ்ச… வீடெல்லாம் நெய் மணக்குது… இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..” என்று ஆர்வமிகுதியில் அடுக்கடுக்காக கேட்டான். “முதல்ல இத சாப்பிடு… ரீஷன் எல்லாம் சாப்பிட்ட பின்னாடி சொல்றேன்…” என்று தட்டில் இருந்த இரண்டு கிண்ணங்களை கொடுத்தார். ஒன்றில் சர்க்கரை பொங்கலும் மற்றொன்றில் கேசரியும் கொடுத்தார். இரண்டையும் இரண்டு கைகளில் வாங்கி கொண்ட மாதேஷோ […] - [அத்தியாயம்-4](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-2/): மாதேஷின் வார்த்தைகளில் மறந்திருந்தேன் என்று நினைத்து கொண்டிருந்தவளை கண் முன்னே கண்டான் ஆதீரன். ஒரு அழகான வாலிபனுடன் உதடுகள் மட்டுமல்ல கண்களும் புன்னகையில் விரிய ஏதேதோ பேசி கொண்டு வந்தாள். அந்த வாலிபனின் கைகளில் நான்கு வயது பெண் குழந்தை ஒன்று. அதுவும் அழகாக அவனுடன் ஒட்டி கொண்டு வந்தது. இந்த காட்சியை யார் பார்த்திருந்தாலும் அவர்களின் பார்வைக்கு இவர்கள் மூவரும் ஒரு அழகான குடும்பமாக தான் தெரிவார்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் மாதேஷைப் போல் அதீரனும் இவர்களை பார்த்து அவ்வாறே நினைத்திருந்திருப்பான். ஆனால் நீலாம்பரியை அவனால் அவ்வாறு நினைக்க முடியவில்லை. அவளுக்காக படைக்கப்பட்டவன் அவன். அவனுக்காக படைக்கப்பட்டவன் அவள் என்று தான் இன்னமும் நினைக்க தோன்றுகிறது அவனது மனதால். ஏனோ கறபனையில் கூட இன்னொருவனுடன் சேர்த்து வைத்து பார்க்க அவனால் முடியவில்லை. நவீன ராவணனாகவே தன்னை நினைத்து கொண்டான். நேரமும் காலமும் கூடி வந்தால் எப்படியாவது அவளை அவனை விட்டு பிரித்து கண் […] - [அத்தியாயம்-3](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): அத்தியாயம் – 3 நீலாம்பரியை பற்றிய யோசனையுடனேயே அமர்ந்திருந்தார் சதாசிவம்.  “இன்னைக்கு நீலா நடந்து கொண்டது எதுவும் சரியில்லையே… அவ ஒரு நாளும் இப்படி தடுமாறினது இல்லையே. இன்னைக்கு அந்த பையன் வந்ததுல இருந்து அவளது பார்வை அந்த பையனை விட்டு இம்மியளவும் அசையவே இல்லையே.” என்று நினைத்து கொண்டார். நீலா நினைத்தது சரி தான் அந்த அனுபவமிக்க முதியவர் கண்ணசைவிலேயே அவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொண்டார். ஆனால் அறிந்து கொண்ட நபர் நீலா நினைத்தது போல் ஆதீரனை அல்ல நீலாம்பரியை தான்.  ஆதீரன் உள்ளே நுழைந்ததும் ஏதோ கேட்பதற்காக நீலாம்பரியை ஏறெடுத்து பார்த்தவர் முதலில் அவளது கண்களில் ஆச்சர்யத்தையும் அடுத்து சாதாரணமாக ஆனதையும் உணர்ந்தவர் அதன் பின்னே இருவரையும் கவனிக்க தொடங்கினார்.  நீலாம்பரியின் கண்களில் என்றுமில்லாத ஒரு ஏக்கத்தை அவர் கண்டு கொண்டார். எப்பொழுதும் அவளது கண்களில் ஒரு சோகம் இழைந்தோடும். ஆனால் இன்று அதனோடு ஒரு ஏக்கத்தையும் கண்டு கொண்டார்.  […] - [அத்தியாயம்-2](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-2/): அத்தியாயம் – 2 யோசித்து சொல்கிறேன் என்று சதாசிவம் கூறியதுமே எப்படியும் இந்த வேலை தனக்கு கிடைக்க போவது இல்லை என்று நினைத்து கொண்டு “ஓகே சார்…” என்று கூறியவன் அந்த இருக்கையில் இருந்து எழுந்திருக்கும் முன்பே “யூ ஆர் அப்பாய்ண்ட்டு…” என்று அந்த அறையின் நிசப்தத்தை கிழித்து கொண்டு ஒலித்தது கணீரென்று அழகிய பெண் குரல்.  அப்பொழுது தான் அந்த சிலைக்கு உயிர் வந்தது போல் பேசியது. உள்ளே நுழைந்த பொழுதே அவளது அழகிய வதனத்தை பார்த்து இமைக்க மறந்து அவளை பார்க்க தேன்றினாலும் சதாசிவம் இவனிடம் கேள்வி கேட்டு அவனின் சிந்தனையையும், கவனத்தையும் திசை திருப்பி இருந்தார். இப்பொழுது தான் அந்த அழகிய சிலையை மீண்டும் கண் கொண்டு பார்த்தான் ஆதீரன். சில நிமிடங்கள் அவளது பார்வையை பார்த்தவன் அவளது விழி வீச்சில் கட்டுண்டு மெய் மறந்து இருந்தான். “நீலா… என்னமா சட்டுனு ஒகேனு சொல்லிட்ட… எதுக்கும் கொஞ்சம் யோசிக்கலாமே…” […] - [முகிழ்மதி 122(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1222/):     மற்றொரு நாள் வீர் அவளை அவனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். இதற்கு முன்பு அவள் பல முறை தன் வீட்டிற்கு வந்திருந்தாலும்,இன்று முறையாக அவளை தன் அன்னையிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்து வந்திருந்தான். அவளை தன் தாயின் முன்னிறுத்தி அவளின் கரத்தை இறுக பற்றிக்கொண்ட வீர் “அம்மா இது தான் உங்க மருமகள்” என அவளை காதலோடு பார்த்துக்கொண்டே மென்சிரிப்புடன் அறிமுகப்படுத்த,அவனை ஆச்சரியமாக ஏறிட்டாள் தமயந்தி. தேவகியோ அவளை புருவம் சுருக்கி பார்த்திருக்க,விஜயலட்சுமியோ “வாழ்த்துக்கள் தம்பி…வாழ்த்துக்கள் பாப்பா” என இருவருக்கும் பொதுவாக வாழ்த்துத் தெரிவித்தார். அவன் இவ்வாறு தன்னை அவனது தாயிடம் அறிமுகப்படுத்துவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘இது என் வீர் தானா?’ என உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த மகிழ்ச்சியுடன் அவனை ஏறிட, தேவகியோ “லட்டு” என அவளை அழைக்க,இப்போது அதிர்ச்சியடைவது வீரின் முறையாயிற்று! முன்பொரு முறை தன் மனதிற்கு பிடித்தவளை பற்றி அவன் எடுத்துரைத்ததை நினைவுறுத்தி ஞாபகமாய் அவர் அழைக்க “அம்மா […] - [சர்வம் 10](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-10/): ஆண்கள் மேம்போக்காக ஒரு விடயத்தில் நோட்டம் விடுவதால் தான் குடும்பத்திற்குள் தங்களை அறியாமலே சில விரிசல்கள் வர எளிதாக காரணமாகிறார்கள். அலெக்ஸூம் அந்த வகையாறாவில் தன்னை அறியாமல் சேர்ந்துவிட்டாலும் முழுவதுமாக அப்படியான வகையில் சேராமல் விரைவாகவே மனம் தெளிந்து சுதாரித்திருந்தான். ஏனெனில்,இங்கு வீட்டு பெண்களுக்கிடையே நடைப்பெற்ற உரையாடல் முழுமையையும் அந்த தருணத்தில் தன்னுடைய இல்லம் நோக்கி வந்தவனின் செவியில் தெள்ள தெளிவாக விழுந்திருந்தது. பிறந்ததிலிருந்து அவன் அறிந்த வகையில் அவனது தங்கை இதுப்போல் கடினமான சொற்களை உபயோகிக்க கூடிய கொடிய மனம் கொண்டவள் இல்லை என்பதை சரியாக கணித்தவன்,அதற்கான காரணங்களை ஆராய்ந்தவாறே தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்துக்கொண்டு உள் வந்தவன் நேரே தன் அறைக்குள் சென்று கூட்டிற்குள் அடைந்துக்கொண்டான். நெற்றியை யோசனையோடு வருடியப்படியே மெத்தையில் விழுந்தவன் ‘நான் எங்கு தவறுகிறேன்?’ என்று சரியான பாதையில் சிந்திக்க தொடங்கியவன்,பெண்கள் மூவரின் வார்த்தைகளையும் நியாய தராசில் வைத்து குற்றங்களை அலசி ஆராய தொடங்கினான் […] - [சர்வம் 9](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-9/): வந்தவர்கள் இருவருக்கும் தான் அங்கிருப்பதில் பிடித்தமில்லை என்பது பதுமையவள் தெளிவாக உணர்ந்திருந்தாலும்,ஏனோ தன்னுடைய எதிர்க்கால வாழ்வே அங்கு தான் இருப்பது போல் உள்மனம் அச்சரம் பிசகாமல் கூறியதை அவள் எவ்வாறு மறுக்க? அத்தோடு யாருமில்லை என்று கவலையில் உழன்று நேரத்தில் அதிரடியாய் தன் வாழ்வில் நுழைந்து அன்பு செலுத்தும் அந்த ஒற்றை ஜீவனை இழக்க விரும்பவில்லை பாவையவள். அது சற்றே சுயநலம் என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக அவர்களது பார்வையில் தெரிந்த உதாசீனத்தையும்‌,அதனால் விளைந்த அவமானத்தையும் தாங்கிக்கொண்டு இல்லத்தினுள்ளே தங்கிக்கொண்டது அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரி. அவனது தாயின் கண்களில் கூட தன் மகனின் தலையில் சுமையாய் வந்துவிட்டாள் என்ற எரிச்சல் மண்டியிருந்தது என்றால்,அவன் தங்கையின் கண்ணில் சினம் மட்டுமே தாண்டவமாடியது. பெண்ணவளது கடுகடுத்த முகத்திற்கு காரணம்,அவனது தங்கை டெய்ஸியின் அறையில் தான்,தற்போது சர்வத்மிகா தங்கியிருப்பதாக பொன்னம்மாவின் வாய்மொழியாக கேட்டு தெரிந்துக்கொண்டவளிற்கு அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதற்கான செயற்காரணத்தை அறிந்துக்கொள்ள […] - [சர்வம் 8](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-8/): மருத்துவரை பார்த்து வந்ததிலிருந்து அவளுடைய நடவடிக்கைகள் மீண்டும் பழையது போல் மூர்க்கத்தனமாக மாறியது. மாத விலக்கு காலத்தில் நடந்த நிகழ்விற்கு பிறகு இத்தனை நாட்களாய் வீடு இல்லாமல் காடுமேடெல்லாம் ஓய்வின்றி ஒரு வித அலைப்புறதலுடன் அலைந்து திரிந்து இறுதியாக தனக்கென ஒரு அமைதியான வீடு வந்து சேர்ந்தது போல் சாந்தமடைந்த உள்ளத்திற்குள் ‘நாம் குணமடைந்தவுடனே தன்னை அனுப்பிவிடுவானோ?’ என மீண்டும் மனதிற்குள் சூறாவளி வீசத்தொடங்கியது. தெளிந்த நீரோடையாக சென்றுக்கொண்டிருந்த வாழ்வில் அந்த மருத்துவரின் வார்த்தைகள் கல்லெறிந்துவிட்டது போல் அவளின் மனம் கலங்கிப்போனது. யாரிடமும் எதையும் பேசாமல் தன் கூட்டிற்குள்ளே ஒளிந்துக் கொண்டவள்,எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்திருந்தாள். அவளிற்கு எதை பொன்னம்மா செய்ய நினைத்தாலும் அதனை நிர்சந்தையாக மறுக்க தொடங்கியவளை சமாளிக்க முடியாமல் அவர் விழி பிதுங்கினார் என்றால்,அலெக்ஸோ வேறொரு குற்ற வழக்கில் துப்பு துலக்குவதற்காக இரவு பகலாக காவல்நிலையமே கதியாக கிடந்தான். அவளது அச்சம் இமயம் தொடுவது போல் வேறொரு சம்பவமும் நிகழ்ந்தது. […] - [சர்வம் 7](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-7/): பல வருடங்களாக காவல் துறையில் பணிப்புரிந்து எதிரிகளுக்கெல்லாம் சிம்மச்சொப்பனமாய் விளங்கிய வீர தலைவனிற்கே இந்த ஒரு சூழ்நிலையை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும் என்ற விடயம் தெரியாமல் சில நிமிடங்கள் தடுமாறியவனை கண்டவளிற்கு மனம் வலிக்க செய்தது. விழி மூடி இதழ் கடிக்க உலகத்திலுள்ள ஒட்டுமொத்த அவமானத்தையும் ஒன்றாக குத்தகை எடுத்தவள் போல் கண்ணோரம் வைர துளிகள் பளபளக்க,அவனுடைய அதிர்வை உள்வாங்கி “இதற்கு தான் சொன்னேன்…கிட்ட வராதீங்கனு” என்று இதழ்கள் துடிக்க குற்றம் சாட்டுவது போல் கூறினாலும் அதில் தன்னுடைய உடல்நலம் சரியாக இருந்தால் இதுப்போலான நிலையை அனுபவித்திருக்க மாட்டேனே என இயலாமையே மிதமிஞ்சி தெரிய உள்ளம் நொறுங்கிப்போனாள். அவளின் குரல் தடுமாற்றத்துடன் ஒலித்தாலும் அதில் இருந்த உணர்வுகளை சரியாய் படித்த ஆறடி ஆண்மகன் ஒரு முறை தலையை குலுக்கி சமன்செய்துக் கொண்டு பெண்ணவளை திடமான பார்வையுடன் எதிர்க்கொண்டவன் “சர்வத்மிகா இதுக்காகவா என்னை கிட்ட வரவேண்டாம்னு சொன்னாய்…நான் கூட வேற என்னவோனு நினைச்சு கோபப்பட்டுட்டேன் […] - [சர்வம் 6](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-6/): சர்வத்மிகாவை கட்டாயப்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறியவனின் இதழோரம் புன்னகை பூக்க ‘உன்னை உன் வழியில் சென்று தான் மீட்க முடியும்’ என்று எண்ணி இருபக்கமும் தலையசைத்து சிரித்தவாறே காக்கி நிற தொப்பி அணிந்து காவல் நிலையம் புறப்பட்டுச் சென்றான். அங்கு தனக்கென காத்திருக்கும் பணியை நிறைவேற்றும் கடமை தவறாத காவலனாய் அதில் மூழ்கிப்போனான். ஒரு முக்கியமான கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை தேடிச் சென்று சேகரித்து வீடு திரும்புகையில் மணி இரவு பதினொன்றை கடந்திருந்தது. தன்னிடமிருக்கும் சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் நேராக தன்னறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான். அதுவரை வேலையில் மூழ்கி சர்வத்மிகாவை மறந்து கொலை வழக்கை பற்றிய தீவிர சிந்தனையில் இருந்தவனிற்கு அப்போது தான் சர்வத்மிகாவின் நினைவுகள் எழுந்தது. ஆயினும்,நேரடியாக தடாலென்று ஒரு பெண்ணின் அறைக்குள் நுழைய விருப்பமின்றி யோசனையோடு உடையை களைந்து வேறு உடை அணிந்து காத்திருந்த வேளையில் அவன் அறைக்கதவை தட்டும் ஓசை கேட்டு […] - [சர்வம் 5](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-5/): சர்வத்மிகா அலெக்ஸ் பாண்டியனின் வீட்டிற்கு வந்த அடுத்த தினம் தனக்கென கொடுத்த அறைக்குள் முடங்கியிருந்தவளின் கண்ணீர் வற்றாத ஜீவநதியாய் பொங்கி பெருகிக்கொண்டிருந்தது. ‘அவரிடம் தனது தமையனிற்காக வீராவேசத்துடன் பேசிவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த உத்தமரை எதிர்க்கொள்வது?’ என மனதிற்குள்ளே அரற்றிக் கொண்டிருந்த பாவையவள்,அறையை விட்டு வெளியே வருவதில்லை. பொன்னம்மா எத்தனையோ முறை அவளை உணவருந்தும்படி அழைப்பு விடுத்தும்,அவளோ தனக்கு எதுவும் வேண்டாம் என்று அறையினுள் வெறும் கூடாகிய மனதுடன் குற்றுயிராய் படுத்திருந்தாள். அச்சமயம் அவளிருக்கும் அறையின் கதவை வெடுக்கென்று திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த அலெக்ஸ் பாண்டியனோ கண்ணில் தீப்பொறி பறக்க “உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கிறே?பாவம் சின்ன பொண்ணுனு பொறுமையா போனால் என்னுடைய கோபத்தை ரொம்பவும் சோதிக்கிறே நீ” என படபடவென நாசி விடைக்க பொரிந்து தள்ளியவன் கதவருகே காலை அகட்டி நின்று தனது கால்சராய் பையினுள் கைவிட்டு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான். பெண்ணவளோ ஆடவனின் கணீர் குரலில் திடுக்கிட்டு […] - [சர்வம் 4](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-4/): சர்வத்மிகாவின் அலறல் குரலை ஒரு பொருட்டாக கூட மதியாமல் அவளை நோக்கி தன் இரும்பு கரங்களை கொண்டுச் சென்ற அலெக்ஸோ அவளின் தோள்பட்டையை பிடித்து தன்னை நோக்கி வெடுக்கென்று இழுத்தான். அவனது கரங்கள் ஊறிய பெண்ணவளின் மேனியோ அருவருப்புடன் சிலிர்த்து கண்கள் இரண்டையும் இறுக்கி மூடியவள் “ஏய் விடு” என அவனை ஆவேசமாக பூங்கரங்களால் அடிக்க சென்றாள். அதனை முன்பே கணித்தவனாய் தன் முரட்டு கரம் கொண்டு இரண்டு கரங்களையும் சிறை செய்தவன்,பாவையவளின் கண்களை அழுத்தமாக பார்த்தவாறே அவளின் முதுகுப்புறமாக குனிந்தான். சடுதியாக,அவளின் பின்புறம் படர்ந்திருந்த கார்மேக கூந்தலை தூக்கி முன்னால் விட்ட ஆடவனின் சூடான மூச்சுக்காற்று காரிகையின் கழுத்தோரம் படிந்து அங்கிருந்த மயிர்க்கூச்சரிந்து எழுந்து நிற்க வைத்தது. அச்சிறு பெண்ணின் நெஞ்சமோ படபடக்க “ஏ…ய்…ஏய்…என்ன செய்யறே?” என உரக்க குரல் கொடுத்தவளை கண்டுக்கொள்ளாமல்,குனிந்து அவிழ்ந்திருந்த மேல் சட்டையின் இரண்டு கொக்கிகளையும் போட்டுவிட்டு அவளின் செவியோரம் “நாகரீகம்ன்ற பேரில் கண்ட துணியையும் போட […] - [சர்வம் 3](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-3/): சர்வத்மிகாவின் உள்ளத்து கேள்வியினை உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்தும் மதிமுகத்தின் வழியாக கூரிய விழிக்கொண்டு படித்திருந்தான் ஆடவன். அதனால் இதழ்ப்பிரித்து தனக்கே உரிய மிடுக்குடன் “நானே தான்” என்று அவ்விடமே அதிர நக்கலாக பதிலுரைத்தவனின் குரலில் அதுவரை இருந்த மங்கையின் அதிர்ச்சி முற்றிலும் விலகினாலும்,இதயத்தில் உருவாகிய அச்சம் மட்டுமே அவ்வாறே நீங்காமல் இருந்தது‌. அதேசமயம்,அவளிடத்தில் உச்சகட்ட துவேசமும் கோபமும் கூடவே வியாபித்தது. உடனடியாக,பயத்தை புறம் தள்ளி அடிவயிற்றிலிருந்து கனன்ற நெருப்பு கங்குங்களை அவன் மீது உக்கிரமான பார்வையாய் செலுத்திய தேவியவள்,அவனை கண்ணால் கூட காண தகுதியற்றவனாய் முகத்தை அருவருப்புடன் சுழித்து மகிழுந்துவின் கதவை திறந்து அவசரமாக வெளியேற முயன்றாள். அதில் இமைகள் இடுங்க அவளை இதழ் வளைத்து ஒரு பார்வை பார்த்து “என்ன முடியலையா சர்வத்மிகா?” என அவளின் இயலாமையை குத்திகாட்டியவன்,பின்பு எதையோ நினைத்தவனாய், “இதற்கு மேல் நான் நினைத்தால் மட்டுமே உன்னால் இங்கிருந்து வெளியேற முடியும்” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவளோ கதவை […] - [சர்வம் 2](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-2/): உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் யாரேனும் ஒருவர் ஆறுதலளித்து துணையிருக்க,ஆனால் இங்கு ஒரு பெண் புறாவோ சிறக்கொடிந்து மண்ணில் வீழ்ந்த ஜீவனாய் மூச்சடைக்க துடித்துக் கொண்டிருந்தது. தனக்கென்று இருக்கும் ஒற்றை ஜீவனையும் பறிக்கொடுத்துவிட்டு ஆதரவின்றி வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்த பெண்ணவளின் நிலையில் அக்கறை கொள்ள உறவினர் என்று எவருமில்லை. தனது தமையனை இழந்த சோகத்தில் இத்தனை நாட்களில் தான் வாழும் ஆசையை கூட இழந்தவளாய் ஊண்,உறக்கம் அனைத்தையும் தொலைத்து பெற்றோரின் புகைப்படத்தின் முன் அமர்ந்து ‘என்னை உங்களுடனே கூட்டிக்கொண்டு செல்லாமல் ஏன் எதற்காக இந்த பூமியில் தனித்து விட்டுச் சென்றிருக்கிறீர்கள்?’ என வாழ்வில் பிடிமானமின்றி விரக்தியுடன் எண்ணி வெறித்து பார்த்திருந்தாள் அவள். சர்வத்மிகா என்னும் பெயருக்கு ஏற்றாற் போன்று சர்வமும் அவளிற்கு அவளே என்று ஆகிப்போனாள் கடந்து வந்த நாட்களில்! தன்னுடைய பதினைந்தாம் அகவை வரை மனதிற்குள் எந்த வித கவலையுமின்றி அளவுக்கு மீறிய மகிழ்ச்சியுடன் பெற்றோரின் அரவணைப்பின் கீழ் […] - [சர்வம் 1](https://storybypm.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-1/): நள்ளிரவு பதினொன்று மணியளவில் தெருவெங்கும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்க,அந்த இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒரு ஆட்டோ ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது. அதில் ஒரு இளம் வயது பெண்ணும் ஆணும் யாரோ தங்களை பின்தொடர்வது போல் ஆட்டோவில் ஏறி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு பரபரப்புடன் சென்றுக் கொண்டிருந்தனர். இருளை மீறிய விளக்கொளியை பாய்ச்சிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்த அந்த இளம் வயது பெண்ணின் பெயர் சர்வத்மிகா. பார்ப்பதற்கு சிறு பெண்ணை போல் காட்சியளித்தாலும் பத்தொன்பது வயது நிரம்பிய பருவ மங்கை. எந்த வித ஒப்பனையுமின்றி சாதாரண மஞ்சள் நிற சுரிதாரிலே கொட்டி கிடக்கும் கொள்ளை அழகை கொண்டு பிறந்திருந்தாள். அவளிற்கு அருகே அமர்ந்திருக்கும் அந்த ஆண்மகன் அவளுடன் பிறந்த ஒரே சகோதரன் சுரேஷ். தாய் தந்தையை இழந்து தமையனின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வருவதினால் அவனை தவிர உறவு என்று கூறுவதற்கு அவளிற்கு ஒருவருமில்லை. தற்போது தமையனின் முகத்திலிருந்த வழக்கத்திற்கு மாறான பதட்டம் […] - [இறுதி அத்தியாயம் 24(2)](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-242/): அவனது முகத்தையே அவதானித்துக்கொண்டிருந்த யாமினியின் இதழிலும் அவனது மாற்றம் முறுவலை பெரிதாக்கியது. உணவின் அபரிமிதமான சுவையில் பட்டென்று இமைதிறந்த இளங்கோ “பாப்பா நிஜமாவே நீ தான் சமைச்சியா?” என வியப்போடு கேட்க,முன்பு கேட்டதற்கும் இப்போது கேட்டதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தது. அவளோ தன்னுணர்வுகளை அவனிடமிருந்து மறைப்பது போல் உம்மென்ற முகத்துடன் “வேற யாரு நம்ம வீட்டில் வந்து சமைப்பா?” என எரிச்சலுடன் கேட்க, “கோவிச்சுக்காதே பாப்பா” என இடது கையால் எட்டி அவளின் இதழ் கிள்ளி தன் இதழில் வைத்து முத்தமிட்டவன், “உன்னோட முதல் சமையல் அனுபவம் அப்படி…அதான் இந்த பயம்…ஆனால் உண்மையாவே சாப்பாடு அருமையா இருக்கு…நான் நினைச்சு கூட பார்க்கலை” என அவளின் சமையலை பாராட்டியவாறே உணவை அள்ளி சாப்பிட ஆரம்பித்தவன், திடீரென்று நிமிர்ந்து “எப்போ இப்படி அருமையா சமைக்க கத்துக்கிட்ட பாப்பா?” என விசாரிக்க, அவளோ தனது தட்டில் இருந்த உணவை கைகளால் அளந்தவாறு “ஒரு குழந்தைக்கு இரண்டு குழந்தைக்கு […] - [இறுதி அத்தியாயம் 24(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-24/): அவளின் மூளையை அரித்த விஷயங்களை கிரகித்த இளங்கோ தன்னவளின் முகத்தை தன்னிரு கரங்களால் பற்றி “பாப்பா முன்னாடி சொல்லறதை தான் இப்பவும் சொல்லறேன்‌…நீயும் குழந்தையும் என்னுடைய சொந்தம்…உயிர்…நீங்க இல்லைனா நான் ஒண்ணுமே இல்லை…அதுக்கு பிறகு உன்னிஷ்டம்” என திடமாக ஆரம்பித்த சொற்கள் முடிவில் ‘புரிந்துக்கொள்ள மாட்டிக்கிறாளே?’ என்ற ஆற்றாமையோடு முடிந்தது. அவளோ சஞ்சலம் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டு வலி மிகுந்த குரலில் “இளங்கோ உங்களால் எந்த உறுத்தலும் இல்லாமல் என்னை ஏத்துக்க முடியுதா?உங்களுக்கு இருக்கிற நல்ல மனசுக்கும்,என் மேல் உள்ள காதலுக்கும் நான் தகுதியே இல்லாதவள்னு மனசு கிடந்து பிராண்டிட்டே இருக்கு…உங்களுடைய இரக்க குணத்தினால் எனக்காக வாழ்க்கையை தியாகம் செய்யறீங்களோனு தோணுது…குணத்தில் தான் உங்களுக்கு சமமா நான் இல்லை…இப்போ என் உடலிலும் கறைப்படிஞ்…” என்னும் போதே அவளின் வாயை ஒரு கையால் அடைத்த இளங்கோவின் விழிகளில் சினம் கரைப்புரண்டது. அவளின் முகத்தை உறுத்து விழித்து “நீ இந்த மாதிரி ஏதாவது லூசுத்தனமா […] - [வாடைக்காற்று 23](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-231/): மலுக்கென்று கண்ணீரை உள்ளிழுத்து,தன் வேதனை மறைத்து வெகு நாட்களுக்கு பிறகு தாயினை கண்ட ஆனந்தத்தில் அவரிடம் சகஜமாக உரையாடியவாறே இறுதியாக இருந்த அதிருன் மற்றும் தாரணியின் குடும்பத்தோடு தனது இல்லம் வந்து சேர்ந்தான். சிறிது நேரம் தனது தமக்கையின் குடும்பத்தோடு நேரம் செலவிட்டவனிற்கு மனைவியை பிரிந்த பாரம் தற்போதைக்கு மறைந்துப்போனது. அவர்கள் சென்றதற்கு பிறகு தாய் தந்தையிடம் அத்தனை நாட்கள் இழந்த பாசத்தை சலுகையோடு கொஞ்சி ஆழ்ந்து அனுபவித்த நிலையில்,பாவையவளும் பிறந்த வீட்டில் நெடு நாட்களுக்கு பிறகு குடும்பத்தினர் அனைவரின் அன்பிலும் சீராடி திக்குமுக்காடிப்போயிருந்தாள். இந்தவொரு காலக்கட்டம் ஒவ்வொரு தம்பதியினரின் வாழ்விலும் வரக்கூடிய ஒரு கொடிய நாட்கள் தான்‌. ஆயினும்,எதார்த்தத்தை உணர்ந்த தம்பதியினரும் அந்த நாட்களை கடந்து வர முயற்சித்தார்கள். பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு எல்லையில்லா உவகையை கொடுத்தாலும்,ஏனோ மனதினோரம் ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது. அதன் காரணம் அறிந்தும் சூழ்நிலைக்கு உட்பட்ட கைதிகளாய்,அனைத்தும் தங்களது குழந்தைக்காக என நாட்களை கடத்தினர். அதற்காக […] - [வாடைக்காற்று 22](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-22/): தாயின் பிரிவினால் உண்டான வலியை அழுகை கொண்டு கரைத்தவனை கண்ட ஏனையவரின் கண்களிலும் நீரின் முகவரி! தன்னவனின் துயரம் பெண்ணவளையும் வாட்டி வதைக்க,அவளின் விழிகளும் கலங்கி சிவந்திருந்தது. ஒரு வழியாக அன்னை மகனிற்கு இடையேயான உணர்ச்சிப்போராட்டம் அந்தம் தொட்டுவிட,அவ்விடத்தில் இன்பத்திற்கான ஆதிப்புள்ளிகள் வைக்கப்பட்டது. மனசஞ்சலத்துடன் ஆரம்பித்து உறவுகளின் சங்கமமாக அந்த வளைகாப்பு விழா நிறைவுக்கு வந்தது. பந்தங்கள் கூடி விழாக்கள் கொண்டாடுவது கூட,உறவுகளுக்கு இடையே உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கே என்பது போல் நிகழ்வு இனிதே முடிவுற,சாவகாசமாக அனைவரும் கீழே இருந்த இருக்கையில் கூட்டமாக அமர்ந்திருந்த வேளையில் “என்ன இளங்கோ நம்ம ஷாக் ட்ரீட்மெண்ட் எப்படி?” என தன்னவனின் காதரோம் குனிந்து மனையாள் குறும்பாக வினவ, அதுவரை தாயும் தந்தையும் தன் அழைப்பில் மனமுருகி வந்திருக்கிறார்கள் என்று எண்ணியிருந்த இளங்கோவோ மனையாளின் கூற்றில் பெரும் வியப்படைந்தான். ‘நீயா இதற்கெல்லாம் காரணம்?’ என்பது போல் விரிந்த விழிகளோடு அவளை காண, அவளோ அவனது விழிகளை ஆழ்ந்து […] - [வாடைக்காற்று 21](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-21/): வளைகாப்பு என்றால் முதலில் நினைவிற்கு வருவது கர்ப்பிணிகளுக்கு பிடித்ததெல்லாம் சாப்பிடுவது,கைகளில் வளையல்களை மாட்டிவிடுவது,வரிசைத்தட்டுகளை வைப்பது,சொந்த பந்தங்கள் ஒன்றுகூடி,அவளை ஆசீர்வதித்து,தாய் வீட்டிற்கு பெரும் மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பது இவை மட்டுமே!! ஆனால் இந்த அபரிமிதமான அன்புக்கு பின்னணியில்,ஏகப்பட்ட அறிவியல் காரணங்களும் ஒளிந்திருக்கின்றன. தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை தரக்கூடியது… இதனால், பெற்றோர், சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் திரண்டு வந்து, கர்ப்பிணிக்கு நம்பிக்கையை ஊட்டக்கூடிய நிகழ்வாக வளைகாப்பு கருதப்படுகிறது. அதாவது,மனதைரியத்தை ஊட்டுகின்ற விழாவாகும். பெண்களுக்கு,மணிக்கட்டில் வளையல்கள் அணியும்போது, அவைகள் உராய்வதால், இரத்த ஓட்டத்தின் சீரான அளவு அதிகரிக்கிறது. வளையலின் சத்தம்,கருவில் இருக்கும் குழந்தையின் கேட்கும் திறனை மேம்படுத்தும்.கர்ப்பிணிகளுக்கு மனஅழுத்தம் நிறைய இருக்கும்… இதுபோன்ற சத்தங்கள்,அவர்களின் மனக்கிலேசத்தை குறைக்க உதவும். அதிலும்,குறிப்பாக கண்ணாடி வளையல்களுக்கு சிறப்பம்சம் ஒன்று உள்ளது. ஏனெனில்,கண்ணாடி வளையல்கள் தான் வளிமண்டலத்தில் இருக்கும் தூய்மையான சக்தி,இயற்கையான கூறுகளை உறிஞ்சி அவற்றை உடலுக்குள் செலுத்தும் திறன் படைத்தவை. சிவப்பு அல்லது பச்சை நிற […] - [வாடைக்காற்று 20](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-20/): அவளின் பேச்சில் திடுக்கிட்டவன் காமினியை “என்ன?” என்பது போல் புருவம் சுருக்கி நோக்கவும், “எங்க அக்கா ரொம்ப நேரமா என்னை முறைச்சிட்டு இருக்காள்…விட்டால் தீப்பொறி இல்லாமலே எரிச்சிடுவா போலவே…அப்படி எதுவும் சம்பவம் நடந்தால் கைதட்டி என்ஜாய் பண்ணாமல் என்னை காப்பாத்து அக்கா புருஷா?” என பயந்தது போல் நடிக்க, அவனோ தட்டில் கொட்டை வடிநீர் அடங்கிய குவளைகளை அடுக்கியவாறு “நான் எதுக்கு உன்னை காப்பாத்தணும்…நீயாச்சு உன் அக்காவாச்சு…அக்கா தங்கச்சி சண்டைக்குள்ள நான் வரமாட்டேன்பா” என மழுப்பலாக கூறி தோளை குலுக்க, அதில் வெகுண்ட காமினி “யோவ்…பழசுயெல்லாம் மறந்திடுச்சா?என் காலில் விழாத குறையா ‘என் பாப்பா வெளிய வீம்பா இருந்தாலும்…உங்க ஃபேமிலியை மிஸ் பண்ணி ரொம்ப ஃபீல் பண்ணறாள்…எனக்காக அவங்களை எப்படியாவது பேசி சமாளிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரீயா?’னு கெஞ்சி கேட்டுட்டு அவங்க வீட்டுக்கு வந்தவுடனே உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு…இனிமேல் உனக்கு எதுவும் செய்யமாட்டேன்…” என ஆவேசமாக பேசினாலும் அவளது முகத்தில் விளையாட்டு பாவனை […] - [வாடைக்காற்று 19](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-19/): தொலைக்காட்சியில் அதிவிரைவாக அலைவரிசையை பரபரப்புடன் மாற்றிக்கொண்டிருந்த இளங்கோவோ அவன் எதிர்ப்பார்த்த குறிப்பிட்ட அலைவரிசை வந்தவுடன் இயக்கியை அருகிலிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு சற்றே பின்னால் சென்று அதனை பார்வையிட ஆரம்பித்தான். அதில் பிரபல இயக்குனர் சந்திரநாத் ஓட்டிச்சென்ற மகிழுந்து நேற்று இரவு அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி அவ்விடத்திலே அவரது உயிர் பிரிந்தது என்ற செய்தியை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். அத்தோடு போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி கொண்டே வண்டியோட்டி வந்ததினாலே இத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க,தலைகீழாக கவிழ்ந்து அப்பளமாய் நொறுங்கியிருந்த மகிழுந்தை கண்டவனின் இதழ்களிலோ ஒரு வெஞ்சினம் கலந்த புன்னகை தோன்றியது. யாமினியின் இத்தகைய கொடூர நிலைக்கு காரணமான காமுகனின் முகத்திரை கிழிந்து அவனிற்கு நிகழ்ந்த துர்மரணத்தில் அவனை பழிவாங்கும் வெறியோடு அலைப்புறதலுடன் சுற்றி திரிந்த இளங்கோவின் மனம் சாந்தியடைந்தது. ‘அத்தான்,ஆதி நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க…வெல்டன்’ என உள்ளுக்குள் சிலாகித்து பாராட்டியவனின் முகத்திலோ நான்கு நாட்களுக்கு பிறகு ஒரு தெளிவு பிறந்தது. மாண்டோரை இகழக்கூடாது […] - [முகிழ்மதி 122(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1221/):     அனைவரும் வீட்டில் ஒப்புக் கொண்டாலும் திருமணம் தற்போது வேண்டாம் என தமயந்தி முடிவாக கூறிவிட்டாள். வீட்டில் இருப்பவர்கள் காரணம் கேட்டதற்கு “இன்னும் கொஞ்ச நாள் நான் உங்களோட இருக்கலாம்னு விருப்பப்படறேன்” என்றிருந்தாள். அவள் கூறுவதில் நியாய கூறுகள் இருப்பதினால் பெரியவர்கள் அவளின் முடிவிற்கு ஒப்புக் கொண்டார்கள். உண்மையில் வீரின் நேசத்தை பரிசோதிக்கவே அவளிற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காக வீர் அவளையே சுற்றி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவளது காதலுக்கான அடிப்படை மரியாதை வேண்டி பெண்ணுள்ளம் தவித்தது. அவனிடமிருந்து மீண்டும் ஒரு நிராகரிப்போ அல்லது அவமதிப்போ அவளால் ஏற்க முடியாது. அதற்காகவே அவள் நிதானம் காத்தாள். அவர்களது காதல் விடயம் கேள்வியுற்ற பிறகு அவள் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என அவன் எதிர்பார்த்திருக்க,அதிமுக்கியமாக விஜயேந்திரனிடமிருந்து கிளம்பும் என்று தவிப்புடன் அவன் காத்திருந்தான். ஆனால் அவ்வாறு எதுவும் நேரவில்லை என்றவுடன் அவனிற்கு அதிர்ச்சி ஒரு புறம் என்றால்,மற்றொரு புறம் பரமானந்தமும் […] - [முகிழ்மதி 121(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1212/):     இருவரும் ஒன்றாக ஜீப்பில் வந்துக்கொண்டிருந்த சமயம் தமயந்தியின் விழிகள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவனது நரம்புகள் இழையோடிய கரங்களை தான் பார்த்திருந்தது. மலையிலிருந்து கீழிறங்கும் போது அவன் லாவகமாக சக்கரத்திருப்பியை திருப்பி வாகனத்தை செலுத்துவதை அவள் விழிகள் ரசித்திருந்தன. அச்சமயம் தான் அவள் ஒன்றை கவனித்தாள். அவனின் கரங்களில் முன்பு இருந்த வனப்பு இல்லாமல் சதை இலேசாக ஒட்டியிருப்பதை பார்த்தவளிற்கு கவலையாகிவிட்டது. சட்டென விழி உயர்த்தி அவனை அளக்க தொடங்கியவளின் வேதனை இன்னும் அதிகரித்தது. வீர் வழக்கத்தை விட சற்று இளைத்திருக்க, அவனது முகத்தின் அழகை மறைக்கும் விதமாக தாடியை புதர் போல் வளர்த்து வைத்திருந்தான். ‘தன்னுடைய பிரிவு அவனை இந்த அளவு பாதித்திருக்கிறதா?’ என என்னும் போதே அவளது இதயத்தில் ஏதோ இடறிய உணர்வு! தன்னை விலக்கி வைத்துவிட்டு அவன் ஒன்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்னும் ஒரு ஆறுதல் அவளுள் தோன்றின. இப்போது அவளிற்குள் சிறு கோபம் […] - [Ep 21](https://storybypm.com/ep-21/): அத்தியாயம் 21 லிப்ட் சட்டென நின்று விட, அந்த அதிர்வில் பிருந்தாவோ பயத்தில் பக்கத்தில் இருந்த கம்பியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.  அடுத்த சில நொடிகளில் அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் அணைந்து விட,  இப்போது அந்த சின்ன இடத்தில் ஒரு சிறிய எமர்ஜென்சி சிவப்பு நிற விளக்கு ஒன்று மட்டுமே மெல்லிய வெளிச்சத்தில் ஒளிர ஆரம்பித்தது. சிம்மனோ கடுப்பாக, “வாட் தி ப**” என்று திட்டியவன், தனது அலைபேசியில் இருந்த  டார்ச் லைட்டை ஆன் செய்தான். அதன் மூலம் அந்த இருண்ட இடத்தில் ஓரளவுக்கு வெளிச்சம் பரவ, அவனோ அந்த லிப்டில் இருந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்தினான்.  ஆனால் மறு முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.  பிருந்தாவோ “என்னாச்சு? ஏன் லிப்ட் நின்னுடுச்சு?” என்று சற்று பதட்டமாக கேட்க,  அவனோ “தெரில” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தவன், மீண்டும்  அந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்த,  இம்முறை மறு முனையில் இருந்து […] - [முகிழ்மதி 121(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1211/):     திடீரென்று அவன் அணைத்து கொண்டதும் அவளிற்குள் சொல்ல முடியாத பல மாற்றங்கள்! அவளை சுற்றியிருக்கும் உலகமெல்லாம் ஒரு கணம் அசையாமல் நின்றது போலான ஒரு உணர்வு! அவளும் அவனும் மட்டுமான தனிமை! முதலில் அவனிடமிருந்து விடுப்படவே அவள் தவித்தாள். ஆனால் அவனது பார்வையில் தெரிந்த தனக்கான ஏக்கமும் அவனது அழுத்தமான அணைப்பும் காரிகையை உருகிட வைத்தன. அவனோ அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த ஒரு கணம்….அவனது மனதில் நட்பு,பாசம்,விசுவாசம் என்று எந்த வகையான உணர்வுகளும் இல்லை… அவளின் மீது அவன் வைத்திருக்கும் காதலும் அவளும் மட்டுமே இருந்தார்கள்… அவனை போலவே சிறிதும் கலப்படமில்லாத அணைப்பு அது… காதல் மட்டுமே நிறைந்திருந்தது அந்த அணைப்பில்… அவனது சொல்லப்படாத அந்த காதல் அவனது அணைப்பின் மொழியாக வெளிப்பட்டன… ஏனிந்த மாற்றம் அவனுள்… எவ்வாறு நிகழ்ந்தது அவனுள் இந்த மாற்றம்… இது எதுவுமே அவளிற்கு தேவையாய் இருக்கவில்லை… அவனின் இந்த ஒற்றை அணைப்பு […] - [அத்தியாயம்-1](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): அத்தியாயம் 1 பல அலுவலகங்களை உள்ளடக்கிய அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது வண்டியை கொண்டு வந்து நிறுத்தி நான் மாதேஷ்  பின்னே அவனது தோழன் ஆதிரன் அமர்ந்திருந்தான். வண்டியை நிறுத்திய பின்பு அதிலிருந்து இறங்கிய ஆதிரனோ அருகில் நின்றிருந்த வண்டியின் கண்ணாடியை பார்த்து தனது சிகையை வாறிக் கொண்டிருந்தான். “ஏண்டா உனக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியல நல்ல வேலையிலிருந்து என்னைய வேலையை விட்டு நிக்க வச்சு இப்படி கம்பெனி கம்பெனியா ஏற விடுறாயே… இது உனக்கே தப்பா தெரியல?” என்றான் மாதேஷ்.  தனது நண்பனை பார்த்துக்கொண்டே “பின்ன நான் மட்டும் பைலை எடுத்துட்டு லோ லோனு அலையனும் நீ மட்டும் சொகமா ஏசி ல உட்கார்ந்து வேலை செய்யணுமா?” என்றான். “டேய்  அதுக்காகத்தானே நான் வேலை செய்ற கம்பெனியில உனக்கும்  வேலை வாங்கி கொடுத்தேன். நீ தானே அந்த வேலையில நிக்காம வெளிய வந்த…” என்றான் […] - [முகிழ்மதி 120(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1202/):     முன்பிருந்த தமியாக இருந்தால் வீருக்கு பக்கத்து இருக்கை என்றவுடன் அவளின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கும். இப்போது அவளின் இதயம் அவனருகே அமர தயங்கின. சகோதரிகள் இருவரும் பின்னால் அமர்ந்திருக்க,அவளோ இப்போது வீரின் அருகே அமர வேண்டிய கட்டாயம்! ‘இதெல்லாம் உன் வேலையா?’ என சந்திரமதியை அவள் முறைப்பாய் ஏறிட,அவளோ தனக்கு இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் வெளியே வேடிக்கை பார்த்தாள். வேறுவழியின்றி ஒரு பெருமூச்சுடன் ஏறி அமர்ந்தாள் தமயந்தி. அவனின் விழிகள் மொத்தமும் அவளை ஏக்கத்துடன் ஏறிட்டன‌. அவளோ தன்னருகே ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லாதவளாய் சாலையை வெறித்திருந்தாள். அவளின் பாராமுகம் அவனிற்கு அதீத வலியை கொடுத்தன. அவனை கண்டதும் மலரும் முகமில்லை அவளிடம்… மாறாக,அவளின் முகத்தில் ஒரு வெறுமை…இதயத்தில் ஒரு இறுக்கம்! அதனால் ஜீப்பில் ஏறிய பிறகு யாவரும் எதுவும் பேசவில்லை. வீர் ஒரு பெருமூச்சுடன் வண்டியை எடுத்தான். அவனது மனம் சீரற்று […] - [பிழை-29](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-29/):   சந்தியாவின் செயலை எண்ணி மறுகி தான் போனார் சாந்தி. அவள் மீது கண்மூடித்தனமான பாசத்தை வைத்திருந்தவருக்கு மகளது செயல் சொல்லொண்ணா வேதனையை கொடுத்தது.  சந்தியாவின் விஷயம் அரசல் புரசலாக சொந்த பந்தங்களிடையே பரவ தொடங்கியிருந்தது‌ . வெளியே தலை காட்ட முடியவில்லை . அத்தனை அவமானமாக இருந்தது சாந்திக்கு. திவ்யாவிற்கும் சந்தியா மீது அத்தனை கோபம். ‘ எத்தனை கேவலமான பிறவி..’ என மனதிற்குள் கறுவினாள். கூடுதலாக வாசுவின் சூழ்நிலை வேறு அவளுக்கு கவலையளித்தது. வாசுவிடம் “ எங்க வீட்டுல வந்து தங்கிக்கோண்ணா…என்னோட சேவிங்ஸ்ல இருந்து கொஞ்சம் பணம் தர்றேன்.. அதை வச்சி ஏதாவது சமாளிக்க முடியுமான்னு பாரு…” என்றதற்கு , “ பரவாயில்ல திவி…நான் மேனேஜ் பண்ணிக்குறேன்…ஒண்ணும் பிரச்சினை இல்லை. கண்டிப்பா வீட்டுக்கான பணத்தை அவங்க கிட்ட செட்டில் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே   வந்துடுவேன்…நீ என்னை நினைச்சு கவலைப்படாதே… டா..! உன் குடும்பத்தை பாரு முதல்ல..” என […] - [Ep 20](https://storybypm.com/ep-20/): அத்தியாயம் 20 விஷ்வா மீட்டிங்கை முடித்து விட்டு வரவே இரண்டு மணித்தியாலங்கள் கழிந்திருந்தது.  தனது இருக்கையில் வந்து அமர்ந்தவன்,  மேசையில் இருந்த அலைபேசியை தான் பார்த்தான்.  சற்று முன்னர் அவள் கோபமாக பேசிய வார்த்தைகளே அவன் மனதில் தோன்றி மறைய, அவன் முகமோ மேலும் இறுகிப் போனது.  மறுபடியும் அவளுக்கு அழைத்து பார்க்கலாமா என்று யோசித்தான்.  அவள் கோபமாக இருப்பாள் என்று அறிந்தாலும், அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லையே!  ஓரமாக கிடந்த தனது தொலைபேசியை எட்டி எடுத்தவன், அவளுக்கு அழைக்க போக, அப்போது தான் அவள் பல முறை அவனுக்கு அழைத்து இருந்த மிஸ்ட் கால்கள் அவன் விழிகளில் தென்பட்டது.  அதை கண்டவனோ ஒரு நொடி அதிர்ந்து போக, அப்போதே அவள் அனுப்பிய குறுஞ் செய்தியை பார்த்தான்.  அதிலோ,  ‘சாரி விஷ்வா. நீங்க என் மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியும். பட் நான் வேணும்னே போனை ஆப் பண்ணல. உங்ககிட்ட பேசிட்டு இருக்கும் […] - [வாடைக்காற்று 18(2)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-182/): தன் தோளோடு தோள் உரசிய ஆடவனது ஸ்பரிசம் அறிந்தும் அவன் தன்னை நிராகரித்த கோபத்தில் கண் விழிக்காமல் இருந்தாள்‌ யாமினி. அவனோ “பாப்பா” என உயிரை உருக்கும் குரலில் அழைத்தவுடன் அவளின் மேனியிலிருந்த இறுக்கம் சிறிது தளர்வதை நோட்டமிட்ட இளங்கோ பக்கவாட்டாக திரும்பி அவளின் நெற்றியில் இதழொற்றி சுழித்த புருவத்தை மிருதுவாக நீவினான். அவ்வளவு தான் அதற்கு மேல் அவளின் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவளின் சிரம் தொய்ந்து அவனது தோளில் விழுந்தது. அதற்காகவே காத்திருந்த ஆண்மகனின் தோள் பெண்ணவளை சுமந்துக்கொண்டு அவளை தன்னோடு சேர்த்தணைத்தது. அவனது அந்தவொரு அணைப்பில் காமத்தை தாண்டிய கரைகாண முடியாத காதலை உணர்ந்தவளின் வாழ்க்கையே அவள் வசமாகிய ஓர் உணர்வு எழ,அவனது தோளில் மேலும் முகத்தை வைத்து அழுத்தி உரிமையோடு அவனின் கரங்களை பற்றியவள் ஒரு மோன நிலைக்குச் சென்றிருந்தாள். அச்சமயம் திடீரென்று அவ்வறையின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு பாடல் ஒலிக்க தொடங்கியது. பெண்ணவளின் ஆசைக்கு இணங்கி […] - [வாடைக்காற்று 18(1)](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-18/): தொடர்ந்து வந்த இரண்டு நாட்களிலும் பல வித குழப்பங்களில் சிக்கியிருந்த இளங்கோவின் முகம் ஏதோ யோசனையை தத்தெடுத்து இருப்பதை யாமினி கவனித்தே இருந்தாள். ஆனால் மனைவியின் முன்பு சகஜமாக இருப்பதாக காட்டிக்கொள்ள அவன் பிரம்மபிரயத்தனம் செய்வதை கண்டவளின் இமைகள் சந்தேகத்தோடு இடுங்கியது. அதனால் பெண்ணவள் அவ்வப்போது அவனிடம் ‘ஏதாவது பிரச்சனையா?’ என்று விசாரிக்க, இளங்கோ சடுதியில் தன்னை சுதாரித்து ‘இல்லைங்க யாமினி’ என கூறி வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் அவளின் கவனத்தை திசைத்திருப்பி விடுவான். மனதிற்குள் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க வேண்டும் என்று அவனை தீர்மானத்திற்கு வர வைத்தது. இல்லையென்றால்,யாமினிக்கு இந்த விடயம் தெரிய வந்துவிடுமோ என்ற அச்சமே,அவனது ஒவ்வொரு அணுவிலும் நஞ்சாக பரவி அவன் மனதை கொன்று அவளிடமிருந்து விலக்கிவிடுமோ என்ற ஐயத்தை உருவாக்கியது. அவளோடு மனமொத்து வாழ தடையாய் இருக்கும் பாறாங்கல்லை எப்பாடுபட்டாவது அகற்ற வேண்டும் என்ற வெறியையும் கொடுத்தது. அதனால் அதிருன் மற்றும் ஆதியின் […] - [வாடைக்காற்று 17](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/): அமர்வேல் சக்கரவர்த்தி என்ற ஒரு நச்சு பாம்பின் நயவஞ்சக புத்தியால் பெண்ணவளின் வாழ்வு மட்டுமல்ல ஒரு ஆடவனின் வாழ்வும் திசைமாறியிருந்தது. ஏனெனில்,இளங்கோ மற்றும் யாமினி இருவரையும் ஒரே அறையில் தள்ளியது வரை அவர் நினைத்த திட்டத்தின் படி அனைத்தும் சரியாகவே நடந்தேறியிருந்தது. மனிதன் எண்ணியிருந்த யாவும் ஈடேறினால் நான் ஒருவன் எதற்கு என்ற தெய்வத்தின் கணக்கோ வேறாக இருந்தது. மருந்தின் வீரியத்தில் இருவரின் உணர்ச்சிகளும் உச்ச நிலையை எட்டியப்போதும்,அவர்கள் வளர்க்கப்பட்ட முறையோ அல்லது உதிரத்தில் ஊறியிருந்த ஒழுக்க நெறியோ இரண்டில் ஒன்றின் ஆதிக்கத்தால் இருவராலும் தங்கள் எல்லைகள் தாண்டி முன்னேற முடியவில்லை. ஆடைகள் நலுங்கிய நிலையிலும் ஒருவரின் மீது மற்றவர் சலனம்கொண்டு மற்றவரோடு சல்லாபம் புரிந்திட மனசாட்சி இடமளிக்காததால் இறுதி நிமிடத்தில் ஒருவரை ஒருவர் விலக்கிவிட்டார்கள். உணர்ச்சிகள் திமிறி மிஞ்சினாலும் அவர்களின் உணர்வுகள் அப்போதும் ஒரு வரையறைக்குள் கட்டுப்பாட்டுடனே சிறைப்பட்டிருந்தது. அதனால் ஆழ்நிலை மயக்கத்திலே இருவரும் மெய் தீண்டியும் உயிர் தீண்டாத ஒரு […] - [வாடைக்காற்று 16](https://storybypm.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-16/): யாமினி தான் அணிந்திருந்த முழு நீள அங்கியின் காலரை கழுத்து பின்னால் எடுத்துவிட்டு இதழை குவித்து ஊதியவாறே சாய்வு இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடினாள். மாதங்கள் எட்டை கடந்துக்கொண்டிருப்பதால் அவளால் முன்பு போல ஒரே இடத்தில் அமர்ந்து பணியை மேற்கொள்ள முடியவில்லை. அத்தோடு வெகுநேரம் தீவிரமாக வேலையில் கவனம் செலுத்தியதினால் அவளிற்கு அந்த ஏ.சி அறையிலும் ஏனோ வியர்க்க தொடங்கியது. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீரை பருகுவதும்,கழிவறைக்குச் செல்வதுமாக இருந்ததினால் உடல் களைப்பில் சோர்ந்து,கண்கள் உறக்கத்திற்கு கெஞ்சியது. ஆனால் இன்றைய நாள் பார்த்து தங்கை அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தால் அவளிடமே அனைத்து பொறுப்புகளும் வந்து சேர,ஒரு கட்டத்தில் அறைக்குள் அடைந்து இருப்பது மூச்சடைத்து வியர்த்து வழிய வைத்தது. ‘அடேய் பக்கி பயலுகளா?தாய்மை என்பது வரம்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லறீங்களே…அதில் இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு எவனாவது சொல்லறீங்களா?ஐய்யோ’ மனதிற்குள்ளே முனகி தண்ணீரை எடுத்து பருகியவளிற்கு மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் […] - [பிழை-28](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-28/): வாசுவின் இரு சக்கர வாகனம் மற்றும் மேலும் சில முக்கிய   பொருட்களும் ஆருத்ராவின் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்து சேர்ந்தது. மூவருக்கும் உணவை தயார் செய்து வைத்தவள், அனுவை குளிக்க வைத்து, தலைப்பின்னி விட்டு அவளை சரியான நேரத்திற்கு பள்ளிக்குத் தயார் செய்து வைத்தாள். அனுவிற்கு முதலில் ஒரு மாதிரியாக இருந்தாலும் ஆருத்ரா வின் கலகலப்பான பேச்சு அனுவின்  தயக்கத்தை மெல்ல மெல்ல களைந்து  இயல்பாக ஒன்ற வைத்து கொண்டிருந்தது.  அனுவிடம் பேச்சுக் கொடுத்து கொண்டே அவளை பள்ளிக்கு அனுப்ப வாசல் வரை வந்து நின்றாள் ஆருத்ரா. மறுப்பேதும் கூறாமல் அவளது சேவைகளை ஏற்றுக் கொண்ட வாசுவை பார்த்தாள். அவனது முகம் இறுகியிருந்தாலும் அதில் ஏதோ யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்ததை உணர முடிந்தது அவளால். அனுவிற்கு பள்ளியில் எட்டு மணிக்கு இருக்க வேண்டும் என்பதினால் அவளுன் சேர்ந்து வாசுவும் தயராகி விட்டான் அனுவின் உணவு பையையும் தனக்காக ஆருத்ரா தயார் செய்து வைத்திருந்த […] - [பிழை-27](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-27/): கண்ணாடியூடே வாசுவின் முகத்தை பார்த்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. ஏற்கனவே சிவந்த நிறமுடையவனின் முகம் அழுத்தத்தினால் இன்னும் சிவந்து காணப்பட்டது..  வாசுவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அனு.  விலையுயர்ந்த காரை மிரள மிரள பார்த்து கொண்டிருந்தாள்.  மெல்லிய புன்னகை தோன்றியது ஆருத்ராவிற்கு.  சின்னஞ் சிறிய பிஞ்சு கைகள் நரம்போடிய அவனது கரங்களை அழுந்தப் பிடித்திருந்தது. அவனது மனநிலை அறிந்து அருத்ராவும் அமைதியாக வாகனத்தை ஓட்டினாள்.  கிட்டத்தட்ட இருபது நிமிட பயணத்திற்கு பிறகு தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி ஒலிப்பானை ஒலிக்க விட்டாள். காவலாளி வேகமாக கேட்டை திறந்துவிட இலாவகமாக காரை தனது கெஸ்ட் ஹவுஸில் நிறுத்தினாள். ராகவனும் பிரேமாவும் தோட்டத்தில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.  காரின் சத்தம் கேட்டு எழுந்து கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றனர். காரிலிருந்து இறங்கியவள், “இறங்குங்க மிஸ்டர் வாசுதேவன்…” என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அத்தனை வலிகளை தாங்கி நின்றது.  அதை புரிந்து […] - [பிழை-26](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-26/): இதோ சந்தியா பிரிந்து சென்று இருபது நாட்களாகி விட்டது.  மழிக்கப்படாத தாடியும் ,மீசையும் ஆருத்ராவின் பார்வையில் இருந்து தப்பவில்லை. யோசனையுடன் அவனையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது அவளது பார்வை.. அரசியிடமும் சாந்தியிடமும் சந்தியா வேறு வாழ்க்கை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்‌  என்று வெறுமையான குரலில் கூறி விட்டான். சாந்திக்கோ முகத்தில் ஈ ஆடவில்லை.  அதிர்ந்த விழிகளுடன் அனுவைப் பார்த்தவருக்கு மனம் ரணமாக வலித்தது. வாழ்க்கையில் எதற்காகவும் யாருக்காகவும் இறங்கி வராதவர் வாசுவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். “ இந்த மாதிரி ஒரு தறுதலையை பெத்ததுக்கு என்னைய மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை ‌..‌ அனு வேணா இங்க இருக்கட்டுமே…” என்றார். “வேணாங்க அனுவை நானே பாத்துக்குறேன்…” என்றவன் தளர்ந்த நடையுடன் சென்றான். திவ்யாவிற்கோ மனம் பிசைய ஆரம்பித்தது. அவனது துன்பம் இத்தோடு முடிந்துவிடவில்லை வாழ்க்கை இன்னும் அடுத்தடுத்து அடியை தனது அண்ணனுக்கு கொடுக்க காத்திருப்பதை அறியாது போனாள் பேதையவள். அரசியோ மகனது வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் […] - [பிழை-25](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-25/): அலுவலகத்திலும் அதிக வேலை வாசுவிற்கு. அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் வாசு.  சந்தியா அழைப்பை ஏற்காதது, பணத்திற்கான அலைச்சல், துபாய் செல்வதற்கான ஏற்பாடு என மிகவும் பரபரப்பாக இருந்தான். ஒரு வாரம் கழிந்திருந்தது‌. சந்தியா அன்று  தான் மணாலியிலிருந்து வருவதாக கூறுயிருந்தாள். எனவே மீண்டும் அவளது அலைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தான்.  அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. யோசனையுடன் அனுவை பள்ளிக்கு அனுப்பி விட்டு அரசிக்கு வேண்டியதை செய்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான். ஏற்கனவே சந்தியா பல முறை  அவனது அழைப்பினை ஏற்காமல் இருந்ததுண்டு. எனவே அது போல தான் இதுவும் என நினைத்துவிட்டான்.  போதாதற்கு அவளை எல்லார் முன்னிலையிலும் திட்டி அடித்து விட்டதால்  அதிக கோபத்தில் இருப்பாள் என‌ அவனாகவே ஒன்றை யூகித்துக் கொண்டான். அன்று இரவும் அவள் வராதது அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ப்ரகாஷிற்கு அழைத்தான். “ சொல்லுங்க வாசு…” “ அது..சந்தியா வந்துட்டாளா? “ “ இல்ல […] - [பிழை -24](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-24/): அலுவலகத்திற்கு வந்தவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை ‌‌.  இதுவரை எவரிடமும் கடன் என்று போய் நின்றதில்லை. முயன்ற வரை கடனில்லாமல் வாழ வேண்டும் என்று குறிக்கோளை உடையவன். எனவே யாரிடம் சென்று கேட்பது? எவ்வாறு கேட்பது? என மிகுந்த தடுமாற்றம் அவனுள். ப்ரகாஷிடம் எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தவன் அவனுக்கு அழைப்பு விடுத்தான். அவனது அழைப்பை ஏற்ற ப்ரகாஷ், “ சொல்லுங்க வாசு…எப்படியிருக்கீங்க?அனு எப்படி இருக்கா?” என்றான். “ ம்ம் நல்லா இருக்காங்க ப்ரகாஷ்…ஒரு சின்ன ஹெல்ப் தேவைப்படுது…” “சொல்லுங்க வாசு…என்ன பண்ணனும்?” “எனக்கு…எனக்கு‌ கடனா அவசரமா ‌ஒரு ஒன்றரை லட்சம் பணம் தேவைப்படுது…யாருக்கிட்டயாவது ஏற்பாடு‌ செய்ய முடியுமா?” என்றான் தயங்கியபடி. அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.  வாசு அவ்வளவு இலகுவில் கடன் கேட்பவன் அல்ல என நன்கு தெரியும்.  அப்படியிருப்பவன் திடீரென ஒன்றரை லட்ச ரூபாய்க்கான தேவை என்ன என்பது அவனது தலையை குடைந்தது. “வட்டிக்கு தான் கேட்கணும் வாசு…ஆனா […] - [பிழை-23](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-23/): ஓய்ந்த தோற்றத்துடனும் தளர்ந்த நடையுடன் தனது வீட்டிற்கு‌ வந்தாள் ஆருத்ரா. மண்டபத்திலிருந்து எவ்வாறு அவ்வளவு தூரம் நடந்தே தனது வீட்டிற்கு வந்தாள் என்றே தெரியவில்லை. மனதினை போன்று கால்களும் மரத்து தான் போனது. ஒற்றைப் பையுடன் வீட்டின் இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஆருத்ரா. “ வணக்கம் மேடம்… சொல்லிருந்தா கார் எடுத்துட்டு வந்துருப்பேனுங்களே..‌நடந்தா வந்தீங்க? ஏன் மேடம் மொகமெல்லாம் வாடிப் போயிருக்கு..?” என கவலையுடன் கேட்ட காவலாளியை பார்த்து விரக்தியான புன்னகை சிந்தினாள்.‌  மனம் முழுவதும் அத்தனை வேதனை.  “பரவாயில்லாங்க.” என்று கூறி விட்டு நகர முயன்றவளை காவலாளியின் குரல் தடுத்து நிறுத்தியது. “அம்மா…ஒரு ரெண்டு‌ மாசத்துக்கு முன்ன‌ வாசுங்கறவரு அய்யாவை பாக்க வந்துருந்தாங்க…” எனக் கூறி விட்டு நிறுத்தினார். யோசனையுடன் புருவத்தை சுருக்கி அவரைப்‌பார்த்தாள். “ எப்ப?  வாசு அப்பாவை பாக்க வந்திருந்தாரா?என்ன பேசினாங்கன்னு ஏதாவது தெரியுமா?” என்றாள். “ அது…அது..வந்து..மா..” என இழுத்தார். “ என்னன்னு […] - [பிழை-22](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-22/): தாயின் பேச்சினை கேட்டு முகம் இறுக அமர்ந்திருந்தான் வாசு. கோபம் கொப்பளித்துக் கொண்டு வர காத்திருந்தது. “ சந்தியா உனக்கு சம்மதமா மா..” என பாசத்துடன் கேட்டார் சாந்தி. சந்தியாவோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,” நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் மா.” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள். “ அப்ப நாங்கள் கிளம்புறோம் சம்மந்தியம்மா.. நிச்சயம் எல்லாம் வேணாம் .நேரடியா கல்யாணத்தையே வச்சிடலாம். “ என்று கூறி விடைப் பெற்றார். வெளியே வந்தவன் கோபமாக அரசியிடம் ஏதோ கூற வர அவனது அலைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவனின் முகம் யோசனையில் சுருங்கியது.  “இதோ வர்றேன் சார்.. “என்றவன் அரசியை வீட்டில் விட்டு விட்டு வெளியே கிளம்பினான். நேராக அவன் வந்திறங்கியது ஆருத்ரா வின் வீட்டிற்கு தான்.  வீட்டினுள்ளே நுழைய முயன்றவனை தடுத்து நிறுத்தியது ராகவனின் குரல். “ மிஸ்டர் வாசுதேவன்..” அவரது குரல் […] - [பிழை-21](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-21/): புதிய வேலை மற்றும் அதிலிருந்த அதிக பளு வாசுவை பரபரப்பாக வைத்துக் கொண்டிருந்தது.  நாட்கள் வேகமாக நகர்ந்தது. ‌. ஆருத்ராவும் தந்தையின் நிறுவனத்திற்கு சென்று சிரத்தையுடன் அனைத்தையும் கற்றுக் கொண்டாள்.  ராகவனுக்கோ மகள்  தனக்குத் துணையாக நிறுவனத்தில் வந்து வியாபார நுணுக்கங்களையும் நிர்வாகத்திறனையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கல்லூரி நாட்களில் நினைத்த நேரத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தவர்கள் ,பணிக்குச் சேர்ந்தவுடன் இருவருடைய சந்தித்துக் கொள்ளும் நேரம் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை முழுவதும் ஆருத்ராவுடன் செலவிட்டான் வாசு. வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே இருப்பவளுக்கு அவனது அருகாமையே போதுமாயிருந்தது.  வாரத்தின் ஆறு நாட்களையும் நெட்டித் தள்ளுபவள் ஞாயிறு மாலை ஆனதும் அவனை காண ஆலாய் பறந்து வந்துவிடுவாள்.  கடற்கரை மணலில் அவனுடன் நெருங்கியமர்ந்து கரங்கள் கோர்த்து, தோள் சாய்ந்து, மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பாள். “உங்களை ஃபீல் பண்ணிட்டே இருக்கணும் வாசு…” என்றவளை அள்ளிக் கொண்டாடத் தோன்றும்.  ஆனால் […] - [பிழை-20](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-20/):   நாளைடைவில் இருவரது உறவும் பலப்பட்டது.  வாசுவுடன் பேசாத நாளெல்லாம் நாளாகவே இருக்காது ஆருத்ராவிற்கு. வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தவனின் அலைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் திவ்யா தான் அழைத்திருந்தாள். அவளது அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே வந்தவனின் எதிரில் ஆருத்ரா நின்றிருந்தாள். ’ஒரு நிமிடம்’  என சைகை செய்தவன் ,” சொல்லு திவ்யா என்ன விஷயம்?” என்றான். “ டேய்..அண்ணா இந்த முறையும் நாம தான் செமஸ்டர் ஃபீஸ் கட்டணும். என்ன பண்றது? அது போக ப்ராஜெக்ட் பண்ணனும். அதுக்கும் கொஞ்சம்  செலவாகும் போல. இன்னும் ஒரு வாரத்துல கட்டணும். இல்லன்னா ஃபைனோட கட்டற மாதிரி இருக்கும்.”என்றாள் கவலையாக. “ ஏய்…திவி இதுக்கு போய் ஏன் இவ்வளவு ஃபீல் பண்ணுற. இன்னும் ஒரு வாரம் இருக்கு தானே .நான் ஃபீஸ் கட்டுறதுக்கு ஏற்பாடு செய்யுறேன். நீ  உருப்படியா படிக்குற வேலை மட்டும் பாரு..சரி. இதையெல்லாம் உன் மண்டையில ஏத்தி கிட்டு படிப்புல கோட்டை […] - [பிழை-19](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-19/): வாசு சொன்னதை போலவே தன் பின்னால் சுற்றி வரும் ஆருத்ராவை தவிர்க்க ஆரம்பித்தான். அவனது செய்கையை பார்த்த ஆருத்ராவிற்கு கோபம் தான்‌ வந்தது.  ‘காதலிக்கவில்லை என்றால் என்ன? சாதாரண நட்புணர்வுடனாவது பேசிப் பழகலாமே..! இதென்ன பேயை கண்டது போல் பதறியடித்து கொண்டு ஓடுவது…’ என ஆதங்கப்பட்டாள். அக்கல்லூரி வளாகத்தில் இருந்த மிகப்பெரிய மைதானத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான்‌ வாசு. லேப்பிற்கு சென்று விட்டு மாதங்கியுடன் திரும்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.  வாசு மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருப்பதை பார்த்த மாதங்கி,  “ஏய்…ஆரு..அங்கப் பாரு‌ டி உன் ஆளு தான் நம்ப பசங்களுக்கு கிரிக்கெட் ட்ரெயின் பண்றாப்ல போல‌வே . “ என்று கூறி அவளது தோளை இடித்தாள். “ ஏய்..அடி வாங்கப் போற‌ நீ. தேவ்வை என்னோட ஆளுன்னு நான் சொன்னேனா? சும்மாவே இருக்க மாட்டியா..” என கடுகடுத்தாள். “ ஏய் சும்மா சொல்லாத நீ. காலையில் நீ அவரைப் பாக்கறதுக்காக காலேஜ் […] - [பிழை-18](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-18/): நாட்கள் உருண்டோடியது. திவ்யாவிற்கு அந்த பருவத்தின் கட்டணத் தொகையை எப்படியோ செலுத்தி விட்டான் வாசு. திவ்யாவும் ப்ரகாஷூம் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர். “ இந்த செமஸ்டர்  ஃபீஸ் கட்டியாச்சா திவ்யா?” என்றான் ப்ரகாஷ். “ம்ம்…அண்ணே நேத்து தான் கட்டினாரு. அவரைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. பார்ட் டைம் மா வேலைக்கு போயிட்டுருக்காரு. அதை வச்சி தான் என்னோட ஃபீஸை கட்டினாரு. அவ்வளவு பெரிய தொகையை கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கட்டியிருக்கணும்” என்றாள் கவலையாக. “ ம்ம்ச்…கவலைப்படாதே திவ்யா.. எல்லாம் ஒரு நாள்‌ சரியாகும் . உங்க‌ அண்ணன் நல்ல நிலைமைக்கு வருவாரு நீ வேணாப் பாரேன்.” என்றான் ப்ரகாஷ். “ என்னை சமாதனாப்படுத்த  சொல்லாதீங்க ப்ரகாஷ்… ஒரு சிலருக்கு மட்டுந்தான் அப்படியெல்லாம் நடக்கும் .ஆனா நிஜத்துல ஒரு சாதாரண குடும்பம் பொழப்பை ஓட்டுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?உங்க வீட்டுல நம்ப லவ்வை ஏத்துப்பாங்களோ.. இல்லையோன்னு  எனக்கு இப்பவே பயம் வருது. படிச்சி […] - [பிழை-17](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-17/): தனது தந்தையின் காரினை எடுத்துக் கொண்டு தோழியின் பிறந்தநாளிற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. “ பத்திரமா போயிட்டு வா..நைட் வரும் போது பாத்து வா. உன் கூட உன்னோட ஃப்ரெண்ட்ஸ் யாராவது வர்றாங்களா? சாவியை எடுத்துட்டு போ. நான் அத்தை வீட்டு விசேஷத்துக்குப் போறேன்..“ என்றார் பிரேமா. காலையிலிருந்தே அவரது புலம்பல்களை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட, “ம்மா…போதும் கொஞ்சம் நிறுத்து. நான் என்ன சின்னக் குழந்தையா? யாரும் கடத்திட்டு போக. காலையிலயிருந்து எத்தனை தடவை இதே வார்த்தையை மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க. சாவி எடுத்துகிட்டேன் . நான் கிளம்புறேன் ‌நேரமாச்சு…” என்றவள் ராகவனை ஐஸ் வைத்து அவரது கார் சாவியை வாங்கி வைத்திருந்தாள்.  ராகவன் பெரிதாக மறுப்பேதும் கூறாமல் அவளிடம் சாவியை குடுத்து விட்டார்.  ஆனால் அவளது தாய் பிரேமா தான் பல ஆயிரம் ஜாக்கிரதைகளையும் புத்திமதிகளையும் கூறிக் கொண்டே இருந்தார்.  கிட்டத்தட்ட செங்கல்பட்டிற்கு அருகில் […] - [முகிழ்மதி 120(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1201/):     கூடல் முடிந்த களைப்பில் தன்னவனது நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தாள் சந்திரமதி. அவளின் நெற்றியில் முத்தமிட்ட ஜித்து “ரிசப்ஷனிலே நீ இன்னைக்கு செம்ம அழகா இருந்தேடி…அதுவும் நான் செலக்ட் பண்ண அந்த பர்பிள் லெஹன்காவிலே ஷப்பா…என்னாலே என்னை கன்ட்ரோல் பண்ணவே‌ முடியலை…எப்போடா உன்னை தனியா தள்ளிட்டு வரலாம்னு நினைச்சேன்டி” என தாபத்தில் உருகி கூறியவனின் பேச்சை கேட்டவளின் முகம் சிவந்தது. “உஷ்…எப்போ பாரு உனக்கு அதே நினைப்பு தானா ஜித்து?” என அவள் அதட்ட, “பின்ன பொண்டாட்டி நீ இவ்வளவு அழகா இருக்கும் போது எனக்கு வேற என்னடி நினைப்பு வரும்?அதுவும் என்னை உருக வைக்கிற இரண்டு…” என அவனது தணிக்கையில்லாத பேச்சிலே அவளின் மேனி குப்பென்று நெருப்பு மூண்டது என்றால்,அவளது நெஞ்சத்தில் பதிந்த அவன் இதழ்கள் அவளை பாகாய் உருகி கரைய வைத்திட “ஜித்து…” என விழிகள் சொருக அவனின் பிடரி மயிர்களை இறுக பற்றிக் கொண்டாள். அதில் உற்சாகம் […] - [பிழை-16](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-16/): ஒரு வாரமாக உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் திவ்யா. இருண்டு மூன்று முறை அவளை சமாதானப்படுத்த முயன்று வெற்றிகரமாக தோல்வியை தழுவினான் வாசு. அன்று இரவு பன்னிரெண்டு மணி அளவில் அவளது அறையை சத்தமில்லாமல் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் வாசு. தாயினருகே உறங்கிக் கொண்டிருந்தவளின் கையை விலக்கி வைத்து விட்டு அதில் ஆளுயர இளஞ்சிவப்பு நிற கரடி பொம்மையை வைத்தான். எப்போதும் தலையணையை கட்டிக்கொண்டு உறங்கும் பழக்கமுடைய திவ்யா கட்டி பொம்மையை இறுக அணைத்துக் கொண்டாள். அவளருகே பெரிய அளவு டைரி மில்க் சாக்லேட்டையும் , நீண்ட நாட்களாக அவள் கேட்டுக்கொண்டிருந்த புதிய அலைப்பேசியை வைத்து விட்டு அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துவிட்டு “ ஹேப்பி பர்த்டே மை டியர் ஆங்கிரி பேர்ட்..” என்று கூறி விட்டு வெளியே சென்றான்.‌ தன்னுடைய தேவையை குறைத்துக் கொண்டு தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தில் அவளின் […] - [பிழை-15](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-15/): திவ்யாவை பேருந்து நிலையத்தில்  இறக்கி விட்டுவிட்டு தனது கல்லூரிக்குச் சென்றான் வாசு. கல்லூரி வளாகத்தில் நுழைந்தவன் வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தனது துறையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான்.  வேமாக நடந்து கொண்டிருந்தவனின் நடையை தடை செய்தது ஆருத்ராவின் குரல். “ ஹலோ..! மிஸ்டர் தேவ்” என்றழைத்தவளின் குரல் கேட்டு திரும்பினான் வாசு. யாரும் அவனை தேவ்வென்று அழைத்தது கிடையாது. ஆருத்ரா தான் முதன்முதலாக தேவ் என்று  அழைத்திருந்தாள்.  அவனருகே வந்தவள் நேரடியாக விஷயத்திற்கு வராமல், “ என்ன பஸ் ஸ்டாப்ல ஒரே கேர்ள்ஸ் ஃபேன்ஸ் போல? ஒரே என்ஜாய் ‌தான் ம்ம்…?” என்றாள் சின்னச் சிரிப்புடன். அவனோ ,” அய்யய்யோ.. அதெல்லாம் இல்லங்க. என்னோட சிஸ்டரை ட்ராஃப் பண்ணிட்டு வந்தேன். நீங்க என்னைப் பாத்தீங்களா? அந்த வழியா தான் எப்பவும் வருவீங்களா?” என்றான். “ ஓ…சிஸ்டரா? நான் கூட கேர்ள் ஃப்ரெண்டோன்னு நினைச்சுட்டேன்..”  “ அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. கேர்ள் ஃப்ரெண்ட்டெல்லாம் […] - [பிழை -14](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-14/): தன்னுடைய சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான் வாசு. “ என்னடா அண்ணா பண்ணுற?” என்றபடி‌ அவனின் பின்புறமாக வந்து நின்றாள் திவ்யா. “ ம்ம்…சாப்டுட்டு இருக்கேன்” என்றான் திரும்பாமலேயே. “அய்யே…ஜோக்கு. நான் அப்புறமா சிரிச்சிக்குறேன். ஏன் டா அண்ணா இவ்வளவு மொக்கையா ஜோக் அடிக்குற நீ?” என தலையிலடித்துக் கொண்டாள்‌ திவ்யா. சட்டையை மடிப்பு கலையாமல் எடுத்து தனியாக வைத்தவன், ஸ்விட்ச்சை அணைத்து விட்டு அவள் புறம்திரும்பினான் .  “ என்ன வேணும் உனக்கு? ஏன் காலையிலேயே வந்து வம்பு பண்ணிட்டு இருக்க?  இவ்வளவு குழையுறது எதுக்காக? என்ன வேலை ஆகணும் உனக்கு?” என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினான். “ஷப்பா….முடியல டா அண்ணா உன் கூட. எதுக்கு இத்தனை கேள்வி கேட்டு உயிரை வாங்குற?” என்றவள் குரலை தாழ்த்திக் கொண்டு, “ டேய்‌…அண்ணா மதியம் ஃப்ரெண்ட்ஸெல்லாம் படத்துக்கு கூப்பிடுறாங்க டா. போயிட்டு வந்துடுறேன். அம்மா கிட்ட கேட்டா விட மாட்டாங்க. நீ ஏதாவது […] - [பிழை-13](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-13/): மிகுந்த தயக்கத்துடன் ஆருத்ராவை பார்த்து விட்டு பாடுவதற்காக எத்தனித்த போது, “ ஆரூ..ஆரூ…” என பதட்டத்துடன் அவளது தோழியொருத்தி மூச்சிரைக்க வந்து நின்றாள்.. அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்து தன்னருகே நின்றவளை யோசனையுடன் பார்த்தாள். “என்ன ராதிகா? என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?” என்றாள். “ ந…நம்ம..ம்ம பவி இருக்கால்ல..” என்று கூறி விட்டு சிறிது நிறுத்தினாள். “ என்ன டி…பவிக்கு என்ன? “ அவ…அவ…” “ம்மச்…இப்ப உன்னைக் கொல்லப் போறேன் பாரு. சீக்கிரம் சொல்லித் தொலை டி எருமை” என்றாள் கடுப்பாக. “ அவ தூக்க மாத்திரை சாப்பிட்டுடா டி” “என்ன டி சொல்ற? என்னாச்சு? ஏன்‌ இப்படி பண்ணினா?” ன்று  பதறினாள். “ அந்த ஷிவா…அதான் மினிஸ்டரோட அல்லக்கை பையன் அவளை ஏமாத்திட்டான் டி. அவ…அவ…இப்ப…இப்ப…” என திணறினாள். ஆருத்ராவைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவே அனைவரையும் பார்த்து தயங்கி […] - [பிழை-12](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-12/): தனது காரில் ஏறி அமர்ந்தவள் பூந்துவாலையை எடுத்து தலையையும் உடலையும் துடைத்துக் கொண்டு ஸ்டீயரிங்கில் தலை கவிழ்ந்து படுத்திருந்தாள்.  உடலாலும் மனதாலும் என்றுமில்லாத பலவீனத்தை உண்ர்ந்தாள் . இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த வாசுவின் விழிகள் அவள் மீது படிந்தது. ஏனோ அவள் அமர்ந்திருந்த கோலம் இதயத்தை பிசைந்தது.  காலம் தந்த வலியை ஏற்க முடியாத பேதையவள் அவன் மீது கொண்ட கண்மூடித்தனமான காதலால் உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொண்டிருந்தாள். அவனையும் சேர்த்தே வதைத்தாள்.  விலகிச் செல்ல விடாமல் அவனது அருகாமையை மட்டுமே காலம் முழுவதும் ரசித்திருக்க விரும்பினாள்.  ஆனால் அவளையும் மீறி அவளது கோபம் வன்மமாக அவனிடம் வெளிப்ட்டது.  அதன் விளைவு அவனது முன்னேற்றத்தை தடை செய்து பொருளாதார ரீதியாக அவனை முடக்கி வைப்பது. காரருகில் வந்து நின்றவன் சுற்றும் பார்த்தான். அவளது காரியதரிசி தூரமாக நின்றிருந்தாள்.  வேகமாக அவளருகே சென்று ,  “லீலா..” என்றழைத்தான். அவளோ திரும்பி,” சொல்லுங்க சார்..என்ன […] - [முகிழ்மதி 119(2)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1192/):     “ஏன்மா இப்படி சொல்லறே?” என தகப்பன் ஆதங்கத்துடன் அவளிடம் வினவ, அவளோ தந்தையை நேர்ப்பார்வையாக நோக்கி “நீங்க ஏன் முதல்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறீங்க?அதுக்கான காரணம் சொல்லுங்க” என கூர்மையான குரலில் வினவினாள். இத்தனை நாட்களும் தன்னுடைய வறட்டுப்பிடிவாதத்தில் இருந்தவர் இறங்கி வந்ததற்கான காரணம் அறிய அவள் விரும்பினாள். அவரோ பெருமூச்சுடன் “கௌரவம்,அந்தஸ்து அது இதுனு உங்களை பிரிச்சு வைச்சது போதும்னு எனக்கு தோணுச்சும்மா…ஆனால் பணம் காசை விட என் பிள்ளைங்க மனசுக்கு பிடிச்சதை செஞ்சா தான் அவங்க சந்தோஷமா இருப்பாங்கனு பூபதி ஜித்து விஷயத்திலே பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்…ஆனாலும் வீரோட அம்மாவை நினைச்சு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்…உன்னோட வாழ்க்கை அவங்களை பார்த்துக்கிறதிலே கடைசி வரை போயிடுமோனு ரொம்ப தயங்கினேன்…நாள் போனால் நீயும் எல்லாத்தையும் மறந்திட்டு கடக்க ஆரம்பிச்சிடுவேன்னு நினைச்சேன்…ஆனால் என் மக பிடிவாதக்காரியாச்சே…அவ ஒரு நிமிஷம் கூட அவனை மறக்கவே இல்லை…தினந்தோறும் அவ அழறதை பார்க்கும் போது […] - [பிழை-11](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-11/): ஹாலில் அமர்ந்து தன்னுடைய ஐம்பத்தி மூன்று இன்ச் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. அவளது கெஸ்ட் ஹவுஸிற்கு வந்த ராகவன் அவளருகே வந்து அமர்ந்தார். அவரை கண்டு கொள்ளாமல் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். “ஆரும்மா…!” என்றழைத்தார் தயக்கத்துடன். அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் பேசமாட்டாள் என்று தெரியும் அவருக்கு. எனவே அவள் கவனிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பித்தார். “ ஆரும்மா…! ஏன் இப்படி பண்ணுற? நான்‌ உன்னோட நல்லதுக்கு தானே எல்லாம் பண்ணுறேன். இன்னும் அந்த பாழாப்போன காதலை நினைச்சிட்டே இருந்தன்னா உன்னோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமே? உனக்கும் ஒரு நல்லதைப் பண்ணிப்‌ பாக்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா? சொன்னா கேளு டா. எவ்வளவோ கோடீஸ்வர சம்பந்தமெல்லாம் வருது. நீ தான் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு இருக்குற. எங்களுக்கும் வயசாகிட்டே போகுது மா.  இதுல மன அழுத்தத்துக்கு மாத்திரை போடுற அளவுக்கு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற?” […] - [பிழை-10](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-10/): கணவன் கூறியதைக் கேட்ட திவ்யாவிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் அவனது தாயின் முன்பு தைரியமாக தன்னை வெளியில் அழைத்துச் செல்ல தயங்கும் கணவனைப் பார்த்து சற்று கடுப்பாக தான் இருந்தது. திருமணம் ஆனதிலிருந்து இதுவரை இருவரும் தனியாக எங்குமே வெளியில் சென்றதில்லை. மீறி ஏதாவது கேட்டால்,” அதான் கல்யாணத்துக்கு முன்னாடி இஷ்டத்துக்கு ஊர் சுத்தி வயித்துல பிள்ளையை வாங்கிட்டு வந்தாச்சுல? இன்னும் அப்படியே சுத்தணும்னா என்ன? குடும்பம்னு வந்தாச்சு. போதும் …போதும்.. ரெண்டு பேரும் ஊர் சுத்துனது. போறதா இருந்தா மூணு பேரும் சேர்ந்தே போகலாம். என் பொண்ணு வந்தா அவளையும் அழைச்சிட்டு தான் எங்கனாலும் போகணும். “ என உறுதியாக கூறி விட்டார்.  தேனிலவுக்கு கூட இருவரையும் தனியாக அனுப்ப மனமில்லாமல் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி தன்னுடனே இருக்க வைத்து விட்டார். தாயை எதிர்த்து பேசி பழக்கமில்லாத ப்ரகஷூம் அமைதியாக இருந்தான்.  மசக்கையுடன் திருமணம், வாசுவுடன் மனஸ்தாபம் என […] - [பிழை-9](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-9/):   தந்தையின் பேச்சைக்  கேட்ட அனுவின் முகமோ சுருங்கிப் போனது. ஆசையாக நூடில்ஸ் சாப்பிடலாம் என்றிருந்தவளுக்கு தந்தையின் பேச்சு முகத்தை சுருங்க வைத்தது‌.  “அப்பா…அப்பா.. ப்ளீஸ் அப்பா..யம்மி நூடில்ஸ் வேணும் பா. தோசை வேணாம்.” என்றாள் அழும் குரலில். முகத்தை தூககி வத்துக்  கொண்டு நிற்கும் குழந்தையினருகே மண்டியிட்டு அமர்ந்தவன் ,” அனு குட்டி…அப்பா சொன்னா கேப்பீங்க தானே?” என்றவன் அவளது முகத்தை தன்‌ புறம் திருப்பினான். அனுவோட அவனது கைகளை தட்டிவிட்டு விட்டு திரும்பி நின்று கொண்டாள். மகளின் கோபத்தை பார்த்தவனுக்கு இதழில் புன்னகை தோன்றியது.. “ சரிப்பா…யாரும் என் கூட பேச வேண்டாம். இந்த சண்டே நானும் அம்மாவும் மட்டும் போட்டிங் போகப் போறோம். அப்பறம் ஹார்ஸ் ரைடிங் போயிட்டு அப்படியே பார்ஃபி டால் வாங்கப் போறோம். அதுவும் பிங்க் கலர் பிக் பார்ஃபி கேர்ள் வாங்கப் போறோம் பா. என் மேல கோபமா இருக்குறவங்க வர வேண்டாம். அவங்க […] - [Ep 19](https://storybypm.com/ep-19/): அத்தியாயம் 19 ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சிம்மனுக்கோ வேலையில் கொஞ்சமும் கவனம் செலுத்த முடியவில்லை.  மேசையில் பேனாவை தட்டிய படி இருந்தவனுக்கோ, திரும்ப திரும்ப அந்த அறையில் நடந்த விடயங்கள் தான் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது.  “ஷிட்!” என்று தன் கையிலிருந்த பேனாவை மேசையின் மீது வீசியவன், இருக்கையில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டான். தன்னை எதற்காக அவளின் நினைவுகள் இப்படி அலைக்கழிக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை. தலையை ஒற்றை கையால் பற்றிய படி இருந்தவன், பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீரை மட மடவென அருந்தினான்.  குளிர்ந்த நீர் தொண்டைக்குள் சென்று சற்று இதமாக இருக்க, அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்தது.  தனது அலைபேசியை எடுத்து முகப்பில் இருந்த அவளின் புகைப்படத்தை தான் பார்த்தான்.  என்ன தான் அவளிடம் அப்படி அலட்சியமாக பேசி விட்டு வந்தாலும், அவனால் அவளை வேறொருவனோடு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது […] - [Ep 18](https://storybypm.com/ep-18/): அத்தியாயம் 18 அவன் பார்வை தன் மேனியில் படிந்திருந்ததை உணர்ந்தவளோ, சட்டென தன்னை குனிந்து பார்க்க, அவள் ஆடையோ சற்று விலகி அவள் எழில் வளைவுகளை அவளுக்கே காட்ட,  நெஞ்சே அடைத்து விட்டது போல இருந்தது அவளுக்கு. கையில் இருந்த மருந்துகளை கீழே போட்டவள், இரு கரங்களாலும் தன்னை மறைத்த படி சட்டென எழுந்து கொண்டாள்.  சிம்மனோ அவளது பதட்டத்தை கண்டு, “என்னாச்சு பேபி? நீ அன் கம்ஃபோர்ட்டபிளா பீல் பண்ணுறியோ! நான் வேணா என் கோர்ட்ட தரட்டா?” என்று ஏகத்துக்கும் நக்கலாக கேட்டானே பார்க்கலாம், அவள் முகமோ அஷ்டகோணலாக மாறியது. பார்ப்பதெல்லாம் பார்த்து விட்டு இப்போது  இப்படி கேட்கிறானே!  ஆத்திரமாக வந்தது அவளுக்கு. “நீங்க ஒரு டாக்டர்ன்னு சொல்லிக்கவே உங்களுக்கு அசிங்கமா இல்லை?” என்று வெடுக்கென அவள் கேட்க, அவன் இதழ்களோ கேலியாக வளைந்தது.  “வை பேபி? டாக்டர்ன்னா பீலிங்ன்ஸ் எதுவும் இல்லாத ஜடமா ? இல்லை…. நீ எப்படி நின்னாலும்….  […] - [Ep 17](https://storybypm.com/ep-17/): அத்தியாயம் 17 அடுத்த நாள் வேலைக்கு வந்த பிருந்தாவுக்கோ உள்ளுக்குள் சற்று நடுக்கமாக இருந்தது.  எங்கே சிம்மனை பார்த்து விடுமோ என்ற பயத்தில் அவன் கண்களுக்கு படாமல் தப்பித்து கொண்டிருந்தாள்.  நினைக்கும் போதே அவமானம் வேறு. எந்த தவறுமே செய்யாமல் அவனுக்கு  இப்படி பயந்து நடுங்க வேண்டியிருக்கிறதே!  உண்மையை சொன்னால் மட்டும் விட்டு விடுவானா? எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று நினைக்கவே பயமாக இருந்தது. அவனை எதிர்த்து பேசவும் தைரியம் இல்லை.  எத்தனை நாளைக்கு தான் இவனிடம் இப்படி மாட்டித் தவிப்பது?  அவளுக்கே தெரியவில்லை.  வார்டில் இருந்த நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்தவள், அங்கே ரவுண்ட்ஸ் வந்த சிம்மனை கண்டு அதிர்ந்து போய் விட்டாள்.  அவனோ மருத்துவர்களுடன் ஏதோ பேசிய படி வந்தவன், அவளை கவனிக்கவில்லை. ‘ஐயோ! என்னை புடிச்ச சனி இங்கயும் வந்துடுச்சா?’ என்று வாய்க்குள் முணு முணுத்தவள், அவன் கண்களுக்கு பட்டு விடாமல் அவசரமாக அந்த நோயாளிக்கு மருந்தை […] - [அத்தியாயம்-11](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): வெளியே வந்த ஆதியோ தனக்காக காத்து கொண்டிருந்த மாதேஷின் வண்டியில் அமர்ந்து சென்றான். “என்னடா உள்ள ஏதோ காரசாரமான விவாதம் போல இருக்கு…” “ம்… நேத்து பேச முடியல… அதான் இன்னைக்கு எல்லாம் பேசிட்டு வந்துட்டேன்…” “ம்… என் பேர் கூட ஏதோ அடி பட்ட மாதிரி தெரிஞ்சுது…” “உங்கூட எல்லாம் சேர கூடாதுனு தடா போட்டாங்க…”  “ஏண்டா அப்படி என்னடா நீ ரொம்ப நல்லவன்… நான் ரொம்ப கெட்டவனா? ஆனா இந்த உலகம் இன்னும் உன்னை ரொம்ப நல்லவன்னு நம்புது பாரு… அவங்கள சொல்லனும்…”  “டேய்… ஏற்கனவே அவங்க பேசுன பேச்சுல ஏக கடுப்புல இருக்கேன்… நீயும் என்னை கடுப்பாக்கி பார்க்காத அப்புறம் ஏற்படற சேதாரத்திற்கு நான் பொருப்பல்ல… சொல்லிட்டேன்…” “சரி மச்சி… சரி மச்சி… ரொம்ப கோபபடாத… புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்தலாமா… இல்ல தண்ணீ ஊத்தி அணைக்கலாமா… சொல்லு… சொல்லு…” “எங்கம்மா சொன்னது கூட கரெக்ட்டுனூ […] - [எபிலாக் (முடிவுற்றது)](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-10/): நான்கு வருடங்களுக்கு பிறகு… மூன்று வாண்டுகளும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர்.  “ டேய்…! டேய்…. ! ஏன்டா இப்படி சண்டை போடுறீங்க?”  என்றபடி வந்து நின்றாள் அனு. “என்னோட க்ரையான்ஸை ஆதவ் உடைச்சிட்டான்..” என அர்ஜூனும்,  “என்னோட காரை ஆர்ஜூன் உடைச்சிட்டான் “ என்று ஆதவ்வும் புகாரளித்துக் கொண்டே சண்டையிட்டு கொண்டிருந்தனர். “ டேய்…! நிறுத்துங்க டா…ஆர்யா…நீ ஏன் டா அவங்க கூட சண்டை போடுற…? டேய்…விடுடா…விடுங்களேன்…டா…” என்று அவர்களை விலக்கிக் கொண்டே இருக்கும் போது கூரிய பொருள் ஒன்று அனுவின் நெற்றியை பக்கம் பார்க்க ‌, “ ஸ்ஸ்…ஆ…ஆ…” என்று நெற்றியை பிடித்துக் கொண்டாள் அனு. உடனே மூவரும் சண்டையிடுவதை மறந்து பதறி அவளருகே வந்து , “அனுக்கா…என்னாச்சு…?சாரி..” என்று அவளது நெற்றியை  ஆராய முன்னே வர,”  ஒண்ணுமில்ல டா..போங்க டா…ஆரும்மா வந்துடப் போறாங்க… போங்க டா..அங்குட்டு…” என்று மூவரையும் துரத்துவதில் குறியாக இருந்தாள்.  அதற்குள் , “ என்ன இங்க […] - [பிழை‌-37 (இறுதி அத்தியாயம்)](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-37/): நாட்கள் வேகமாக நகர்ந்தது… வழக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்‌ வாசு. “ அனு குட்டி .. “ என்று ஆருத்ரா அழைக்கும் போதே , “ ஆரும்மா…பென்சில் பாக்ஸ் எடுத்து வச்சிக்கிட்டேன். டவல் எடுத்து வைச்சி கிட்டேன் அப்பறம் ….ம்ம்.. ஹான்..கிட்டுவுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வச்சிக்கிட்டேன்…அப்பறம் டைரி எடுத்து வச்சிக்கிட்டேன்.. ஓகே வா..?“ என தலையை சரித்துக் கூறி விட்டு,  “அப்பறம் ஹேப்பி ஃபர்த்டே ஆரும்மா…” என்று கூறி அவளது கன்னத்தில் முத்தமிட்டாள். “ தேங்க்‌ யூ டா தங்கம்…” “ ஆரும்மா ஸ்விம்மிங் …” என்று கூறி கொண்டே சாக்ஸை தப்பும் தவறுமாக போட்டுக் கொண்டிருந்தாள்.  எந்த செயலையும் தடவிக் கொடுத்து பழக்காமல் தவறாக இருந்தாலும் அவளையே செய்ய வைத்து பழக்கியிருந்தாள் ஆருத்ரா   “ ஆரும்மா…ஸ்விம்மிங்…” என்று மீண்டும் அவள் கூற, ” சாக்ஸை கரெக்டா போடு அனு… இன்னைக்கு கண்டிப்பா ஸ்விம் பண்ணலாம்.. ஓகே வா.” என்று […] - [பிழை-36](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-36/):  ஆரோனிடம் சண்டை பிடித்துக் கொண்டே அறையின் வாசலருகே வந்த அனு தன் முன்னே நின்ற உருவத்தை பார்த்து விழி விரித்து நின்றாள். “ ஆரு..ஆன்ட்டி….நீங்களா? ஹய்…” என. உற்சாகமாக  குதித்தவளின் முகம் ஒரு கணம் சுருங்கியது. “ ஆனா நீங்க தான் திரும்ப போயிடுவீங்களே?” என்றாள் சற்று வருத்தத்துடன். அனுவின் “ஆரும்மா” என்றழைப்பு காணாமல் போயிருந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது ஆருத்ராவிற்கு. அவளருகே மண்டியிட்டு அமர்ந்தவள் அவளது கன்னத்தில் முத்தமிட்டு,  “அனு குட்டி..நீங்க என்னை ஆரும்மான்னே கூப்பிடுங்க…நான் இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ, நான் அப்பா  மூணு பேரும் ஒரே வீட்டுல இருந்துக்கலாம் சரியா?” என்றாள் அவளது கன்னம் கிள்ளி. “ அய்…நிஜம்மாவா? ப்ராமிஸ்..?” என்றாள் மீண்டும் விழி விரித்து. ஏனோ குழந்தையின்  மனம் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆக மறுத்தது. தான் விரும்பியவர்கள் எல்லாம் விலகிச் செல்வதை எண்ணி மனம் வெதும்பிவளுக்கு மன உணர்வுகளை சரியாக விவரித்து […] - [Ep 25](https://storybypm.com/ep-25/): அத்தியாயம் 25 சிம்மன் வெளியேறியதும் பிருந்தாவின் புறம் திரும்பிய அவளின் தந்தையோ, “அம்மாடி நீ உனக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் இன்விடேஷன் கொடுத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு. இல்லன்னா உங்க அம்மா என்னை தான் திட்டுவா” என்று கூற, அவளும் சரியென தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றாள். அவளின் தோழிகளான சக நர்ஸுகளுக்கும் பத்திரிகையை கொடுத்து விட்டு, வீட்டுக்கு புறப்படத் தயாரானவள் தனது தந்தையிடம் கூறி விட்டு, சென்று காரில் ஏறிக் கொண்டாள். டிரைவரும் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட, பிருந்தாவோ ஏதோ சிந்தனையில் மூழ்கிய படியே ஜன்னலின் ஊடாக வெளியில் வெறித்த படி வந்தாள். சில நிமிடங்கள் கழியவே, அப்போது தான் கார் செல்லும் திசையை கவனித்தாள். அதுவோ வேறு ஒரு வழியில் பயணித்துக் கொண்டிருக்க, ‘இது வீட்டுக்கு போற வழி கிடையாதே!’ என எண்ணியவள், “அண்ணா… நீங்க எந்த வழியில போறீங்க? இது… இது நம்ம வீட்டுக்கு போற வழி கிடையாதே!” […] - [உன் நிழல் நான் தொட ep 1](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-1/): உன் நிழல் நான் தொட–செசிலி வியாகப்பன்   ஹாய் மக்களே… ​நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது விளையாட்டாக நான் எழுதிய முதல் கதைதான் இது! ​அதற்குப் பிறகு நான் பல கதைகளை எழுதி, அதில் சில புத்தகங்களாகவும் வெளியாகிவிட்டன. இருந்தாலும், ஆரம்பக் காலத்தில் எவ்விதப் பயிற்சியும் இன்றி, தப்பும் தவறுமாக நான் எழுதிய இந்த முதல் கதைக்கு எப்போதுமே என் மனதில் ஒரு தனித்துவமான ‘ஸ்பெஷல்’ இடம் உண்டு. ​என் எழுத்துப் பயணத்தின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு, உங்கள் அன்பான கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ​அன்புடன், செசிலி வியாகப்பன்   அத்தியாயம் 1 அது ஒரு அழகிய காலைப் பொழுது. கோவை மாநகரம் அந்த காலை வேளையில் பரபரப்பாய் இருக்க, அதன் மக்களும் தங்கள் வாழ்வின் கனவை, கவலைகளுடன் அடையப் பயணிப்பதில் சற்று […] - [காதல் 7](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/):   அவனது வண்டி சத்தம் வாசலில் கேட்டதும் வேகமாக தலையுயர்த்தினாள் யாழினி. அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வண்டியை நிறுத்திவிட்டு தலையுயர்த்திய சரவணனோ அங்கு ஒருவள் இருப்பதையே அறியாதவனாக வீட்டிற்குள் செல்ல முயல ‘இந்த ஆளுக்கு இருக்க ஏத்தத்தை பார்றேன்’ என கடுப்பாகி ய யாழினி “ஹலோ மிஸ்டர் கட்டன் சாயா” என தெனாவெட்டான குரலில் சரவணனை தடுத்து நிறுத்தினாள். அவளின் அந்த திமிரான அழைப்பில் கோபம் கொண்ட சரவணன் அவளை இமைகள் இடுங்க திரும்பி முறைக்க, அவளோ அதற்கெல்லாம் அசராமல் நிதானமாக எழுந்து அவனருகே வந்தவள் “டீயிலே மட்டும் கசப்பை கலக்குங்க…மனுஷங்களோட வெள்ளை மனசிலே கசப்பை கலக்காதீங்க மிஸ்டர்” என சீறலுடன் கூற, அவனோ ‘என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காள்’ என குழப்பமாக அவளை ஏறிட, ‘எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறதை பாரு…’ என திட்டியவள்,தனது நாசி விடைக்க “போங்க கன்னுக்குட்டி போங்க…போய் ஒழுங்கா காப்பி […] - [காதல் 6](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/):     அறைக்குள் வந்த யாழினி கதவை மெதுவாக மூடினாள். அறை முழுக்க லேசான சந்தன வாசனை படர்ந்திருந்தது.  பழமையான மர அலமாரி, ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய குடும்பப் புகைப்படங்கள் என அந்த இடமே ஒரு தனி அமைதியில் இருந்தது.  அவற்றுக்கு நடுவே இருந்த பெரிய மர ஜன்னல் வழியே, மழையின் துளிகள் கண்ணாடியில் கோடுகளாய் ஓடிக்கொண்டிருந்தன. சில நொடிகள் அப்படியே திகைத்து நின்றாள் யாழினி.  குளிரில் அவளது கைகள் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் அவளது மனதிற்குள் அதைவிடப் பெரிய தடுமாற்றம்! ‘ஏ காதல் தோல்வி பாப்பா…’ ‘எங்க சரவணன் மாதிரி நல்ல பையன் கிடைப்பான்…’ என்ற தனலட்சுமியின் குரல் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் அசரீரியாய் ஒலித்து அவளை வதைத்தது. அவரின் குரல் ஒலித்ததும் இன்று வண்டியில் பயணம் செய்யும் போது எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த தேக உரசல் நினைவில் எழுந்ததோடு ‘அவர் எனக்கே […] - [பிழை-35](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-35/): ஏமாற்றங்களும் ஏக்கங்களும் அவனிற்கு புதிதல்லவே..! பக்குவப்பட்ட மனது ,’ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது …?’ என்று துயரங்களைக் கண்டு  சோர்ந்து போய்விடாமல் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு தள்ளிக் கொண்டு சென்று விடுகிறது. சின்ன சிரிப்புடன் அனைத்தையும் கடந்து  வர பழகிக் கொண்டான். மூன்று மாதங்கள் கடந்திருந்தது. அவ்வபோது ஆருத்ராவை கேட்டு தொணதொணத்த அனு சந்தியாவை தனது  நினைவிலிருந்து தள்ளி வைத்து விட்டாள் போலும். கோபப்படாமல் அவள் புரிந்து கொள்ளும் வகையில் சமாதானப்படுத்தி வைப்பான் வாசு. மூத்த அதிகாரியாக பதவியுயர்வு அடைந்த பிறகு கணிசமான அளவிற்கு அவனது சம்பளமும் உயர்ந்தது. இதர சலுகைகளும் அவனுக்கு கிடைத்தது. ஓரளவிற்கு வீட்டுத் தவணையை கட்டி‌ முடித்து விட்டான். சில மாதங்களே எஞ்சியிருந்தது. திவ்யா அவ்வப்போது வந்து அனுவையும் வாசுவையும் பார்த்து விட்டு செல்வாள். ஆரோனுடன் விளையாடிக் கொண்டிருப்பாள் அனு. அன்று ஞாயிற்றுக்கிழமை.. திவ்யா ஆரோன் மற்றும் ப்ரகாஷுடன் வந்திருந்தாள் அவளும் . புதிய வேலைக்கு […] - [காதல் 5](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/):   ‘சரவணா கன்னுக்குட்டி’ என அழைத்துக்கொண்டு வந்தது வேறு யாருமல்ல…சாட்சாத் தனலட்சுமியே தான்! ‘சிலுக்கு ஆன்ட்டி இங்க எப்படி?’ என அவள் வாயைப் பிளக்க, வண்டியை அதனுடைய இடத்தில் நிறுத்துவிட்டு திரும்பிய சரவணன் “அம்மா” என அதட்ட, “ஏதே அம்மாவா?” என அதற்கும் சேர்த்து அதிர்ந்து வாயைப் பிளந்தாள் யாழினி. அப்போது தான் அவனின் பின்னோடு உள்ளே வந்திருந்த யாழினியை கவனித்த தனலட்சுமியோ “ஏ காதல் தோல்வி பாப்பா? நீ எங்க இங்கே?” என வியப்புடன் விழி விரிக்க, சரவணனோ சட்டென திரும்பி அவளை ஒரு மாதிரி பார்க்க,  அதற்குள் தலையை உலுக்கி வெளியே வந்த யாழினி “சிலுக்கு ஆன்ட்டி எனக்கு காதல் தோல்வி இல்லைனு எத்தனை தடவை சொல்லறது?” என செல்லமாய் அவரை முறைத்தாள். அவரோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “ஆமா…நீ எப்படி என் கன்னுக்குட்டியோட…” என இருவரையும் பதிலுக்காய் மாறி மாறிப்பார்க்க, சரவணனோ ‘மானத்தை வாங்கறாங்க அம்மா’ என சங்கடமாக பின்னங்கழுத்தை […] - [அத்தியாயம்-10](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): இத்தனை நாட்களாய் நிம்மதியாக ஓய்வெடுத்தவன் அன்று முழுவதும் இருந்த வேலைச்சுமையாலும், காலை முதல் வேலை வேலை என்று அலைந்ததாலும் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ஆதி.  இப்படி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அவனை எதிர் கொண்டது என்னவோ அவனது அன்னை தான்.  “ஏன்டா… மறுபடியும் அந்த மாதேஷ் கூட சேர்ந்து ஊர் சுத்த ஆரம்பிச்சுட்டயா? நைட் ரொம்ப நேரம் ஆனதுனால தான் வீட்டுக்கு வராம அவங்க வீட்டுல தங்கிட்டயா? கோமாவுக்கு முன்னாடி எப்படி இருந்தயோ மறுபடியும் பழைய மாதிரியே ஆகிட போறயோனு பயமா இருக்குடா… இனிமேலாவது ஒழுங்கா இருடா… குடும்பத்தை பார்த்துக்கோனும்… தம்பி தங்கைக்கு கல்யாணம் செய்யனும்னு உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு… அதெல்லாம் மறந்துட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்திட்டு இருக்காத…” என்று எப்பொழுதும் போல் புலம்ப ஆரம்பித்திருந்தார். அதை கேட்டவனோ மிகக்கடுப்பாகி “ம்மா… ஏற்கனவே ரொம்ப தலை வலிக்குது… நீங்க பேசி பேசி தலைவலிய அதிகமாக்காதீங்க… போங்க போய் ஸ்டாராங்கா கொஞ்சம் டீ […] - [பிழை -34](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-34/): அனுவிற்கு காலாண்டு விடுமுறை ஆரம்பித்திருந்தது. வாசுவிடம் வந்த அனு, “ அப்பா ரொம்ப போரடிக்குது ப்பா…பை போகலாம் அப்பா…” என்றாள். அவளுடன் விளையாடும் நண்பர்கள் எல்லாம் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊருக்கு பயணித்திருந்தனர். எவ்வளவு நேரம் தான் வீட்டில் இருப்பது. வாசு அலுவலகத்திற்கு கிளம்பும் போது சுந்தரி அக்காவின் வீட்டில் அனுவை விட்டுவிட்டுச் செல்வான்.  அவளுக்குத் தேவையானது அனைத்தையும் சுந்தரி அக்கா செய்து விடுவார். இருப்பினும் மொட்டு மொட்டு என்று அவரது வீட்டில் அமர்ந்திருப்பது அவளுக்கு சலிப்பை தந்திருக்க வேண்டும் .  திவ்யாவும் விடுமுறையை கழிக்க சாந்தியின் சொந்த ஊருக்கு சென்று விட்டாள். இருவர் மட்டுமே வீட்டில் இருப்பது ஏதோ பூத் பங்களாவிற்குள் இருப்பது போல இருந்தது. வாசுவிற்கும் ஒரு மாறுதல் தேவையாக இருந்தது.  என்ன தான் தினசரி வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாலும் ஆழ் மனம் ஆருத்ராவை தான் தேடியது.  நிரப்ப‌ முடியாத வெறுமை அவனை சூழ்ந்து கொண்டு ஒரு அழுத்தத்தை கொடுத்தது. […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-9/): அன்று குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அனைவரும் தத்தமது அறைகளில் தயாராகிக் கொண்டிருந்தனர். ராஜி ஏழு மாத குழந்தையான தன் பேத்தி அன்போவியாவை குளிப்பாட்டி தயார் செய்து,அவரும் தயாராகி அறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். அவரை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அமரேந்திரன்,சஞ்சய் மற்றும் வாசுகி வரவேற்பறைக்கு வந்துவிட்டனர். விஜய்,சமந்தா,லக்ஷன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இன்னும் அவ்விடத்திற்கு வந்து சேரவில்லை. புகைப்படக்காரர்களோ அனைத்து கருவிகளையும் தயார் செய்துவிட்டு தரையில் அமர்ந்து தலையில் கைவைத்து அமர்ந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு வந்தார்கள்,இப்போது மணி மதியம் பன்னிரெண்டு! அவர்களும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள்? ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து “சார் எப்போ தான் எல்லாரும் வருவாங்க…முடியலை…” என பாவமாக முகத்தை வைத்து புலம்ப, அமரோ அவருக்கும் மேல் கடுப்பாக “இந்த வர்மா ஃபேமிலி தொல்லை தாங்க முடியலை டாடி…தாத்தன், பேரன்,தகப்பன் மூணு பேரும் ஒரு மாதிரியே இருந்து நம்ம உயிரை வாங்குறாங்க…” என சஞ்சயிடம் கத்த, வாசுகியோ […] - [இலக்கணம் 32](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-32/): அவளிற்கு ஐந்தாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது‌. அன்று ஸ்வஸ்திக்கில் விஜய் புது சேர்மனாக பொறுப்பேற்க கூடிய நாள்! சேர்மனும் புதிதாக பதவியேற்க போகும் அவரது மகனும் அன்று நிறுவனத்திற்கு வரப்போவதை அறிந்து,ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விஷயம் அறிந்து ஸ்வஸ்திக் நிறுவனமே பரபரப்பானது. ஊழியர்கள் அனைவரும் அந்நிகழ்விற்காக விடுமுறை எடுக்காமல் குறித்த நேரத்திற்கு முன்பே நிறுவனத்திற்கென உரிமையான ஒரு அரங்கத்தில் ஒன்று கூடியிருந்தார்கள். தன்னவன் அவனது தந்தையோடு நிறுவனத்திற்கு வருகைப்புரிவதால் பெரும் மகிழ்ச்சியோடு “ஆல் தி பெஸ்ட் விஜய்” என அவனிற்கு முத்தமிட்டு வாழ்த்தியவள்,முன்பே அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவளை ஆயிரம் பத்திரங்கள் சொல்லியே அவளை வழியனுப்பியிருந்தான். மனைவியை அவன் கையில் வைத்து தாங்கும் விதத்தை பார்த்து ராஜியே சிறிது நெகிழ்ந்துப்போனார். அவளை மட்டுமின்றி லக்ஷன், ராஜி இருவரையும் அவன் பார்த்துக்கொள்ளும் விதமும் அவரை பிரம்மிக்க வைத்தது. தாம் தேடியிருந்தால் கூட தன் பெண்ணிற்கு இப்படியொரு மணமகனை கொண்டு வந்திருக்க முடியாது என்ற உண்மை […] - [இலக்கணம் 31](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-31/): கவினால் அதன்பிறகு எவ்வித பிரச்சனையும் அவள் வாழ்வில் எழவில்லை. அதில் விஜய்யின் தலையீடு சற்று அதிகமாகவே இருந்தது. ஒரு அசட்டு துணிச்சலில் அனைத்தையும் செய்துக்கொண்டிருந்த கவின்,விஜய்யின் உண்மை சுயரூபமும் உயரமும் தெரிந்ததற்கு பிறகு சமியின் புறம் திரும்பினால் தன் உயிருக்கே பேராபத்து என்ற நிஜம் புரிந்து முற்றிலும் விலகிக் கொண்டான். அவனை பயத்தில் விலக வைத்திருந்தான்‌ விஜய் என்பதே சரியான கூற்று! கவின் இப்போது பல் பிடிங்கிய பாம்பின் நிலை தான்! வேலையும் இல்லை கையில் பணமும் இல்லை. மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை! வேறுவழியின்றி தன் மனைவி கவிதாவிடம் அடங்கி வாழ பழகிக்கொண்டான். இப்போது கவிதாவின் கரம் ஓங்க,அவன் தனக்கு இழைத்த பாவத்திற்கும் பேசிய பேச்சுகளுக்கும் சேர்த்து அவனை நன்றாக பழித்தீர்த்தாள். மகனே அடங்கிப்போனதற்கு பிறகு சுலோச்சனாவும் தன் வயிற்று பிழைப்பிற்காக கவிதாவின் காலை அண்டி பிழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை! மொத்தத்தில் அவ்வீட்டில் கவிதாவின் சாம்ராஜ்ஜியம் […] - [இலக்கணம் 30](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-30/): விஜய்யோ விழிகளை பெரிதாக விரித்து ‘இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாங்க…இப்போ என்னாச்சு?நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா’ என ஒரு வித பீதியுடன் அவளை ஏறிட, அவளின் விழிகளிளோ கனல் கூடிக்கொண்டிருந்ததே ஒழிய குறையும் வழியை காணவில்லை. “என்ன மிர்ச்சி திடீர்னு கண்ணுல ஃபயர் விடறீங்க?எனி திங்க் ராங்” என கேட்டுக்கொண்டே அவள் அருகே வர, அவளோ “கிட்ட வந்த கொன்னுடுவேன் ராஸ்கல்…” என விரல் நீட்டி கோபத்தில் கத்தினாள். அவனோ சட்டென அவ்விடத்திலே நின்று “என்ன மிர்ச்சி?” என பாவமாக அவளை பார்க்க, ‘பாவமா மூஞ்சியை வைச்சுக்கிட்டு எல்லாத்தையும் பண்ணறது…’ என பல்லைக்கடித்தவள், அவனை அழுத்தமாக நோக்கி “உன் முழுப்பேர் என்னடா?” என கேட்டதற்கு பிறகே கையெழுத்திடும் வேளையில் அவனது உண்மையான அடையாளங்களை அவள் கண்டுக்கொண்டாள் என்பது விளங்கியது. உண்மை அறிந்தும் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று சிரித்த முகமாக தன்னை காட்டிக் கொண்டிருந்தாள். ‘அவ்வ் மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனா?இப்போ […] - [இலக்கணம் 29](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-29/): அன்று வீட்டிற்குச் சென்றவளை அவளின் தாய் கொலைவெறியோடு முறைத்தார் என்றால், அவளோ அடிப்பட்ட புலியின் சீற்றத்தோடு அவரை கடித்து குதறும் ஆக்ரோஷத்துடன் காத்திருந்தாள். இப்போது அன்னையும் மகளுமாய் எதிரெதிர் துருவங்களில்! விஜய்யிடம் பேசியதற்கு பிறகு சமந்தாவிற்கும் ஓரளவு தாயின் சிந்தனைகள் புரியவே செய்தது. ஆயினும்,விஜய்யின் மீது தனக்கு அபிப்பிராயம் இருப்பது தெரிந்தே இவ்வாறு நடந்துக்கொள்பவரின் மீது கடும்கோபம்! எப்போதும் போல் ஓடி வந்து தன்னை தழுவிய லக்ஷனை அவளால் தூக்கி கொஞ்ச முடியவில்லை. அதற்கு அவள் மனமும் ஒத்துழைக்கவில்லை. அதனால் “லக்ஷா அம்மா மேல ஒரே அழுக்கு…நான் குளிச்சிட்டு வந்திடறேன்…நீ நகரு” என பிள்ளையை நாசூக்காக விலக்கிவிட்டு தன்னறைக்குள் நுழைந்துக்கொண்டாள். குளியலறைக்குள் நுழைந்து தன்னை சுத்தம் செய்தவளிற்கு ஆத்திரமாக வந்தது. உடனே வெளியேச் சென்று ‘என்கிட்டயே உண்மைய மறைக்கிறீயா?’ என மகனை அடித்து விசாரிக்க கரங்கள் இரண்டும் பரபரத்தது. ஆயினும்,தான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனை தண்டிக்க முடியாமல் அந்த தாயுள்ளம் […] - [இலக்கணம் 28](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-28/): தன்னவளே அனுமதி வழங்கியதற்கு பிறகு ஆடவனின் உணர்ச்சிகளுக்கு அணைக்கட்ட இயலுமா என்ன? உடனே ஆண்மகனின் முரட்டு கரங்கள் இரண்டும் பெண்ணவளின் இடையை தழுவ, அவளின் விழியோடு விழி கலந்து “மிர்ச்சி ஆர் யூ ஷ்யூர்?” என ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் அவன் வினவ, அவளோ தன்னவனை ஆரத்தழுவி அவனின் முகம் பார்த்து மோகன புன்னகை ஒன்றை சிந்தி அவளை கொள்ளையிட அனுமதி வழங்கிட, அதற்கு மேல் அவனின் கரங்களுக்கு எந்த வித தடைகளுமல்ல! ஆழி பேரலையென தன்னவளை தனக்குள் வாரிச்சுருட்டிக்கொள்ளும் உத்தேசத்துடன் “லவ் யூ பொண்டாட்டி” என கிறக்கத்துடன் மொழிந்து,அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை தன் கரங்களில் ஏந்திக்கொண்டான். அவன் ‘பொண்டாட்டி’ என்று உரைத்தது அவளின் அடிவயிற்றில் ஒரு விதமான சூடான உணர்வை கிளர்ந்தெழ செய்து,மோகத்தின் முதல் புள்ளியை தொடங்கி வைத்தன. அவளிற்கு நாணத்தில் மேனி சிவந்தாலும் தன்னவனிற்காக தன் கரைகளை உடைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வேட்கையுடன் அவனின் கழுத்தை தன் கரங்களால் […] - [இலக்கணம் 27](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-27/): சமந்தா அலுவலகத்தில் பணிப்புரிந்துக்கொண்டிருக்கும் போது வெளிய மழைக்கொட்டி தீர்க்கும் சப்தம் கேட்டது. இரண்டு வாரத்திற்கு பின்பு,இன்று மீண்டும் மழை பொழிந்தது. வெள்ளை திரையை திறந்து வெளியே பார்த்தவள் ‘என்ன இப்படி மழை பெய்யுது…நான் வேற நியூசில் இன்னைக்கு மழை வராதுனு சொன்னதை நம்பி ஆபிஸ் கிளம்பி வந்துட்டனே’ என நெற்றியை நீவி புலம்பிக்கொண்டே மீண்டும் இருக்கையில் அமர்ந்து வேலை செய்யத்தொடங்கினாள் அவள். ‘சரி மழை கொஞ்சம் விட்டால் கூட உடனே கிளம்பிடணும்’ என கண்ணாடி சாளரத்தின் வழியே வெளியே நோட்டமிட்டவாறே மடிக்கணினியில் கவனம் செலுத்தினாள். விஜய் அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தான். அவனும் அமரும் அவசரமாக விஜய்யின் தந்தையை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்கள். அவனின் அருகாமையை இழந்து முற்றிலும் அவள் தவித்துப்போனாள்‌. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவளின் அறைக்கு வந்து ஏதேனும் அவளை சீண்டி வெறுப்பேற்றிச் செல்வான். அவன் இருக்கும் போது தொந்தரவாக தெரிந்தது, இப்போது அவளவனின்றி அவளிற்கு அவ்விடமே […] - [இலக்கணம் 26](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-26/): அவர்கள் கூறுவதை கேட்க கேட்க,அவள் எப்படி உணர்கிறாள் என்று அவளிற்கே புரியவில்லை. நெஞ்சம் உடைந்து நொறுங்கும் வலி ஒரு புறம் என்றால், நெஞ்சத்தை பாகாய் உருகச்செய்யும் உயிர் நேசம் மற்றொரு புறம்! கலவையான உணர்ச்சிகளில் அவள் சிக்கித்தவிக்க,கண்கள் தன்னவனை நினைத்து கலங்க தொடங்கின. ஏனெனில்,அவர்கள் பேசிக்கொண்டதின் சாராம்சம் இதுவே… ‘தந்தையை காணும் தவிப்புடன் இல்லத்திலிருந்து புறப்பட்டவனை ஆள் வைத்து கொலை செய்ய முயற்சித்தது,சிவப்பிரகாசம்’ அதை கேட்டதற்கே அவள் இடிந்துப்போனாள். அதுவும் அந்த விபத்து,அவனிற்காக நிகழ்த்தப்பட்டது இல்லை. அவளை பழிவாங்க செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சி! அந்த சூழ்ச்சியில் தனக்கு பதிலாக இரையாகியிருந்தது,அவளவன்! அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் அந்த கயவனை அடித்து அவமானப்படுத்தியதற்கான பழிவாங்கும் படலம் இது! எப்போதும் விஜய்யுடனே அவள் பயணிப்பதை அறிந்து அவர்களது வாகனத்தை ஆள் வைத்து தூக்க சொல்லியிருந்தான். அவளோடு சேர்த்து அவனையும் கொல்ல துணிந்திருந்தான். அவனின் அந்த திட்டமும் ஓரளவு பலித்திருந்தன. நினைக்கும் போதே அவளிற்கு ஈரக்குலை நடுங்கியது. இப்போது […] - [இலக்கணம் 25](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-25/): அவனை அப்படியொரு கோலத்தில் பார்த்ததற்கு பிறகு அவளால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவே இல்லை. அவனது வலது கையில் ஒரு பெரிய கட்டு,கழுத்தினோரம் ஒரு சிறிய கட்டு,வலது புற நெற்றியிலும் காலிலும் என அவனது உடலில் ஆங்காங்கே பல விதமான கட்டுகளை பார்த்தவளின் இதயம் தன் துடிப்பையே நிறுத்திவிட்டது. கடந்த ஒரு மாதமாய் அவளது நெஞ்சிலிருந்த உறுத்தல் இப்போது ஊர்ஜிதமாகியிருந்தது. தலை முதல் கால் வரை அவனை ஆராய்ந்தவளின் கண்ணிலிருந்து கடகடவென நீர் வழிய தொடங்கின. தாம் ஒரு நிறுவனத்தின் மேலாளர்,மற்றொரு ஊழியன் அங்கு இருக்கிறான் என்ற எதுவும் அவள் நினைவில் இல்லை. ‘விஜய்…விஜய்…விஜய்’ என அவளின் சிந்தையெங்கும் அவனின் காயங்களும்,அதனால் அவன் அனுபவித்த வலிகள் மட்டுமே! தன்னிலையை மறந்தவளாய் இதழ்கள் அழுகையில் துடிக்க “வி…ஜ…ய்” என நா தழுதழுக்க அழைத்தவளை கண்டவனிற்கும் இதயம் வலித்தது. அவள் தன்னை கண்டவுடன் கோபம் கொள்வாள் என்று எண்ணியிருக்க, ஆனால் அவனின் மிர்ச்சி தான் புரியாத புதிராயிற்றே! […] - [இலக்கணம் 24](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-24/): அவள் வாழ்வில் அலங்கரிப்பட்ட கோலங்கள் மீண்டும் களைந்துப்போன ஒரு பிம்பம்! அன்று இரவு வெகு நேரம் அவனிடமிருந்து தகவல் வரும் என்று காத்திருந்து ஏமாற்றமடைந்தாள் சமந்தா. அப்போதும் தன்னை நிதானித்து ‘நாளை நேரில் தனக்கு விடையளிப்பான்’ என நம்பிக்கையிழக்காமல் இருந்தவளின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஏனெனில்,அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் அவன் எங்கோ மாயமாகியிருந்தான். வேலையாள் முத்துவிடம் விசாரித்ததிற்கும் அவளிற்கு சாதகமான எவ்வித விடையும் கிடைக்கவில்லை. அவளின் மனமோ மீண்டும் ஒரு துரோகத்தால் வீழ்ந்துப்போனது. அவனால் தளர்த்தப்பட்ட இறுக்கம் அவளுள் மீண்டும் குடியேறத்தொடங்க, ராஜியிற்கோ தன் புதல்வியின் மனம் காயமடைந்ததை காட்டிலும்,விஜய்யின் விஷயத்தில் அவரின் கருத்தே சரியானதென கருதி பரம சந்தோஷமடைந்தார். அதுமட்டுமின்றி மகளிடமும் அவ்வப்போது குத்திக்காட்டி பேசி அவளையும் துயரக்கடலில் ஆழ்த்தி நோகடித்துக்கொண்டிருந்தார். லக்ஷனும் விஜய்யின் அருகாமையை இழந்து திணறித்திண்டாடிப்போனான். புதிதாக கிடைத்த தந்தையின் பாசத்தை இழந்த ஓர் உணர்வு! சென்னை வந்ததற்கு பிறகும் “மம்மி விஜய் அங்கிள் ஏன் சொல்லாமல் போயிட்டார்…அவர் எப்போ […] - [இலக்கணம் 23](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-23/): மகனை முழுமையாய் சமாதானம் செய்ததற்கு பிறகு லக்ஷனோ ராஜியிற்கும் விஜயிற்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சமந்தாவிடம் ஒப்பித்துவிட்டான். இப்போதைய தலைமுறையை சார்ந்த பிள்ளைகள் தான் மகாபுத்திசாலிகளாயிற்றே!! அதனால் ஆறு வயது சிறுவனாகினும் அவனிற்கும் ராஜி விஜய்யிடம் சற்றே அனர்த்தமாக நடந்துக்கொண்டது,புரியவே செய்தது. இதுவரை அவளின் தாய் இதைவிட அதிகமாய் அவளை சொற்களால் வதைத்து பேசியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் அதனை ஒரு பொருட்டாக கூட மதியாமல் தக்கப்பதிலடி கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவாள். ஏனெனில்,அவரின் பேச்சை மீறி கவினை திருமணம் செய்துக்கொண்டதினால் உண்டாகிய ஆதங்கம் என்று! இன்றோ விஜய்யிடம் அவர் அவமரியாதையுடன் நடந்துக்கொண்ட விதமும்,அவனை பற்றிய அவதூறான பேச்சுகளையும், அவளால் சிறிதும் ஏற்க முடியாமல், நெஞ்சம் கொதித்தது. அவள் எப்போதும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பல முறை யோசிப்பாள். முடிவெடுத்துவிட்டால் அதுவே அவளின் இறுதி முடிவாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் மறு பரிசீலனை என்ற முடிவிற்கே அவளிடம் இடமில்லை. அந்த பிடிவாதமும் அழுத்தமும் தான் போராடி […] - [இலக்கணம் 22](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-22/): மூவரும் ஒன்றாக இணைந்து நடந்துச் செல்ல,சமந்தாவின் விழிகள் மட்டும் தன்னவனை நேசத்தால் தீண்டிக்கொண்டிருந்தது. அவனையே விழி அகலாமல் மனமுருகி பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது. அவளின் ஒற்றை விழி பார்வைக்காக தவம் இருந்த மன்னவனோ, இப்போது தன்னவளின் விழிகள் மொத்தமும் அவனே நிரம்பியிருப்பதை அறியாமல் குழந்தையோடு பேசிச்சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகே,சமந்தா தங்களோடு பேச்சில் கலந்துக்கொள்ளாதது தெரிய, உடனே அவன் ‘என்ன?மிர்ச்சி வாய்ஸே காணும்?’ என இமைச்சுருக்கி அவள் புறம் திரும்ப, அவளோ இவன் திரும்புவதை அறிந்து பட்டென தலையை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள். ஆனால் அவன் தன்னை கண்டுக்கொள்வானோ என்ற பதட்டத்தில் அவளின் நெஞ்சம் மட்டும் அதிவேகத்தில் துடித்தது. விஜய்யோ “மேடம்” என அழைக்க,அவளோ படபடத்த இதயத்தை முயன்று சமாளித்து “என்ன விஜய்?” என அவன் புறம் திரும்பி சாதாரணமாக கேட்டாள். பேசுகையில் அவள் பதட்டத்தை வெளியே காட்டவில்லை தான். ஆனால் அவளின் கண்களினுள் ஏதோ வித்தியாசத்தை அறிந்த விஜய் “மேடம் […] - [இலக்கணம் 21](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-21/): இன்று… லக்ஷன் உணவருந்தியதற்கு பிறகு சிறிது நேரம் அவர்களுடன் நேரம் செலவிட்டவன்,தாயிற்கும் மகனிற்கும் தனிமைக்கொடுக்க எண்ணிய விஜய் “மேடம் நாளைக்கு தான் புது மேனேஜர் வர்றார்…அதனால் நம்ம இரண்டு பேரும் ஆபிஸில் இல்லைனா வேலை ஒழுங்கா நடக்காது…அதனால் நான் ஆபிஸ் போயிட்டு ஈவினிங் வரேன்” என உரிய காரணத்தை கூறி அலுவலகம் சென்றுவிட்டான். அவனுடைய புரிதலில் அதிசயத்துப்போனாள் அவள். அவன் பக்கம் அவளை ஈர்த்ததும்,சூழ்நிலை அறிந்து செயல்படும் அவனது அந்த குணம் தானே! அவனை பற்றிய சிலாகிப்புடன் தன் அன்னையிற்கு தேவையான உணவை வழங்கி, தாயும் மகனுமாய் தனித்து நேரம் செலவிட்டவர்கள்,மதிய வேளையில் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்துக்கொண்டார்கள். மாலை வேளையில் மகனிற்காக சிற்றுண்டி செய்துக்கொடுத்துவிட்டு தானும் அவனோடு அமர்ந்து சாப்பிட்டவளிற்கு விஜய்யின் நினைவு எழுந்தது. அவனிற்கு அழைக்கலாம் என அவள் அலைப்பேசியை எடுப்பதற்கும்,அவனுடைய மகிழுந்து நுழைவாயிலின் வழியாக உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அந்த சப்தம் கேட்ட லக்ஷனும் “ஐய் […] - [இலக்கணம் 20](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-20/): இருவரும் வீட்டிற்குள் நுழைந்த நொடியினில் கைப்பையை தூக்கி நீள்விரிக்கையில் ஆவேசமாக வீசிய பெண்ணவள் “ஏய் யாருடா நீ?பொண்ணுங்களை ஏமாத்தி அவங்க வாழ்க்கையை கெடுக்கற சைக்கோவா?” என எடுத்தவுடனே அவனின் இதயத்தை சுக்கு நூறாக்கும் வேலையை அவள் தொடங்கிவிட்டாள். விஜய்யோ இப்படியொரு சொல்லை அவளிடமிருந்து எதிர்ப்பாராதவன் அவளை அடிப்பட்ட விழிகளோடு ஏறிட, அவளிற்கோ ஆத்திரம் கண்களை மறைக்க “மத்த பொண்ணுங்க மாதிரி நானும் உன் பேச்சில் மயங்கிடுவேன்னு நினைச்சியா பொறுக்கி ராஸ்கல்? அப்படி நினைச்சிருந்தால் நீ தான் ஏமாந்துப்போவ” என இளக்காரமாக உரைத்து இதழை வளைத்து அவனை பார்த்தவளை விஜய் எதுவும் பேசாமல் இடிந்துப்போய் பார்த்திருந்தான். அவனது கண்களில் தெரிந்த வலியிலும் வேதனையிலும் அவளது உள்ளம் தடுமாறினாலும், ‘அவன் நடிக்கிறான்…இனியும் அவன் நடிப்பில் ஏமாறாதே’ என உருகிய இதயத்தை இறுக்கி “இதுக்கு மேலேயும் உன் காதல் நாடகத்தை நம்பறதுக்கு நான் ஒண்ணும் இளிச்சவாய் கிடையாது…அதனால் உன் நாடகத்தை மூட்டைக் கட்டி வைச்சிட்டு நான் இருக்கப்போற […] - [இலக்கணம் 19](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-19/): அன்று காலை எழுந்ததிலிருந்து ஒரு வித பரபரப்புடன் குதூகலமாய் சுற்றி திரியும் சமந்தா அவனின் கண்களுக்கு புதிதாய் தெரிந்தாள். ஏனெனில்,எப்போதும் முகத்தில் ஒரு அழுத்தத்துடனும் நடையில் மிடுக்குடனும் விறைப்போடு வலம் வருபவளின் இன்றைய மாற்றம் அவனிற்கு வியப்பாய் இருந்தது. இன்று மகன் லக்ஷனும் ராஜியும் பெங்களூர் வருகைப்புரிவதினால் தன் புதல்வனிற்கு பிடித்த வகையில் இல்லத்தை மட்டுமின்றி சமையலறையையும் ஒரு வழி செய்து தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்தாள் சமந்தா. பத்து நாட்களுக்கு பிறகு தன் மகனை காணப்போகும் உற்சாகம் அவளிடம் தொற்றிக்கொண்டதினால் உண்டாகிய மாற்றம் இது! அந்தவொரு செயலே குழந்தையின் மீது ஒரு அன்னையானவள் வைத்திருக்கும் பரிசுத்தமான அன்பை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அனைத்தையும் தயாராக்கி முடித்த பெண்ணவள் கடிகாரத்தில் நேரத்தை கண்டு விட்டு “விஜய் என்ன மசமசனு உட்கார்ந்திட்டு இருக்கீங்க?நேரமாச்சு…வாங்க” என அவனை இழுத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். வந்ததிலிருந்து இரயில் வரும் திசையை நூறாவது முறையாக […] - [இலக்கணம் 18](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-18/): தங்கள் அறையில் சாவகாசமாக அமர்ந்திருந்த கணவனை தேடி வந்த கவிதா “கவின் நீ செய்யறது கொஞ்சமும் சரியில்லை” என‌ ஆவேசமாக கத்த, படீரென தலையை உயர்த்திய கவின் கோபத்தோடு “ஏய் நீ மூடிட்டு உன் வேலைய பாருடி…என் விஷயத்தில் தலையிடாதே” என எடுத்தெறிந்து பேச, அவளிற்கோ சுருக்கென்றது. ஆயினும் தான் தேடி கண்டெடுத்த வாழ்வை காக்க வேண்டிய பொறுப்பு அவளிற்கு இருக்க “கவின் திஸ் இஸ் டூ மச்…நீ டெய்லியும் லக்ஷனை போய் பார்க்கிற விஷயம் சமிக்கு தெரிந்தால் என்னவாகும்?” என அவனை சமந்தாவை வைத்து மிரட்டி பார்த்தாள். அவனோ அப்போதும் அடங்காத காளையாய் “அட லூசு…அவளுக்கு தெரியணும்னு தான் இதெல்லாம் பண்ணறேன்” என நக்கலாக சிரிக்க, அதில் வெகுண்டவள் ‘என்ன?’ என புருவம் சுருக்கி பார்க்கும் போதே, “ஆமாடி…உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு மறுபடியும் என் சமியை கல்யாணம் பண்ணப்போறேன்” என சத்தமின்றி அவள் தலையில் அவன் இடியை இறக்க, பட்டென நெஞ்சில் […] - [இலக்கணம் 17](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-17/): விஜய் இயல்பில் தைரியமானவனே! ஆனால் காதல் என்று வந்துவிட்டால் அவனும் கோழையாகிவிடுகிறான். அதிலும்,சமந்தா மாதிரியான துணிச்சலான பெண்ணை எதிர்க்கொள்வது என்பது சாதாரண விடயமல்லவே? அதன்பொருட்டே அவன் நேசத்தை வெளிப்படுத்துவதில் அவனுள் ஒரு தயக்கமும் தடுமாற்றமும்! அவளின் காயங்கள் அவனை சற்று நிதானிக்க வைத்திருந்தது. தோட்டத்திலுள்ள சாய்வு நாற்காலியில் தலைக்கு அடியில் கைக்கொடுத்து கால் நீட்டி படுத்து வானத்தையே கண்களில் கனவு மிதக்க பார்த்திருந்தான் விஜய். அவனது வெண்ணிற சட்டையின் மார்புக்கூட்டில் ஒரு அழகான சிவப்பு நிற ரோஜா வீற்றிருந்தது. சமந்தா அவளை அழைத்துச் செல்ல வரவேண்டாம் என்று உரைத்தாலும்,அவனோ அவளை தனியே விட மனமின்றி அலுவலகம் அழைத்துச் செல்ல வந்துவிட்டான். அவளிடம் ‘வரேன்’ என்று சொன்னால், உடனே ‘வராதே’ என்றே உரைப்பாள் என்பதை நன்கு அறிந்தே அவன் ‘சரி’ என்று முடித்துக்கொண்டான். வீட்டிற்கு வந்ததற்கு பிறகும்,அதிரடியாக ஒரு பெண் தங்கியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்தால் அவளிற்கு அது சங்கடத்தை விளைவிக்கும் என்றெண்ணி,அவள் வருகைக்காக வெளியே […] - [இலக்கணம் 16](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-16/): அலைப்பேசியை அவனிடமிருந்து வாங்கும் அவசரத்தில் எதிர்ப்பாராமல் அவனது தொடையை ஒற்றை கையால் அழுத்தி மற்றொரு கைக்கொண்டு அவனை அணைத்தாற் போன்ற ஒரு நிலையில் அலைப்பேசியை தன் கரம் பற்றியிருந்தாள் சமந்தா. எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட சரீர தீண்டலில் வேந்தனவனோ அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்துவிட்டான். இதுநாள் வரை அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருந்தவனிற்குள் முதன் முறையாக வேறு மாதிரியான எண்ணங்கள் துளிர்விட ஆரம்பித்தன. அவனது ஸ்வரம் இழந்த உணர்ச்சி நரம்புகள் மீண்டு எழுந்து, அவனிற்குள் மோகமென்னும் வீணையை மீட்ட… வீணையின் மீட்டலில் கிளர்ந்த தேகம் சுகராகத்தில் பரவசமாகி… முதன்முறையாய் நேசமென்னும் ராகத்தை கடந்து தாபமென்னும் தாளத்தை அடைந்திருக்க… காதலனவன் சிந்தை கலங்கி தன் இதய தேவதையின் தீண்டலில் மயக்கத்தில் சஞ்சரித்திருந்தான். சில நொடிகள் கடந்து,புதிதாக தன்னுள் குமிழிட்ட உணர்ச்சியின் வேகத்தில் தாபத்தோடு திரும்பி அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தான். அதேசமயம் அவனை சரமாரியாக நிந்தித்துக்கொண்டிருந்த காரிகையவளிற்கு சில கணங்களுக்கு பிறகே,ஆடவனிடமிருந்து எத்தகைய […] - [இலக்கணம் 15](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-15/): சந்திரனின் வாயிலாக முதலில் அவளிற்கு ஒரு குழந்தை இருப்பதை தெரிந்துக்கொண்டப்போது விஜய்யிற்கு பெரும் அதிர்ச்சியே உண்டாகியது. ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் வேளையில் ‘ஒருவர் மீது உண்மையான நேசத்தை கொண்டிருப்பவர்கள்,அவர்களின் இணை எந்த விதமான சூழ்நிலையை கடந்து வந்திருந்தாலும்,எத்தகைய இழிநிலையில் இருந்தாலும் அவர்களை அவர்களுக்காக ஏற்றுக்கொள்வதே நிஜமான நேசம் அமர்’ என ஒருமுறை தனது தோழனிடம் விஜய் கூறிய வார்த்தைகள் அவனின் காதில் அசரீரியாக ஒலித்தது. அதன்பொருட்டே,அவளின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் சமந்தாவின் தற்போதைய நிலையறிந்தும் அவளை அவன் கரம் பற்ற துணிந்தது. இன்றோ அவளிற்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து,ஏமாற்றத்துடன் சோர்ந்து அமர்வது, ஒரு வகையில் பசுவின் மடியிலிருந்து கறந்த தூய்மையான பாலில் ஒரு துளி நஞ்சை கலந்ததற்கு சமம். அதை உணர்ந்த விஜய்யோ சட்டென நிமிர்ந்தான். அவனது தூய நேசத்தில் ஒரு போதும் விஷத்தை கலந்துவிடக்கூடாது என்று திடமான முடிவெடுத்தான். காதலோடு சேர்த்து பிள்ளையின் பாசத்தையும் ஏற்க அக்கணமே தயாராகிவிட்டான்,தலைவியின் நாயகன். […] - [இலக்கணம் 14](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-14/): அன்று காலை எழுந்து அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்தவள்,வாகனத்தின் அருகே விஜய்யை காணாமல் புருவம் சுருக்கினாள். நேற்று அவனை சரமாரியாக திட்டி காயப்படுத்தியிருந்தாலும்,அதே அளவு வலியை அவளும் அனுபவித்தாள். ஆற்றில் வெள்ளம் வந்தால் அதை அணைக்கட்டி தடுத்து நிறுத்த இயலும். ஆனால் அன்பென்னும் காட்டாற்றை அணைக்கட்டி தடுத்து நிறுத்த இயலாது என்பதை சமந்தா உணர மறுத்தாள். அதை அவளிற்கு உணர்த்தும் விதமாக,அன்று காலையில் எழுந்தவுடனே ஒரு வித பரபரப்புடன் அவனை காண அதிவேகமாக வெளியே வந்தவளிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. எப்போதும் அவள் வருவதை கண்ணால் ரசித்தவாறே மகிழுந்தின் மீது சாய்ந்து நின்று பளீச்சென்று புன்னகைப்பவனை இன்று காணாமல் அவளின் மனம் ஏமாற்றத்தில் சுருங்கியது. உடனே சோர்ந்து விடாமல் ‘வேறு எங்கும் அவன் தென்படுகிறானா?’ என அவசரமாக விழிகளை அவள் சுழற்றிய வேளையில் முத்து அவளை நோக்கி வந்தார். மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி நின்று விழிகளை மட்டும் சுழற்றியவளின் கண்ணில் […] - [இலக்கணம் 13](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-13/): தனி உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்த இருவரையும் கன்னத்தில் கைவைத்து பார்த்திருந்த,மூன்றாம் மனிதனான சந்திரப்பிரகாஷிற்கே அவர்களின் பார்வை பரிமாற்றத்தில் தேகம் சிலிர்த்தது. இதயம் அதிவேகத்தில் துடிக்க ‘ஷப்பா…கண்ணாலே ஒருத்தரை ஒருத்தர் உறிஞ்சி குடிச்சிடுவாங்க போல…அடேய்…ஒரு சின்னப்பையனை வைச்சுக்கிட்டு என்னடா செய்யறீங்க?’ என மனதிற்குள் அலறியவன், இவர்களின் பார்வை பரிமாறலை முடிவிற்கு கொண்டு வரும் விதமாக “ம்க்கும்” என தொண்டையை செருமி,அவர்களின் ஓரங்க நாடகத்தை முடிவிற்கு கொண்டு வந்தான். அதில் முதலில் இருக்கும் இடம் உணர்ந்து தன்னை சுதாரித்தது,சமந்தா தான்! நெஞ்சம் படபடக்க மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி தலையை வெளிப்புறம் திருப்பிக்கொண்டவளின் இதழ்கள் மெல்லியதாக விரிந்தனவோ? அவளது விலகிய பார்வையில் தலையை உலுக்கி நிகழ்காலம் வந்த விஜய்யோ வெட்கப்புன்னகையுடன் பின்னங்கழுத்தை ஒரு கையால் அழுந்த வருடிக்கொண்டே வண்டியை செலுத்தினான். அவ்வப்போது அவன் விழிகள் பெண்ணவளை தொட்டு தழுவவும் தவறவில்லை. அதுமட்டுமின்றி தனது காதல் ஒத்திகையைத் தடைச்செய்ததற்காக சந்திரப்பிரகாஷை முறைக்கவும் செய்தான் அவன். அவனோ மானசீகமாக தலையிலடித்து […] - [இலக்கணம் 12](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு கரத்தை கால் சட்டை பையினுள் விட்டு,தனது தோழன் அமரிடம் சிரித்து பேசிக்கொண்டே திரும்பிய விஜய்யின் சிரிப்பு படீரென்று மறைய,கண்கள் கோபத்தோடு இடுங்கின. ஏனெனில்,சமந்தா வேறொரு அந்நிய ஆண்மகனோடு சிரித்துப்பேசியவாறு நடந்து வருவதை பார்த்தவனிற்குள் பொறாமை என்னும் தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. ‘என்கிட்டனா மட்டும் மூஞ்சிய உம்முன்னு வைச்சிருக்கறது…இவன்கிட்ட மட்டும் சிரிச்சு பேசறாங்க?முதல்ல யாரிவன்?’ என தாடையை நீவி எரிச்சலோடு முனகியவனின் சொற்கள் அலைப்பேசியின் வழியாக எதிர்ப்புறம் இருந்தவனின் செவியிலும் தெளிவாக விழுந்திருந்தது. அதில் வாய்விட்டு சிரித்த அமர் “டேய் மச்சி…என்னடா உன் ஆளு உன்னை கழட்டி விட்டுட்டு வேற யாருக்கிட்டயோ பேசறாங்களா?” என அங்கு நடப்பதை சரியாக யூகித்து தோழனை வம்பிழுக்க, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் அவன் பேச்சு அமைய முகம் சிவக்க “மூடிட்டு போனை வைடா மலக்குரங்கு…இல்லை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவேன்” என பல்லைக் கடித்து சீறியவனிடம், அமர் “டேய் விஜய்… நான் உன் […] - [இலக்கணம் 11](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-11/): நேற்று மழையின் காரணமாக அவனை இல்லத்தினுள்ளே அனுமதித்தவளோ இன்று முதல் அவளிருந்த இடத்திற்கு அவன் வருவதற்கு தடை விதிக்க தொடங்கினாள். அன்று மாலை அவளோடு இல்லத்திற்குள் நுழைய முற்பட்டவனை வாசலோடு இடையிட்டு நிறுத்தி,வேண்டுமென்றே அவனை விரல் சொடக்கிட்டு அழைத்தாள். அவள் அவ்வாறு தன்னை அழைத்தது ஆண்மகனாகிய அவனிற்கு பெரும் அவமதிப்பாக இருந்தாலும்,அவனோ தன்னை அடக்கி சட்டையை இழுத்துவிட்டு ‘என்ன மிர்ச்சி’ என்பது போல் அவளை ஏறிட, ஒற்றை புருவம் உயர்த்தி “ஆமா மிஸ்டர் விஜய்…” என இழுத்தவள், கண்ணாலே உள்ளே சுட்டிக்காட்டி ”நீங்க எங்க உள்ள வரீங்க?” என இதழை வளைத்து தெனாவட்டாக கேட்கவும், அவளின் முகத்தை உற்று நோக்கியவன் “மேடம் இது என்ன கேள்வி?நான் உங்ககூட தான ஸ்டே பண்ணியிருக்கேன்” என வெகு சாதாரணமாக விளக்கம் அளித்தவன் ‘இதெல்லாம் ஒரு கேள்வியா?’ என்பது போல் தாடையை நீவினான். அதில் “ஓ” என இதழை பிதுக்கிய பெண்ணவளோ ‘அது சரி’ என தலையசைத்து […] - [இலக்கணம் 10](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-10/): களைந்த கோலத்தின் வர்ணங்கள் மீண்டும் சீர் திருத்தப்பட்டு அழகானது போல் விஜய்யின் வருகை அவளது வாழ்வில் வண்ணங்களை கொண்டு வரத்தொடங்கியது. ரணமாய் இருந்த உள்ளத்தின் காயத்தை ஆற்றும் அரும் மருந்தாய் அவனது கலப்படமில்லாத புன்னகை அமைந்தன. ஆனால் தன்னுள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்தும் உணராதது போல் பேதையவளின் உள்ளமோ கடந்த கால சுவடுகள் கொடுத்த வலியாலும் அவனை பற்றி அறிந்துக்கொண்ட ஒரு இரகசியத்தாலும் அவனுடைய உறவை ஏற்க அஞ்சி மருகியது. அதன்பொருட்டு இந்த சிறு மன பிசகு கூட,அந்த நாளில் அவனை சற்று அதிகப்படியாக பேசியதால் வந்த இரக்கம் என்றே தன்னை தானே சமாளித்து பழைய விறைப்பிற்கு மாறிக்கொண்டாள். சலனத்தை விதைத்தவனை தன்னிடமிருந்து விலக்கி வைக்கும் விதமாக அவனிடம் பழைய திமிருடனே நடந்துக்கொள்ள வேண்டுமென்று‌ திடமாக எண்ணினாள். அதனால் வீட்டிற்குள் நுழைந்த நொடியில் “ஹலோ மேடம்” என குறும்புடன் அழைத்தவனை தலையை சிலுப்பிக்கொண்டு திரும்பி முறைத்தவள் “பாவம் பார்த்து தான் வீட்டுக்குள்ள விட்டேன்…என்னை […] - [இலக்கணம் 9](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-9/): பாவையவளோ அவனிற்கு நேரெதிர் விதமாக தலைவலி அவளின் உயிரை குடிக்க, நெற்றியை அழுந்தப்பிடித்துக்கொண்டு கட்டிலில் சரிந்தாள். இமை மூடினாலே அவளின் விழிதிரையில் விஜய்யின் அடிப்பட்ட பார்வை வந்து இம்சிக்க ‘ஷிட்’ என மெத்தையை ஒருமுறை குத்தி குப்புற படுத்துக் கொண்டாள். அவனை ஒதுக்க நினைத்தாலும் ஆழ் மனம் அவனிடமே சென்று சரணடைவதை ஏற்க முடியாமல் தவித்தாள். அத்தோடு இன்றைய சம்பவத்தினால் விளைந்த விபரீதமும் அவளை ஒரு நிலையிலின்றி‌ அலைக்கழித்தன. ஏனெனில்,தன்னில் நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கி இங்கு அனுப்பிய ராஜேந்திர வர்மனுக்கு என்ன பதில் கூறப்போகிறோம் என்பது ஒரு புறம் அவளின் சிந்தையை தின்றுக்கொண்டிருந்தது. சஞ்சலம்,தவிப்பு,ஆதங்கம்,சினம்,அருவருப்பு என அனைத்து வகையான கலவையான உணர்ச்சிகளின் ஆக்கிரமிப்பு அவளுள்! தலையணையில் முகம் புதைத்துக் கொண்டவளின் மனக்கிலேசத்தை துடைத்தெறியும் விதமாக அவளின் அலைப்பேசியிற்கு ஒரு அழைப்பு வந்தது. ஆனால் அவளுள் நிரம்பியிருந்த குழப்பங்களின் விளைவால் யாரென்று பார்க்காமலே அழைப்பை நிராகரித்திருந்தாள். அலைப்பேசி தொல்லைபேசியாய் மாறி பலமுறை […] - [இலக்கணம் 8](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-8/): கவினின் இல்லம், திடீரென்று‌ உணவருந்திக்கொண்டிருந்த தட்டை சுவற்றை நோக்கி வீசியெறிந்த கவினோ “ச்சை ஒரு சாப்பாட்டை கூட ஒழுங்கா செய்ய மாட்டியாடி நீ” என உச்சக்கட்ட கோபத்தில் கத்தியவன், அத்தோடு நிறுத்தாமல் “இதுவே என் சமியா இருந்தால் எவ்வளவு சூப்பரா சமைப்பா தெரியுமா?” என முகத்தை சுழித்தப்படி இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டான். அவனின் தற்போதைய மனைவி கவிதாவிற்கோ மனதிற்குள் சுருக்கென்றது. ஒரு பெண்ணின் வாழ்வை கெடுத்ததற்கான தண்டனை இது என்றெண்ணி இதழ்கடித்து கண்ணீருடன் நின்றிருந்தாள் அவள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? உடனே நீள்விரிக்கையில் அமர்ந்திருந்த அவளது மாமியார் “ஏய் சனியனே வெள்ளிக்கிழமை அதுவுமா ஏன்டி ஒப்பாரி வைக்கிற?வீட்டிலிருக்க சீதேவியெல்லாம் வெளியப்போறதுக்கா?” என அவளை வசைப்பாட தொடங்கிவிட, திருமணத்திற்கு முன்பு ‘தங்கம்…வைரம்’ என்று கொஞ்சியவரின் பேச்சு அவளிற்கு மனதில் பெரும் வலியை கொடுத்தன. அவளோ விசும்பிக்கொண்டே தலையுயர்த்தி “அத்தை இப்படியெல்லாம் பேசாதீங்க” என்றாள் சிறிது ஆதங்கத்துடன். உடனே முகத்தை […] - [இலக்கணம் 7](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-7/): சற்று நேரத்திற்கு முன்பு, ஸ்வஸ்த்க்கின் பெங்களூர் கிளையின் மேலாளரின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளின் முகமோ கடும்பாறையென இறுகியிருந்தது. ஏனெனில்,தொழிலாளர்களிடம் விசாரித்து அறிந்த வகையில் நிறுவனம் தொடர்பான விளம்பரங்களுக்கு நிர்வாகம் வழங்கும் காசுகள் அனைத்தையும் அவர் ஒருவரே சுருட்டியுள்ளதை கேள்வியுற்று கொதித்தெழுந்தாள். அதுமட்டுமின்றி,கடையில் பணிப்புரியும் பெண்களிடம் அவ்வப்போது தவறாக நடந்துக்கொள்வதாக இருபெண்கள் ஆவேசத்தோடு பேசிக்கொண்டிருந்ததை ஏதேச்சையாக கேட்டுவிட்டாள் சமந்தா. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அவர்கள் கடையின் விற்பனை சதவீதம் குறைவு தொடர்பாக விசாரணை செய்ய வந்தவளிற்கு மேலாளரின் உண்மை சுயரூபம் சிறிது சிறிதாக தெரிய வந்ததில் தலை கிறுகிறுத்துப்போனது. ராஜேந்திர வர்மாவை போன்ற நேர்மையான மனிதரின் கீழ் பணிப்புரியும் ஒரு மேலாளரின் இழிவான செயல்களை அவளால் கிரகிக்கவே முடியவில்லை. அவள் நினைத்திருந்தால்,அப்போதே தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டு அந்த பெண்களிடம் முழுவிபரத்தையும் விசாரித்து அறிந்திருக்கலாம். ஆனால் அவள் வகிக்கும் பதவியும், நிறுவனத்தின் மீது அவளிற்கு இருக்கும் பற்றும் அதனை செய்யவிடாமல் […] - [இலக்கணம் 6](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-6-2/): சில நொடிகளுக்கு பிறகும்,அவளின் ஞாபக இடுக்கில் வந்த ஆடவனின் முகம் தெளிவின்றியே தெரிந்தன. அன்றைய நாளில் அவளின் உள்ளம் துக்கத்திலும் சஞ்சலத்திலும் தவித்திருந்ததால்,தற்போது அவளால் அவனின் முகத்தை தெள்ள தெளிவாக ஞாபகத்திற்கு கொண்டு வர இயலவில்லை. சிந்தையெங்கும் தெளிவற்ற ஆடவனின் உருவம் மட்டுமே எஞ்சியிருந்தன. ஆனால் அவளுள் முகிழ்ந்த சந்தேகம் மட்டும் நெஞ்சினுள் புழுவாய் அரிக்க அவனின் முகத்தை தனது கூர் விழிகளால் துளைத்தவள் “நீங்க என்னை முன்னாடியே பார்த்திருக்கீங்களா விஜய்?” என ஒரு மாதிரியான குரலில் வினவ, ஆடவனோ சிறிதும் தயங்காமல் “இங்க…பெங்களூரில் பார்த்தது தான் முதல் முறை மேடம்” என அவளின் தீட்சண்ய விழிகளை எதிர்க்கொண்டு பதிலுரைக்க, அவனின் சொற்களிலும் விழிகளிலும் தெரிந்த தீர்க்கம் அவளை குழப்பிவிட ‘இவன் அவனில்லையோ?’ என்ற விசாரத்தை தோற்றுவிக்க “நீங்க இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க இருந்தீங்க?” என்று அவள் விசாரிக்க, அவனோ வழக்கம் போல் கண்சிமிட்டி “ஐயா வேற என்ன பண்ணிட்டு இருந்திருப்பேன்…ஹாயா […] - [காதல் 4](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): விடுதியிலிருந்து அவள் வெளியே வந்த நேரம் நல்லவேளையாக ஒரு ஆட்டோ அந்த பக்கம் வந்தது. அதில் ஏறி அமர்ந்து பயணித்த ஐந்தே நிமிடத்தில் மரம் ஒன்று விழுந்து சாலையை மறித்திருக்கிறது என்று தெரிந்த யாழினி நொந்துப்போனாள். ‘எனக்குனே வந்து சேருவீங்களாடா?’ என உளச்சோர்வோடு அவள் புலம்ப, அதேநேரம் அந்த ஓட்டுனர் “மேடம் இதுக்கு மேலே ஆட்டோ போறது கஷ்டம்…நீங்க நடந்து தான் போகணும்னு நினைக்கிறேன்” என்றவன், வெளியே ஒரு பார்வை பார்த்துவிட்டு “இருட்டா வேற இருக்கு…போயிடுவீங்களா மேடம்?” என தயங்கியப்படி கேட்டார். ஊருக்கு புதிதாக வந்திருக்கும் பெண்ணை தனிமையில் அனுப்ப அவருக்கு அச்சமாக இருந்தது. அவரின் நன்மனம் புரிந்திட  “ஒண்ணும் பிரச்சனையில்லை அண்ணா…நான் போய்க்கிறேன்” என தணிவாக உரைத்து,கீழிறங்க ஆயுத்தமானாள். “என் பொண்ணும் அம்மாவும் வீட்டுலே தனியா இருக்காங்க மேடம்…இல்லைனா நானே உங்க கூட வந்து விட்டுட்டு வந்திருவேன்…கரெண்ட் இல்லாமல் இருட்டா இருக்குதுனு பாப்பா அழுவுறாள்…அம்மா இல்லாத பொண்ணு…அதான் என்னை தப்பா நினைக்காதீங்க […] - [அத்தியாயம்-9](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது.  “டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு பேசிட்டு போறாங்க… நம்ம எல்லாம் அவ்வளவு ஒர்த் இல்லைனு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கறது…” என்றான் மாதேஷ். “இங்க அவங்க பேசுன ஒவ்வொரு வார்த்தையும் உனக்கானது இல்ல… எனக்கானது… அது கூட புரியலையாடா… அது மட்டுமில்ல இன்னொரு விசயத்தை கவனிச்சயா நீ…” என்றான் ஆதி. “என்னடா?” “காலைல இருந்து உன்னையும் என்னையும் பார்த்தவங்க எல்லாம் என்ன சொன்னாங்க?” “என்ன சொன்னாங்க..” என்று திரும்பவும் அவனிடமே கேட்டு இருந்தான் மாதேஷ். மாதேஷை பார்த்து முறைத்த ஆதியோ, “இன்னைக்கு பார்த்த எல்லாரும் உன் கண்ணு சிவந்துருக்கறத பார்த்து நீ தான் தண்ணி அடிச்சேனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இந்த நீலா மட்டும் என்னைய பார்த்து ராத்திரி மப்பு அதிகமாகிடுச்சானு கேட்டுட்டு போறா? இதுக்கு என்னடா அர்த்தம்..” என்றான். […] - [காதல் 3](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): தன்னருகே வானரம் ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு “ஆ..” என அலறிக்கொண்டே அவள் எழ, அவள் சத்தம் போட்டதும் அந்த குரங்கு “கர்..” என பல்லைக்காட்ட,அதில் இன்னும் அதிகமாய் மிரண்டு பின்வாங்கினாள் யாழினி. “உஷ் எதுக்கு சத்தம் போடறீங்க?கத்தாதீங்க” என கணீர் குரலில் வாயில் விரல் வைத்து அவளை அதட்ட, ‘ஏதே சத்தம் போடக்கூடாதா?திடீர்னு குரங்கை பார்த்தால் எப்படிடா சத்தம் போடாமல் இருக்க முடியும்?’ என மனதிற்குள் அவனை வசைப்பாடியவளிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை. அவள் அச்சத்தில் மிருளுவதை கண்ட அந்த பள்ளி மாணவர்கள் “அக்கா பயப்படாதீங்க…அது நம்ப அண்ணாவோட ரெகுலர் கஸ்டமர் தான்” என சிரித்துக்கொண்டே சொல்ல, ‘ஏதே குரங்கு ரெகுலர் கஷ்டமரா?’ என வாயைப் பிளந்தாள். அதற்கு ஏற்றாற் போன்று அந்த குரங்கோ மெதுவாக அவளின் தட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுக்க கையை நீட்ட “ராமு” என அதட்டிய சரவணன் “இந்தா இதை சாப்பிடு” என அதற்கு தனியாக ஒரு வாழைப்பழத்தையும் பிஸ்கெட்டையும் தட்டில் […] - [பிழை-33](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-33/): முழுதாக எட்டு மாதங்கள் கடந்திருந்தது மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் மலை முகட்டில் இருந்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள் ஆருத்ரா. எங்கெங்கு காணினும் இயற்கை தனது கொடையை வாரி வழங்கியிருந்தது. மெல்லிய குளிர் திறந்திருந்த கண்ணாடி சன்னல் வழியாக நுழைந்து இதத்தை அளித்தது. காதில் செவிப்பொறியை மாட்டிக்கொண்டு இளையராஜாவின் தாலாட்டும் பாடல்களை கண்மூடி ரசித்திருந்தாள் ஆருத்ரா.  இலகுவான உடையணிந்து தலை‌முடியை தூக்கி கொண்டையிட்டிருந்தாள். அவளது விரல்கள் தலையணையில் ராகத்திற்கேற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தது. மனம் முழுவதும் ஒருவித அமைதி பரவி நிற்சலனமாக இருந்தது. தட்டில் இடியாப்பமும் தேங்காய்பாலும் எடுத்துக் கொண்டு அவள் முன்பு ‌வந்தமர்ந்தார் ப்ரேமா.  பாடலில் தன்னை மறந்து மூழ்கியிருந்தாள் ஆருத்ரா. அவளைச் சுற்றிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாவல்கள் பரப்பி இருந்தது. அவற்றை தள்ளி வைத்து விட்டு அவளது கைகள் தொட்டார் ப்ரேமா. விழிகளை திறந்தவள் தாய் உணவோடு இருப்பதை கண்டு செவிப்பொறியை கழற்றி வைத்து விட்டு உணவை எடுத்துக் […] - [Ep 24](https://storybypm.com/ep-24/):   அத்தியாயம் 24 பிருந்தாவை தனது காருக்கு அழைத்து வந்தவன், பின்னால் உள்ள சீட்டில் அமர வைக்க, அவளோ இன்னுமே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் இருந்து லேசாக ரத்தம் கசிந்த படி இருக்க, அதை கண்டவனுக்கோ உள்ளம் பதற தான் செய்தது. ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணனாக எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றியவன். எவ்வளவு பெரிய காயங்களையும் சாதாரணமாக கையாண்டவன் அவன். ஆனால், இன்று அவளின் உடலில் உள்ள அந்த சிறு கீரலை கண்டு முதன்முறையாக அவனின் கரங்கள் நடுக்கத்தை உணர்ந்தது. அவசரமாக சென்று தனது காரில் உள்ள முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவன், அவளின் கழுத்தில் உள்ள காயத்துக்கு மருந்து போட ஆரம்பித்தான். மருந்து பட்டதும், “ஸ்ஸ்…” என்று வலியிலும், எரிச்சலிலும் பற்களைக் கடித்தவள், ஆடவனின் கரங்களை சட்டென பற்றிக் கொள்ள, அவனோ, “ஒன்னும் இல்ல… இன்னும் கொஞ்சம் தான். பொறுத்துக்கோ” என்று அவளை தேற்றிய படியே, […] - [பிழை-32](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-32/): கட்டிலில் இருந்து எழுந்தவன் வேகமாக தனது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு ஆடையை திருத்திக் கொண்டான். சிதறிக் கிடந்த அவளது ஆடைகளை அள்ளிக் கொண்டு அவளருகே வந்து அவளை எழுப்பி அமர  வைக்க முயன்றான். அவன் கைகளிலிருந்து தனது ஆடைகளை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டாள்.  “ என்ன செய்யுது ருத்ரா..?” என்றபடி அவளது தோளினைத் தொட முயன்றவனது கைகளை தட்டிவிட்டு,  “என்னைத் தொடாதே…!  தயவு செஞ்சு என்னைத்  தொடாதே…! “ என முகம் சிவக்க கத்தினாள். மூச்சு வாங்க அமர்ந்த வாக்கிலேயே தனது ஆடையை அணிந்து கொண்டவள் மெத்தையில் இருந்து தடுமாறியபடி எழுந்து வந்தாள் மூச்சிரைக்க ஆரம்பித்தது அவளுக்கு.  அவளருகே வர முயன்றவனை கைக்கொண்டு தடுத்து நிறுத்தியவள் , “ போயிடு தேவ்…இங்கிருந்து போயிடு… நா…நா…உன்னை பிடிச்சி வைச்சிக்க …விரும்பல…இதோ…உன் வீட்டை நான் வாங்கின டாக்குமெண்ட்…ஒரு நிமிஷம் இரு…” என்றவள் தனது கஃப்போர்ட்டை திறந்து மற்றொரு கோப்பினை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “ […] - [அத்தியாயம்-8](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் அந்த அலுவலகத்தில் வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பெண் மதி. “மேம்…” என்று கூறி நீலாம்பரியின் எதிரே நின்றிருந்தவளது கைகளில் தேநீர் அடங்கிய கோப்பை சிறிய பீங்கான் தட்டில் வீற்றிருந்தது. அவளை பார்த்த நீலாம்பரியோ டேபிளின் மீது வைக்கும் படி வாய் வார்த்தையாக கூறாமல் கண் ஜாடை செய்திருந்தாள். அவளும் வைத்து விட்டு திரும்பி செல்ல எத்தனிக்க சொடக்கிட்டு அவளை நிறுத்தியிருந்தாள் நீலா. மதியோ திரும்பி “எஸ் மேடம்…” என்று கூறியிருந்தாள். நிதானமாக தனக்கு அவள் கொண்டு வந்திருந்த தேநீரை எடுத்து குடித்து கொண்டே “டீ குடிக்க போனா அந்த வேலை மட்டும் செய்யனும். அத விட்டுட்டு கேன்டின்ல என்ன வெட்டியா அரட்டை வேண்டிக்கிடக்கு…” என்றாள். “மேடம்… அது வந்து… சும்மா தான் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்னு நினைச்சேன்…” “ஒஹோ… அப்படியா? உங்கள வேலய விட்டு நிறுத்திட்டா கொஞ்ச நேரம் என்ன ரொம்ப நேரமே பேசிகிட்டு […] - [காதல் 2](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): “கட்டன் சாயா வித் காதல்” என அந்த கடையின் பெயர்ப் பலகையை வாசித்த யாழினியின் இதயத்தில் வித்தியாசயான ஓர் உணர்வு! அப்போது சூடான தேநீரின் நறுமணம் மழைச்சாரலின் வழியே மெதுவாக அவளை நோக்கி மிதந்து வந்தது. சோர்ந்துபோன இதயங்களிலிருந்து கவலைகள் அனைத்தையும் கிள்ளி எடுக்கும் அளவுக்கு அந்த வாசனை வீரியமிக்கதாக இருந்தது. காற்றில் மிதந்து வந்த நறுமணம் அவளை மயக்கின. அத்தோடு கடையின் உள்ளே, “மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்… மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்… மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்… ஏன் என்று கேளுங்கள்…” என ஜானகி அம்மாவின் குரலில் தேனில் உருகி கசிந்து வந்த பாடல் அவளை அப்படியே மோனத்தில் உறைய வைத்தது. அந்த பாடலின் வரிகள் ஏனோ அவளிற்காக பிரத்யேகமாக எழுதப்பட்டது போன்ற ஒரு மாயை! அவளின் மேல் மழைநீர் கொட்டியதை கூட உணராமல் சில வினாடிகள் விழி மூடி நின்ற பாவை சட்டென இமைத்திறந்தாள். […] - [காதல் 1](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): சேலம் ஏற்காடு மழை அடிவாரம், அங்கிருந்து ஒரு பேருந்து தனது பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைக்கு மேல் ஏறத்தொடங்கியது. அந்த அரசு பேருந்து மலையில் ஏறிய கணத்திலிருந்து மழை ஓயாமல் கொட்டி தீர்க்கத் தொடங்கின. சிறிதும் ஓய்வு கொள்ளாமல் பொழிந்த மாரியால் மழைத்துளிகள் சன்னல் திரையின் மீது சரசரவென ஊர்ந்து செல்ல,அப்போதும் ஓட்டுநர் சோர்ந்து விடாமல் மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தை திறமையாக செலுத்திக்கொண்டிருந்தார். வெளியில் ரகசியங்களை அப்படியே விழுங்கிவிடும் அளவுக்கு அடர்ந்த பனிமூட்டத்திற்குள், ஏற்காட்டின் இருண்ட மலைப்பாதைகள் வளைந்து நெளிந்து மறைந்தன. பேருந்து பல சிரமங்களை கடந்து பயணித்தாலும் அரசு பேருந்தின் உள்ளே மக்கள் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் சொகுசாகப் பயணித்தனர். அவர்கள் எந்த அளவு சௌகரியமாக பயணித்தார்கள் என்றால், ஒரு சிலர் குறட்டை விட்டுத் உறங்கிக் கொண்டிருக்க,ஒரு சிலர் அருகில் இருப்பவரிடம் அரட்டை அடிக்க,இன்னும் சிலர் வேர்க்கடலையை வாயில் போட்டு சத்தமாக கொறித்தார்கள். பின் பக்க இருக்கையில் ஒரு குழந்தையோ […] - [பிழை -31](https://storybypm.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88-31/): நெற்றியில் கை வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் வாசு. தந்தையின் நெஞ்சினில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் அனு. அவனது ஒரு கை அனுவை அணைத்துக் கொண்டிருந்தது. நாளை காலை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் .தூக்கம் வருவேனா என்றது. எதையோ நினைத்து குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது அவனது மனம். ஹாலில் பியானோ வாசிக்கும் ஒலி கேட்டது. மெல்ல எழுந்தவன் அறையை திறந்து கொண்டு  வெளியே வந்தான். ஆருத்ரா தான் பியோனாவை வாசித்துக் கொண்டே பாடினாள். “வரவின்றி செலவானால் தவறில்லையே… வாழ்நாட்கள் செலவானால் வரவில்லையே… நேற்றோடும் இன்றோடும் நீயில்லையே… நாளை உன் கையோடு உனக்கில்லையே.. யாரிடம் தவறில்லை… யாரிடம் குறையில்லை… தூக்கமே நிம்மதி…தூங்கிடு நண்பனே… நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்துவிடு விழி மூடும்…. எந்தன் குரல் கேட்டு உனைத் தூக்கம் தழுவாதா… பந்தம் நானில்லை…பரிதாபம் கூடாதா… நண்பனே…நண்பனே…நண்பனே…” என்று பாடி முடித்ததும் மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். கதவினோரம் நின்று கைகளை […] - [Ep 23](https://storybypm.com/ep-23/): அத்தியாயம் 23 பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவனோ, “என்னடா எங்க கிட்டயே ஹீரோயிசம் காட்டுறியா? மரியாதையா இங்கிருந்து ஓடி போயிடு. இல்ல இவ கழுத்த அறுத்துட்டு போயிட்டே இருப்போம்” என்று மிரட்டலாக கத்த,  சிம்மனுக்கோ இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை. கோபத்தை காட்ட இது சரியான நேரமால்லவே! தன்னவள் மீது கத்தியை வைத்து மிரட்டுகிறான். கொஞ்சம் விட்டால் அவள் உயிருக்கே ஆபத்தாகி விடுமே! அவனுக்கோ இப்போது அனைத்தையும் பொறுமையாக தான் கையாண்டாக வேண்டும் என்ற கட்டாயம். “ஓகே… நான் எதுவும் பண்ணல…. ப்ளீஸ் அவளை விட்டுடு” என்று தன் மொத்த கோபத்தையும் கட்டுப் படுத்திய படி அவன் சற்று பொறுமையாக சொல்ல,  பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தவனோ, சிம்மனின் முகத்தில் தெரிந்த அந்த சிறு தடுமாற்றத்தை கண்டு உள்ளுக்குள் வெற்றிப் புன்னகையை உதிர்த்துக் கொண்டான். கீழே விழுந்து கிடந்த அவனின் நண்பர்களிடம் திரும்பியவன், “டேய் சீக்கிரம் போய் அவனை புடிங்கடா” […] - [அத்தியாயம்-7](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): நேர்முகத் தேர்வில் தேர்வாகி இருந்த அனைவரும் இன்று வேலைக்கு வரும் படி உத்தரவு இருந்தது.  அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே “ஹாய்…” என்று முன்னே வரவேற்பறையில் இருந்த பெண் ஆதியை நோக்கி வேகமாக கைகளை ஆட்டினாள். “ஹாய்… டார்லிங்க்… எப்படி சொன்னபடியே இங்கேயே வேலைக்கு சேர்ந்துட்டேன் பார்த்தயா?” என்று கூறி சிரித்தான். “ரொம்ப ஹாப்பி… உங்க நேம்…” “ஆதி… ஆதீரன்…” “வாவ்… நைஸ் நேம்… நான் உங்கள ஸ்பெஷலா தீரன்னு கூப்பிடலாமா?” “நோ… பேபி… எல்லாரையும் போல ஆதினே கூப்பிடேன்…” “எல்லாரும் நானும் ஒன்னா?” என்று வெட்கப்பட்டு கொண்டே அந்த பெண்ணும் கேட்டாள். “அது என்னவோ இல்ல தான்… பட்… இந்த தீரன்  மட்டும்  வேண்டாமே…” என்றான். ஏனோ அந்த பெயர் தனக்கு மிக மிக நெருக்கமானவர்கள் அழைப்பது போல் ஒரு உணர்வு… அதை மற்றவர்கள் கூற அவன் மனம் விரும்பவில்லை.  அந்த நெருக்கமானவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவும் அவன் முனையவில்லை.  “சரி… பேபி… […] - [Ep 22](https://storybypm.com/ep-22/): அத்தியாயம் 22 அன்று பிருந்தாவோ சிட்டியில் இருந்த அந்தப் பெரிய ஷாப்பிங் மாலுக்கு தான்  வந்திருந்தாள். எப்போதும் வெளியில் போகும் போது தங்கையுடன் செல்லுவது தான் வழக்கம். ஆனால் இன்று மிருதுளாவுக்கு கல்லூரியில் ஏதோ விஷேட கிளாஸ் இருப்பதால் அவளால் வர முடியாமல் போய் விட, வேறு வழியின்றி பிருந்தா மட்டும் தான் தனியாக வந்திருந்தாள். அவளோ தனக்கு தேவையான சில பொருட்களை தேடிப் பார்த்து எடுத்துக் கொண்டிருக்க, அதே சமயம் அவள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பேர். அவர்களை பார்த்தால் பொருட்களை வாங்க வந்தது போல தெரியவில்லை. மாறாக, பெண்களை கேலி பேசுவதும், அவர்களை உரசுவதுமாகவே திரிந்து கொண்டிருந்தனர். அவர்களோ அங்கிருந்த இரண்டு பெண்களை பார்த்து ஆபாசமாக கமெண்ட் அடித்துக் கொண்டு வர, இது  பிருந்தாவின் செவிகளையுமே எட்டியது.  அவளோ சட்டென திரும்பிப் பார்த்தாள். அந்த பெண்களோ பயத்தில் அங்கிருந்து அவசரமாக ஓடி விட, இப்போது […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-8/):   பல வருடங்களுக்கு பிறகு, ரத்தினவேல் ரகுநாத பூபதி தேர்தலில் வேட்பாளராக நின்று வெற்றிப்பெற்றிருந்தான். அவனிற்கு தற்போது தலைமை ஏற்பதற்கு உரிய வயதும் தகுதியும் வந்துவிட்டதால் தந்தையின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வராக அன்று பதவி ஏற்க ஒப்புக்கொண்டான். அன்று அவன் பதவி ஏற்கப்போகும் தினம்,அந்த விழாவிற்கு செல்வதற்காக குடும்பமாக அனைவரும் தயாராகி கொண்டிருந்தார்கள். காஞ்சனா மாலாவிற்கு வயது தொண்ணூற்றை கடந்திருந்தது. முன்பு போல் அவரால் ஓடியாட முடியவில்லை என்றாலும்,சக்கர நாற்காலியின் துணையுடன் விழாவிற்கு செல்ல தயாராகியிருந்தார். விஜயேந்திர பூபதி மற்றும் வானதி இருவருக்கும் வயதின் மூப்பு அவர்களது முகத்திலே தெரிந்தது. அவரது கணவர் ஒரு வித பரபரப்புடன் இருப்பதை கவனித்து “ஏங்க இப்படி பரபரனு இருக்கீங்க?” என வானதி குழப்பமாக வினவ, “பின்ன இன்னைக்கு என் பையன் தமிழ்நாட்டு அரியாசனத்திலே அமரப்போற நாளு…அவன்கிட்ட பல வருஷம் கெஞ்சிக் கூத்தாடி இப்போ தான் முதல்வரா பொறுப்பேத்துக்க சம்மதிச்சிருக்கான்…அப்போ எனக்கு சந்தோஷமா இருக்காதா வானு?” […] - [இறுதி அத்தியாயம் 128](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-128/): தமயந்தியின் பேச்சு திறமையாலும் அவள் இறங்கி செய்த களப்பணியினாலும் ஒரு தொகுதியில் பொது மக்களிடமிருந்து கிடைத்த பலமான ஆதரவினால் இப்போது மாவட்ட செயலாளராக இருக்கிறாள். ரத்தனவேல் படிப்படியாக முன்னேறி அமைச்சர் பதவியில் அமர்ந்திருந்தான். வீரோ வழக்கம் போல் நண்பனிற்கு பக்கப்பலமாக இருந்து அவனிற்கு அனைத்து உதவிகளையும் செய்துக்கொண்டிருந்தான். “நீயும் ஒரு தொகுதியில் நிக்கலாம் இல்லைடா” என ரத்தினவேல் அவனிடம் எடுத்துரைக்க, “உனக்கே தெரியும்…எனக்கு இந்த பதவி மேலே எல்லாம் ஆசையில்லை பூபதி…எனக்கு உன்கூட இருக்கிறது தான் சந்தோஷம்” என்று உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டான். நண்பனின் பதிலில் எப்போதும் போல் ரத்தினவேல் நெகிழ்ந்துப்போனான். அதுமட்டுமின்றி தமயந்தி அரசியலில் குதித்தப்போதும் வீர் தனது தோழனிற்கு பாதுகாவலனாக,உதவியாளனாக இருந்தானே ஒழிய,மனைவியினிடம் செல்லவில்லை. அவளை உடனிருந்து காக்க அவளின் ஆஸ்தான பாதுகாவலன் சம்பத் நியமிக்கப்பட்டிருந்தான். அதைக்கண்டு தமயந்தியே ஒரு சில நேரம் “நீங்க என்னை கல்யாணம் பண்ணியிருக்கீங்களா?எங்க அண்ணனை கல்யாணம் பண்ணியிருக்கீங்களானே தெரியலை…என் அண்ணா கிட்ட அப்படி […] - [இலக்கணம் 5](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-5/): அவனின் புன்னகையை துடைத்தெறிந்ததற்காக வருந்திய பெண்ணவள் சட்டென பழைய நிகழ்வுகளின் தாக்கத்தில் தலையை உலுக்கி கொண்டாள். சூடு கண்ட பூனையல்லவா அவள்? அதனால் மீண்டுமொருமுறை தனது வாழ்வில் வேறொரு ஆண்மகனில் பரிதாபம் கொண்டு தடுமாற்றம் கொள்வது தன் பெண்மைக்கே உரிய இழுக்காக கருதியவளின் நெஞ்சம் சுரீரென்றது. பார்த்த சில மணித்துளிகளில் அவன் பால் சாயத்துடித்த தன்னையே குற்றம் சாட்டியவளிற்கு அவமானம் பிடுங்கி தின்றது. அதனால் அவனில் இரக்கம் கொண்டதினால் முகம் கறுக்க தலையை வெளியே திருப்பியவளின் தேகம் எஃகிரும்பாய் விறைத்தது. அவளின் அழகிய மதிவதனமும் கடும்பாறைக்கு நிகராக இறுகிவிட்டது. ஆடவனோ தன் மனம் பற்றிய சுயபரிசோதனையில் ஈடுப்பட்டுருந்ததால்,காரிகையின் பார்வை மற்றும் இறுக்கத்தை அறியவில்லை. ஒரு கட்டத்தில் சமந்தா செய்த தவறிற்காக தன் மீதே பெருஞ்சினமடைந்தவள் அதனை இறக்கி வைக்கும் வடிகாலாய் அவளிடம் சிக்கிய அப்பாவி ஜீவன் வேறுயாருமல்ல,ஜீவா தான்!! மேனியெங்கும் அனலாய் தகிக்க உக்கிரத்துடன் அமர்ந்திருந்தவளின் கைப்பேசி சிணுங்கியது. அந்த சப்தத்தில் கவனம் […] - [இலக்கணம் 4](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-4/): பெங்களூர் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்திறங்கினாள் சமந்தா. தனது உடைமைகள் அடங்கிய பெட்டியை தள்ளிக்கொண்டு கம்பீரமான நடையுடன் விழிகளை நாற்புறமும் சுழற்றியவாறு வெளியே வந்தாள். அவள் வயது இளம்பெண்கள் பலரும் இறுக்கிப்பிடித்த கொசவுசட்டையும் தொடையோடு ஒட்டி உறவாடிய ஜீன்ஸூமாக வலம் வந்துக்கொண்டிருக்க,பாவையவளோ அதற்கு எதிர் விதமாக இளஞ்சிவப்பு நிற பருத்தி புடவையை நேர்த்தியாக அணிந்து விரிந்திருந்த கூந்தலை தூக்கி கொண்டையிட்டிருந்தாள். நெற்றியில் கண்ணிற்கு புலப்படாத வகையில் ஒட்டியிருந்த கருப்பு நிற பொட்டு,காதில் நட்சத்திர வடிவிலான சிறு தோடு,கழுத்தில் மெலிதான வெள்ளை கல் பதித்த வட்டவடிவிலான டாலர் வைத்த சங்கிலி,வலது கையில் கருப்பு நிற டைட்டன் கடிகாரம் இவ்வளவு தான் அவளின் அலங்காரம். அவளது இந்த எளிமையான தோற்றமே ஏனைய பெண்களிடமிருந்து சமந்தாவை தனித்து காட்டியது. அத்தோடு அவளிற்கே உரிய நிமிர்வும் நேர்க்கொண்ட பார்வையும் அவளிற்கு தனி அழகையே கொடுத்திருந்தது. சில ஆண்மகனின் பார்வை தன் மீது ஆர்வமாக விழுவதை அறிந்தப்போதிலும் காரிகையின் விழிகளோ தன்னை […] - [இலக்கணம் 3](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-3/): இரண்டு வருடங்களுக்கு பிறகு, “உன்னாலே முடியாதென்று… ஊரே சொல்லும் நம்பாதே… பொய் பரிதாபம் காட்டும்… எந்த வர்க்கத்தோடும் இணையாதே… பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினி சிறகே…ஏ…” என கண்மூடி உச்சஸ்தானியில் கத்திக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று “ஆஆஆ” என வலியில் தலையை பிடித்து அலறினான் ஜீவா. அவனை அவ்வாறு அடித்தது வேறுயாருமல்ல,சாட்சாத் அவனது ஒரே ஆருயிர் தோழன் சதீஷ் தான். அதில் கடுப்பாகி வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பியவன் “ஏன்டா…என்னை அடிச்ச பரதேசி?” என எகிறியவன்,அத்தோடு நிறுத்தாமல் எட்டி அவனின் தலையில் தட்ட, அவனோ “அம்மாஆஆ” என வலியில் முனகி பாவமாக முகத்தை வைத்து ‘நானில்லைடா’ என்பது போல் தலையசைக்க, கோபத்தில் நாக்கை கடித்து “அடிங்…நீ அடிக்கலைனா உங்க அப்பனா அடிச்சான் பீடை?” என்னும் போதே சதீஷ் அவனை பலமாக முறைக்கவும், “என்னடா முறைப்பு?நாம இருக்கிறது ஆபிஸாச்சேன்னு பார்க்கிறேன்…இல்லை என் வாயிலிருந்து ப்ளு ப்ளுவா வரும்…ஒழுங்கா எதுக்கு என்னை அடிச்சன்னு சொல்லுடா […] - [இலக்கணம் 2](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-2/): வெளியில் தெரியும் அந்த அழகான காட்சிகள் யாவும் அவள் பார்வைக்கு பிழையாகிப்போக,இதயமோ கத்தியால் சொருகியது போல் வலியால் துடித்துக்கொண்டிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் விழிகள் அவ்வப்போது காரிகையை தொட்டு மீள்வதை அவள் சிறிதும் உணரவே இல்லை. ஒரு கட்டத்தில் அவள் வந்து சேர வேண்டிய இடம் வந்த நொடியில் கண்ணீரை அழுந்தத் துடைத்து வண்டியிலிருந்து இறங்கினாள் சமந்தா. மடமடவென நடந்துச் சென்று தன் இல்லத்தை தஞ்சமடைய துடித்த பாதங்களை கட்டுப்படுத்தி சில கணம் தயங்கினாள். ஏனெனில், அவளது பயணத்திற்கான பணத்தை செலுத்த வேண்டிய அவசியம் உணர்ந்து கண்மூடி அடிவயிற்றிலிருந்து ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு அவன் புறமாக திரும்பினாள். திறந்திருந்த சன்னல் திரை நோக்கி குனிந்து,பணத்தை அந்த ஓட்டுனரிடம் நீட்டினாள். அவனோ அவள் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து,அழுகையால் சிவந்திருந்த அவள் முகத்தையே அழுத்தமாக பார்த்திருக்கவும், குழம்பிய காரிகையோ ‘ஏன்?’ என்பது போல் அவனை புருவம் சுருக்க ஏறிட, அவள் கையிலிருந்த பணத்தை […] - [இலக்கணம் 1](https://storybypm.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-1/): அதுவொரு குளிர்க்காலம்!! ஊரிலுள்ள ஏனையவர்களின் உள்ளமும் சரீரமும் பனிக்காற்றால் குளிர்ந்திருக்க,இங்கோ ஒரு பெண்ணவளின் மனம் மட்டும் கோடையில் சுட்டெரிக்கும் வெப்பநிலையை போல் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையில் அவளின் நெஞ்சம் எதையோ நினைத்து குமுற,ஆனால் அதற்கு எதிர்விதமாக அவளின் வதனமோ நிர்மூலமாக உணர்ச்சிகளின்றி இருந்தது. கண்ணாடியின் முன்பு நின்று அணிந்திருந்த சேலை முந்தானையை சரிசெய்து வெளியில் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த மகளை கண்ட தாயின் உள்ளம் பரிதவித்தது. ஆனால் அவளோ என்றோ தனது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடியோடு மண்ணில் புதைத்துவிட்டதினால் தாயின் தவிப்பை கண்டும் காணாதவளாய் புடவை மடிப்பெடுத்து பின் குத்தினாள். அவள் சமந்தா.இருபது வயதுடைய தோற்றத்தை கொண்டிருந்தாலும் அவள் இருபத்தி ஆறு அகவையுடைய நவநாகரீக யுவதி! மணமாகி மூன்று வயது சிறுவனிற்கு அன்னை என்று கூற முடியாத வகையில் சதைப்பற்றில்லாத எழில் வளைவுகளையும் தோற்றத்தையும் கொண்டிருந்தாள். ஆயினும்,அவளின் இருதயத்திலிருந்த துயரமும் அவள் அணிந்திருந்த விலை உயர்ந்த பருத்தி சேலையும் அவளை சற்றே […] - [முகிழ்மதி 114](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-114/): சில நிமிடங்களுக்கு பின்பு, தன்னை யாரோ கடத்தி சென்றிருப்பது தெரிந்தும் கூட சந்திரமதியின் முகத்தில் எள்ளளவும் அச்சமில்லை. அவளின் கண்ணை கட்டியிருந்த துணியை வேகமாக அவிழ்த்தவன் “அடிப்பாவி என்னடி நீ?கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்திருக்கேன் நான்…உன் முகத்திலே கொஞ்சம் கூட பயமே இல்லை…” என ஜித்து வியப்புடன் கேட்க, அவளோ  “நீங்க தான் இந்த மாதிரி தேவையில்லாத வேலையெல்லாம் செய்வீங்கனு நல்லாவே தெரியும்…ஆமா எதுக்கு கடத்திட்டு வந்தீங்க?” என தெனாவெட்டாக கேட்டுக்கொண்டே சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். “நல்லதுடி…நல்லது” என அலுப்பாக கழுத்தை நீவிக்கொண்ட ஜித்தேந்திரன் தன்னவளை அளவிட ஆரம்பித்தான். அதிகாலை எழுந்தவுடன் நலுங்கு வைக்க வேண்டும் என்பதற்காக சந்திரமதி இப்போது சேலையில் இருந்தாள். இளஞ்சிவப்பு நிற ஷிபான் புடவையில் பின்னலிட்ட கூந்தலில் மல்லிகை பூ வைத்திருந்தாள். காற்றில் மிதந்து வந்த அவள் பூவின் நறுமணம் ஒரு புறம் அவனின் நாசியை வருடி ஆடவனது உணர்வுகளை தட்டியெழுப்பின. உடனே “மூன்” என மோகன புன்னகையுடன் அவளை அவன் […] - [முகிழ்மதி 113](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-113/): நண்பனிடம் சொல்லிக்கொண்டு தங்கையை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல உத்தேசித்து நடந்த வீரின் எதிர்ப்பக்கமாக தமயந்தி வந்துக்கொண்டிருந்தாள். முதலில் வீர் தான் அவளை கவனித்தான். பார்ப்பதற்கு அவள் சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவளின் விழியில் வழக்கமாக இருக்கும் துள்ளல் இல்லை. ஜீவனின்றி வற்றி இருந்தது அவளின் கூரிய விழிகள்! அவளது அத்தகைய நிலைக்கு தாம் தான் காரணம் என்று தெரிந்ததும் வீரின் ஆவி அவனையும் மீறி துடித்தன. அவளிடமிருந்து எத்துணை தொலைவு விலக நினைக்கிறனோ?அதையும் விட அதிகமாக அவளை அவன் நெருங்கிக்கொண்டிருக்கிறான்? சில சமயங்களில் விசுவாசம்,நட்பு என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அவளை எங்கும் கடத்தி சென்றுவிடலாமா என்று கூட தோன்றின. ஆனால் அவனால் அதனை செய்ய முடியவில்லை. முன்பாவது,நட்பு மட்டுமே அவளை நெருங்க விடாமல் தடுத்தன. இப்போதோ அவனது தங்கையின் வாழ்வும் இதில் சிறையுண்டு இருக்கிறதே? தற்சமயம் அதைவிட மோசம்… இன்னொரு தங்கையின் வாழ்வும் இந்த வீட்டினுள் என்று முடிவான பிறகு […] - [முகிழ்மதி 112](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-112/):     சந்திரமதியும் ஜித்துவும் மட்டும் இப்போது அவனறையில் இருந்தார்கள். ஜித்து அவனது கட்டிலில் சாவகாசமாக அமர்ந்திருந்தான். அவனிற்கு அவனது குடும்பத்தினரை பற்றி நன்கு தெரியும்.எனவே, எவ்வித பதட்டமும் இல்லாமல் அவன் சாதாரணமாக இருந்தான். ஆனால் சந்திரமதி தான் அறைக்குள் நுழைந்ததிலிருந்து நகத்தை கடித்தப்படி பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்துக்கொண்டிருந்தாள். அவனது பேச்சில் மயங்கி திருமணம் செய்துக்கொண்டு வந்துவிட்டாள். இப்போது தன்னால் முகிழ்மதிக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என ஒரு புறம் பயமாக இருந்தது என்றால்,மற்றொரு புறம் தமையனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கவலை புழுவாய் அவளை அரித்தது. அதனால் அவள் படபடப்பாக நகத்தை கடிக்க,சில நிமிடங்கள் வரை மௌனமாக அவளை ரசித்துக்கொண்டிருந்த ஜித்துவிற்கு அவள் விட்டால் நகத்தை கடித்து துப்புவதற்கு பதிலாக விழுங்கிவிடுவாள் என்று தோன்ற  “மூன் நகத்தை கடிக்காதே…” என வேகமாக அவளின் அருகே வந்து கரத்தை தட்டி விட்டான். “ப்ச் ஜித்து…” என திரும்பி அவனை முறைக்க, அவனோ “அப்பா […] - [முகிழ்மதி 110,111](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-110111/): முகிழ்மதி 110;     ‘லூசா இவன்’ என மனதிற்குள் அவனை கண்டப்படி திட்டியவள் “எங்க சுத்தினாலும் அங்க வந்து சரியா நில்லுங்க…ஆளை பாரு” என அவனை அடிக்க முடியாத கோபத்தில் பல்லைக்கடித்தப்படி வசைப்பாட,அவனோ இதழ்பிரித்து தனது வசீகர புன்னகையை பூத்தான். அவனது புன்னகையை பார்த்தவளின் மனம் மீண்டும் தடுமாற ‘இவனை பார்க்கவேகூடாது…பேசியே ஆளை மயக்கிறான் ராஸ்கல்’ என திட்டிக்கொண்டே படீரென்று வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள். அதைப்பார்த்து மனம் வாடிய ஜித்து “சரி விடு…நீ இரண்டு மூணு நாள் டைம் எடுத்து யோசிச்சு சொல்லு…நான் வெயிட் பண்ணறேன் மூன்” என அவளிற்காக விட்டுக்கொடுத்தான். அவளோ வெடுக்கென்று இவன் புறம் திரும்பி “நீங்க எத்தனை நாள் டைம் கொடுத்தாலும் என் பதில் நோ தான்” என திட்டவட்டமாக அறிவித்தாள். அவனோ அதற்கெல்லாம் அசராமல் “சரி மூன்…நீ எதையும் யோசிக்க வேண்டாம்…நம்ப கல்யாணத்தை பத்தியும் யோசிக்க வேணாம்…முக்கியமா என்னை பத்தி எதையுமே யோசிக்காதே…நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு…கனவுலே கூட […] - [முகிழ்மதி 109](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-109/):  சந்திரமதி பணியை விட்டு நின்று ஒரு வாரத்திற்கு மேலாகியிருந்தது. எந்த அளவு ஆர்வமாக அந்த பணியில் சேர்ந்தாளோ அதே வேகத்தில் பணியிலிருந்து விலகியும் வந்துவிட்டாள். அதற்கு முழுமுதற் காரணம் ரோகிணி தான்! திருமணம் செய்துக்கொள்ள இருப்பவனிற்கே அப்படியொரு கொடூரமான தண்டனை கொடுக்க நினைத்தவள்,சந்திரமதியை மட்டும் விட்டுவிடுவாளா என்ன? அவளை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக அவளின் வாழ்க்கையே அழிக்க துணிந்திருந்தாள். ஆம்,அவளிற்கு இருந்த வன்மத்தில் சந்திரமதியின் மீது விலைமாது என்ற பட்டத்தைச் சூட்டியிருந்தாள். பணமும் அதிகாரமும் இருந்தால் தவறே செய்யாதவர்களையும் குற்றவாளிகளாக காட்ட முடியும் என்பது போல் எந்தவொரு குற்றமும் செய்யாமலே அவளின் மேல் பழி சுமத்தியிருந்தாள். விடுதிக்கு வரும் வாடிக்கையாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களிடம் தனது உடலை விற்றது போல் அநியாயமாக ஒரு கதையை பரப்பியிருந்தாள். ரோகிணி நினைத்திருந்தால் அவளை வேலையிலிருந்து நேரடியாகவே விரட்டி அடித்திருக்க முடியும். ஆனால் என்று அவள் நேர்வழியை பயன்படுத்தி ஒருவரை பழிவாங்கியிருக்கிறாள். தன் வன்மத்தை […] - [முகிழ்மதி 108](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-108/): முகிழ்மதி 108:     நாளை தேர்தல் என்ற நிலையில் அன்று இரவு சோர்வுடன் வீட்டிற்கு வந்த சிறிய மகனிடம் “ஏன் கண்ணா லேட்டு?” என வானதி கனிவுடன் விசாரிக்க, “வேலை ஜாஸ்திம்மா” என வழக்கம் போல் பொய்யுரைத்தான். ஆனால் அவன் முகத்தில் களைப்பையும் மீறிய ஒரு வெறுமை இருப்பதை உணர்ந்தவரின் உள்ளமும் துயரற்றது. எப்போதும் கலகலவென இருக்கும் மகனின் முகத்தில் இழையோடிய சோகத்தைப் பார்ப்பதற்கு எந்த தாயிற்கு தான் மகிழ்ச்சியாக இருக்கும்? அவருக்கு ஏனோ நெஞ்சம் பிசைந்தது. “ஜித்து கண்ணா” என அவனின் தாய் உயிர் உருகும் குரலில் அழைக்க, அதுவரை அவரின் முகம் கூட பார்த்து பேசியிராத ஆடவன் மெதுவாக நிமிர்ந்து அன்னையின் முகம் நோக்கினான். அவரின் முகத்திலிருந்த கவலையை கண்டதற்கு பிறகு நெற்றியை நீவிய ஜித்து ‘ப்ச் ஜித்து…உன்னாலே அம்மா கஷ்டப்படாறங்க பாரு…உன் கஷ்டம் உன்னோட போகட்டும்…கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு’ என தன்னை தானே திட்டி “அம்மா‌ […] - [முகிழ்மதி 107](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-107108/):     தங்களது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ரோகிணியைப் பற்றி நினைக்கும் போதே அவனிற்கு ஆத்திரமாக வந்தது. ‘சேடிஸ்ட்’ என திட்டிய ஜித்தேந்திரன் ‘இத்தனை நாளா பொம்பளை புள்ளையாச்சேன்னு பாவம் பார்த்தேன்‌…இதுக்கு மேலையும் உன்னை விட்டு வைக்கக்கூடாதுடி’ என சூளுரைத்த ஜித்தேந்திரன் அக்கணமே அவளை அடியோடு ஒழிப்பதற்கான திட்டத்தை வகுக்க தொடங்கியிருந்தான். மற்றொரு புறம் தன் மனைவியை ஒருவர் வஞ்சித்ததற்கு பிறகு அவனை அவ்வளவு எளிதில் ரத்தினவேல் விட்டுவிடுவானா என்ன? அவன் தன் பங்கிற்கு நடந்ததை பற்றிய விசாரணையில் இறங்கியிருந்தான். தன்னை சுற்றி பின்னப்படவிருக்கும் சூழ்ச்சி வலையை பற்றி அறியாமல் ரோகிணி சந்தோஷ வானில் சுதந்திரமாக சிறகடித்துப் பறந்துக்கொண்டிருந்தாள். மற்றொரு புறம் முகிழ்மதி பற்றிய விடயம் வெளியாகியதும் பதறிப்போய் வீரும் சந்திரமதியும் முகிழ்மதியை அழைத்து விசாரிக்க “நான் நல்லா தான் இருக்கேன்…நீங்க கவலைப்படாதீங்க…நியூஸ் வெளியிட்டவங்களை மாமா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு” என வெட்கச்சிரிப்புடன் அவள் கூறியதற்கு பிறகே நிம்மதியுற்றார்கள். அவளின் அந்த புன்னகை பின்பிருந்தது,அவளது […] - [முகிழ்மதி 106](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-106/):     ரோகிணி பரப்பிய செய்தி பூதங்கரமாக வெடித்ததும் “நான் அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்…சிவராமன் வீட்டு பொண்ணு வேணாம்னு…நான் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த வீட்டுலே போய் கல்யாணம் பண்ணீங்க?இப்போ பாருங்க எல்லாரும் எப்படி அவமானப்பட்டு நிக்கிறோம்…எல்லாம் போச்சு…இத்தனை நாள் நாம்ப சம்பாதிச்சு வைச்ச பெயரெல்லாம் போச்சு..” என விஜயேந்திரன் குதி குதியென குதிக்க,குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் சற்று நிதானமாகவே இருந்தனர். சிவராமன் பற்றி அறிந்து தானே அங்கு பெண் பார்க்க சென்றார்கள். அதனால் அவர்களுக்கு இந்த விடயம் புல்லிற்கு இறைத்த நீர் போல் தான்! அவர்கள் அனைவரும் ரத்தினவேலின் புறம் தான் நின்றிருந்தனர். “இன்னும் ஒரு நாள் விட்டு எலெக்ஷன் வேற…என் மானம் மரியாதை எல்லாமே போச்சு…ரிஷப்ஷனாவது வைக்கலாம்னு சொன்னேன்…அதையும் யாரும் கேட்கலை…இப்போ அந்த கேவலமானவன் பொண்ணை கட்டிட்டு வந்ததுக்கு எல்லா கட்சியிலிருந்தும் கிழிகிழினு கிழிச்சு தொங்கவிடறாங்க…மக்கள் அதுக்கும் மேலே…இப்போ யாரு நமக்கு ஓட்டுப்போடுவாங்க…எப்படி ஜெயிக்கிறது?இந்த பொண்ணாலே எல்லாம் […] - [முகிழ்மதி 104(2),105](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1042/): முகிழ்மதி 104(2):     தன்னவளின் பற்களுக்கு இடையே சிக்கிய இதழை கண்ட ரத்தினவேலின் பார்வை மாறியது. அதிலும்,இன்றைய அவளின் தோற்றம் சிறிது வித்தியாசமாக இருந்தது. எப்போதும் போல் அதே எளிமையான தோற்றம் தான்! ஆனால் சிறிது மாறுப்பட்டு தெரிந்தாள். நடைமுறையில் அணியும் காட்டன் புடவை அணியாமல்,மிருதுவான வெண்ணிற ஷிபான் புடவையில் கருப்பு நிற கோடுகள் போட்டு,அதில் இளஞ்சிவப்பு நிற ரோஜா பூக்கள் ஆங்காங்கே அச்சிட்டு,அதே ரோஜா நிறத்தில் மேல் சட்டையும் அணிந்திருந்தாள் அவள். வழமையாக பின்னலிட்டு இருக்கும் அவளின் கூந்தல் தலைக்கு குளித்ததால் நடுவில் குட்டி கூந்தல் கவ்வி மட்டும் வைத்து மயில் தோகையென பரப்பி விட்டிருந்தாள். அவளை பார்ப்பதற்கு ஒரு பட்டாம்பூச்சி இறக்கை விரித்து பறப்பது போல் இருக்க,அவனின் கரு விழிகள் மோகத்தில் விரிய தொடங்கின. பஞ்சும் நெருப்பு பக்கத்தில் இருக்கும் போது நெருப்பு பற்றிக்கொள்வது இயல்பு தானே? அதனால் தவிப்பாய் அமர்ந்திருந்த மனையாளின் இடைப்பற்றிய ரத்தினவேல் “ஏய் பொண்டாட்டி […] - [முகிழ்மதி 103,104(1)](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-103/): முகிழ்மதி 103:     ஜித்தேந்திரன் நட்சத்திர விடுதியில் நுழைந்ததுமே ரோகிணி அவனை கட்டியணைத்து வரவேற்க, அதை சற்றும் எதிர்பாராத ஜித்து ஒரு கணம் திகைத்து பின்பு தெளிவுற்றவன் “ரோகிணி வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?” என அடிக்குரலில் சீறி அவளை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தினான். ரோகிணியோ அப்போதும் முகம் மாறாமல் சிரித்துக்கொண்டே “ஓகே ஓகே காம் டவுன்…வாங்க” என முன்னால் நடக்க, அவனோ ‘காட்…பைத்தியக்காரி பப்ளிக் பிளேஸிலே எப்படி சடனா ஹக் பண்ணறானு பாரு’ என சட்டையை இழுத்து விட்டவாறே விழிகளை சுழற்றினான். அவ்விடத்தில் இதையெல்லாம் வாயை பிளந்து பார்த்திருந்த மீனுவை பார்த்த ஜித்து ‘சுத்தம்’ என நெற்றியை நீவியப்படி ரோகிணியின் பின்னால் நடந்தான். ரோகிணியோ அவன் வழக்கமாக அமரும் குளம்பியகத்தை நோக்கி நடக்க “இங்க எதுக்கு?” என அவளருகே நடந்தப்படி வினவினான். ஏனெனில்,ரோகிணி இங்கு வந்தாலே அவளிற்கென பிரத்யேகமாக உள்ள தனியறையில் மட்டுமே யாவரையும் சந்திப்பாள். இன்று குளம்பியகத்தில் அவள் […] - [முகிழ்மதி 102](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-102103/): முகிழ்மதி 102:     இருவரும் ஒன்றாக கூடி களைந்த நாட்களுக்கு பிறகு தினந்தோறும் எல்லாம் அவளுடன் அவன் கலவி புரியவில்லை. அதேசமயம் அவ்வப்போது இருவருக்குமிடையே மென்மை கலந்த கூடல் நிகழ்ந்துக்கொண்டு தான் இருந்தன. அதனால் முகிழ்மதி என்னும் பட்டாம்பூச்சி சந்தோஷ வானில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு நாள் வேகமாக தன்னறைக்குள் நுழைந்த ரத்தினவேலோ தன் மனைவியை இறுக அணைத்துக்கொண்டான். அவனின் அணைப்பு அவளிற்கு பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டாலும் இன்றைய அவனின் அணைப்பு சிறிது வித்தியாசமாக இருந்தது. அவளை எப்போதும் அணைக்கும் அளவு இறுக்கமில்லை…அவனது அணைப்பில் ஒரு தளர்வு இருந்தது. ஆம்,அவளை அணைத்தவுடன் அவனின் கரங்கள் அவளின் மேனியை அளக்க ஆரம்பித்துவிடும். இன்று அவளை அணைத்த வாக்கிலே அவை மௌனமாக இருக்க,ஆடவனின் முகமோ அவளின் கழுத்து வளைவில் பொதிந்திருந்தது. சிறு வயதிலிருந்து தன்னவளை துன்புறுத்திய அனைவரையும் வதைக்க வைக்கும் போராட்டத்தில் அவன் கிட்டத்தட்ட வெற்றியை அடைந்துவிட்டான். ஒரே அறையில் அடைத்து வைத்திருந்த […] - [முகிழ்மதி 100,101](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-100/): முகிழ்மதி 100:     தன்னவள் அவனை நிராகரித்த சோகத்தில் அமர்ந்திருந்த ஜித்துவிடம் குளம்பியை கொடுக்க வந்தாள் முகிழ்மதி. அவனோ மடிக்கணினியை திறந்து வைத்துவிட்டு எங்கோ வெறித்தப்படி உட்கார்ந்திருப்பதை கண்டுவிட்டு அவனை எப்படி அழைப்பது என தெரியாமல் தத்தளித்தாள்‌. பின்பு துணிச்சலாக பேச வேண்டும் என கணவன் எடுத்த பாடங்கள் சிந்தையில் தோன்றி மறைய ஒரு வழியாய் “ஏங்க ஜித்து…” என மெல்லியதான குரலில் அவனை அழைத்திருந்தாள். அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய ஜித்தேந்திரனுக்கு ஒரு கணம் முகிழ்மதி சந்திரமதியாக உருமாறி மறைந்திட ‘மூன்’ என தன்னை மீறி முகம் பிரகாசமாக முணுமுணுத்திருந்தான். ஆனால் அவளின் தோற்றம் முகிழ்மதியாய் மாறியதும் குழம்பிய ஆடவன் ஒரு முறை தன் கண்ணை கசக்கி விழி உயர்த்தி அவளை நோக்க,அவ்விடத்தில் தனது அண்ணி நிற்பதை கண்டு “என்ன அண்ணி?” என முகம் வாட வினவினான். அவளோ “அத்தைம்மா உங்களுக்கு பால் கொடுத்து விட்டாங்க” என தயக்கமாய் […] - [முகிழ்மதி 98,99](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-9899/): முகிழ்மதி 98:     தமயந்தி வீரை பார்த்து இன்றோடு இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்துவிட்டது. அவளால் தகப்பனை மீறி வெளியே செல்ல முடியவில்லை.வேறு ஏதேனும் காரணங்கள் கூறியாவது தன்னவனை பார்த்துவிடலாம் என நினைத்தால்,அதற்கும் முட்டுக்கட்டை போட்டார் விஜயேந்திரன். குடும்பமே தமயந்தியிடம் இவர் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொள்கிறார் என ஸ்தம்பிக்கும் வகையில் இருந்தது,அவரின் நடவடிக்கை. வழக்கமாக அவளிற்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலரை அகற்றிவிட்டு,இப்போது புதிதாக ஒருவரை நியமித்திருந்தார். முன்பிருந்த சம்பத் ரத்தினவேல் மற்றும் வீரின் ஆள் என்பதால் அவளிற்கு இதுவரை பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை. அவள் எங்கு சென்றாலும் துணை வருவானே ஒழிய,பெரிதாக விதிமுறைகள் எதுவும் விதிக்கமாட்டான். அவன் இல்லையென்றால் வீரே அவளை அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்றுவிடுவான். ஆனால் இப்போது சாதாரணமாக தோழியின் வீட்டிற்கு சென்றால் கூட அந்த பாதுகாவலனை அழைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டுமாம். அவனோ அவளை கண்ணின் இமைப் போல் அசராமல் நின்று காக்க அவளால் வீரை […] - [முகிழ்மதி 95,96,97](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-9596/): முகிழ்மதி 95:     தன்னவனின் அருகாமைக்காக தவித்த பாவையவளின் தகிப்பு அவனது அணைப்பில் அடங்கிய நிலையில் அவன் “ஸ்டார்” என்றழைத்ததும் அவளையும் அறியாமல் அவளின் மேனி சிலிர்த்தது. சட்டென சிந்தைக்குள் ஒரு உருவம் ‘ஸ்டார்’ என அவளை நோக்கி கைகளை நீட்டுவது போலவும்,அவள் அவனுள் ஓடிச்சென்று சரணடைவது போன்ற காட்சிகளும் கலங்கலாக சிந்தையில் தோன்றி மறைந்தன. அதில் அவளின் மேனியில் ஒரு நடுக்கம் விரவி ஓடிவிட,அதை ஆடவனது கரங்களும் உணர்ந்தன. உடனே காரிகையை தன்னை நோக்கி திருப்பிய ஆடவன் அவளின் அச்சமறிந்து “என்னாச்சு ஸ்டார்?” என அவளின் காதோரம் சுருண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டப்படி வினவினான். அதில் அவளின் காதோரம் மயிர்க்கூச்சரிந்து சிலிர்த்தாலும்,அவனது அந்த புது அழைப்பை கேட்டு குழம்பியவளாய் “ஸ்டார்?” என தன்னவனை கேள்வியாய் பார்த்தாள். அவனோ “எஸ்…நீ தான் ஸ்டார்…அதுவும் என்னுடைய ஸ்டார்” என இலேசாக சிரித்துக்கொண்டே சொல்ல, அவளிற்கோ இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை. குழப்பம் நீங்காமல் ஒரு வித […] - [முகிழ்மதி 93,94](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-9394/): முகிழ்மதி 93:       விஜயலட்சுமியிடமிருந்து அனைத்து உண்மைகளையும் அவன் அவ்வளவு எளிதில் வாங்க முடியவில்லை. அவரை அச்சுறுத்தி பல காயங்களையும் வலிகளையும் கொடுத்ததற்கு பிறகே ரத்தினவேலால் அனைத்தையும் பெற முடிந்தது. அப்போதும் மகனை பற்றி அவர் மூச்சே விடவில்லை. ஆயிரம் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனாயிற்றே? உடனே அவனை காட்டிக்கொடுப்பாரா என்ன? ஆனால் அவரது உயிருக்கு முன்பு வேறு யாரது உயிராக இருந்தாலும் அவருக்கு துச்சம் தான் போலும்! அவரின் உள்ளங்கையில் கத்தியால் ஒரே ஒரு கீறல் தான் அவனது கட்டளையின் பெயரில் போடப்பட்டது… அவ்வளவு தான்? தன் இன்னுயிரை காப்பதற்காக மகன் செய்த அனைத்து இழிவான செயல்களையும் ஒன்று விடாமல் மடமடவென ஒப்பித்துவிட்டார். அவர் இத்தனை வருடங்களாய் செய்த ஒட்டுமொத்த குற்றங்களையும் அவனிடம் வெளிப்படுத்திருக்க ரத்தினவேல் சில கணங்கள் எதுவுமே பேசவில்லை. அவரையே ஒரு சில வினாடிகள் அசையாமல் பார்த்திருந்த ரத்தினவேலின் மனது மட்டும் உச்சக்கட்ட […] - [முகிழ்மதி 90,91,92](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-9091/): முகிழ்மதி 90:     நிகழ்காலம், வீரின் இல்லம், சந்திரமதியும் வீரும் வரவேற்பறையில் நின்று பேசிக்கொண்டிருந்த சமயம் அது! வெறும் கானல் நீராய் மறைந்துவிட்டது என்று எண்ணிய ஒரு கனவு மீண்டும் நிஜமாகிறது என்றால் அவனால் நம்ப முடியவில்லை. திடீரென்று அனைத்தும் மாயமாகிவிடுமோ என்ற அச்சம் அவனுள்! ஆதலால்,சிறிது படபடப்புடனே சந்திரமதியிடம் “நான் மறுபடியும் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே மதிம்மா…நிஜமாவே முகிழ் தான் என் டாலா?அவ என் டாலா இருந்தால்,அப்போ நீ?எப்படி அவ தான் என் தங்கச்சினு அவ்வளவு உறுதியா நீ சொல்லறே?” என தன்னுடைய அச்சங்களை அடக்கிக்கொண்டு அவன் கேட்க, அவளோ மெல்லியதாக புன்னகைத்து “பரவாயில்லை அண்ணா…உங்க பயம் புரியுது…இதுக்கு மேலே கிடைக்கவே கிடைக்காதுனு நினைச்ச ஒரு விஷயம் மறுபடியும் நம்ப கைக்கு கிடைக்கும் போது எப்படி இருக்கும்னு எனக்கு புரியும் அண்ணா…பிகாஸ் நானும் அந்த நிலையில் தான் இருக்கேன்..” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியவள், ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு “அண்ணா […] - [முகிழ்மதி 88,89](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-8889/): முகிழ்மதி 88:     வீரோ வயிற்றில் இருக்கும் போது சொன்னது போலவே அவளை உயிராய் வைத்து தாங்க ஆரம்பித்தான். அவள் சிறிது சிணுங்கினாலே அவளை தன் தோளில் போட்டுக்கொண்டு சிரமம் பார்க்காமல் கால் வலிக்க நடப்பான். பெற்றெடுத்த தாயை காட்டிலும் அவன் தான் அவளிற்கு அன்னையாக இருந்தான். அவனின் இந்த தன்னலமற்ற அன்பில் தேவகியின் நெஞ்சம் நெகிழ்ந்தது. அத்தோடு ரோஜா பூவின் நிறத்தில் பொம்மை போல் இருந்த குழந்தையை பார்த்த கணமே “டால்” என்று தான் அவளை அழைத்திருந்தான். ஆங்கில சொல்லின் அர்த்தம் புரியாமல் “அதென்னடா டால்” என சுசீலா வழக்கம் போல் சந்தேகம் கேட்க, “அப்படியே பார்பி பொம்மை மாதிரி குட்டியா வெள்ளையா அழகா இருக்காளில்லை நம்ப பாப்பா…அதான் இவ பேரு டால்” என விளக்கம் கூறியவன்,குழந்தையின் நாசியோடு நாசி உரசி கொஞ்சிட, அவளோ தமையனின் அந்த விளையாட்டில் கிளுக்கி சிரித்தாள். அவரோ “என்ன தாலோ…கீலோ‌…இப்படியெல்லாம் பேரு வைச்சா எப்படி […] - [முகிழ்மதி 85,86,87](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-8586/): முகிழ்மதி 85:     அவளின் மனதை ஈர்த்த ஆடவனது பெயர் ராமன்! அவன் பெரிய வசதியான குடும்பத்து இளைஞன்…ஆனாலும் அவனிடம் தேவகியை ஈர்த்தது அவனின் வசீகரமோ செல்வமோ அல்ல. அவளின் மீது அவன் செலுத்திய அன்பும்,அவனது கண்ணியமான குணமும் தான்! தேவகி பலமுறை அவனை நிராகரித்தும் கஜினி முகமது போல் சோர்வுராமல் அவன் படையெடுத்து வந்த விதமே அவளை கவர்ந்திழுத்திருந்தது. அன்பிற்காக ஏங்கிய உள்ளத்திற்கு அள்ளி அள்ளி தரக்கூடிய ஒரு காதலன் கிடைத்தால் கசக்குமா என்ன? அவனின் நேசத்தில் மதி மயங்கிவிட்டாள் அவள். கல்லூரி காலம் முடியும் வரையிலும் அவர்களது காதல் கதை தொடர்ந்தது. அதுவரையிலும் தேவகியை அவன் விரலால் கூட தீண்டியதில்லை. அப்படியிருந்தப் போதும் ‘கண்ணம்மா…கண்ணம்மா…’ என அவளுள் அவன் உருகிய விதம் அவளின் இதயத்தை குழைய வைத்தன. இளங்கலை கல்வி முடிந்து அவள் சிலை வடிவமைப்பில் முதுகலை பட்டயப்படிப்பை தொடரப்போவதாக தெரிவிக்க “தாராளமா படி கண்ணம்மா…நானும் என் தாத்தா […] - [முகிழ்மதி 83,84](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-8384/): முகிழ்மதி 83:     சற்று நேரத்திற்கு முன்பு, தனது மகிழுந்தில் மனநல மருத்துவரை ரகசியமாய் சந்திக்க சென்றிருந்தான் ரத்தினவேல். நினைத்தப்போதெல்லாம் அவரை யாரும் சந்திக்க இயலாது…ஆனால் அவன் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்க முடியும். அவருக்கு அதில் சில நேரம் உள்ளுக்குள் கடுப்பு தோன்றினாலும் அவனின் பதவியும் ஆளுமையும் அவரை அடங்கிப் போக வைத்தது. அவர் ‘வரமுடியாது’ என முரண்டுப்பிடித்தாலும் அவரை ஆள் வைத்தாவது தூக்கி வந்துவிடுவான் என்று அறிந்து எரிச்சலுடன் அவன் அழைத்த இடத்திற்கு வந்துவிட்டார். அதற்கெல்லாம் மேலாக முகிழ்மதியின் உடல்நிலை அவரை அவனிற்கு அடிப்பணிந்து செல்ல வைத்திருந்தது. அவருக்கு எப்போதும் நோயாளிகள் தான் முதன்மை! அவரின் குடும்பம் கூட அவருக்கு இரண்டாம் பட்சமே? அவரை ஒரு விடுதியின் அறையில் தனிமையில் சந்தித்த ரத்தினவேல் “சுத்தி வளைச்சு நான் எதுவும் பேச விரும்பலை…எனக்கு இப்போவே முகிழ்மதியோட கண்டிஷன் பத்தி தெரியணும் டாக்டர்…சொல்லுங்க” என்றான் ஆணைப்பிறக்கும் குரலில்.. அவரோ “மிஸ்டர் ரத்தினவேல் […] - [முகிழ்மதி 80,81,82](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-8081/): முகிழ்மதி 80:     முகிழ்மதிக்கு இருந்த அதே அளவு ஆர்வமும் படபடப்பும் சந்திரமதிக்கும் இருந்தன‌. அதனால் வீரிடம் கூறிய நேரத்திற்கு முன்பாகவே அவளும் விரைந்து தயாராகி அவன் வீட்டிற்கு வந்துவிட்டாள். பத்தரை மணிக்கு வருவதாக உரைத்த காரிகை அங்கு வந்து சேரும் போது காலை 9 மணி! ‘ரொம்ப சீக்கிரம் வந்திட்டமோ?’ என நெற்றியை நீவிக்கொண்டே வந்த சந்திரமதிக்கு வீட்டின் நுழையவாயிலை திறக்க தயக்கமாக இருந்தன. அவள் வாசலில் நின்றதெல்லாம் ஒரு கணம் தான்! அதன்பிறகு ஒரு பெருமூச்சுடன் அந்த பெரிய மரக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். வீட்டின் பசுமையான தோட்டத்தில் தொடங்கி அங்கிருந்த ஒவ்வொரு வேலைப்பாடுகளும் பாவையவளின் கண்ணை கவர அனைத்தையும் ரசித்துக்கொண்டே அந்த கல் பாதையில் முன்னேறி சென்றாள். அவளை அதிகமாய் கவர்ந்தது அந்த வெண்ணிற ஊஞ்சலும்,அந்த நீரூற்றும்! அவற்றினை கண்டு மெய்மறந்து அவள் நின்ற நேரம் “மதிம்மா என்ன சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்திட்டே?” என வீரின் […] - [முகிழ்மதி 78,79](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-7879/): முகிழ்மதி 78:     ரோகிணியின் இல்லம், காலை எட்டு மணி, ரோகிணி தனது தாய் மற்றும் தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தாள். அவள் காலையில் எழுந்ததிலிருந்தே ஒரு மாதிரி கடுகடுவென இருந்தாள்.அவளிடம் அதைப்பற்றி விசாரிப்பதற்கு கூட அவளின் பெற்றோருக்கு அச்சமாக இருந்தது. அவளின் அடி வயிற்றில் நெருப்பு திகுதிகுவென எரிந்துக்கொண்டிருந்தன. ஏனெனில்,ஜித்தேந்திரன் அவளுடன் பேசியே இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அவளாகவே அவனை தொடர்பு கொண்டாலும் அவன் அழைப்பை ஏற்பதில்லை. அதில் உச்சக்கட்ட வெறுப்பாகியவளின் அகங்காரம் சீறி எழ,அவளை சுற்றி தீப்பொறி பறக்காத குறை ஒன்று தான்! நெருப்பின்றி‌ அனலாக தகித்துக்கொண்டிருந்தாள். “மேடம் சட்னி…” என அச்சமயம் பரிமாறும் பெண் அவளின் தட்டில் சட்னியை வைக்க,அவளிற்கு பளாரென்று ஒரு அடி விழுந்தது. “அம்மாஆ..” என அந்த பெண் கண்கள் கலங்க கன்னத்தில் கை வைத்து அவளை மிரட்சியுடன் நோக்க, அவளை ஏறிட்டு உறுத்து விழித்த மங்கை “நான் உன்னை சட்னி கேட்டனாடி?பிளடி […] - [முகிழ்மதி 75,76,77](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-7576/): முகிழ்மதி 75:  சந்திரமதியை பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு செல்ல விருப்பமற்றவனாய் இல்லம் நோக்கி புறப்பட்டு வந்தான் ஜித்தேந்திரன். கதிரவனின் கதிர்கள் பூமியிலிருந்து அகலாத வேளையே வீடு வந்து சேர்ந்த சிறிய மகனை கண்டு ஆச்சரியமுற்றார் வானதி‌. “என்ன ஜித்து?இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டே?” என அவனது தாய் விசாரிக்க, அவனோ போலிப் புன்னகையை பூசி “தலைவலிம்மா…அதான் வந்திட்டேன்” என தன் கவலை மறைத்து பொய்யுரைத்தான்‌. ஆனால் பெற்றவரான வானதி அதற்கே துடித்துவிட்டார். “என்ன கண்ணா?ரொம்ப தலைவலிக்குதா?அம்மா தைலம் தடவிவிடட்டுமா?சுக்கு காஃபி ஏதாவது போட்டு வந்து தரட்டுமா ஜித்து?” என படபடப்பாக அவனின் நெற்றியை வருடி கேட்டவரின் அன்பில் அவனின் நெஞ்சம் கனிந்தன. உடனே அவனிதழில் புன்னகை பூத்திட “என் செல்ல அம்மாவே எனக்கு அதெல்லாம் எதுவுமே வேணாம்” என அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சியவன், “ஒரே ஒரு ஹக் என் அம்மா கொடுத்தாலே போதும்…எவ்வளவு பெரிய தலைவலியா இருந்தாலும் சும்மா பஞ்சாய் பறந்துப்போகும்…லவ் […] - [முகிழ்மதி 72,73,74](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-7273/): முகிழ்மதி 72:     வீரிடம் பேசியதற்கு பிறகு அவளின் மனம் அலைக்கழித்துக்கொண்டே இருந்தது. அவளின் அலைப்புற்ற மனதை சிறிது சாந்தப்படுத்தியது,நகரத்தில் இருந்த அந்த பேரங்காடி! ஏனெனில்,சிறு வயதிலிருந்து இதுப்போல் பெரிய பேரங்காடிக்கு எல்லாம் அவள் வந்ததேயில்லை. பள்ளி விட்டால் வீடு …வீடு விட்டால் கோவில்…அவை மட்டுமே அவளின் உலகமாக இருந்து வந்திருக்கிறது. அவளிற்கு அனைத்தும் புதிது… அங்குள்ள இடங்கள்…மக்கள்…கடைகள் அனைத்தும் அவளிற்கு ஒரு புது அனுபவமாய் மாறின. பெண்ணவளின் கவனம் சுற்றுப்புறத்தை அலசி ஆராய்வதில் ஆர்வமானது. மனைவியின் விழிகளில் தெரிந்த உற்சாகத்தை கண்ட ரத்தினவேல் “இப்போ தான் முதல் முறையா இங்க வர்றீயா?” என புருவம் சுருக்கி கேட்க, “ஆமாங்க…சின்ன வயசிலே இங்கயெல்லாம் வரணும்னு ஆசையா இருக்கும்…ஆனால் அம்மா கூட்டிட்டு வரமாட்டாங்க…அவங்க வாங்கி தர்ற பொருளை தான் வைச்சுக்கணும்…புதுசா எதுவும் ஆசைப்படக்கூடாதுனு சொல்லுவாங்க” என தன்னை மீறிய ஆர்வத்தில் அவள் நிஜத்தை உளறியிருந்தாள். அவளின் பேச்சை கேட்ட இருவருக்கும் நெஞ்சில் பாரமேறியது. […] - [முகிழ்மதி 69,70,71](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-6970/): முகிழ்மதி 69:     இருவரும் கட்டியணைத்த நிலையிலே நீண்ட நெடிய நேரம் இருந்தார்கள். முகிழ்மதியின் விசும்பல் சத்தம் மட்டுமே அந்த அறையை நிறைத்திருந்தன. ரத்தினவேலின் நெஞ்சை துளைத்துக்கொண்டிருந்த கண்ணீர் சிறிது சிறிதாக குறைய தொடங்கின. பல நாட்களுக்கு பிறகு,தன் சொந்த தாய்மடி வந்தடைந்த ஒரு நிம்மதி அவளிற்குள்! காடு மேடெல்லாம் வெறும் காலோடு அலைந்து திரிந்து மீண்டும் வீடு வந்து சேர்ந்த உணர்வு அவனிற்குள்! அந்த இரண்டு வார பிரிவை அன்றே தீர்த்துக்கொள்பவன் போல் அவளை அவன் இறுக்கி அணைத்துக்கொள்ள,அவளும் பதிலுக்கு அவனின் நெஞ்சில் சரண் புகுந்திருந்தாள். அவனின் தாடையை அவளின் சிரத்தில் வைத்து அழுத்திக்கொண்ட ஆடவனின் மனமெல்லாம் உவகையில் ஆர்ப்பரித்தது. அதையும் மீறிய ஒரு ஆழ்ந்த அமைதி அவனிடம்! அவளின் அழுகை இப்போது முற்றிலும் தேய்ந்து மறைந்துப்போனது. அந்த மௌனத்தில் முன்பு இல்லாத ஒரு அசாத்திய நெருக்கம் தம்பதியினருக்குள் இருந்தது. அதற்கு காரணம்,ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த நேசம் தான்! […] - [முகிழ்மதி 66,67,68](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-666768/): முகிழ்மதி 66:     ரத்தினவேல் முகிழ்மதியிடம் நன்றாக பேசியே ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது. கட்சி மாநாடு முடிந்தப்பிறகு அவளிற்கு பல முறை அழைத்து பார்த்தான். அவள் அவனுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன்,வேறுவழியின்றி தனது தங்கையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான். “தமி அண்ணி எங்கே?” என அவன் விசாரிக்க, அவளோ “அண்ணி இன்னைக்கு நேரமே படுத்திக்கிட்டாங்க அண்ணா…எக்ஸாம் எழுதி டையர்டா இருக்காங்கனு நினைக்கிறேன்…நான் வேணா எழுப்பட்டுமா?” என கட்டிலில் படுத்திருந்த முகிழ்மதியை ஒரு பார்வை பார்த்தவாறு கேட்க, அவனோ நெற்றி சுருங்க “இல்லை வேணாம் தமி…அவ தூங்கட்டும் விடு…நான் நாளைக்கு வந்து பேசிக்கிறேன்” என அழைப்பை துண்டித்து விட்டான். அவளிடம் அவன் குரல் மாறாமல் பேசியது பேரதிசயம் தான்! அவனின் மனம் ஏமாற்றத்தில் விம்மி தணிந்தது. முதல் முறையாய் அவனின் நெஞ்சில் ஒரு வலி! அன்றைய நாள் மாலை பல முறை அவளின் எண்ணிற்கு அவன் அழைப்பு விடுவித்திருந்தான்‌. ஆனால் அவளோ அவனை […] - [முகிழ்மதி 64,65](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-6465/): முகிழ்மதி 64: அவனின் இந்த அதிரடியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அதிலும் ‘என் வீட்டிற்கு வந்துவிடுகிறீயா?’ என்று மட்டும் கூறாமல் ‘என் தங்கையாக வந்துவிடுகிறாயா?’ என அவன் கேட்ட விதமே அவனின் கண்ணியத்தை காட்டின. அவனின் முதல் பேச்சே அவனிடம் அவளை ஈர்த்திருந்தன. அவளிருக்கும் நிலையில் தன்னை யாரேனும் அரவணைத்து கொள்ளமாட்டார்களா? என்று அவளின் மனம் ஏங்கியது உண்மை தான்! அதற்காக பழகியிராத ஒரு ஆடவனுடன் செல்ல அவளிற்கு சிறிதும் விருப்பமில்லை. நம்பியவர்களே அவளை ஏமாற்றி சென்ற நிலையில் மீண்டும் ஒருவரை நம்பி ஏமாற அவளின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அத்தோடு அவளிற்கு வேறொரு சந்தேகமும் முளைத்தன. உடனே அவளின் இமைகள் இரண்டும் இடுங்கிட “சோ என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் இங்க நீங்க வந்திருக்கீங்க அப்படி தானே?” என கூர்மையாக அவனை நோக்கி அவள் வினவ, அவனும் அவளிடம் சுற்றி வளைக்காமல் “ஆமாம்” என தலையாட்டியிருந்தான்‌. அதில் சட்டென அவளின் முகம் இறுகி […] - [முகிழ்மதி 62,63](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-6263/): முகிழ்மதி 62:     முகிழ்மதியின் கணவன் ஊருக்கு சென்று ஒரு நாள் ஆகிவிட்டது. அவனில்லாத உலகு அவளிற்கு வெறுமையாக இருந்தது. அவளிற்கு விபரம் அறிந்த வயதிலிருந்தே தனித்து தான் வாழ்ந்து வந்திருக்கிறாள் அவள். விஜயலட்சுமி தான் அவளை தமக்கையுடன் சேர விடுவதில்லையே? ஆனால் இன்றோ என்றுமில்லாத ஒரு தனிமையுணர்வு அவளை சுட்டது. அவன் அருகாமையின்றி அவளால் சுவாசிக்கவே முடியாது போன்ற ஒரு நிலை! இப்படியான உணர்வுகளெல்லாம் அவளிற்கு புதிது! அவனிற்கு பதிலாக தமயந்தி அவளுடன் இரவில் வந்து அவர்கள் அறையில் படுத்துக்கொண்டாள். அவையனைத்தும் அவளது தமையனின் கட்டளையே! அதை உதாசீனம் செய்யாமல் அவனின் சேவகியாய் முகிழ்மதியுடன் உறங்க வந்தாள் தமயந்தி. திடீரென்று தமயந்தி அவளுடன் படுக்கப் போவதாக கேள்வியுற்றதும் அவள் ஆச்சரியமுற்றாள். “நிஜமாவா அண்ணி?என் கூட தான் நீங்க படுக்கப்போறீங்களா?” என விழி விரித்து அவள் கேட்க, அவளோ “அட ஆமா அண்ணி…சின்ன வயசிலிருந்து என் ஃப்ரெண்ட்ஸ் கூட இப்படி நைட் […] - [முகிழ்மதி 59,60,61](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-5960/): முகிழ்மதி 59:     சில நிமிடங்கள் அவளின் அணைப்பிலே கட்டுண்டு தன் துக்கம் அனைத்தையும் அவளிடம் கொட்டிய வீர்,அதன்பிறகே சிறிது சிறிதாக தானிருக்கும் நிலையை உணர்ந்தான். வெடுக்கென்று அவளிடமிருந்து விலகிய ஆடவன் விழிகளை அழுந்த துடைத்துக்கொண்டான். இப்போது அவனிற்குள் ஒரு சங்கடம்! அவளை வேண்டாம் என்று கூறிவிட்டு அவளிடமே தன் கட்டுப்பாட்டை மீறி சரண் புகுந்ததை எண்ணி வெட்கியவனால் அவளின் முகத்தை ஏறிடவே முடியவில்லை. அதனால் தொண்டையை செருமி “நான் ஜீப்பிலே வெயிட் பண்ணறேன்…நீ வா…” என அவளை பார்க்காமலே கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான். ‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா?’ என சலிப்பாக எண்ணிக்கொண்ட தமயந்தி மெதுவாக எழுந்தாள். அவளின் விழியில் அவள் சமைத்து வைத்த உணவு கண்ணில் பட ‘ப்ச் கடைசி வரை இவரு நான் சமைச்சதை சாப்பிடவே இல்லை’ என சோகமாக எண்ணி,அவள் சமைத்த உணவை ஒரு வாய் வாயில் வைத்தாள். அடுத்த கணமே அவளின் முகம் […] - [முகிழ்மதி 56,57,58](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-5657/): முகிழ்மதி 56:     அவளை தன் கூட்டிலிருந்து வெளிக்கொண்டு வர அவனும் பல வகையில் போராடுகிறான். அவளோ வெளியில் வர மாட்டேன் என வறட்டு பிடிவாதம் பிடிக்கும் போது அவன் என்ன தான் செய்வான்? அவளின் கடந்தகாலம் அவளை இவ்வாறு நடக்க வைக்கிறது என்று  அவனிற்கும் புரிந்தது. ஆயினும்,ஆசைகளும் உணர்வுகளும் நிறைந்த சாதாரண ஆண்மகன் தானே அவனும்! அவளிற்காக…அவளை நேசித்ததற்காக அவன் ஒவ்வொரு முறையும் தன்னிலையிலிருந்து இறங்கி வருகிறான். ஆனால் அவளின் அழுத்தம் அவனிற்குள் விரக்தியை கொடுத்தன. அவளிடம் அதற்கு மேல் அவனால் போராட முடியவில்லை. அதிலும்,அவள் அவனை அருகே வராதே என்று கூறியதிலே அவனின் மனம் காயப்பட்டிருந்தது. அதனால் அவளின் முகத்தையே சில வினாடிகள் வெறித்து நோக்கிய ஆடவன் எதுவும் பேசாமல் திரும்பி இரண்டடி எடுத்து வைத்தான். தன்னவனது கசங்கிய முகத்தை ஓரக்கண்ணால் அவதானித்திருந்த பெண்ணவளிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது‌. அதனால் மனம் வெறுத்து திரும்பிய ஆடவனிடம் “நா..ன் ப..யந்திட்டேன்” […] - [முகிழ்மதி 53,54,55](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-5354/): முகிழ்மதி 53:       மயங்கி விழுந்த பெண்ணவளை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தது வேறு யாருமல்ல அதே திருநங்கை பெண்மணி தான்! மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் கண்விழிக்காமல் இருந்த சந்திரமதி மூன்றாம் நாள் மெதுவாக விழி திறந்தாள். தன்னருகே நின்றிருந்த அந்த பெண்மணியை அவள் குழப்பமாக ஏறிட “நீ ரோட்டிலே மயங்கி விழுந்திட்டே பாப்பா…நான் தான் ஆஸ்பத்திரியிலே உன்னை கொண்டு வந்து சேர்த்தேன்…கூட பார்த்துக்க யாருமில்லைனு வேறுவழியில்லாமல் உன்னோடவே இருந்தேன்…உன் சொந்தகாரங்க நம்பர் இருந்தா சொல்லு பாப்பா…நான் அவங்களுக்கு போன் போட்டு வரசொல்லறேன்” என மிருதுவான குரலில் கூறிய பெண்மணியை மனம் கலங்கி பார்த்தாள். உறவுகளே அவளை கைவிட்ட நிலையில் யாரோ ஒரு பெண்மணி தன்னை இரண்டு நாளாக கவனித்துக்கொண்டதை நினைக்கும் போது அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இதற்கு முன்பு திருநங்கைகள் என்றாலே அவளின் பார்வை அலட்சியமாக தான் அவர்கள் மேல் பதியும். ஆனால் இன்றோ அந்த பெண்மணி […] - [முகிழ்மதி 51,52](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-5152/): முகிழ்மதி 51: அன்று வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரமதியை பற்றி கேள்வியுற்று ‘எங்க போனாள் இந்த பொண்ணு?’ என மனையாளின் சகோதரியை தேடும் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருந்தான் ரத்தினவேல். ஆனால் எங்கு தேடினும் அவளை பற்றிய சிறு தகவலை கூட அவனால் திரட்ட முடியவில்லை. மாயமானவளை எப்படியோ போகட்டும் என்று அலட்சியமாக விட முடியாமல் அவனின் மனையாள் தடுத்தாள். அவளிற்காக…அவளுடைய மன அமைதிக்காக அவன் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை. விடயம் கேள்வியுற்ற வீரின் நெஞ்சத்தில் நீங்காத ஒரு வலி! அவன் தான் இளகிய மனம் உள்ளவனாயிற்றே? அன்றே மனம் உடைந்த பெண்ணை காக்காமல் விட்ட குற்றவுணர்வு அவனை கொன்று தின்றன. அவனால் சந்திரமதியின் மறைவை எளிதாக கடக்க முடியவில்லை. ஏனெனில்,முகிழ்மதி அவனிற்கு தங்கை என்றால் அதே வயதுள்ள அவளும் அவனிற்கு சகோதரி போன்றவள் தான். அதனால் அவனுமே அன்று செய்த தவறை திருத்திக் கொள்ளும் மார்க்கமாக அவளை கண்டுப்பிடித்தாக வேண்டும் என்ற தீரத்தில் […] - [முகிழ்மதி 127](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-127/): பனிக்கட்டியாக உறைந்திருந்த அந்த இருண்ட அறையில் மரணத்தின் வாசல் மெல்ல திறந்துக்கொண்டிருந்தது. சுவர்களில் ஒட்டியிருந்த ஈரப்பதம் கூட வெண்மையான பனித்துகள்களாக மாறியிருந்தது. மேலே தொங்கியிருந்த மங்கலான மின்விளக்கு காற்றின் அதிர்வில் துடித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு துடிப்பும் பெண்களின் உயிர் நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கும் எமனின் விரல்களைப் போல தோன்றியது. தரையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தமயந்தி நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளின் உதடுகள் நீலநிறமாக மாறியிருந்தன. கர்ப்பவயிற்றை பாதுகாக்க அவள் சற்றும் அசையாமல் இருக்க முயன்றாள். ஆனால் குளிர் அவளின் எலும்புகளை உடைத்தெறிய வந்த கொடூர மிருகம் போல தாக்கியது.அவளருகே சந்திரமதி சுவாசிக்கவே போராடிக்கொண்டிருந்தாள். “அ…அண்ணி…” என்று தமி அழைத்த குரல் கூட உடைந்து சிதறியது. அவளும் சிறிது சிறிதாக தனது சுய உணர்வை இழந்துக்கொண்டிருந்தாள். முகிழ்மதி தன் கட்டுகளை விடுவிக்க போராடிக்கொண்டிருந்தாள். கயிறு அவளது மென்மையான கைகளில் சிவந்த கீறல்களை உருவாக்கியிருந்தது. அவள் இழுக்கும் ஒவ்வொரு முறையும் தோள்கள் வலியால் எரிந்தன. “கடவுளே…” என்று […] - [முகிழ்மதி 48,49,50](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-484950/): முகிழ்மதி 48:     முகிழ்மதியின் வாழ்வு ரத்தினவேலின் வழிகாட்டுதலில் வண்ணமயமாக சென்றுக்கொண்டிருக்க,சந்திரமதி யின் வாழ்வு அதற்கு நேர்மாறாக துயரங்களும் துக்கங்களும் சுமந்த நரகமாய் மாறிப்போனது. பல வருடங்களாய் அனுபவித்திராத கொடூரங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களில் அவள் அனுபவித்திருந்தாள். அதிலும்,அன்று அவளின் தாய் வைத்த கோரிக்கைகளை அவள் மறுத்ததிலிருந்து அவரின் வதைகள் அதிகரித்திருந்தது. அனைத்தையும் அனுபவிக்க நேர்ந்தப்போதிலும் அவர் சொல்வதை செய்வதற்கு அவள் தயாராக இருக்கவில்லை. அவளின் மறுப்பு அவருள் மறைந்திருந்த மிருகத்தை ஒட்டுமொத்தமாய் வெளிகொணர வைத்து மனசாட்சி சிறிதுமற்ற அரக்கியாய் அவரை மாற்றியிருந்தது. ஏனெனில்,அன்றொரு நாள் அவர் செய்த கொடுமைகள் தாளாமல் “உங்களுக்கு என்ன தான் வேணும்?ஏன் என்னை இப்படி உயிரோடு சித்ரவதை பண்ணறீங்க?” என உயிரை பறிக்கும் வலியுடன் அவள் கேட்டிருக்க, அவரோ வில்லத்தனமாக சிரித்துக்கொண்டே “என்ன வேணுமா?எனக்கு பெருசா எதுவும் செய்ய வேணாம் மதி கண்ணு…ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் நீ செய்யணும்” என அவளின் கன்னத்தை […] - [அத்தியாயம்-6](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் வண்டியில் ஏறி பறந்திருந்தனர்.  “டேய்… நல்ல ஒரு ரெஸ்டாரண்ட் முன்னாடி வண்டிய நிறுத்துடா… நிம்மதியா விதவிதமா சாப்பிடனும்…” என்றான் ஆதி. வண்டி ஓட்டி கொண்டிருந்த மாதேஷிற்கு காது கேட்டதோ இல்லையோ அவன் பாட்டிற்கு ஒட்டி கொண்டிருந்தவன் வாண்டியை நிறுத்தியது என்னவோ ஒரு புகழ்பெற்ற பப்பின் முன்னிலையில். “டேய்… இது பப்டா… இங்க எதுக்கு வந்த?” என்றான் அவசரமாக வண்டியை விட்டு இறங்கியபடியே ஆதி. “டேய் காலையிலியே நான் என்ன சொன்னே ட்ரிங்க்ஸ் வேணும்னு தானே. இப்ப எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?” “அதுக்குன்னு?” “என்ன அதுக்குன்னு? இங்க பாரு முழுசா தண்ணி அடிக்கறோம்… இல்ல… இல்ல… தண்ணி அடிக்கறேன்… என்னை கொண்டு போய் நிதானமா வீட்டுல இறக்கி விடுற… டன்…” என்று மாதேஷ் கூற அவனையே பின் தொடர்ந்து சென்றான் ஆதி. இருளடைந்த அந்த கிளப்பில் ஆங்காங்கே வெளிச்சங்கள் மின்மினிகளாக எறிய இசை மட்டும் மிக சப்தமாக […] - [முகிழ்மதி 45,46,47](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-4546/): முகிழ்மதி 45:     கணவன் இவ்வாறு அதிரடியாக இழுப்பான் என்பதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளோ அதிர்ச்சியில் விழி விரித்தாள். அதற்கெல்லாம் மேலாக அவன் மடியில் வந்து விழுந்ததை அறிந்தவளின் மேனியில் மின்சாரம் பாய்ந்த உணர்வு! ஆடவனது ஸ்பரிசம் முழுவதும் அவளை ஒட்டுமொத்தமாக தீண்டியதினால் அவளிற்குள் ஏதேதோ உணர்வுகள் பொங்கி எழுந்தன. புதிதாக அவளுள் தோன்றிய உணர்வுகளின் வேகம் தாளாமல் அவசரமாக அவனிடமிருந்து அவள் விடுப்பட முயல,அவளின் மணாளனோ அதற்கு சிறிதும் அனுமதிக்கவில்லை. ஏனெனில்,அவளின் இடையில் கைக்கொடுத்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியிருந்தான் அவன். அவனின் பிடியில் அப்படியொரு அழுத்தம்! தனக்கு மட்டுமே உடைமையானவள் நீ என்று உரக்க சொல்லியது அவனின் அந்த முரட்டுப் பிடி! ஆனால் அவனின் மூர்க்கத்தில் துவண்டவள் என்னவோ மெல்லிடையாள் தான்! அவளிற்கு அவனின் மடியில் அமர்ந்திருப்பது ஒரு புறம் அவஸ்தையை கொடுக்க,மற்றொரு புறம் புதிதாக ஸ்பரிசிக்கப்பட்ட ஆடவனின் வன் தேகம் அவளை தகிக்க வைக்க “ஏ..ங்..க” என […] - [முகிழ்மதி 42,43,44](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-4243/): முகிழ்மதி 42:     ரத்தினவேல் மற்றும் முகிழ்மதி இருவருக்கும் திருமணம் நடந்தேறி ஒரு வாரத்திற்கு மேல் கடந்திருந்தது. கடந்து வந்த அந்த நாட்களில் புகுந்த வீட்டில் பொருந்திக் கொள்வதற்கு நிறையவே சிரமப்பட்டாள் முகிழ்மதி. சட்டென யாருடனும் அவளால் ஒட்ட முடியவில்லை. அவளின் மனம் ஒருவனுடன் மட்டுமே ஆழ பிணைந்திருந்தது. ஆனால் அவனிடமும் நினைத்ததை எல்லாம் அவளால் பேசிவிட முடியாது. இருப்பினும்,இப்போதெல்லாம் அவனிடம் சிறிது சிறிதாக பேச முயற்சித்து கொண்டிருக்கிறாள். ரத்தினவேலும் அவளை மாற்ற வெகுவாய் முனைந்தான்‌. அதற்கான பலன் அவ்வப்போது அவனிற்கு கிடைக்கவும் செய்தது. ஏனெனில்,தினந்தோறும் குளித்துவிட்டு வரும் மனைவி அவன் அவளது நெற்றியில் குங்குமம் வைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்க தொடங்கினாள். அதேப்போல் அவனிற்கான பணிவிடைகளை தயங்காமல் செய்தவள்,அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசவும் ஆரம்பித்திருந்தாள். ஆனால் அவள் பேசும் சில விஷயங்கள் கூட அவர்களை பற்றியதாக இருக்காது. அவளின் பேச்சில் பெரும்பாலும் மற்றவர்களே இடம்பிடித்திருப்பார்கள். அதுவே ரத்தினவேலிற்கு கோபத்தை கொடுக்கும்.ஆனால் […] - [முகிழ்மதி 39,40,41](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-3940/): முகிழ்மதி 39:   தாயை காண சென்ற வீரின் உள்ளம் தனக்குள்ளே வேதனையில் குமுறியது. சிந்தைக்குள் ஏதேதோ நினைவலைகள் அவனை சுழன்றியடித்தன. “வீரா” என தாயின் வாஞ்சையான அழைப்பு அவனின் செவியோரம் கேட்டதும் நெஞ்சிற்குள் சொல்லமுடியாத ஒரு வலி! வலி என்றால் சாதாரண வலியில்லை…அவனது உயிரையே வேரோடு பிடிங்கி எறியும் அளவு ஒரு வலி! வானவில்லாய் பிரகாசித்த நாட்களை இருளாய் மாற்றிய அந்த ஒரு நாள் அவனின் கண் முன் வந்து சென்றன. நடந்த அந்த துயர சம்பவத்தை நினைத்த அடுத்த கணமே அவனின் தேகம் துக்கத்தில் துவண்டன. ‘கத்தியால் குத்தப்பட்டு இரத்தத்தில் தொய்ந்த கிடந்த தாயின் உடல், அவருக்கு அருகிலே இரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கையின் சரீரம்’ இதைப்பற்றியெல்லாம் நினைக்கும் போதே அவனிற்கு நெஞ்சே வெடித்து சிதறின. உடனே சக்கர திருப்பியை பற்றியிருந்த வீரின் கரம் நடுக்கத்தில் தடுமாறின. சட்டென சக்கரம் கீறிச்சிட வாகனத்தை நிறுத்திய வீரின் இமையோரம் நீரின் பளபளப்பு! […] - [முகிழ்மதி 36,37,38](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-3637/): முகிழ்மதி 36:  காரிகையை அவனது கரம் வளைத்ததும் அவளிற்கு மூச்சிறைக்க ஆரம்பித்தன. அவளின் மேனியெங்கும் மடமடவென வியர்வை அரும்புகள் பூத்துவிட்டன. அடுத்த கணமே அவளின் மேனியெல்லாம் சில்லிட்டு போக,அதையறிந்து பதறிப்போய்விட்டான் அவன். பட்டென அவளின் மேலிருந்து கையை எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்த ரத்தினவேலின் விழிகள் அவளை அளவிட தொடங்கின. இப்போதும் அவளின் மேனி நடுங்கிக்கொண்டிருப்பதை கண்ட ஆண்மகன் “முகிழ் ரிலாக்ஸ்…கீழே விழுந்திடுவேன்னு தான் உன்னை பிடிச்சேன்…வேற ஒண்ணுமில்லை” என்று கூறியதும் அவள் அவனை திரும்பி ஏறிட்டாள். அவளிற்கு அப்போதும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க,விழியில் அப்படியொரு மிரட்சி… முகமெல்லாம் வெளிறிவிட்டிருந்தது போல் அவனிற்கு தோன்றின. அவனை காணும் அவளின் பார்வையில் வழக்கத்திற்கு புறம்பான ஒரு அந்நிய தன்மை… அவள் “வே…ணாம்” என போர்வையை இறுக்கிப்பிடித்தப்படி மூச்சு வாங்க கூற, உடனே ரத்தினவேல் அவளின் நிலையறிந்து “ப்ரீத் முகிழ்…ப்ரீத் இன்ஹேலர் எடுத்து பப் பண்ணு” என தள்ளியிருந்த வாக்கிலே கூறியவன், மெத்தையிலிருந்து எழுந்துக்கொண்டு “நான் கிட்ட வரலை…அங்க […] - [முகிழ்மதி 33,34,35](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-3334/): முகிழ்மதி 33:     சந்திரமதியை விஜயலட்சுமி அறைந்தது பூபதி குடும்பத்தினருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதிலும், அதி முக்கியமாக வீருக்கு! ‘சந்திரமதி கொஞ்சம் நல்ல பெண் தானோ?’ என அவனிற்கு தோன்றவும் செய்ய,அவளின் மேல் இரக்கமும் சுரந்தது‌. அவனை தவிர அங்கிருந்த யாவரும் சந்திரமதிக்கு சாதகமாக எதையும் எண்ணவில்லை. ஏனெனில்,அவர்கள் அனைவருக்கும் ரத்தினவேல் மற்றும் முகிழ்மதியின் மகிழ்ச்சியே முதன்மையாக இருக்க மனமுடைந்த மற்றொரு பெண்ணை கவனிக்க தவறியிருந்தனர். தன்னுடைய புது மனையாளை கையில் ஏந்தியப்படியே ரத்தினவேல் மண்டபத்தை அடைந்திருந்தான். அவளை வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அவனிற்கு வரவில்லை. அவளை அந்த மூச்சு முட்டும் இடத்திலிருந்து அழைத்து வர வேண்டும் என்பது மட்டுமே தலைவனின் கடமையாக இருந்தது. ஒரு வழியாக அவளை தன்னுடைய அறைக்கு தூக்கி வந்திருந்த ரத்தினவேல் காரிகையை மெத்தையில் கிடத்தினான். அவளை மெத்தையில் படுக்க வைத்ததும் மெல்ல இமை திறந்த முகிழ்மதி “அ..க்கா…” என […] - [முகிழ்மதி 30,31,32](https://storybypm.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-313233/): முகிழ்மதி 30:         வெளியில் அவளின் நிலையறியாமல் கவலையுடன் நின்றிருந்தான் வீர். “நத்திங் டூ வொர்ரி…வா” என அவனின் தோளில் தட்டி அழைத்து சென்றான் ரத்தினவேல். அவனை அழைத்துக்கொண்டு பாட்டியின் அறைக்கு சென்ற ரத்தினவேல் “அவளுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தான்…நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க” என்றான் எரிச்சலுடன். அதைக்கேட்டு விழி விரித்த வீர் “என்னடா சொல்லறே?” என அதிர்ச்சியாக கேட்க, அவனோ அவனின் கேள்விக்கு பதிலுரைக்காமல் அங்கு ஓரமாக நின்றிருந்த ஜித்தேந்திரனை பார்த்து ‘வா இங்க’ என்பது போல் தன்னருகே வரும்படி அழைத்தான். உடனே அவனிற்குள் குளிர் பரவிட ‘ஐய்யோ செத்தோம்…அண்ணனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு போலே’ என எச்சிலை கூட்டி விழுங்கியவன் “என்ன அண்ணா?” என பவ்யமாக கேட்டு அருகே வந்தான். “இரு” என்றவன் கண்ணாலே அங்கிருந்த மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டான். அவ்வறையில் பாட்டி,ஜித்தேந்திரன்,வீர் மற்றும் ரத்தினவேல் நால்வர் மட்டுமே இருந்தனர். இப்போது சகோதரனிடம் திரும்பிய ரத்தினவேல் “எங்கடா […] - [வேங்குழல் 1](https://storybypm.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.  எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.  எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.  உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?” – பகவத் கீதை   அன்று டெல்லியில் பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா! இளம் தொகுப்பாளினி ஒவ்வொரு பெயராக சொல்லிக் கொண்டிருக்க, மேடையேறும் ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கி தன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அந்த அவார்டை பரிசளித்தார், இந்திய பிரதமர் உதயேந்திர சிங். இப்போது அவள் ஒரு பெயரை சொன்னதும் அங்கே இதுவரை இல்லாத பலத்த கரகோஷம் அந்த நேரு அரங்கத்தை அதிர வைக்க, மீண்டும் ஒரு முறை யார் என்று கேட்டார் பிரதமர். அந்த பெண் இப்போது அந்த பெயரை மீண்டும் சொன்னாள், “ஆர்க்கியாலஜிஸ்ட் முரளி கிருஷ்ணா!” “இவ்வளவு பேரு கைத்தட்டினதும் நான் கூட சினிமா பிரபலமோனு நினைச்சிட்டேன்” என்றவருக்கு அருகில் இருந்த அவருடைய பி.ஏ பதில் சொன்னார். “சார், இந்த முரளி […] - [அத்தியாயம் 17](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): மிருகேனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் அவனது இறுகியப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விலகி நின்றாள். தடுமாறி அவன் பால் தாவிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள், “இத்தனை அடி வாங்கியும் உன்னோட திமிரு அடங்கல ல ? அடங்க வைக்குறேன்…” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு. “ ம்ம்…யாருக்கு திமிரு? பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளி என்னை ஹாராஸ் பண்ணிட்டு இருக்கீங்களே…உங்களை விட எனக்கு திமிரு கம்மி தான் கமிஷ்னர் மேடம். பொய் கேஸ் போட்டு என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தனதுக்கு நான் உங்க மேல கேஸ் போட செகண்ட் ஆகாது….போட்டேன்னா உங்க வேலை காலி.” என்றவன் சற்று இடைவெளி விட்டு,” ஆமா…அந்த பத்ரன் தானே இதெல்லாம் பண்ணுனான். அவனை தப்பிக்க விட்டுட்டு என்ன உள்ள தள்ளணும்னு எப்படி ஐடியா பண்ணுனீங்க? என்னை உள்ள தள்ளணும்ங்கற வெறி அப்படித்தானே? தீர எதையும் விசாரிக்காம மளமளன்னு அரெஸ்ட் […] - [Ep 42](https://storybypm.com/ep-42/): அத்தியாயம் 42 பவானியோ அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க, இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத விஷ்வாவின் விழிகள் ஒரு கணம் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. அவளும் சட்டென அவனிடமிருந்து விலகியவள், “ஐ அம் சாரி…. நான் வந்து….” என்று விளக்கம் கூற முன்னரே, அவனின் ஐவிரல் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது. ஆம்… அறைந்து விட்டான். பின்னர் யாரென்றே தெரியாத ஒருத்தி திடீரென்று வந்து இப்படி முத்தம் கொடுத்தால் வேறு என்ன செய்வார்கள்? அதுவும் அவன் இப்போது இருக்கும் நிலையில் அவளின் இந்த செயல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது. அதனால் தான் அந் நொடி எதை பற்றியும் யோசிக்காமல் கையோங்கி விட்டான். அவன் அறைந்த வேகத்தில் அவள் முகம் மறுபக்கம் திரும்பி கொள்ள, தன்னையும் அறியாமல் அவள் கரங்கள் தன் கன்னத்தை பற்றியது. “ஹேய் பவானி” என்று அவளின் தோழிகள் பதறியடித்து கொண்டு அவ்விடம் நோக்கி ஓடி வர, […] - [Ep 41](https://storybypm.com/ep-41/): அத்தியாயம் 41 நாட்கள் மெல்ல நகர்ந்தது.  குணசேகரும் நல்ல படியாக குணமாகி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அதன் பிறகு பிருந்தாவுக்கும் சிம்மனை சந்திக்க முடியாமல் போனது. கடைசியாக அந்த சம்பவம் நடந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. வேலை அதிகமாக இருப்பதால் அவ்வப்போது இரவில் அவளிடம் அழைத்து பேசுவான். அதோடு அவளை தன்னோடு அழைத்து கொண்டு செல்லவா என்றும் பல முறை கேட்பான். இதுவே பழைய சிம்மனாக இருந்திருந்தால் அவன் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டி இருக்காது. அவன் எதை நினைக்கிறானோ அதை செய்திருப்பான். ஆனால் இந்த விடயத்தில், அவளின் விருப்பதுக்கு மாறாக நடந்து கொள்ள அவனுக்கும் இஷ்டம் இருக்கவில்லை. பிருந்தாவுக்கு அவளின் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்று அவனும் அறிவான் தானே! ஒரு வேளை அவர்களை எதிர்த்து அவளை அழைத்து கொண்டு சென்றாலும் அவள் நிச்சயம் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அது மட்டும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அந்த […] - [அத்தியாயம் 16](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு படுத்திருந்தாள் மோகனா. லேசாக கதவு திறந்திருக்க அதன் வழியாக வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளை கூர்த்து கவனித்தான் ஆதவ். கஷ்டப்பட்டு தூங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள். வட்ட முகம் , உப்பிய கன்னங்களில் குதித்து விளையாடலாம் போல தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவன் விழிகளால் அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தான்.  நீண்ட குடை போன்ற இமைகள் மூடியிருக்க, நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது.  ஆரஞ்சு பழச்சுளையை வெட்டி வைத்தது போலிருந்த உதட்டின் மேலே சிறிய மச்சம். அதனை மெல்லத் தொட கையை நீட்ட அவளோ பதறி திரும்பி‌ப் படுத்துக் கொண்டாள். ‘ஆத்தாடி..!  இந்த போலீஸ்…சரியான கேடியா இருப்பான் போலவே…அய்யோ இப்ப எதுக்காக இங்க வந்து நிக்கறான்னு தெரியலையே…பக்கத்துல வந்தாலே பக்கு பக்குன்னு இருக்குது…” என மனதினுள் நினைத்துக் கொண்டாள். மோகனா திரும்பிப் படுக்கவும் நீட்டிய கரங்களை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவன் அவளது உதட்டின் மேலிருந்த மச்சத்தையும் […] - [Ep 40](https://storybypm.com/ep-40/): அத்தியாயம் 40 மயக்கத்தில் இருந்து மெல்ல விழிகளை திறந்தாள் பிருந்தா. தலையோ விண் விண்ணென்று வலிக்க, “ஸ்ஸ்…” என்று நெற்றியை பற்றிக்கொண்டே இமைகளை திறந்து பார்வையை சுழல விட்டவளுக்கோ ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்றே  தெரியவில்லை. முகத்தில் விழுந்து கிடந்த முடிகளை மெல்ல ஒதுக்கி விட்ட படி, மெதுவாக எழுந்து அமர்ந்தவள், அங்கே காற்றில் கலந்து வந்த சிகரெட் வாசனையில் தன்னையும் மீறி இரும ஆரம்பித்து விட்டாள். அவள் சத்தத்தில் ஜன்னலின் அருகில் நின்று புகைத்து கொண்டிருந்த சிம்மனும் தன் பார்வையை அவள் புறம் திருப்ப, இவளோ இருமிய படியே, மெல்ல அவன் இருந்த திசையை பார்த்தாள். அங்கே நின்று கொண்டிருந்தவனை கண்டதுமே சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்த அனைத்துமே அவள் நினைவுக்குள் வர, கடைசியாக விஷ்வாவின் கையில் இருந்த துப்பாக்கியின் சத்தம் மட்டுமே அவளுக்குக் கேட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்றே அவளுக்கு நினைவில் இல்லை. நடந்த […] - [அத்தியாயம் 15](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/):   மிருகேந்திரன் மீது பொய் குற்றச்சாட்டை கூறியவனின் சட்டைக் காலரை பிடித்து தன் புறமாக இழுத்த கீதாஞ்சலி, “ என் கிட்ட உண்மையை மட்டுந்தான் சொல்லணும்னு சொல்லிருக்கேன். பொய் சொன்ன…உடம்புல உயிர் தங்காது…” என்றாள் விரைப்பாக. “ சந்தியமா தான் மேடம் சொல்றேன்…இந்த  கோக்கைன்,, ஓபியம், நாக்ரோடிக் ட்ரக்ஸெல்லாம் இதோ இங்க நிக்குறாரே இந்த மிருகேன் தான் சிங்கப்பூர் ல இருக்குற டேவிட்ங்கற ஆளுக்கு கை மாத்தி விட ஏற்பாடு செஞ்சிருக்காரு. இதோ இந்த மிருகேந்திரன் டேவிட் கிட்ட போட்ட அம்பது கோடிக்கான ஒப்பந்தத்தோட ஜெராக்ஸ் காப்பி. அப்பறம் இந்த பொண்ணுங்களையெல்லாம் வளைகுடா நாட்டுக்கு அடிமைகளாவும், ஸ்பெயின், தாய்லாந்து இருக்குற சில பணாக்கார ஆட்களுக்கு ஒப்பந்த முறையில  பாலியல் தொழிலார்களாகவும் அனுப்பப் போறாரு. “என்றவனை பின்னிருந்து எட்டி மிதித்தான் மிருகேந்திரன். “ ஏன் டா பொய் சொல்ற? திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டு இருந்தன்னா உடம்புல இருந்து உயிர் காணாம போயிடும்…ஜாக்கிரதை..”என்றவன்‌ அவனது […] - [Ep 1](https://storybypm.com/ep-1-2/): இது ஒரு spicy நாவல். 18+ சீன்ஸ் நிறைய வரும். அந்த மாதிரி கதைகள் வாசிக்க புடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க 😁😁 அத்தியாயம் 1 சென்னையின் இரவு நேரக் களியாட்ட விடுதி அது.  நகரத்தின் முக்கியப் புள்ளிகளும், பெரும் பணக்கார வாரிசுகளும் மட்டுமே நுழைய முடிந்த அந்த இடத்தில், விஐபிகளுக்கென போடப்பட்ட இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டப்படி அமர்ந்து கையில் உள்ள விலை உயர்ந்த மதுக் குவளையை சுழற்றிக் கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு.  35 வயதை கொண்ட அவன் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணன் மட்டுமல்ல, இந்த கிளப் உரிமையாளரின் மகனும் கூட.  அதனாலேயே அவனுக்கு இங்கே ராஜ மரியாதை. ஆனால் அதில் எல்லாம் அவனுக்கு எந்த பெருமையும் இருக்கவில்லை.  அவனை பொறுத்தவரை பெற்றோரின் நிழலில் வாழ்வதையே கெளரவக் குறைவாக நினைப்பவன்.  அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் அவனது திறமையாலும், அதிகாரத்தாலும் வர வேண்டுமே தவிர மற்றவர்களை சார்ந்து இருக்க கூடாது […] - [அத்தியாயம் -14](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): விதேஷின் கைவளைவில் நடந்து கொண்டிருந்தவள் அந்தப் பாதையின் முடிவில் ஒரே ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தாள் . மிருகேனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்து வெடுக்கென்று தலையை முன்புறமாக திரும்பிக் கொண்டு சென்றாள்.  கையில் வைத்திருந்த பைகளை ஒரு கணம் பார்த்தவன் அதனை தூக்கிக் கொண்டு தன் காரை நோக்கிச் சென்றான். ஜவுளிகளை வாங்கி முடித்துவிட்டு ஜானகி ,ருத்ரன் மோகனா மற்றும் கீதாஞ்சலி வீடு திரும்பினர். டைனிங் டேபிளில் அமர்ந்து பிரட்டில் ஜாமைத் தடவி உண்டு கொண்டிருந்தான் ஆதவ். அதைப் பார்த்தவுடன் ஜானகிக்கு கோபம் வந்தது. அவனருகே வேகமாக வந்தவள் அவனது கையிலிருந்த பிரட்டையும் ஜாமையும் பிடுங்கியவள், “ ஏன்டா சமைச்சு வச்சிட்டு தானே போனேன். எடுத்துப் போட்டு  சாப்பிட வேண்டியது தானே? இதென்னடா நோக்கு பிடிக்காததை சாப்ட்டுண்டு இருக்க…” என்றாள் காட்டமாக. ஜானகியின் கையிலிருந்து பிரட் பாக்கெட்டை மீண்டும் பிடுங்கித் தன் புறமாக […] - [Ep 39](https://storybypm.com/ep-39/):   அத்தியாயம் 39 பிருந்தாவின் பெயரை சொன்னதுமே விஷ்வாவின் பொறுமை மொத்தமாக காற்றில் பறக்க, அடுத்த நொடி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன், அதை சிம்மனை நோக்கி நீட்டியிருந்தான்.  “அவ பேரை சொல்லுற தகுதி கூட உனக்கில்லடா…” என்று ஆக்ரோஷமாக அவன் கத்த, அப்போது கூட சிம்மனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சற்றும் பதட்டமில்லாமல் தன் முன்னால் நின்றிருந்தவனை அழுத்தமாக பார்த்தவன், “இப்போ உனக்கு என்ன தான்டா வேணும்? எதுக்கு இங்க நின்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்க?” என்று கேட்டான். விஷ்வாவோ கோபத்தில் பற்களை கடித்த படி, “வாய மூடுடா… என் வாழ்க்கையவே மொத்தமா அழிச்சிட்டு திமிரா வேற பேசுறியா? மரியாதையா என் பிந்துவோட லைஃப்ல இருந்து விலகி போயிடு. இல்லை உன்ன நான் கொல்ல கூட தயங்க மாட்டேன்” என்றான் ஆவேசத்துடன். சிம்மனோ, “என்ன மிரட்டுறியா?” என்று  நக்கல் மாறாத குரலில் கேட்டவன், தனது இருக்கையில் […] - [அத்தியாயம் 13](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): அத்தனை கடுப்பாக இருந்தது ஆதவ்விற்கு. தன்னை நம்பாமல் மோகனாவின் பொய்யான‌ குற்றச்சாட்டை நம்பி அவளது கழுத்தில் தாலி கட்ட வைத்த ஜானகியின் மீது கோபமாக வந்தது ஆதவ்விற்கு. மோகனாவை தங்களுடைய அறைக்குள் அமர வைத்திருந்தாள் ஜானகி. “ உன்னோட தங்கச்சி பேர் என்ன?” என்றாள் ஜானகி. “ எந்த தங்கச்சியை கேக்குறீங்க?” என்றாள் திருதிருவென விழித்துக் கொண்டே. “ என்னம்மா நீ தானே சொன்ன. நோக்கு தங்கச்சி இருக்கா. அவளை படிக்க வச்சிட்டு இருக்கேன்‌னு. அவளுக்காக தான் வேலைக்குப் போறேன்னு சொன்ன. அந்த தங்கச்சியை தான் கேட்டுண்டிருக்கேன். அந்தப் பொண்ணை இங்க அழைச்சிண்டு வந்துடலாம் வா. ” பகீரென்றது மேகனாவிற்கு.  “ மேடம்…சாரி..அத்தை அவ கொடைக்கானல் ஐ ஹாஸ்ட்டல் ஐ படிச்சிட்டு இருக்கா. அங்க சீட் கிடைக்குறதே பெரிய விஷயம். அவ பண்ணிரெண்டாம் க்ளாஸ் வரைக்கும் அங்கேயே தங்கி படிக்கட்டும். அப்ப திறன் அவளோட வாழ்க்கையும் நல்லா இருக்கும்” என்று கூறி சமாளித்தார் […] - [Ep 38](https://storybypm.com/ep-38/): அத்தியாயம் 38 ‘விஷ்வாவா?’ என்று சட்டென அலைபேசியை எடுத்து பெயரை பார்த்தவளுக்கோ, அப்போதே அழைத்தது சிம்மன் இல்லை விஷ்வா என்று புரிந்தது. இந்த நேரத்தில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவளால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. காரணம் சாயந்திரமே அவளின் அன்னை கீதா அவர்களின் திருமணத்தை நிறுத்த சொல்லி விஷ்வேந்திரனிடம் குணசேகர் பேசியதை பற்றி அனைத்தையும் அவளிடம் கூறி இருந்தாரே! அதனால் நிச்சயம் அவன் அதை பற்றி பேச தான் அழைத்து இருப்பான் என்று அவளுக்குமே புரிந்தது.  ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளி விட்டுக் கொண்டவள், “சொல்லுங்க விஷ்வா” என்றாள் மெல்லிய குரலில். மறு முனையில் எந்த பதிலுமே இல்லை. “விஷ்வா….” என்று மீண்டும் அவள் அழைக்க, “இப்போ நீ யார்னு நினைச்சி என் கூட பேசிட்டு இருந்த?” என்று இறுகிய குரலில் கேட்டான். அவன் கேள்வியில் பிருந்தாவோ அமைதியாக இருக்க,  விஷ்வாவோ பொறுமையை இழுத்து பிடித்த படி, “பிந்து உன் […] - [அத்தியாயம் 12](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/):   ருத்ரன் தூக்கியெறிந்த நாளிதழை எடுத்துப்‌ பார்த்தவனின் விழிகள் கோபத்தில் சிவந்தது. “ வாட் தி ஹெல் இஸ் திஸ் ஆதவ்? ஒரு கவர்ன்மென்ட் சர்வென்ட்டா இருந்துட்டு இவ்வளவு சீப்பா பிகேவ் பண்ணியிருக்க? இதை உன் கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல.  எல்லா சோஷியல் மீடியா அண்ட் நியூஸ் சேனல்ஸ்  இதைப் போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டு இருக்கான். எப்படி உன்னால இர்ரெஸ்பான்சிபிலா  நடந்துக்க முடியுது…?”என்றான் அழுத்தமாக. “நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்கல டாட்…அந்த இடியட் மிருகேனை பாத்ததுனால தான் கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன். பட் இந்த பொண்ணு கிட்ட தப்பாயெல்லாம் நடக்கல…ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு தூரம் ஏன் கோபப்படுறீங்க ?யாரோ எவரோ இப்படி கேவலமா போட்டோ எடுத்து அனுப்பினா அதை நம்பி என்னை சந்தேகப்படுறீங்க..?”  என்றான் அலட்சியமாக. “ அவ்வா…! அவ்வ்வா…! என்ன சொன்னீங்க…? என்ன சொன்னீங்க ஒண்ணுமில்லாத விஷயமா? அதெப்படி உங்களால இப்படி பேச முடியுது? நீங்க […] - [Ep 37](https://storybypm.com/ep-37/):   அத்தியாயம் 37 காரில் சென்று கொண்டு இருந்த விஷ்வேந்திரனின் சிந்தனை முழுக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நடந்த சம்பவத்தில் தான் நிலைத்து இருந்தது. அறையை திறந்து கொண்டு விஷ்வேந்திரன் உள்ளே நுழைய, அவரை கண்ட குணசேகரோ சற்று திகைத்தவர், அடுத்த கணம் தன்னை சமாளித்து கொண்டே, “வாங்க சம்பந்தி” என்றார். புன்னகைத்த படி வந்த விஷ்வேந்திரனும், “இப்போ ஹெல்த் எப்படி இருக்கு சம்பந்தி?” என்று அவரின் உடல் நிலையை பற்றி விசாரிக்க, குணசேகரும் சகஜமாக பேசினார். சிறிது நேர உரையாடலுக்கு பிறகு, குணசேகரோ சற்று தடுமாறிய படி, “சம்பந்தி நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்” என்று சொல்ல, விஷ்வேந்திரனும் அவரின் தடுமாற்றத்தை கவனித்த படி, “என்ன விஷயம் சம்பந்தி?” என்றார். குணசேகரோ, “அது.. வந்து… இந்த கல்யாணத்தை பத்தி தான்…” என்று இழுக்க, கீதாவோ அவரையே பார்த்து கொண்டு நின்றிருந்தார். விஷ்வேந்திரனோ, “கல்யாணத்தை பத்தியா? என்னாச்சு […] - [அத்தியாயம் 11](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/):   தன்னைச் சீண்டி விட்டுச் சென்ற மிருகேனை வெறித்துப் பார்த்திருந்தான் ஆதவ். கண்மண் தெரியாத அளவிற்கு அவன் மீது  கோபத்தை வந்தது.  அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தவனின் தோளினைத் தொட்டாள் மோகனா. “ என்னாச்சு டியர்? அவர் யாரு? உங்களுக்கு  வேண்டப்பட்டவங்களா? திடீர்னு உங்க ஃபேஸ் ஏன் டல்லாயிடுச்சு ?” என்றவள் அவனது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தாள். கடுகடுவென இருந்தது ஆதவ்வின் முகம். “ வேண்டியவங்களா?” என்று மீண்டும் கேட்டாள்‌ மோகனா.  தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன்,   “ஹான் என்ன கேட்ட? வேண்டப்பட்டவங்கன்னா…? ம்ம்…இவரு வேண்டப்படாதவங்க லிஸ்டல இருக்குறவரு.” என்று அழுத்தமாக கூறியவன் அருகிலிருந்த மதுக்கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு,  ஷேல் ஐ ட்ரிங்க்?” என்று அவளிடம் அனுமதி கேட்டான். அவளுக்கு தான்‌ சற்று ஆச்சர்யமாக இருந்தது. குடிப்பதற்கு தன்னிடம் அனுமதி வேண்டி நின்றவனைக் கண்டு சிரிப்பு வந்தாலும் ,மறுபுறம் அவனது நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்தது. அவள் அமைதியாக நிற்பதை […] - [Ep 36](https://storybypm.com/ep-36/): அத்தியாயம் 36 இவ்வாறு ஒரு வாரம் கழிந்திருக்க, குணசேகரின் உடல் நிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. தலையில் ஏற்பட்டிருந்த காயமும் மெல்ல குணமாகி வந்ததால், வைத்தியர்களும் இன்னும் இரண்டு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று கூறியிருந்தனர். அந்த செய்தி குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் நிம்மதியை கொடுத்தது. குணசேகரோ கட்டிலில் சாய்ந்த படி ஜன்னலின் ஊடாக வெளியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.  உடல் மெதுவாக குணமடைந்தாலும், மனம் மட்டும் அமைதியாக இல்லை. அன்று திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவோடு வீட்டை விட்டு கிளம்பினார்… ஆனால் விதி வேறு ஒன்றை அல்லவா எழுதி வைத்திருந்தது. அவர் பக்கத்தில் இருந்த கீதாவோ, “என்னங்க இதை குடிங்க” என்று கிண்ணத்தில் இருந்த சூப்பை அவரிடம் நீட்ட,  குணசேகரும் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டார். அவரது முகத்தில் இருந்த யோசனையை பார்த்த கீதா, “என்னாச்சுங்க? எதுக்கு ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று […] - [அத்தியாயம் -10](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ஜன்னலருகே நின்று வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. அத்தனை கோபம் அவளுள். மீண்டும் மீண்டும் அவனிடம் தோற்றுப் கொண்டேயிருப்பது அவளுள் பெரும் பிரளையத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆதவ் பட்பட்டென்று பேசி விடுகின்றான். ஆனால் கீதாஞ்சலியோ அமைதியாக இருக்கும் எரிமலையை போன்று தனக்குள்ளேயே கோபம் என்னும் எரிமலைக் குழம்பை பதப்படுத்தி வைத்திருக்கின்றாள். அது வெடித்து சிதறும் நேரம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அறியவில்லை அவள். ஒவ்வொரு முறையும் காவல்துறையின் கண்களை ஏமாற்றி விட்டு கண்கட்டு வித்தை நிகழ்த்தும் மிருகேனின் மீது வன்மமும் கோபமும் அதிகரித்து கொண்டேயிருந்தது. “ மே ஐ கம்  இன் மேம்…” என்ற குரல் கேட்டு திரும்பினாள் கீதாஞ்சலி. ஆதவ்வுடன் ஒரு காவலர் நின்றிருந்தார்.. “ எஸ்…கம்..இன்..” என்றவள் தனது எண்ணவோட்டங்களை தள்ளி வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள். “ப்ளீஸ் பீ சீடட்….ஆதவ்…நீங்களும் தான் முகிலன்..” “ மேடம்…இந்த தடவை கடத்தல் பொருள் கிடைச்சும் கூட ஒண்ணும் […] - [Ep 34,35](https://storybypm.com/ep-34/): அத்தியாயம் 34 தனது கேபினில் உள்ள நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சிம்ம விஷ்ணு. அவனுக்கு முன்னால் மேசை முழுவதும் நோயாளிகளின் மருத்துவக் கோப்புகள் குவிந்து கிடந்தன. ஆனால், அவற்றில் எதிலுமே அவனது கவனம் சுத்தமாக இல்லை. அவன் பார்வை முழுவதும் கையில் இருந்த தனது அலைபேசியின் மீதே நிலைத்திருந்தது. நேற்று அவள் கோபமாக அழைப்பை துண்டித்த பிறகு அவன் பல முறை அவளுக்கு அழைத்து பார்த்தான். ஆனால் அவளோ ஒரு முறையும் அவனின் அழைப்பை ஏற்கவில்லை. திரும்ப திரும்ப அழைத்து ஒரு கட்டத்தில் அவளே அலைபேசியை ஸ்விச் ஆப் செய்து விட்டாள். எரிச்சலாக அலைபேசியை மேசையின் மீது எறிந்தவன், நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். இது வரையில் அவன் வாழ்க்கையில் யாரிடமும் இப்படி இறங்கிப் போனதில்லை. மிகவும் பிடிவாதக்காரன். தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பவன். அவனது உலகத்தில் சமரசம் என்பதற்கு இடமே இல்லை. யாராவது அவனை […] - [அத்தியாயம் -9](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): அலுவலகத்திற்கு சற்று நிதானமாக கிளம்பிக்  கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. கீதாஞ்சலியிடம் பேச வந்த ஜானகி ஒரு கணம் தயங்கி நின்று பின்னர் மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள். “ கீதும்மா…சொல்றேன்னு கோவிச்சுக்காத…புடவை எடுக்கறதுக்கும் திருமாங்கல்யம் செய்ய கொடுக்கறதுக்கும் மட்டும் எங்க கூட வா. பையன் ஆத்துல அவா சொந்தக்காரா  சில பேர் உன்னை பாக்கணும் னு ஆசைப்படுறா…நோக்கு எப்ப நேரம் தோதுப்படறதோ அப்ப சொல்லு போயிட்டு வந்துடலாம். ஞாயித்து கிழமையானாலும் பரவாயில்ல டி. போகலன்னா ரொம்பத் தப்பா நினைச்சுப்பா…”என்றான். ஜானகியை நுனி மூக்கு சிவக்க முறைத்தாள் கீதாஞ்சலி. கோபம் வந்துவிட்டால் ஜானகிக்கும் கீதாஞ்சலிக்கும் நுனி மூக்கு சிவந்து விடும். “ ஏம்மா நோக்கு எத்தனை தரம் சொல்றது. இதுக்கெல்லாம் என்னை எதிர்பார்க்காதேன்னு.. சொல்றதையே கேக்க மாட்டியா நீ? நேக்கு இருக்குறதே ஞாயித்து கிழமை மட்டுந்தான். அதையும் உன் கூட கடை கடையா ஏறி இறங்கி ஷாப்பிங் பண்ணி வேஸ்ட் பண்ணிண்டு இருக்க முடியாது. எத்தனை தடவை […] - [உன் நிழல் நான் தொட Final 2](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-final-2/): பத்து வருடங்களுக்கு முன்பு.… அன்று குமாரின் இறந்த சடலத்தைப் பார்த்த பின்பு, ரூபா முழுமையாகத் தன் மனநிலையை இழந்தாள். இவ்வளவு துரோகங்கள் நடந்த பின்பும், ஹர்ஷத் ரூபாவை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து இறுதிவரை அன்போடு நல்ல முறையிலேயே கவனித்துக் கொண்டான். அதற்கு அவனது மனமுதிர்ச்சியான பதில் இதுதான். “சில சமயங்கள்ல காதல் ரொம்ப முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் நிறைந்ததா இருக்கும். இந்த ரூபா குமார் மேல வச்சிருந்த கள்ளக்காதல் அவளை ஒரு கொடூரமான கொலைகாரியா, மூர்க்கத்தனமா மாத்துச்சு. ஆனா, நான் ரூபா மேல வைத்திருந்த உண்மையான காதல் என்னை ஒரு முட்டாளாகவே மாத்திடுச்சு. இப்போ அவ மனநிலை மாறிப் போயிருந்தாலும், அவளை என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றான். அன்று அந்தப் பழைய வீட்டில் நடந்த கொடூரச் சம்பவம், அங்கு இருந்த அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ஹர்ஷத் மற்றும் ராபர்ட்டின் செல்வாக்கால் மூடி மறைக்கப்பட்டது. போலீசாரைப் பொறுத்தவரையில், பழைய […] - [உன் நிழல் நான் தொட ep 28 (final 1)](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-28-final-1/): இறுதி அத்தியாயம் & எப்பிலாக்  பத்து வருடங்களுக்குப் பின்பு… “இன்றைய சமுதாயத்தில், தனக்குப் பிடிக்காத கணவரைப் பழிவாங்கவும் தண்டிக்கவும் சில பெண்கள் தவறான புகார்களை அளித்து, பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தைத் தவறான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அதையேதான் எனது கட்சிக்காரர் சேகரின் மனைவி மீனாட்சியும் இங்கே செய்திருக்கிறார். ஆண் என்பவன் எப்போதும் பெண்ணைக் கொடுமைப்படுத்துபவனாகவும், அடக்கி ஆள்பவனாகவும் மட்டுமே சித்திரிக்கப்படுவதுதான் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் பெருகி வருவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இன்று தாங்கள் வழங்கப்போகின்ற தீர்ப்பு, எனது கட்சிக்காரர் சேகருக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் அனைத்து ஆண்களுக்கும் ஒரு விடிவெள்ளியாக, ஆதரவான தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” எனத் தனது நீண்ட, நெத்தியடி வாதத்தை முடித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள் வழக்கறிஞர் ரத்னாவதி. பொறியியல் படிப்பை முடித்திருந்த ரத்னா, சட்டம் பயிலப் போவதாகக் கூறியபோது, […] - [உன் நிழல் நான் தொட ep 27](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-27/): அத்தியாயம் 27 ரத்னாவுக்கு மீண்டும் நினைவு திரும்பிய பொழுது, தான் அதே இடத்தில் தனியே இருப்பதைக் கவனித்தாள். ஆனால், அவளுக்குத் தன் சுயநினைவு தப்பிய அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது துளியும் நினைவில் இல்லை. அவள் இருந்த அறையின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த இருண்ட அறையிலிருந்து வெளியே செல்வதற்கோ, தப்பிப்பதற்கோ வேறு வழிகள் எதுவும் இல்லை. அப்படியே ஏதேனும் ஒரு வழி இருந்தாலும், இங்கிருந்து தப்பிச் செல்லும் எண்ணம் எதுவும் ரத்னாவுக்குக் கிடையாது; இந்தச் சூழ்ச்சியை எதிர்கொள்ளவே அவள் துணிந்திருந்தாள். நாழிகைகள் கடந்து கொண்டிருக்க, ரத்னா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்பதை அவள் அறியவில்லை. தான் யாருக்காக  இங்கே காத்திருக்கிறோம் என்பது அவளுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், தான் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாளோ, அந்த நபர் மட்டும் இங்கே வந்துவிடவே கூடாது என்று ஒவ்வொரு நொடியும் கடவுளை மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள். ஆனால் கடவுளோ, ‘நீ வேண்டும் […] - [உன் நிழல் நான் தொட ep 26](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-26/): அத்தியாயம் 26 மற்றொருபுறம், மண்டபத்தில் இருந்து வெளியேறிய தங்கவேலுவும் ஹர்ஷத்தும் ரத்னாவைத் தேடிப் புறப்பட்டனர். காரை ஓட்டிக்கொண்டே தங்கவேலு ஹர்ஷத்திடம், “ரத்னா எங்க இருக்கான்னு இப்போதைக்குச் சொல்ல ஒருத்தரால் மட்டும்தான் முடியும்” என்றான். “என்ன சொல்ற? யாருக்குத் தெரியும், அதைச் சொல்லு!” “ரூபா!” திடுக்கிட்டுத் திரும்பிய ஹர்ஷத், “ரூபாவுக்குத் தெரிஞ்சா எதுக்கு அதை மண்டபத்துல சொல்லல? அதுமட்டுமில்லாம, அந்த நேரத்துல ரத்னாவைக் காணோம்னு அவளும் தானே தேடிட்டு இருந்தா? அப்படி இருக்கும் பொழுது ரூபாவுக்குத் தெரியும்னு நீ எதை வச்சுச் சொல்ற?” என்றான். “அக்காவுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ரத்னாவைத் தூக்குனவங்களுக்குத் தெரியாதா அவ எங்க இருப்பான்னு?” “வேலு! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே!” எனத் தன் மனைவியைப் பற்றிக் குற்றம் சுமத்தியது பிடிக்காமல் ஹர்ஷத் சத்தமிட்டான். “நான் சொல்றதுதான் உண்மை அண்ணே. எனக்கு ரூபாவின் குணம் தெரியும். ஆனா அவ இந்த அளவுக்குப் போவான்னு நான் கொஞ்சம் கூட […] - [உன் நிழல் நான் தொட ep 25](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-25/): அத்தியாயம் 25 ரத்னாவை மண்டபம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை என்றதும், குடும்பத்தினர் அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்தனர். கிருஷ்ணசந்திரன் அர்ச்சனாவை அழைத்து, “ரத்னா உன்கூடத்தானே இருந்தா? அப்படி இருக்கும் பொழுது ரத்னா காணாமல் போனது உனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்?” என்றார் பதட்டத்துடன். அதுவரை அழுதுகொண்டிருந்த அர்ச்சனா, “இல்லைப்பா, எனக்குத் தெரியாது. அவ என் கூடத்தான் இருந்தா. அப்போ எனக்கு ஒரு போன் வந்துச்சு, நான் பேசிக்கிட்டு இருக்கும்போது அம்மா கூப்பிடவும் நான் வெளியே வந்தேன். திரும்பவும் ரூம்க்கு வந்து பார்க்கும்போது ரத்னாவைக் காணோம். நானும் அவ வேற எங்கயாவது இருப்பான்னுதான் நினைச்சேன்” என்றாள் விம்மலுடன். அடுத்ததாக மண்டபத்துக் காவலாளியிடம் விசாரிக்க, அவரோ, “நான் சரியாகக் கவனிக்கவில்லை” என்று கூற, கிருஷ்ணசந்திரனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். “அப்பா, வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்க நேரமில்லை. எப்படி இருந்தாலும் ரத்னா ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. நீங்க முதல்ல தாத்தா, பாட்டி, […] - [உன் நிழல் நான் தொட ep 24](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-24/): அத்தியாயம் 24 அதிகாலையில் வழக்கம்போல தூக்கம் கலைந்து எழ முயற்சி செய்த ரத்னா, தான் இருக்கும் நிலை கண்டு முதலில் திகைப்படைந்தாள். இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வர, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். தன் அருகில் சீரான மூச்சுடன் தலையணையில் முகம் புதைத்துத் தூங்கிக்கொண்டிருந்த அஜீத்தின் முகத்தைப் பார்த்த ரத்னா, மனதுக்குள், ‘நல்லவன் மாதிரி இருந்துகிட்டு பண்றதெல்லாம் அயோக்கியத்தனம்; இருந்தாலும் எனக்குப் பிடிச்சிருக்கே… மாயக்காரன்டா நீ!’ என்று நினைத்துக்கொண்டாள். மலர்ந்த புன்னகையுடன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்து வந்த பின்னும் அஜீத் உறங்கிக்கொண்டிருக்க, ரத்னா அவனருகில் சென்று தன் முடியிலிருந்து வழியும் நீர்த்துளிகளை அவன் முகத்தில் தெளித்தாள். தன் முகத்தில் தெளிக்கப்பட்ட நீரின் ஈரத்தை உணர்ந்து பதறி எழுந்து அமர்ந்த அஜீத், தன் கண்முன் அழகுப் பதுமையாக, வெட்கப்பட்டு நிற்கும் மனைவியைக் கிலுகிலுப்புடன் பார்த்தான். ஐந்து வருட கனவு இது! என்றாவது ஒருநாள் தான் நினைத்தது நடக்கும் என்று காத்திருந்த அஜீத்திற்கு, […] - [உன் நிழல் நான் தொட ep 23](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-23/): அத்தியாயம் 23 சில நாட்களுக்கு முன்பு… அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்ட மகிழ்ச்சியுடன் ரத்னாவின் குடும்பத்தினரும், அஜீத்தின் குடும்பத்தினரும் கோயம்புத்தூர் நோக்கி வந்துகொண்டிருக்க, சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களிடையே நிறைந்திருந்தது. தென்காசியைத் தாண்டி அவர்களின் கார் சென்றுகொண்டிருந்த போது, ரத்னாவின் மனக்கண் முன் பலவிதமான காட்சிகள் வர ஆரம்பித்தன. முதலில் தெளிவற்ற பிம்பங்களாய்த் தெரிய ஆரம்பித்த காட்சிகள், இப்பொழுது முழு வடிவமாய் தன் கண்முன் தோன்றி மறைந்தன. டெல்லியில் இருக்கும் வரை ரத்னாவின் பெரும்பாலான நேரம் ரோஜாவுடன் பேசுவதிலும், மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்ப்பதுமாகவே கழிந்துவந்தது. அவ்வாறு ஒருநாள் ரத்னா மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, அடுத்த தெருவில் ஏதோ சண்டை நடக்க, ரத்னா அதைக் கவனிக்கலானாள். வாய் வார்த்தையாகத் தொடங்கிய சண்டை கைகலப்பில் முடிந்து, இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். ரத்த காயத்துடன் நின்றவர்களை மற்றவர்கள் பிரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சண்டையிட்டவர்களின் ரத்த காயம் நிறைந்த முகம் ஒரு […] - [உன் நிழல் நான். தொட ep 22](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-22/): அத்தியாயம் 22 நண்பனே! நட்பு வட்டத்திற்குள் நாம் இருந்தபோது, உன் ஸ்பரிசம் ஊட்டவில்லை காதலுணர்வை… காலம் சில கடந்த பின்பு, என் மனம் எழுப்பிய சர்ச்சையில், நண்பனே உன்னைக் கணவனாக்கிக் கொண்டேன் என் மனதில்… என் நண்பனே என் கணவனான பின்பும், என் மனம் குழம்பித் தவிக்கின்றதுவே உன்னால், உன் நினைவால்… நம் நட்பின் ஆழத்தில் காதலையும்… என் விழியோர நீரில் நட்பினையும்… தேடித் தவிக்கின்றேனடா! ரத்னா தன்னைக் காதலிக்கிறாள் என்ற எண்ணமே அஜீத்திற்குள் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பேச முற்படும் முன், வெளியே இருந்து தங்கவேலு அவனைக் கூப்பிட, “வந்து பேசிக்கொள்ளலாம்” என்று நினைத்து அஜீத் வெளியேறினான். அவன் அறையை விட்டு வெளியேறியதும் கட்டிலில் பொத்தென்று அமர்ந்த ரத்னா, வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தாள். ‘அத்தான், நீங்க எதுக்கு ஜஸ்வந்த் பத்தி என்கிட்ட கேக்குறீங்க? நான் எப்பவும் யாருகிட்டயும் பொய் சொல்ல மாட்டேன், ஆனா இன்னைக்கு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். ஆக்சிடெண்ட் […] - [உன் நிழல் நான் தொட ep 21](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-21/): அத்தியாயம் 21 மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ரத்னாவின் மனது முழுவதும் அஜீத்தைச் சுற்றியும், தன் வாழ்க்கையில் இனி என்ன நடக்கும் என்ற எண்ணம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. ரத்னா இதுவரை எதிர்காலத்தைப் பற்றி நினைத்து எப்போழுதும் கவலை கொண்டது கிடையாது. அஜீத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்தது, ஜஸ்வந்துடன் தன் திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட குழப்பங்கள், ஜஸ்வந்தின் மரணம், அஜீத்துடன் நடந்த மறுமணம்… இப்படி அனைத்து சூழ்நிலைகளிலும் ரத்னா நடப்பதை ஏற்று வாழப் பழகிக்கொண்டாள். ஆனால் இப்பொழுது, மருத்துவமனையில் மருத்துவர் கேட்ட கேள்வியும், நடைபெற்ற பரிசோதனையும் அஜீத்துடனான தன் உறவைக் கேள்விக்குறியாக்கியதாகவே உணர்ந்தாள். தங்கள் இருவரின் உறவு எந்த இடத்தில் இருக்கின்றது? அஜீத்திற்குத் தன்னை பிடிக்கவில்லையோ? தான் இன்னும் அஜீத்துடன் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்ற உண்மை தெரிந்த மைதிலி இனி என்ன செய்யப் போகின்றார்? எனப் பல கேள்விகள் தன்முன் பூதகரமாக நிற்க, அனைத்தையும் இன்று அஜீத்திடம் பேசிவிடுவது என்ற முடிவுடன் வீடு […] - [அத்தியாயம் -8](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): மோகனாவிற்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தான் ஆதவ். முதலில் அவனது குறுஞ்செய்திகளை  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.  ஏனெனில்  தனது திட்டத்திற்கு அவள் தேர்ந்தெடுப்பதே மத்திய வயது பணக்கார ஆண்களை மட்டுந்தான்.  இளைஞர்களிடம் சற்று எச்சரிக்கையாகவே செயல்படுவாள்.  எனவே ஆதவ்வின் குறுஞ்செய்திக்கு பதிலேதும் அனுப்பாமல் அமைதி காத்தாள். நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர்ந்தது. ஆதவ் மெல்ல மெல்ல போலித்தனமான அப்பாவியான பேச்சினில் அவளை கவரத் தொடங்கினான். “ என்னடா இப்பயெல்லாம் எப்பப் பார்த்தாலும் ஃபோனும் கையுமா தான்  உக்காந்திருக்க?” என்றபடி அவனருகே வந்தமர்ந்தாள் கீதாஞ்சலி. “ ஒண்ணுமில்லை கீதுக்கா..இது வேற மேட்டர்…அப்பறமா சொல்றேன்.” “ என்னடா ஏதாவது பொண்ணை லவ் பண்ணுறியா என்ன?” என்றாள் கிசுகிசுப்பாக. “ என்னையப் பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசலாமா? நம்ம கேரக்டருக்கு அதெல்லாம் செட்டாகாது…” என்று தோளைக் குலுக்கினான். “ ஹலோ…! யாரை வேணாலும் நம்பலாம். ஆனா இந்த மாதிரி  பேசி பந்தா […] - [உன் நிழல் நான் தொட ep 20](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-20/): அத்தியாயம் 20 “என்ன நினைச்சுக்கிட்டு இவளைக் கூட்டிக்கிட்டு இங்க வந்துருக்க? என்னை மதிக்காதவங்களுக்கு என்கிட்ட எந்தப் பேச்சும் வச்சுக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தன் முன் நின்ற அஜீத்திடம் கோபமாகப் பேசினாள் ஆர்த்தி. “அக்கா, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்றான் அஜீத். “நான் எதுக்குக் கேட்கணும்? நீ கேட்டியா நான் சொன்னதை? என் பேச்சைக் கேட்காத உன் பேச்சை மட்டும் நான் எதுக்குக் கேட்கணும்? என்கிட்ட இருந்து நீ எந்த உதவியும் கிடைக்கும்னு எதிர்பார்க்காதே”. தான் இப்பொழுது எது கூறினாலும் சண்டையிடும் நோக்குடன் இருக்கும் தமக்கை, தனக்காகப் பெற்றோரிடம் பேசப்போவது இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, “அக்கா, நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது மன்னிப்பு மட்டும்தான்” எனக் கூறி கரம் கூப்பி நின்றான் அஜீத். அஜீத்தின் செயலில் ஆர்த்தி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், அதை மறைத்துக்கொண்டு பேசினாள்: “இப்போ எதுக்கு இந்த மன்னிப்பு கேட்கிற நாடகம் அஜீத்?” ஒரு மனம் ஆர்த்தியினுடைய […] - [உன் நிழல் நான் தொட ep 19](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-19/): அத்தியாயம் 19 மனஉறுதி என்பது சிறு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி போன்றது. மனஉறுதி சிறிது ஆட்டம் கண்டாலும், அது அறுந்து விழப்போவது உறுதி இழந்தவர் மீதே என்பது பலரும் உணராத ஒன்றாகவே இருக்கின்றது. அஜீத்தின் மனஉறுதி, ‘ரத்னாவின் நண்பன் மட்டுமே நீ’ என்ற ஜஸ்வந்த் கூற்றில் ஆட்டம் காண ஆரம்பித்தது. அதுவரை தெளிவாக இருந்த அஜீத்தின் மனம் குழம்ப ஆரம்பித்தது. “சார், நீங்க உள்ளே போகலாம். உங்களைப் பாஸ் வரச் சொன்னாங்க.” அனுமதி கிடைத்ததும் ராபர்ட் அலுவலக அறைக்குள் நுழைந்த அஜீத்தைப் பார்த்த ராபர்ட்,  “ஹலோ அஜீத் வா, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்றார். “இட்ஸ் ஓகே அங்கிள்.” “நீங்க சொன்ன தேதியில பில்டிங் வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாம். மத்த டீடைல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு. வேற ஏதாவது கேட்கணுமா?” “அப்பாகிட்ட காட்டிட்டுச் சொல்றேன்.” “ஆர் யூ ஓகே அஜீத்?” “யா அங்கிள், ஐ ஆம் ஓகே.” “பட் ஐ […] - [உன் நிழல் நான் தொட ep 18](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-18/): அத்தியாயம் 18 காதல் என்பது அதன் பொருளை உணராதவர்களைப் பொறுத்தவரை மூன்றெழுத்து ஒரு வார்த்தையே; ஆனால், அதன் பொருளை உணர்ந்தவர்களுக்கு அது வார்த்தை அல்ல, வாழ்க்கை. உலகில் பலரை இயக்கும் சக்தியாகவும், சில சமயம் அழிக்கும் ஆற்றலாகவும், ஏதோ ஒரு விதத்தில் அனைவருள்ளும் காதல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஜஸ்வந்தும், அஜீத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. பதினேழு வயது ஜஸ்வந்த், பதினோரு வயது ரத்னாவின் மீது கொண்டது நிச்சயம் உண்மைக் காதலே. ஆனால், அவனது இயற்கைக் குணம் அவனின் காதலைப் பிடிவாதமாகவே மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தியது. அன்று ஹர்ஷத் ஜஸ்வந்திடம் கூறிய, “ரத்னா சொல்லுவா நீ வேண்டான்னு, ரத்னாவுக்குக் குடும்பம்தான் முக்கியம், நீ இல்லை!” என்ற வார்த்தைகள் ஜஸ்வந்திடம் இருந்த பிடிவாத குணத்தைத் தலைதூக்கச் செய்தன. ஜஸ்வந்தின் பிடிவாத குணம் அவன் ரத்னாவின் மீது கொண்ட காதலை அவனையே உணர விடாமல் செய்தது. தனக்கு ரத்னா மீது இருப்பது ஆசையே, அதுவும் வாழும் நாள் முழுதும் […] - [உன் நிழல் நான் தொட ep 17](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-17/): அத்தியாயம் 17 முட்டை ஓட்டில் இருந்து வெளிவந்த குஞ்சுப் பறவை, சிறிது காலம் தன் தாய்ப்பறவையின் சிறகுகளின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கும். எப்பொழுது குஞ்சுப் பறவையால் தனித்து வாழ முடியும் எனத் தாய்ப்பறவை உணருகின்றதோ, அப்பொழுதே தன் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளும். குஞ்சுப் பறவையும் இந்த உலகத்தில் போராடி வாழப் பழகிக்கொள்ளும். ஆனால், ரத்னாவைப் பொறுத்தவரை எப்பொழுதும் முட்டை ஓட்டை விட்டு வெளிவராத குஞ்சுப் பறவையின் நிலைதான். வீட்டில் கடைசிப் பிள்ளை என்றாலே எல்லா வீட்டிலும் இருக்கும் அதிகப்படியான கவனிப்பு ரத்னாவின் விஷயத்திலும் இருக்கவே செய்தது. அதுவும் நல்ல விஷயங்களைக் கூறினால் அப்படியே ஏற்று நடக்கும் ரத்னாவை, குடும்பத்தினர் அனைவரும் உள்ளங்கையில் தாங்கினர் என்றே கூற வேண்டும். பாரபட்சமின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியாகப் பழகும் ரத்னாவை, ஊர் பெரியவர்கள் முதல் பண்ணையில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை ஒரு இளவரசியை நடத்துவது போலவே நடத்தினர். அதனால்தான் என்னவோ, ரத்னாவைப் பொறுத்தவரை ‘உலகம் என்பது […] - [அத்தியாயம் -7](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/):   கோவில் தூணில் நன்றாக சாய்ந்து நின்று கொண்டு , “ என்னையும் உங்களோட வருங்கால கணவரையும்  எதுக்காக மேடம் கம்பேர் பண்ணுறீங்க?” என நக்கலாக கேட்டவனது கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள் கீதாஞ்சலி. பின்னர் அலட்சியமாக அவனைப் பார்த்தவள், “தப்பு தான் உங்களை யாரோடயும் கம்பேர் பண்ணியிருக்க கூடாது. லுக் மிஸ்டர் மிருகேந்திரன் ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்குறோம்னு நினைக்காதீங்க.  எல்லா நேரமும் தப்பிச்சிட்டு இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் வகையா மாட்டுவீங்க. அன்னைக்கு தான் உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்தாள். “ ம்ம்…குட்…சோ…நான் புத்திசாலின்னு ஒத்துக்கிறீங்க? “ என்றவன் அவள் முகத்தருகே குனிந்து, “ ஓகே மேடம் …நான் இந்த தடவை உங்களுக்கு ஓபன் சேலஞ்ச் விடுறேன். என்னோட அடுத்த ப்ராஜெக்ட் இன்னும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சிடுவேன்… இடமும் நாளும் இப்பவே நான்  உங்களுக்கு சொல்லிடுறேன். முடிஞ்சா இந்த தடவையாவது பிடிக்க ட்ரை பண்ணுங்க […] - [உன் நிழல் நான் தொட ep 16](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-16/): அத்தியாயம் 16 ரத்னாவிடமிருந்து இப்படி ஒரு கதறலை எதிர்பார்க்காத அஜீத், முதலில் அதிர்ச்சியும் கவலையும் மேலிட அசையாமல் நின்றது ஒரு சில வினாடிகளே. அதன்பிறகு விரைந்து சென்று ரத்னாவைச் சமாதானம் செய்து, உணவருந்தச் செய்தான்.  பின்னர் ரத்னாவைக் கட்டிலில் உறங்கச் சொல்லிவிட்டு வெளியேற முயன்றபோது, அதுவரை அவன் சொன்னதையே செய்துகொண்டிருந்த ரத்னா, “அஜீத் அத்தான், என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே” என்று கூறிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.  அருகில் வந்த அஜீத், மெல்ல அவளது தலையைக் கோதி, “நான் எங்கேயும் போகல, உன் கூடவேதான் இருப்பேன்” என்றபடி கட்டிலின் மறுபுறம் அமர்ந்துகொண்டான். அதன்பின் அஜீத்திற்குத் தூக்கம் வராமல் போக, அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அஜீத்திற்கு முதலாம் ஆண்டிலிருந்தே ரத்னாவின் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு தோன்றியது உண்மையே. அதனாலேயே ரத்னாவைத் தன் தோழியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.  தோழியாக மாறிய ரத்னா தன் உறவென்று தெரிந்தபின், ஏனோ ரத்னாவுக்கு அனைத்துமாகத் தானே இருக்க […] - [உன் நிழல் நான் தொட ep 15](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-15/): அத்தியாயம் 15 நடப்பது எதுவும் உணராது பொம்மை போல் இருந்த ரத்னாவைப் பார்த்துக் கண்கலங்கிய அஜீத்திடம் வந்த அர்ச்சனா, “அண்ணா, ரத்னாவை நீ உன் கூடவே கூட்டிட்டுப் போறியா?” என தனது தோழியின் துயரம் பொறுக்க முடியாதுக் கேட்டாள்.  அர்ச்சனா கேட்ட கேள்வி அருகில் நின்ற மைதிலியின் செவியை எட்டவும், “என்ன பேச்சு பேசுற? வாய மூடு!” என்று தன் மகளை அதட்டினாள். கூட்டத்தில் நின்ற வயதான பெண்மணி ஒருவர், “என்னமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க பையன் நாங்க ஏதோ ரத்னாவைக் கொடுமைப்படுத்துறதா சொன்னான் தானே? அப்படி அந்தப் பொண்ணுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிற பரந்த மனசு இருந்தா, அந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே!” என்றார். பேச்சு திசை மாறுவதை உணர்ந்த வைரவேல் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க நினைக்க, அங்கிருந்து வெளியேறிய அஜீத் சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.  அவன் திரும்பி வரும் வரை கூட […] - [உன் நிழல் நான் தொட ep 14](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-14/): அத்தியாயம் 14   ஆயிற்று, ரத்னா – ஜஸ்வந்த் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ரத்னாவின் இயல்பிலேயே மற்றவர்களின் பேச்சை ஏற்று நடக்கும் குணம், ஜஸ்வந்த் வீட்டிலும் அனைவரையும் எளிதாக ஏற்று நடக்கச் செய்தது.  மேற்படிப்பிற்காக புகழ் பெற்ற கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாள். இருந்தாலும், வீட்டில் ரத்னா செய்யும் சேட்டைகள் அவளை இன்னுமொரு ராதிகாவாகக் காட்ட, அதைத் தடை செய்வார் யாரும் அங்கு இல்லை. தேவராஜுக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், பிறந்தது இரண்டும் ஆண் குழந்தைகள் என்றாகிவிட்டது. ரூபா மருமகளாய் வீட்டிற்கு வந்த பின் தொழிலில் உதவி செய்தாலும், அது அவருக்கு முழுத் திருப்தி அளிக்கவில்லை. ராதிகா பிறந்த பின்னேதான் வீடு உயிர்ப்புடன் இருப்பதாக அவர் உணர்ந்தார். இப்போது ரத்னாவும் ராதிகாவுடன் சேர்ந்து செய்யும் குறும்புத் தனங்களை ரசித்துப்பார்ப்பதையே அவர் தன் வேலையாக்கிக் கொண்டார். வீட்டிற்குள் வந்த ஜஸ்வந்த் நடப்பதைப் பார்த்துவிட்டு மாடிக்குச் செல்ல, ரத்னா எதையும் கவனிக்காமல் […] - [உன் நிழல் நான் தொட ep 13](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-13/): அத்தியாயம் 13   அஜீத் கூறியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டே வீடு வந்த ரத்னா, அஜீத் எதற்காக ஜஸ்வந்தை திருமணம் செய்யக் கூறினான், ஜஸ்வந்த்திடம் தான் எதற்காகப் பேச வேண்டும் என மட்டும் யோசித்தாளே தவிர, அஜீத் திருமணத்தை மறுத்த காரணத்தைக் கேட்கவில்லை; ஜஸ்வந்திற்கு ஆதரவாகப் பேசிய காரணத்தையும் கேட்கவில்லை. கேட்டிருந்தால்…? விதி விளையாட்டின் திருப்பம் ஆரம்பித்தது. நடந்ததைக் கேள்விப்பட்ட பிரபு, “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ரத்னாகிட்ட அந்த ஜஸ்வந்தைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருக்க!” “பிரபு, ரத்னா கல்யாணம் ஜஸ்வந்த் கூடத்தான் நடக்கணும். அதுதான் எல்லாருக்கும் நல்லது, குறிப்பா ரத்னாவுக்கு.” “என்னடா நல்லது? ரத்னாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பா.” “இல்லடா, எங்க கல்யாணம் நடந்தா சிலர் பிரச்சனை பண்ணனும்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்களால ரத்னா சந்தோஷம் மட்டும் இல்ல, குடும்பத்துல எல்லாருடைய சந்தோஷமும் போயிடும். அது யாரால, எப்படினு என்னால இப்போ மட்டும் […] - [அத்தியாயம் -6](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): கீதாஞ்சலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த ஆதவ் ,” கீதுக்கா…இவ்வளவு தானா உன்னோட கண்டிஷன்ஸ்? இல்ல இன்னும் இருக்கா‌? நல்லா யோசிச்சு இன்னும் ஏதாவது பாக்கியிருந்தா அதையும் சொல்லிடு. எல்லாத்தையும் கேட்டுட்டு இந்த கல்யாணத்தை அவசியம் நடத்தியே தான்‌ ஆகணுமாங்கற டிசிஷனுக்கு வந்துடுவாங்க.” என நக்கலடித்தவனை கீதாஞ்சலி முறைத்தாள் என்றால் , ஜானகியோ ,  “ஏன்டா நீ வேற..வாய்லயிருந்து நோக்கு நல்ல வார்த்தையே வராதா? எப்பப்பாரு அபசகுணமாவே பேசிண்டிருக்க .  அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுக்கே நேக்கு போதும்‌ போதும்னாயிடுத்து…நீ வேற சும்மாவே இருக்க மாட்டேங்குற..” என சலித்துக் கொண்டாள்.  உண்மையில் ஜானகிக்கு தான் விழி பிதுங்கி போனது. ‘எப்படி திருமணத்தை நல்லபடியாக நடத்தப் போகிறோம்‌ ?’ என ஆயாசமாக இருந்தது.  கீதாஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதே மலையை பிளக்கும் வேலையை போலிருந்தது.  இதில் ,’ இவள்  இவ்வளவு நிபந்தனைகளை போட்டால் என்ன செய்வது ?’என்ற யோசனை மனதினை அலைக்கழித்தது. யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் […] - [Ep 33](https://storybypm.com/ep-33/): அத்தியாயம் 33 டைனிங் மேசையில் அமர்ந்து பேருக்கு உணவை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள் பிருந்தா. மனதில் உள்ள கசப்பு இப்போது உணவின் சுவையையே உணர விடாமல் செய்திருந்தது. இருந்தாலும், கீதாவின் வற்புறுத்தலுக்காகவே அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கீதாவுக்கோ மகளின் நிலையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. நேற்றிலிருந்து அவள் ஒழுங்காக சாப்பிடவே இல்லை.  அழுது அழுது கண்களும் வீங்கி போயிருந்தது. இப்படியே போனால் அவள் உடல் என்ன ஆகும்? ஒரு தாயாக அவர் மனம் பதறித்தான் போனது. “இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா…” என்று மெதுவாக கூறியவர், அவளது தட்டில் சிறிது உணவை எடுத்து வைத்தார். பிருந்தாவோ மறுப்பாக தலையசைத்தவள், “போதும்மா… எனக்கு வேணாம்…” என்றாள் சோர்வான குரலில். “இப்படி சாப்பிடாம இருந்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? நடந்ததை மாத்த முடியாது பிருந்தா. முதல்ல உன் உடம்பை பார்த்துக்கோ…” என்று கீதா கவலையுடன் கூற, அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தலையை […] - [அத்தியாயம் -5](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): தனது கருப்பு நிற தார் ஜீப்பில் ஏறிய மிருகேந்திரன் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான். அருகே அமர்ந்திருந்த அவனது வலது கையான மதன்  அலைப்பேசியில் ஏதோ பேசிக் கொண்டே வந்தான். அவன் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தான் மிருகேந்திரன். “ஓகே…ஓகே…” என்றபடி அலைப்பேசியை வைத்து விட்டு மிருகேந்திரனை பார்த்தான். மதிய வேளை உச்சி எதிர் வெயில் கண்களை கூசச் செய்யாமாலிருக்க குளிர் கண்ணாடியை அணிந்திருந்தான். “என்ன மதன்…எல்லா பாக்ஸூம் சேஃபா போய் சேந்துடுச்சு தானே…? பிரச்சினை எதுவும் இல்லையே..?” என்றான் சாலையில் பார்வை பதித்த படி. “ எப்படி சார்??” என்றான் ஆச்சர்யமாக. அவனைப் பார்த்து அழகாக சிரித்தவன்,  “எந்நேரமும் தலையில ஓடிக்கிட்டு இருக்குற விஷயம் தானே‌‌..இப்ப என்ன புதுசா..? மேல விவரத்தை சொல்லு…” என்றான். “ சார்…மேமாஸ் பிளஷர்ஸ் ல எல்லா சரக்கையும் இறக்கிருக்காங்க. பாக்ஸையெல்லாம் அப்படியே வச்சிட்டு  வொர்க்ர்ஸ்யெல்லாம் வீட்டுக்கு போனதுக்கு அப்பறமா பாக்ஸ் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா‌ மாத்தி சேஃபா […] - [Ep 32](https://storybypm.com/ep-32/): அத்தியாயம் 32 அடுத்த நாள் காலை மிக அழகாக புலர, கண்ணாடியின் முன் நின்று தனது விலை உயர்ந்த கைக் கடிகாரத்தை கட்டிய படி நின்றிருந்தார் குணசேகர். இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் என்பதே சுத்தமாக இல்லை. ஒரு தந்தையாக தன் மகள் செய்த செயலை நினைத்து மனம் வெதும்பியதோடு, அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவன் மீது கொலை வெறி தான் தோன்றியது.  அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் நிதானம் இன்று முழுவதுமாக காணாமல் போயிருந்தது. அதே நேரம் மெதுவாக அறைக்குள் நுழைந்தார் கீதா. “என்னங்க… ஹாஸ்பிடலுக்கு கிளம்புறீங்களா?” என்று தயக்கத்துடன் கீதா கேட்க,  குணசேகரிடமோ எந்த பதிலும் இல்லை. நேற்று இரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு அவரோ யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கீதாவோ கணவனின் முகத்தை கவலையுடன் பார்த்த படி,  “சாப்பிட்டுட்டு போலாமே!” என்று மெதுவாக சொல்ல,  அவரோ மேசையில் இருந்த தனது பணப்பையையும் கார் சாவியையும் […] - [அத்தியாயம் -4](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): “ரக்கிட ரக்கிட…ரக்கிட ஹூ… ரக்கிட ரக்கிட …ரக்கிட ஹூ… என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்… உசுரிருக்கு வேறென்ன வேணும் நான் உல்லாசமா  இருப்பேன்..”  எனத் திரைப்பட பாடல்  நான்கு புறமும் சுற்றி அமைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மியூசிக் சிஸ்டத்தில் அதிர்ந்து கொண்டிருக்க,  இடுப்பை வளைத்து நெளித்து ஆடியபடி ரூபாய் நோட்டுக்களை எண்ணிக்கொண்டு இருந்தாள் மோகனா. இருபது வயதை  நெருங்கிக் கொண்டிருக்கும் இளநங்கை.  ஆனால் வயதிற்கு மீறிய வளர்ச்சி அவளை இருபத்தைந்து வயது பெண் போல காட்டிக் கொண்டிருந்தது. ஒரு லட்ச ரூபாய்  மதிப்புள்ள ஸ்விஸ் கைக்கடிகாரத்தை கையில் அணிந்து கொண்டு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் மோகனா… “பாக்க தான் கஞ்சூஸ் மாதிரி இருந்தான். பரவாயில்ல. நல்ல வெயிட்டான பார்ட்டி தான். இந்த மாதிரி ஆட்கள் இருக்குற வரை கவலையேது…என்ஜாய்…யுவர் லைஃப் மோகனா…” என்றவள் தனக்குத்தானே சபாஷ் போட்டுக் கொண்டு ,  “ வசீகரா…என் நெஞ்சனிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதுமதே.. […] - [Ep 31](https://storybypm.com/ep-31/): அத்தியாயம் 31 இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, தன்னுடைய கணவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார் கீதா. இன்று எப்படியும் உண்மையை கூறி விட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தார். ஆனால் உண்மை தெரிந்த பிறகு தன் கணவரின் நிலை என்னாகும் என்று எண்ணும் போது தான் உள்ளுக்குள் பயமாக இருந்தது. நேரம் இரவு ஏழு மணியை தாண்டி இருக்க, வாசலுக்கு வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. அதில் திடுக்கிட்டு எழுந்தவர், தன்னையும் அறியாமல் பதற்றத்துடன் வாசலை நோக்கி பார்த்தார். அடுத்த சில நொடிகளில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் குணசேகர். உள்ளே வந்தவர் கண்களில் பட்டது என்னவோ சோபாவின் அருகே சற்று பதட்டமாக நின்றிருந்த மனைவியின் முகம் தான். அதை கண்டவர் புருவம் சுருக்கிய படி,  “என்ன கீதா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என வினவ, அவரது கேள்வியில் தடுமாறியவர், “அ… அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க […] - [அத்தியாயம்-13](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): ஒவ்வொரு நாளும் நீலாம்பரியின் மேலுள்ள காதல் அவனது மனதிற்குள் வலுப்பெற்றிருக்க இன்று எப்படியாவது அவளிடம் தனது காதலை உரைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மிக துள்ளலாக சென்றான்.  விரைவாக படிக்கும் இடத்திற்கு சென்றவன் அவள் படித்து கொண்டிருக்கும் அறை நோக்கி சென்றான். அங்கு அவள் வகுப்பறையில் படித்து கொண்டிருக்க இவன் வெளியே நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.  யாரோ தன்னை உற்று நோக்குவதை போல் இருக்க சுற்று முற்றும் பார்த்தாள். அவளது பார்வையை எதிர்பார்த்து காத்திருப்பவன் போல அவளது பார்வை தன் மேல் விழுந்தவுடன் கை அசைத்து “ஹாய்…” என்றான். அவளும் சிரித்து கொண்டே “ஹாய்…” என்று உதடசைத்து கூறினாள்.  “இப்ப தான் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காங்க… நீ போ…” என்று வாயசைத்து சத்தம் வராமல் கூறினாள். ஆனால் அவனோ தலையை இட வலமாக ஆட்டி முடியாது என்று கூறினான். அவனை பார்த்து முறைத்த நீலாம்பரியோ “போ..” எனும் விதமாக கை அசைத்தாள். […] - [Ep 30](https://storybypm.com/ep-30/): அத்தியாயம் 30 அன்னை அறைந்ததில் நிலை தடுமாறி கீழே விழ போனவள், சட்டென படியின் கை பிடியை பற்றிக் கொண்டாள். அவளுக்கோ ஒரு நொடி என்ன நடந்தது என்றே புரியவில்லை.  தன் முன்னே பத்ரகாளியாய் நின்றிருந்த அன்னையை கண்களில் நீர் வழிய அதிர்ச்சியுடன் பார்த்தவள், “ம்மா..” என்று ஏதோ கூற வர, “பேசாதடி… இதுக்கு மேலயும் என்ன பொய் சொல்லாம்னு யோசிக்கிற? பிரண்ட பார்க்க போறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டுல நின்னு யாரோ ஒரு பொறுக்கி கூட…. ” என்று கத்தியவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் நா தழு தழுத்தது. அவர் கூற்றில் பிருந்தாவோ திகைத்து விட்டாள். அப்படி என்றால் அன்னை நடந்த அனைத்தையும் பார்த்து விட்டாரா?  ஒரு நொடி தலையே சுற்றியது அவளுக்கு. ஆம்… கடந்த இரண்டு நாட்களாகவே பிருந்தாவின் நடத்தையில் ஏதோ மாற்றம் இருப்பதை அவர் கவனித்து கொண்டு தான் இருந்தார். இருந்தாலும் திருமண வேலைகள், வீட்டுப் பொறுப்புகள் […] - [அத்தியாயம் -3](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த ரெஸ்டோ பார். டி ஜேவில் ஆங்கிலப் பாடல்   தமிழ் பாடல் என மாறி மாறி ஒலித்து அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்க, ஆண் பெண் வயது வித்தியாசமின்றி நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். சற்று ஓரமாக போடப்பட்டிருந்த நீண்ட மேசையில் சிறு சிறு கோப்பைகளில் மது வகைகள் நிரப்பப்பட்டிருநதது‌ அதனருகே இருந்த நாற்காலியில்  கால் மேல் கால் போட்டுக் கொண்டு கையில் மதுக் கோப்பையுடன் பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தான்  ஆதவ் ஆத்ரேயன். அவனது கூரிய பார்வை அங்கிருந்தவர்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது. அனைவரையும் வட்டமடித்துக் கொண்டு வந்தவனது பார்வை ஓரிடத்தில் நிலைத்தது. நவநாகரீக மங்கையொருத்தி அங்கு அமர்ந்திருந்த ஐம்பது வயதை தாண்டிய பெரியவருடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். தொடை வரை மட்டுமே இருந்த அவளது உடை, பின் பக்கமும் முன் பக்கமும் சற்று தாராளமாகவே இறங்கி அவளது அங்க வளைவுகளை அழகாக […] - [Ep 29](https://storybypm.com/ep-29/): அத்தியாயம் 29 அலைபேசியில் வந்த அவனின் பெயரைக் கண்டதும் பெண்ணவளின் முகமோ இறுகிப் போனது. இரு நாட்களுக்குப் பிறகு இன்று தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். இல்லை இல்லை வீட்டினர் முன்னிலையில் அப்படி நடித்துக்கொண்டிருந்தாள்.  ஆனால் அதற்குள் மீண்டும் அழைத்து அவள் நிம்மதியை கெடுக்க ஆரம்பித்து விட்டானே! அழைப்பு தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க, அவளின் அன்னை கீதாவோ,  “யாரும்மா? ஏன் போனை எடுக்காம இருக்க?” என்று சலிப்பாக திரும்பி அவளிடம் கேட்டார். பிருந்தாவோ “அது… வந்து…. எ.. என் பிரண்டுமா… ” என்று அவசரமாக சமாளித்தவள், அலைபேசியை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே செல்ல, அவரும் புரியாமல் மகளை பார்த்தார். பிருந்தாவோ சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றவள், “ஹலோ” என்றாள். மறு முனையில் இருந்தவனோ, “பரவால்லயே! இன்னக்கி உடனே கால ஆன்சர் பண்ணிட்ட!” என்றவன் குரலில் ஏகத்துக்கும் நக்கல் நிறைந்திருந்தது. அவளோ, ‘இவனுக்கு வேற வேலையே […] - [அத்தியாயம் -2](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-3/): துறைமுகத்திலிருந்து சற்று தொலைவில் நீரில் தத்தளித்தபடியே நின்றிருந்தன சில படகுகள். எங்கும் இருள் சூழ்ந்திருக்க நிலவின் வெளிச்சம் மட்டுமே அலைகளில் மிதந்து கொண்டிருந்தது. “ ம்ம்…சீக்கிரம் ‌சீக்கிரம் வாங்க டா…எத்தனை பாக்ஸ் இருக்கு?அதுக்கு தகுந்த மாதிரி படகை எடுத்துட்டு வரச் சொல்லணும் டா.” என்றான் ஒருவன். “ நூத்தி பத்து பாக்ஸ் டா. எல்லாமே பெரிய சைஸ் தான்… எத்தனை படகு தேவைப்படும். அந்தாண்ட நிக்குற கப்பல்ல கொண்டு போய் கரெக்டா சரக்கை சேர்க்கணும்..” என்றான் மற்றொருவன். அதற்குள் சிறு சலசலப்பு கேட்க திரும்பிப் பார்த்தனர் இருவரும். கருப்பு நிற சட்டையும், ஜீன்ஸூம் அணிந்து தலையை ஜெல் வைத்து படிய வாறி, இடது  காதில் சிவப்பு நிற கடுக்கண் அணிந்து ,ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் திடகாத்திரமான உடற்கட்டுடன் படபடவென  படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான் மிருகேந்திரன். கைக்காப்பினை மேலே இழுத்து விட்டுக் கொண்டே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நீண்ட கன்டெய்னர் மீது […] - [உன் நிழல் நான் தொட 12 (2)](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-12-2/): அத்தியாயம் 12 (2) அன்று இரவு அஜீத், ரத்னா, தங்கமுத்து ஆகிய மூவருக்கும் உறங்காத இரவாகிவிட, அடுத்த நாள் தீபாவளி மூவருக்கும் கலக்கம் நிறைந்ததாகவே விடிந்தது. மூவரும் கலக்கத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்ய, ரத்னா கன்னம் கன்றி இருப்பதே ஏதோ பிரச்சனை என்பதை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால், அதை மறைக்க அவளிடம் கிரீம் ஒன்றை அஜீத் தந்தான். “அத்தான், அண்ணா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” “ஓய், என்ன ஒரு அடி வாங்குனதுக்கே இப்படி மன்னிப்பு கேட்கிற? அடுத்த அடி வாங்குனா என்ன பண்ணுவ?” “என்ன பண்ணுவேன்? நான் வாங்குனதை என் அத்தானுக்குக் கொடுத்துடுவேன்.” “அம்மாடி! நீ செஞ்சாலும் செய்வ. ரத்னா ப்ளீஸ், உங்க அண்ணன் நேத்து உன்கிட்ட நடந்துகிட்டதை மறந்துடு.” “எப்படி மறக்க முடியும்? தப்பே பண்ணாம எனக்கு எதுக்குத் தண்டனை தரணும்? ஒருவேளை நான் உங்களைக் காதலித்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு?” “தப்பு இருக்கு” “என்ன தப்பு?  […] - [உன் நிழல் நான் தொடep 11](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9fep-11/): அத்தியாயம் 11 ரத்னாவின் அழகான மாற்றத்தைப் பார்த்த அனைவரும் வியந்திருக்க, ஜஸ்வந்திற்கு மட்டும் இந்த மாற்றம் அஜீத் மூலம் நடந்தது துளியும் பிடிக்கவில்லை. ஜஸ்வந்தைத் தவிர ஆர்த்தியின் இரு விழிகள் ரத்னாவை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை. ஆர்த்திக்குச் சிறுவயது முதல் ‘தான் மட்டுமே’ என்ற எண்ணம் அதிகம். ஆண் குழந்தை என்பதால் அஜீத்திடமும், கடைசிக் குழந்தை என்பதால் அர்ச்சனாவிடமும் தன் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதாக நினைப்பைத் தன்னுள் வளர்த்துக்கொண்ட ஆர்த்திக்கு, இருவரையும் பிடிப்பதில்லை.  அனைவரையும் விடத் தான் சிறந்தவள் என்று நிரூபித்து மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதில் மட்டுமே ஆர்த்திக்கு மகிழ்ச்சி. அதற்கான சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்வாள். அவளின் அதிர்ஷ்டம் இதுவரை யாரும் இந்த குணத்தைக் கண்டுகொண்டதில்லை. தந்தையின் சொல் கேட்டு நடக்கும் பிரியமான பெண்ணாக இருக்க பல வருடம் கஷ்டப்பட, அதைச் சமீபகாலமாக அஜீத் தட்டிப்பறித்துவிட்டதாக உணர்ந்தாள். மேலும் அர்ச்சனா குறும்புத்தனம் செய்தாலும் படிப்பில் கவனம் அதிகம். […] - [உன் நிழல் நான் தொட ep 12 (1)](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-121/): அத்தியாயம் 12(1)  தங்கமுத்து – ஆர்த்தி திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், ஆர்த்தி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கணவரிடம் அஜீத்தைப் பற்றித் தவறான எண்ணத்தை விதைக்கத் தவறவில்லை.  அஜீத் எப்போது தன் வாயால் ‘நான் உன்ன எப்போவும் மிஸ் பண்ண மாட்டேன்’ என்று சொன்னானோ, அப்போதே ஆர்த்தி முடிவு செய்துவிட்டாள்; ரத்னா அஜீத்தின் வாழ்க்கையில் இருக்கக்கூடாது என்று. தலை தீபாவளிக்குத் தங்கமுத்து, ஆர்த்தி கோவை வருவதால் ரத்னாவும் இந்த வருடம் கோவையிலேயே இருப்பதாகத் தன் பெற்றோரிடம் கூறிவிட்டாள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாகவே இருவரும் வந்துவிட, ரத்னா புத்தகத்தைத் தூக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது என்பதால் அண்ணனுடன் ஒட்டிக்கொண்டே திரிய, அதைப் பொறுக்க முடியாத ஆர்த்தி ரத்னாவைத் தனியே அழைத்துச் சென்று,  “உனக்கு அறிவே கிடையாதா? நானும் கல்யாணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். நீ எப்போ பார்த்தாலும் ஏதாவது ஆம்பளை கூட […] - [அத்தியாயம் -1](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/):   அழகிய இளங்காலை பொழுது. நீண்ட கடற்கரை சாலையை ஒட்டிப் போடப்பட்டிருந்த நடைபாதையில் தந்தையும் மகனும் ஓடிக்கொண்டிருந்தனர்.   ஆங்காங்கே வெள்ளிக்கம்பிகளைப் போல் நீட்டிக் கொண்டிருந்த நரை‌முடி மட்டும் ருத்ரனுக்கு இல்லாவிட்டால் இருவரையும் அண்ணன் தம்பி‌ என்றே அழைக்கலாம்.  இருவரும் ஒரே உயரம் , அலையலையான கேசம், கட்டுமஸ்தான உடற்கட்டு , இறுகிய தாடையுடன் அமைந்த கம்பீரமான முகவெட்டு,   நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்ததினால்  இருவரும் வியர்வையில் குளித்திருந்தனர். ஆர்ம்கட் பனியன் அணிந்திருந்ததால் புஜங்களின் தசைக்கோளங்கள் திமிறிக் கொண்டிருந்தது. “ ஊப்…” என முழங்காலில் கையை ஊன்றி  நிதானித்தான் ஆதவ் ஆத்ரேயன். “ என்னடா..அதுக்குள்ள டயர்டாகிட்டியா?” என்றபடி அவனது தோளைத் தட்டினான் ருத்ரேந்திரன். ( தள்ளிக் தள்ளி நீ இருந்தால் கதையோட ஹீரோ தாங்க). “ இதெல்லாம் ஓவரா தெரியலையா உங்களுக்கு?  பிரேக்கேயில்லாம ஒரு மணி நேரமா ஜாக் பண்ணிட்டு இருக்கோம்.  தண்ணி வேணும் டாட்…பேக் எங்க? “ என்றபடி ஷார்ட்ஸில் […] - [Ep 28](https://storybypm.com/ep-28/): அத்தியாயம் 28   பூசாரிக்கோ பிருந்தாவை பார்க்கவே பாவமாக இருந்தது.  “தம்பி இங்க தாலி எதுவும் இல்லப்பா” என்றார் தடுமாறிய படி, அவனோ, “இஸ் இட்?” என்றவன், “தென் வாட் இஸ் தெட்?” என்றான் அங்கே ஓரமாக பூஜை தட்டில் வைத்திருந்த மஞ்சள் கயிறை சுட்டிக் காட்டியபடி. பூசாரியோ திடுக்கிட்டு போய் அதைப் பார்த்தவர், “அது… அது அம்மனுக்கு சாத்தி வைக்குற மஞ்சள் கயிறுப்பா…” என்றார் தயக்கத்துடன். அவனோ, “குட். அப்போ அதையே எடுத்துட்டு வாங்க.” என்றான் கறாராக. பிருந்தாவோ “வேண்டாம் ப்ளீஸ்… தயவு செஞ்சு அவர் சொன்னதை பண்ணாதீங்க” என்று பூசாரியிடம் கத்த, சிம்மனுக்கோ இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்தது. அவளை பிடித்து தன்னிடம் இழுத்தவன், அவள் நாடியை அழுத்திப் பற்றிய படி, “இப்போ நீ மட்டும் உன் வாய மூடிட்டு அமைதியா இருக்கல்ல, இதை அடக்குறதுக்கு நான் வேற மாதிரி நடந்துக்க வேண்டி இருக்கும் பிருந்தா. டூ யூ […] - [காதல் 10](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ‘மட்டி’ என தன் தலையில் தட்டிக்கொண்டு வெட்கிய யாழினி சிரித்துக்கொண்டே உணவை உட்கொள்ள ஆரம்பித்தாள். சற்று முன்பு வேம்பை விடக் கசப்பாக தெரிந்த உணவு இப்போது தேனை விட தித்தித்திப்பாய் இருந்தது. தனக்குள் அதிரடியாய் நிகழும் மாற்றத்தை எண்ணி வியந்த பெண்ணவள்,அதனை மாற்றவும் முயலவில்லை. ஏனெனில்,அவளிற்கும் இவையெல்லாம் பிடித்திருக்கிறதே? அதனால் ஒரு மென்புன்னகையுடனே தனலட்சுமி தனக்காக சமைத்துக்கொடுத்த உணவை உண்டப்படி அவனை ஏறிட்டு நோக்கினாள். ஒற்றை காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை சுவற்றில் வைத்து சாய்ந்து நின்று மழையை ரசித்து பார்த்திருந்தான் அவன். சிகையை அழுந்தக்கோதிப்படி நின்றவனின் இதழில் முறுவல் மட்டும் மறையாமல் இருந்தது‌. அவளும் உணவை உண்டு முடித்துவிட்டு வெளியே வந்தாள். மழையை ரசித்திருந்த சரவணனின் அருகே வந்து நின்றவளிற்கு சட்டென அவனிடம் பேச வரவில்லை. அவனிற்கும் அதே நிலை தானோ என்னவோ? அவனும் அவளை திரும்பி ஏறிடாமல் மழையையே இமைக்காமல் பார்த்திருந்தான். துளி துளியாய் மண்ணில் வந்து விழுந்துக்கொண்டிருந்த […] - [உன் நிழல் நான் தொட ep 10](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-10/): அத்தியாயம் 10 (1) ஜூலை 17 இரவு 12 மணி நடு இரவில் தன் அருகில் இருந்த போன் அலற, தூக்க கலக்கத்தில் போனை எடுத்த ரத்னா, யார் என்று பார்க்காமல் எடுத்து காதில் வைக்க, மறுமுனையில் ஸ்டெல்லா, “Happy Birthday my sweet heart.” தோழியின் பிறந்த நாள் வாழ்த்தை கவனிக்காமல் தூக்க கலக்கத்தில் “ம்ம்” என்று கூறிவிட்டு தூக்கத்தை தொடர, பதில் இல்லாமல் போனதை கவனித்த ஸ்டெல்லா, ரத்னா ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை புரிந்துகொண்டு அழைப்பைத் துண்டிக்க, அதற்காகவே காத்திருந்தது போல ரத்னாவின் போன் மீண்டும் அலற, இம்முறை தூக்கம் முழுவதும் கலைந்த ரத்னா யார் என்று பார்க்க, அதில் பிரபுவின் பெயர் ஒளிர்வதை பார்த்து,  “எரும மாடு, உனக்கு போன் பண்றதுக்கு வேற நேரம் கிடைக்கலை. பேய் வாக்கிங் போற நேரத்துல எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்க லூசு. நீ என் கையில் மட்டும் கிடைச்ச…” போனை எடுத்து […] - [உன் நிழல் நான் தொட ep 9](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-9/): அத்தியாயம் 9 அடுத்த நாள் அஜீத்திடம் மன்னிப்புக் கேட்டு, மறுத்த அஜீத்தை அழைத்துக்கொண்டு சென்று உடைந்த போன் மாதிரி ஒன்றையே வாங்கிக் கொடுத்துவிட்டாள். தனக்கானதைத் தேர்வு செய்யச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் வந்த அஜீத், “ரத்னா, உனக்கு அதுக்கப்புறம் எந்தப் பிரச்சினையும் இல்லையே?” “என்ன பிரச்சினை? ஜஸ்வந்த் பத்திச் சொல்றியா? நான் அதை அப்பவே மறந்துட்டேன்.” “நீ மறந்துட்ட, ஆனா ஜஸ்வந்த் இதை மறந்து இருக்கணுமே.” “அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. சரி அதை விடு, இந்த போன் எப்படி இருக்கு?” ரத்னா எடுத்த பட்டன் போனைப் பார்த்து, “இந்த போனா? வேற ஏதாவது நல்ல போனா எடு.” “இந்த போன்லதான் எனக்குப் பிடிச்ச கேம் இருக்கும். அதான் நான் இதையே எடுத்துக்கிறேன்.” “புது போன் வாங்கி யாராவது கேம் விளையாடுவாங்களா?” “நான் விளையாடுவேன்.” “இந்த போன் வாங்கு. அதுல வேணும்னா உனக்குப் புடிச்ச மாதிரி நிறைய கேம் டவுன்லோட் […] - [உன் நிழல் நான் தொட ep 8](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-8/): அத்தியாயம் 8   ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  கடந்த ஆறு வருடங்களில் ரத்னா தன் விளையாட்டுத் தோழனாக இருந்த ஜஸ்வந்தை மறக்கவில்லை. அதே சமயம் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டும் இருக்கவில்லை. ரூபாவின் நினைவு வரும்போதெல்லாம் ஜஸ்வந்தின் நினைவும் வந்து போகும். அதற்கு மேல் ரத்னா யோசித்துப் பார்த்ததில்லை. திடீரென்று தன்னை காதலிப்பதாக அவன் கூறவும், அவளது மூளையே செயலற்றுப் போனது. ரத்னாவின் பதிலுக்காகக் காத்திருந்த ஜஸ்வந்த், அவளது உணர்ச்சியற்ற வெளிறிய முகத்தைப் பார்த்துப் பயந்தான். பயத்தில் இருந்த ரத்னாவைச் சமாதானப்படுத்தும் முன், ரத்னா கையில் இருந்த அஜீத்தின் போன் ஒலித்தது.  அந்த ஓசையில் சுய உணர்வு பெற்ற ரத்னா, ‘இது யாராக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டிருக்க, போன் எழுப்பிய இசையில் ரத்னாவிடம் வந்த அஜீத், அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்து ஏதோ […] - [உன் நிழல் நான் தொட ep 7](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-7/): அத்தியாயம் 7   அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது. மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் ரத்னாவிடம் வர, ரத்னா ஸ்டெல்லாவைப் பார்த்து, “ஸ்டெல்லா, இன்னைலிருந்து இவங்க ரெண்டு பேரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ், ஓகே?” என்று இருவரையும் ஸ்டெல்லாவுடன் நண்பர்களாக்கினாள். சுற்றி வளைக்காமல் அஜீத் நேரடியாக ரத்னாவிடம், “ஜஸ்வந்த் யாரு?” என்று கேட்டான்.  ரத்னா ஜஸ்வந்த் பற்றி விரிவாகக் கூறிய பின்பு, தனக்கும் பிரபுவிற்கும் ஜஸ்வந்த் மீது ஏற்பட்ட சந்தேகத்தைப் பற்றி அஜீத் கூறினான்.  “ரத்னா, நான் உன்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறதா தப்பா நினைக்காதே, உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன்” என்றான். தன் நன்மையைக் கருதி அஜீத் பேசுவதைப் புரிந்துகொண்ட ரத்னா, “ஓகே, நான் ஜஸ்வந்தை பார்க்க இன்னைக்கு போகல. 20 நாளுக்கு அப்புறம் ஜஸ்வந்த் சொன்னால் சொல்லட்டும், இல்லாட்டி எப்படியும் எங்க அக்கா […] - [காதல் 9](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): யாழினியின் அந்த வார்த்தைகள், நேராகத் தன் முகத்தில் வந்து அறைந்ததைப் போலிருந்தது சரவணனுக்கு. “அதை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…”அவள் உதிர்த்த அந்த ஒற்றை வாக்கியம், கணப்பொழுதில் சரவணனின் முகபாவனையை முற்றிலும் இறுகச் செய்தது. சில நொடிகள் அவளையே தன் தீர்க்கமான விழிகளால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன், மெதுவாக தன் பார்வையைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டான். அவன் கேட்ட கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாக அவனிற்கு தோன்றவில்லை. அவளின் மேல் அவன் கொண்ட அக்கறையின் வெளிப்பாடு தான் அது! ஆனால் அதற்கு அவள் பதிலளித்த விதம்,அவனிற்குள் இருந்த சுயமரியாதையை சரியாக தூண்டிவிட்டிருந்தன. ‘அம்மா பேச்சை கேட்டு நான் இவ்வளவு தூரம் வந்ததே தப்பு’ என வெடுக்கென்று எழுந்து நின்றவன் “நான் வெளிய இருக்கேன்…நீங்க பாக்ஸை கழுவி எடுத்திட்டு வந்து கொடுத்திடுங்க” என இறுகிய குரலில் கூறியப்படி வெளியேற ஆயுத்தமானான். அவனது குரலின் வழியே வெளிப்பட்ட அழுத்தம் பாவையவளின் உள்ளத்தைத் தடுமாற […] - [Ep 27](https://storybypm.com/ep-27/): அத்தியாயம் 27 இரவு… அந்த குளிர்ந்த காற்று அவன் வெற்று தேகத்தில் படர்ந்து ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்க, கையில் எரிந்து கொண்டிருந்த சிகரட்டை புகைத்த படியே நின்றிருந்தான் சிம்மன்.  மனதுக்குள்ளே பல எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. அவன் விழிகளோ வெறுமையாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாலும், அவன் மனம் முழுக்க சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திலேயே நிலைத்திருந்தது. தான் செய்தது சரியா? தவறா? அவன் வாழ்நாளில் முதல் முறையாக அந்த கேள்வி தோன்றியது. ஆனால், அந்நொடி அவனுக்கு எது சரியென்று பட்டதோ அதை தான் செய்திருந்தான். அவனை பொறுத்த வரையில் அவள் மனதை மாற்ற இதை தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. பெண்ணவளின் எண்ணங்களில் மொத்தமாக தன்னை மறந்து போய் இருந்தவன், கையில் இருந்த சிகரட்டை மேலும் உதித் தள்ளிய படி இருக்க, அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக அவனின் அலைபேசி அலறியது. அதில் […] - [எபிலாக்](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-11/): பத்து வருடத்திற்கு பிறகு, மித்ரன் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் இத்திட்டத்தினால் பயன்பெற்று,இந்தியாவிலே வேலையில்லாத இளைஞர்களின்றி ஒரு புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளது.மேலும் உலக பொருளாதார பட்டியலில் யாரும் எதிர்ப்பாராத வகையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அடங்கிய சபையே இந்தியாவின் முன்னேற்றத்தை ஒரு பிரமிப்புடன் பார்த்தது.கடந்த பத்து வருடங்களாக உலக தலைவர்களிடமிருந்து அதற்கெல்லாம் காரணமான மித்ரனைப் பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. மித்ரன் அத்தோடு மட்டும் விடாமல் இந்தியாவில் தொழில் துறையில் வளர்ச்சி காணும் வகையில் மேலும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினான். அதன் முதல்படியாக தொழில் மயமாக்குதல் திட்டத்தை அறிவித்தான். தொழில் புரட்சி ஏற்படாத இந்தியாவில் தொழில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தொழில் மயமாக்குதலின் நோக்கமாகும். விவசாயத்தையே நம்பிகொண்டிருந்த நம் நாட்டில் தொழில்களை விரிவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய பொருளாதாரக் கொள்கை திட்டமிடப்பட்டது. தொழில் வளர்ச்சி அதிகமாதல், தன்னிரைவு, பொருளாதார […] - [எனக்கானவ(ள்)ன் 30](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-30/): “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்” (பொழிப்பு: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்) மித்ரனை கொலைச்செய்யுமளவு துணிந்து,மற்றவரின் சுயநலத்திற்காக அம்பாக எய்தப்பட்டவன் வேறு யாருமில்லை விபான்சீயை ஒருதலையாக காதல் செய்து அவளை பெண் கேட்டு வந்த திரைப்பட நடிகர் கோகுல் சந்திரன். அவனிடம் எதற்காக இவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு,அவனோ ‘உன்னால் தான் விபு இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாள்…அவளின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து அவளின் வாழ்க்கையை அழித்துவிட்டு நீ மட்டும் மகிழ்ச்சியாக இருப்பாயா…??அதனால் தான் உன்னை கொல்ல துணிந்தேன்…’ என மித்ரனின் மீது பழிசுமத்தி ஆவேசமாக பேசியவன்,விபுவின் மீது அவன் வைத்திருக்கும் காதலை மித்ரனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இத்தனை நாட்கள் விடுத்து இப்போது எதற்காக என்னை கொல்ல வந்தாய் என கேள்விக்கேட்ட மித்ரனுக்கு முதலில் சரியாக பதில் கூறாமல் வீம்புடன் இருந்த கோகுல்,மித்ரன் விபான்சீக்கும் தனக்குமான காதலைப் பற்றி […] - [எனக்கானவ(ள்)ன் 29](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-29/): “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்”(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:71) பொழிப்பு: அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். கட்சியின் தலைவர் காரில் ஏறி சென்றவுடன்,அனைவரும் நடந்து முடிந்த நிகழ்ச்சியினால் ஒரு இறுக்கமான சூழ்நிலையோடு இருக்க,அதைக்கண்ட மித்ரன் ஒலிவாங்கியை கையில் எடுத்து “எல்லாரும் உங்களுடைய பணியில் எந்தளவு பிஸி என்பது எனக்கு தெரியும்…ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னுடைய அழைப்பிற்கிணங்கி இங்கு வருகை புரிந்து இவ்வரவேற்பு விழாவை சிறப்பித்து தந்த அனைவருக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள்…மேலும் இங்கே நடந்த தவறினால் உங்களின் மகிழ்ச்சி பாதியில் கெடவேண்டாம்…அனைவரும் நடந்து முடிந்ததை மறந்துவிட்டு மகிழ்ச்சியோடு பார்ட்டியை அனுபவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…மீண்டும் ஒரு முறை இங்கு எதிர்ப்பாராமல் நடந்த தவறிற்கு உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்…” என்று உறுதியான அதே சமயம் சற்று தாழ்மையுடன் பேசியவனைக் கண்டு சற்று இறுக்கம் தளர்ந்து அனைவரும் விட்ட இடத்திலிருந்து தங்களது பார்ட்டியைத் […] - [எனக்கானவ(ள்)ன் 28](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-28/): இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:41) பொழிப்பு:இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். பர்வதவர்த்தினி மேடையில் பாடல் பாடி முடிப்பதற்கும்,அந்த இடத்தினுள் அவளது குடும்பத்தினர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.அனைவரது பாராட்டு மழையில் நனைந்துக்கொண்டிருந்தவள் முதலில் தன் குடும்பத்தினரை கவனிக்கவில்லை.ஆனால் மனைவிக்கு இனிய அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை வரவழைத்திருந்த அசோக மித்ரன் எளிதில்  கண்டுக்கொண்டான். மித்ரன் ராமை தன்னருகே அழைத்து,அவர்களை மேடைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட,தமையன் சொல்லை தட்டாத சகோதரனாக உடனே அவர்களை அழைத்து வந்தான். மேடை ஏறும் போது மகளின் முகத்தில் இருந்த எல்லையற்ற மகிழ்ச்சியும், இதுவரை வாய் விட்டு சிரித்திராத தனது மகள் இதழ்பிரித்து பற்கள் பளீரிட சிரிப்பதையும்,மகளின் தோற்றத்தில் இருந்த மாற்றமும்,இவையெல்லாம் யாரால் நிகழ்ந்திருக்க கூடும் என்பதை அறிந்த செல்லியப்பன் விழிகள் கசிய தனது மருமகனைக் கண்டு இரு கரம் கூப்பி […] - [எனக்கானவ(ள்)ன் 27](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-27/): “கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள”(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1101) (பொழிப்பு : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன) வரவேற்பிற்கென தயாராகிய மித்ரன் கடைசியாக கழுத்துப்பட்டையைக் கட்டியவாறு “சாக்கோ பேபி ரெடியா…??வா போகலாம்” என்று சாதாரணமாக கேட்டுக்கொண்டே நிமிர,தன் முன் நின்றிருந்த மனைவியின் தோற்றத்திலும் அழகிலும் அப்படியே ஸ்தம்பித்து போனான். ஏனெனில் மித்ரன் அவளுக்கென தேர்ந்தெடுத்த சிவப்பு நிற பட்டு புடவையில் தங்க நிறத்திலான சரிகை இழையோட ஒப்பானையாளர்களின் கைவரிசையில் உடலோடு ஒட்டி நேர்த்தியாக அணிவித்திருக்க,அதற்கு ஒத்துப்போகும் வகையில் தங்கத்தினலான அணிகலன்களுடன்,முகத்தில் இலேசான ஒப்பனை கலந்து இதழில் தனது வழக்கமான புன்சிரிப்புடன் அழகு பதுமையாக இருந்த மனைவியின் அழகைக் கண்டு வியந்துப்போனான். அவளின் அழகைக் கண்டு வியந்துப்போனவன் அவளின் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் உலகம் மறந்து காட்சிகள் மறந்து தன்னை மறந்து சிலையாய் நின்றான். அதற்கு […] - [எனக்கானவ(ள்)ன் 26](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-26/): “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து”(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1127) (பொழிப்பு: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்) மித்ரனின் மீதுள்ள பயத்தில் சீதா இப்போதெல்லாம் முன்பு போல் பர்வதவர்த்தினியை வேலை வாங்குவதில்லை.அவ்வளவு ஏன் வர்த்தினியை ஒரு மனிதப்பிறவியாக கூட நினைத்து பேசுவதில்லை. இத்தனை நாட்களாக வேலை வாங்குவதற்காகவது தன்னிடம் அதிகாரம் செய்து பேசிக்கொண்டிருந்த ஓரகத்தி,தனது கொழுந்தன் அவளை திட்டியதற்கு பிறகு தன்னிடம் பேசாததினால் அதற்கும் கவலையில் ஆழ்ந்தாள் பர்வதவர்த்தினி. இருந்தும் அவளை முழுவதும் கவலையில் ஆழ்த்தாமல் நேரத்தை களவாடிக் கொண்டான் மித்ரனின் வளர்ப்பு மகனான விஜூஸ்ரவன்.ஆரம்பத்தில் மித்ரன்  குழந்தை விஜூ,பர்வதவர்த்தினியிடம் ஒட்டாமல் போயிடுவனோ என அச்சம் இலேசாக இருந்தது.ஆனால் நாளுக்கு நாள் அவனது அச்சம் அவசியமற்றது என்பது போல் விஜூ பாருவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். சுருங்கக்கூறினால் மித்ரனை விட பாருவிடம் விஜூ நன்றாக ஒட்டிக்கொண்டான். மித்ரன் முதலில் விஜூக்குட்டியை […] - [எனக்கானவ(ள்)ன் 25](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-25/): “தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி”(அதிகாரம்: தனிப்படர்மிகுதி குறள் எண்: 1191) (பொழிப்பு :தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்) மித்ரன் தூங்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இரவு பத்து மணிக்கு தன் வீட்டிற்கு வர,அந்நேரம் வரவேற்பறையில் யாருமின்றி பெருத்த நிசப்தமாக இருந்தது. மித்ரன் இந்நேரம் வீட்டிற்கு வருவான் என்று தெரியாததினால்,அனைவரும் உணவருந்திவிட்டு உறங்கச்சென்றிருந்தனர்.இரண்டு நாட்களாக பசிமறந்து உறக்கம் தொலைந்து அவனிடம் உண்மை வாங்குவது ஒன்றே இலக்கு என்று இருந்தவனுக்கு இன்று மனைவியின் கையினால் பரிமாறி சாப்பிட வேண்டும் என்ற பேராவல் தோன்றியது. அன்று முதன்முறையாக அவளின் வீட்டிற்கு சென்றிருக்கும் போது,அவளின் கையினால் சமைத்த சாப்பிட்ட உணவு அமிர்தமாக இருக்க,இத்தனை நாட்களாக இந்த அமிர்தத்தையா வேண்டாம் என்றேன் என மனம் வருந்தியவனுக்கு, முதன்முறையாக அவளின் கையினால் சமைத்து சாப்பிட்ட உணவு கசந்ததிற்கும்,அன்று ரசித்து ருசித்து புசித்ததற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் […] - [எனக்கானவ(ள்)ன் 24](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-24/): “அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்”(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:203) (பொழிப்பு : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்)     தனிமை சூழ்ந்த உணர்வில் வீட்டை தனது மிரண்ட விழிகளால் வலம் வந்தவளின் பார்வை ஓரிடத்தில் நிலைக்குத்தி நின்றது. அவளின் நிலைக்குத்திய பார்வையில் விழுந்தது ஒரு அழகான இளம் பெண்ணின் புகைப்படம்.அழகு பதுமையான இருந்த அப்பெண்ணின் அழகு அவளை சுண்டியிழுக்க,அவளின் கால்கள் தன்னை அறியாமல் அவ்விடம் நோக்கி நகர்ந்தது. நெற்றியில் சிவந்த குங்குமம் பளபளக்க,கழுத்தில் புதுதாலி மின்ன,சிவந்த இதழில் உறைந்த புன்னகையுடன்,மஞ்சள் நிற புடவையில் சந்தன நிற அழகு பதுமையான இருந்தவள் யாராக இருக்கும் என்பது பர்வதவர்த்தினியின் எளிதில் புரியாத சிறு மூளைக்கு கூட புரிந்தது. அது புரிந்ததோடு மட்டுமின்றி கூடவே அவளின் மறைந்திருந்த தாழ்வுணர்ச்சியும் அதிகரித்தது. இவ்வளவு அழகாக இருக்கும் அவரின் முதல் மனைவிக்கு முன் நான் ஒரு போதும் […] - [எனக்கானவ(ள்)ன் 23](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-23/): தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:201) பொழிப்பு : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். சில மணி நேரங்களுக்கு முன்பு,தெரியாத புது எண்ணிலிருந்து மித்ரனுக்கு வந்த அழைப்பில் “நான் **** பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து பேசுகிறேன்…கொஞ்சம் சீக்கிரம் இங்க வரமுடியுமா…?இங்க ஒரு பொண்ணு பாதி மயங்கிய நிலையில் இருக்காங்க…மத்த விசயமெல்லாம் நேரில் பேசிக்கலாம்…ரூம் நம்பர் 140 மறந்திடாதீங்க சார்…!!” என்று ஒரு இளம் பெண் படபடவென்று பேசி மித்ரனின் பதிலை எதிர்ப்பாராமல் அழைப்பை துண்டித்துவிட்டாள். மகிஷா பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனுக்கு ஒரு வேளை அவளாக இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற உடனே மனதில் எழுந்த பதட்டத்தோடு யாரிடமும் கூறாமல் கிளம்பிவிட்டான். நேரே அந்த அறையை அடைந்த மித்ரன் கதவை தட்ட அந்த விடுதியில் பணிச்செய்யும் ஒரு இளம் பெண் வந்து கதவை திறக்க,அவன் என்னவென்று உணரும் […] - [எனக்கானவ(ள்)ன் 22](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-22/): “பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்”(அதிகாரம்:பேதைமை குறள் எண்:836) பொருள் :ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். தலைமை நிரூபர் கூறியது போன்று அசோக மித்ரனுக்கு தெரியாமல் இரகசியமாக அவனை பின்தொடர்ந்து,அவனைப் பற்றி தவறாக காட்டக்கூடிய வகையில் சில முக்கிய ஆவணங்களை சேகரித்தாள் மகிஷா. இவையனைத்தையும் நிரூபன் கூறியது போன்று காட்சிகளை சித்தரித்து அதனை தாங்கள் கொண்டு வந்து புகைப்பட கருவியில் நிழற்படமாகவும் ஒளிப்பதிவாகவும் தொகுத்து எடுத்துக்கொண்டாள். அசோக மித்ரன் தன்னுடைய நலம் விரும்பி மற்றும் உற்ற தோழன் என்று இதுவரை யாரிடமும் மகிஷா வெளிப்படையாக காட்டிக்கொண்டதில்லை. அவள் தாம் சேகரித்த காட்சிகளை நிரூபரிடம் ஒப்படைக்க,அவரோ அதை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாமல் அப்படியே வைத்துக்கொண்டார்.அதை கண்டவளின் புருவங்கள் யோசனையில் நெறிந்தது. ‘சரி என்ன தான் பண்ணறாங்கனு பார்க்கலாம்’ என பொறுமையாக இருக்க ஆரம்பித்தாள்.அப்போதும் நிரூபரின் மீது ஒரு […] - [எனக்கானவள்(ன்) 21](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-21/): “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்”(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:271) பொழிப்பு : வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும் சென்னையில் ஒரு பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒன்றான மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இன் ஜி டி ஏ ஜி பட்டப்படிப்பில் கடைசி வருடம் திரள்மக்கள் செய்தித்தொடர்பு படிப்பு ஒன்றை படித்துக்கொண்டிருந்தாள் மகிஷாசுரமர்த்தினி. பதினெட்டு வயது வரை செல்வசீமாட்டியாக வளர்ந்த மகிஷாசுரமர்த்தினிக்கு,தந்தையை இழந்தப்பிறகு தான் வறுமை என்றால் என்னவென்று தெரிய வந்தது. அவளின் தந்தை இதுவரை செய்து வந்த வியாபாரங்கள் அனைத்தும் நஷ்டமடைந்து,கடன் தொல்லை அதிகரித்ததால்,செல்வந்தராக வலம் வந்த அவ்வூரில் பிச்சைக்காரனாக வலம் வருவதில் மனமில்லை என்பதால் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தகப்பனின் இழப்பே பெரும் அதிர்ச்சியாக இருக்கும் போது,சொத்துக்கள் அனைத்தும் இனி தங்களுக்கு சொந்தமில்லை என்ற தெரிந்ததில் முற்றிலும் இடிந்துப்போனாள் மகிஷாசுரமர்த்தினி. இப்போது தான் தனது கூட்டுக்குள் இருந்து […] - [எனக்கானவள்(ன்) 20](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-20/): “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43) பொழிப்பு : தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்) பர்வதவர்த்தினியின் தந்தை வீட்டையடைந்த மித்ரனுக்கும் பர்வதவர்த்தினிக்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. செல்லியப்பன் வாசலுக்கே வந்து தனது மருமகனையும் மகளையும் வணங்கி வரவேற்று பக்கத்து வீட்டு பெண்மணியை ஆராத்தி சுற்றழைக்க மித்ரன் தனது மனைவியை ஒரு பார்வைப் பார்த்தவாறு “மாமா இந்த சம்பிரதாயமெல்லாம் எதுக்கு…??எப்போ நான் உங்க பொண்ணு கழுத்திலே தாலிக்கட்டினனோ…அப்போதிலிருந்து நீங்களும் என்னோட குடும்பத்தில் ஒருத்தர் தான்…அதனால் இந்த மாதிரியெல்லாம் செய்து என்னை அந்நியப்படுத்தாதீங்க” என வருத்தம் கலந்த குரலில் கூறினாலும் அதில் இருந்த உறுதி செல்லியப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இருந்தாலும் மருமகனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பதில் அவர் உறுதியாக இருந்ததால் “பரவாயில்ல தம்பி…பெரியவங்க காரணமில்லாமல் எதுவும் செய்யறதில்லிங்க…கண்ணாலம் கட்டிக்கிட்டு முத முத வூட்டு வர மருமவனை இப்படி தான் […] - [எனக்கானவள்(ன்) 19](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-19/): “சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை”(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:57) (பொருள் :மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது) காலையில் கண்விழித்த மித்ரன் சோம்பல் முறித்தப்படி எழுந்து குளியலறை சென்று உடலை சுத்தம் செய்து விட்டு ஆசனம் செய்வதற்கென இருந்த தனியறையில் தனிமையில் அமர்ந்து எந்த வித இடற்பாடுமின்றி கண்களை மூடி தியானம் செய்தான். மித்ரன் ஆசனம் செய்யும் போது மனதில் இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் விடுப்பட்டு சென்று ஒரு அமைதியைக் கொடுக்கும்.அதனால் வேறு எந்த வித எண்ணங்களும் மூளையில் ஓடாமல் ஒரு தூய்மையான வெள்ளை காகிதகமாக இருக்கும். விபான்சீயின் நினைவுகளிலிருந்தும் குடிப்பழக்கத்திலிருந்தும் விரைவில் விடுப்பட்டு வெளிவருவதற்கு இவை தான் பெரிதும் உதவியது.இன்றும் அதேப்போல் கண்களை மூடி தியானம் செய்துக்கொண்டிருந்தவனின் கவனத்தை களைப்பது போல் ஒரு உருவம் அவனின் கண்முன் தோன்றி  உடனே […] - [எனக்கானவ(ள்)ன் 18](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-18/): “மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:51) (பொழிப்பு :இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்) இளங்காலை பொழுதில் கிழக்கு வானிலிருந்து சூரியன் உதயமாகிக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டின் பூஜையறையிலிருந்து தேனினும் இனிய ஒரு மெல்லிசை கசிந்து வந்துக்கொண்டிருந்தது. இரவு தாமதமாக உறங்கியதால் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மித்ரனின் செவியில் குயில் கூவுவது போல் கேட்ட குரலசையினால் மெல்ல தனது உறக்கம் கலைந்து படுக்கையில் புரண்டான் அசோக மித்ரன். “பச்சை மயில் வாஹனனேசிவ பாலசுப்ரமணியனே வாஎன் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் எள்ளளவும் பயமில்லயே” என்று தொடர்ந்து செவியில் ஒலித்த குரலோசையை நம்ப முடியாமல் விலுக்கென்று எழுந்து அமர்ந்தான் மித்ரன். அதற்குள் கீழிருந்து, “கொஞ்சும் மொழியானாலும் – உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்தப்பா” அந்த குரலில் லயித்துப்போனவனுக்கு ‘இ…இந்த குரல்…எனக்கு பழக்கப்பட்டக்குரலாயிற்றே’ என்று நெஞ்சம் […] - [எனக்கானவள்(ன்) 17](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-17/): நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக்கொண்டிருந்தது.மித்ரனுக்கும் பர்வதவர்த்தினுக்கு திருமணம் முடிந்து இன்றோடு இரண்டு வாரம் முடிவடைந்திருந்தது. அன்றைய தினத்திற்கு பிறகு பர்வதவர்த்தினி சமையலறைக்கு சென்று சமைப்பதை நிறுத்திவிட்டாள்.ஆனால் வீட்டிலுள்ள மற்ற வேலைகள் அனைத்தையும் தனது அதிக உடல் பருமனால் குனிந்து நிமிர்ந்து செய்ய முடியவில்லை என்றாலும் ஒன்று விடாமல் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். மித்ரனும் வீட்டில் மனைவி என்ற ஒருத்தி இருக்கிறாள் என்ற சிந்தனையே இல்லாமல் எப்போதும் வேலையாக வெளியே சுற்றிக்கொண்டிருந்தான். உணவருந்தும் சில சமயங்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து சாப்பிடுவான்.அப்போதும் பர்வதவர்த்தினி அவன் கண்களில் படாமல் தோட்டத்தில் சென்று முடங்கிவிடுவாள். மித்ரனும் வேலை பளுவினால் சரியாக சாப்பிடாமல் இருக்க,இங்கே பர்வதவர்த்தினியோ சில நேரங்களில் வீட்டு வேலையாட்களுக்கு என சமைக்கும் உணவை உண்டுக்கொண்டு,பல நேரங்களில் உணவை பற்றிய சிந்தனை ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்தாள். எந்நேரமும் சோகம் சுமந்த கலங்கிய விழிகளோடு,நெஞ்சம் பாறாங்கல்லாய் கனக்க,உடல் சோர்ந்தப்போய் ஒரு சோக சித்திரமாய் வலம் வந்தாள். அவள் தனது வருங்கால […] - [எனக்கானவ(ள்)ன் 16](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-16/): “அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்”(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1098) (பொழிப்பு: யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது) விபான்சீயின் நினைவை தவிர்க்க எண்ணி வீட்டிலிருந்து வெளியே சென்ற அசோக மித்ரன் நேரே தன்னால் கடத்தி வரப்பட்ட அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்களை சந்திக்க தனது அரிசி ஆலைக்கு சென்றான். அங்கே கட்டிவைத்திருந்த ஆட்களின் முன் உள்ள சுவற்றில் சாய்ந்து நின்ற மித்ரன் அங்கிருந்த அனைவரையும் கூர் அம்புகளாய் விழிகள் கொண்டு பார்வையாலே அவர்களின் தேகத்தை குத்திக்கிழிக்க,அதில் அனைவரின் முதுகுதண்டவடம் சில்லிட்டது. அவர்களை பார்வையாலே மிரள செய்த மித்ரன் தனது சட்டை பையினுள் கைவிட்டு சிகரெட் பெட்டியை எடுத்து,அதிலிருந்து ஒற்றை சிகரெட்டை தனது வலிய அதரங்களுக்கு இடையில் சொருகிவிட்டு,குனிந்து தீ மூட்டி கொண்டு சிகரெட்டை பற்ற வைத்து,அவர்களை அடி கண்ணால் நோக்கி ‘வேணுமா…??’ என்பது போல் ஒற்றை புருவத்தை […] - [உன் நிழல் நான் தொட ep 6](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-6/): அத்தியாயம் 6 ஜஸ்வந்தைப் பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தன. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காகச் சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து, சிறு செல்லச் சண்டைகளும் செல்லக் கோபங்களுமாக ஏதோ ஒரு மாய உலகில் இருப்பதாகவே அவனுக்கு உணர்த்தியது. ஆனால், இவை அனைத்தும் நாளை மாலை வரையில் தான் என்பதை நினைக்கும் பொழுது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறுவயதிலிருந்தே ஜஸ்வந்த் வைத்ததுதான் வீட்டில் சட்டமாக இருந்து வந்தது. அவன் ஆசைப்பட்ட எந்த ஒரு பொருளும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனிடம் இருக்கும் பொருட்களைப் போலவே ரத்னாவும் தன்னுடன் இருந்துவிட வேண்டும் என்று இப்பொழுது அவனுக்கு ஆசை வந்தது. யோசனையுடன் தன் அறையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஜஸ்வந்த், காலையில் ரத்னா தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் ஜஸ்வந்த் ரூபாவிடம், “அண்ணி, நீங்க, தங்கவேலு ரெண்டு பேரும் இங்கதானே படிக்கிறீங்க. அது மாதிரி ரத்னாவும் […] - [உன் நிழல் நான் தொட ep 5](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-5/): அத்தியாயம் 5 தேனூத்து, தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் அருகில் உள்ளதால், இவ்வூர் பருவமழைத் தூறலுக்குப் பெயர் போனது. தேனூத்தில் வைரவேலின் குடும்பத்தைப் பற்றித் தெரியாதவர் என்று யாருமில்லை. ஊரிலேயே மிகப்பெரிய வீடு வைரவேலினுடையது. எனவே, சுற்றியுள்ள ஊர் மக்கள் அனைவரும் வைரவேலின் குடும்பத்தை “பெரிய வீட்டுக்காரங்க” என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வீட்டைப் போலவே அவர்களுடைய மனதும் பெரிதாக இருந்த காரணத்தால், ஊர் மக்களின் மனதில் அவர்கள் நிலையான இடத்தைப் பிடித்திருந்தனர். யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும், முதல் அழைப்பு வைரவேல் குடும்பத்திற்குத்தான் இருக்கும். ஊர் நல்ல காரியங்களுக்குச் செலவு செய்வதில் அவர் காட்டிய தாராள மனதால், வைரவேலின் பேச்சுக்கு ஊர் மக்களிடையே மிகுந்த மரியாதை இருந்தது. ஊரின் மத்தியில் நான்கு மனை அளவு இடத்தில் அமைந்திருந்த அந்தப் பெரிய வீட்டின் நடுவில் இருந்த ஊஞ்சலில், தன் […] - [காதல் 8](https://storybypm.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): யாழினியின் மனம் ஏமாற்றத்தில் குமைந்தது. ‘ஒரு குட்டி மன்னிப்புக்கு கூட தகுதியில்லாதவளா நானு’ என்றெண்ணியவளின் விழியோரம் கண்ணீர் கசிந்தது. அதையுணர்ந்தவள் ‘நோ யாழு’ என பிடிவாதமாக தனக்கு தானே வலியுறுத்தி கண்ணீரை சுண்டிவிட்டாள். ‘தன்னை சகமனிதியாக கூட மதிக்காத ஒருவனிற்காக அவள் ஏன் அழ வேண்டும்?’ என்ற வீம்பு அவளுள் பிறந்திட,அவள் உடல் விறைத்து நிமிர்ந்தாள். சட்டென தனலட்சுமியின் நினைவு எழுந்தவுடன் அவளின் மேனி மீண்டும் இளகியது. தனலட்சுமி தன் மீது காட்டும் அன்பை கணக்கில் கொண்டு வேறுவழியின்றி உணவருந்த அமர்ந்தாள். உணவு அடுக்கை பிரித்து பார்த்தவளின் விழிகள் இரண்டும் பனித்தது. அவளிற்கு மிகவும் பிடித்த கீரைக் கூட்டு,உருளைக்கிழக்கு வறுவல்,சாதம் மற்றும் ரசம் என அனைத்தும் இருந்தது. தனலட்சுமியின் உயரிய குணத்தை எண்ணி சிலாகித்தவள் ‘அப்படிப்பட்ட அம்மாவுக்கு இப்படியொரு சிடுமூஞ்சி பையன்’ என திட்டிக்கொண்டே உணவை தட்டில் பறிமாறி உண்ண ஆயுத்தமானாள். ஆனால் வாய் வரை உணவை கொண்டு சென்றவளால் அதற்கு மேல் […] - [அத்தியாயம்-12](https://storybypm.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/):   ஒரு காலத்தில் இந்த ஒரு வார்த்தையை தினமும் கேட்க  வேண்டும் என்று ஆசைப்பட்டவள் தான். ஏனோ சில சம்பவங்கள் அவளுடைய நினைவலைகளில் வந்து மகிழ்ச்சிக்கு பதில் கோபத்தையே விளைவித்தது.  அதன் விளைவு அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.  அவள் அறைந்ததில் அவனது கன்னம் தகதகவென்று எரிந்தது. அதன் விளைவே அவனுக்கு இவ்வளவு நேரம் தான் செய்திருந்த காரியம் புரிந்தது. அவன் அதற்காகவெல்லாம் வருத்தப்படுபவனில்லையே. அதற்காக அவள் அறைந்ததை அவன் வாங்கி கொண்டு அமைதியாய் சென்று விடும் ரகமும் இல்லையே… உடனே அவளையும் அறைந்திருந்தான். ஆடவனுடைய அடியில் பால் போல் வெளிறி இருந்த அவளது கன்னம் சிவந்து விட்டது. அதே சமயம் அந்த வலியில் அவளது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய நின்றது. ஆனால் அதை இமை தட்டி மறைத்து அவனை முறைந்து பார்த்தாள். “இங்க பாரு… நான் உன்ன லவ் பண்றேனு சொன்னேன். அதுக்கு ஒன்னு ஆமானு சொல்லி இருக்கனும் அப்படி இல்லனா […] - [எனக்கானவ(ள்)ன் 15](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-15/): “பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்”(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0528) (பொழிப்பு: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்) பர்வதவர்த்தினி தன் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணவாளனைப் பார்த்தவளின் விழிகள் இரண்டும் ஒரே ஒரு நொடி வியப்பில் விரிய,வாய் ஆச்சரியத்தில் பிளந்தது.ஆனால் சடுதியில் அவனின் கம்பீரமான தோற்றத்திலும் அழகிலும் தன் தோற்றம் கண்முன் தெரிய கலக்கம் சூழ வேதனையோடு தலைக்குனிந்தாள். இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் ‘தன்னுடைய கணவன் ஒரு கம்பீரமான  ஆண்மகன்,அழகானவன்’ என்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் இருந்தது.ஆனால் பெரும்பான்மையாக ‘இவன் எப்படி தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்வான்…அவனுக்கும் தனக்கும் ஒரு சதவீகதம் கூட ஒத்துவராதே’ என்ற எதிர்மறை எண்ணங்களே அவளின் மனதை ஆட்சிச்செய்துக்கொண்டிருந்தது. அத்தோடு ‘மாப்பிள்ளை எப்படி மாறியது…??’ என்ற குழப்பம் ஒருபுறம் அவளை குடைந்தது. திருமணம் நல்லப்படியாக நடந்தேற வேண்டும் என்று அம்மனிடம் வேண்டுதலுக்கு […] - [எனக்கானவ(ள்)ன் 14](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-14/): “அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு”(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:80) (பொழிப்பு: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்) விமான நிலையத்தில் தனது தங்கை மற்றும் அவளது கணவன் ஆதித்யாவிடம் விடைப்பெற்று கருப்பு பூனைப்படை உதவியுடன் தஞ்சாவூர் வீட்டிற்கு வந்தான் மித்ரன். மதில் சுவற்றை விட உயர்ந்து நின்ற பெரிய கருப்பு நிற இரும்பு நுழைவாயிலைக் கடந்து வீட்டிற்கு நடந்து செல்ல குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் பிடிக்கும் அளவு தூரமாக இருந்தது.நடந்து செல்லும் பாதையை தவிர்த்து,பாதையின் இருமருங்கிலும் பச்சை பசேல் என்றிருந்த புல் தரையைக் கொண்டிருக்க,அந்த புல் தரையை ஓட்டிய சிமெண்ட் காரையில் பூந்தொட்டிகள் வரிசையாக அழகாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பாதையின் வலது புறம் அழகான தோட்டம் ஒன்று அமைக்கட்டிருந்தருந்தது.அந்த தோட்டத்திற்கு நடுவே நிம்மதியாக அமர்ந்து பேசுவதற்கு வசதியாக நான்கு சாய்வு இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அந்த […] - [எனக்கானவ(ள்)ன் 13](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-13/): “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்”(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:643) (பொழிப்பு: சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்) அகில இந்திய மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு அவசரக்கூட்டத்திற்காக ஒன்று கூடியிருந்தார்கள். அக்கட்சியின் தலைவர் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரதமர் அனைவரும் மேடையில் வீற்றிருக்க கீழே இருந்த ஒருவன் எழுந்து “தலைவரே இந்த அசோக மித்ரனால் நம்ப கட்சிக்கு ரொம்ப கெட்டப்பேரு…அவனை முதல்ல பதவியிலிருந்து தூக்குங்க” முதலில் எடுத்துக்கொடுக்க,அதைத்தொடர்ந்த மற்றவர்களும் அவனோடு சேர்ந்து “ஆமாம் தூக்குங்க…தூக்குங்க” என கோஷமிட்டார்கள். “அன்னைக்கு அப்படி தான் காலேஜ் பங்கஷனுக்கு குடிச்சிட்டு போய் மீடியாக்காரனை அடிச்சிருக்கான்…அது எவ்ளோ பெரிய இஷூ ஆகிடுச்சு தலைவரே” “ஆமாம் தலைவரே…ஊர் உலகத்திலே இவன் மட்டும் தான் பொண்டாட்டி இழந்திட்ட மாதிரி குடிச்சி குடிச்சு தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்கான்…கடந்த ஆறு பாசமா ஒழுங்கா எந்த வேலையும் செய்யல… இதனால் […] - [எனக்கானவ(ள்)ன் 12](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-12/): மெதுவாக தன் இமைகளைப் பிரித்த மித்ரனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.தன் வேதனையைப் போக்கிக்கொள்ள மது அருந்த ஆரம்பித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் இருந்தது. அதன்பிறகு எப்போது தன் கட்டிலில் படுத்து உறங்கினான் என்பது அவனுக்கு தெரியவில்லை.அத்தோடு நேற்றைய போதையில் தலை வேறு கனக்க வலியில் தலையைத் தன் கைகளால் தாங்கினான். அப்போது கைகளிலிருந்து ஏதோ உறுத்த,அத்தோடு சேர்ந்து கைகளிலிருந்து ஒரு சுர்ரென்ற வலி கிளம்ப “ஸ்ஆஆஆ” என்றப்படி கையை முகத்திற்கு நேரே கொண்டு வந்தவனுக்கு கைகளிலிருந்த வெள்ளை நிற கட்டு அவனை பார்த்து பல் இளித்தது. ‘எனக்கு என்னாச்சு….?எப்படி இந்த காயம்…??’ என ஆழ்ந்த யோசித்தவனுக்கு  நடந்த அத்தனையும் கண் முன் தோன்றி அவனை நிலைக்குன்ற செய்தது. அதுவும் யாரையோ கைநீட்டி அடித்தது போல் தனக்குள் தோன்றிய உணர்வில் வருத்தத்தில் நொறுங்கினான்.அவனின் முகம் அவமானத்தில் கன்றி சிவக்க படக்கென்று கட்டிலில் எழுந்து அமர்ந்தான். ‘உன் மனதைக் கட்டுக்குள் வைத்திருக்கமுடியாத அளவு நீ பலவீனமானவனா…??அதுவும் […] - [எனக்கானவ(ள்)ன் 11](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-11/): “இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு”(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1158) (பொழிப்பு: இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது) ஆறு மாதத்திற்கு பிறகு, ஒரு கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மித்ரன் மேடையின் நடுநாயகமாக பச்சை நிற சட்டையுடுத்தி கீழே கருப்பு நிற கால்சட்டை அணிந்து கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான். பழைய மித்ரனின் உடல்மொழியில் இருந்த கம்பீரம் சாதாரண ஒரு ஆண்மகனின் கம்பீரத்தை ஒத்து இருந்தது.ஆனால் இப்போது இருக்கும் மித்ரனின் கம்பீரமோ ஒரு அரசியல்வாதிக்குரிய அகந்தை மற்றும் ஆணவத்துடன் கூடிய கம்பீரமாக இருந்தது. அவனின் முன்பு அடங்கிச்செல்பவர்கள் கூட இப்போது அவனின் முன்பு நின்று பேசவே பயப்படும் அளவு அவனின் தோற்றம் மட்டும் இல்லாமல் செய்யும் செயலிலும் ஒரு முரட்டுத்தனம் தெரிந்தது. எதையும் நிறுத்தி நிதானமாக முடிவெடுத்து செயல்படும் அவனின் மூளை இப்போது எடுத்தவுடன் கண்மூடித்தனமாக அதிரடியாக […] - [எனக்கானவ(ள்)ன் 10](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-10/): “ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து”(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:48) (பொழிப்பு : மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்) நடந்து முடிந்த திருமணத்தில் வந்திருந்த விருந்தனர் மற்றும் ஒரு சிலரை  தவிர்த்து மற்ற அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள். அதில் மயக்கம் போடாத குறையாக உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தது விபான்சீ தான். கடந்த மூன்று ஆண்டுகளாக ‘எந்த விசயத்துக்காக மித்ரனைப் பிரிந்து இருந்தாளோ…அந்த காரணம் ஒண்ணுமேயில்லை’ என தெரிந்ததாலும், ‘இது எப்படி சாத்தியம்’ என்ற குழப்பத்திலும் அதிர்ச்சியில் இருந்தாள். நின்ற இடத்திலே சிலையென இருந்தவளை தோளோடு அணைத்து இறுக்கி “பேபி மாமா ஓர்ஜினலா இங்க இருக்கும் போது கனவுலே எதுக்கு டூயட் பாடிட்டு இருக்கே” என குறும்புடன் கேட்க, அதில் சுய உணர்வு பெற்ற விபு அவனை தனது மைவிழியால் குழப்பத்தோடு நிமிர்ந்து நோக்க “என்ன பேபி டூயட் பாடலாமா…?” […] - [எனக்கானவ(ள்)ன் 9](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-9/): மித்ரன் நடந்ததை தங்கையின் மூலம் கைப்பேசியின் வழியாக அறிந்துக்கொண்டவனுக்கு விபு தன் வார்த்தையை மீறாமல் சரியாக நடந்துக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் விரும்பி தன்னை ஏற்று நெருங்கி வரும் நாளை எண்ணி இன்றிலிருந்து நெகிழ்ச்சியோடு காத்திருக்க ஆரம்பித்தான். இரவு உறங்கப் போகும் போது மகிஷாவிடம் “மகி இன்னும் இரண்டு நாளைக்கு விஜி எங்கக்கூட தூங்கட்டும்” என கூறி விஜியைத் தூக்க,மகிஷாவின் முகம் சுருங்கினாலும் எதிர்த்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள். அவளின் முகம் சுருங்கியதைக் கண்ட விபு ‘இவர் ஏன் இப்படியெல்லாம் பண்ணாறாரு…??’ என கோபம் கொள்ள,மித்ரனின் பிடிவாதத்தை நன்கு அறிந்த அவளாலும் எதுவும் செய்யமுடியாது என்பது புரிய மகிஷாவை பாவமாக பார்த்துக்கொண்டே சென்றாள். மேலே சென்ற மித்ரன் குழந்தையைப் படுக்கையின் நடுவே படுக்கச்செய்துவிட்டு அவன் கட்டிலின் வலதுபுறம் படுத்து,அப்போது தான் அறைக்குள் நுழைந்த விபுவை அர்த்தத்துடன் பார்க்க இவள் புரியாமல் அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தை வைத்தே அவளுக்கு புரியவில்லை […] - [எனக்கானவ(ள்)ன் 8](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-8/): “வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு”(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:632) (பொழிப்பு:அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்) ராம் ‘வெளியே வரமாட்டேன்’ என்று முரண்டுபிடித்த மகிஷாவை கட்டாயப்படுத்தி புடவைக் கடைக்கு அழைத்துச்சென்றான். அவனுக்குள்ளும் மனவேதனைகள் நிரம்பி வழிந்தாலும்,அதை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.ஆனால் தனது தமையனின் ஆணையை மீற முடியாத காரணத்தினால் சீதாவைக் கட்டிக்கொள்ளும் மாப்பிள்ளையின் தாய் தகப்பனோடு திருமணத்திற்கு புடவை எடுக்க புடவைக்கடைக்கு சென்றான். மித்ரன் நினைத்தால் புடவைக்கடையை வீட்டிற்கே கொண்டு வரும் பணப்பலமும் பதவிபலமும் இருக்கிறது.ஆனால் மித்ரன் எப்போதுமே சாதாரண மக்களைப் போன்று எளிமையான வாழ்க்கையையே வாழ விரும்புவதால் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமின்றி சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தான். அதனால் தான் பெண் வீட்டு சார்பாக ராம்,மகிஷா மற்றும் கூடவே விபுவையும் அனுப்பினான்.விபுவும் முதலில் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க மித்ரன் தொலைப்பேசியின் மூலம் “விபு நீ அவங்கக் கூட போறே…” […] - [எனக்கானவ(ள்)ன் 7](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-7/): “கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு”(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:631) (பொழிப்பு : செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்) தலைவன் தலைவியை காதலோடு அணைக்க அதில் மதிமயங்கிய தலைவியும் தன்னை மறந்து தனது கட்டுப்பாடுகளை மறந்து அவனின் அணைப்பில் கட்டுண்டுயிருந்தாள். தலைவன் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கொள்ள அதிகப்பட்ச வாய்ப்புகள் இருப்பினும்,ஆனால் ‘என்ன நினைத்தானோ…??’ அவளை அணைத்தப்போது இருந்த வேகத்தைப் போல் அதே வேகத்தில் விட்டுவிலகினான் தலைவன். அவன் விட்டு விலகியதும்,அதில் சுய உணர்வுப் பெற்ற தலைவி நிலையில் இருந்த விபான்சீக்கு,உணர்ச்சிகளின் பிடியினால் தனது கோட்பாடுகளைத் தகர்த்து எறிந்து அவனோடு இணைய இருந்ததை அறிந்து அவமானத்தில் முகம் சிவக்க தலைக்குனிந்து கீழுதட்டை கடித்தாள். அதைக் கண்ட தலைவன் நிலையிலிருந்த மித்ரன் தனது விரல்களால் அவளின் இதழ்களை மென்மையாக விடுவித்து “குல்பி இங்கப் பாரு” என்றப்படி அவளின் தாடையை உயர்த்தி […] - [எனக்கானவ(ள்)ன் 6](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-6/): “அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று”(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:78) (பொழிப்பு: அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வன்மையான நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது) “அம்மா வந்துதீங்களா…??” என்று குதுகலத்துடன் கேட்டப்படி தன்னை நோக்கி தாவி வந்த குழந்தையைக் கூட தூக்க மறந்து அதிர்ச்சியோடு நின்றிருந்தாள் விபான்சீ. குழந்தை தன்னை ‘அம்மா’ என்று அழைத்த அழைப்பில் ஏனென்றே தெரியாமல் அவளின் தேகத்திற்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது.மண்ணுலகில் பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணும் கேட்க நினைக்கும் வார்த்தை ‘அம்மா’. அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும்.பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது ‘அம்மா’ என்ற சொல்லைத் தருகின்றது. பிரபஞ்சத்தைப் படைத்தளித்த […] - [எனக்கானவ(ள்)ன் 5](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-5/): “நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்”(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:511) (பொழிப்பு: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தரும் இயல்புடைய செயல் ஆளப்படும்) திடிரென்று நடந்து முடிந்த நிகழ்வில் அனைவரும் என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து குழம்பிப்போய் நின்றிருந்தனர். கோகுல் மட்டும் விரைவில் அதிர்ச்சியிலிருந்து விடுப்பட்டு வெறித்தனமாக தாவி வந்து மித்ரனின் சட்டையை பிடித்து ஆங்காரத்துடன் “எதுக்கு இப்படி பண்ணே…நீ மினிஸ்டர்னா உன்னை யாரும் கேள்விக்கேட்க முடியாதுனு நினைச்சியா…??நான் தட்டி கேட்பேன்டா” என்று அவனை அடிக்க கை ஓங்க மித்ரனின் காவலாளிகள் கோகுலை தடுக்க வர மித்ரன் ஒரு கையால் கோகுலின் கையைப் பிடித்து பின்பக்கமாக முறுக்கி தனது பாதுகாப்பாளரின் முன் ஒற்றை கைநீட்டி தடுத்து “ஸ்டே தேர்…திஸ் அவர் பேமிலி இஷூயுஸ்…யூ ஆர் ஆல் வெயிட் அவுட் சைட்” என்று கட்டளையிட ஒரு நொடி தயங்கினாலும்,அவனின் குரலில் இருந்த கடுமையில் வெளியேறிச் சென்றார்கள். அவர்கள் […] - [எனக்கானவ(ள்)ன் 3](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-3-2/): “பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து”(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1102) (நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்) சென்னை செல்லும் விமானம் ஏறி அமர்ந்த மித்ரனின் மனதில் மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மனங்கவர்ந்தவளை சந்தித்த நிகழ்வு நினைவில் எழுந்தது. அவளைப் பற்றிய நினைவுகள் மழைச்சாரலாய் அவனின் மனதை தாக்க அதில் விரும்பியே நனைந்துக்கொண்டிருந்தான் மித்ரன்.அவளைப் பற்றி நினைத்தவுடன்,ஒரு சில்லென்ற மழை சாரல் இதயத்திலிருந்து பொழிய தொடங்க அச்சாரல் அவன் தேகம் முழுவதையும் சிலிர்ப்பூட்ட செய்து முகத்தில் ஒரு மதி மயங்கும் புன்னகையைத் தோற்றுவிக்க இத்தனை நாட்களாக மனதினுள் ஒளித்து வைத்திருந்த காதலும்,தாபமும் ஒரு சேர போட்டி போட்டுக்கொண்டு சீறி எழ அதை அடக்கும் வழியறியாமல் தலைக்கோதி தன்னை சமாளிக்க முயன்றான் மித்ரன். பதினெட்டு வயது இளைஞன் போல் இருந்த அவனது படப்படப்பைக் கண்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.அவனின் […] - [எனக்கானவ(ள்)ன் 3](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-3/): யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1094) (பொருள்:யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்) மாலை மங்கி இருள் கூடும் வேளையில் எப்போதும் வரும் நேரத்திற்கு முன்பே மித்ரன் வீட்டிற்குள் நுழைய “தாடிஈஈஈஈஈஈஈ” என்ற அழைப்புடன் ஒரு மூன்று வயது இளம் குருத்து ஓடி வந்து மித்ரனின் காலைக்கட்டிக்கொண்டது. அதுவரை ஒரு வித அலைப்புருதலுடன் முகம் சோர்ந்து களைத்து வந்த மித்ரனின் முகம் மலர்ந்து புத்துணர்ச்சியுடன் அவனின் நெற்றியில் துள்ளி விளையாடும் சிகையை எப்போதும் போல் கோதி அவனின் வசீகர புன்னகையுடன் “இன்னைக்கு விஜீ குட்டி பார்க் போயிட்டு சீக்கிரம் வந்துட்டீங்களா…?” என்று கேட்டு கொண்டே குழந்தையைத் தூக்கி வைத்து அதனோடு பேச ஆரம்பிக்க அக்குழந்தை தனது விழிகளை சாசர் போல் விரித்து “எஸ் தாடி…நான் சீக்கமா போயித்து சீக்கமா வந்துத்தேன்” தனது கைகளை விரித்து தலையாட்டி மழலை […] - [எனக்கானவள்(ன்) 2](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-2/): முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1113) தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஊர் என்று பெயர் பெற்ற சென்னையில் உள்ள வேளச்சேரி வேகமாக வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்று.அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய ஒலிப்பதிவு செய்யும் அரங்கில் பிரபல திரைப்பட இசைப்பாளர் ஶ்ரீ மானின் இசையில் ஒரு பாடல் பதிவுச் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த ஒலி பதிவு அரங்கு இரண்டு பகுதிகளாக ஒரு கண்ணாடி தடுப்பைக் கொண்டுப்பிரிக்கப்பட்டிருந்தது.தடுப்பிற்கு ஒருபுறம் இசையமைப்பாளரும் அவர் டியூன் செய்யும் இயந்திரங்களும் அவர்களுடன் படத்தின் கதாநாயகன் கோகுல் சந்திரன் இயக்குனரும் தடுப்பிற்கு மறுபுறம் ஒரு இளம் வயது பாடகி காதில் தலையணி கேட்பொறி அணிந்து,ஒரு சிறிய காகிதத்தை கையிலேந்தி அதிலிருந்த பாடலை வாயில் முணுமுணுத்தப்படி நின்று கொண்டிருந்தாள். அவள் பெயர் விபான்சீ கபூர்.பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஷாஷி கபூரின் ஓரே மகள்.இருந்தும் தனது தந்தையின் உதவியின்றி சுயமாக தானே முயன்று சினிமாவில் வளர்ந்த வரும் பாடகர்களில் ஒருவராக […] - [எனக்கானவள்(ன்) 1](https://storybypm.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-1/): அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:384) இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் உள்ள பார்ட்டி கூடத்தில் வெவ்வேறு பத்திரிக்கை துறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் துறையில் பணிச்செய்யும் செய்தித்தொடர்பாளர்களும் ஒன்றாக கூடியிருந்தனர். அவர்களுக்கு நேர் எதிரே உள்ள மேடையில் ஒரே ஒரு நாற்காலியும் மேசையும் மட்டுமே போடப்பட்டிருந்தது.மேசையின் மீது ‘Asoka Mithran – Ministry of Commerce and Industry(Government of India)அசோக மித்ரன் – வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்(இந்திய அரசாங்கம்)’ என்ற ஆங்கில எழுத்துக்களைத் தாங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. முப்பத்தியோரு வயதிலே இரண்டாவது முறையாக அமைச்சராக பொறுப்பேற்று சாதனைப் புரிந்திருக்கும் அசோக மித்ரனை நேர்காணலின் மூலம் சந்தித்து பேட்டியெடுக்க இத்தனை பெரிய கூட்டம் இங்கே கூடியிருந்தது. மித்ரனின் வளர்ச்சியைக் கண்டு சில அரசியல் தலைவர்கள் பொறாமையோடும் வெகுசிலர் பிரமிப்போடும் இருக்கின்றார்கள். மித்ரன் முதன்முதலாக கட்சியில் இணைவதற்கு தன் […] - [உன் நிழல் நான் தொட ep 4](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-4/): த்தியாயம் 4 ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக, படிப்பவர்களுக்கு விடுமுறை நாளாக, வீட்டிலேயே அடைந்து இருப்பவர்களுக்கு விடுதலை நாளாக எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்ட நாள். அன்று மட்டும் அலாரம் இல்லை, படிப்பு இல்லை, வேலை இல்லை, பரபரப்பு இல்லை. ஆனால் எதிர்பார்ப்புகள் மட்டும் உண்டு. சர்ச்சிலிருந்து ஸ்டெல்லா வந்துகொண்டிருந்தாள். அவளுக்காக ரத்னா காத்திருக்க, அவள் அருகில் வந்த ஸ்டெல்லா, “எதுக்கு இப்படி வெளியே காத்துக்கிட்டு நிற்கிற? உள்ளே வந்து உட்கார வேண்டியதுதானே” என்றாள். அதற்கு ரத்னா, “போடி… உள்ளே வந்தா ஒண்ணும் புரிய மாட்டேங்குது. வந்தோமா, சாமியைப் பார்த்தோமா, கிளம்பினோமானு இருக்கணும். அதை விட்டுட்டு நீங்க என்னடான்னா நின்னு, முட்டி போட்டு, விழுந்து கும்பிட்டு… முடியல. அதான் வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்” என்றாள். “சரி வா லைப்ரரி போகலாம். […] - [உன் நிழல் நான் தொட ep 3](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/): அத்தியாயம் 3 ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு ஒன்றே மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றது.  எதிர்பார்ப்பின் முடிவில் அவர்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதை அவர்களின் விதியே நிர்ணயம் செய்கின்றது. மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி எதுவென்றாலும் அது அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கின்றது. சனிக்கிழமை காலை அஜீத் எதிர்பார்ப்புடன் காலேஜ் கிரவுண்டிற்கு  வர, தனக்கு முன் வந்து அங்கே ரத்னாவிடம் பிரபு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக அவர்கள் அருகில் சென்றான்.  பிரபு ரத்னாவிடம், “ரத்னா, நான் சொன்னேன் இல்ல… என் பெஸ்ட் பிரண்ட் அஜீத் சந்திரன், நம்ம கிளாஸ்தான்.” என அறிமுகம் செய்து வைக்க, ரத்னா இடைமறித்தாள். “இது ரொம்ப ஓவரா இல்ல? பெஸ்ட் பிரண்ட்னு சொன்னா ஓகே, ஆனா காலேஜ் ஆரம்பிச்சு பத்து நாளுக்கு அப்புறம், என் பக்கத்து பெஞ்ச்ல இருக்கிறவரை என்கிட்ட ‘நம்ம கிளாஸ்’னு அறிமுகப்படுத்துனா… […] - [உன் நிழல் நான் தொட ep 2](https://storybypm.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-ep-2/): அத்தியாயம் 2 அடுத்த நாளிலிருந்து அஜீத் தன்னை ஒரு புதிய மனிதனாக உணர்ந்தான். அன்றைய காலை நேரம் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. தெளிவான மனநிலையில் இருப்பதால் என்னவோ அவன் முகம் வழக்கத்தை விட வசீகரமாக இருந்தது.  துள்ளிக்குதித்துப் படியிறங்கி வரும் மகனைப் பார்த்த மைத்திலிக்கு மயக்கம் வராத குறைதான். புன்னகை மன்னனாய்த் தட்டில் இருந்த இட்லியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த அண்ணனின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த அர்சனாவை நிமிர்ந்துப் பார்த்த அஜீத், “என்ன?” என்று பார்வையால் வினவ, “ஒண்ணும் இல்ல, எப்பொழுதும் பெட்ரூம் லைட் மாதிரி டல்லா இருக்கும் உங்க முகம் இன்னைக்கு ஹால்ல  இருக்கும் சாண்ட்லியர் மாதிரி பிரைட்டா இருக்கு. அண்ட் ஆமை மாதிரி மெதுவா நடக்கிற நீங்க இப்போ புள்ளி மான் மாதிரி துள்ளித் துள்ளி வர்றீங்க, அதான் ஆச்சரியமா இருக்கு” என்று கூறினாள். அதற்கு மைத்திலி, “என் பையனைப் பார்த்து ஆமை, மான்னு சொல்லாத, அவன் சிங்கமாக்கும்” என்று சொல்ல, […] - [Ep 26](https://storybypm.com/ep-26/): அத்தியாயம் 26 அவளோ தன் மனதில் உள்ள காதலை அவனிடம் வெளிப்படுத்தி இருக்க, அதை கேட்டவனுக்கோ பெரிதாக எந்த அதிர்ச்சியும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அவனுக்கு தான் ஏற்கனவே அவள் தன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டாள் என்று தெரியுமே! அவள் தன் மீது உள்ள காதலை உணர வேண்டும் என்பதற்காக தானே அன்று நடந்த சண்டைக்கு பிறகு அவளை மொத்தமாக தவிர்த்தது போல நாடகம் ஆடிக் கொண்டிருந்ததே! ஆம்… இத்தனை நாள் அவளை விட்டு விலகி இருந்தது அவளை மொத்தமாக விட்டுச் சென்று விட வேண்டும் என்பதற்காக அல்ல. அவளும் தன் மீது உள்ள காதலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான். அவன் நினைத்தது போலவே அவளும் அவன் விலகி செல்லச் செல்ல கொஞ்ச கொஞ்சமாக அவன் மீது தோன்றிய காதலையும் உணர ஆரம்பித்து இருந்தாள். ஒவ்வொரு முறையும் அவன் தன்னை பார்க்க மாட்டானா? தன்னிடம் வந்து பேச மாட்டானா […] ## Pages - [Mobile Exclusive](https://storybypm.com/mobile-exclusive-content/): [npd_open_in_app] - [Teaser](https://storybypm.com/teaser-page-mobile/): [npd_open_in_app] - [Coming Soon](https://storybypm.com/coming-soon/): [npd_countdown] - [Competitions](https://storybypm.com/competitions/) - [Competition](https://storybypm.com/competition/) - [Story Rankings](https://storybypm.com/story-rankings/) - [Writers Ranking](https://storybypm.com/writers-ranking/) - [Writers](https://storybypm.com/writers/) - [Author Profile](https://storybypm.com/author-profile/) - [Mystery](https://storybypm.com/story-tag-mystery/): Mystery Stories - [Fantasy](https://storybypm.com/story-tag-fantasy/): Fantasy Stories - [Family](https://storybypm.com/story-tag-family/): Family Stories - [Comedy](https://storybypm.com/story-tag-comedy/): Comedy Stories - [Other Author Stories](https://storybypm.com/guest-author-stories/): Other Author Stories - [Stories by Guest Authors](https://storybypm.com/stories-by-guest-authors/): Stories By Guest Author - [Premium Stories by Priyanka Muthukumar](https://storybypm.com/premium-stories-by-priyanka-muthukumar/): Premium Stories By Priyanka Muthukumar - [Ongoing Stories by Priyanka Muthukumar](https://storybypm.com/ongoing-stories-by-priyanka-muthukumar/): Ongoing Stories By Priyanka Muthukumar - [Feel good Love Stories](https://storybypm.com/story-tag-feel-good-love/): Feel Good Love Stories - [Thriller & Horror](https://storybypm.com/story-tag-thriller-and-horror/): Thriller & Horror Stories - [Love & Romance](https://storybypm.com/story-tag-love-and-romance/): Love & Romance Stories - [Second marriage Stories](https://storybypm.com/story-tag-second-marriage/): Second marriage Stories - [Anti Hero](https://storybypm.com/story-tag-anti-hero/): Anti Hero Stories - [Author Dashboard](https://storybypm.com/author-dashboard/) - [Contact us](https://storybypm.com/contact-us/): Contact us Thank you for visiting StoryByPM. If you have any questions, feedback, or concerns regarding our website, premium passes, or story content, please feel free to contact us. We value our readers and strive to provide the best experience possible. Customer Support If you experience any issues related to account access, premium pass activation, payments, or website functionality, our support team will be happy to assist you. Contact Information Website: https://storybypm.com/ Email: support@storybypm.com Support Topics You may contact us regarding the following: Premium pass activation issues Payment or billing concerns Refund requests Technical problems while accessing stories Content-related feedback General […] - [About us](https://storybypm.com/about-us/): About us Welcome to StoryByPM, a digital platform dedicated to providing engaging and entertaining stories for readers around the world. Our Mission Our mission is to create a place where readers can enjoy high-quality storytelling and immersive narratives. We aim to bring creativity, imagination, and meaningful storytelling to our audience through an easy-to-access digital platform. What We Offer StoryByPM offers a wide collection of stories across different themes and genres. Readers can explore both free and premium content directly on our website. To enhance the reading experience, we offer premium passes that provide access to exclusive stories and additional content. Premium […] - [Disclaimer](https://storybypm.com/disclaimer/): Diclaimer The information and content provided on StoryByPM (https://storybypm.com/) are published in good faith and for general informational and entertainment purposes only. Content Disclaimer All stories and written content available on this website are intended for entertainment purposes. While we strive to ensure accuracy and originality, StoryByPM makes no guarantees regarding the completeness, reliability, or accuracy of any information. Personal Interpretation Stories published on this platform may include fictional elements, creative storytelling, and imaginative narratives. Any resemblance to real persons, events, or situations is purely coincidental unless explicitly stated. External Links Our website may contain links to external websites. While we […] - [Refund Policy](https://storybypm.com/refund-policy/): Refund Policy Thank you for purchasing from StoryByPM (https://storybypm.com/). This policy explains our refund rules for digital premium passes. 1. Nature of Service StoryByPM provides digital access to premium stories. Once a pass is purchased, users receive immediate access to the content. 2. No Refund Policy Because the product is digital and access is granted instantly, purchases are generally non-refundable. 3. Eligible Refund Situations Refunds may be considered in the following cases: Duplicate payment due to technical error Payment deducted but pass not activated Technical issues preventing access to purchased content 4. Refund Request Process Users must submit a refund request […] - [Terms & Conditions](https://storybypm.com/terms-conditions/): Terms and Conditions Welcome to StoryByPM (https://storybypm.com/). These Terms and Conditions govern your use of our website and services. By accessing or using our website, purchasing a premium pass, or reading content on the platform, you agree to comply with these terms. 1. Introduction StoryByPM is an online platform that provides digital stories and premium reading content. Users may access certain content for free, while other content requires the purchase of a premium access pass. 2. Acceptance of Terms By using our website or purchasing any of our services, you confirm that you have read, understood, and agreed to these Terms […] - [Shipping Policy](https://storybypm.com/refund_returns/): Shipping Policy StoryByPM (https://storybypm.com/) provides digital products only. No physical products are sold or delivered through this website. 1. Nature of Product The products available on StoryByPM are digital premium access passes that allow users to read exclusive stories on our platform. 2. Delivery Method After successful payment, the purchased premium pass is automatically activated on the user’s account. 3. Delivery Time Access to premium content is typically granted immediately after payment confirmation. In rare cases, activation may take up to a few minutes due to payment gateway verification or system processing. 4. Account Requirement Users must log in to their […] - [My account](https://storybypm.com/my-account/) - [Checkout](https://storybypm.com/checkout/) - [Cart](https://storybypm.com/cart/) - [Shop](https://storybypm.com/shop/) - [Password Reset](https://storybypm.com/password-reset/) - [Account](https://storybypm.com/account/) - [Logout](https://storybypm.com/logout/) - [Members](https://storybypm.com/members/) - [Register](https://storybypm.com/register/) - [Login](https://storybypm.com/login/) - [User](https://storybypm.com/user/) - [Home](https://storybypm.com/): Search Search Editor’s Choice கட்டன் சாயா வித் காதல்… Have your own description Read now Editor’s Choice Read now Stories by PM [Ongoing] view all  Completed Stories by PM [Premium] view all  Trending novels Categories Guest Author Stories view all  Search - [Privacy Policy](https://storybypm.com/privacy-policy/): Privacy Policy StoryByPM (https://storybypm.com/) and the StoryByPM mobile application (collectively, the “Service”) are committed to protecting the privacy of our users. This Privacy Policy explains how we collect, use, and protect your personal information when you use our website or mobile app. Last updated: April 24, 2026 1. Information We Collect We may collect the following types of information: Name Email address Account login credentials (password stored in encrypted form) User-generated content you create or upload within the app Payment transaction information IP address and browser/device information Device identifiers and app usage data (for diagnostics and service improvement) 2. How We […] ## Products - [Daily pass](https://storybypm.com/product/daily-pass/) - [Weekly pass](https://storybypm.com/product/weekly-pass/) - [Fortnight pass](https://storybypm.com/product/fornight-pass/) - [Monthly Membership Pass](https://storybypm.com/product/monthly-membership-pass/): Monthly Membership Pass ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/storybypm.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)