வித்தகனின் விந்தையான விகசனமே
சோழ, பாண்டியர்களுக்கு இடையே அரசர்கள் ஆண்ட காலத்திருந்தே எப்போதும் பகைமை இருந்துக்கொண்டே இருக்கும்...
அவர்களின் வஞ்சத்தால் யுத்தமும் பல தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்துக்கொண்டிருந்தன...
இவ்வாறு இருக்கையில்,
நவீன காலத்தில் சோழ,பாண்டிய வம்சாவளியை சேர்ந்த இரு குடும்பத்திற்குள் இப்போதும் பகைமை மிச்சமிருந்தால்,
அவர்கள் வாள் ஏந்தி சண்டையிடுவதற்கு பதிலாக எவ்வாறு அவர்களுக்குள் இருக்கும் வஞ்சத்தை பழிதீர்த்துக்கொள்கிறார்கள்?
எனக்குள் தோன்றிய அந்த கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து எழுதப்பட்ட நாவலே 'வித்தகனின் விந்தையான விகசனமே!'
நிறைய முடிச்சுக்கள் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது...
அடுத்து என்ன? என்று யூகிக்க முடியாத அளவு நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்...
உடனே 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரியெல்லாம் எதிர்ப்பார்க்காதீங்கடா...
இது காதல்,மோதல்,ரொமென்ஸ்,அன்பு,பாசம்,பகை எல்லாம் கலந்த குடும்ப நாவல் தான்...